ஏழுமலையானை ‘கைவிட்ட’ அர்ச்சகர்கள்
பா.ஜ.க.-தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து ‘அவாளு’க்குள் மோதல் கோயிலில் கடவுளிடம் நெருங்க வும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் ‘பிராமணர்கள்’ மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற ‘ஜாதியப் பாகுபாடு’ இப்போதும் ‘ஆகம விதிகள்’ என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் ‘பாகுபாட்டை’ உறுதிப்படுத்தும் ‘ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது. ஆகமவிதிகளின்படி பல கோயில் களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதி களை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்று களுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்ட தோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப் பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம்...