Category: பெரியார் முழக்கம்

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்:  கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல் வைத்த சேலம் மாவட்ட வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 05.08.2022 வெள்ளி காலை 10 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசிகவின் மாநகர மாவட்டப் பொருளாளர் காஜா மொய்தீன் தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் கைப்பாவையாக மாறிப்போன சேலம் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றின் அராஜகப் போக்கை கண்டித்து ஆர்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து முற்போக்கு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தங்களது கண்டன உரைகளை பதிவு செய்தனர். விசிக மண்டல அமைப்புச் செயலாளர் நாவரசன் – ஊஞஐ (ஆ) மாவட்டச் செயலாளர் சண்முகராஜா – தமுமுக பொறுப்புக்குழுத் தலைவர் முகமது ரபீக் – ஞகுட மாவட்டத் தலைவர் பைரோஸ்கான் – ளுனுஞஐ பொதுச் செயலாளர் ஷெரிப் பாஷா –...

2ஜி ஊழல் என்றால் ‘5ஜி’ என்ன மோடி’ஜீ’?

2ஜி ஊழல் என்றால் ‘5ஜி’ என்ன மோடி’ஜீ’?

அதிவேக இணைய சேவைகளை வழங்குவது 5ஜி அலைக்கற்றை. இதற்கான ஏலம் ஒருவாரமாக நடந்தது. இதன் மூலமாக அரசுக்கு 4.3 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலம் போனது 1.5 இலட்சம் கோடி ரூபாய்க்கு மட்டும் தான். மிகப்பெரும் இழப்பு அரசுக்கு ஏற்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது ? பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அய்டியா, அதானி ஆகிய பெரும் குழுமங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, ஏலத்தொகை உயராமல் பார்த்துக் கொண்டன. இதற்கு ஒன்றிய ஆட்சி துணை போனது என்ற குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. மற்றொரு செய்தியையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் ; 2010ஆம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவையில் ஆ.இராசா தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது 2ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற்றது. அப்போது 1 இலட்சத்து 76ஆயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது என்று தணிக்கைக் குழு...

தலையங்கம் இது ‘சுதந்திர’ நாடா?

தலையங்கம் இது ‘சுதந்திர’ நாடா?

75ஆவது சுதந்திர தினத்தை திருவிழாவாக்கி, அந்த விழாவையும் தங்கள் ஆட்சிக்கு பெருமை சேர்க்கத் துடிக்கும் ஆட்சி, உண்மையான ஒரு சுதந்திர நாட்டுக்கான ஆட்சியைத்தான் நடத்துகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. முதல் கேள்வி இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில் மாநில உரிமைகளை ஒன்றிய ஆட்சி அங்கீகரிக்கிறதா? காஷ்மீர் என்ற மாநிலத்தையே அழித்து யூனியன் பிரதேசமாக்கிவிட்டது. மாநிலப் பட்டியலில் வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களான கல்வி, வரிவிதிப்பு, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதல், மின்சாரம் போன்ற துறைகளை ஒன்றிய ஆட்சி பறித்துக் கொண்டு மாநிலங்கள் மீது தனது ‘ஒற்றை பாரதம்’ கொள்கையைத் திணிக்கிறது. மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களை ‘பாரதிய தேசியமாக்க’ சமஸ்கிருதப் பண்பாடுகள் கீதை, வேதம், ராமன் கோயில்களை குறியீடுகளாக்கி மாநில மொழி இன அடையாளங்களை ‘சனாதன தர்ம’ வட்டத்துக்குள் மூழ்கச் செய்கிறது. மாநிலங்களைக் கலந்து ஆலோசித்து திட்டங்களையும் நிதியையும் ஒதுக்குவதற்கு உருவாக்கப்பட்டது தான் திட்டக் குழு. அதைக்...

ஸ்ரீரங்கத்தில் பெரியார் அமர்ந்த வரலாறு

ஸ்ரீரங்கத்தில் பெரியார் அமர்ந்த வரலாறு

இந்து முன்னணி நடத்திய, இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா, சென்னை மதுரவாயலில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், இந்து முன்னணியின் கலை, இலக்கியப் பிரிவுச் செயலருமான கனல் கண்ணன், “ஸ்ரீரங்கநாதரை வழிபட ஒரு லட்சம் பேர் வருகின்றனர். கோயிலின் எதிரே, ‘கடவுளே இல்லை’ என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது என்றைக்கு உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றார். வெளிப்படையாக ஒரு சிலை உடைப்புக்கு அறைகூவல் விடுக்கும் இந்தப் பேச்சு பலரையும் இது அதிரவைத்தது. (காவல்துறை வழக்குப் பதிவு செய்தவுடன் தலைமறைவாகி, இப்போது முன்பிணை கேட்டிருக்கிறார்) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, “இந்து மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் திமுகவினர், அதைக் கருத்து சுதந்திரம் என்கின்றனர். அதே கருத்து சுதந்திரம் கனல் கண்ணனுக்கும் உண்டு. எதிரே, ஈ.வே.ரா. சிலை இருக்க வேண்டுமா என்று அங்கு வரும் பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால்,...

நிர்மலா சீதாராமனின் அவதூறுக்கு மறுப்பு

நிர்மலா சீதாராமனின் அவதூறுக்கு மறுப்பு

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த காரணத்தால் ஒரு வார காலம் நாடாளுமன்றம் முடங்கியது. ஒரு வழியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க முன் வந்தார். பண வீக்கம் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், ஒன்றிய ஆட்சியின் நிதி கொள்கையால் மாநிலங்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று சாதித்த தோடு, தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றியதா என்று கட்சி அரசியலைப் பேசி தமிழ் நாட்டுக்கு சவால் விட்டார். இறுமாப்புடன் பேசிய நிர்மலா சீதாராமன் உரைக்கு பதிலளிக் கும் வகையில் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஆக.9) சேலம் தரணிதரன் (திராவிடத் தொழில் மன்ற இயக்குனர்) பதிலளித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துகள்: வரி விதிப்பில்கூட நேர்மை இருக்க வேண்டும்; குடும்பத்தினர் தாங்கக்கூடிய அளவில் இருக்கவேண்டும் என்று பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித் கூறினார். ஆனால் ஒன்றிய ஆட்சி தாங்க முடியாத அளவுக்கு மறைமுக வரியை உயர்த்தியுள்ளது. நாட்டின் மொத்த...

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை – காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள்  இணைந்து நடத்தும், தொடர் அரசியல் பயிலரங்கம், அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் 31.07.2022 அன்று  காலை 10:30 மணியளவில் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘இந்துத்துவ அரசியலை’ப் பற்றி வகுப்பு எடுத்தார். இறுதியாக தோழர்கள் ஆர்வமுடன் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர். பெரியார் முழக்கம் 04082022 இதழ்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்ட திவிக சார்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி கோவையில் முன்னெடுக்கும் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் இணையம் வழியில் (உடிகேநசநnஉந உயடட அநநவiபே) 29.07.2022 வெள்ளி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் : 1)         கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை விளக்கும் வடிவமைப்பை உருவாக்கி ஒரு வாரம் முன்பே முகநூல், இன்ஸ்டாகிராம்,டுவிட்டர் பக்கங்களில் பகிர்வது, பரப்புவது. 2)         12.08.2022 வியாழன் அன்று காலை 8.00 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து கழக உறுதிமொழி எடுப்பது. 3)         தொடர்ந்து சவுரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சிவராஜ் தலைமையில் கழகக் கொடியேற்றி கழக உறுதிமொழி எடுப்பது.   பெரியார் முழக்கம் 04082022 இதழ்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வட மாநிலத்தவர் தேர்வு: திரும்பப் பெற தி.மு.க. வலியுறுத்தல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வட மாநிலத்தவர் தேர்வு: திரும்பப் பெற தி.மு.க. வலியுறுத்தல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரி பொறியாளர் பணியிடங் களுக்கு தமிழக இளைஞர்களை திட்டமிட்டே தவிர்த்தது கண்டனத்திற்குரிய செயல் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்துவிட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 2010ஆம் ஆண்டுவரை 80 விழுக்காடு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பெருமளவு ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் வழங்கி வந்தது. படிப்படியாக அதுவும் குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐக்கிய முற்போக்குக்...

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.07.2022 வியாழக்கிழமை சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள வனவாசியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. முதல் நிகழ்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வனவாசியில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுக் கூட்ட ஆரம்பமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினர் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்வை மக்கள் மத்தியில் மிக எளிமையாக செய்து காட்டினார்.அது கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து வனவாசி பகுதி நகர செயலாளர் பழ. உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை உரை நிகழ்த்தினார். திவிக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், நகர அமைப்பாளர் ராஜேந்திரன், நகர பொருளாளர் கதிர்வேல், பன்னீர்செல்வம் ஆகியோர்...

முகலாயர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் பொய் மூட்டைகள்

முகலாயர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் பொய் மூட்டைகள்

இந்திய தேசியவாதத்திற்கு இந்து அடித்தளத்தை வழங்கியவர்களில் மிக முக்கியமானவர் அரபிந்தோ கோஷ். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக் களுக்கு பொறுப்பு, பதவிகளை வழங்கிய தாலும் இந்துக்களின் மூளையையும், பலத்தையும் பயன்படுத்திக் கொண்ட தாலும் முகலாய ஆட்சி நூற்றாண்டுகளை கடந்தும் நீடித்ததாக அரபிந்தோ கோஷ் கூறுகிறார். 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மேற்கு பஞ்சாப்பை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் நிலம் சார்ந்த உயர்ந்த உரிமைகள் அனைத்தும் இந்துக்களிடம் அளிக்கப்பட்டிருந்தன, இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியை திணித்துவரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாக வும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள்....

கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு: உயர்நீதிமன்றம் பாராட்டு

கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு: உயர்நீதிமன்றம் பாராட்டு

கொரோனா பேரிடரால் பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இல்லம் தேடி கல்வித்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு பதிலளித்தது. இடைநிற்றல் மிகப் பெரிய பிரச்னையாக இருப்பதாக கூறிய நீதிபதிகள், அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர். மேலும் தமிழ்நாடும், கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாகவும், இது 2 மாநில அரசுகளின் சாதனை என்றும் நீதிபதிகள் பாராட்டினர். பள்ளிக்கல்வியில் மட்டுமல்ல உயர்கல்வியிலும் தமிழ்நாடுதான் இந்தியாவின் முதன்மை மாநிலாமாக திகழ்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் சிறந்த கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளிக்காட்டுகிறது. 2 வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த ஆண்டுக்கான...

தொடர் கொலைகள், கலவரங்கள்… மதவெறிக்கு இரையாகிறது கர்நாடகா!

தொடர் கொலைகள், கலவரங்கள்… மதவெறிக்கு இரையாகிறது கர்நாடகா!

தகவல் தொழில்நுட்பம், பொறியியல், ஆய்வுத்துறைகளில் வேகமாக வளர்ந்து வந்த கர்நாடகம் இப்போது வடமாநிலங்களைப் போல கலவரங்களுக்கு புகழ்பெற்றதாக மாறி வருகிறது. இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினரை பிளவுபடுத்தி, அவர்களிடையே நிலவும் ஒற்றுமையை சீரழித்து அதன்மூலம் இந்தியாவை இந்துநாடாக்க ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டங்கள் துடிக்கின்றன. இதில் வடநாட்டில் ஓரளவு வெற்றி கண்டுவிட்ட அவர்கள், இப்போது தென்னிந்தியாவிலும் அதே யுக்தியை கையாள திட்டமிட்டு செயல்பட முயல்கிறார்கள் என்பதைய கர்நாடகத்தின் இன்றைய நிலை காட்டுகிறது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என பள்ளிக் குழந்தைகளின் மனதில் மதவெறி நஞ்சை திணித்து, கர்நாடகத்தின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என மத ரீதியாக இந்துத்துவ அமைப்புகள் பிளவுபடுத்தின. சமூக ஒற்றுமையை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள் மதவெறி மோதலுக்கான மைதானங்களாக மாறி கர்நாடகமே கலவரக் காடானது. இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், தேர்வு எழுத முடியாமல் படிப்பைத் தொடர்வதே சவாலானது. ஹிஜாப் சர்ச்சைக்குப் பிறகு...

அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு

அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு

நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்களில் 1 சத விகிதம் பேருக்குக் கூட வேலை வழ ங்கப்படவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புக்காக 22 கோடியே 05 லட்சம் விண்ணப்பங்கள் வந்த  நிலையில், அதில், 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமனத்திற்கான பரிந்துரைகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஒன்றிய பாஜக அமைச்சரே நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில்  ஒப்புக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசுத்துறைகளில் கடந்த 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பணி நியமனங்கள் குறித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருந்தார். வெறும் 0.33 சதவீதம் இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஒன்றியப் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், ‘‘கடந்த...

மதவெறி அரசியல்: எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்

மதவெறி அரசியல்: எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்

மதவெறி அரசியலை முன் வைத்து, நாட்டின் பொருளாதாரத் தோல்வியை மறைக்க முயன்றால், இலங்கைக்கு ஏற்பட்டநிலைமை தான் இந்தியாவிற்கும் நடக்கும் என்று ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், காங்கிரஸின் 5ஆவது அகில இந்திய தொழில் வல்லுநர்கள் மாநாடு 30.7.2002 நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை?’ என்ற தலைப்பில் ரகுராம் ராஜன் பேசினார். அப்போது, “இந்தியாவில், தாராளமய ஜனநாயகத்துக்கு என்ன நடக்கிறது. உண்மையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தேவையா? ஆம், எங்களின் எதிர்காலம் நமது தாராளமய ஜனநாயகத்தையும் அதன் நிறுவனங்களையும் வலுப்படுத்துவதில்தான் உள்ளது. உண்மையில் இது நமது வளர்ச்சிக்கு மிக அவசியம். இந்தியாவில் இன்று சில தரப்பினரிடையே, ஜனநாயகம் இந்தியாவைத் தடுத்து நிறுத்துகின்றது என்ற எண்ணம் இருக்கிறது. எனவே இந்தியாவுக்கு வலிமையோடு எதேச்சதிகாரமும்கூட தேவை. பெரும்பாலான சிறுபான்மையினரை இரண்டாம்...

‘இந்து’ பெண்களை சங்கிகள் புண்படுத்தலாமா?

‘இந்து’ பெண்களை சங்கிகள் புண்படுத்தலாமா?

இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்ற கூக்குரல், தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. புராணங்களில் இருப்பதை, உள்ளதை உள்ளபடி எடுத்துப் பேசினாலே, இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என்று சங்கிகளும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். அப்படியானால் அவர்கள் அந்த புராணத்தை தான் தடை செய்ய வேண்டும் என்று கூற வேண்டுமே தவிர, புராணத்தில் இருப்பதை எடுத்துக் கூறுவது எப்படி புண்படுத்துவதாகும் ? ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ‘கீதாஞ்சலி ஸ்ரீ ‘ என்ற பெண்மணி ‘ரெத் சமாதி’ என்ற இந்தி நாவலை எழுதி இருக்கிறார். அந்த நாவலுக்கு சர்வதேச புகழ் வாய்ந்த ‘புக்கர் பரிசு’ கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு நாவலுக்கு பரிசு கிடைப்பதை அந்த மாநிலம் பாராட்ட வேண்டும். ஆக்ராவில் கீதாஞ்சலியை பாராட்டுகிற நிகழ்ச்சிக்கு ரங்கீலா என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. அந்த நாவலில் வருகிற சில பகுதிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர்...

ஒன்றிய அமைச்சர் தேர்வு செய்த ஊடக அதிபர்களின் இரகசிய சந்திப்பு

ஒன்றிய அமைச்சர் தேர்வு செய்த ஊடக அதிபர்களின் இரகசிய சந்திப்பு

தமிழ்நாட்டில், பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவந்து கொண்டிருப்பது தினமலர் நாளேடு. அந்த நாளேடு 30.07.2022 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அப்போது மோடி, தமிழ்நாடு பாஜகவினரிடம் ஒரு கருத்தை எச்சரிக்கையாக கூறி இருக்கிறார்; ‘திராவிட முன்னேற்றக் கழகம், பாஜகவிற்கு சிந்தாந்த ரீதியாக எதிரான ஒரு கட்சி. அதே நேரத்தில் திமுகவை பாஜக எதிர்க் கின்றபோது, பாஜக தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாச்சாரத்திற்கோ எதிரான கட்சி என்று மக்கள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் எச்சரிக்கை செய்ததாக அந்த செய்தி கூறுகிறது. மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம், திருக்குறளின் பெருமையையும், தமிழின் பெருமையையும் ஏன் பேசி வருகிறார்?  அதன் பின்னால் உள்ள உள்நோக்கம் என்ன என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டுமானால், தமிழின் பெருமையையும், திருக்குறளின்...

நாடாளுமன்ற நிலைக் குழு அம்பலப்படுத்துகிறது எய்ம்ஸ்: தலைவிரித்தாடும் தீண்டாமைப் பாகுபாடு

நாடாளுமன்ற நிலைக் குழு அம்பலப்படுத்துகிறது எய்ம்ஸ்: தலைவிரித்தாடும் தீண்டாமைப் பாகுபாடு

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸில் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) சாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்று நாடாளு மன்றக்குழுவின் விசாரணையில் அம்பல மாகியுள்ளது. இதனால் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொடர்ந்து தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறார்கள்.  எஸ்.சி மற்றும் எஸ்.டி, நலனுக்கான நாடாளு மன்றக்குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி இருக்கிறார். எய்ம்ஸ்சில் இடஒதுக்கீடு பின்பற்றப்படு வது பற்றிய ஆய்வின் முடிவில் இந்தக் குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனத்திலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் மீது சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். “எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் தோல்வியடையச் செய்துள் ளார்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் தீவிரமான முயற்சிகளை அந்த  மாணவர்கள் மேற் கொண்டும் பாகுபாடு காரணமாக தோல்வி யடைந்துள்ளனர். எழுத்துத் தேர் வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பிறகும்  செய்முறைத் தேர்வுகளில்...

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

20.07.2022 புதன் காலை 11.00 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திராவிட பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லை வேந்தன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கொளத்தூர் மணி கண்டன உரையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் வினாத்தாளில் ஜாதி குறித்து கேட்கப்பட்டமையைக் குறித்தும், மாநில அரசின் அறிவுரைகளை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுத்தி வரும் துனணவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் உரை நிகழ்த்தினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு, சேலம், கோவை, திருப்பூர், இளம் பிள்ளை, நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் சுள,...

வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத பெருமுதலாளிகள் வங்கிகளுக்கு பட்டை நாமம் 2.40 இலட்சம் கோடி

வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத பெருமுதலாளிகள் வங்கிகளுக்கு பட்டை நாமம் 2.40 இலட்சம் கோடி

இந்திய வங்கிகளுக்கு வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், செலுத்த வேண்டிய தொகை (Wilful loan defaulters) கடந்த  பத்தாண்டுகளில் பத்து மடங்கு உயர்ந்துள்ளது,  மார்ச் 31, 2012இல் ரூ. 23 ஆயிரம் கோடி என்ற  அளவில் இருந்த இந்தத் தொகை மே 31, 2022  அன்று ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மாபெரும் கடன் மோசடிகளில் ஏபிஜி கப்பல் கட்டும் (ABG Shipyard) நிறுவனத்தின் புரொமோட்டர்கள் மற்றும் இரண்டு சகோதரர்கள் தான் மிகப் பெரிய தொகையை மோசடி செய்து முக்கியக் குற்றவாளிகளாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டவர்கள்; ஆனால் கடனை செலுத்த மறுப்பவர்களை, வேண்டு மென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி வரையறுக்கிறது.  இந்த வகையில், 25 லட்சம் ரூபாய் அல்லது  அதற்கு மேற்பட்ட கடன் நிலுவையில் உள்ள  கணக்குகள் குறித்துச் செய்யப்பட்ட...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை வரலாற்று அணியை உருவாக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை வரலாற்று அணியை உருவாக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்

பா.ஜ.க.வும் சங்கிகளும் இந்து பண்பாடு ஒழுக்கம் சார்ந்து செயல்படுகின்றனரா? ஜாதிக் குழுக்களை கட்சிக்குள் இழுக்கும் சதி. முறியடிக்க நாம் எத்தகைய எதிர் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்?   மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: (சென்ற இதழ் தொடர்ச்சி) தமிழ் நாட்டில் தமிழ் தெரியாமலேயே தேர்வாணைய தேர்வுகளை எழுத அனுமதித் தார், முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில்  தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அரசாணை பிறப்பிக்கச் செய்தார். தமிழ் தெரியாத பலர், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பிடித்து விட்டனர். ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக அவர் பதவியேற்றக் காலத்தில் இப்படி ஒரு விபரீத முடிவு எடுக்கும் நிர்ப்பந்தம் அவருக்கு எதனால் ஏற்பட்டது...

வினா – விடை

வினா – விடை

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தகுதியுள்ள எஸ்.எஸ்.டி. ஆசிரியர்களைக் கூட பணிக்கு சேர்ப்பதில்லை.                                               – நாடாளுமன்ற நிலைக்குழு அது தான் ஜனாதிபதவிக்கே ஒருத்தர நியமிச்சுட்டமே அப்றம் என்ன? சபாநாயகர் அப்பாவு கிறிஸ்துவ பாதிரியார்களைப் புகழ்ந்து பேசுவதா?                               – பாஜக பொருளாளர் சேகர் ஆமாம்; இந்து நித்தியானந்தாவையும், இந்து மோடியையும் தான் புகழ வேண்டும். அது தான் மதச்சார்பின்மை. கங்கையை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. – பசுமைத் தீர்ப்பாயம் புரோகிதர்களை அழைத்து மந்திரங்களை ஓதிப் பாருங்களேன்; தீட்டு கழிந்து தூய்மையாகிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் அதிகாரமிக்கவர். – கே.எஸ்.அழகிரி அதுசரி, காங்கிரச எப்போது அதிகாரபடுத்தப் போறீங்க நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத கெட்ட வார்த்தைகள் பட்டியல். -சபாநாயகர் அறிவிப்பு அந்தப் பட்டியல்ல நாடாளுமன்றத்தையும் சேத்துக்கோங்க.   பெரியார் முழக்கம் 28072022 இதழ்

அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி: தவறான செய்திக்கு நிதியமைச்சர் மறுப்பு

அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி: தவறான செய்திக்கு நிதியமைச்சர் மறுப்பு

அரிசி, தயிர்  உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:  அரிசி உள்ளிட்ட, பேக்கிங், லேபிள்  செய்யப்பட்ட பல உணவுப்  பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந் நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45 வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. வரி விகி தங்களை எளிமைப்படுத்தி வரி  கட்டமைப்பினை சீரமைத்தல்.  தற்போதைய வரி விகிதங்களை மறு ஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல். இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்வர் ஒருங்கிணைப்பாளராக வும், பீகார், கோவா, கேரளம்,...

சத்துணவில் ‘சனாதனம்’: முட்டைக்குத் தடை?

சத்துணவில் ‘சனாதனம்’: முட்டைக்குத் தடை?

வைதீக மதம் அசைவ உணவை முழுமையாக வெறுக்கிறது. அசைவ உணவை சாப்பிடாமல் இருப்பது தான் இந்து தர்மம் என்று கருதுகிறது. அதனால் தான் பார்ப்பனர்கள் அசைவ உணவை வெறுக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு புரதச் சத்து கண்டிப்பாக வேண்டும் என்ற அடிப்படையில் மதிய உணவுத் திட்டத்தில்  முட்டை போடப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்று வருகிற பாரதிய ஜனதா கட்சி வைதீகப் பார்ப்பனியக் கொள்கையை ஏற்று, “குழந்தைகளுக்கு முட்டை போடுவது அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு எதிரானது, கொழுப்புச் சத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும், ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்கும்” என்று ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. கர்நாடகத்தில் பாடத்திட்டத்தை எப்படி அமைப்பது என்று உருவாக்கப்பட்ட ஒரு குழு, பாடத் திட்டத்தையும் தாண்டி மதிய உணவுத் திட்டத்திற்கும் ஒரு பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அதில் தரப்பட்ட பரிந்துரைதான் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை போடக்கூடாது என்பதாகும். இந்த அறிக்கை கர்நாடக அரசிடமும், சூஊநுசுகூ என்று சொல்லப்படுகின்ற தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி...

மதம் மரணத்துக்கா? மனித சமூகத்துக்கா?

மதம் மரணத்துக்கா? மனித சமூகத்துக்கா?

‘அக்னி பாத்’ திட்டத்துக்கு வடமாநிலங்களில், இளைஞர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனாலும், எதிர்ப்புகளை புறந்தள்ளி திட்டம்நிறைவேறத் தொடங்கியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தில் நான்காண்டுகள் பயிற்சி பெற்று வருபவர்களுக்கு அரசு வேலை உத்திரவாதம் எதையும் தராது. ஏற்கெனவே இராணுவத்தில் இருக்கின்றவர்களுக்கான சலுகைகளும் இவர்களுக்குக் கிடையாது. எனவே, அக்னிபாத் திட்டம் என்பது வேறு; இராணுவத்தில் பணியாற்றுவது என்பது வேறு. இந்த அக்னிபாத் திட்டத்திலும் இட ஒதுக்கீடு கிடையாது. இராணுவத்திலும் இட ஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீடே கிடையாது என்கிறபோது ஜாதி, மத அடையாளங்களை ஏன் விண்ணப்பத்தில் கேட்க வேண்டும் ? அக்னிபாத் திட்டத்திற்கு ஜாதி, மத அடையாளங்கள் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன. எதற்காக இந்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட மதத்தினரை  சேர்ப்பதற்காக கேட்கிறீர்களா ? அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் இராணுவத்தில் சேர்வதற்காக கேட்கிறீர்களா ? என்று வட நாட்டில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அரசு இதற்கு...

பாராட்டத்தக்க முடிவு: அரசுப் பள்ளிகளில் பெரியார் வினா-விடை

பாராட்டத்தக்க முடிவு: அரசுப் பள்ளிகளில் பெரியார் வினா-விடை

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பெரியார் 1000 வினா விடை நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது, உண்மையி லேயே பாராட்டி வரவேற்கத்தக்க வேண்டிய நிகழ்வாகும். ஆகஸ்டு 19, 20, 21 தேதிகளில் இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென அந்த ஆணையம் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் படித்துக் கொண் டிருந்தாலும் அதனுடைய வரலாறு அவர்களுக்குப் புரியவில்லை. எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அவர்கள் படிக்கிறார்களோ, அந்த இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய வரலாற்றுப் புரிதல்களும் அவர்களுக்கு இல்லை. எனவே தமிழ்நாட்டினுடைய சமூக நீதி வரலாறு, சமூக நீதிக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டக் களங்கள், தமிழ்நாட்டின் சமூகச் சூழ்நிலை, தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிற வளர்ச்சி குறித்த சிந்தனைகளை  பள்ளி மாணவர்களிடத்திலே விதைக்கப்பட வேண்டியது, மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்துத்துவ சக்திகள், உண்மைக்கு மாறான,...

கழகத் தோழர்களுக்கு இணையதள பயிலரங்கம்

கழகத் தோழர்களுக்கு இணையதள பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையதள பயிலரங்கம் திருச்சி டான் போஸ்கோ மீடியா அரங்கில் 22.07.22 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வில் கழக சமூக ஊடக பொறுப்பாளர் பரிமளராசன் அறிமுக உரையாக பெரியார் காலத்தில் இருந்த பரப்புரை வடிவங்களும், காலமாற்றத்தில் பரப்புரை வடிவங்களின் மாற்றங்களும், தற்போதைய சூழலில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் குறித்தும், சமூக ஊடகங்களில் கழகத் தோழர்கள் பணியாற்றுவது குறித்தும் பேசினார். பயிலரங்கின் சிறப்பு அழைப்பாளரான ‘யூடர்ன்’ வலைத்தளத்தின் உரிமை யாளரும், பத்திரிக்கையாளர், குறும்பட தயாரிப்பாளர் ‘யூ டியுபர்’ அயன் கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார். செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பும் செய்திகளின் உண்மை தன்மைகளை எப்படி கண்டறிவது மற்றும் செய்திகளை  போலியாக உருவாக்கி எப்படி கட்டமைக்கிறார்கள் என்பது குறித்தும் இவற்றை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு பிரித்துப் பார்ப்பது என்பது...

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் களப் பணியாளர்கள் 47 பேருக்கு பயிற்சி முகாம், திருச்சி டான்பாஸ்கோ மீடியா அரங்கில் ஜூலை 23, 24, 25 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்பட்ட தோடு விவாதங்களுடன் நடந்தன. முதல் நாள்: கொள்கை முன்னெ டுப்பில் பெரியாரின் அணுகு முறைகள் – விடுதலை இராசேந்திரன், பெண் ணியம்/டுழுஞகூணு – ஆசிரியர் சிவகாமி, தமிழ் வளர்ச்சியில் பெரியாரின் தொண்டு – பால் பிரபாகரன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் / போதாமைகள்/ஆணவக் கொலைகள் – திண்டிவனம் இரா.முருகப்பன். இரண்டாம் நாள் : பெரியாரும் அயோத்திதாசரும் / அம்பேத்கர்/ எம்.சி. இராஜா / இரட்டைமலை சீனிவாசன் /சகஜானந்தா ஆகியோரும் – கொளத்தூர் மணி, மக்கள் உளவிய லும் கொள்கை பரப்புரைகளும் – மருத்துவர் சிவபாலன், இந்திய ஒன்றியமும் தமிழர் தன்னாட்சியும் – ஆ.வந்தியத்தேவன் (மதிமுக), ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுப் புரட்டுகள் – விடுதலை இராசேந்திரன். மூன்றாம் நாள்...

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

தமிழ் நாடு அரசின் உயர்கல்வித் துறையை புறக்கணித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்க வந்த ஆர்.என். ரவியைக் கண்டித்து மதுரையில் மாவட்ட கழக ஒருங் கிணைப்பில் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் சார்பில், 13.7.2022 அன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலார் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ., சி.பி.எம்., அதிமமுக, தபெதிக, தமுமுக, தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை,  ஆதித்தமிழர் கட்சி,  புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட இயக்கங்களின் மாநில,  மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் காவல் துறை கைது செய்து மாலையில் விடுவித்தது. பெரியார் முழக்கம் 21072022 இதழ்

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

திருப்பூரில் 15.07.22 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முறையான அனுமதி ஏதும் இல்லாமல் செல்ஃபி வித் அண்ணாமலை என்று விளம்பரம் செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்தும், கல்லூரி மாணவிகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் மீது தக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும்படி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 16.07 22 திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு தலைமை யில் திருப்பூர் மாநகரச் செயலாளர்  மாதவன், 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, தோழர்கள் திலகவதி, பிரசாந்த் ஆகியோர் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

ஈரோடு வெள்ளோட்டில் மகிழ் உணவகத்தை 17.07.2022 ஞாயிறு அன்று  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  திறந்து வைத்தார். பெயர்ப் பலகையை திமுக வின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  வி.சி. சந்திரகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாநகர பகுதி செயலாளர் அக்னி சந்திரன், கொங்கு இளைஞர் பேரவை லிங்கேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் : மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2022 மாலை 5.00 மணி அளவில் கல்வி வள்ளல் காமராசர் 120ஆவது பிறந்தநாள் விழா  நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் உள்ள காமராசர் உருவச்சிலைக்கு தோழர்கள் அனிதா, கீதா, அறிவுமதி ஆகியோர் மாலை அணிவித்தனர். நகர செயலாளர் குமரப்பா முழக்கங்கள் எழுப்பினார். மேட்டூர் 16ஆவது வார்டு மஜீத் தெரு பகுதியில் காமராசர் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கியது. முதல் நிகழ்வாக பறைமுழக்கம், பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு தோழர்களால் நடத்தப்பட்டது.  தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  நங்கவள்ளி அன்பு, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர். நங்கவள்ளி, மேட்டூர் சுளு, கொளத்தூர் ஆகிய பகுதியிலிருந்து பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை பார்ப்பனிய மதவெறியை எப்படி சந்திக்கப் போகிறோம்?

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை பார்ப்பனிய மதவெறியை எப்படி சந்திக்கப் போகிறோம்?

தடைகளைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். மீண்டும் வளர்ந்தது எப்படி? முதன்மையான எதிரியை அடையாளம் காண்பதில் தெளிவான புரிதல் வேண்டும். ஒன்றிய ஆட்சியை எதிர்ப்பதற்கு தி.மு.க.வைத் தவிர வேறு வலிமையான அரசியல் கட்சி இல்லை. மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: தமிழ்த் தேச நடுவத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்க என்ற முழக்கத் துடன் தோழர் பொழிலன், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது பார்ப்பனியத் துக்கான கருத்தாக்கம். அமைப்பை தடை செய்தாலும் அதன் பாசிச பார்ப்பனிய கருத்தாக்கத்தை எதிர்ப்பு இயக்கங்கள் வழியாகவே தடுத்து நிறுத்த முடியும். ஏற்கனவே அவசர நிலை காலத்திலும், காந்தி கொலையின் போதும், பாபர் மசூதி இடிப்பின் போதும் தடை...

அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும்

அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும்

சாதி ஒழிப்புக்காக நமது கழகம் ஏன் அகில இந்திய ரீதியில் பாடுபடக்கூடாது என்று கேட்கப்படுகிறது. அகில இந்திய ரீதியில் சாதி ஒழிப்பு என்பது சுலபத்தில் சாத்தியமாயிராது. ஏனெனில் நம்மவர்களைப்போல் பெரும்பாலோருக்குள்ள மான உணர்ச்சி வடநாட்டாருக்கு இல்லை. அவர்கள் யாரும் சூத்திரன் என்பதற்காகவோ, பஞ்சமன் என்பதற்காகவோ, தாசிமகன் என்பதற்காகவோ வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதத்தை அவர்கள் நம்மைப்போல் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மாறாக, அதைப் பெருமையாகவே கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்நாட்டு மக்களோ ஆதிகாலந்தொட்டே சாதிபேதங்களை வருணாசிரம தர்மத்தை எதிர்க்கிறார்கள். எனவே, சாதி ஒழிப்பு நம்நாட்டில் சாத்தியமாயிருப்பது போல் வடநாட்டில் சாத்தியமாயிராது. எந்தச் சீர்திருத்தக் கருத்தும் வடநாட்டாருக்குச் சுலபத்தில் புரியவும் புரியாது. எனவேதான், தோழர் அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்படும் இந்துச் சட்ட மசோதா அங்கு பலமான எதிர்ப்புக்குள்ளாக வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் உணர்ந்துதான் நாம் நம் கழக முயற்சியை நம் திராவிட நாட்டோடு நிறுத்திக் கொண்டிருக் கிறோம். – ‘விடுதலை’ 22.02.1950...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

அரசு கட்டிடம் கட்டும் நிகழ்வைத் தொடங்க முஸ்லீம் மத சடங்குகளை மட்டுமோ அல்லது கிறிஸ்துவ மத சடங்குகளை மட்டுமோ செய்திருந்தால் அதை ஏற்பார்களா? கலவரம் நடத்தி சூறையாடப்பட்ட ‘சக்தி’ இன்டர்நேஷனல் பள்ளி, ‘செயின்ட் ஜான்’ பள்ளியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசின் மகளிர் ஆணையம் அடுத்த சில மணி நேரத்திலே விசாரணைக்கு வந்திருக்கும்! பா.ஜ.க.வும் இந்து முன்னணியும் இப்போது மவுனம் காப்பதுபோல இருந்திருப்பார்களா? ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோகிதர்களை மட்டும் வைத்து சடங்கு செய்தால் அது இயல்பானதாக கடந்து போய் விடுகிறார்கள். பொதுப் புததி அவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அரசும் – மதமும் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதுவே மதச் சார்பின்மை என்று சொன்னால் மதத்தை விலக்குவது கூடாது; அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்று பதில் கூறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறதா? 1968இல் அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. இராமகிருட்டிணன், அரசு  அலுவலகங்களில் படிப்படியாகக் கடவுள் படங்களை...

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய நாள் 18.07.1967. அன்று சட்டமன்றத்தில் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதை தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா மிகுந்த கவலையுடன் செயல்பட்டார். இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு, அரசியல் சட்டத்திலே மாற்றங்களை செய்ய முடியுமா என்பது குறித்து, இந்திய அரசியல் உயர் மட்டத் தலைவர்களிடம் அவர் கலந்து ஆலோசித்தார். அதில் எந்த தடையும் இருக்காது என்று உறுதியைப் பெற்று அவர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். குறிப்பாக அவர் ஒரு நிகழ்வையும் சுட்டிக்காட்டினார். “பத்து நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றி பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில், அங்குள்ள உள்த்துறை அமைச்சர் சவான் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று கூறியே...

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும்  ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும் ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராகும் பிரச்சனையை கையில் எடுத்து உரிய முறைப்படி அவர்களுக்கு அர்ச்சனை செய்யும் நியமனங்களை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில், இப்போது வெளி மாநிலத்தி லிருந்து ஆட்களைப் பிடித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெகத்குரு இராமநாத ஆச்சாரியார் சுவாமி என்பவரும் டெல்லி, உத்திர பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேரும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு உத்தரவுக்கு எதிராக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குத் தொடர உரிமையில்லை, எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியதை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க தயாராக இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நீதிபதி ஆகம விதிகளை...

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, ‘காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்’ என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான். 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10...

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

திருச்சியில் வருகிற ஜூலை 22,23,24,25 ஆகிய தேதிகளில் முதல் நாளில் இணையதள பயிற்சி வகுப்பும், மற்ற மூன்று நாள் களப்பணியாளர்கள் பயிற்சி வகுப்பும் நடைபெறவுள்ளது. கடந்த வாரம் அறிவித்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. திருச்சி காருண்யா நகர் “டான் பாஸ்கோ மீடியா” என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தலைமைக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள். குறிப்பு : பேருந்து எண் 13, 45, 125 ஆகிய நகரப் பேருந்துகளில் (திருச்சி மத்திய பேருந்து நிலையம் – விராலிமலை செல்லும் பேருந்துகள்) 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செல்லும் திசையின் வலதுபுறம் சுமார் 200,300 மீட்டரில் ‘டான் போஸ்கோ’ நிறுவனம் உள்ளது. பெரியார் முழக்கம் 14072022 இதழ்

தொல் தமிழ் அடையாளங்களைப் புறக்கணிக்கும் ஒன்றிய ஆட்சி!

தொல் தமிழ் அடையாளங்களைப் புறக்கணிக்கும் ஒன்றிய ஆட்சி!

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  “உலகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம்” என்று ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் குறைந்தது  இரு அமைச்சர்களாவது எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியை எதிர் கொண்ட படியே இருக்கிறோம். எனவே இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதில் சொல்கிறோம். சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கிடைத்தது கிபி 300இல். தமிழில் முதல் கல்வெட்டு கிடைத்தது அதற்கு 600 வருடத்திற்கு முன்னால். பாட்டி தான் வயதில் மூத்தவள் என்று நான் சொல்கிறேன். பேத்தி தான் மூத்த ஆள் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் சொல்வது அறிவியல். நான் சொல்றது ஆறாவது அறிவு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் தங்க ஆபரணம் கிடைத்தது.  இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அந்த அகழாய்வினை செய்தது தமிழக தொல்லியல் துறை அல்ல, ஒன்றிய அரசினுடைய தொல்லியல் துறை.  ஆனால் அகழாய்வின் மூலம் 3000 ஆண்டுகள் பழமையான தங்க ஆபரணம் கிடைத்ததை பிறகு கடந்த...

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் (2)  அரசியல் சட்டத்தில் மாநில சுயாட்சி இடம் பெறாமல் போனது ஏன்?

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் (2) அரசியல் சட்டத்தில் மாநில சுயாட்சி இடம் பெறாமல் போனது ஏன்?

அரசியல் சட்டத்தை சுயாட்சி அடிப்படையில் உருவாக்க விரும்பி யவர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு தங்களது நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள். அரசியல் சட்டத்தில் மாநிலங்கள் உரிமைகளைத் தடுத்தது வரலாற்றுப் பின்னணியை விளக்கி ஆ. ராசா நிகழ்த்திய உரை. கடந்த இதழ் தொடர்ச்சி. 1974இல் கலைஞர் முதலமைச்சர். மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றி பிறகு, இராஜபாளையத்தில் திமுக மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. திமுகவின் தலைவராக, ஆட்சியின் தலைவராக கலைஞர் அங்கே போகிறார். போகிற வழியில் அவருடைய படம், முஜிபூர் ரகுமானுடைய படம் இரண்டு படத்தையும் வைத்து வருக வருக என்று சுவரொட்டி, பதாகைகள் வைத்தார்கள். உடனே கம்யூனிஸ்ட் கட்சி உட்பட காங்கிரசும் கூறினார்கள், கலைஞர் பிரிவினைவாதியாக மாறி விட்டார். ஏன் அண்ணா படம் அங்கே இல்லை? ஏன் பெரியார் படம் அங்கே இல்லை ? ஏன் அங்கே முஜிபூர் இரகுமான் படம் ? ஏனென்றால் முஜிபுர் ரகுமான் தான் கிழக்கு பாகிஸ்தானை பிரித்தவர்....

சமுதாயத்துக்குப் பயன் தரும் வாழ்வே சிறந்த இலட்சியம்

சமுதாயத்துக்குப் பயன் தரும் வாழ்வே சிறந்த இலட்சியம்

என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சியமற்றப் பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான் ; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பல வகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான் ; இறுதியில் செத்துப் போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும்வரை இடையில் நடைபெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. சமுதாயத்துக்குப் பயன்தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும் வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய வேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும். இது முக்கியமானதாகும், இதுவே...

ரிக்வேதம் – வேதக் கணிதப் பெருமை: கருநாடக அரசின் மதவெறி பாடத் திட்டம்

ரிக்வேதம் – வேதக் கணிதப் பெருமை: கருநாடக அரசின் மதவெறி பாடத் திட்டம்

மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும், இந்துத்துவா அடிப்படையில் பாடத்திட்டங்களை உருவாக்கவும் கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றது.  அண்மையில், மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு  பற்றிய பாடங்களை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான கே.பி. ஹெட்கேவார் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோர் பற்றிய பாடங்களை அது சேர்த்தது. இந்நிலையில்தான், கிரேக்கக் கணித வியலுக்குப் பதிலாக, இந்தியாவில் தோன்றிய வேதக்கணிதத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், நியூட்டன் மற்றும் பிதாகரஸ் ஆகியோரின் கண்டு பிடிப்புக்கள் என்று கூறப்படுபவை இந்தியாவில் வேதக் காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது என்றும் புதிய சர்ச்சை யை கர்நாடக பாஜக அரசு கிளப்பியுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கர்நாடக மாநில பாஜக அரசு 26 கல்விக்கொள்கைக் குழுக்களை அமைத்தது. வாரணாசியில் உள்ள ஐஐடி-யின் பேராசிரியர் வி. ராமநாதன் தலைமையிலான இந்தக் குழுக்கள், தேசியக்...

தலையங்கம் ஆன்மீகத்துக்குள் பதுங்கி நிற்கும் ஆரியம்!

தலையங்கம் ஆன்மீகத்துக்குள் பதுங்கி நிற்கும் ஆரியம்!

‘ஆன்மீகம்’ என்ற சொல் சனாதன வாதிகளால், மதவாதிகளால், மக்களை கூறுபோடுகின்ற ஜாதியவாதிகளால் பயன்படுத்தப் படுகின்ற ஒரு சொல்லாக மாறிப்போய் இருக்கிறது. உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன என்பது பற்றி திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறார். “ஆன்மீகம் என்ற சொல்லை இன்றைக்கு அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஜாதியைக் காட்டி, மதத்தைக் காட்டி மக்களைப் பிளவு படுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்கள். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல, ஆனால் இப்படி மக்களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்துகிறவர்களுக்கு நாங்கள் எதிரிகள் என்று அவர் கூறியிருப்பதோடு ஆன்மீகம் என்ற சொல்லுக்கு அறநெறி என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். முதலில் ஆன்மீகம் என்பது தனிமனிதர் சார்ந்ததா? சமூகம் சார்ந்ததா?  என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். உறுதியாக தனி மனிதன் சார்ந்தது தான். ஒரு மனிதர் (ஆணோ அல்லது பெண்ணோ) தன்னுடைய அறநெறி வாழ்க்கையை தனக்குள் உருவாக்கிக் கொள்ள...

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும்  மோடியின் ‘இந்துத்துவ’ இந்தியா

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் மோடியின் ‘இந்துத்துவ’ இந்தியா

பக்ரீத்துக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் மதவேறுபாடின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். இஸ்லாமியர் என்றாலே அவர்களை ‘தேச விரோதி’களாகப் பார்க்கும் வெறுப்பை வளர்ப்பதே ஒன்றிய – மாநில  பா.ஜ.க. ஆட்சிகளின் முதன்மை இலட்சியமாக இருக்கிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லீம் ஒருவரைக்கூட பா.ஜ.க உறுப்பினராக்கவில்லை. அண்மையில் மாநிலங்களவையில் பதவிகள் முடிந்த நிலையில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலையில் பா.ஜ.க. ஒரு இஸ்லாமியரைக்கூட நியமன உறுப்பினராக்கத் தயாராக இல்லை. இந்தியாவில் முஸ்லீம்கள்  மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர். ஆனால் மத்திய மாநில அரசுப் பணிகளில் பணியாற்றுவோர் 4.9 சதவீதம் பேர் மட்டுமே. துணை இராணுவப் பிரிவுகளில் 4.6 சதவீதம்; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளில் 3.2 சதவீதம்; வெளிநாட்டுத் துறை, இந்தியன் போலீஸ் சர்வீஸ் போன்ற துறைகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லீம்கள் நாடாளுமன்றத்தில் 74 பேர் இடம்...

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி- பாராட்டத்தக்க அறிவிப்பு ஆளுநர் பட்டமளிப்பு விழா – அரசு புறக்கணிப்பு

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி- பாராட்டத்தக்க அறிவிப்பு ஆளுநர் பட்டமளிப்பு விழா – அரசு புறக்கணிப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரை செய்து வருகிறார். அவர் பாஜகவின் பிரச்சார செயலாளராகவே மாறிவிட்டார் போல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திரியைக் கொளுத்தி போடுகிறார். குறிப்பாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அவர் அரசியல் மேடையாக்கி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவது இல்லை என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பைப் பாராட்டி வரவேற் கிறோம். தமிழ்நாடு அரசு ஒரு முதுகெலும்புள்ள அரசு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அண்மையில் ஆளுநர் கொளுத்திப் போட்டத் தீ, திராவிடம் என்பது பிரிட்டிஷார் கண்டுபிடித்த சொல் என்பதாகும். பிரிட்டிஷார் கண்டுபிடித்ததினாலேயே திராவிடம் என்பது கெட்ட சொல் ஆகிவிடுமா? அதற்கு ஒரு கோட்பாடு இல்லையா? பிரிட்டிஷார் கண்டுபிடித்தார் என்பதற்காக அவர் எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இந்தியா என்ற ஒரு நாட்டை...

ஆளுநர் தமிழிசைக்கு – தீட்சதர்களின் அவமதிப்பு

ஆளுநர் தமிழிசைக்கு – தீட்சதர்களின் அவமதிப்பு

தில்லை நடராசர் தரிசனத்திற்கு ஆளுநர் தமிழிசை சென்றிருக்கிறார். அங்கே கோவில் படிக்கட்டில் அவர் அமர்ந்திருக்கிறார். தீட்சதர் ஒருவர் வந்து நீங்களெல்லாம் இங்கே உட்காரக் கூடாது என்று அவரை அவமானப்படுத்தி இருக்கிறார். இதை தமிழிசையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘அப்படி ஒரு தீட்சதர் கூறியது உண்மைதான். ஆனால் அந்த இடத்தை விட்டு நான் நகரவில்லை, அங்கே தான் அமர்ந்திருந்தேன். தீட்சதர்கள் பிரச்சனையை தீர்க்கப்போனால் அவர்கள் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று ஒரு பேட்டியிலே கூறியிருக்கிறார். வந்தவர் ஒரு ஆளுநர். ஆனால் தில்லைக் கோவிலில் ஆளுநரை விட அதிகாரம் படைத்தவர்கள் தீட்சதப் பார்ப்பனர்கள். கோவிலுக்குள் எந்த சட்டமும் செல்லாது என்று உச்சநீதிமன்றத்திலே அவர்கள் தீர்ப்பை வாங்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலை, தமிழிசைக்கு ஏற்பட்டிருக்கிற இந்த அவமானம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக இதிலும் தமிழ்நாடு அரசை குறை கூறி ‘சம்பவம் நடந்தது உண்மையா என்று விசாரிக்க...

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுக்கான ஒருநாள் இணையதள பயிலரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெறுகிறது. நாள் : 22.07.2022 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9:30 முதல் மாலை வரை இடம் : கூஆளுளுளு நிறுவன பயிற்சி அரங்கம், திருச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றும் இயங்க ஆர்வம் உள்ள திராவிடர் விடுதலை கழகத் தோழர்களுக்கு மட்டுமான ஒருநாள் பயிலரங்கம். இணையதளம், சமூக வலைத்தளங்கள் குறித்த அறிமுகம், அவை இயங்கும் விதங்கள், எளிமையாக பயன்படுத்துவதற்கான வழிகள், தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்கள் ஆகியவை குறித்து கழகத்தின் இணையதள செயல் பாட்டாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள். நுழைவுக் கட்டணம் ரூபாய் 100/- (நூறு ரூபாய் மட்டும்) முன் பதிவிற்கு : பரிமளராசன் – 7871962024 சமூக ஊடக பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விஜயகுமார் இணையதள பொறுப்பாளர்,...

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகக் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் ஜூலை 23, 24, 25 தேதிகளில் திருச்சி ‘டி.எம்.எஸ்.எஸ்.’ பயிற்சி மய்யத்தில் (தொடர் வண்டி நிலையம் அருகில்) நடைபெறுகிறது. சமூக நீதி – மதவாதம் – பெண்ணுரிமை – மாநில சுயாட்சி, சமூகம், உளவியல் எனும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். பயிற்சியாளர்கள் ஜூலை 22 இரவே மய்யத்திற்கு வந்து சேர வேண்டும். – கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 07072022 இதழ்

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ஆதரவு முஸ்லீம்களை வைத்து இஸ்லாமிய படுகொலை நடத்துகிறது பா.ஜ.க.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ஆதரவு முஸ்லீம்களை வைத்து இஸ்லாமிய படுகொலை நடத்துகிறது பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் பவன் கேரா அளித்துள்ள அதிர்ச்சியான பேட்டி: கன்னையா லாலை கொலை  செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இருவரில் ரியாஸ் அத்தாரி  பிரதான குற்றவாளியாக கருதப்படுகிறார். இவர் பாஜக சிறுபான்மை பிரிவில் இருக்கிறார். அதற்கான புகைப்பட ஆதாரம் மற்றும் முக நூல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.  பாஜக தலைவர்கள் இர்ஷத்  சயின்வாலா, முகமது தாஹிர் ஆகியோருடன் ரியாஸ் அத்தாரி நெருங் கிய தொடர்பில் இருந்துள்ளார். ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரியாஸ் அத்தாரி தவறாமல் கலந்து கொண்டுள்ளார். இர்ஷத் சயின்வாலா கடந்த 2018 நவம்பர் 30ல் பகிர்ந்த முக நூல் பதிவு, முகமது தாஹிர் 3 பிப்ரவரி 2019, 30 நவம்பர் 2018, 27 அக்டோபர் 2019, ஆகஸ்ட் 10, 2021, நவம்பர் 28, 2019 மற்றும் இன்னும் பிற பதிவுகளில் அத்தாரி பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிவந்தது...