Category: பெரியார் முழக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து சமூக நீதிக்கு மற்றுமொரு பேரிடி

முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து சமூக நீதிக்கு மற்றுமொரு பேரிடி

மருத்துவக் கல்வி விஷயத்தில் தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, இப்போது ஓசையில்லாமல் இன்னொரு துரோகத்தை செய்திருக்கிறது. நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள்(மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27ரூ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். ஆனால், நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு...

2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’

2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’

இந்தியாவில் ‘இராமராஜ்யம்’ அமைப்பதற்கும், அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதற்கும் ‘சங்பரிவார்’, ‘இராமராஜ்ய யாத்திரை’ ஒன்றைத் துவக்கி இருக்கிறது. இது “அரசியல் யாத்திரையல்ல; ஆன்மிக பரப்புரை யாத்திரை” என்று அறிவித்துக் கொண்டு கடந்த பிப்.13ஆம் தேதி (மகாசிவராத்திரி நாள்) உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து புறப்பட்டுள்ளது. 41 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை, 6 மாநிலங்களில் 6000 கிலோ மீட்டர் ‘இராமராஜ்ய’ பிரச்சாரம் செய்து மார்ச் 25 அன்று தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது. விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் சம்பத்ராய் என்பவர் தொடங்கி வைத்துப் பேசுகையில், “இந்த யாத்திரையை ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் ஒருங்கிணைக்கவில்லை” என்று ‘எங்கப்பா குதிருக் குள் இல்லை’ என்ற வகையில் பேசி இருக்கிறார். ‘ஸ்ரீ இராமதாச மிஷன் யுனிவர்சல் சொசைட்டி’ என்ற அமைப்பு இதை நடத்துகிறதாம். (கேரளா – மகாராட் டிரத்தில் மட்டும் செயல்படும் அமைப்பு இது) தேர்தலை சந்திக்க விரும்பும் ம.பி.., கருநாடக மாநிலங்களில் இந்த...

தலைமைக் கழகத்தில்  ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையத்தில் 26.2.2018 பகல் 12 மணியளவில் ஜாதி-தாலி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. சென்னை எம்.கணேசன்-மீனாட்சி ஆகியோரின் மகன் ஜி. இராமகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை ஜே.ஏ.பார்த்திபன்-ஜூலி ஆகியோரின் மகள் பி.நிவேதா ஆகியோரின் மணவிழாவை உறுதி ஏற்புக் கூறி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட தோழர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சென்னை மயிலாப்பூர் குடிசை மாற்று வாரியம் பகுதி பிள்ளையார் தெருவில் பல மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு, பல்வேறு நோய்கள் போன்றவைகளுக்கு அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த அடிப்படை பிரச்சனையை உடனடியாக தீர்வு காண கோரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளரிடம் 05.02.2018 அன்று மயிலாப்பூர் பகுதி தலைவர் இராவணன் மயிலாப்பூர் தோழர்களுடன் கோரிக்கை மனுவை அளித்தார். உடனடி தீர்வு காணா விடில் பகுதி மக்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பிப்.11 அன்று தோழர் கலை அலுவலகத்தில் நடைபெற்றது. மதவெறிக்கு பலியான ஃபாரூக் நினைவு நாளை மார்ச் 18 அன்று காலை பாரூக் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்கம் செலுத்தி, அன்று கருத்தரங்கமும் குருதிக் கொடையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, விஜயக்குமார் (இணைய தள பொறுப்பாளர்), ரகுபதி, ஸ்டாலின், ராஜா, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் முத்து, மாநகர அமைப்பாளர் ஜெயந்த், விஜயகுமார், உசேன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சென்னையில் காதலர் தினம்

சென்னையில் காதலர் தினம்

உலக காதலர் தினமான 14.02.2018  அன்று இந்து மக்கள் கட்சி அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என சென்னை கடற்கரையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாக இருந்த அறிவிப்பையடுத்து, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இரண்யா, பகுத்தறிவாளன், யுவராஜ், பிரபாகரன், காவை கனி, மா.தேன்ராஜ் போன்றோர் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் காதலர்களுக்கு சாக்லெட், துண்டறிக்கை வழங்கி காதலர் தினத்தை வரவேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

2018க்கான திருப்பூர் திவிக செயல் திட்டம் குறித்து விவாதிக்க மாவட்ட கலந்துரையாடல் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 11/2/2018 மாலை 5 மணிக்கு மாநகர் அமைப் பாளர் முத்து தலைமையில் நடந்தது. நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி உள்ளிட்ட 15 தோழர்கள் கலந்து கொண்டனர் கழக செயல்பாடுகளை 2018 ஆம் வருடம் மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, தமிழ்நாடு மாணவர் கழகம் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டன. கருணாநிதி 10 இளைஞர்களுக்கு பறையடிக்கப் பயிற்சித் தர முன் வந்தார். மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு சிறப்புடன் நடந்தேற ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. இராயபுரத்தில் சிறப்பாக மாநாட்டை நடத்துவது எனவும் பெரியார்சிலை முதல் மாநாட்டு திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் செல்லவும் முடிவெடுக்கப்பட்டது. தோழர் பார்வதி நன்றியுரையுடன் 7:30 மணிக்கு கலந்துரையாடல்...

வடசென்னை மாவட்ட  கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018  அன்று மாலை 6  மணியளவில் பெரம்பூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஏசு குமார் முன்னிலை வகிக்க,  நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். ஏப்ரலில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட்டங்களால் கிடைத்த பலன்களை சிறு நூலாக பத்தாயிரம் பிரதிகள் தயாரித்து மக்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் பிரச்சாரமாக கொண்டு சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வட சென்னையில் தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பரப்புரைப் பயணம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டது. நா. பாஸ்கர் நன்றி கூறினார் ....

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்  விழுப்புரம் மாவட்ட கடுவனூர் கிராமத்தில் 11-02-2017 அன்று நடத்தப் பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர். மா.குப்புசாமி தலைமை வகித்தார். கடந்த  2017  மே 21 முதல்  11-02-2018 வரை இயக்கம் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட  செயல் பாடுகள் குறித்தும் – போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ சந்தா சேர்பது சார்பாகவும் பேசப்பட்டன. வருகின்ற ஏப்ரல் 14- அன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்த நாள் நினைவாகவும் கழம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரு வார அளவில் தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் என்ற தலைப்பில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று  “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படு கின்றன, நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவைத் திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நய வஞ்சகத்தை துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர் களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல மாணவர்கள் இந்த துண்டறிக்கையை படித்துவிட்டு தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் போன்றவர்களிடம் கேட்டு அறிந்த...

சென்னை கருத்தரங்க உரை: குறுந்தகடு தயார்!

சென்னை கருத்தரங்க உரை: குறுந்தகடு தயார்!

30.1.18 அன்று சென்னையில் கழகம் நடத்திய ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சுந்தரவள்ளி, ஆய்வாளர் வாலாஜா வல்லவன் ஆற்றிய உரை – குறுந்தகடாக தயாராகியுள்ளது. நன்கொடை : ரூ.100 தொடர்புக்கு :  72992 30363 / 98414 89896 பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (4) சங்கராச்சாரிகள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைவதே வேத மரபுக்கு எதிரானதுதான்!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (4) சங்கராச்சாரிகள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைவதே வேத மரபுக்கு எதிரானதுதான்!

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று கூறியதற்கே ஆண்டாளை அவமதித்து விட்டதாக துள்ளிக் குதிக்கும் ஜீயர் – வைணவப் பார்ப்பனர்களுக்கு அவர்களின் வேதமரபு குறித்து சிலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இதையெல்லாம் அவர்கள் பேச வைத்து விட்டார்கள். பெரியார் இயக்கத்தவர்களாகிய நாங்கள். அந்த ‘ஆபாசங்களை’ எல்லாம் இனியும் பேச வேண்டிய அவசியமில்லை என்று கடந்து போய்விட்டோம். ஆனால் எங்களை மீண்டும் வேத மரபின் வண்டவாளங்களைப் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவர்களே உருவாக்கியிருக்கிறார்கள். வேதங்கள் நான்கு. அய்ந்தாவதாக ஒரு வேதம் உண்டு. அதை ‘விவேக சாகரம்’ என்று கூறுகிறார்கள். அந்த ‘விவேக சாகரம்’ என்றால் என்ன என்பதை வைதீகத்தில்...

கமலஹாசனின் ‘மய்யம்’

கமலஹாசனின் ‘மய்யம்’

மக்களுக்கு நீதி கேட்கும் மய்யத்தோடு மதுரையில் களமிறங்கி யிருக்கிறார் நடிகர் கமலஹாசன். கட்சித் தொடங்கும் உரிமை அவருக்கு உண்டு. எதிர்காலத்தில் அவரின் செயல்திட்டங்களே  வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும்.  அவரது ‘நிலைப்பாடுகள்’ மற்றும் கொள்கை திசை வழி இனிமேல்தான் தெரியும். ஆனாலும், “நான் இடது சாரியுமல்ல; வலதுசாரியுமல்ல; இரண்டுக்கும் ‘மய்யமானவன்’ என்று அவர் தன்னை  அடையாளப் படுத்தியிருக்கிறார். தத்துவங்களில் ‘மய்யம்’ என்பது வேறு; நிகழ்வுகளில் ‘மய்ய’ நிலைப்பாடு எடுப்பது என்பது வேறு. இரண்டுக்குமிடையிலான குழப்பத்தில் கமலஹாசன் மூழ்கியிருப்பதாகவே தெரிகிறது. காஞ்சி சங்கராச்சாரி, தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை காட்டவில்லை என்ற கேள்விக்கு சங்கராச்சாரி அப்படி செய்திருக்கக் கூடாது என்றோ, எழுந்து நிற்காதது அவரது உரிமை என்றோ கூறவில்லை. கமலகாசனின் ‘மய்ய’மான கருத்து, ‘கண்ட கண்ட இடங்களில் தமிழ்த் தாய் வாழ்த்துகளைப் பாடக் கூடாது’ என்பதாகவே இருந்தது. ஆண்டாள் தேவதாசி மரபில் வந்திருக்கலாம் என்று பேசிய கவிஞர் வைரமுத்துக்கு ஜீயர்கள், வைணவப் பார்ப்பனர்களிடமிருந்தும்,...

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும்  ஜாதி வன்கொடுமை

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்துக் குட்பட்ட கிராமங்களில் தலித் குடும்பங்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், ஜாதி ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து நடப்பது அதிகரித்து வருகிறது. வழக்கம்போல காவல்துறை தலித் மக்கள் மீதான தாக்குதல் என்றால் அலட்சியம் காட்டுவது போலவே இதிலும் செயல்பட்டு வருகிறது. தற்போது திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தைச் சார்ந்த ஆராயி (4), அவரது மகள் தனம் (15), மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவன் சமையன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துவிட்டார். உயிருக்குப் போராடிய நிலை யில் ஆராயியையும் அவரது மகள் தனத்தையும் முதலில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து, அங்கு பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

சண்டிகாரில் உள்ள பி.ஜி.அய்.எம்.இ.ஆர் – மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற தமிழ்நாட்டு மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 2016-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த தமிழக மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகாத நிலையில் நடந்திருக்கும் மற்றொரு சம்பவம் இது. சரவணன் போலவே சரத்பிரபுவும் விஷ ஊசி செலுத்தப்பட்டே இறந்திருக்கிறார். சரவணன் மரணத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தற்கொலை என்றே எய்ம்ஸ் நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் சொல்லிவந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள், அது தற்கொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தின. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்! சில நாட்களுக்கு முன்பு,...

அய்.அய்.டி.யில் சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்தா?

அய்.அய்.டி.யில் சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்தா?

சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அமைச்சர்கள் நித்தின் கட்காரி, பொன். இராதா கிருஷ்ணன் பங்கேற்ற விழாவில், ‘மகாகணபதி’ என்ற சமஸ்கிருதப் பாடல் இறை வாழ்த்துப் பாடலாக பாடப்பட் டுள்ளது. வழக்கமாக அரசு விழாவில் பாட வேண்டிய தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. சமஸ் கிருதத்தைவிட மூத்த மொழி தமிழ் என்று அண்மையில் மோடி அளித்த ஒரு பேட்டிக்காக மோடிக்கு பாராட்டு மாலை களைத் தூக்கிக் கொண்டு ஒரு அணியே நீண்ட வரிசையில் நின்றது. இப்போது மோடி ஆட்சியின் உண்மையான முகம் ஒரு வாரத்துக் குள்ளேயே கிழிந்து தொங்குகிறது. மாணவர்கள் தாமாகவே முன் வந்து சமஸ்கிருதப் பாடல்களைப் பாடினார்கள் என்று அய்.அய்.டி. இயக்குனரான பாஸ்கர் இராமமூர்த்தி விளக்கமளித்திருக் கிறார்.  மாணவர்கள் தாமாக முன் வந்து தான் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைத் தொடங் கினார்கள்.  அதை மட்டும் ‘இராம மூர்த்திகள்’ தடை செய்தது ஏன்? மாணவர்கள் தாமாகவே முன் வந்து அய்.அய்.டி. வளாகத்தில் மாட்டுக்கறி விருந்து...

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூரில் பெரியாரைப் பேணிய குடும்பம் தோழர் அருணாசலம் அவர்களின் மகள் இலட்சுமி நாதன் (93) பிப்ரவரி 9, மாலை 3 மணிக்கு பெரியார் காலனியில் உள்ள அவரின் இல்லத்தில் இயற்கை எய்தினார். கடல் கடந்து இலங்கை சென்று தன் உழைப்பால் ஜவுளி வியாபாரத்தை கொழும்பு மற்றும் மதுரையில் நிறுவிய அருணாசலம் , இளவயது முதல்கொண்டே பெரியாரிய கொள்கையில் நாட்டம் கொண்டு குடிஅரசு பத்திரிக்கையை தொடர்ச்சியாக படித்து தன் குடும்பத்தார் அனைவரையும் பெரியாரிய வாழ்க்கை முறைக்கு  திருப்பினார். மூத்த மகனின் சுயமரியாதை திருமணத்தை திருப்பூரில் தந்தை பெரியாரைக் கொண்டு மிக சிறப்பாக நடத்தினார். அவரின் இரு மகள்களில் ஒருவரான இலட்சுமி நாதன், பெரியார் திருப்பூர் வரும்போதெல்லாம் அவருக்கு பிடித்தமான பிரியாணி செய்து பெரியாருக்குக் கொடுத்து உபசரிப்பார். 1945 மதுரை சுயமரியாதை மாநாட்டில் குடும்ப சகிதம் கருப்பாடை அணிந்து கலந்துகொண்டு  கொள்கைத் தூணாய் இருந்தவர். சுயமரியாதை வாழ்வின் அங்கமாய் தன் இரு மகன்களுக்கும் இரணியன்,...

கழகம் எடுத்த  தமிழர் திருநாள் எழுச்சி

கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர். 16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின்...

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர், புலிகள் மின்கலப் பணி மையம் டைகர் பாலு – ஜோதிமணி இணையரின் மகள் ஜோ.பா. ஓவியா – கோபிச் செட்டிப்பாளையம் குணசேகரன்- உமா இணையரின் மகன் கோ.கு.முகிலன் ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா, 14-2-2014 அன்று காலை 11-00 மணிக்கு, கொளத்தூர் எஸ்.எஸ்.மகால் திருமண மண்டபத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்தேறியது. சேலம் மாவட்ட தி.வி.க. தலைவர் கொளத்தூர் சூரியகுமார் வரவேற்புரை ஆற்றினார். தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறச்செய்து நிகழ்த்திவைத்தார். த.பெ.தி.க. அமைப்புச் செயலாளர் கோவை. வெ. ஆறுச்சாமி, தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கோபி கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் (ஓய்வு) பேராசிரியர் செ.சு. பழனிசாமி, கோபி மாவட்ட தி.க. தலைவர் யோகானந்தம், திண்டுக்கல் சம்பத், தூத்துக்குடி பால் பிரபாகரன், கோபி ம.தி.மு.க....

வேத மரபைத் தோலுரித்து, விடுதலை இராசேந்திரன் பேச்சு (3) ‘நாத்திகர்’களுக்கு சிகிச்சைத் தரக் கூடாது என்றவர் சங்கராச்சாரி

வேத மரபைத் தோலுரித்து, விடுதலை இராசேந்திரன் பேச்சு (3) ‘நாத்திகர்’களுக்கு சிகிச்சைத் தரக் கூடாது என்றவர் சங்கராச்சாரி

 ‘சதி’ நெருப்பில் பார்ப்பனர் தள்ளிய பெண்ணை மீட்ட பிரிட்டிஷ் அதிகாரி ‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) பிரிட்டிஷ் ஆட்சியில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனியே கல்லூரி தொடங்க பார்ப்பனர்கள் மனு தந்ததையும் அதற்கு இராஜாராம் மோகன்ராய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் குறிப்பிட்டோம். இது குறித்து பல ஆண்டுகாலம் விவாதங்கள் நடந்தன. கடைசியில் பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தைக் கைவிட்டது. இதில் உறுதியாக செயல்பட்டவர். அப்போது  பிரிட்டிஷ் அமைச்சரவையில் சட்டக் குழு உறுப்பினராக இருந்த மெக்காலே தான், 1835ஆம் ஆண்டு எத்தகைய கல்வியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்று அவர் முன் வைத்த கல்விக் குறிப்பு ஆவணம், வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. மெக்காலே ஆவணம் இவ்வாறு...

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

உலக காதலர் தின நாளில் இந்து மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் காதலர்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக காதலர்களை கண்டால் நாங்கள் தாலி கட்ட சொல்லுவோம் என்று அறிக்கை விட்டிருந்தனர்.  அதனால்  14.02.2018 அன்று தோழர்கள் திராவிடன் பரத் (கொளத்தூர்), கண்ணன், சந்திரசேகர் (நங்கவள்ளி) ஆகியோர் ஒருங்கிணைப்பில் மேட்டூர் அணைப் பூங்காவில் காதலர்கள் வரவேற்பு பதாகையுடன் நின்று பூங்காவிக்கு வந்த காதலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மலர், இனிப்பு மற்றும்  விழிப்புணர்வு துண்டறிக்கை ஆகியவை விநியோகித்தனர். நிகழ்வில் வைரவேல் மாரியப்பன் (நாமக்கல்  மாவட்ட  அமைப்பாளர்), கிருட்டிணன் (சேலம் மாவட்ட அமைப்பாளர்), முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்) உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்

சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்

“வடமொழி எதிர்ப்பும் இனவிடுதலை இயக்கமும் மீண்டும் புத்துயிர் பெறச் செய்வோம்” என்று சூளுரைத்தார் – கவிஞர் வைரமுத்து. ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று ஓர் ஆய்வாளர் கருத்தை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, கவிஞர் வைரமுத்துவை பார்ப்பனர்கள் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். எச். ராஜா என்ற பார்ப்பனர், வைரமுத்துக் குடும்பத்தினரை இழிவுபடுத்தினார். அய்யங்கார் பார்ப்பனர்கள், வைரமுத்து, திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திறந்தமேனியுடன் வீதிக்கு வந்து போராடினார்கள். ‘தினமணி’ ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் வைத்தியநாதனுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கம் காட்டி வந்தார் வைரமுத்து.  கட்டுரை வாசிப்பு நிகழ்ச்சிகளை பா.ஜ.க.வின் ஊதுகுழலான ‘தினமணி’யே ஏற்பாடு செய்து அந்தக் கட்டுரைகளை முழுமையாக ‘தினமணி’ வெளியிட்டு வந்தது. தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், திருக்குறள் பெருமை பேசினார் என்பதற்காக அவருக்கு தமிழகத்தில் மேடை அமைத்துக் கொடுத்தார் வைரமுத்து. பா.ஜ.க.விடம் வைரமுத்து காட்டிய ‘நேசக்கரம்’ நீண்ட நாள் நிலைக்கவில்லை. ‘ஆண்டாள்’...

மேட்டூரில் அண்ணா – காந்தி நினைவு நாள் கூட்டம்

மேட்டூரில் அண்ணா – காந்தி நினைவு நாள் கூட்டம்

மேட்டூரில் 5.2.2018 திங்கள் மாலை 6 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறைமுழக்கத்துடன் கூட்டம் தொங்கியது. அதனைத் தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு நடைபெற்ற வீதி நாடகத்தில் சாமியார்களின் மோசடிகளை விளக்கியும், ‘ஆண்டாள்’ குறித்த கதைப் பற்றிய விழிப்புணர்வு நாடகமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, ம.தி.மு.க. சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந. மகேந்திரவர்மன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், ‘பகுத்தறிவாளர்கள் பார்வையில் அறிஞர் அண்ணா’ என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘திராவிடர் இயக்கப் பார்வையில் காந்தியடிகள்’ என்னும் தலைப்பில்...

குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்- தமிழ்த் தேசியம் கருத்தரங்கம்!

குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்- தமிழ்த் தேசியம் கருத்தரங்கம்!

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்-தமிழ்த்தேசியம் குறித்த கருத்தரங்கம் மற்றும் விவாத நிகழ்ச்சி குமாரபாளையம் சி.எஸ்.அய். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (11.02.2018) மதியம்  2.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலளார் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் மற்றும் மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு பகுதித் தோழர் கவுதமன் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் கிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். இதையடுத்து குமாரபாளையம் பகுதி தோழர் கலைமதி ஆரியம்-திராவிடம்-தமிழ்த் தேசியம் பற்றி விரிவாகவும், வரலாற்று ரீதியாகவும் விளக்கவுரை யாற்றினார். பின்னர் தோழர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் வந்திருந்தனர். இறுதியாக குமாரபாளையம் பகுதி நகர செயலாளர் தண்டபாணி நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

ஜாதி பஞ்சாயத்துக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை ‘கோத்திர’- ‘சம்பிரதாய’க் காவலர்களாக உங்களை நியமித்தது யார்?

ஜாதி பஞ்சாயத்துக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை ‘கோத்திர’- ‘சம்பிரதாய’க் காவலர்களாக உங்களை நியமித்தது யார்?

அரியானா மாநிலத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை வன்முறை மூலம் அச்சுறுத்தி, திருமணங்களைத் தடுப்பது; பிரித்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்யும் கட்டப் பஞ்சாயத்துகளைத் தடை செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு முன் வழக்கு கடந்த பிப்.5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹீடா கட்டாயப் பஞ்சாயத்து செயல்பாடுகளை நியாயப்படுத்தி வாதிட்டார். வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே நடக்கும் திருமணங் களை கட்டப் பஞ்சாயத்துக்கள் எதிர்ப்பது இல்லை என்றும், வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதைக்கூட எதிர்ப்பது இல்லை என்றும், காலம்காலமாக பின்பற்றப்படும் ஒரே கோத்திரங்களுக்கிடையே நடக்கும் முறைகேடான திருமணங்களையும் சகோதர சகோதரி உறவு முறைகள் கொண் டோரிடையே நடக்கும் திருமணங்களையும் தான் எதிர்க்கிறது என்றும் , பண்பாட்டைக் காக்க மனசாட்சிக் காவலர்களாக செயல்படுகிறது என்றும் வாதிட்டார். இந்த வாதங்களில் திருப்தியடையாத...

வேட்டைக்காரன் புதூரில் காந்தியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

வேட்டைக்காரன் புதூரில் காந்தியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

ஆனைமலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வேட்டைக்காரன் புதூரில் காந்தி படுகொலை நாள் கண்டன பொதுக்கூட்டம் 07.02.2018 மாலை 6 மணிக்கு நடைபெற்றது நிகழ்வின் தொடக்கமாக ரோஜா கலைக் குழுவின் பறை இசை முழக்கத்துடன் தொடங்கி, மா.ப.கண்ணையன் பாடல்கள் முழங்க, காவை.இளவரசனின் மந்திரமல்ல…தந்திரமே! நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமையேற்று சோ.மணி மொழி, வரவேற்புரை இரா.ஆனந்த், தொடக்கவுரையாக சிவகாமி, வே.வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் மோகன், கா.சு.நாகராசு (த.தி.க), கழகப் பொருளாளர் துரைசாமி, நிறைவுரையாக கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். நன்றி உரை வினோதினி. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோழர்கள் வே.அரிதாசு, அப்பாதுரை, மணி, சிவா, குமார், சபரிகிரி, விவேக், முருகேசன், கணேசன், கஜா சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சியில் தென்னை மரத் தொழிலாளர்கள் கருப்புசாமி, திராவிடர் கழகத் தோழர்கள், த.பெ.தி.க. தோழர்கள், தி.வி.க. தோழர்கள், வி.சி.க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சிறிய கிராமத்தில் 2000 ரூபாய்க்கு கழக நூல்கள் விற்பனை ஆயின. பெரியார் முழக்கம்...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் பாரி சிவக்குமார் (மாணவர் கழக அமைப்பாளர்)  தலைமையில் நடந்தது. 21.01.18 அன்று மாலை 3 மணிக்கு, சென்னை பனகல் மாளிகை முன்பு டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரத் பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்தும், தோரட் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரியும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்க பேராசிரியர் தகுதியுள்ள தனி அலுவலர் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச்  சென்ற கழக அமைப்பினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சைதை மாநகர தொடக்கப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

புரட்சிப் பெரியார் முழக்கம்; முக்கிய வேண்டுகோள்!

புரட்சிப் பெரியார் முழக்கம்; முக்கிய வேண்டுகோள்!

சந்தா முடிவடைந்த தோழர்களுக்கு இதழ் நிறுத்தப்பட்டுள்ளது. தோழர்கள் சந்தாக்களை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி – 98414 89896 பெரியார் முழக்கம் 15022018 இதழ்

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது தலைநகரில் கழகம் எடுத்த ‘காதலர் நாள்’

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது தலைநகரில் கழகம் எடுத்த ‘காதலர் நாள்’

தென் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 11.2.2018 மாலை 4 மணியளவில் சென்னை அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் காதலர் நாள், ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. காஞ்சி மக்கள் மன்றத்  தோழர்களும், ம.க.இ.க. தோழர் காமராசும் ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடினர். தோழர்கள் ஜெயநேசன், ரவிபாரதி கவிதைகளை வாசித்தனர். தொடர்ந்து, ‘எது தேவை? வாழ்வியல் காதலா? தெய்வீகக் காதலா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. வே. மதிமாறன் நடுவராக இருந்தார். ‘வாழ்வியல் காதலே’ என்ற அணியில் திலகவதி, சுபா ஆகியோரும், ‘தெய்வீகக் காதலே’ என்ற அணியில் மேட்டூர் பரத், சென்னை யுவராஜ் ஆகியோரும் பேசினர். வே. மதிமாறன் தனது உரையில், ‘தெய்வீகக் காதல் கூட ஒரு பெண் ஆண் கடவுளை நினைத்து உருகி, அவனுக் காகவே அர்ப்பணித்துக் கொண்டவளாக இருப்பதற்கே அனுமதிக்கிறதே தவிர, ஒரு ஆண், பெண் கடவுளுக்காக உருகி, உருகி,...

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழ் சமூகத்தையே சமஸ்கிருத மயமாக்கியவர்கள் பார்ப்பனர்கள்

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழ் சமூகத்தையே சமஸ்கிருத மயமாக்கியவர்கள் பார்ப்பனர்கள்

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (சென்ற இதழ் தொடர்ச்சி) திருவையாறு 
சமஸ்கிருதக் கல்லூரியில் தமிழுக்கு இழைத்த அவமதிப்பு தமிழைத் தீட்டு மொழி என்று கூறி, தமிழ் பேசினாலேயே உடல் முழுதும் குளியல் போட்டு தீட்டுக் கழிக்கும் ‘இவாள்’தான், ‘பெரியாரை – தமிழ் விரோதி’ என்கிறார்கள். புராணக் கதைகளிலும் இராமாயணப் பெருமைகளிலும் பக்தி இலக்கியங் களிலுமே மூழ்கிக் கிடக்கும் தமிழை அறிவியல் மொழியாக்க வேண்டும் என்றார் பெரியார். திருக்குறளுக்காக மாநாடு போட்டு, திருக்குறளை குறைந்த விலையில் கையடக்க நூலாக மக்களிடம் கொண்டு சென்றவர் பெரியார். தமிழ்ப் பாடல்களை அவமதித்து, அதைத் ‘துக்கடா’ என்று, இசை நிகழ்வில் ஒப்புக்காகப் பார்ப்பனர்கள் பாடியபோது, தமிழிசையைப் பாட மறுத்தபோது, அதற்காக இயக்கம் நடத்தியவர் பெரியார்....

திருப்பூரில் ‘நிமிர்வோம்’ நூல் விற்பனை அரங்கிற்குப் பேராதரவு

திருப்பூர் மாவட்ட  கழகம் சார்பாக திருப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’, புத்தக நிலையம் அரங்கு எண்.94 செயல்பட்டது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இளைய சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. 11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரங்கின் முதல் நாள் விற்பனையைக் கழகப் பொருளாளர் சு. துரை சாமி, அறிவியல் மன்ற அமைப் பாளர் வீ. சிவகாமி,  தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புத்தகத் திருவிழாவின் ஆயத்தப் பணிகளான அரங்கு வடிவமைத்தல், புத்தகங்களைத் தருவித்தல் போன்ற பணிகளில் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், ஆசிரியர் சிவகாமி, மாவட்ட அமைப்பாளர் முத்து, சத்தியமூர்த்தி, சூரி ஆகியோர் கவனித்தனர். அரங்கின் விற்பனையை மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, சரசு, பார்வதி, வே. இராமசாமி ஆகியோர். காலை முதல் மாலை வரை புத்தக நிலையத்தின் விற்பனையையும், அரங்கிற்கு வருவோரிடம் கொள்கை...

அன்பைவிட நம்பிக்கையே முக்கியமானது! பிப்ரவரி 14 
உலக காதலர் நாள் சிந்தனை

அன்பைவிட நம்பிக்கையே முக்கியமானது! பிப்ரவரி 14 
உலக காதலர் நாள் சிந்தனை

சமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கும் புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்றபோது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தைப் பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும்போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது. இதிலிருந்து தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வுபூர்வமான உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க  வேண்டும். காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண், பெண் உறவே...

ஜீயர் மீது வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஜீயர் மீது வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

கொளத்தூரில் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்த திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியில் ‘சோடா பாட்டில் வீசுவோம்’ என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதியக் கோரி நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோடு நகர காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீது திருச்செங்கோடு துணை கண்காணிப் பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் சார்பில் சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. பெரியார் முழக்கம் 15022018 இதழ்

சென்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு அகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன

சென்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு அகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன

வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் சார்பில் 10.2.2018 சனி மாலை 6 மணியளவில் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில், ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். தொடர்ந்து பெ. முத்துக்குமார்  தலைமையில் பொதுக் கூட்டம் தொடங்கியது. ‘கடலோர மக்கள் களம்’ அமைப்பின் தலைவர் தோம. ஜான்சன், தமிழ் தேசியக் கட்சித் தலைவர் ஆ.கி. ஜோசப் கென்னடி, வழக்கறிஞர் துரை. அருண் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். விடுதலை இராசேந்திரன் தனது உரையில், தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் வஞ்சிப்பது நடுவண் அரசும், பார்ப்பனர்கள் உயிர்ப்புடன் இப்போதும் பாதுகாத்துவரும் பாசிசத் தத்துவமான பார்ப்பனியமும் தான் என்று எடுத்துரைத்து வைரமுத்துவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரி, திராவிட ஆட்சிகளை வீழ்த்த...

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

திருவொற்றியூர் பொதுக் கூட்ட மேடையில் ஒரு மேஜை மீது ஸ்டவ் அடுப்பும், அதற்கு மேல் எண்ணெய் சட்டியும் வைக்கப்பட்டு, கீழே அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட் டிருந்தது. மோடியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் “தமிழர் பீப் பகோடா  இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். உரிமையாளர் ஜெயா, எம்.ஏ., எம்.பி.எல்., பி.எச்டி.” என்று எழுதப்பட் டிருந்தது. பகோடா விற்று நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கும் இளைஞர்கள்கூட எங்கள் ஆட்சியின் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்றவர்கள்தான் என்று பிரதமர் மோடி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை கிண்டல் செய்து, இந்தக் காட்சியை மேடையில் தோழர்கள் அரங் கேற்றியிருந்தனர். கூட்டத்தினர் இதை மிகவும் பாராட்டி இரசித்தார்கள். பெரியார் முழக்கம் 15022018 இதழ்

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

கழகம் கருப்புக் கொடி; தோழர்கள் கைதுசேலம் பெரியார் பல்கலைக்கழகம், பா.ஜ.க.வின் மதவாத யாத்திரைக்கு அனுமதித்து, மாணவர்களைப் பயன்படுத்தியதற்கு கழகத் தோழர்கள் கருப்புக் கொடிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150ஆவது பிறந்தநாள் ரத யாத்திரையை பெரியார் பல்கலைக் கழகம் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, திராவிடர் விடுதலைக் கழம் எதிர்ப்பு தெரிவித்து 10-02-2018 மாலை 3 மணிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட் டத்தில் ஈடுபட்ட  42 தோழர்கள் கைதானார்கள். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150 வது பிறந்து நாள் விழா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நிவேதிதை 150 வது ரத யாத்திரை கடந்த 22ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றி எதிர் வரும் 22-ம் தேதி ரத யாத்திரை முடிவடைகிறது. பா.ஜ.க. பின்னணியோடு இது நடக்கிறது. இந்த நிலையில்...

பணி ஓய்வு பெற்ற தோழர் கழக ஏட்டுக்கு நன்கொடை

பணி ஓய்வு பெற்ற தோழர் கழக ஏட்டுக்கு நன்கொடை

இராயப்பேட்டை கழகத் தோழர் கண்ணதாசன் மாமனாரும், மயிலை கச்சேரி சாலை அஞ்சலகத்தில் அஞ்சல் ஊழியராக 34 ஆண்டுகள் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவருமான திருநாவுக்கரசு அவர்களை கழகத் தோழர்கள் இரா. உமாபதி, சு. பிரகாசு, செந்தில், அருண், விழுப்புரம் அய்யனார் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சமூகச் சிந்தனைக் கொண்ட திருநாவுக்கரசு, கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 08022018 இதழ்

பார்ப்பனியக் கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது திராவிடக் கட்சிகளை வீழ்த்த ஈரோட்டில் பா.ஜ.க. யாகம்!

பார்ப்பனியக் கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது திராவிடக் கட்சிகளை வீழ்த்த ஈரோட்டில் பா.ஜ.க. யாகம்!

திராவிட கட்சிகளை வீழ்த்தி, பா.ஜ.க.வின் ‘இந்து சாம்ராஜ்யத்தை’ தமிழகத்தில் நிறுவுவதற்கு ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க. தலைமை, யாகம் நடத்தியுள்ளது. இது குறித்து ‘ஜூனியர் விகடன்’ ஏடு (7.2.18) வெளியிட்டுள்ள செய்தி: “இஸ்லாமியர்களை விரட்டிவிட்டு இந்து சாம்ராஜ்ஜியத்தைப் பலப்படுத்த அஸ்வமேத ராஜ சூய யாகத்தை சத்ரபதி சிவாஜி நடத்தினார். அப்படியொரு யாகத்தை ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் நடத்தியுள்ளோம். ‘இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய யாகம் இது’ என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்” என்று பெருமையுடன் நம்மிடம் கூறினார், பி.ஜே.பி. விவசாய அணியின் தமிழகப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு. ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே ஏ.இ.டி. பள்ளி வளாகத்தில், பி.ஜே.பி. சார்பில் ஜனவரி 26, 27, 28 தேதிகளில் பிரமாண்டமான முறையில் யாகம் நடத்தப் பட்டது. இந்த யாகத்தில், குதிரையை உயிருடன் எரித்ததாகத் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் காட்டுத் தீ போல பரவிய தகவல், பெரும்...

மீனாட்சிக் கோயிலில் ‘அக்னி’ பகவான்

மீனாட்சிக் கோயிலில் ‘அக்னி’ பகவான்

மதுரை மீனாட்சிக் கோயில் மண்டபம் தீப்பிடித்து எரிந்துவிட்டது. ‘தீ விபத்து’ என்று பா.ஜ.க.வின் ‘தமிழிசை’யும், ‘தேசபக்தர்’ எச்.ராஜாவும் கூறுகிறார்கள். ராஜா இன்னும் ஒரு படி மேலேயே போய்விட்டார். ‘சி.பி.அய். விசாரணை வேண்டும்’ என்கிறார். ‘இந்துக்கள் வழிபாடு – கோயில் நிர்வாகங்களில் அரசு தலையீடு கூடாது’ என்று நீட்டி முழங்கும் ‘ஆன்டி இந்தியன்’ புகழ் ராஜாவும் இந்து முன்னணியும் இப்போது சி.பி.அய். விசாரணை கோருவது அரசின் தலையீடு அல்லவா? ‘ஆகம விதிப்படி பூஜை புனஸ்காரங்கள்’, ‘அவாள்களை’க் கொண்டே நடத்தாவிட்டால் ஆபத்து வந்து விடும் என்று அலறும் பார்ப்பனர்கள், இப்போது மீனாட்சி கோயிலில் ஆகமக் குளறுபடிகள் நடந்துவிட்டனவா என்று ஆராயாமல், சி.பி.ஐ. விசாரணையைக் கோருவது ஏன்? பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் காப்பாற்றும் முயற்சியல்லவா? இவர்களுக்கு இப்படி எல்லாவற்றிலும் இரட்டை வேடம் தான். ‘பூஜை புனஸ்காரங்கள்’ நடக்கும்போது கோயிலுக்குள் இருக்கும் சிலையை ‘பகவான்’ என்பார்கள். அதே பகவான் வெளிநாடு கடத்தப்படும்போது அல்லது கோயிலுக்குள்ளே விபத்துகள் ஏற்படும்போது, பகவானை...

ஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

ஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

இருவேறு சாதியைச் சேர்ந்த வயது வந்த ஆணும் பெண்ணும்விருப்பப்பட்டு செய்து கொள்ளும் காதல் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மேலும், சாதி மறுப்புத் திருமண தம்பதியரை தாக்குவது சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளநீதிபதிகள், இவ்விஷயத்தில் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளை மத்திய அரசே முன்வந்துதடை செய்ய செய்ய வேண்டும்; இல்லையேல் நீதிமன்றம் தலையிட்டு உரிய முடிவெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை குறிப்பிட்டு, சக்தி வாஹினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த 2010இல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத் தைக் கேட்டிருந்தது. அதற்கு, “கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க – கண்காணிக்க உச்சநீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும்” என்று மத்திய அரசு கூறிவிட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,...

கருத்தரங்கைத் தடுக்க வந்த பா.ஜ.க.வினர்

கருத்தரங்கைத் தடுக்க வந்த பா.ஜ.க.வினர்

‘தமிழை மறுக்கும் வேத மரபுகள்’ நிகழ்ச்சிக்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் தலைமை தாங்கினார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொறுப்பாளர் வாலாஜா வல்லவன், பேராசிரியர் சுந்தரவள்ளி, விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினர். மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி தரக் கூடாது என்று அரங்கிற்கு வெளியே பா.ஜ.க.வினர் காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை தடைப்படுத்த முயன்றனர். தடைகளைத் தகர்த்து பார்ப்பனியத்தின் வேதமரபுகளையும் தமிழ் எதிர்ப்பை யும் உரையாளர்கள் ஆதாரங்களோடு விளக்கினர். பெரியார் முழக்கம் 08022018 இதழ்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழை அவமதிப்பதே வேத மரபு

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழை அவமதிப்பதே வேத மரபு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… இன்று காந்தி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள். எனவே காந்தியாருக்கும் வேத மரபான பார்ப்பனியத்திற்கும் இடையிலான ‘உறவுகள்’ குறித்து சில கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு, பிறகு, எனது தலைப்புக்கு வருகிறேன். தமிழ்நாட்டில் காந்தி மேற்கொண்ட பயணங்களின் செய்திகளைத் தொகுத்து தமிழ்நாடு காதி வாரியம், ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலை வெளியிட்டிருக் கிறது. தொகுத்தவர் பெயர் இராமசாமி. அதில் உள்ள தகவல்கள் இவை: 16.10.1927 அன்று பாலக்காட்டில் காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரசாமி காந்தியாரை சந்தித்தார். சந்தித்த இடம் மாட்டுக் கொட்டகை. காரணம், காந்தி பிறப்பால் ‘பிராமணன்’ அல்ல என்பதுதான். அப்போது தீண்டப்படாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ‘ஆலயப் பிரவேசப்’...

கொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் கழகம் நடத்திய ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்!

கொளத்தூரில் காவல்துறை, ஆண்டாள் ஆய்வரங் கத்துக்கு தடைபோட்டது; உடனே ‘ஆண்டாள் அருள்வாக்கு மகிமை’ என்ற தலைப்பில் கழகம், ஆய்வரங்கை பெயர் மாற்றி நடத்தி முடித்தது. இது குறித்த செய்தி விவரம்: 03.02.2018 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” எனும் கருத்தரங்கிற்கு காவல்துறை தடை விதித்தது. மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டுக் கதவுகளில் வருவாய்த்துறை அலுவர்கள் முன்னிலை யில்  31.01.2018 அன்று ஒட்டினர். இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது: இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் ! வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண...

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘சங்பரிவாரங்களின் சதி வரலாறு’ – கன்னட மொழியில் வெளியீடு : ஒரே நாளில் 2500 பிரதிகள் விற்றன

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘சங்பரிவாரங்களின் சதி வரலாறு’ – கன்னட மொழியில் வெளியீடு : ஒரே நாளில் 2500 பிரதிகள் விற்றன

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தமிழில் எழுதிய ‘சங் பரிவாரங்களின் சதி வரலாறு’ எனும் ஆய்வு நூல் கன்னட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு “சஞ்சகரா சங்க பரிவார” எனும் பெயரில் 20.01.2018 சனிக்கிழமை அன்று பெங்களூரில் வெளியிடப்பட்டது. பெரியாரியலாளர் கலைச் செல்வி, அகஸ்டியா ஆகியோர் இந்நூலை கன்னட மொழியில் மொழி பெயர்த்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்சின் எம்.எஸ். கோல்வால்கரின் தீய எண்ணங்கள் மற்றும் கொடூரமான கருத் தாக்கங்களை இந்நூல் ஆவணப்படுத்து கிறது. பெங்களூரில் உள்ள கன்னட பவனில் கன்னட எழுத்தாளர் திரு.முரளிசித்தப்பா இந்நூலை வெளியிட, பிரபல கன்னட ‘அக்னி’ வார இதழ் ஆசிரியர் பத்திரிக்கை யாளர் ‘அக்னி’ ஸ்ரீதர், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு. பி.கே. ஹரி பிரசாத் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய ஹரிபிரசாத், ஆர்.எஸ்.எஸ். என்றால் ‘வதந்தியை பரப்பும் அமைப்பு’ (சு.ளு.ளு =‘சுரஅடிரச ளுயீசநயனiபே ளுடிஉநைவல’) என்றும், இது அரசியலமைப்பை எதிர்க் கிறது மற்றும் சமூகத்தில் அனைவரின்...

பெரியாரிய-அம்பேத்கரிய-மார்க்சிய சிந்தனைகள் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் நேர்காணல்: பசு கவுதமன்

‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரி புத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந் தொகுப்பு களினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமன் பேட்டி. (சென்ற இதழ் தொடர்ச்சி) தங்களின் அடுத்த படைப்புகள் பற்றி… அடுத்ததாக மீண்டும் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ‘பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள்’ தொகுப்பினை கொண்டு வரவேண்டும் எனும் வேலையை துவக்கியுள்ளேன். அது சமகாலத் திற்கு தேவைப்படும் மிக முக்கிய பதிவு என கருதுகிறேன். அதே போல பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் களுக்குமான உறவு அல்லது சொல்லாடல் எனும் அடிப்படையில் பல அம்சங்களைக் கொண்ட புரிதலோடு ஒரு தொகுப்பையும் உருவாக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். வெண்மணி பற்றிய என்னுடைய கள ஆய்வுகள் மூலம் அச்சம்பவம் குறித்து வெளிவராத பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதை பச்சைத் தீ என்ற தலைப்பில் ஆவணப்...

திருப்பூர் புத்தகத் திருவிழாவில்  ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புத்தகத் திருவிழாவில் கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ புத்தக நிலையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா  ஜனவரி 25 முதல் பிப் 4 வரை நடக்கும் இந்நிகழ்வில்அரங்கு எண் 94இல்  திராவிடர் விடுதலைக் கழகப் புத்தகங்கள் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ – வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழுக்கு சந்தாக்கள் சேர்க்கப்படுகின்றன. திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பங்கேற்கும் முதல் புத்தக திருவிழா இது என்பதோடு கழக வெளியீடுகள் மட்டுமின்றி பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருப்பு பிரதிகள், அங்குசம் பதிப்பகம் மற்றும் கலப்பை ஆகிய பதிப்பங்களிலிருந்தும் பல்வேறு சமூக சீர்திருத்த புத்தகங்களும் வாசகர்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் மிகப் பெரிய ஆதரவு கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ இதழுக்கு இந்த புத்தக கண்காட்சியில் கிடைத்துள்ளது. 4 நாட்களுக்குள்...

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  முக்கிய அறிவிப்பு

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

  டிசம்பர் (2017) மாதத்தோடு சந்தா முடிவடைந்த வாசகர்களுக்குப் பிப்ரவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200   ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை, ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041  – கைளஉ மஎடெ0001257 ஆண்டுக்கட்டணம்  ரூ.200 தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,  திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. &9841489896   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

‘நிமிர்வோம்’  ஜனவரி 2018 இதழ்

‘நிமிர்வோம்’ ஜனவரி 2018 இதழ்

அதிகாரம் + பார்ப்பனியம் கோடிகளில் புரளும் கார்ப்பரேட் ஆன்மிகம் கீதையைப் பேசும் ரஜினியின் அரசியல் ஆன்மிகம் பா.ஜ.க. கொண்டாடும் ஆன்மிகம் எது? ஆன்மீகமா? பார்ப்பனீயமா? – பெருஞ்சித்திரனார் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் – ஒரு பார்வை முதுகுளத்தூர் கலவரம் வாதங்களும் எதிர்வாதங்களும் – செந்தில் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com nimirvom@gmail.com   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் கொளத்தூரில் வரும் 03.02.2018 அன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் சடகோப ராமானுஜ ஜீயர் என்பவர் சென்று சோடா பாட்டில் வீசுவோம், எதற்கும் துணிவோம் எனவும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நான் சொல்வது போல் செய்யுங்கள். இந்தக் கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அதனை மேடையில் இருப்பவர்களும் ஆமோதித்து கைதட்டுகிறார்கள். நான் சொன்னபடி செய்வீர்களா என அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேட்கிறார், அனைவரும் செய்வோம் என முழங்குகிறார்கள். எனவே சடகோப ராமானுஜ ஜீயர், மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடனும் கூட்டுச் சதியிலும் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 27.01.2018 மாலை...

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு  நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம் நாள்     :                 6.2.2018 வெள்ளிக்கிழமை நேரம்                   :                 மாலை 5.00 மணி இடம் :                 நெல்லுக்குத்தி மண்டபம் அருகில், திருச்செங்கோடு சிறப்புரை  : ஆசிரியர் சிவகாமி டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்) கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர்க் கழகம், நாமக்கல் மாவட்டம் பெரியார் முழக்கம் 02022018 இதழ்