Category: பெரியார் முழக்கம்

நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?

நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?

சென்ற ஆண்டு அனிதா என்றால் இந்த ஆண்டு பிரதீபா.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் நீட் தேர்வு முடிவுகளை யொட்டி, தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நீட் தேர்வு என்பது உண்மையில் தகுதியை உறுதிசெய்கிறதா, தாழ்வு மனப்பான்மையையும் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறதா? இந்த ஆண்டு, நாடு முழுவதும் 12,69,922 மாணவர்கள் நீட் தேர்வெழுதினார்கள். 7,14,562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் தேர்வெழுதிய  1,14,602 பேரில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றவர்கள்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் வழியில் தேர்வு எழுதிய 24,720 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 460 பேர். நீட் தேர்வைப் பொறுத்தவரை தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.  இவற்றில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுவிடும். மீதமிருக்கும் 2445 இடங்களும் தமிழக...

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

பார்ப்பனர்கள் விளையாட்டாக மாறிவிட்ட ‘கிரிக்கெட்’ மட்டுமே இங்கு பிரபலமாக்கப்பட்டதால் கடும் உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய ஒருவரை ஒருவர் தொட்டு முட்டி மோதி விளையாடக் கூடிய ‘கால்பந்து’ விளையாட்டுகள் ‘புண்ணிய பூமி’யில் ‘சூத்திரர்’ விளையாட்டாகிவிட்டன. இரஷ்யாவில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியில் இந்தியாவில் ஒரு மாவட்டத்தைவிட சிறிய பரப்பளவு கொண்ட அய்ஸ்லாந்து, துனிஷியா, பனாமா, செனகல் போன்ற நாடுகள் எல்லாம் பங்கேற்கும்போது இந்தியா வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது. 2002இல் உலகப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்றார்கள். 2010இல் உலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ‘டி சர்ட்டுகள்’ மட்டுமே தயாரிக்கப்பட்டன. இப்போது 2026இல் பங்கேற்கும் என்கிறார்கள். இதற்கான தயாரிப்புகள் ஏதேனும் நடக்கிறதா? எதுவுமே இல்லை. உள் நாட்டில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படுவது இல்லை. ‘கால்பந்து’ கிளப் ஏதும் கிடையாது. பார்ப்பன உயர்ஜாதியினர் கடுமையாக உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய இந்த விளையாட்டைவிட ஒருவருக்கொருவர் தொட வேண்டிய தேவை இல்லாமல்...

கோவையில் இரயில் மறியல்

கோவையில் இரயில் மறியல்

“தீண்டாமை ஒழிப் புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர்.  கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி....

`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!’

`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!’

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரி சேலம் இரயில்வே சந்திப்பு முன்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, அம்பேத்கர் இந்தியக் குடியரசுக் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். தலைமை தாங்கிப் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் வைத்த வேண்டுகோள் சரியா தவறா என்று தீர்ப்பளிக்க வேண்டிய நீதிமன்றம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக் குள்ளேயே நுழைந்து அதை நீர்த்துப் போகச் செய்தது.  அக்கறை இல்லாமல் வழக்கை நடத்துவதாலும், சாட்சிகள் மிரட்டப்படுவதாரும் இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடிய வில்லை என்கிறார்கள். ஆனால், இந்த வன்கொடுமை சட்டத்தைக்...

சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும் ஆபத்து

சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும் ஆபத்து

‘நிதி ஆயோக்’ (Ammyy admin) அமைப்பு, ‘கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை’ (Composite Water Management Index) ஜூன் 14 அன்று வெளியிட்டது. இந்தியா கடும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன், நாட்டின் தண்ணீர் பிரச்சினை இதே விதத்தில் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 05072018 இதழ்

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (21.6.2018 இதழ் தொடர்ச்சி) இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத் தான் இப்போது மெதுவாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்தில் முதுநிலை படிப்பவர்கள் குறைந்தது அரசிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஆனால் இப்போது, காலம் முழுவதும் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். அதுகுறித்து நமக்குத் தெரியாது. இவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றாவிட்டால் 45 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் எழுதி கொடுத்துவிட்டுத் தான் வெளியே செல்ல வேண்டும்.  அதனால் நமக்கு மருத்துவர்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக, உயர் சிகிச்சை மருத்துவர்களாக நம் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். ஆனால்...

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை  இழிவு செய்கிறார்

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை இழிவு செய்கிறார்

இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பேசப்படுகின்ற ஆமைக் கறிக் கதை ஒன்றும் புதிது இல்லை. என்னுடைய ஞாபகப் பதிவுகள் சரியாக இருந்தால், இந்தக் கதை 2006, 2007களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றைக்கு அது ஆமைக் கறி அல்ல. ஈழத் தமிழர் வழக்கில் ‘ஆமை இறைச்சி’. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் இணைய ஊடகங்கள் திடீர் என்று அதிகரித்தன. இந்த ஊடகங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டன. அதில் முக்கிய நோக்கமாக தலைவர் பிரபாகரனை உல்லாச வாழ்க்கை வாழ்பவராக சித்தரிப்பது என்பதாக இருந்தது. ‘ஏழைப் பிள்ளைகள் களத்தில் சாக, தலைவர் பிரபாகரன் நீச்சல் தடாகத்துடன் கூடிய மாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்’ என்று இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அப்படியே தலைவர் பிரபாகரன் ஆமை இறைச்சி விரும்பி உண்கிறார் என்றும், அதற்காக தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி கொண்டுவரப்படுகிறது என்றும் பொய்யாக எழுதின. ஆமை...

‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்!

‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்!

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். பக்தி நம்பிக்கையில் மூழ்கிப் போன அந்தக் குடும்பம் வீட்டுக்குள் கோயில் கட்டி, இறப்பின் வழியாக ‘மோட்சம்’ போக முடியும் என்ற நம்பிக்கை யில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. உடலிலிருந்து பிரிந்த ‘ஆவி’ நேரடியாக ‘சொர்க்கம்’ போக வீட்டுச் சுவற்றில் தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் 11 குழாய் களைப் பதித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளை கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறார்கள். ‘மூடநம்பிக்கையால் குடும்பமே தற்கொலை’ என்று ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. “ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் இவைகளைக் கற்பித்தவன் முட்டாள்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பயன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்” என்று பெரியார் இயக்கம் கூறினால், இந்து மதத்தைப் புண் படுத்துவதாகக் கூப்பாடு போடுகிறார்கள். ‘மனித ஆத்மாவுக்கு மரணமில்லை; அது மறுபடியும் பிறவி எடுக்கும்’ எனவே ‘மோட்சம்’ போகலாம்; ‘மரணம் இல்லை’ என்று ‘கீதை’யில் ‘கிருஷ்ண பகவான்’ கூறும்...

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள். முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார். தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி – நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத் தின் 5வது சந்திப்பு 23.06.2018 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடு தலைக் கழகத்தின் சென்னை தலைமை அலுவலகத்தில் வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலை வர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ‘நிமிர்வோம்’ அக்டோபர் மாத இதழ்க் குறித்து ராஜீ மற்றும் இமானுவேல் துரை தங்களது பார்வையை எடுத்துரைத்தனர்.  தொடர்ந்து, சமூகநீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்தை மதிமாறன் (எழுத்தாளர்) திறந்து வைத்து “இட ஒதுக்கீடு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, 2.6.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதி மன்றத்தில் ஆணை பெற்று வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ உரிய ஒத்துழைப் புகள் வழங்குமாறு வருவாய், காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்....

19 நாட்களே நாடாளுமன்றம் வந்த மோடி

19 நாட்களே நாடாளுமன்றம் வந்த மோடி

நான்கு ஆண்டுகளில், 19 நாட்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றம் வருகைதர உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூன் 12 அன்று பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருக் கிறார். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டு மொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அத்துடன், சிலமுறையே மோடி நாடாளு மன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க.வின் 800-க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 28062018 இதழ்

மகர்களைக் கொடுமைப்படுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள்

மகர்களைக் கொடுமைப்படுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள்

பேஷ்வா பார்ப்பனர்கள் ‘மகர்’ மக்களுக்கு இழைத்த கொடுமைகள் குறித்து அம்பேத்கர் தரும் தகவல்கள்: அன்றைய மராத்திய பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒரு தெருவில் எதிரில் வரும் இந்துவின் மீது தீண்டத்தகாதோரின் நிழல் பட்டால்கூட தீட்டாகிவிடும் என்ற காரணம் காட்டி – தீண்டத்தகாதவர்களை தெருவுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இந்துக்கள் தவறி தீண்டத்தகாதவர்களைத் தொட்டு அவர்கள் தீட்டாகி விடுவதைத் தடுக்க, தீண்டத்தகாதவர் தன் கழுத்திலோ மணிக்கட்டிலோ கறுப்புக் கயிறு ஒன்றை அடையாளமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பேஷ்வாவின் தலைநகரான பூனாவில் தீண்டத்தகாதவர், தன்னுடைய இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, தான் போகும் பாதையில் – தன் காலடித் தடத்தின் புழுதியைப் பின்புறமாகக் கூட்டியபடி சென்றாக வேண்டும் என்ற ஆணை இருந்தது. இல்லாவிட்டால், அதே தெருவில் நடக்கும் இந்து தீட்டாகி விடுவானாம். பூனாவில் தீண்டத்தகாதவர் எங்கு போனாலும் தன் கழுத்தில் மண்கலயம் ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையும் இருந்தது....

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’ ஆவணப் படமாகியுள்ளது ‘மஹார்’கள் ஆண்ட ‘ராஷ்டிரம்’ (தேசம்) என்ற பொருளில் உருவானதுதான், ‘மஹாராஷ்டிரா’ எனும் மாநிலத்தின் பெயர். ஆனால், மஹார் இன மக்களின் வீரம், வரலாற்றில் பல காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது…1927இல், அம்பேத்கர், அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவரும்வரை! அந்த வரலாறுதான் பீமா கோரேகாவ் யுத்தம்! மகாராஷ்டிர மாநிலத்தை பேஷ்வாக்கள் ஆண்டு வந்தனர். அவர்களின் ஆட்சியில், மஹார் இனத்தவர்கள் சாதியரீதியான கொடுமைகள் பலவற்றைச் சந்தித்தனர். அப்போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்களின் ராணுவத்தில், மஹார் இன மக்கள் சேர, அவர்களுக்குச் சமூகத்தில் கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. ஆனால், அது ராணுவ வீரர்களுக்கு மட்டுமேயான மரியாதையாக இருந்தது. இந்நிலையில், ஆங்கிலேயர்களுடன் இணைந்து, பேஷ்வாக்களை (மராட்டியப் பார்ப்பனர்) எதிர்த்தார்கள் மஹார் மக்கள். 1818-ம் ஆண்டில் பீமா கோரேகாவ் எனும் இடத்தில் தோராயமாக 25 ஆயிரம் பேஷ்வா வீரர்களை வெறுமனே 500 மஹார் இன...

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2இல் இரயில் மறியல்: தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2இல் இரயில் மறியல்: தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

பட்டியல் இன பழங்குடி மக்களுக்குப்  பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பாதுகாப்பு கூட்டியக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நமது திராவிடர் விடுதலைக் கழகமும் இணைந்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு...

சமூக நீதி என்பதும் பண்பாடுதான் விடுதலை இராசேந்திரன்

சமூக நீதி என்பதும் பண்பாடுதான் விடுதலை இராசேந்திரன்

பார்ப்பனியம், இந்துமதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஊடாக மனித உணர்வுகளில்  நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜாதிய வேர்களை எதிர்க்க வேண்டும். ஆதித் தமிழ்ச்சமூகம் சாதி, மத அடையாளமற்றதாக இருந்தது. இடையில் புகுந்த ஆரியப் பண்பாட்டை தமிழ்ச் சமூகம் எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தான் தமிழகத்தில் நான்கு வருணமுறை முழுமையாக இல்லை. சத்திரியர், வைசியப் பிரிவு தமிழகத்தில் கிடையாது. வேதத்திலும் சாதிகள் இல்லை. நெகிழ்ச்சித் தன்மையுடன் இருந்த வருணாசிரமத்தை பார்ப்பனியம் சூழ்ச்சியால் கெட்டிப்படுத்தியது. வர்ணா சிரமத்தில் 4 பிரிவுகளுக்குள் ஏற்பட்ட இனக்கலப்பு, வாழ்ந்த இடம், தொழில் அடிப்படையில் சாதி முறை உருவானது. தமிழகத்தில் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழர்கள். தெலுங்கு, கன்னடம் பேசுகிறவர்கள் தமிழர்கள் இல்லை என்று சில அமைப்புகள் பிளவை ஏற்படுத்துகின்றன. பேசுகிற மொழியைவிட சாதி அடையாளமற்ற அல்லது சாதியற்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களையே தமிழன் என்பதற்கான அடையாளமாக முற்போக்குவாதிகள் பார்க்கிறோம். சாதியற்ற தமிழரையும், சமூகத்தையும் உருவாக்க முடியுமா? சாதி அற்ற...

விபூதியை அழிக்கக் கூடாதா? பொன் இராதாகிருஷ்ணன் மிரட்டுகிறாரா?

விபூதியை அழிக்கக் கூடாதா? பொன் இராதாகிருஷ்ணன் மிரட்டுகிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ச்சகர் பூசிய விபூதியை அழித்து விட்டார் என்பதற்காக அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிறார், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன். மத அடையாளங்களை தரித்துக் கொள்வது தனி உரிமை; அதைக் கட்டாயப் படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் நெற்றியில் விபூதி பூச மாட்டார் என்பது தெரிந்தும், அர்ச்சகர் பூசியபோது அதை மறுக்காமல் பண்பாடோடு எதிர்க் கட்சித் தலைவர் தடுக்கா மல் ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு, அதை அகற்றிக் கொண்டிருக்கிறார். அர்ச்சகர் விபூதி பூசி விட்டார் என்ப தற்காக அதை அழிக்கவே கூடாது என்கிறாரா அமைச்சர்? விபூதி, குங்குமம் வைக்கும் பழக்கமுள்ள அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், வைணவக் கோயிலுக்குப் போகும்போது அய்யங்கார் அர்ச்சகர் அவரது நெற்றியில் நாமத்தைப் போட்டு விட்டால், அதுவும் இந்துமத புனித சின்னம்தான் என்று அமைச்சர் அதை அழிக்காமல் அதே நாமத்தோடு பவனி வருவாரா? வடகலை நாமம், தென்கலை நாமத்தை மறுக்கிறது;...

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு  ரூ.25,000 நன்கொடை வழங்க முன் வந்து முகாமை நடத்துமாறு கூறியவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், இராசிபுரம் பகுதியைச் சார்ந்த தி.மு.க. பிரமுகருமான பாலு ஆவார். அவருக்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி சால்வை போர்த்தி, பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்து, வீடியோ பதிவாக்கிய சித்தோடு கழகத் தோழர் எழிலன் மற்றும் அவருக்கு உடனிருந்து உதவிய தோழர்களுக்கும் இரண்டு நாளும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய ஏற்காடு பிரபாகரன் உணவு விடுதி உரிமை யாளரும் கழகச் செயல் பாட்டாளருமான பெருமாள் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் நூல்களை கழகத் தலைவர் வழங்கினார். பயிலரங் கத்தை  முன்னின்று ஏற்பாடு செய்த இராசிபுரம் கழகச் செயல்பாட்டாளர் சேகுவேரா, அவரது இணையர் மற்றும் கமலக் கண்ணன் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

இராசிபுரம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காட்டில் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம், கருத்துக் களமாகவும், விவாத அரங்கமாகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பங்கேற்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனச் சிதைவு மற்றும் ஏற்பாட்டு வசதிக் குறைவு கருதி எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு முதல் முறையாக பெரியாரியல் குறித்து அறிய விரும்பு வோருக்கு முன்னுரிமை தரப்பட்டு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பயிலரங்கில் பங்கேற்ற கழகத் தோழர்கள் இதில் பங்கேற்காது தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் புதிய தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்தார். மொத்தம் பங்கேற்ற 51 பயிற்சியாளர்களில் பெண்கள் 21 பேர் என்பது இப்பயிலரங்கின் சிறப்பாகும். கிராமத்தி லிருந்து முதல் தலைமுறையாகப் படித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் இளம் பெண் தோழர்கள் முனைப் புடன் பங்கேற்று கருத்துகளை குறிப்பெடுத்து...

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

நாள் :  30.6.2018, 1.7.2018 (சனி, ஞாயிறு) இடம் :  மக்கள் மன்றம், காஞ்சிபுரம் முதல் நாள் 30.06.2018 சனிக் கிழமை காலை 9.30 மணி     :     தோழர்கள் அறிமுகம் காலை 10 – 1 மணி   :     பிரின்ஸ் கசேந்திர பாபு  (கல்வி -நம்முன் உள்ள சவால்கள்) மதியம் 1 – 2 மணி    :     உணவு இடைவேளை மதியம் 2- 3.30 மணி  :     தேவா  (மாணவர்களின் திறன் மேம்பாடு) மாலை 4- 5.30 மணி   :     விடுதலை இராசேந்திரன் (தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை) மாலை 5.30 – 6.30 மணி     :     இன்றைய பயிற்சி வகுப்பு குறித்து தோழர்கள் கலந்துரையாடல் இரண்டாம் நாள் : 01.07.2018 ஞாயிறு காலை 10 – 1.00 மணி      :     மருத்துவர் எழிலன்  (மூட நம்பிக்கை) மதியம்  1...

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல; விடுதலை இயக்கம் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை ஜூன் 16, 2018இல் வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி இந்த அமைப்புக்கு நிதி திரட்டிய தாகவும், அதில் உறுப்பினர்களாக இருந்து சுவிஸ் நாட்டில் செயல்பட்ட தாகவும், திரட்டிய நிதியில் மோசடி நடந்ததாகவும் குற்றம் சாட்டி 13 ஈழத் தமிழர்கள் மீது கடந்த ஜனவரி 2018இல் சுவிஸ் நாட்டில் வழக்குப் பதிவு செய்தது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதால் போர் நடவடிக்கை களை மேலும் தீவிரமாக்கவும், நீண்ட காலம் போர் நடப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றும் குற்றப் பத்திரிகை கூறியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் பெரும் பொருட் செலவில்...

‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ விடுதலை இராசேந்திரன் உரை

‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ விடுதலை இராசேந்திரன் உரை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் முடிவெய்திய ‘கலை இலக்கிய ஆளுமைகள்’ கே.பி.பாலச்சந்தர், டி.ஏ. விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவு, ஜூன் 15ஆம் தேதி மாலை 7 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் கே.வி.பி. அரங்கில் மாவட்டத் தலைவர் சி.எம்.குமார் தலைமையில் நடந்தது. க.மலர்விழி வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் நினைவு சொற்பொழிவாற்றினார். மாவட்ட தலைவர் சந்தானம், முடிவெய்திய கே.பி. பாலச்சந்தர், டி.ஏ.விசுவநாதன் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். முன்னதாக மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை பொருளாளர் வெ. கண்ணன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 21062018 இதழ்

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப்...

ஏற்காடு பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காடு பெரியாரியல் பயிலரங்கம்

நாள் :  23, 24 ஜூன் 2018 இடம் :  ஏற்காடு, சேலம் மாவட்டம். 23.06.2018 சனிக் கிழமை காலை 10.00 மணி    :     தோழர்கள் அறிமுகம் காலை 11.00 மணி    :     விடுதலை இராசேந்திரன் (பெரியார்- அன்றும்’ இன்றும்) மதியம் 1.00 மணி     :     உணவு இடைவேளை மதியம் 2.00 மணி     :     வீரா கார்த்திக் (கடவுள் மறுப்பு தத்துவமும் – பெரியாரும்) மாலை 3.30 மணி     :     தேனீர் இடைவேளை மாலை 3.45 மணி     :     கொளத்தூர் மணி (இந்துத்துவம் – பெரியார் – அம்பேத்கர்) மாலை 6.00 மணி     :     தனித் திறமை (பேச்சு பயிற்சி, வீதி நாடகம்) இரவு 8.30 மணி  :     இரவு உணவு இரவு 9.15 மணி :     கலந்துரையாடல் 24.06.2018 ஞாயிறு காலை 7.00 மணி     :     பால்.பிரபாகரன் (இட ஒதுக்கீட்டு வரலாறு) காலை...

வங்கிகளின் வாராக் கடன்கள் மதிப்பு குறைந்தது ஏன்?

வங்கிகளின் வாராக் கடன்கள் மதிப்பு குறைந்தது ஏன்?

இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை குறைந்துவிட்டது என்று கூறப்படும் நிலையில், 55 சதவிகித வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டதே இதற்கு காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.2017-18 நிதியாண்டின் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 960 கோடி குறைந்துள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிதிக் குழுவுக்கு வழங்கியுள்ள விவரங்களின் படி, பொதுத்துறை வங்கிகளின் மேற்கூறிய செயற்படா சொத்து மதிப்பில் வெறும் 27 சதவிகித மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்கள் எனவும் சுமார் 55 சதவிகித அளவுக்கான கடன்கள், வங்கிகளே பார்த்து தள்ளுபடி செய்து விட்டால் ஏற்பட்ட மதிப்பு குறைவு என்பதும் தெரிய வந்துள்ளது. வராக் கடன் மீட்பு நடவடிக்கை மூலமாக ரூ. 41 ஆயிரத்து...

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக் காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது.  பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது. பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராஜேந்திரன் ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக் கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,...

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடியும் சட்டசபையில் அறிவித் துள்ளார். இதன் பின்னணி உள்நோக்கம் குறித்த ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து அந்த பதிவில், “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம்இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா? அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலை யானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக.  ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது, ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம்...

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல;  இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல; இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத் தமிழர் களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்...

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி படுகொலை – தாக்குதலுக்குள்ளான கச்சநத்தம் கிராமத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் குழு நேரில்  சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துப் பேசியது. அது குறித்து கழக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தரும் செய்தி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ‘கச்ச நத்தம்” என்ற ஊரில் நடைபெற்ற படுகொலைகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிடவும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 06.06.2018 புதன் கிழமை காலை 10 மணிக்கு கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர்  இராம. இளங்கோவன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  வைரவேல், பள்ளிபாளையம்  முத்துப்பாண்டி, கோபி ஒன்றிய செயலாளர் அருளானந்தம், பழனி வட்டம் பொறுப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மதுரை சென்றடைந்தது. அங்கு மதுரை மாவட்ட பொறுப்பாளர்  காமாட்சி பாண்டியன், காளையார்கோவில் பொறுப்பாளர்  முத்துக்குமார், காரைக்குடி  பெரியார் முத்து, வினோத் ராஜா, ...

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து  கழகம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் : தூத்துக் குடி படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம்  23.5.2018 அன்று மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சார்பில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமை தாங் கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பண்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோ. சூரியக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், நாம் தமிழர்க் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, கழகத் தோழர் மா.சுந்தர் ஆகியோரின் கண்டன உரைகளைத் தொடர்ந்து இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். குமரேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். காஞ்சியில்  : திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்...

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள்

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள்

பெங்களூரில் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துத்துவ எதிர்ப்பாளரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் – அவரது இந்து எதிர்ப்பு கருத்து களுக்காகவே சுடப்பட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக நவீன் குமார் மற்றும் அவரது மத்தூரைச் சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. நீதிபதி முன் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். ஆனால் இந்த ஒப்புதல் வாக்குமூலம் சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டு கோள்படி வெளியிடப்படவில்லை. இது வெளியிடப்பட்டால் தேடப் படும் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடும் என்பதுதான் காரணம். கைது செய்யப்பட்ட நவீன்குமார் என்பவர் எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்பது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட வில்லை. ஆனாலும் அவரது மனைவி சி.என்.ரூப்பா, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தந்த வாக்குமூலத்தில் தனது கணவர் ‘சந்தான் தர்ம சன்ஸ்தா’ என்ற அமைப்போடு தொடர்புடையவர் என்று கூறியிருக்கிறார். “2017ஆம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய...

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு – நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.: நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட் டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண...

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் 23, 24 தேதிகளில் ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பால் பிரபாகரன், பேரா. சுந்தரவள்ளி, வீரா கார்த்திக், வகுப்புகளை எடுக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ.100/-                      முன் பதிவு அவசியம். தொடர்புக்கு:  ஃபிடல் செகுவேரா, இராசிபுரம். பேசி: 9788593863 பெரியார் முழக்கம் 07062018 இதழ்

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே

இந்தியா முழுமையும் பா.ஜ.க. பிடிக்குள் வந்திருப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை அக்கட்சி உருவாக்கி வருகிறது. உண்மையில், இந்தியாவின் 29 மாநிலங்களில் உள்ள 4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை 1516 மட்டும்தான். அதுவும் பெரும்பாலான 950 சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத், மகாராஷ்டிரா, கருநாடகம், உ.பி., ம.பி., இராஜஸ்தான் என்ற 6 மாநிலங்களில் மட்டும் இருக்கிறார்கள். 10 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. மாநிலங்கள் வாரியாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் விவரம்: தமிழ்நாடு  –     ஒருவர்கூட இல்லை சிக்கிம்    –     ஒருவர்கூட இல்லை மிசோராம் –     ஒருவர்கூட இல்லை ஆந்திரா   –     175 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 4 பேர் கேரளா    –     140  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. ஒருவர் மட்டும் பஞ்சாப்    –     117  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 3 பேர் மேற்கு வங்கம்  –     294  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 3 பேர் தெலுங்கானா    –     119  எம்.எல்.ஏ.க்களில்                      பா.ஜ.க....

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் கடுவனூரில்  மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர்  மு.நாகராசன் தலைமையில்  குழந்தைகள் பழகு முகாம்  நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இயக்கத் தோழர் அய்யனார் நிலத்தில் 23.05.2018  புதன்கிழமை அன்று  பந்தல் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டன. 5 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை (ஆண், பெண்) 90 மாணவர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளராக  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்  ஆசிரியர் சிவகாமி வருகை புரிந்து  பயிற்சி அளித்தார்.  சிவகாமி மகள் கனல், காலை முதல் மாலை வரை பேய், பிசாசு, கடவுள், மதம் போன்ற பொய்யானவைகளை  விளக்கியும் உலகம் எப்படி தோன்றியது உயிர் எப்படி தோன்றியது போன்ற அறிவியல் – விஞ்ஞானம் சார்ந்தவைகளை பற்றியும் விளக்கமாக மாணவர்களுக்கு கற்பித்தனர். பழகுமுகாமில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பொய்யான சாதி, மதம், கடவுள் சார்ந்த சிறு நாடகங்களை மாணவர்கள் நடத்தியது சிறப்பாக இருந்தன....

கர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’

கர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன், அவனது மனைவி உலகமாதேவி ஆகியோரின் அய்ம்பொன் சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் கோயிலிலிருந்து திருட்டுப் போனது. இப்போது குஜராத்திலுள்ள தனியார் அருங்காட்சியகத்திலிருந்து (அகமதாபாத் – சாராபாய் பவுண்டேஷன் காலிகோ அருங்காட்சியகம்) மீட்கப்பட்டு தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளையெல்லாம் பத்திரமாக மீட்டுத் தரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார், சிலைக் கடத்தல் தடுப்புக் குழு தலைமை காவல் அதிகாரி (அய்.ஜி.) பொன். மாணிக்கவேல் அவரது குழுவினர் ஒத்துழைப்புடன்! கண்டுபிடித்து மீட்டுவரும் இவர்கள் ஆகமமுறைப்படி சிலைகளுக்கு அருகே நெருங்கக் கூடாதவர்கள்; “சூத்திரர்கள்”. இந்த சிலையை 60 ஆண்டுகளுக்கு முன் திருடுவதற்குத் திட்டம் தீட்டித் தந்து, அதை விற்பதற்கு தரகராக செயல்பட்டது யார் என்றால், சீனிவாச கோபாலாச்சாரி என்ற பார்ப்பனர். தஞ்சை கோயில் ‘ஆகம விதிப்பபடி’ பகவானுக்குரிய கடமைகளை செய்து வரும் “பிராமண அர்ச்சகர்” உதவியோடுதான்இந்த திருட்டு நடந்திருக்கிறது. ஆகமத்தில் அர்ச்சகர் சிலை...

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘சமூக நல்லிணக்கம்’ என்ற போர்வையில் தமிழர் ஓர்மைப் பேசாமல் ஜாதி ஒழிப்புத் தளத்தில் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற் பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் சிவகங்கை கச்சநத்தம் ஜாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் வி.கே.எம். மகாலில் ஜூன் 3, 2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணிப்  பொறுப்பாளர் சாமுவேல் ராஜ், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் அமீர், வெற்றி மாறன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், சீனு ராமசாமி, மீரா கதிரவன், வழக்கறிஞர் அருள்மொழி, நவீன், மதிவண்ணன், கிரேஸ் பானு, மருத்துவர் ஷாலினி, யாழன் ஆதி, பா. இரஞ்சித், வழக்கறிஞர் ராஜகுரு, லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து: ஜாதியை எப்படி...

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழரும் முன்னாள் சுங்கத்துறை கண்காணிப்பு அதிகாரியுமான குகானந்தம் (குகன்) தாயார் ஜெயம்மாள் (86) – மே 27 அன்று முடிவெய்தினார். நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து இறுதி மரியாதைச் செலுத்தினர். கழகத் தோழர்களின் இறுதி வணக்க முழக்கங்களோடு இறுதி ஊர்வலம் புறப்பட்டு மீனம்பாக்கம் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குமின்றி அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 31052018 இதழ்

ஜனநாயகம் : அயர்லாந்தும் பார்ப்பன இந்தியாவும்

ஜனநாயகம் : அயர்லாந்தும் பார்ப்பன இந்தியாவும்

குழந்தைகள் பிறப்பது ‘கடவுளின் அருள்’ என்று மதங்கள் மக்களிடம் நம்பிக்கைகளைத் திணித்தன. ஆனால் மத நம்பிக்கைகளுக்கு மாறாக அரசுகளே குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைக் கொண்டு வந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தின. கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட அயர்லாந்து நாட்டில் செல்வாக்கு செலுத்தி வந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வராமல் அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1861ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி அயர்லாந்தில் கருக்கலைப்புகள் கூடாது என்ற தடையைத் திணித்தது. 1973ஆம் ஆண்டு அயர்லாந்து உச்சநீதிமன்றம் இந்தத் தடை சட்டவிரோதம் என்று அறிவித்து கருக்கலைப்புக்கு அனுமதித்தது. 1983இல் அயர்லாந்தில் செல்வாக்குள்ள கத்தோலிக்க பழமைவாதிகள், ‘கருக்கலைப்பு உயிர்க்கொலை – உயிரைக் காப்பாற்றுவோம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினர். அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மதவாதிகளின் கருத்தே வெற்றி பெற்றது. அரசியல் சட்டம் கருக்கலைப்புக்கு எதிராக திருத்தப்பட்டது. 2012ஆம் ஆண்டு இந்திய மரபு வழியைச் சார்ந்த அயர்லாந்தில் குடியேறிய 31 வயதுள்ள சவீதா...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது. பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) 2013ஆம் ஆண்டில் ஷேல் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 3.25 கிலோமீட்டருக்கு கீழே மண்ணுக்குள் இருக்கிற வண்டல் மண் பாறை இடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை ஷேல் எரிவாயு என்பார்கள். இதையும் மேலே கூறிய தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் எடுப்பார்கள். ஒரு கிணற்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர், 16 டேங்கர் மணல், 634 ரசாயனங்கள் கலந்து படுவேகமாக இந்த நஞ்சுக் கலவையை அந்த கிணற்றுக்குள் செலுத்தி, ஒரு செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் அந்தக் கிணற்றுக்குள் ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் 600 கிலோ அளவிலான எடை இறங்கும். இதிலிருந்து...

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

தூத்துக்குடியில் போராட்டம் தொடங்கிய முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீர பாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம் பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்...

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது மற்றும் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நடைபெற்ற போராட்டங்கள்: 1992 குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை விரட்டி அடிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலையை அமைக்க அரசாங்கத்தால் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மக்கள் ஆலையை அடித்து நொறுக்கினர். 15.7.1993 – இரத்தினகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். 1.8.1994 – தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது. தொடர்ச்சியாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. 16.1.1995 – மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கியது. 14.10.1996 – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது. 20.8.1997 – ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகேயுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள், ஸ்டெர்லைட்...

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை பார்ப்பன – பனியாக்களின் கட்டுப்பாட் டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி...

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடாகி வருகின்றன. ஜூன் 23, 24 நாட்களில் பயிற்சி நடக்கும். (இடம் – பின்னர் அறிவிக்கப்படும்) சமூக நீதி – வரலாறு  – கல்வித் துறை சந்திக்கும் ஆபத்துகள் குறித்து கல்வியாளர்கள், வகுப்புகளை நடத்துவார்கள். நுழைவுக் கட்டணம் : ஒருவருக்கு இருநூறு ரூபாய். (ரூ.200) முன் பதிவுக்கு : 9688310621 பெரியார் முழக்கம் 24052018 இதழ்

கடும் பெட்ரோல் விலை உயர்வு: அரசின் பகல் கொள்ளை

கடும் பெட்ரோல் விலை உயர்வு: அரசின் பகல் கொள்ளை

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஞாயிறன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரே நாளில் 35 பைசா உயர்ந்து 79.13 ஆகவும், டீசல் விலை 28 பைசா உயர்ந்து 71.32 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் தான் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என சப்பை கட்டு கட்டப்படுகிறது. ஆனால் கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 14ந்தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுகிறது.பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை தீர்மானிப்பதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. சர்வதேச சந்தை விலைக்கேற்பவே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கின்றன என்பது உண்மையானால், கடந்த 19 நாட்களாக விலை உயர்த்தப் படாதது ஏன்? தேர்தலுக்காக விலை உயர்வை தவிர்க்க முடியும் என்றால், பொது மக்களின்...

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திட சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை காவல்துறை கைது செய்தது. மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தஇந்த நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கழகம், ம.தி.மு.க., தமிழர் விடியல் கட்சி, எஸ்.டி.பி.அய்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், த.பெ.தி.க., தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. அனைவரும் கைது செய்யப்பட்டனர். இரவு விடுதலையாகும் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, மாண்டுபோன தமிழர்களுக்கும் விடுதலைப் புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர். பேராவூரணியில் : பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழக  சித.திருவேங்கடம்,  சிபிஎம் பொறுப்பாளர்கள் கருப்பையா, வேலுச்சாமி சி.பி.ஐ. பொறுப்பாளர்கள் ராஜமாணிக்கம், சித்திரவேலு, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தி.வி.க. தா.கலைச்செல்வன், மதிமுக குமார்,...

நீரவ் மோடி-அம்பானி-அதானி  கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’

நீரவ் மோடி-அம்பானி-அதானி கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’

மோடியின் நண்பரும், மோசடிப் பேர் வழியும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி, சிங்கப்பூர் பாஸ்போட் மூலம் இலண்டனில் பதுங்கியுள்ளார் என்று அமுலாக்கப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன. சமீபத்தில் அவ்வாறு அடுத்தடுத்து உலுக்கிய ஊழல்கள் நீரவ் மோடியின் ரூ 11,700 கோடி வங்கி மோசடியும் ரோடோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் 800 கோடி ஊழலும் ஆகும்.இது வெளிப்பட்ட ஊழல்தான் இன்னும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ரோடோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, நீரவ் மோடிக்கு சளைத்தவர் அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.கோத்தாரி அடித்த கொள்ளை ரூ.800 கோடியல்ல; ரூ.3695 கோடி என்பதும் அம்பலமாகி இருக்கிறது.இந்த இரு ‘கனவான்களும்’ வங்கிகளை எவ்வாறு “ஆட்டையை” போட்டார்கள் என்பது குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் வெளிவராத செய்தி ஒன்று உண்டு. வங்கிகளின் பணத்தை அதாவது மக்களின் பணத்தை “ஆட்டையை”...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. ஒரு பேராபத்தை தமிழகம் எதிர்நோக்கியிருக் கிறது. வரலாற்றிலே இவ்வளவு பெரிய பேராபத்தை தமிழகம் எப்போதாவது சந்தித்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாத் தளங் களிலும் தமிழகம், தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதுகுறித்துதான் இந்த மண்டல மாநாட்டிலே அறிவார்ந்த தலைவர்கள் பேசவிருக்கிறார்கள். அதிலே, தமிழகத்தின் நிலம் எப்படிப் பாழ்படுகிறது, வாழ முடியாத ஒரு பகுதியாக தமிழ்நாடு எப்படி மாற்றப்படுகிறது, இதனால் என்ன ஆகும் என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஒரு மனித இனத்திற்கு வாழ்வதற்கு அடிப்படை யானது மண். மண்தான் மனித வாழ்வை வடிவமைக் கிறது. ஒரு...

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

ஊர்திப் பயணத் தில் முழுமையாகப் பங்கேற்றத் தோழர்கள் : இரண்யா, கனலி, பரத், விஜி, மாரி அண்ணன், கொளத்தூர் குமார், புகழேந்தி, பாலு துரை, சரஸ்வதி, சுதா, கிருஷ் ணன், பிரபாகரன், கனல் மதி, சாமிநாதன், சங்கர், செல்வேந்திரன், இராசேந்திரன், தம்பி துரை, பிரதாப், பென்னட், அண்ணா துரை, சிவகாமி, முத்துக் குமார், செல்வம், அம்ஜத் கான், மலர், சங்கீதா, யாழிசை, யாழினி, மீனா, முத்துப்பாண்டி, சஜினா, சௌந்தர், சுசீந்திரன், திலீபன், ஜென்னி, மதிவதனி, கதிரவன், இளமதி, யாழினி, சூலூர் பன்னீர் செல்வம், ஜோதி, தமிழ்ச் செல்வன், அறிவுமதி, இராமச்சந்திரன், யுவராஜ், சத்தியராஜ், வேணுகோபால், கதிர்வேல், இரத்தினசாமி, விக்னேஷ், குமரேசன், பால் பிரபாகரன், துரைசாமி, கண்ணன், அய்யப் பன், சக்திவேல், கார்த்திக், சந்திரசேகர், தினேஷ், விஜயகுமார், கோபி, கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், . பறைக்குழுத் தோழர்கள் (மேட்டூர் காவேரிகிராஸ் பகுதி) : சக்திவேல், கார்த்திக், சந்துரு, விக்னேஷ், ஆர்.எஸ். விவேக்,...