பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக் கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஆதம் மார்கெட், அய்ஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வீதி வீதியாக கடை வசூல் சென்னை கழகத் தோழர் களால் தூண்டறிக்கை கொடுக்கப்பட்டு கடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

வணிகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். மேலும், கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை சுற்றிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்து எழுதப்பட் டுள்ளது.  தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் சுவரெழுத்துப் பணிகளை மேற்கொண்டார்.

பெரியார் முழக்கம் 08092022 இதழ்

You may also like...