2007இல் தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆசிட் தியாகராசன் நிகழ்த்திய உரை
2007 மே 19 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆசிட் தியாகராசன் ஆற்றிய உரை. “நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப் படை. நான் தீவிரவாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) . பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன்.என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப் பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீர முத்து என்பவன், பெரியார் படத்தை...
