பாலின குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி: தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு

சென்னை, தமிழ்நாடு மாணவர் கழக ஆலோசனை கூட்டம், கழகத் தோழர் இரண்யா தலைமையில்  05.12.2021 அன்று மதியம் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தொடரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக விசாகா கமிட்டி பாலியல் கல்வி மற்றும் பாலின சமத்துவக் கல்வியை நடைமுறைப்படுத்த அனைத்து மாணவர் அமைப்பு மற்றும் முற்போக்கு அமைப்புகளை இணைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான நடைபயணம் மேற்கொள்வது எனவும், பெருகி வரும் போதை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாவதிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்வது, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களையும் மாணவர்களையும் சந்தித்து மாணவர் கழக கட்டமைப்பை வலுப்படுத்துவது என்னும் முடிவு செய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 09122021 இதழ்

You may also like...