மறைக்க முடியாது; மக்கள் பாடம் புகட்டுவார்கள் தேசிய வெறிக்குப் பின்னால் பதுங்குகிறார், மோடி

அய்ந்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி மாபெரும் ரஃபேல் ஊழலையும் செய்துவிட்டு மாநில உரிமைகளை நசுக்கி விட்டு போர் வெறியையும், தேசிய வெறியையும் தேர்தலுக்காகத் தூண்டுகிறார் மோடி ! இந்த தேசிய வெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது…. எதை? எதை?

*     ரஃபேல் விமான பேர ஊழல்.

*     செல்லாத நோட்டில் செத்து மடிந்த உயிர்கள்.

*     பண மதிப்பு நீக்கத்தால் நொடித்துப்போன தொழில்கள், இழந்த வேலைவாய்ப்புகள்.

*     ஜி.எஸ்.டி. எனும் வரிவிதிப்பால் நிர்மூலமாகிப்போன தொழில் துறை.

*     வேலை வாய்ப்பு வீழ்ச்சியில்1970-களின் நிலைமைக்கு சென்று விட்ட இந்தியா.

*     நீட் தேர்வு என்ற பெயரில் நொறுக்கப்பட்ட ஏழை மாணவர் களின் மருத்துவ கனவு.

*     அனிதாவின் உயிர்.

*     ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், சி.பி.அய்., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் காவி மயப்படுத்தியது.

*     அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை அமித்ஷாவின் ஏவல்படையாக மாற்றியது.

*     உச்சநீதிமன்ற நீதிபதிகளே பிரஸ் மீட் வைத்து கதறும் அளவுக்கு நீதித்துறையை சீரழித்தது.

*     மாநிலக் கட்சிகளை மிரட்டி அடிபணியச் செய்து, கடைசியில் கட்சியையே கபளிகரம் செய்து, அடுத்தவன் கட்சி ஆபீஸில் வெட்கமின்றி தன் கட்சித் தலைவர் படத்தை வைத்துக் கொள்வது.

*     எட்டு வயது பெண் குழந்தையை கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்த கொடூரர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன பா.ஜ.க.வின் கேவலம்.

*     மாட்டுக்கறி சாப்பிடுவதை கொலைக்குற்றம் போல சித்தரித்த மக்கள் விரோத நடவடிக்கை.

*     அக்லக் உள்ளிட்ட மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி நிகழ்த்தப்பட்ட இந்து மதவெறி கும்பல்களின் கொலைகள்.

*     கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் என எழுத்தின் வழியே சமூக மாற்றத்துக்காக உழைத்தவர்களை இந்துத்துவ கும்பல் சுட்டுக் கொன்றது.

*     அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா சுட்டுக் கொல்லப்பட்டது.

*     உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் பெரைரா, கன்சால்வேஸ், வரவரராவ் ஆகிய இந்தியாவின் முக்கியமான மாற்றுக் குரல்களை மனித உரிமைப் போராளிகளை அப்பட்டமான போலி வழக்குகளில் நகர்ப்புற கொரில்லா என்ற பெயரில் கைது செய்தது.

*     தலித் சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டே மீதான தொடரும் நெருக்குதல்கள்.

*     பள்ளிக் கல்வித்துறை தொடங்கி உயர் கல்வித்துறை வரையிலும் அனைத்தையும் காவிமயப்படுத்தியது.

*     மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பல நூறு கோடி ரூபாய்.

*     மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத் பனியா கும்பலுக்கு கொடுக்கப்பட்டு, வாராக் கடனாகிப்போன சுமார் பல்லாயிரம் கோடி ரூபாய்.

*     5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எனும் அநியாயம்.

*     மக்களின் எதிர்ப்பையும் கடந்து மீண்டும், மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு வழங்கப்படும் புதிய உரிமங்கள்.

*     காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழ்நாட்டை கழுத்தறுத்தது.

*     தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டியது.

*     உயர்சாதி ஏழைகள் எனும் அரிய வகை ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு வழங்கியது.

*     இந்தியா முழுக்க பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஓர் இணை அரசாங்கத்தை நடத்த முயல்வது.

*     அருவருப்பான, ஆபாசமான போலி செய்திகளையும் தப்பு தப்பான வரலாறுகளையும் எந்த கூச்சமும் இல்லாமல் தினம்தோறும் பேசுவது.

*     சபரிமலை உள்பட பெண்களின் வழிபாட்டு உரிமையை, சுப்ரீம் கோர்ட்டே சொன்னாலும் கூட மதிக்காத திமிர்த்தனம்.

*     ரூ.3000 கோடியில் படேல் சிலை, ரூ.15 லட்சத்தில் கோட் அணியும் ஏழைத் தாயின் மகன்/

– இவை அனைத்தையும் போர்வெறியின் பின்னால் மறைத்து விடலாம் என பா.ஜ.க நினைக்கிறது.

– பாரதி நம்பி  (இணையத்திலிருந்து)

பெரியார் முழக்கம் 07032019 இதழ்

You may also like...