‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு சேலம் மாவட்டக் கழகங்கள் சார்பாக 1500 சந்தாக்கள் வழங்க முடிவு

26.11.2021 சனிக்கிழமை மதியம் 02.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைந்த சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு வரவேற்பு மற்றும் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் அனைத்துக் கிளைக் கழகப் பகுதிப் பொறுப்பாளர்களும், இயக்க வளர்ச்சி குறித்தும், 2022ஆம் ஆண்டு சந்தா சேர்ப்பு குறித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • 09.11.2021 அன்று இயற்கை எய்திய திராவிடர் கழக மண்டல தலைவர் தோழர் பிரகலாதன் அவர்களின் மறைவிற்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
  • 2022ஆம் ஆண்டிற்கான புரட்சி பெரியார் முழக்க சந்தாக்கலாக சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 500 சந்தாக்களும், சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக 1000 சந்தாக்களும் சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.
  • சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரு குழுவாக இணைந்து இயக்க குடும்பங்களை அவர்கள் இல்லத்திற்கே சென்று சந்தித்து கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

பெரியார் முழக்கம் 02122021 இதழ்

You may also like...