கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!
மொரார்ஜி – கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை உறுதிப்படுத்தியதோடு, கோட்சே தம்பி கோபால் கோட்சே – தாங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதை உறுதி செய்துள்ளார். காந்தி ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டு பாராட்டினார் என்பது அப்பட்டமான பொய். காந்தி நினைவிடத்தில் வழிகாட்டியை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வேலையை விட்டு நீக்கியது ஏன்? கோட்சே வாக்குமூலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் காப்பாற்ற, தான் அந்த அமைப்பில் இல்லை என்று கூறியுள்ளான். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு தான் கோட்சே என்பதற்கான ஆதாரங்களை கீழே தருகிறோம். காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு! மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை, ‘ளுவடிசல டிக அல டகைந’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில், காந்தியாரை சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ‘ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்’ என்று எழுதியிருக்கிறார். ஏ.ஜே.குர்ரான் எழுதிய ‘ஆடைவையவே ழiனேரளைஅ in ஐனேயைn யீடிடவைiஉள’ என்ற நூலில்...