300 தோழர்கள் பங்கேற்ற கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் எழுச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் 15.12.2021 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. கலந்துரையாடலில் 20 உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது.

நிகழ்விற்கு முன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்களும், தளி, கெலமங்கலம், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர்களும் வரவேற்றனர். ராயக் கோட்டை வட்டம் காடு செட்டிபட்டி சோதனை சாவடிக்கு வந்தடைந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நின்ற மாவட்ட பொறுப்பாளர்கள் வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அவரை வரவேற்று ராயக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி கூட்டு ரோடு வழியாக பேரணியாக ஓசூர் இரயில் நிலையம் வந்தடைந்தனர்.

ஓசூர் ரயில் நிலையத்தில் நகர பொறுப்பாளர்கள் ராஜ்குமார், சரவண குமார், ஜேக்கப் ஜேரிமையா, பிரவீன் ஏற்பாட்டில் சிறப்பான இசை முழக்கமிட்டு கழகத் தலைவரை வரவேற்றனர். பின்பு அருகில் உள்ள அக்கரா மஹாலில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டத்திலும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கலந்துரையாடல் தொடங்கியது. பெரியாரின் கொள்கைகளையும் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்’ என்றும் உரையாற்றினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களும் திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளர்களும் மரியாதை நிமித்தமாக கழகத் தலைவரைச் சந்தித்தனர். கூட்டத்தின் இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் பழனி நன்றி கூறினார்.

சுமார் 300க்கும் மேற்பட்ட தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 30122021 இதழ்

You may also like...