7 தமிழர் விடுதலை: மார்ச் 9 மனித சங்கிலி போராட்டத்தில் கழகத் தோழர்களே, குடும்பம் குடும்பமாக பங்கேற்பீர்!

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி, மார்ச் 9 ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடக்க இருக்கிறது. தமிழக அமைச்சரவை முடிவுக்குப் பிறகு ஒப்புதல் தர வேண்டிய தமிழக ஆளுனர் நெறிமுறைகளுக்கு மாறாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நசுக்கி வருவதைக் கண்டித்து நடக்கும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெரியார் முழக்கம் 28022019 இதழ்

You may also like...