நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?
சென்ற ஆண்டு அனிதா என்றால் இந்த ஆண்டு பிரதீபா.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் நீட் தேர்வு முடிவுகளை யொட்டி, தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நீட் தேர்வு என்பது உண்மையில் தகுதியை உறுதிசெய்கிறதா, தாழ்வு மனப்பான்மையையும் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறதா? இந்த ஆண்டு, நாடு முழுவதும் 12,69,922 மாணவர்கள் நீட் தேர்வெழுதினார்கள். 7,14,562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் தேர்வெழுதிய 1,14,602 பேரில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றவர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் வழியில் தேர்வு எழுதிய 24,720 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 460 பேர். நீட் தேர்வைப் பொறுத்தவரை தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுவிடும். மீதமிருக்கும் 2445 இடங்களும் தமிழக...