Category: குடி அரசு 1936

சம்பாஷணை

சம்பாஷணை

– நாரதர் ஓர் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ரெயிலில் போகும் போது நடந்த சம்பாஷணை (பார்ப்பனர் சாஸ்திரியார், பார்ப்பனரல்லாதார் கந்தையா) சாஸ்திரியார்: கந்தையா எங்கு போகிறீர். கந்தையா: அது யார் சாஸ்திரியா? சாஸ்திரி: ஆம், ஆசீர்வாதம் (மார்பிற்கு நேரே உள்ளங்கையை வளைத்துக்கொண்டு) கந்தையா: நான் உம்மை ஆசீர்வாதம் கேட்கவில்லை. அது உமக்கே இருக்கட்டும், எது வரைக்கும் பிரயாணம்? சாஸ்திரி: என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்? பிராமணாள் ஆசீர்வாதம் இலகுவில் எல்லோருக்கும் கிடைக்குமா? கந்தையா: எனக்குப் பிராமணனென்றும், மற்றவர்களென்றும், ஆசீர்வாதமென்றும், சாபமென்றும் இருப்பதாகவும், அதன் பெயருக்குத் தக்கபடியான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும் நம்பிக்கையில்லை. அப்படியிருப்பதெனச் சொல்லுபவர்களையும், நம்புபவர்களையும் நான் பொருட்படுத்துவதுமில்லை. சாஸ்திரி: அப்படியானால் இதுவெல்லாம் உலகத்தில் எப்படி தொன்று தொட்டு நடந்து வருகிறது. கந்தையா: உலகம் என்று எதைச் சொல்லுகிறீர்? நீர் வசிக்கும் இடத்தையா? மற்றுமுள்ள 5 கண்டங்களின் நிலப்பரப்புகளையும் சேர்த்தா? சாஸ்திரி: மற்ற விஷயமெல்லா மெதற்கு? முதலில் நாம் வசிக்கு மிடத்தின் நடப்பைக் குறித்தே சொல்லும்...

காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக்கொள்ளுபவருக்கும்

காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக்கொள்ளுபவருக்கும்

சுயமரியாதை ஜஸ்டிஸ்காரருக்கும் நடந்த சம்பாஷணை – அனாமதேயம் எழுத�ுவது சு.ம. காங்கிரஸ்வாதி: தோழர் ஜவஹர்லால் ஒரு சமதர்ம வீரர் அவரை சு.ம.காரர் பஹிஷ்கரிக்கலாமா? சு.ம. ஜஸ்டிஸ்வாதி: ஜவஹர்லால் சமதர்ம வீரர் என்பதை உனக்காக வேண்டியே ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அவர் தோழர் ஈ.வெ.ராவைப் போலவே இப்போது நான் சமதர்மப் பிரசாரம் செய்ய வரவில்லை; காங்கிரஸ் பிரசாரம்தான் செய்ய வந்தேன் செய்கிறேன் என்று சொன்னாரா இல்லையா? சு.ம.கா: அவர் எங்கே அப்படிச் சொன்னார்? சு.ம.ஜ: காங்கரஸ் தலைமைப் பிரசங்கம் முதல் சென்னை பிரசங்கம் வரை படித்திருந்தால் எங்கே சொன்னார் என்று கேட்டிருக்கமாட்டாய். சரி அப்படி சொல்லவில்லை என்றும் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் சமதர்மத்துக்கு என்னிடம் திட்டம் ஒன்றும் இல்லை என்றும் உலகப் புரட்சியோ மகா யுத்தமோ ஒன்று ஏற்பட்டால் தான் சமதர்ம சம்பந்தமாய் ஏதாவது செய்யலாமே ஒழிய மற்றப்படி இப்போது அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் சொல்லியிருப்பதையாவது ஒப்புக்கொள்ளுகிறாயா இல்லையா? சு.ம.கா: ஆம், அப்படிச்சொன்னால் சமதர்மம்...

ஜவஹர்லால்

ஜவஹர்லால்

வரவு செலவு ஜவஹர்லால் தேர்தலுக்கு நிற்காதது ஏன்? “காங்கிரஸ்காரர்கள்தான் மூளையில்லாதவர்கள்” காங்கிரஸ் தலைவர் “வந்தார்” “போனார்” உள்ளதும் போச்சு காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லாலினது வரவால் ஜனங்களுக்கு ஒன்றும் பலனேற்படா விட்டாலும் ஜனங்களினுடைய நல்லபிப்பிராயத்தை யாவது இவர் பெற்றிருக்கலாம். அப்படியும் ஒன்றும் இல்லாமற் போனதோடு, ஜனங்கள் இவரைப் பற்றி இவர் வருவதற்கு முன் என்ன மதிப்பு வைத்துக் கொண்டிருந்தார்களோ அந்த மதிப்பும் இல்லாமல் போகும்படி நடந்துகொண்டார். அரசியல் சம்பந்தமாகவோ கட்சி சம்பந்தமாகவோ அவருடைய அபிப்பிராயங்கள் எப்படியிருந்தபோதிலும் ஜவஹர்லால் என்பதற்காக ஜனங்கள் கொஞ்சம் மரியாதை வைக்கும்படியான விளம்பரம் பெற்றிருந்தார். எப்படி என்றால் (தோழர் சத்தியமூர்த்தி சொன்னது போல்) இவருடைய தகப்பனாரை உத்தேசித்தேயாகும். அதனாலேயே இவரை முக்கிய புருஷர்களில் ஒருவராகவும் கருதி இருந்தார்கள். இவருக்கு இந்தியாவைத் தவிர மற்ற உலக அனுபவங்கள் இருக்குமென்றும் கருதியிருந்தார்கள். மற்றும் இவர் ஒரு உண்மையான உழைப்பாளியென்பதை இவருடைய எதிரிகள் கூட ஆட்சேபிக்கப் பயந்து வந்தார்கள். இவருடைய சமதர்ம அபிப்பிராயங்களைப்...

அறிக்கை

அறிக்கை

சுயமரியாதைக்காரர்களில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று ஒரு பிரிவு இருப்பதாகப் பத்திரிகைகளில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் என்று 10, 12 வருஷ காலமாய் இருந்துவரும் இயக்கத்தில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர்கள் என்கின்ற சிலரோ, ஒருவரோ இல்லை; இருப்பதற்கு இதுவரை சுயமரியாதை இயக்கம் இடம் கொடுக்கவுமில்லை. சுயமரியாதை இயக்கமானது காங்கிரசில் ஆதிக்கம் வகிக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராகவும் அவர்களது அரசியல், மத இயல், சமூக இயல் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும் ஏற்பட்டதாகும். அதனாலேயே சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்திலிருந்தே காங்கிரசை எதிர்த்து அதன் ஆதிக்கத்தைத் தமிழ் நாட்டில் தலையெடுக்கச் செய்யாமல் இருப்பதற்காகப் போராடி வந்திருப்பதுடன் அதே கொள்கைகளைக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியுடன் கூடி ஒத்துழைத்து வந்திருக்கிறது; ஒத்துழைத்தும் வருகிறது. அன்றியும் அவ்வியக்கம் (சு.ம. இயக்கம்) இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டு அதற்கு ஆதரவளிக்கக் கூடியவர்களையே தன்னோடு சேர்த்துக் கொண்டும் அதற்கு மாறாக இருப்பவர்களையும் மாறான அபிப்பிராயம் கொண்டவர்களையும் நழுவ விட்டுக்கொண்டுமே வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் ஆதி முதல் இதுவரை சு.ம....

பண்டிதர் கேள்விக்கு பதில்

பண்டிதர் கேள்விக்கு பதில்

பண்டிட் ஜவஹர்லால் சுற்றுப்பிரயாணத்தில் சுயமரியாதைக்காரர்கள் பல இடங்களில் கருப்புக்கொடி பிடித்தும் பஹிஷ்காரம் செய்தும் நடத்தின ஆடம்பர ஊர்வலங்களில் முதலில் சில இடங்களில் அலட்சியமாய் கருதி துச்சமாய்ப்பேசினார் என்றாலும் அனேகமாக ஒவ்வொரு இடங்களிலும் அவர் கருப்புக்கொடியும் பஹிஷ்காரக் கோஷமும் நேரில் கண்டதால் நாகப்பட்டணத்தில் அதன் விபரத்தை “நடு நிலையில்” நின்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்திற்குள்ளானார். அது சமயம் கருப்புக்கொடி பிடிக்கப்படுவதினுடையவும் பகிஷ்காரத்தினுடையவும் காரணங்கள் கண்டறிந்து பண்டிதர் ஆதியில் தனது அறியாமையால் இரண்டொரு இடங்களில் துச்சமாய்ப் பேசினதற்கு ஆக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் தனக்கு விளக்கவேண்டும் என்று 6 கேள்விகள் கேட்டிருக்கிறார். அக்கேள்விகள் “மெயில்” “சுதேசமித்திரன்” முதலிய ஆங்கிலம் தமிழ் பத்திரிக்கைகளில் காணப்படுகிறபடி, இந்த பஹிஷ்காரம் சுயமரியாதைக்காரர்கள் முன்னமே ஏற்பாடு செய்துகொண்டு செய்கிறார்களா? இது சுயமரியாதைக்காரர்களின் பொது முறையா? காங்கிரசைப்பற்றி சுயமரியாதைக்காரர்களின் நடைமுறை என்ன? ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி சுயமரியாதைக்காரர்களுடைய நடைமுறை என்ன? சுதந்திரத்தைப் பற்றி சுயமரியாதைக்காரர்களின் அபிப்பிராயம் என்ன? கருப்புக்கொடி பற்றியும்...

பார்ப்பனரல்லாதார் பிரசாரக் கமிட்டிக்கு கோலாலம்பூர் விஸ்வலிங்கம் உதவி பார்ப்பனரல்லாதார் மத்திய பிரசாரக் கமிட்டிக்கு நன்கொடையாக கோலாலம்பூர் தோழர் விஸ்வலிங்கம் அவர்கள் அனுப்பிய 10 ரூபாயும் வரப்பெற்றோம். þ தோழர் விஸ்வலிங்கம் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னவரின் கட்சியபிமானத்தையும் பாராட்டுகிறோம். þ தொகையை மத்தியக் கமிட்டி பொக்கிஷதார் தோழர் வி.வி. ராமசாமி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. ( ப ர் ) குடி அரசு பெட்டிச் செய்தி 25.10.1936

ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை

ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை

பண்டித ஜவஹர்லாலுக்கு தென்னாட்டிலுள்ள பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை. சென்னை கார்ப்பரேஷனில் முதலில் வரவேற்பளிப்பதில்லை யென்று தீர்மானிக்கப்பட்டது. பின் கோழி முட்டையும், செருப்புகளும் வீசி காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத் தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது. திருச்சியிலும் முதலில் வரவேற்பளிப்பதில்லையென முனிசிபாலிட்டியில் தீர்மானிக்கப்பட்டது. பின் அங்கும் காங்கிரஸ் காலிகள் செருப்புகளும் அழுகல் முட்டைகளும் எறிந்து காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத் தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது. மதுரை ஜில்லாபோர்டிலும் வரவேற்பளிப்பதில்லை யெனத் தீர்மானித்து விட்டது. கிருஷ்ணகிரி யூனியன் போர்டில் வரவேற்புக் கொடுப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால் அங்கு கொடுப்பதில்லை யென தீர்மானிக்கப்பட்டது. ஈரோட்டிலும் வரவேற்பளிக்க முயற்சித்தார்கள். இங்கு அவர்களுக்கு பலமில்லை யென்று தெரிந்ததும் அந்த முயற்சியை நிறுத்திவிட்டார்கள். திண்டுக்கல்லிலும் வரவேற்பளிக்க முயற்சித்தார்கள். அங்கும் அவர்களுக்கு பலமில்லாததால் அம்முயற்சியும் நிறுத்தப்பட்டது. விருதுநகர் முனிசிபாலிட்டியிலும் வரவேற்பில்லை. இதுபோல் இன்னும் பலவிடங்களில் வரவேற்பில்லை. இம்மாதிரி வடநாட்டிலிருந்து வந்த எந்தத் தலைவருக்கும் நடக்கவில்லை. ஜவஹருக்கு மட்டும் ஏன் இப்படி நடந்ததென்றால் அவரது முட்டாள்தனமான நடத்தையாலே தான். இதுமட்டுமல்ல,...

சிவில் ஜெயில் இல்லை

சிவில் ஜெயில் இல்லை

கடன் பட்டவர்களுக்கு ஜெயில் வாசம் விதிக்க இருக்கும் சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று நாம் வெகு காலமாக எழுதி வந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். அதற்காக என்றே சிலர் சிவில் ஜெயிலுக்கு போனதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இப்போதுதான் அந்த கிளர்ச்சிக்கு வெற்றி ஏற்பட்டது. அதாவது சென்ற வாரத்தில் இந்திய சட்டசபையில் கடன்காரர்களை ஜெயிலுக்கு பிடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் அதில் பணம் வைத்துக்கொண்டு கொடுக்க மாட்டேன் என்றால் அப்படிப்பட்டவனுக்கு இந்த சட்டம் பயன்படாது என்று ஒரு நிபந்தனை கண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் கடன்காரர்கள் என்பவர்களில் 100 க்கு 10 பேர்கள்தான் இருக்கக்கூடும். அந்த 100 க்கு 10 பேர்களிலும் ஒருவர் இருவர்தான் பணம் வைத்துக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆதலால் அந்த நிபந்தனையில் அந்த சட்டம் பாதிக்கப்பட்டு விட மாட்டாது என்பது நமதபிப்பிராயமாகும். இந்த சட்டம் தப்பாக கையாளப்பட்டாலும் கூட பிரமாத குற்றமில்லை என்று கருதுகிறோம். ஏனெனில் வட்டிக்கு ஆசைப்பட்டு...

கோபியில் நடந்தது என்ன?

கோபியில் நடந்தது என்ன?

தோழர் ஜவஹர்லாலுக்கு கோபியில் கருப்புக்கொடி பிடித்து பஹிஷ்கரித்ததைப் பற்றி காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவை அயோக்கியத் தனமாகத் திரித்துக் கூறி இருக்கின்றன. பத்திரிகை நிருபர்கள் பெரிதும் பார்ப்பனர்கள் என்பதும் அவர்கள் இம்மாதிரி விஷயங்களில் 100க்கு 99ல் அற்பத்தனமாகவே நடந்து கொள்ளுகிறார்கள் என்பதும் எவ்வளவு தான் கண்டித்தாலும் அவர்களுக்கு ரோஷம் என்பது மருந்துக்குக் கூட ஏற்படுவதில்லை என்பதும் நாம் இதற்கு முன் அனேக தடவை வெளியிட்ட காரியமாகும். ஆகவே கோபியில் நடந்த விஷயத்தில் சில பத்திரிகை நிருபர்கள் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதில் அதிசயமில்லை. ஆனால் “மெயில்” பத்திரிகை நிருபர் அடியோடு அது போல் நடந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் “மெயில்” பத்திரிகை சொந்தக்காரர் முழுப்பார்ப்பனர் அல்ல. ஆதலால் கேள்விக்கு பதில் சொல்லவேண்டி வருமே என்று பயந்து கொஞ்சமாவது உண்மை எழுதவேண்டியதாகி விட்டது. அதாவது கோபியில் கருப்புக் கொடிபிடித்தவர்களை தோழர் ஜவஹர்லால் கூப்பிட்டதாகவும் கருப்புக்கொடி பிடித்தவர்கள் பயந்து கொண்டு நழுவி விட்டதாகவும் பல காங்கிரஸ் பத்திரிக்கைகள்...

கருப்புக்கொடி

கருப்புக்கொடி

சென்னை சுற்றுப் பிரயாணத்தில் பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் பஹிஷ்கார பிரசுரங்கள் வினியோகங்களும் பல இடங்களில் கருப்புக் கொடிகள் பிடித்தலும் பல இடங்களில் “பார்ப்பன கங்காணியே திரும்பிப்போ” என்கின்ற கோஷமும் மற்றும் இதுபோன்ற பஹிஷ்காரக் குறிப்பும், அதிருப்திக் குறிகளும் நடந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றன. இவற்றைப் பார்ப்பனப் பத்திரிகைகள் மறைத்தும் திரித்தும் கூறி வந்திருந்தாலும், எப்படியோ விஷயங்கள் வெளியாகி எல்லாப் பத்திரிகைகளும் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ, இஷ்டப்பட்டோ இஷ்டப் படாமலோ வெளிப்படுத்தி அவற்றின் மீது தங்களது அபிப்பிராயக் குறிப்புகளும் வெளியாக்கி விட்டன. கருப்புக்கொடியானது, தமிழ் நாட்டில் பண்டிதர் ஜவஹர்லாலுக்கு மாத்திரம் பிடிக்கப்பட வில்லை. தோழர்கள் காந்தியார், ராஜேந்திரபிரசாத் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்கெல்லாம் பிடிக்கப்பட்டன. அவற்றின் காரணமும் அவ்வப்போதே சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது காங்கிரஸ் தலைவர்கள் இங்கு காங்கிரசின் பேரால் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக பிரசாரம் செய்யவும், பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்கு கொடுத்து அவர்களின் விஷமப் பிரசாரத்துக்கு ஆக்கமளிக்கவும் வருகிறார்கள்....

பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா?

பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா?

வெள்ளையரிடம் பார்ப்பனர் சரணாகதி முஸ்லீம்கள் தீண்டாதவர்கள் பிரச்சினை முதலில் ஜஸ்டிஸ் கட்சியார்தான் முகம்மதியர்களுக்கும், ஏழைகளுக்கும், தீண்டாதார்களுக்கும் வேலை செய்தார்கள். அதன் பிறகுதான் காந்தியும் அவர்களைப்போல் வேலை செய்ய ஆரம்பித்தார். காந்தியானவர் மகாத்மா ஆனபின் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்யம் வரமுடியாது என்றார். அப்படியே தீண்டாதாரிடம் தீண்டாமை ஒழிந்தால்தான் சுயராஜ்யம் வரும் என்றும், தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வராது என்றும் வந்தாலும் அது வேண்டாம் என்றும் சொன்னார். பிறகு வட்டமேஜை மகாநாட்டுக்குப் போனதும் சுயராஜ்யம் வந்தாலொழிய ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாதென்றார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ஜனாப் ஜின்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் “சுயராஜ்ய கவர்ண்மெண்டில் எங்களுடைய நிலை இன்னது என்று சொல்லிவிட வேண்டு”மென்று கேட்டார். ஏனென்றால் காந்தியின் ராமராஜ்யமானது ஹிந்து ராஜ்யமாகத்தான் இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். காந்தியார் எல்லாரையும் ஏமாற்றி விட முடியாதல்லவா? இவர்கள் ஒரு முடிவுக்கும் வராதது கண்டு இங்கிலீஷ் அரசாங்கத்தார் அந்தந்த சமூகத்திற்கும் ஞாயம்...

ஜவஹர்லால் நாடகம் சபாஷ் சென்னை!

ஜவஹர்லால் நாடகம் சபாஷ் சென்னை!

தோழர் ஜவஹர்லால் சென்னை விஜயமானது தற்போது நடக்க இருக்கும் முனிசிபல் கார்ப்பரேஷன் எலக்ஷன் பிரசாரத்துக்கும் இனியும் ஒரு மாதத்துக்குள் நடக்கும் சில ஜில்லா போர்டு எலக்ஷன் பிரசாரத்துக்கும் பிப்ரவரி முதலில் நடக்கப் போகும் சென்னை சட்டசபை எலக்ஷன் பிரசாரத்துக்கும் ஆக பயன்படுத்திக் கொள்ளவும் மற்றும் அப்பிரசாரங்களுக்கு ஆக பொதுஜனங்கள் இடம் இருந்து பணம் திரட்டிக்கொள்ளவுமே அல்லாமல் வேறொன்றுக்குமாக அல்ல என்று எழுதி இருந்தோம். இதற்கு முன்னும் இதுபோலவே சென்ற வருஷத்திலும் ஜில்லாபோர்டு தேர்தல்கள் மும்முரமாய் நடந்துகொண்டிருந்த காலத்தில் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து வந்து நமது பார்ப்பனர்கள் தங்கள் பிரசாரத்துக்கு அனுகூலம் செய்துகொண்டதோடு பணமும் ஏராளமாக வசூலித்துக் கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். அதுபோலவே இந்திய சட்டசபைத் தேர்தல் இருந்த காலத்திலும் நமது பார்ப்பனர்கள் தோழர் காந்தியாரை அழைத்து வந்து பிரசாரத்துக்கு அனுகூலம் செய்து கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. ஆனால் தோழர் காந்தியார் வந்தபோது எலக்ஷனைப்பற்றி தனக்குக் கவலையே...

வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கும் சம்பந்தமென்ன?

வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கும் சம்பந்தமென்ன?

இந்த மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி இருந்ததினால் தாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை யென்றால் மற்ற மாகாணங்களில் இவர்கள் சாதித்தது என்ன? இவர்கள் என்னதான் தாக்கிப் பேசினாலும், முட்டுக்கட்டை போட்டாலும் மெஜாரிட்டி பாஸ் செய்தாலும் கவர்ன்மெண்டை ஒன்றும் அசைக்க முடியாது. 192324ல் காங்கிரஸ் சட்டசபை பஹிஷ்காரப் போராட்டம் நடத்திய காலத்தில் கழுதைகள்தான் சட்டசபைக்குப் போகும் என்று அட்டையில் எழுதி கழுதை கழுத்தில் கட்டி ஜனக்கூட்டங்களின் முன் விரட்டினார்கள். நாய் கழுத்திலும் அப்படியே எழுதிக் கட்டி வாலில் டின்களையும் கட்டி விரட்டினார்கள். சட்டசபைகளையெல்லாம் கள்ளுக்கடை என்று சொன்னார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் படம் எழுதி சட்டசபைகளைக் கள்ளுக்கடை போலவும், அப்பால் ஒரு கோவிலைக் காங்கிரஸ் போலவும் காட்டினார். இப்பொழுது அந்தக் கள்ளுக்கடை யெல்லாம் கோவிலாக ஆய்விட்டதா? அல்லது அவர்களே இந்தக் கழுதைகள் ஆய்விட்டார்களா? (சிரிப்பும் கரகோஷமும்) நீங்கள் ஞாயமாகப் பேச விரும்புங்கள்; நானும் ஞாயமாகப் பேச விரும்புகிறேன். நமக்குள் ஏன் சண்டை என்றுதான் நான் சொல்லுகிறேன்....

காலித்தனத்தின் வளர்ச்சி

காலித்தனத்தின் வளர்ச்சி

  காங்கிரஸ் காலித்தனத்துக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆகிவிட்டது என்பது போல் கூட்டங்களில் செருப்பும் முட்டையும் போட்டு வெளி முனிசிபாலிட்டிகளில் (திருச்சியில்) செருப்பும் முட்டையும் போட்டு இப்போது சென்னை கார்ப்பரேஷனிலேயே செருப்புகளும், முட்டைகளும் வந்து விழுக ஆரம்பித்து விட்டன. ஆகவே இனி சென்னையைப் பொறுத்தவரை சட்டசபை மண்டபத்தில் வந்து விழுகவேண்டியதுதான் பாக்கி என்று சொல்ல வேண்டிய நிலைமையை எய்தி விட்டது. காங்கிரசுக்காரர்கள் மகாத்மா என்பவர் தலைமையில் 3, 4 கோடி ரூபாய் செலவில் 40, 50 ஆயிரம் பேர் ஆண் பெண் அடங்க “அடி உதைபட்டு சிறை சென்று தியாகம் செய்த” தியாக புத்தியில் காங்கிரசால் படிப்பிக்கப்பட்ட படிப்பு கார்ப்பரேஷனில் மீட்டிங்கில் செருப்புகளும் அழுகல் முட்டைகளும் வந்து விழுந்த பெருமைதான். காங்கிரசுக்காரர்கள் இந்த இடங்களில் மாத்திரமல்லாமல் மற்றும் அநேக இடங்களிலும் மந்திரிகள் கூட்டங்களில் இப்படியே நடந்து வருகிறார்கள். நாமக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை...

இன்னுமா சந்தேகம்?

இன்னுமா சந்தேகம்?

தோழர் ஜவஹர்லால் அவர்கள் தேர்தலுக்கும் பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவும் வருகிறார் என்று சென்ற இரண்டு வாரமாக எழுதி வந்தோம். அதைப்பார்த்த ஒரு தோழர் நமக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் இருக்கும்போதும் சில ஜில்லா போர்டு தேர்தல் இருக்கும் போதும் இந்த மாதிரி ஜவஹர்லால் அவர்களை பகிஷ்காரம் செய்வது வரவேற்புபத்திரம் மறுப்பது போன்ற காரியங்கள் நடக்குமானால் தேர்தல் பாதிக்கப்பட்டு விடாதா என்று கேட்கிறார். பிரசாரத்திற்கு தாராளமாய் அனுமதித்து பணம் வசூலுக்கும் இடந்தந்து ஒவ்வொரு முனிசிபாலிடியும் ஜில்லாபோர்டும் வரவேற்பளிக்கும் காரியத்துக்கு உதவி செய்து வந்தால் தேர்தலில் என்ன பலன் கிடைக்குமோ அதைவிட மோசமான பலன் ஒன்றுமே நமக்கு ஏற்பட்டு விடாது என்பதுதான் நமது பதிலாகும். நாம் முன் குறிப்பிட்டது போலவே தோழர் ஜவஹர்லால் எங்கேயோ இருந்துகொண்டு இங்கு தேர்தலில் நிற்கும் ஆட்களின் யோக்கியதைகளையும் தராதரங்களையும் உணராமலே காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்கே ஓட்டுப்போடுங்கள் என்று “ஸ்ரீ முகம்”...

“தமிழ் நாடு”

“தமிழ் நாடு”

“தமிழ்நாடு” பத்திரிகையை தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் நிறுத்திவிடப்போவதாய் 26936ந் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் தலையங்கம் எழுதி தன் கையெழுத்தையும் போட்டுவிட்டார். இது உண்மையாக இருக்குமோ அல்லது அவரது அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்றோ என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியானாலும்சரி “தமிழ்நாடு” பத்திரிகை நிறுத்தப்பட்டு விடுமானால் தமிழ் மக்கள் தோல்விக்கும் பார்ப்பனர்கள் வெற்றிக்கும் இது ஒரு இமயமலை போன்ற பெரியதும் சூரிய வெளிச்சம் போன்ற நிச்சயமானதுமான உதாரணமாகும். இந்த நாட்டில் தமிழ் மக்கள் முயற்சிக்கும், அவர்கள் இதுவரை பாடுபட்டுச் செய்து வந்த வேலைக்கும் சிறிதாவது பயன் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் அது பார்ப்பனப் பத்திரிகைகளின் செல்வாக்கும் செலவாணியும் எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதைக் கொண்டுதான் அளவுக் கணக்கு எடுக்க முடியும். அந்தப்படி பார்த்தால் பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் எவ்வளவு முதல் வைத்து நடத்தப்படுபவைகளானாலும் வருஷா வருஷம் மலேயா, கொளும்பு, ரங்கூன் முதலிய இடங்களுக்குச் சென்று எவ்வளவுதான் பணங்கள் அரித்துக்...

காங்கிரஸ் ஏற்பட்டது பிரிட்டீசாரை வாழ்த்தவே

காங்கிரஸ் ஏற்பட்டது பிரிட்டீசாரை வாழ்த்தவே

காங்கிரஸ் வருணாச்சிரமம் கோருகிறது ஜஸ்டிஸ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருகிறது ~cmatter தோழர்களே! இன்று நமது மாகாணத்தில் காங்கிரஸ்காரர்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்றும் இரண்டு கூட்டத்தார்கள் பிரமாதமாகவும் மிகவும் வேகமாகவும் பிரசார வேலைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பெரும்பாலும் எதைப்பற்றி சண்டை என்று நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. சீக்கிரம் நம் தேசத்தில் புதிய சீர்திருத்தங்கள் ஏற்படப் போகிறபடியால் அதற்காக சமீபத்தில் நடக்க விருக்கிற எலெக்ஷன்களில்தான் தான் வெற்றி பெறுவதற்காக ஒரு கட்சியானது மற்ற கட்சியின் மேல் குறைகூறுவது உண்மையென்று உங்களுக்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நம் தேசத்தில் ஒரு கட்சி மேல் மற்றொரு கட்சி துவேஷப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றது. துவேஷப் பிரசாரம் செய்வது என்ற கருத்து எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. நான் துவேஷப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று உங்கள் முன் வரவில்லை. நானும் காங்கிரஸில் இருந்தவன் தான். காங்கிரஸ் பார்ப்பனர்களுடன் நான் ஒத்துழைத்திருக்கிறேன். ஆகையால் இப்பொழுதும்...

நாம் எதை நம்பலாம்? எக் காரணத்தால்?

நாம் எதை நம்பலாம்? எக் காரணத்தால்?

தெளிவாகச் சிந்தனை செய்து பழகவேண்டியவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. அதாவது “நீ அதை உண்மையென நம்பக் காரணமென்ன? அல்லது நான் அதை உண்மையென நம்புவதற்கு ஆதாரமென்ன?” என்பதே. பெரும்பாலார் கொண்டிருக்கும் பெரும்பான்மையான அபிப்பிராயங் களுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதை நாம் முக்கியமாக உணரவேண்டும். அவர்கள் அவைகளை ஏன் நம்புகிறார்கள் என்பதற்குக் காரணமே இல்லை; அவர்களுடைய அபிப்பிராயங்கள் சரியென நிரூபிக்க அவர்களுக்கு ஆதாரமும் காட்ட முடியாது. “நீங்கள் அவ்வாறு ஏன் எண்ணுகிறீர்கள், அல்லது அவைகளை நம்புவதற்குக் காரணம் என்ன?” எனக்கேட்டால் அவர்களுக்கு விடையளிக்க முடியாது. அவ்வாறு கேட்டால் அவர்கள் திகைப்படைவார்கள். அம்மட்டோ? அம்மாதிரிக் கேள்விகள் கேட்பதைப் பெரிய தொந்தரவாகவும் எண்ணுவார்கள். அல்லது மிகப் பிரயாசைப்பட்டு ஏதாவது ஒரு மாதிரிக் காரணங்களைக் கூறுவார்கள். ஆனால் அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்பதை நீங்கள் வெகு சுளுவில் அறிந்துகொள்வீர்கள். ஆதாரமில்லாமலும் ஆராய்ந்து பாராமலும் மக்கள் பல விஷயங் களைச் சுளுவாக நம்பி விடுவதைப்பற்றி...

ஆதாரமற்ற நம்பிக்கைகள்

ஆதாரமற்ற நம்பிக்கைகள்

ஒரு விஷயத்தை ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் என்ன செய்கிறோம். “அது உனக்கு எப்படித்தெரியும்? அது உண்மையென்று நாங்கள் ஏன் நம்பவேண்டும்? அது உண்மை என்று நம்ப ஆதாரமென்ன?” எனப் பொதுவாக மூன்று கேள்விகளைக் கேட்கிறோம். பிரதி தினமும் நாம் எத்தனையோ விஷயங்களை அறிகிறோம். அவைகளில் பலவற்றை நாம் கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடுகிறோம். “அது உண்மையா? உண்மை யென்பதற்கு ஆதாரமென்ன?” என்பன போன்ற விஷயங்களை நாம் கவனிப்பதே இல்லை. நமது நம்பிக்கைகளில் பலவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவற்றிற்கு ஆதாரமே இல்லையெனத் தோன்றா நிற்கும். ஒரு காலத்திலே ஒரு விஷயம் உண்மையென்று யாரோ ஒருவர் சொன்னார். அல்லது ஆராய்ந்து பாராமலே அதை நாம் உண்மையென நம்பிக்கொண்டோம். அல்லது அது உண்மையாகத்தான் இருக்குமென்று சுளுவில் நம்பிக்கொண்டோம். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நாம் முதலிலே கூறிய மூன்று கேள்விகளையும் கேட்டால் எந்த விஷயத்தின் உண்மையையும் நாம் அறிந்துகொள்ளலாம். உண்மையாராய்ச்சியில் தோல்வியடைந்த பிறகும் ஒரு விஷயத்தை...

மறுபடியும் தொல்லை

மறுபடியும் தொல்லை

தூது கோஷ்டிப் புரளி இனாம்தார் மசோதா இரண்டாம் முறையும் சென்னைச் சட்டசபையில் நிறைவேறிச் சட்டமாகிவிட்டது. வைஸ்ராய் அனுமதி பெறவேண்டியதுதான் பாக்கி. வைஸ்ராய் அனுமதியளித்து விட்டால் ஐம்பது லக்ஷம் இனாம் குடிகளின் கஷ்டம் தீரும். நிர்ப்பயமாக உயிர்வாழ்வார்கள். ஆனால் இனாம்தார்கள் இனாம் குடிகளின் தலையில் கைவைக்க மேலும் என்ன வழியென்று பார்க்கப்போவதாகத் தெரிகிறது. இனாம்தார்களுடைய பிரதிநிதி கோஷ்டியார் கவர்னர் அவர்களைப் பேட்டி கண்டு முறையிட முயற்சி செய்தார்களாம். இனாம் மசோதா விஷயம் வெகுகாலமாகப் பொது ஜனங்கள் முன் இருந்து வந்திருப்பதினாலும் இந்த விஷயத்தை ஏற்கனவே நன்றாகச் சர்ச்சை செய்யப்பட்டிருப்பதினாலும் புதிதாக எந்த விஷயத்தையும் தெரிவிப்பதற்கில்லை யெனக் காரணங்கூறி கவர்னர் தூது கோஷ்டிக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டதுடன் இதர கோஷ்டிகளுக்கும் அனுமதியளிப்பதில்லை யென்று தெரிவித்துவிட்டாராம். இது இரண்டு பார்ப்பனப் பத்திரிகைகளுக்குப் பிடிக்கவில்லை. அவ்விரண்டு பத்திரிகைகளும் தேசீயப் பத்திரிகைகள்தான். ஏழை எளியோர் விடுதலையை தமது லக்ஷ்யமென தேசீய வாதிகளும் தேசீயப் பத்திரிகைகளும் கூறிக்கொண்டாலும் இனாம் குடிகள்...

ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லாலுக்கு கராச்சி முனிசிபாலிட்டி உபசாரப்பத்திரம் கொடுக்க மறுத்துவிட்டது. பம்பாய் முனிசிபாலிட்டியும் உபசாரப் பத்திரம் கொடுக்க மறுத்து விட்டது. கடைசியாக மதராசும் மறுத்து விட்டது. அவ்வளவுதானா என்று பார்த்தால் திருச்சியும் மறுத்தது. தானாகக் கனியாத பழத்தை தடியாலடித்து கனியவைப்பது போல் காங்கிரஸ்காரர்கள் இப்போது மறுபடியும் அந்த முனிசிபாலிட்டிகளில் உபசாரப் பத்திரம் படிக்கச் செய்வதற்கு வாசல் வைத்த வீடு தோறும் அலைந்து திரிந்து 32 பற்களையும் காட்டி “வரவேற்பு செலவை நாங்களே பொறுத்துக் கொள்ளுகிறோம்” என்று கெஞ்சுகிறார்கள். ஜவஹர்லாலுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்காத முனிசிபாலிட்டிகள் ஒரு நல்ல பெருமையை இழந்து விட்டதாக பரிதாபக் கண்ணீர் வடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் மத விஷயங்களிலும் இப்படியே பார்ப்பானுக்கு பணங் கொடுக்காத கை உலக்கை என்றும், பார்ப்பான் உபதேசம் கேட்காத காது நிலைக்காது என்றும், பார்ப்பானைப் புகழாத வாய் நாவாய் என்றும் பிரசாரம் சேர்த்துப் பேசுவது வழக்கம். அதுபோலவே ஜவஹருக்கு வரவேற்பு...

தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு

தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு

திண்டுக்கல் தோழர்களே! தமிழ்நாட்டின் தென் ஜில்லாக்கள் சார்பாய்க் கூடும் இம்மகாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்காக வரவேற்புக் கழகத்தாருக்கு நான் எனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். நமது சங்கம் நமது தென் இந்திய நல உரிமைச் சங்கம் தோன்றி இன்றைக்கு கிட்டத்தட்ட 20 வருஷ காலமாகிறது. இதன் முக்கியக் கொள்கை: சட்ட ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டு கிளர்ச்சி செய்து அரசியல் விடுதலை (அதாவது சுயராஜ்யம் என்பது) பெறுவதும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் நம் நாட்டிலுள்ள எல்லா மதக்காரருக்கும் ஜாதிக்காரருக்கும் விகிதாச்சாரம் உரிமை வழங்குவதுமாகும். அதாவது சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம் அளிப்பதாகும். இந்தக் கொள்கையில் இருந்து இதுவரை நாம் சிறிதும் பிறழாமல் கொள்கைக்கு ஏற்ப நம்மால் கூடியதை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறோம். நமது சங்க ஆரம்பத்தில் இந்திய அரசியலில் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் ஏகபோக உரிமைகள் அனுபவித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் நீங்க, மற்ற எல்லா சமூகத்தார்களும் நமது...

தற்கால அரசியல்

தற்கால அரசியல்

  தஞ்சை ஜில்லா சுற்றுப்பிரயாண பிரசங்கம் Dr. சுப்பராயன் கம்பெனிக்கு பதில் தோழர்களே! இந்தப் பக்கத்துக்கு சுமார் 3,4 மாதத்துக்கு முன் ஒரு தடவை வந்து பேசி இருக்கிறேன். இப்போது பட்டுக்கோட்டை தோழர் சிவராமகிருஷ்ணன் ராஜலக்ஷ்மி திருமணத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் இந்த ஜில்லா சுற்றுப் பிரயாணத்தில் சில பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து இதில் தற்கால அரசியல் என்பது பற்றிப் பேசும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ~subhead பதவியும் சம்பளமுமே இன்றைய அரசியல் ~shend தற்கால அரசியல் என்பதைப்பற்றிப் பேசுவது என்றால் அது நாம் அதாவது இந்தியர்களாகிய நாமும் (இந்தியர்களாகிய) நம்மில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பாரும் ஒருவரை ஒருவர் வைது கொள்வது தான் தற்கால அரசியலாக இருக்கிறது என்று சொல்ல வருத்தப்படுகிறேன். நம்மில் ஒருவரை ஒருவர் வைதுகொள்வதைத் தவிர மற்றபடி அரசியல் என்பதின் காரணமாய் கொள்கைகள் திட்டங்கள் என்பவற்றில் இந்தியர்களுக்குள் ஏதும் முக்கியமான வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. மேல் குறிப்பிட்டபடி வைது கொள்ளுகின்ற...

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்களின் உதவி  ரூபாய் 117118க்கு “செக்கு”

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்களின் உதவி ரூபாய் 117118க்கு “செக்கு”

  – அன்னோய் 12.9.36 தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கட்கு, அன்பார்ந்த எமது தலைவரே! வணக்கம். “தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்திய கமிட்டி”யின் சார்பாக விடுத்துள்ள நுங்கள் வேண்டுகோளுக்கிணங்க இவண் வதியும் தமிழர்களாகிய நாங்கள் தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் பெயருக்கு ரூபாய், 117118க்கு “செக்” ஒன்று இத்துடன் அனுப்புவித்துள்ளோம்; எங்களின் இச்சிறு பொருளுதவியை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வீர்களென நம்புகின்றோம். நிற்க, தமிழ் நன்மக்களின் நலங்கருதி முனைந்து நின்று அருந் தொண்டாற்றும் தங்கட்கும் தங்களின் கூட்டுத் தோழர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியறிதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடுகூட தங்களின் புனிதமான நன் முயற்சி பெற்றி பெற வேண்டுமாயும் மிக ஆசைப்படுகிறோம். “செக்” கிடைக்கப் பெற்றமையை “குடி அரசு” வாயிலாகத் தெரிவிப்பீர்களென நம்புகின்றோம். இங்ஙனம், தங்கள் பால் அன்பும் மதிப்பும்மிக்குடைய அன்னோய் தமிழர்கள். குறிப்பு: பிராஞ்சிலாகாவைச் சேர்ந்த அன்னோய் தமிழ் தோழர்களுக்கு நமது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய வெளிநாட்டுத் தோழர்களுக்கு வழிகாட்டியாக முன்வந்த...

வரப்போகிறார்களாமே!

வரப்போகிறார்களாமே!

தென்னாட்டில் காங்கிரசுக்குச் செல்வாக்கும் மதிப்பும் குறையும்போது வடநாட்டுத் தலைவர்களை அழைத்துக்கொண்டு ஊரூராய்ச் சுற்றி நிதி சேர்ப்பதும் காங்கரஸ் பிரசாரம் செய்வதும் தென்னாட்டுப் பார்ப்பனர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று தென்னாட்டு காங்கரஸ் குடைசாய்ந்து கிடக்கிறது. தமிழ் மாகாண காங்கரஸ் காரியக்கமிட்டியார் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று காங்கரஸ்காரர்களே கிளர்ச்சி செய்கிறார்கள். தலைவரை வீழ்த்தவேண்டும் என்றும் ஒரு கிளர்ச்சி நடை பெற்று வருகிறது. காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற ஜில்லா போர்டுகளில் எல்லாம் ஊழல்கள் நிறைந்து விட்டன. ஜில்லா போர்டுகளில் காங்கரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது. காங்கரஸ்காரர்களின் ஜில்லா போர்டு நிர்வாகத்தைப் பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்டிருந்த கமிட்டியார் “நிர்வாகம் ரொம்ப ரொம்ப ஒழுங்கு” என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். எனினும் அவ்வறிக்கையை காங்கரஸ்காரர்களே எதிர்க்கிறார்கள். வேலூர் ஜில்லாபோர்டு இடைத்தேர்தலில் காங்கரஸ் பேரால் அபேட்சகர்களாய் நிற்கக் கூட ஆட்கள் முன் வரவில்லை. சென்னை நகரசபைத் தேர்தல் சம்பந்தமான ஊழல்களைக் கண்டிக்க ஒரு விசேஷ காங்கரஸ் கமிட்டியார் முயற்சி செய்து...

பிரஜா பிரதிநிதித்துவ சபை கூட்டுவதின் கருத்து

பிரஜா பிரதிநிதித்துவ சபை கூட்டுவதின் கருத்து

எச்சரிக்கை! எச்சரிக்கை!! ~cmatter காங்கிரசுக்காரர்கள் பொதுஜனப் பிரதிகள் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என்று சர்க்காரை கேட்டுக் கொள்ளுவதாக ஒரு தீர்மானம் இந்தியா சட்டசபைக்கு கொண்டு வரப்போவதாக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்களாம். அந்த தீர்மானத்தின் வாசகம் எப்படிப்பட்டது என்றால், சீர்திருத்தத்தில் உண்மையான அதிகாரம் இல்லையென்றும், வகுப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் ஆதலால் கூடாது என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அரசியலில் வகுப்புகளைக் காப்பாற்றிக் கொடுப்பதாக பல வகுப்பு மக்களுக்கும் உத்தரவாத மேற்றுக் கொண்ட காங்கிரசானது அரசியலில் வகுப்புத் திட்டம் கூடாது என்று சொன்னால் அதில் ஏதாவது நாணயமிருக்க முடியுமா என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். இன்றைய காங்கிரசின் கிளர்ச்சியெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருடைய ஆதிக்கம் அரசியலிலும் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற பார்ப்பனீயக் கிளர்ச்சியே ஒழிய யோக்கியமான அரசியல் கிளர்ச்சி அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆதலால் இப்படிப்பட்ட பொதுஜனங்கள் பிரதிநிதித்துவக் கூட்டம் ஒன்று கூட்டப்படுவதானால் இந்தியாவில்...

சுதேச சமஸ்தானமும் வகுப்புவாதமும்

சுதேச சமஸ்தானமும் வகுப்புவாதமும்

வகுப்பு வாதமும் காங்கிரசும் என்பது பற்றிச் சென்ற வாரம் “குடி அரசில்” தலையங்கம் எழுதி இருந்தோம். அதன் முக்கிய கருத்தெல்லாம் பல மதம், பல ஜாதி, பல வகுப்பு என்பதாக பிரிவினையுள்ள மக்கள் அடங்கிய நாடு எந்த நாடாய் இருந்தாலும் அங்கெல்லாம் வகுப்புணர்ச்சிகளும், வகுப்பு வாதங்களும் இல்லாமல் இருக்காது என்பதும் வகுப்புணர்ச்சியை மதித்து ஏதாவது ஒரு வழியில் அதை சமாதானப்படுத்தி அடக்க முடியாமல் அதோடு போர் தொடுக்கும் வரையிலும் எரிகிற நெருப்பை பெட்றோல் எண்ணெய் ஊற்றி அவிக்கக் கருதும் மூடன் செய்கை போல் வகுப்பு வாதம் வளர்ந்து கொண்டே தான் வரும் என்பதுமேயாகும். அதோடு கூடவே வகுப்பு வாதம் இந்தியாவில் பல ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னதாகவே வேறு பல பெயர்களால் இந்திய மக்களுக்குள்ளாகவே இருந்து வந்திருக்கிறது என்றும் அதன் காரணமாகவே மக்கள் சமூகத்துக்கு அடிக்கடி தொல்லையும், துன்பமும் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தோம். ~subhead வகுப்புவாதம் புதியதல்ல ~shend இப்பொழுதும்...

தேசீயப் பத்திரிகைகளின் போக்கு

தேசீயப் பத்திரிகைகளின் போக்கு

ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டு விட்டாராம். தேசீயப் பத்திரிகைகளும் செமிதேசீயப் பத்திரிகைகளும் பத்தி பத்தியாய் அவரைப் பற்றி எழுதுகின்றன. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேசீயம் என்றால் பிராமணீயம் என்றுதான் பொருள். எனவே ஒரு பார்ப்பனர் திவான் ஆனதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளும் செமி பார்ப்பனப் பத்திரிகைகளும் ஆனந்தக் கூத்தாடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான் ஆனதைப்பற்றி நாம் பொறாமைப்படவுமில்லை. ஏன்? அதைப்பார்த்துப் பொறாமைப் படக்கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை. திவான் பதவியை விட பதின்மடங்கு பொறுப்பும் பெருமையும் வாய்ந்த பதவிகளை நம்மவர்கள் வகித்து வருகையில் மேலும் வகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகுந்து வருகையில் எவ்வளவு உயரிய பதவிகளை வகிக்கவும் நம்மவர்களுக்கு லாயக்குண்டு என்ற உண்மை வெளியாகி உறுதி பெற்று வருகையில், ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான் ஆனதைப்பற்றி நாம் பொறாமைப் படக் காரணமில்லை. மேலும் ஜில்லா கலக்டராயிருந்த பார்ப்பனர்கள் பரோடா போன்ற சமஸ்தானங்களில் திவான் உத்தியோகம் பெற்றிருக்கையில், சென்னை மாகாணச்...

காங்கரஸ்காரர் பித்தலாட்டம்

காங்கரஸ்காரர் பித்தலாட்டம்

  ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை காங்கரஸ் பேரால் அயோக்கியர் யோக்கியராகிவிடமாட்டார்கள் ஆளின் யோக்கியதையைக் கவனித்து வோட்டுக் கொடுங்கள் தலைவரவர்களே தோழர்களே! இன்று தேர்தலும் ஓட்டர்கள் கடமையும் என்பதாக பேச இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி நான் முன்னமேயே அநேக தடவை பேசியிருக்கிறேன். தேர்தல்கள் வரும்போதெல்லாம் இந்த விஷயத்தைப்பற்றி பேசுவது சகஜமேயாகும். அதுபோலவே சென்னையில் இப்போது கார்ப்பரேஷன் எலக்ஷன் நடக்கப்போவதால் அதைப்பற்றி பேச ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தல்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை நான் எப்போதும் அதாவது காங்கிரசில் இருக்கும்போது முதலே தேர்தலைப்பற்றிப் பேசுவதாய் இருந்தால் குறிப்பாக ஸ்தல ஸ்தாபன தேர்தல்களைப் பற்றி பேசுவதாய் இருந்தால் கட்சிகளைப் பற்றிக் கவனிக்க வேண்டாம் என்றும் ஆட்களின் தராதரங்களைக் கண்டு ஓட்டு செய்யுங்கள் என்றும் ஓட்டர்களை கேட்டுக் கொள்ளுவது வழக்கம். இம்மாதிரியாக கேட்டுக் கொள்ளும் கூட்டங்களில் கட்சிகளைப்பற்றியும் நான் எப்போதாவது பேசியிருப்பேனேயானால் அது காங்கிரசுக்காரர்கள் கட்சிகளைப் பிரதானப்படுத்தி தங்கள் கட்சியே யோக்கியமான கட்சி என்றும்,...

மறுபடியும் வெளியேறும் நாடகம்

மறுபடியும் வெளியேறும் நாடகம்

இனிப் பலிக்காது! காங்கரஸ்காரர்கள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்காக புது எலக்ஷன் வரும்போதெல்லாம் அதாவது சட்டசபை காலம் காலாவதி ஆகும் போதெல்லாம் தாங்கள் சட்டசபை ஸ்தானத்தை லட்சியம் செய்யாதவர்கள் என்று காட்டிக்கொள்ளுவதற்காக சட்ட சபையைவிட்டு வெளியேறிவிட்டதாக வேஷம் போட்டு நாடகம் நடிப்பது வழக்கம். இந்த நாடகத்தை தோழர்கள் பெரிய மோதிலால் நேரு முதல் அநேகர் நடித்துப் பார்த்தாய் விட்டது? அப்படி இருந்தும் இப்போது வேறு வழியில் அதே நாடகத்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதனாலெல்லாம் பொதுமக்கள் இனி ஏமாந்துவிடமாட்டார்கள். இனி காங்கரசுக்காரர் பொது ஜனங்களை ஓட்டுக் கேட்கப்போனால் இதுவரை நீங்கள் சட்டசபையில் சாதித்ததென்ன என்றும், எந்த தடவையாவது, எதிலாவது நீங்கள் வாக்கு கொடுத்தபடி நாணயமாய் நடந்தீர்களா என்றும் கேட்டு முகத்தில் கரியைத் தடவி அனுப்பப் போகிறார்கள் என்பது உறுதி. குடி அரசு கட்டுரை 06.09.1936

“ஏழைப் பங்காளர்”

“ஏழைப் பங்காளர்”

சத்தியமூர்த்தி! தீண்டாமையொழிப்பு காங்கரஸ் வாலாக்களுக்குக் கட்டிக் கரும்பாம். எளியோர் விடுதலை பால் சோறாம். கிரியாம்சையில் இவையாவும் வாய்ப்பந்தலாகவே இருக்கிறது. 700 மைல் தூரம் கால்நடையாக நடந்து பட்டினிப்பட்டாளம் கள்ளிக்கோட்டையிலிருந்து சென்னைக்குச்சென்றது. சட்டசபையில் நமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்பது அந்தப் பட்டாளத்தின் நோக்கம். “எதற்காக 700 மைல் தூரம் நடத்துவர வேண்டும்! ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்! சட்டசபை மெம்பர்கள் மூலம் சமர்ப்பித்தால் போதுமே” என்றெல்லாம் சர்க்கார் காரணம் கூறிக்கொண்டார்களாம். சட்டசபை செல்ல பட்டாளம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஏழைகளுக்காகப் பாடுபடும் காங்கரஸ் பிரதிநிதி அதிலும் தமிழ் மாகாண காங்கரஸ் கமிட்டித்தலைவர் தோழர் சத்தியமூர்த்தி என்ன செய்தார் தெரியுமா? உதவி வேண்டிய பட்டாளத்தின் வார்த்தைகளைத் தம் காதில் கூடப் போட்டுக்கொள்ள வில்லையாம். “உங்கள் கொள்கை எங்கள் கொள்கைக்கு மாறானது. காங்கரஸ் பேரால் உதவி செய்ய முடியாது. வேண்டுமானால் தர்மத்துக்காக ஒரு நாளைக்குச் சோறுபோடலாம். காங்கரஸ் மண்டபத்தில் தங்க இடம் தரலாம். சலாம் போய் வாருங்கள்” என...

இரண்டும் உண்மையே

இரண்டும் உண்மையே

2.9.36ந் தேதி “எது உண்மை?” என்னும் தலைப்பில் “ஜனநாயகம்” பத்திரிகையில் ஒரு உபதலையங்கம் எழுதப்பட்டு அதில் தோழர் பாண்டியன் அவர்களும், தோழர் மந்திரி ராஜன் அவர்களும் கோவை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் பேசிய பேச்சின் சுருக்கத்தை தனித்தனி எடுத்துப் போட்டு இவற்றுள் எது உண்மை என்று தெரிய ஆசைப்பட்டிருக்கிறது. அதைக் காணும் பொதுமக்களில் சிலராவது மயக்கங்கொள்ளக் கூடுமாதலால் இரண்டும் உண்மையே என்று விளக்க ஆசைப்படுகிறோம். அதாவது தோழர் பாண்டியன் அவர்கள் கோவை மகாநாட்டுக் கூட்டத்தில் ஜில்லா ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களைப் பற்றி பேசுகையில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் “ஜில்லாக்களில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் (குணிட்ஞு) சிலர் நாங்கள் போனபோது எங்களைப்பற்றி லட்சியம் செய்யவில்லை. சிறப்பாக சென்னையில் நாங்கள் போனபோது ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிறிதுகூட உதவி செய்யவில்லை, நாங்களே நோட்டீசு போட வேண்டியிருந்தது, நாங்களே பெஞ்சு நாற்காலி போடவேண்டியிருந்தது, நாங்களே விளக்குக்கு பணம் கொடுக்க வேண்டி வந்தது என்று பேசினார். இது...

காங்கரஸ் அனுபவம்  தொட்டது துலங்காது

காங்கரஸ் அனுபவம் தொட்டது துலங்காது

  ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களை ஏற்று நடத்திய காலத்தில் அவைகளின் நிர்வாகங்கள் ஒழுங்காகவும் குழப்ப மில்லாமலும் இருந்தமையால் அப்போது அவைகள் கலைக்கப்பட வேண்டும் என்று ஒருவரும் கூறியது கிடையாது. அப்படிச் சொல்வதற்கு அவசியமும் ஏற்பட இல்லை. காங்கிரஸ்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களைக் கைப்பற்றி நடத்திய சில காலத்துக்குள்ளாகவே அவர்கள் நிருவாகம் ஒழுங்காகச் செய்ய முடியாமையால் ஜில்லா போர்டுகளைக் கலைத்து விடவேண்டும் என்று தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியும், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் காங்கரஸ் சார்பாகவே சொல்ல முன்வந்து விட்டார்கள். ஆகவே, இதிலிருந்து காங்கரஸ்காரர்களின் நிர்வாகத் திறமையைப் பொது மக்கள் நன்குணர்ந்து கொள்வார்கள். காங்கரஸ்காரர்கள் எந்தப் பதவியைக் கைப்பற்றினாலும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறாதென்பதற்கும், அவர்களுக்கு ஒழுங்காக நிர்வகிக்கத் திறமையில்லை யென்பதற்கும், காரணம் அவர்களுக்குள் கட்டுப்பாடு இல்லாததுதான் என்பதற்கும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? குடி அரசு கட்டுரை 06.09.1936  

காங்கரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கரஸ் ஆர்ப்பாட்டம்

வீண் ஆர்ப்பாட்டம் செய்வதில் பெயர் பெற்றவர்கள் காங்கரஸ்காரர். ஆனால் அந்த ஆர்ப்பாட்டம் கண்ணியமும் பொறுப்பும் வாய்ந்த பதவி வகிப்பவர்களுக்கு அவமதிப்பையுண்டு பண்ணக்கூடியதாயிருந்தால் அதை அறிவாளிகள் ஆதரிக்கவே மாட்டார்கள். இம்மாதம் 2ந் தேதி இந்தியச் சட்டசபையில் காங்கரஸ்காரர் ஆடிய வெளியேற்ற நாடகமானது தலைவரை அவமதிக்கத்தக்கதாயும் அறிவாளிகள் வெறுக்கக் கூடியதாயும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஜவுளியின் இறங்குமதி வரியைச் சட்டசபையைக் கலக்காது குறைத்துவிட்டது சம்பந்தமாக சர்க்கார் நடத்தையைப் பற்றி ஆலோசிப்பதற் காகச் சட்ட சபையின் இதர நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டுமென்று கோவை மெம்பர் தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் ஒரு அவசரப் பிரேரணை கொண்டுவந்தார். தோழர் செட்டியார் பேசியபிறகு எக்கட்சியிலும் சேராத ஸர். கஜ்னாவியும், ஐரோப்பிய மெம்பர் தோழர் ராம்ஸே ஸ்காட்டும் அவருக்குப் பிறகு எக்கட்சியிலும் சேராத ஸர்.ஆர்.எஸ். சர்மாவும் பிரேரணையை எதிர்த்துப் பேசினார்கள். அப்பால் தோழர் கிருஷ்ண காந்த மாளவியாவும் டாக்டர் ஜியாவுதீனும், காங்கரஸ் மெம்பர் பந்தும் பிரேரணையை ஆதரித்துப் பேசினார்கள். தோழர் பந்துவின் பேச்சுக்கு...

காங்கரஸ் நாடகம்  போலி கட்டுப்பாடு

காங்கரஸ் நாடகம் போலி கட்டுப்பாடு

  சென்னை சட்டசபையில் இனாம் மசோதா ஆலோசனைக்கு வந்தபோது அதை ஒத்திவைக்க வேண்டுமென்று வந்த தீர்மானத்தைப் பல காங்கரஸ் மெம்பர்கள் எதிர்த்தார்கள். தோழர் சுப்பராயன் (காங்கரஸ் மெம்பர்) அத்தீர்மானத்தை ஆமோதித்தார். ஆனாலும் காங்கரஸ் சபைதான் கட்டுப்பாடுள்ளதாம். தடி அடி வாழ்த்து காங்கரஸ் தொண்டர்கள் தடியடிபட்ட காலத்தில் போலீஸ் தலைமை உத்தியோகஸ்தரைப் பாராட்டிப் பேசிய தோழர் சுப்பராயன் இன்று காங்கரசுக்கு நண்பர், காங்கரஸ் தலைவர் ஆகிவிட்டார். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை இந்த காரணத்துக்காக காங்கரஸ்காரர்கள் வைகிறார்கள். ஆனாலும் காங்கரஸ்காரர்களுக்குத்தான் நியாய புத்தி இருக்கிறதாம். ~subhead காங்கரஸ் அரசியல் ஞானம் ~shend சீர்திருத்தத்தின்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் புகுந்து சீர்திருத்தத்தை உடைத்து அது நடைபெறவொட்டாமல் செய்ய வேண்டும் என்கின்ற காங்கரஸ்வாதிகள் எந்த யோக்கியதையைக் கொண்டு இனாம் மசோதாவை சீர்திருத்தப்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் நிறை வேற்றலாம் என்று சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும் காங்கரஸ்காரர்களின் அரசியல் ஞானம் இதுதானாம். ~subhead என்ன செய்யப் போகிறார்கள்? ~shend...

காங்கிரசும் வகுப்புவாதமும்

காங்கிரசும் வகுப்புவாதமும்

  இந்தியாவில் காங்கிரஸ் என்பதாக ஒரு இயக்கம் ஏற்பட்ட பிறகே இந்தியாவில் வகுப்புவாதம் என்பதாக ஒரு உணர்ச்சி பல்வேறு மதஸ்தர்களுக்குள்ளும் பல்வேறு வகுப்பாருக்குள்ளும் ஏற்பட்டு அது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆதியில் காங்கிரசானது ஒரு ஐரோப்பிய ஐ. சி. எஸ். கனவானின் முயற்சியாலேயே ஏற்படுத்தப்பட்டது. அவர் பெயர் A.O. ஹியூம் என்பார்கள். அப்படிப்பட்ட காங்கிரசின் கொள்கை பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுபடுத்துதல், சமூக கட்டுப்பாட்டிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் அரசியலிலும் இந்திய மக்களின் வாழ்கையை புதுப்பித்தல், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் என்றும் பிரிக்க முடியாத ஐக்கியத்தை ஏற்படுத்துதல் என்பனவாகும். ~subhead 1892 லேயே வகுப்புவாதம் ~shend இந்தக்கொள்கைகளோடு ஏற்படுத்தப்பட்ட காங்கிரசில் அதுஏற்பட்ட 6,7 வருஷத்துக்குள் வகுப்பு உணர்ச்சிகள் ஏற்பட்டு அதாவது 1892ம் Mத்திலேயே 1892ம்Mத்து இந்திய கவுன்சில் ஆக்ட் என்னும் பேரால் ஒவ்வொரு வகுப்பாருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் பல ஸ்தாபனங்களுக்கும் சர்க்காரே நாமினேஷன் செய்ய அதிகாரம் வைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அரசாங்கத்தார்...

மத நம்பிக்கைக்கு சாவுமணி

மத நம்பிக்கைக்கு சாவுமணி

உலகத்திலே எத்தனையோ, இயக்கங்களும் ஸ்தாபனங்களும் தோன்றி மறைந்துள்ளன; மறைந்து வருகின்றன. சில இயக்கங்களுக்கும் ஸ்தாபனங் களுக்கும் ஒரு காலத்துத் தேவை ஏற்பட்டிருக்கலாம். அத் தேவை மறையும் போது அவை மறைவது இயல்பே. இந்தப் பொதுவிதிக்குக் கட்டுப்படாத இயக்கங்களோ ஸ்தாபனங்களோ உலகத்தில் இல்லவே இல்லை. தற்பொழுது உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்து வருகிறது. ருஷியாவிலே மதம் அழிந்துவிட்டது; ஆலயங்கள் மறைந்துவிட்டன; புரோகிதர், பூசாரிகளும் ஒழிந்துவிட்டனர். அமெரிக்காவில் ஆலயங்கள் இருந்தாலும் ஆலய வழிபாடு செய்வோர் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. பாதிரிமார் செல்வாக்குக் குறைந்துவிட்டதாம். அறிவியக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீப்போல் பரவி வருகிறதாம். துருக்கியிலும் மத ஆதிக்கம் ஒழிந்துவிட்டது. ராஜாங்கத்துக்கும் மதத்துக்கும் இருந்த தொடர்பு அறுபட்டு விட்டது. மதத்தின் ஸ்தானத்தைப் பகுத்தறிவு கைப்பற்றி விட்டது. இவ் வண்ணம் உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்துவரக் காரணமென்ன? காரணங்கள் இரண்டு; ஒன்று தேசீய சம்பந்தமானது; மற்றொன்று சதாசாரச் சார்புடையது. மதக்கொள்கைகளும்...

சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி

சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி

  தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியின் தேசீயம், அவரது மூளை போலவே விசித்திரமானது; கோணல்மாணலானது. இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கில கவர்னர்களுக்குப் பல்லாண்டு பாடலாம்; உபசாரப் பத்திரமளிக்கலாம்; ஆனால் ஒரு இந்திய கவர்னரைப் பாராட்டவோ, உபசரிக்கவோ கூடாதென்று அவர் சென்னைக் கார்ப்பரேஷனில் வெளுத்து வாங்கியதை இந்தியர்கள் மறந்திருக்கமாட்டார்கள். ஜஸ்டிஸ்கட்சி மீதுள்ள வெறுப்பினால் ஒருகால் அவர் அவ்வாறு உளறிக்கொட்டியிருக்கக் கூடும்; அதனால் அவருடைய தேசீயக் கற்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடாது எனப் பலர் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவரது பம்பாய்ப் பேச்சு அவரது உண்மைச் சுயரூபத்தை சந்தேகத்துக்கு இடமின்றி விளக்கிக் காட்டிவிட்டது. கடுகத்தனை இந்திய பற்றாவது அந்த ஆசாமிக்கு இல்லை யென்பதை அவரது பம்பாய்ப் பேச்சு நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறது. “குடியாட்சியும் தடியாட்சியும்” என்னும் பொருள் பற்றி தோழர் சத்தியமூர்த்தி பம்பாயில் நிகழ்த்திய ஒரு பிரசங்கத்தின்போது அவர் வாந்தியெடுத்த சில அபிப்பிராயங் களைப் பார்த்து சுயமரியாதையுடைய இந்தியர்கள் கலக்கம் கொள்ளாமலும் கண்ணீர் வடிக்காமலும் இருக்கமாட்டார்கள்....

கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா?

கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா?

  காங்கிரஸ்பேரால் திருச்சி நகரசபைத் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப்பட்ட தோழர் ரத்னவேலுத் தேவரை ஆதரியாத காங்கிரஸ் மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டியார் தீர்ப்புக்கூறி யிருக்கிறார்கள். ஆனால் நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தோழர் பொன்னய்யா பிள்ளை, திருச்சி ஜனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தாம் மெம்பர் பதவியையோ, தலைவர் பதவியையோ ராஜிநாமாச் செய்யப் போவதில்லையென்றும் வேண்டுமானால் காங்கிரசிலிருந்து விலகிவிட தயார் என்றும் மார் தட்டிக் கூறுகிறார். இதற்காக ஒரு காங்கிரஸ் தினசரி ஜஸ்டிஸ் கட்சி மீது பழி சுமத்துகிறது. “ஸ்தல ஸ்தாபனங்களில் 15 வருஷங்களாக ஜஸ்டிஸ்கட்சி இருந்திருந்தும் ஸ்தல ஸ்தாபன ராஜீய வாழ்க்கை இவ்வளவு மோசமாயிருப்பது ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையைக் காட்டுகிறது” என அப்பத்திரிகை குருட்டுத்தனமாக எழுதியிருக்கிறது. ஸ்தல ஸ்தாபன விஷயங்களில் அரசியலைப் புகுத்தக் கூடாதென்பது ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கை. இதுவரை ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களில் ஜஸ்டிஸ்கட்சி பேரால் அபேட்சகர்கள் நிறுத்தப்படவுமில்லை. “ஜஸ்டிஸ்” கொள்கையை ஆதரிப்பவர்கள் தம் சொந்த ஹோதாவிலேயே நின்று...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

வருகிறது, வருகிறது, வரப்போகிறது, வரப்போகிறது என காங்கிரஸ் காரர்களால் பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை கடைசியாக வந்தேவிட்டது. பெரிய தேச பக்தர்களும் அரசியல் ஞானிகளும் பாஷ்யகாரர்களும் வெகுநாள் மூளைக்கு வேலை கொடுத்து அவ்வறிக்கையைத் தயார் செய்தார்களாம். அவ்வாறு வருந்தி உருவாக்கப்பெற்ற அறிக்கையோ இன்னந் தெரியமுடியாத விகார ரூபமுடையதாயிருக்கிறது. அதன் திணை பால் முதலியவைகளை நிர்ணயம் செய்வது வெகு கஷ்டமாக இருக்கிறது. “ஜஸ்டிஸ்” திட்டத்தின் சாயல் ஒருபக்கம் சாடையாகத் தெரிகிறது. சோஷியலிஸ்டு மணமும் ஒருபக்கம் வீசுகிறது. எல்லா கட்சியாரையும் திருப்திப்படுத்தும் இந்திரஜால வித்தையும் அறிக்கை முழுதும் நேர்முகமாயும் மறைமுகமாகவும் தாண்டவமாடுகிறது. சென்ற புதன்கிழமையன்று சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தோழர் சத்தியமூர்த்தி பேசியபோது “அதிதீவிர அபேதவாதியான பண்டித ஜவஹர்லால் முதல், பதவியேற்பதை ஆதரிக்கும் நான் வரையில் எல்லாரும் இந்த தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்கள்” எனப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரர் தற்பொழுது ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி இருந்துவருகின்றனர். தற்கால...

காங்கிரஸ் கட்டுப்பாடு

காங்கிரஸ் கட்டுப்பாடு

காங்கிரஸ் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று புலம்பிக் கொண்டு காங்கிரஸ்காரர் வெகு கட்டுப்பாட்டுக்காரர்கள் போல் பறை அடித்துக் கொள்ளுகிறார்கள். காங்கிரசுக்காரர்கள் எதில் கட்டுப்பாடாக இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டுகிறோம். காங்கிரஸ் மெம்பர் முறையில் கட்டுப்பாடுண்டா? கதரில் கட்டுப்பாடுண்டா? மெம்பர்கள் சேர்ப்பதில் கட்டுப்பாடுண்டா? அன்று; அன்று. அவசரத்துக்கு ஆள் பிடிப்பதுபோல் யாரையும் சேர்த்துக்கொள்கிறார்கள். மெம்பர்கள் நாணயத்தில் கட்டுப்பாடு இல்லை. அதைப்பற்றி விசாரிப்பதில், கவலை கொள்ளுவதில் கட்டுப்பாடு இல்லை. தோழர் டாக்டர் ராஜன் காங்கிரஸ் கட்டளையை மீறி நடந்துவிட்டு காங்கிரஸ் நன்மைக்கு ஆகவே மீறினேன் என்றார். டாக்டர் டி.எஸ்.எஸ்.சாஸ்திரியும் காங்கிரஸ் கட்டளையை மீறிவிட்டு காங்கிரஸ் நன்மையை உத்தேசித்தே அப்படி செய்தேன் என்கிறார். ஸ்தல காங்கிரஸ் கமிட்டி தலைவர், மேற்படி இருவரும் காங்கிரஸ் கட்டுப்பாட்டை மீறிவிட்டார்கள் என்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வைஸ் பிரசிடெண்டும் காரியதரிசியும் டாக்டர் ராஜன் செய்தது அக்கிரமம் என்கிறார்கள். பத்திரிகைகள் எல்லாம் ஒரே அபிப்பிராயமாக டாக்டர்கள் ராஜனையும் சாஸ்திரியையும் குற்றம் சாட்டுகின்றன. அப்படி...

பொள்ளாச்சி, கோவை  சுற்றுப் பிரயாணம்

பொள்ளாச்சி, கோவை சுற்றுப் பிரயாணம்

  தலைவர் அவர்களே! தோழர்களே! அடுத்த வருஷ ஆரம்பத்தில் அமுலுக்கு வரப்போகும் சீர்திருத்தத்தில் பல பதவிகளும், அதிகாரங்களும் கொழுத்த சம்பளங்களும் கிடைக்கப் போகின்றன என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அவற்றை யார் அனுபவிப்பது என்பது பார்ப்பனர்கள் மாத்திரமா அல்லது எல்லா மத வகுப்பாரும் விகிதாச்சாரமா என்பதுதான் இப்போது அரசியல் கிளர்ச்சியாக இருந்து வருகிறது. அதிலும் இத்தனை நாள் மகா தியாகிகள் போல் நடித்து வந்த காங்கிரஸ்காரர்கள் இப்போது புது அரசியல் சீர்திருத்தம் வெளியானவுடன் எப்படியாவது அந்தப் பதவிகளைப் பெற்று அதிகாரம் செய்து சம்பளங்களை அடையவேண்டும் என்கின்ற ஆத்திரத்தில் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள். என்ன செய்தாவது எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றியாவது பதவி பெறவேண்டியது இன்று காங்கிரசின் ஜீவாதாரமான கொள்கையாக இருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் பதவி மோகத்தில் தங்களுடைய கொள்கை, நாணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டு “பிசாசு”கள் போல் பதவி ஆசைபிடித்து அலைகிறார்கள். உத்தியோகத்துக்கும் பதவிக்கும் சம்பளத்துக்கும் ஆசைப்பட யாருக்கும் உரிமை உண்டு என்பதை...

1926ஆண்டுநாடகமே இப்போதும்

1926ஆண்டுநாடகமே இப்போதும்

“வெளியேறிய நேருவின் வீரமொழி” 1924ம் வருஷம் காங்கிரசுக்காரர்கள் இன்றையப் பித்தலாட்டம் போலவே பித்தலாட்டம் செய்து இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு ஒரு வேலையும் செய்ய முடியாமல் 3வருஷ காலம் இருந்துவிட்டு சட்டசபை காலாவதி முடிய ஒரு வாரம் இருக்கும் போது “சட்டசபைகளை விட்டு வெளியேறுகிறோம்” என்று சொல்லிக்கொண்டு “வெளியில் வந்து” விட்டார்கள் என்பது யாவரும் அறிந்திருக்கலாம். ஆனால் அந்த வெளியேறுகிற காலம் வரையில் சட்டசபை கமிட்டிகளில் அங்கம் பெற்றார்கள், பெரும் சம்பளம் பெற்றார்கள், சட்டசபை நடவடிக்கை களுக்கு விகிதாச்சார பங்கும் பெற்றார்கள். இவ்வளவும் பெற்று 3 வருஷம் வாழ்ந்துவிட்டு கடைசியாக போலி வெளியேற்றம் செய்தபோது தோழர் பண்டிட் மோதிலால் நேரு அவர்கள் என்ன சொன்னார் என்பதை சற்று யோசித்துப்பார்க்கும்படி இப்போது வெளியிடுகிறோம். ~subhead வெளியேறிய நேருவின் வீரமொழி ~shend “சர்க்காரை நாங்கள் பயமுறுத்தவில்லை. சர்க்காருக்கு மகத்தான சக்தியும் அதிகாரங்களும் உண்டு. சர்க்காரை எதிர்க்கும் பலம் எங்களுக்கில்லை. தேசத்தில் உள்ள சமூக வேற்றுமையால்...

காங்கிரசும் பார்ப்பனீயமும்

காங்கிரசும் பார்ப்பனீயமும்

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் கை ஆயுதமென்று நாம் இந்த பத்து பன்னிரண்டு வருஷகாலமாக கூறி வந்திருக்கிறோம். காங்கிரசில் மிக்க பக்தியுடனும் உண்மையான கவலையுடனும் ஊக்கத்துடனும் உழைத்து வந்த தோழர் ஈ.வெ.ராமசாமி போன்றவர்கள் இதை அதாவது காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்பதை உண்மையாய், சந்தேகமற உணர்ந்ததினாலேயே காங்கிரசை விட்டு வெளியில் வந்து காங்கிரசின் மூலம், பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெறாமல் இருப்பதற்குத் தங்களாலான முயற்சிகள் எல்லாம் செய்து காங்கிரசையும் பார்ப்பனச் சூழ்ச்சிகளையும் தோற்கடித்தே வந்திருக்கிறார்கள். பார்ப்பனர்களும் காங்கிரசின் பேரால் பிழைக்கிறவர்களும் காங்கிரசின் சார்பில் நடக்கும் பத்திரிகைகளும் பூனையானது கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகோர் கண்களும் மூடப்பட்டிருக்குமென்று கருதிக் கொள்ளும் பாவனை போல் இன்று பார்ப்பனர்கள் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றுவிட்டது, வெற்றிபெற்றுவிட்டது, வெள்ளைக்காரர்கள் கையிலிருந்து ராஜ்யம் பிடுங்கப்பட்டாய் விட்டது, அதோ சுயராஜ்ய தேவி தோன்றி விட்டாள், இதோ பாரதத் தேவி கைவிலங்கு உடைபட்டுவிட்டது என்பன...

சாரதா சட்டத் திருத்த மசோதா  லண்டனில் ஆதரவு  பிரபலஸ்தர்கள் அறிக்கை

சாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு பிரபலஸ்தர்கள் அறிக்கை

  லண்டன், ஆகஸ்டு 4. இந்திய சட்ட சபையில் கொண்டு வரப்பட்டிருக்கும் சாரதா சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து, பிரிட்டிஷ் காமண்வெல்த்து லீக் சார்பாக லார்டு லோதியன், வைகொண்டஸ் ஆஸ்டர் உள்ளிட்ட 9 பிரபலஸ்தர்கள் “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த திருத்த மசோதா மிகவும் அவசியமான தென்றும் தற்கால சாரதா சட்டத்தினால் அது விரும்பிய பலன் ஏற்படவில்லையென்றும் இந்தியச் சட்டசபை அந்த மசோதாவை கட்டாயம் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பு : லண்டனில் இருக்கும் பிரபலஸ்தர்கள் சாரதா சட்ட திருத்த மசோதா விஷயத்தில் மிக்க சிரத்தை காட்டுகிறார்கள். ஆனால் இந்தியாவின் ஏக பிரதிநிதி ஸ்தாபனம் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸோ, பிரஸ்தாப மசோதா விஷயமாக மௌனஞ் சாதித்தே வருகிறது. இப்பொழுது இந்திய சட்ட சபையில் ராவ் பகதூர் எம்.ஸி. ராஜாவின் ஒடுக்கப்பட்டோர் சிவில் உரிமைப் பாதுகாப்பு மசோதாவும், டாக்டர் தசமுகரின் மாதர் வார்சுரிமை மசோதாவும், பிரஸ்தாப...

திருச்சி நீதி

திருச்சி நீதி

டாக்டர் ராஜன் திருச்சி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் இருந்து விலகி காங்கிரசுக்கு எதிராய் முனிசிபல் தேர்தலுக்கு நின்றவர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆக தனக்கு இஷ்டமில்லாத நிலையில் தன் மனச்சாட்சிக்கு விரோதமாய் காங்கிரசில் போலிக் கையெழுத்துப்போட்டு முனிசிபல் கவுன்சிலரானவர். இப்படிப்பட்ட இவருக்கு காங்கிரஸ் காரியக்கமிட்டியைப் பற்றி பேச என்ன நியாயம் உண்டு என்பது நமக்கு விளங்கவில்லை. நிற்க, டாக்டர் ராஜனுக்கும் தோழர் தேவருக்கும் ஏற்கனவே சொந்த மனஸ்தாபம் இருப்பதாய் சேர்மென் தோழர் பொன்னய்யா அவர்களே தனது பேச்சில் சொல்லியிருக்கிறார். எனவே டாக்டர் ராஜன் தேவரிடம் உள்ள தனது சொந்த விரோதத்துக்கு ஆக பழி தீர்த்துக்கொள்ள காங்கிரசுக்குள் தேர்தலின்போது கையெழுத்துப் போட்டு வந்து புகுந்ததுமல்லாமல் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள வகுப்பு மாச்சரியத்தை (அதுவும் கொஞ்ச காலமாக மறைந்து போயிருந்ததை) கிளப்பிவிட்டு கிறிஸ்தவர்களையும் கிளப்பிவிட்டு பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முனிசிபல் தேர்தலில் தேவரை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவே பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆகவோ ஒருவரை...

ராஜிநாமா நாடகம்

ராஜிநாமா நாடகம்

வேறு என்ன செய்தால் வண்டவாளம் மறையும்? தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரவர்கள் காங்கிரஸ் கமிட்டிகளிலிருந்து ராஜிநாமா கொடுத்துவிட்டதாக 11836ˆ ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அவ்வறிக்கையில் “இன்றிலிருந்து சென்னையிலோ அல்லது வெளியிடங்களிலோ உள்ள எந்தக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என என் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து ஆச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் சம்மந்தத்திலிருந்தே விலகிக் கொண்டதாக அர்த்தமாவதில்லை. நிர்வாக பதவிகளிலிருந்து மாத்திரம் விலகிக் கொண்டதாக அர்த்தமாகிறது. ஆனால் தோழர் காந்தியாரோ இரண்டு வருஷத்துக்கு முன்னதாகவே காங்கிரஸ் நிர்வாக சம்மந்தத்திலிருந்து விலகிக் கொண்டது மாத்திரமல்லாமல் காங்கிரசில் ஒரு நாலணா மெம்பராகக்கூட இருக்க இஷ்டமில்லை என்று விலகிக்கொண்டதாக விளம்பரப்படுத்தினார். அது சமயமும் அவரால் ராஜிநாமாவுக்கு காரணங்கள் காட்டப்பட்டதில் “காங்கிரசிலுள்ள சிலர் நடந்து கொள்ளும் காரியம் தனக்குப் பிடிக்கவில்லை” என்பதையும் ஒரு காரணமாய் காட்டினார் என்றாலும் காங்கிரஸ் பக்தர்கள் என்பவர்களுக்கும் காந்தியாருக்கும் நடந்த “பிரிவு” கட்டமானது நாடகங்களில் காட்டப்படும்...

தீண்டாமையும் இஸ்லாமும்

தீண்டாமையும் இஸ்லாமும்

  இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத் திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது...

உடைப்பதா அனுபவிப்பதா?

உடைப்பதா அனுபவிப்பதா?

1937 ஏப்ரலில் அனுபவத்துக்கு வரப்போகும் சீர்திருத்தத்தை உடைப்பது என்பது காங்கிரஸ்காரர்களின் கொள்கை என்று சொல்லி மக்களை இதுவரை காங்கிரஸ்காரர்கள் ஏமாற்றி வந்தார்கள். அந்தப் பிரச்சினையை முக்கியமாய் வைத்தே காங்கிரஸ்காரர் இந்திய சட்டசபைக்கும் போனார்கள். ஆனால் அங்கு சென்று அது விஷயமாய் யாதொரு காரியத்தையும் செய்யாமல் தாங்கள் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்வதற்கு ஆகவே அவர்களது முழுநேரமும் செலவிட வேண்டியதாய் விட்டது. அதே தன்மையின் மீது ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சென்றார்கள். அங்கும் அவர்கள் இல்லாதிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று காட்டிக் கொண்டார்களே தவிர ஒரு காரியமும் புதியதாய் செய்யவில்லை. அன்றியும் ஒருவரோடொருவர் போரிட்டவண்ணமாய் இருக்கிறார்கள். இனிவரப் போகும் சட்டசபைக்கும் நிற்கப்போகிறார்கள். ஆனால் நல்ல வேளையாய் அதற்கு என்ன கொள்கை? என்ன பிரச்சினையின் மீது நிற்பது? பொது ஜனங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுப்பது? அங்கு போய் என்ன செய்வது? என்கின்ற விஷயங்களில் இதுவரை யாதொரு முடிவும் இல்லாமல் “பலசரக்கு கடைக்காரனுக்குப் பைத்தியம்...

காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல்

காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல்

இப்போதுதான் புத்தி வருகிறது காங்கிரஸ் 1920ம் வருஷம் வரை அதாவது சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடந்து சீர்திருத்தம் பெறுவது என்கிற கொள்கையின் மீது கிளர்ச்சி செய்து பதவி அதிகாரம் முதலியவை பெறுவது என்கின்ற திட்டத்தில் வேலை செய்து வந்தவரை நிர்வாகம் அதிகமான ஊழல் இல்லாமல் நடந்துவரத் தக்கதாய் இருந்தது. ஆனால் அந்த நிருவாகம் பார்ப்பனரல்லாதார் இயக்க மூலம் பார்ப்பனரல்லாதார் கைக்கு மாறிய உடன் இனி சட்டப்படி ஒழுங்குக்கு கட்டுப்பாட்டு யோக்கியமான முறையில் கிளர்ச்சி செய்தால் தங்கள் கைக்கு நிர்வாகம் வரமுடியாது என்றும் தங்கள் வகுப்பார்களே ஏகபோகமாய் அனுபவிக்க முடியாது என்றும் கருதிய பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு புதிய கொள்கை ஏற்படுத்தி அதாவது சட்டம் மீறுவது, சட்டம் மறுப்பது, சர்க்கார் உத்திரவுகளை அலட்சியம் செய்வது முதலிய கொள்கைகளை ஆதரவாய் கொண்டு ஒழுங்கு விரோதமான முறைகளைக் கையாண்டு கிளர்ச்சி செய்வது என்பதற்கு ஏற்ற திட்டத்தில் கிளர்ச்சி செய்து வந்ததின் பயனாய் காங்கிரசில் கட்டுப்பாடு நாணயம் என்பன...