Category: பெரியார் முழக்கம் 2019

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

23.02.19 அன்று செஞ்சி யில் ‘பெரியார் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்ட செயலாளர்) தலைமையில்  நடைபெற்றது.  மாவட்டக் கழகத் தலைவர் பூஆ.இளைய ராசன் வரவேற்புரையாற்றி னார். நிகழ்ச்சியில்   பழங்குடி மக்கள் முன்னணி சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க. சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப் பாண்டியன் ,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே மணி மற்றும்  தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்ச்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்தத் தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கு நம்...

முகிலன் எங்கே?  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் படுகொலை குறித்த ஆவணங்களை கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட சூழலியல் போராளி முகிலன் அன்றிரவே காணமல் போனார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, “தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!” என்ற முழக்கத்தோடு 27.2.2019 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் முகிலன் காணாமல் போனதற்கு எடப்பாடி அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்ற கண்டன முழக்கங்களோடு துவங்கிய ஆர்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தமிழர் விடுதலைக் கழகம் சௌ.சுந்தரமூர்த்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆ.சா.உமர் பாருக், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித்...

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக கூட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை மக்களிடையே எடுத்துரைக்கும் விதமாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள மாயவரம் பகுதியில் 24.2.2019 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சி.எம்.  நகர் பிரபு தலைமையேற்க, சீ.ரா .சௌந்தர், பி. கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு வீரா கார்த்தி சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும், மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெய பாண்டி, விஜயகுமார், பிடல் சேகுவேரா, சத்யராஜ், குமார், கமலக்கண்ணன், கிருஷ்ணன், பிரபு, விஜயரத்தினம், எழிலன். கூட்டத்தின் முடிவில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டு செல்லும் விதத்தில் தொடர்...

கூட்டணிக்கு திகில் நிறைந்த திரைக் கதைகள்

கூட்டணிக்கு திகில் நிறைந்த திரைக் கதைகள்

மோடி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று மருத்துவர் இராமதாசிடம் ‘நியூஸ் 18’ தொலைக் காட்சி பேட்டியில் கேட்டபோது ‘சைபர்’ மார்க்குக்கும் கீழே போடுவேன் என்றார், மருத்துவர் இராமதாஸ். ‘கழகங்களின் கதை’ என்று எடப்பாடி ஆட்சியின் ஊழல்களைத் தொகுத்து நூலாக்கி, ஆளுநரிடம் தந்து ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியதும் அதே பா.ம.க.தான்! இவையெல்லாம் 5 ஆண்டுகள் முன்போ, 2 ஆண்டு களுக்கு முன்போ நடந்தவை அல்ல; சில மாதங்களுக்கு முன்னால்! இப்போது மீண்டும் மோடி ஆட்சியே வரவேண்டும் என்று வாக்கு கேட்க வருகிறது பா.ம.க. மோடி எடப்பாடி ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்று கூட்டணியில் ஒன்று சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறது. இதை நியாயப் படுத்த அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள்…. அப்பப்பா… காதில் புகை வருகிறது! “அதே பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் நாங்கள் கைகோர்த் திருப்பது இழந்த உரிமைகளை மீட்பதற்குத்தான். வெளியி லிருந்து கொடுத்தக் குரலை கூட்டணியில் இணைந்து வலியுறுத்தவிருக்கிறோம்” என்கிறார்...

வடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா!

வடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா!

தமிழகமே மோடியின் பக்கம் திரண்டு நிற்கிறது, என்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அந்தக் கட்சிக்கு அவர்கள் ஒதுக்கியிருக்கிற சீட்டுகள் 5 மட்டும் தான். “இதுவே எங்கள் கட்சிக்கு ரொம்ப ரொம்ப அதிகம்” என்று மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. வட்டாரம். ஜி.எஸ்.டி. வரியானாலும், புயல், இயற்கை சீற்றப் பேரிடர் நிவாரண நிதியானாலும் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை நடுவண் ஆட்சி தரவில்லை என்று பட்ஜெட் உரையில் பட்டியலிட்டார் முதல்வர் எடப்பாடி! அரசுகளுக்கிடையிலான உறவுகளைத் தவிர, அ.இ.அ.தி.மு.க.வுக்கும் – பா.ஜ.க.வுக்கும் கட்சி ரீதியாக உறவுகள் கிடையாது என்று நேற்று வரை பேசினார்கள்; பேட்டி அளித்தார்கள். பா.ஜ.க.வை நாங்கள் ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என்று கேட்டவர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் அ.இ.அ.தி.மு.க. எம்.பி. தம்பித் துரை! இப்போது அதே கட்சியைத் தலையில் தூக்கிச் சுமக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் முழுவதும் தலையில் மோடியைத் தூக்கிக் கொண்டு வரப் போகிறார்கள். காவிரிப் பிரச்னையில், நீட்...

அதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி: கேரள அரசு எதிர்ப்பு

அதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி: கேரள அரசு எதிர்ப்பு

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ‘தாரை’ வார்த்துவிட்டது மோடி ஆட்சி. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்குவதை எதிர்த்து மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். “இந்த விமான நிலையம் கட்டுவதற்காக 635 ஏக்கர் நிலத்தை கேரள அரசு இலவசமாக வழங்கியிருக்கிறது. 2005ஆம் ஆண்டும் விமான நிலையத்தை விரிவாக்க மேலும் 23.57 ஏக்கர் நிலத்தை அளித்தோம். விமான நிலையத்தை அரசு தனியாருக்குத் தர முடிவெடுத்தால் மாநில அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். மாநில அரசு இலவசமாக வழங்கிய நிலத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று மாநில அரசு ‘இந்திய விமான நிலையத்துக்கான குழுமத்துடன்’ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் துறையில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத அதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை கையளிப்பதை ஏற்க முடியாது. அப்படி விமான நிலையத்தை கை கழுவ...

மறைக்க முடியாது; மக்கள் பாடம் புகட்டுவார்கள் தேசிய வெறிக்குப் பின்னால் பதுங்குகிறார், மோடி

மறைக்க முடியாது; மக்கள் பாடம் புகட்டுவார்கள் தேசிய வெறிக்குப் பின்னால் பதுங்குகிறார், மோடி

அய்ந்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி மாபெரும் ரஃபேல் ஊழலையும் செய்துவிட்டு மாநில உரிமைகளை நசுக்கி விட்டு போர் வெறியையும், தேசிய வெறியையும் தேர்தலுக்காகத் தூண்டுகிறார் மோடி ! இந்த தேசிய வெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது…. எதை? எதை? *     ரஃபேல் விமான பேர ஊழல். *     செல்லாத நோட்டில் செத்து மடிந்த உயிர்கள். *     பண மதிப்பு நீக்கத்தால் நொடித்துப்போன தொழில்கள், இழந்த வேலைவாய்ப்புகள். *     ஜி.எஸ்.டி. எனும் வரிவிதிப்பால் நிர்மூலமாகிப்போன தொழில் துறை. *     வேலை வாய்ப்பு வீழ்ச்சியில்1970-களின் நிலைமைக்கு சென்று விட்ட இந்தியா. *     நீட் தேர்வு என்ற பெயரில் நொறுக்கப்பட்ட ஏழை மாணவர் களின் மருத்துவ கனவு. *     அனிதாவின் உயிர். *     ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், சி.பி.அய்., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் காவி...

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை வைத்து பெங்களூரில் கூட்டம் நடத்தினார், இந்து குழுமத் தலைவர் ராம். அவர் அங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு: “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக வும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாராட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டி யுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற் கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராமால் இலங்கையின் முன்னாள் அதிபர் இராசபக்சேவிடம் கேட்கப் பட்டதாகும். வாகனத்தை ஓட்டினால் தூசி படியத் தான் செய்யும். அதற்காக வாகனத்தை ஓட்டாமல் இருக்க முடியாது. வாகனத்தை ஓட்டிவிட்டு தூசியைத் துடைக்க வேண்டும் என்று சொல்வது போல் இராசபக்சே நடத்திய போரும், அவர் அதை முடிவுக்கு கொண்டு வந்ததையும் அதைக் கொண்டு வந்த விதத்தையும் அங்கீகரித்த வண்ணம் அதனால் படிந்துகிடக்கும் ’தூசி’ பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது என்றும் என்.ராம் சொல்கிறார். எந்த சட்டமன்றத்தில் அனைத்துக்...

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

திருமண மந்திரங்கள் :  மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

திருமண மந்திரங்கள் : மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

பிராமணப் புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங் களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா? இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத சமஸ்கிருத அறிஞர்.. “சோமஹ  ப்ரதமோவி  வித   கந்தர்வ  விவிதே   உத்ரஹ த்ருதியோ  அக்னிஷ்டே  பதிஷ்   துரியஷ்தே  மனுஷ்ய   ஜாஹ” இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா...

‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ்

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ் தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள் வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள் கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு 10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல் மோடி பூமியின் காவலரா? பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363

7 தமிழர் விடுதலை: மார்ச் 9 மனித சங்கிலி போராட்டத்தில் கழகத் தோழர்களே,  குடும்பம் குடும்பமாக பங்கேற்பீர்!

7 தமிழர் விடுதலை: மார்ச் 9 மனித சங்கிலி போராட்டத்தில் கழகத் தோழர்களே, குடும்பம் குடும்பமாக பங்கேற்பீர்!

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி, மார்ச் 9 ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடக்க இருக்கிறது. தமிழக அமைச்சரவை முடிவுக்குப் பிறகு ஒப்புதல் தர வேண்டிய தமிழக ஆளுனர் நெறிமுறைகளுக்கு மாறாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நசுக்கி வருவதைக் கண்டித்து நடக்கும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

முன்னேறிய ஜாதிப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது நடுவண் ஆட்சி; ஆனால் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களாக பார்ப்பனர் உயர்ஜாதியினர் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் இருப்பதை அண்மை யில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இவை: இந்தியன் ‘இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட்’ (அய்.அய்.எம்.) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் 784 பேராசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதில் ‘தலித்’ பிரிவைச் சார்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே. பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர் – 2 பேர் மட்டுமே. பிற்படுத்தப்பட் டோர் 784 பதவிகளில் 27 பேர் மட்டுமே. மொத்த பேராசிரியர் பதவிகளில் தலித், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் 6...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (9) ‘பெரியார் பொன்மொழி’ நூலுக்குத் தடை: சிறை

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (9) ‘பெரியார் பொன்மொழி’ நூலுக்குத் தடை: சிறை

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். சென்ற இதழ் தொடர்ச்சி பெரியார் கருத்துகளைத் தொகுத்து வெளி யிடப்பட்ட ‘பெரியார் பொன்மொழிகள்’ என்ற நூலுக்கு 1947ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. பெரியார் மீது ‘வகுப்பு நிந்தனை’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து பெரியார் கைது செய்யப்பட்டார். ‘பொன்மொழிகள்’ என்ற கருத்துகளின் தொகுப்பை ஒரு பதிப்பகம் நூலாக வெளியிட்டதற்கே பெரியார், அரசின்  அடக்குமுறைகளை சந்திக்க வேண்டி யிருந்தது. இந்த  பொன்மொழிகள் நூலை வெளியிட்டது – திருச்சியில் திராவிட மணி பதிப்பகத்தை நடத்தி வந்த தோழர் டி.எம். முத்து. இப்படி ஒரு தொகுப்பு நூல் வெளி வரப் போவது குறித்து பெரியாருக்கே தெரியாது. வெவ்வேறு காலகட்டங்களில் அவர் பேசியதை, டி.எம். முத்து, பெரியார் நடத்திய ஏடுகளிலிருந்து...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (2) மதத்தைக் காப்பாற்ற உங்கள் கடவுள் வர மாட்டாரா? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (2) மதத்தைக் காப்பாற்ற உங்கள் கடவுள் வர மாட்டாரா? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். முதல் பகுதி கேள்வி : ‘தாலி’ அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலி யோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் தைரியம் உண்டா? பதில் : கேள்வியே தவறானது. ‘தாலி அகற்றும் போராட்டம்’ என ஒன்று எக்காலத்திலும் நடத்தப்படவில்லை. நிற்க. ‘தாலி’ பற்றிய பெரி யாரின் கருத்தென்பது, பெண்ணடிமை ஒழிப்பை மையமாகக் கொண்டது. இந்து திருமணச் சட்டப்படி, ஓமம் வளர்த்து, தீயை வணங்கி, ஏழுமுறை சுற்றி வந்து, தாலி கட்டி, நீரை வார்த்து, அதாவது பெண்ணை ஆணுக்கு ஒரு பொருளாகத் ‘தானம்’ கொடுப்பதாக சட்டத்தில் இருந்து வந்தது. இந்த முறை, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே காட்டுவதாக உள்ளதால், இதனை எதிர்த்து சுயமரியாதைத்...

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை வைத்து பெங்களூரில் கூட்டம் நடத்தினார், இந்து குழுமத் தலைவர் ராம். அவர் அங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு: “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக வும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாராட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டி யுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற் கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராமால் இலங்கையின் முன்னாள் அதிபர் இராசபக்சேவிடம் கேட்கப் பட்டதாகும். வாகனத்தை ஓட்டினால் தூசி படியத் தான் செய்யும். அதற்காக வாகனத்தை ஓட்டாமல் இருக்க முடியாது. வாகனத்தை ஓட்டிவிட்டு தூசியைத் துடைக்க வேண்டும் என்று சொல்வது போல் இராசபக்சே நடத்திய போரும், அவர் அதை முடிவுக்கு கொண்டு வந்ததையும் அதைக் கொண்டு வந்த விதத்தையும் அங்கீகரித்த வண்ணம் அதனால் படிந்துகிடக்கும் ’தூசி’ பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது என்றும் என்.ராம் சொல்கிறார். எந்த சட்டமன்றத்தில் அனைத்துக்...

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

திருமண மந்திரங்கள் :  மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

திருமண மந்திரங்கள் : மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

பிராமணப் புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங் களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா? இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத சமஸ்கிருத அறிஞர்.. “சோமஹ  ப்ரதமோவி  வித   கந்தர்வ  விவிதே   உத்ரஹ த்ருதியோ  அக்னிஷ்டே  பதிஷ்   துரியஷ்தே  மனுஷ்ய   ஜாஹ” இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2019 இதழ்

தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள் வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள் கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு 10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல் மோடி பூமியின் காவலரா? பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 பெரியார் முழக்கம் 28022019 இதழ்

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

முன்னேறிய ஜாதிப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது நடுவண் ஆட்சி; ஆனால் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களாக பார்ப்பனர் உயர்ஜாதியினர் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் இருப்பதை அண்மை யில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இவை: இந்தியன் ‘இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட்’ (அய்.அய்.எம்.) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் 784 பேராசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதில் ‘தலித்’ பிரிவைச் சார்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே. பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர் – 2 பேர் மட்டுமே. பிற்படுத்தப்பட் டோர் 784 பதவிகளில் 27 பேர் மட்டுமே. மொத்த பேராசிரியர் பதவிகளில் தலித், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் 6...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (1) ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (1) ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். கேள்வி: ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று ‘பிராமணனையே’ குறி வைக்கின்றீர்களே… தமிழகத்தில் ‘பிராமணரைத்’ தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா? அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா? பதில் : ‘பிராமணர் என்பது ஜாதி அல்ல; இது ‘வருணம்’ ஆகும். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருண பேதங்களில் தலைமைத்துவம் தாங்கி, சாதிப் பாகுபாடுகளை உருவாக்கி மக்களை இழிவுபடுத்தி வருவதே ‘பிராமண’ வருணமாகும். பிரம்மாவின் முகத்தில் இருந்து தோன்றியதாகக் கூறப்படும் ‘பிராமண வருணத்தாருக்கு’ ஏனையோர் பணி செய்து கிடப்பதே கடமையாகும் என்பதால், கீழுள்ள அனைவரும், அவர்தம் சாதிகளும், பிராமணரின் ஏவலர்களாக, ஒரே வர்ணமாக ‘சூத்திரர்கள்’ எனக் குறிக்கப்பட்டு விட்டனர். ‘சூத்திரர்கள் யார்’ என மனுதர்ம சாஸ்திரத்தில் ஏழு வகையாக எழுதப்பட்டு,...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (8) வைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன்  சிறையில் வேலை செய்தார் பெரியார்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (8) வைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன் சிறையில் வேலை செய்தார் பெரியார்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. (கடந்த இதழில் வெளியான பெரியார் உரையின் தொடர்ச்சி.) ஈரோட்டிலே நான்  தேவஸ்தானக் கமிட்டித் தலைவனாக இருந்த போது, நான் ஊரில் இல்லாத ஒரு நாளில் தோழர்கள் பொன்னம்பலமும், குருசாமியும், இப்போது காங்கிரசுக்காரர்களாக இருக்கும் ஈசுவரனும், எங்கள் ஆபிசிலே வேலை செய்கிற இரு ஆதி திராவிடரை விபூதிப் பூசச் சொல்லிப் பூசி, கோயில் உள்ளே அழைத்துச் சென்றவுடன் பக்தர்களெல்லாரும் சத்தம் போட்டுக் கோயிலுக்குள் இவர்கள் உள்ளே சென்ற தும், அவர்களை உள்ளே விட்டு வெளிக் கதவுகளைப் பூட்டி விட்டார்கள். அது குறித்து வழக்கும் போட் டார்கள்! சாமி தீட்டாய் போச்சு என்று வாதாடி தண்டிக்கச் செய்தார்கள்! பிறகு ஹைக்கோர்ட்டிலே அதற்கு எதிராகத் தீர்ப்புக் கிடைத்தது. ஆனால், இந்தியாவிலேயே முதன்முதலில் சுசீந்திரம் கோயிலில்தான் கோயில்...

பன்முகத் தன்மையை அழிக்க பா.ஜ.க. ஆட்சிகள் ஊர்ப் பெயர்களை மாற்றுகிறது

பன்முகத் தன்மையை அழிக்க பா.ஜ.க. ஆட்சிகள் ஊர்ப் பெயர்களை மாற்றுகிறது

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்ற பிரச்சனையைப் புதுப்பித்திருப்பதுடன், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் தங்களுடைய மதவெறி நோக்கத்திற்காகப் புதிதாக, மற்றுமொரு முன்னணியில் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான், நாட்டில் முஸ்லிம் கலாச்சாரத்துடனும், வரலாற்றுடனும் சம்பந்தப்பட்ட பெயர்களைத் தாங்கி இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றுவதாகும். உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கம், மிகவும் குதியாட்டம் போட்டுக்கொண்டு பெயர் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னணிக் கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகத் திகழும் அலகாபாத்தை, பிரயாக்ராஜ் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றி இருக்கிறார்கள். தீபாவளிக்கு முன்னால், ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து ஓர் அறிவிப்பினைச் செய்தார். அதாவது, அயோத்தி இருந்துவரும் பைசாபாத் மாவட்டம் இனிஅயோத்தி மாவட்டம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்குச் சற்று முன்புதான், வட இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பாகத் திகழும் மொகல்சராய் என்னும் ரயில்வே சந்திப்பை, தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தாஜ்மகால் இருந்து...

தலையங்கம் ஜாதி-மத மறுப்புக்கு அரசு அங்கீகாரம்!

தலையங்கம் ஜாதி-மத மறுப்புக்கு அரசு அங்கீகாரம்!

ஜாதி – மதங்கள், மனித சமூகம், கற்பித்த புனைவுகள், ஒருவர் ‘இந்து’ என்றாலே கட்டாயமாக ‘ஜாதி’ அடையாளத்தையும் சேர்த்தே சுமந்தாக வேண்டும். இந்துவும் ஜாதியும் பிரிக்க முடியாதவை. அதனால்தான் ஜாதிகளின் பட்டியல் தொகுப்பே இந்து மதம் என்று அம்பேத்கர் கூறினார். ஒருவர்  தன்னைக் கடவுள், மத மறுப்பாளராக அறிவித்துக் கொண்டாலும் அவர் இந்து அடையாளத்திலிருந்தும் ஜாதி அடையாளத் திலிருந்தும் ‘சட்டப்பூர்வமாக’ விடுவித்துக் கொள்ள முடியாது. இப்போது ஜாதி – மத அடையாளத்தி லிருந்து சட்டப்பூர்வமாக திருப்பத்தூரைச் சார்ந்த 35 வயது பெண் வழக்கறிஞர் சினேகா தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறார். திருப்பத்தூர் தாசில்தார் டி.எஸ். சத்திய மூர்த்தி, சினேகாவுக்கு ‘ஜாதி – மதமற்றவர்’ என்ற அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்கி யிருக்கிறார். இந்தியாவிலேயே முதல் முறை யாக ஒரு ‘குடிமகள்’(ன்) ஜாதி மதமற்றவர் என்று அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிற அதிசய நிகழ்வு நடந்திருக்கிறது. அது பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் தானே நிகழும்? அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது....

அரசு மருத்துவமனைகளில் சோதிடர்களை நியமிக்கிறது இராஜஸ்தான் காங்கிரஸ் அரசு

அரசு மருத்துவமனைகளில் சோதிடர்களை நியமிக்கிறது இராஜஸ்தான் காங்கிரஸ் அரசு

இராஜஸ்தான் மாநில அரச மாநிலத்திலுள்ள 16,728 அரசு மருத்துவமனைகளிலும் 54 பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சோதிடர்களை நியமிக்கப் போகிறதாம், அம்மாநில காங்கிரஸ் ஆட்சி! பிறந்த குழந்தைகளுக்கு இவர்கள் ஜாதகம் எழுதித் தருவார்களாம். பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் குல மரபுப் படி பெயர்களைத் தேர்வு செய்து பெற்றோர் களுக்கு அறிவுரை கூறுவார்களாம். ‘ராஜிவ் காந்தி ஜென்ம பத்ரி நாமகரன் யோஜனா’ என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. வேத சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் பரப்புவதற்கு வாரியம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதோடு அதற்கான திட்ட நகல்களைத் தயாரிக்கும் பொறுப்பை ‘ஜெய்ப்பூர்’ ஜெகத்குரு இராமானுஜ ஆச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக் கழகத்திடம் அரசு ஒப்படைத்துள்ளாம். இத்திட்டத்தால் மூவாயிரம் சோதிடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறதாம். பா.ஜ.க.வும் இத்திட்டத்தை வரவேற்றிருக்கிறது. முதல் கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவ மனைகளில் இது செயல்படுத்தப்பட இருக்கிறதாம். பேயோட்டும் மந்திரவாதிகளையும் அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டால்,  அவர்களே மன நோயைக் குணப்படுத்தி விடுவார்களே!...

தமிழக அரசு தேர்வாணையத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா?

தமிழக அரசு தேர்வாணையத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா?

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் பட்டியல் இனப் பிரிவு மற்றும் அருந்ததியினரிடமிருந்து அருங்காட்சியகத் துறையில் ‘கியுரேட்டர்’ என்ற வேலைக்கு விண்ணப்பங்கள் கோரி ஜன.24, 2009இல் ஒரு விளம்பரம் வெளியிட்டிருக்கிறது.  நிரப்பப்படாமல் இருக்கும் பதவிகளுக்காக நீதிமன்றத்தில் வந்த வழக்கைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி இந்த அறிவிப்பாணை வெளி வந்திருக்கிறது. இதற்கான கல்வித் தகுதியைப் பார்க்கும்போதுதான் வியப்பு மேலிடுகிறது. விலங்கியல், தாவரவியல், மானுடவியல், தொல்லியல், வரலாற்றியியல் அல்லது சமஸ்கிருதம் ஏதாவது ஒன்றில் உயர்பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பாணை கூறுகிறது. தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்தில் கியுரேட்டர் பணியில் சேர, பட்டியல் இனப்பிரிவினருக்கு சமஸ்கிருதப் படிப்பை தமிழக அரசு ஏன் ஒரு தகுதியாக்குகிறது? தமிழ்மொழிக்கோ, ஆங்கிலத்துக்கோ தரப்படாத தகுதி, சமஸ்கிருதத்துக்கு மட்டும் ஏன் தர வேண்டும்? அதுவும் தமிழ்நாட்டில்? கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் எந்த வகையில் தொடர்புடையது? சமஸ்கிருதம் படித்த சில நபர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு...

‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா? கல்வியாளர்கள் மறுக்கிறார்கள்

‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா? கல்வியாளர்கள் மறுக்கிறார்கள்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து ‘நீட்’டுக்கு தமிழகம் தயாராகி விட்டதுபோல ஒரு கருத்துருவாக்கம் நடக்கிறது. எப்படி தமிழக மாணவர்கள் அதில் அதிக அளவு தேர்ச்சி பெற முடிந்தது என்பதை ஆராய்ந்தால் மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தடையாகவே இருக்கிறது என்ற உண்மை விளங்கும். ‘நீட் தேர்வில் தமிழகம் முதலிடம்’ – கடந்த வாரத்துப் பரபர செய்திகளில் இதுவும் ஒன்று.  அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் சார்பில் 17,067 பேர் தேர்வெழுதி, அதில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத் தகவல். ‘நீட்டையே வேண்டாம் என்று எதிர்த் தீர்கள். இப்போது பாருங்கள் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்’ எனப் பலரும் சமூக வலை தளங்களில் மார்தட்டினர். ஆனால், இந்தத் தேர்வு முடிவு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவு என்பதுதான் பலரும் கவனிக்கத் தவறிய தகவல். இந்த ஆண்டு...

பொழிலனின்  “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

பொழிலனின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

சென்னை புத்தகக் கண்காட்சி 300 அரங்கில் பொழிலன் முன்னிலை யில் (அருவி புத்தக உலகம்) கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை ஜனவரி 11ஆம் தேதி மாலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 (பொதுமை பதிப்பகத்தில்) வேல் முருகன் நூலை வெளியிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

எம்.எஸ். சுப்புலட்சுமி யார்?

எம்.எஸ். சுப்புலட்சுமி யார்?

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 31.1.2019 இதழில் “பார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் குறித்த விவரம் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி, தேவதாசி சமூகத்தில் பிறந்து, கல்கி சதாசிவம் என்ற பார்ப்பனரைத் திருமணம் செய்து கொண்டு, பார்ப்பனியக் கலாச்சாரத்தையே தனது அடையாளமாக்கிக் கொண்டவர். அதன் காரணமாகத்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் மாஸ்கோ நகரில்  தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூரில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொருளாளர் துரைசாமி மற்றும் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர். 27.01.2019 ஞாயிறு அன்று  காலை 8.00 மணி முதல் மாலை வரை சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி பெரியார் திடல், மாஸ்கோ நகரில் நடைபெற்றது காலையில் முதல் நிகழ்வாக பொங்கல்  வழங்கி மாவட்ட தலைவர் முகில்ராசு தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன் மற்றும் மாநகர செயலாளர் மாதவன்   விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தினர் மாலை ‘விரட்டு” கலைக் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நடை பெற்றது. பகுத்தறிவு கருத்துகளை எளிய முறையில் நாடக வடிவில் மக்களிடம் பரப்பினர். நிகழ்வில் பறையாட்டம், ஒயிலாட்டம், மயில் காளை ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், பாடல்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஜனவரி 10, 2019 அன்று திருப்பூர் இரயில் நிலையம் பெரியார்-அண்ணா சிலை அருகே மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்களுக்கு மூடு விழா நடத்திய மோடியே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல்பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கூட்டமைப்பு சார்பில் 330 தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

இலயோலா கல்லூரி வீதி திருவிழவில் இந்துத்துவப் பாசிசத்தைப் படம் பிடிக்கும் முகிலனின் ஓவியக் கண்காட்சி  இடம் பெற்றிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த சில படங்கள் இந்துக்களைப் புண்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் முகிலனை மிரட்டினர்.  இதைத் தொடர்ந்து ஓவியர் முகிலனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில்  01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஓவியர் முகிலனுக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஓவியர் முகிலனுக்கு கழகப்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சால்வை அணிவித்து பெரியார் சிலை மற்றும் புத்தகம் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி ஆகியோர் முகிலன் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் இந்துப் பார்ப்பனியப் புரட்டு வாதங்களையும் அம்பலப்படுத்தி  உரையாற்றினர். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார்...

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம்; மாவட்ட செயலாளர் தெ.மகேசு; மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன்; மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில் குமார்; மாவட்ட துணைத் தலைவர் தெ. ரமேஷ்; மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம்: நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர்; நகர செயலாளர் நி.நடராசன்; நகர அமைப்பாளர் தில்லை நாதன்; நகர துணை தலைவர் ராஜராஜன்; நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன்....

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது விழுப்புரம் மாவட்டம். பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்காகவும்  மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கல்லக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு பொதுமக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசை  வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கல்லக்குறிச்சி மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சாலை மற்றும் வீதிகளிலும் அரசுஅலுவலகங்களிலும் சாதிப் பெயர்களை அகற்றக் கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 28.01.2019 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தியது. திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம். சார்பாக தோழர்கள் தமிழ்மதி, நீதிஅரசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரியல் கருத்துகளை எடுத்துரைத்தனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளி யிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர்                                     செய்தி :  விஜய்குமார் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

9-02-2019 காலை 10 மணி அளவில் ‘இந்திய இலங்கை வெளியுறவு கொள்கையின் எதிர்காலம்’  என்ற தலைப்பிலான  இந்துக் குழும நிகழ்வில்  கலந்து கொள்ள பெங்களூருக்கு வந்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெங்களுர் ப்ரீடம் பார்க் அருகில் நடந்தது. கருநாடக தமிழர் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 300 பேர் இந்திய சிங்கள இனக்கொலை கூட்டணியை  அம்பலப்படுத்தியும் இனக்கொலையாளி இராஜபக்சேவே திரும்பிப் போ என்றும் இனக்கொலைக்கு துணை போகிற இந்துக் குழுமம் ராமை கண்டித்தும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம், கருநாடக தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி, கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், பாசிச எதிர்ப்பு  கூட்டமைப்பு, கருநாடக தமிழர் பேரவை, கன்னட தமிழர் பெடரேசன், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை, இளந்தமிழகம்,  மே 17...

நீட் : ஒரு தீண்டாமைத் தேர்வு

நீட் : ஒரு தீண்டாமைத் தேர்வு

வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில்  பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஒரு தீண்டாமைத் தேர்வு . தரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்க மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு கலைத்து விட்டது . ஆண்டுக்கு இலட்சங்களில் புழங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்  என்று சொன்னப்போது மருத்துவத் துறைக்கு தகுதி வேணாமா பொடலங்கா வேணாமா  என்று கேட்ட வஞ்சகர்களுக்கு இதோ சில தகவல்கள்: ஏழை மக்களை மட்டும் நீட் தேர்வு பாதிக்க வில்லை நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளையும் பாதித்துள்ளது.  இரண்டு ஆண்டு நீட் தேர்வுக்கு தயாரான வர்களும், ஊக்ஷளுநு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தவர்களில் 2017-18இல் பள்ளி படிப்பை முடித்தவர்கள் –  1277. தனியார் மருத்துவ கல்லூரியில் 2018-19...

வெளி வந்து விட்டது ‘கருஞ்சட்டைக் கலைஞர்’

வெளி வந்து விட்டது ‘கருஞ்சட்டைக் கலைஞர்’

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருச்செங்கோட்டில் நிகழ்த்திய கலைஞர் குறித்த விரிவான உரை நூல் வடிவம் பெற்றுள்ளது. விலை : ரூ.30 தொடர்புக்கு : 9841489896 / 044-24980745 பெரியார் முழக்கம் 07022019 இதழ்

ஆளுநர் அலட்சியத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது 7 பேர் விடுதலை: அடுத்தக் கட்ட நகர்வுகள் என்ன?

ஆளுநர் அலட்சியத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது 7 பேர் விடுதலை: அடுத்தக் கட்ட நகர்வுகள் என்ன?

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஆளுநர் அலட்சியத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி கா.சு. நாகராசன் தலைமையில் தமிழ்நாடு திராவிடர்கழகம் நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை பொள்ளாச்சியில் பிப்.3 ஆம் தேதி தொடங்கியது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். 8ஆம் தேதி இந்த இயக்கம் புதுவையில் நிறைவடைந்தது. 15 தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர்கள் இதில் பங்கேற்றனர். ஈரோடு, மேட்டூர், சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சி, சென்னையில் பூந்தமல்லி, சைதாப் பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் வழியாக ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மக்களை சந்தித்தது இந்தக் குழு. 7ஆம் தேதி மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில்...

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

பெரியார் அம்பேத்கர் நினைவு நாட்களை முன்னிட்டு  “தமிழக அரசே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்று” என்கிற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் (சங்கராபுரம்)  கிராமத் தில் 19.12.2018 (தி.பி. 2049 புதன்) அன்று மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. “அன்னை மணியம்மை”  இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களுடன் கூட்டம் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். கூட்டத்திற்கு இரா.துளசிராசா தலைமை வகித்தார். பெரியார் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தனிமொழி, சோபனா, முத்துலட்சுமி, செந்தாமரை, சத்யா  மற்றும் இராமச்சந்திரன், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தினசாமி, துரைசாமி, அய்யனார், இராமர்,பெரியார் பாரதிதாசன் ஆகியோர்  ஆணவக் கொலைகளின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார்கள். கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணமும் நடைபெற்றது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் நூரோலையைச் சேர்ந்த ரஷ்யா ஆகிய...

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

கழகத்தின் “நிமிர்வோம்” இதழ் அரங்கு கடந்த ஆண்டைப் போலவே திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரங்கு (எண்.35) தனியே எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கில் கழக வெளியீடுகள்,  பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சிய நூல்களும் கிடைக்கும். தொடர்புக்கு  : முகில் ராசு 9842248174, விஜய்குமார் 9841653200, கவிஞர் தம்பி 9789381010 பெரியார் முழக்கம் 07022019 இதழ்