Category: பெரியார் முழக்கம்

0

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் 28-09-2014 அன்று ஒளிபரப்பான ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  பதில்கள். பேட்டி கண்டவர் தலைமை செய்தியாளர் மு. குணசேகரன். கேள்வி :  செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற ஒரு விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்; மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது, விஞ்ஞான வளர்ச்சியில் மேலை நாடுகளோடு போட்டிப் போட்டு கொண்டு இந்தியா வளர்கிறது என்று விஞ்ஞானிகளைப் பாராட்டி பேசி வருகிறார்கள்; செவ்வாய் தோஷம் என்பதை நம்புபவர்களும் இந்தியாவில் தான் அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்; விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிற அளவிற்கு, விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் தன்மை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? பதில் : இல்லை என்பதைத்தான் இவைகளெல்லாம் வெளிப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் அறிவியல் அறிவுக்கு ஒன்றும் குறை வில்லை. ஆனால் அறிவியல் மனப்பான்மை இல்லை என்பது தான் நமக்குள்ள குறை. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், சோதிடம் என்ற...

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விடைபெற்றுக் கொண்டார்! 0

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விடைபெற்றுக் கொண்டார்!

திராவிடர் இயக்கத்தின் ஆய்வாளர் என்பது மட்டுமல்ல; அந்த இயக்கத்தின் தேவையையும் அந்த இயக்கம் தமிழகத்தில் உருவாக்கிய வரலாற்றுத் திருப்பத்தையும் ஆழமாக உணர்ந் தவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். ஆங்கில அறிவுலகில், திராவிடர் இயக்கத்தின் சமூகப் பார்வையை அதற்கான மொழிகளின் ஊடாக முன்வைத்தவர். இது அவருக்கே உரித்தான தனித்துவம். இந்த இடத்தை இட்டு நிரப்பக் கூடிய ஒருவர், அவருக்கு நிகராக இல்லை என்பதே அவர் விட்டுச் சென்றுள்ள வெற்றிடம். பொருளாதார – சமூகவியல் துறைகளில் மிகச் சிறந்த பேராசிரியர்; உலகநாடுகளின் பல பல்கலைக் கழகங்களில் கவுரவப் பேராசிரியர்; மிரள வைக்கும் ஆங்கில எழுத்து வன்மை; உறுதியான பார்ப்பன எதிர்ப்பாளர்; இம்மியளவும் சமரசத்துக்கு இடமில்லாமல் இறுதி வரை வாழ்ந்தவர். தனது ஆழமான புரிதலை – சிந்தனையை ஆங்கில புலமையை-தன்னுடைய அடையாளமாக்கிடவோ அதை வெளிப்படுத்தும் அரிதாரப் பூச்சுகளையோ முழுமையாக வெறுத்து ஒதுக்கியவர் அவர். உணர்ச்சியும் துடிப்பும் மிக்க உரையாடல் களுடன் சக மனிதர்களை நேசித்து, விளிம்பு நிலை மானுடனாகவே...

தலையங்கம் – மோடியின் பார்ப்பன ஆட்சி 0

தலையங்கம் – மோடியின் பார்ப்பன ஆட்சி

மோடியின் அமைச்சரவை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் நிரம்பி வழிகிறது. முக்கிய துறைகளின் பொறுப்பை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல், பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று மோடி முடிவுக்கு வந்துவிட்டார் போலும்! 21 புதிய அமைச்சர்கள் நியமனத்துக்குப் பிறகு அமைச்சரவை யின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டாலும் அவர் பிறந்த ‘வைசிய’ சமூகம் முன்னேறிய ஜாதிப் பிரிவிலிருந்து பிறகுதான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அடுத்த நிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இராஜபுத்திர’ முன்னேறிய சமூகத்தைச் சார்ந்தவர். இவர்களைத் தவிர முக்கியப் பொறுப்புகளின் அதிகாரம் பார்ப்பனர்களுக்கே ‘தாரை’ வார்க்கப்பட்டுள்ளது. ஆர்.எ°.எ°. அமைப்பு, ‘பார்ப்பனர்-வைசியா-இராஜபுத்திரர்’ என்ற சமூக மேலாதிக்கக் குழுவினரின் கட்டுப்பாட்டில் அவர்கள் நலனையே பிரதிபலிக்கக்கூடிய அமைப்புதான். அதுவே அமைச்சரவையிலும் எதிரொலிக்கிறது. வெளிநாட்டுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா சுவராஜ், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, சிறு,குறு மற்றும்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

10 வேதகால அரசர்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை நடிகர் கமலஹாசன் வெளியிட்டார். – செய்தி ஏனய்யா, நீச பாஷையில் எழுதினீர்? சம° கிருதத்திலேயே எழுதியிருந்தா, விற்பனை இலட் சக்கணக்கில் பிச்சுண்டு போயிருக்கு மோன்னா… அடிப்படையில் தமிழ்ச் சமுதாயம் பெண்மையைப் போற்றும் சமுதாயமாகும். – மருத்துவர் இராமதாசு உண்மை! உண்மை! யாருக்காவது சந்தேக மிருந்தால் தர்மபுரி திவ்யாவைக் கேட்டு தெளிவு பெறலாம்! வண்டலூர் பூங்காவிலிருந்து புலி தப்பியது. கிராம மக்கள் பீதி. – செய்தி பயப்படாதீங்க! தமிழ்நாட்டில் புலி பயங்கரவாதம் தலைதூக்கிடுச்சின்னு சுப்பிரமணியசாமி நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு காப்பாத்திடுவார்! தமிழ்நாட்டில் 1442 அரசு மகளிர் பள்ளிக்கூடங் களிலும், 4278 ஆண்கள் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறைகளே இல்லை. – உயர்நீதிமன்றம் எத்தனையோ ஆயிரம் பிளாட்பாரங்கள் கோயிலே இல்லாமல் இருக்கு; பெருசா பேச வந்துட்டாங்க! ‘முத்த’க் கலாச்சாரத்தைக் கண்டித்து ‘எச்சில் துப்பும்’ போராட்டம் நடத்திய இந்து முன்னணி யினர் கைது. – செய்தி ‘எச்சில்...

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 0

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி விமலா தேவியை கொலை செய்தவர்கள் – உடந்தையாக இருந்த காவல்துறை யினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் 26 அக்டோபர் 2014ல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உசிலம்பட்டி விமலாதேவியின் கவுரவக்கொலையை கண்டித்தும், திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரியும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 11.11.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை எதிரில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில், சென்னை அருள்தா°, சென்னை நாத்திகன் ஆகியோர் ஜாதி மறுப்பு பாடல்களை பாடினர். பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன், மே...

காவிரி உரிமையை பாதுகாக்க தமிழகமே வீதியில் இறங்கி  போராட வேண்டும்: கழகத் தலைவர் கொளத்தூர்  மணி அறிக்கை 0

காவிரி உரிமையை பாதுகாக்க தமிழகமே வீதியில் இறங்கி போராட வேண்டும்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கும் நோக்கத்தோடு காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராகதொடர்ந்து செயல்படும் கர்நாடக அரசு மேலும் காவிரியின் குறுக்கே புதிதாக இரு அணைகள் கட்ட முயற்சிகள்மேற்கொள்வதை கண்டித்து திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வரும் நவம்பர் 22ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகம், கர் நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் ஏற்றுகொள்ளும் வகையில், 1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி கர்நாடகம் கிருஷ்ண ராஜசாகர் அணையையும், தமிழகம் மேட்டூர் அணையையும் கட்டிக் கொண் டது. 1934இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து 1974 வரை சராசரியாக ஒரு ஆண்டுக்கு 363.5 டி.எம்.சி. நீர் கர்நாடகத்திலிருந்து...

நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவாக… 0

நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவாக…

பிரபாகரன் ஆற்றிய முதல் மாவீரர் நாள் உரை இதுதான். இந்திய தமிழிழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, நவம்பர் 27 அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப் புலிப் போராளி வீரச்சாவு நாளான – நவம்பர் 27ஐ – மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது – “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாள், இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவுகூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல்முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின் பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாள்களைக் கொண்டாடுவது வழக்கம்....

சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில்… 0

சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில்…

1957 நவம்பர் 26இல் பெரியார் ஆணையை ஏற்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவை தீயிட்டுக் கொளுத்தி, பல்லாயிரக் கணக்கில் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகியது கருஞ்சட்டைப் படை! அந்தப் போராட்டம் குறித்து, ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்த சில செய்திகளை இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஆடுமாடுகளைப் போல் • •அரசியல் சட்ட எரிப்பு சம்மந்தமான வழக்கு 11.12.57-ந் தேதி வாய்தா என்று முன்னமே தெரிவித்திருந்த அரசாங்கம் திருச்சியிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு 6 திறந்த லாரியில் ஆடு மாடுகளை அடைப்பதுபோல் அடைத்துக் கொண்டு வந்து மாயூரம் சப்டிவிசனல் மாஜி°ட்ரேட் கோர்ட்டின் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினர். 5000 பொது மக்களுக்கு மேல் கூடியிருந்தனர். தொண்டர்களும் தோழர்களின் மனைவி, குழந்தைகள், கர்ப்பவதிகள், தள்ளாத தாய்மார்கள் யாவரும் உற்சாகத்துடன் கூடி யிருந்தனர். கைதான தொண்டர்களும் உற்சாகத் துடன் இருந்தார்கள். இரவு 7 மணிக்கு அதிகாரி இதனடியிற் கண்டபடி கேசை வாய்தா...

தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்! 0

தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்!

தமிழ்நாட்டில் இந்து மதத்தின் காவலர்களாக புறப்பட்டிருக்கும் அமைப்புகள், எவ்விதச் சமூக சிந்தனையுமின்றி பெரியார் இயக்கத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றன. ‘இந்து ஒற்றுமை’ பற்றி கூப்பாடு போடும் அவர்கள், அதற்கு தடையாக இருக்கும் ஜாதி, தீண்டாமைப் பற்றி பேசுவதே இல்லை. ‘தீண்டாமைக்கு’ உள்ளாக்கப்படும் மக்களும் ‘இந்துக்கள்’ தானே என்பது குறித்து இவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல், தமிழகத்திலும் வரவேண்டும் என்றால் உடனே ‘நாத்திகப் பிரச்சாரம்’ என்று கூக்குரலிடுகிறார்கள். இதோ, கருநாடகத்திலிருந்து ஒரு நல்ல செய்தி! மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்று கருநாடகத்தில் 3 நாள் பட்டினிப் போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களே காவி உடை தரித்த இந்து மத சாமியார்கள் தான் என்பதே இதில் முக்கிய அம்சம். தலித் மற்றும் பகுத்தறிவாளர்களும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி...

மலேசிய பயணத்தில்  பெரியார் சந்தித்த எதிர்ப்புகள் 0

மலேசிய பயணத்தில் பெரியார் சந்தித்த எதிர்ப்புகள்

“மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” என்ற தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறார் ‘கவி’ எனும் தோழர் க.விநாயகம். இன்றைய மலேசியா வின் அன்றைய பெயர் ‘மலாயா’. அன்றைய மலாயாவில் தமிழர்களுக்காக குரல் கொடுத்த முன்னோடித் தமிழர்களையும் 1929 மற்ளும் 1954இல் பெரியார் ‘மலாயா’ வுக்கு வருகை புரிந்த வரலாற்றையும் ஆவணமாக பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. தமிழர் சீர்திருத்த சங்கம், தமிழர் நூல் நிலையம், பெரியார் பிறந்த நாள் விழாக்கள் என்ற தலைப்புகளின் கீழ் விரிவான செய்திகளை அரும்பாடுபட்டு சேகரித்து தொகுத்துள்ளார் நூலாசிரியர். 1936இல் தொடங்கப்பட்ட ‘தமிழர் சீர்திருத்த சங்கம்’ பெரியார் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தது. ‘குடிஅரசு’ இதழில் இச்சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழவேள் சாரங்கபாணி நடத்திய ‘தமிழ்முரசு’ நாளேடு, தமிழர் களின் குரலாகவும் வரலாற்றுப் பதிவாகவும் வெளிவந்ததோடு சுயமரியாதை கொள்கை களுக்கு ஆதரவாக இருந்தது. மற்றொரு முன்னோடியான அ.கி. சுப்பையா, ‘தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி’,...

பீகார் முதல்வரின் பெரியார் குரல்! 0

பீகார் முதல்வரின் பெரியார் குரல்!

“கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா?” என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கேட்டார். பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது, “சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே” என்றார். “மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுபவர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்கு மட்டுமே சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால், இங்கே ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக்கிறது. இங்குள்ள மதத்தில் என்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கிறார்கள். இதன் காரணமாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடுகிறது. இங்கு மாத்திரமே பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் கடுமையாக...

வேளாண் பல்கலையை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் ‘பஞ்சாங்க’த்தை அறிவியலாக்காதே! 0

வேளாண் பல்கலையை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் ‘பஞ்சாங்க’த்தை அறிவியலாக்காதே!

வேளாண் பல்கலையின் விவசாயக் கையேட்டில் பஞ்சாங்கங்களை திணித்திருப்பதை நீக்கக் கோரி கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கோவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று காரணம் சொல்லி மழை முன்னறிவிப்பு கையேடு ஒன்றினை தயாரித்து 2013ம்ஆண்டு முதல் வழங்கி வருகிறது. அதில் 100 ஆண்டுகளுக்கு மேலான மழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை துறையிலிருந்து பெற்று, அறிவியல் முறையில் ஆய்வு செய்து மாத வாரியாக ஒவ்வொரு மாவட்டங்களில் எதிர்பார்க்கப் படும் மழை அளவினை வெளியிட்டு அதற்கேற்றாற் போல் விவசாயப் பணிகளை செய்யுமாறு விவசாயி களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அவ்வாறு 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மழை முன்னறிவிப்பு கையேட்டில் வானிலை துறை விவரங்கள் அடிப் படையில் ஒரு பகுதியாகவும், 14 பஞ்சாங்கங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மழை குறிப்புகளை ஒரு பகுதியாகவும் வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

சென்னை சேலையூரில் பாகனை மிதித்துக் கொன்ற அக்கோயில் மடத்தின் யானைக்கு மதம் பிடித்திருந்தது. – ‘தமிழ் இந்து’ செய்தி தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் போலிருக்கிறது. மோடியை கடுமையாக விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது. – எச். ராஜா ஆமாம்! எதுக்கும் வைகோ எச்சரிக்கையா இருப்பதுதான் நல்லது. மனுஷன் தனது கட்சி சாமியார்களப் புடிச்சு பில்லி சூன்யத்தை ஏவி விட்டாலும், விட்டுடுவாறு! அரியானா சாமியார் ராம்பாலை கைது செய் யஅரசுக்கு செலவு ரூ.26 கோடி. – செய்தி இதுக்கெல்லாம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செஞ்சிடுங்க… அப்பத்தான், நிதி தட்டுப்பாடு இல்லாம சாமியார்களை பிடிக்க முடியும்! ஆஸ்திரேலியாவில் மோடி பங்கேற்ற நிகழ்வில் இருந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இடம்பெறவில்லை. – செய்தி இனிமே வெளிநாடு போகும்போது, ‘கீதை’க்குப் பதிலாக இந்திய வரைபடத்தையே எடுத்துட்டுப்போய் பரிசாக கொடுத்துடுறதுதான் நல்லது! புனேயில் கோட்சேயை பாராட்டி, ஆர்.எஸ்.எஸ். நடத்த இருந்த நாடகத்துக்கு...

0

மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதாகை நிறுவியதற்காக காவல்துறையின் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளானார் ‘முழக்கம்’ உமாபதி முறையான சிகிச்சை தர நீதிமன்றம் உத்தரவு!

‘முழக்கம் உமாபதி’க்கு முறையான சிகிச்சைகளை அளித்து அறிக்கை தர வேண்டும் என்று அரசு மருத்துவமனை தலைவருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தியாளர் திராவிடர் விடுதலைக் கழகச் செயல் வீரர் ‘முழக்கம்’ உமாபதி, காவல்துறையால் நவம்பர் 26 அன்று கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் நவ.28ஆம் தேதி வழக்கு தொடர்ந்து, அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்தினர். நீதிபதி வி. இராமசுப்பிரமணியன், வழக்கை விசாரணைக்கு அனுமதித்தார். கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ‘முழக்கம்’ உமாபதிக்கு தமிழக அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. உடனடி நடவடிக்கையாக உரிய மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றி, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை உடனடி பதவி நீக்கம் செய்ய...

பெரியார் பார்வையில் தேசியம் – மொழி – கலாச்சாரம்! – எம்.எஸ்.எஸ். பாண்டியன் 0

பெரியார் பார்வையில் தேசியம் – மொழி – கலாச்சாரம்! – எம்.எஸ்.எஸ். பாண்டியன்

யார் வரலாறு? இந்தியாவின் பண்டைய இலக்கி யங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும் கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல் சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த் துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும் தேசம் உருவாக வேண்டுமெனில், பழமையுடன் போராட வேண்டும் என்பது அவரது அரசியல் நோக்கு. பகுத்தறிவு ஒரு நெடும் பயணம்! மானுட விடுதலை அடிப்படை யிலான தேசிய உருவாக்கம் முடிவற்ற தொரு தொடர் போராட்டமே என்பதுபோல், பகுத்தறிவு வாதமும் முடிவற்ற மாற்றங்களைக் காலந் தோறும் எதிர்கொள்ளும் என்பதை அவர்...

தலையங்கம்  ‘இராஜா’க்களின் மிரட்டல் 0

தலையங்கம் ‘இராஜா’க்களின் மிரட்டல்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச்.ராஜா, “மோடியை கடுமையாக விமர்சித்தால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது” என்றும், “வைகோ நாக்கு தடித்து பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மோடி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற ஆணவம்தான், இவர்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது போலும்! மோடி அப்படி ஒன்றும் விமர்சனத்துக்கு அ ப்பாற்பட்டவரும் அல்ல. சார்க் மாநாட்டில் பல்வேறு நாட்டின் அதிபர்கள் பங்கேற்கும் மாநாட்டில், “இராஜபக்சே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” என்று மோடி, ‘தேர்தல் அரசியலை’ப் பேசியிருப்பது சரியா? தமிழர்களை இனப்படுகொலை செய்தவர் இராஜபக்சே. ‘மனித உரிமை மீறல்’ குற்றத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டியவர் என்று அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகி நிற்கும் மனிதர். அவருக்கு மோடி வாழ்த்துக் கூறுவது பற்றி இந்த ‘இராஜா’க்களுக்கு ஆத்திரம் வரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இவர்கள்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

நடிகர்களை நம்பி பா.ஜ.க. கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. – தமிழிசை சவுந்தரராஜன் அப்படியா? ரஜினி, பா.ஜ.க.வுக்கு வர மாட்டேன்னு தனது முடிவை உறுதியா தெரிவிச்சுட்டாரா? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்னை “பினாமி முதல்வர்” என்று கூறுகிறார்கள். – ஓ. பன்னீர்செல்வம் நியாயமான பேச்சு! ‘முதல்வர்’ என்று கூறுவதையே ஏற்க மறுக்கும் ‘முதல்வரை’ பினாமி முதல்வர் என்று எப்படிங்க சொல்லலாம்? இந்தியாவில் சிறைச் சாலைகள் அனைத்தும் கல்விச் சாலைகளாக மாறவேண்டும். – கிரண்பேடி அது முடியாது என்பதால்தான் கல்விச் சாலைகளையாவது சிறைச் சாலைகளாக மாத்துவோமேன்னு தீவிரமா, முயற்சி செஞ்சுகிட் டிருக்கோங்க! வாக்காளர்களுக்கு எந்த காலத்திலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும். – மருத்துவர் இராமதாசு வாக்குறுதிதானே! ஓ, தாராளமாக தரலாமே! புதுவை முதல்வர் டெல்லி மாநாட்டில் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் அழுக்கு சாமியார் குரு பூஜையில் கலந்து கொண்டார். -செய்தி மோடியை சந்திச்சு என்ன...

பெரியாரின் இராமாயண நூல் தடையை நீக்கியவர் நீதிபதி கிருஷ்ண அய்யர் 0

பெரியாரின் இராமாயண நூல் தடையை நீக்கியவர் நீதிபதி கிருஷ்ண அய்யர்

(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘இராமாயணா-எ ட்ரூ ரீடிங்’ (Ramayana – a true reading) (‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்ற நூலின் மொழி பெயர்ப்பு) என்ற ஆங்கில நூலையும் அதன் இந்தி மொழி பெயர்ப்பையும் உத்தரப்பிரதேச மாநில அரசு தடை செய்தது. இதை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு – தடை செல்லாது என்று அது தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்தது. உச்சநீதிமன்றமும் உ.பி. அரசு இந்த நூலுக்கு தடை விதித்தது செல்லாது என்று தீர்ப்புக் கூறி அப்பீலை தள்ளுபடி செய்தது. நீதிபதி கிருஷ்ண அய்யர் அவர்கள் அளித்த அந்த தீர்ப்பின் விவரம் அவரது நினைவாக இங்கே தரப்படுகிறது. செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.1976) இந்தத் தீர்ப்பு வந்தது. அவசர நிலைகாலம் அது; விடுதலை தணிக்கைக்கு உள்ளாகி வந்தது; பார்ப்பன அதிகாரிகள் ‘விடுதலை’யில் இதை வெளியிட...

கருநாடக அமைச்சரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு 0

கருநாடக அமைச்சரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு

தமிழ்நாட்டு அமைச்சர்கள் கடவுளுக்கு மொட்டை போடுதல், பால்குடம் எடுத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், மண்சோறு சாப்பிடுதல் என்று மூடநம்பிக்கையின் முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கும்போது கருநாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடுகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியல்லவா? அம்மாநில முதல்வர் சித்தராமய்யாகூட ஒரு பகுத்தறிவாளர்தான். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கலால்வரித் துறை அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி இன்னும் ஒரு படி மேலே போய் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் இயக்கம் நடத்தி வருகிறார். அம்மாநில அரசு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர திட்டமிட்டது. பாரதிய ஜனதா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்களிடம் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்து வருகிறார், அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி. இதற்காக, அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதி இரவு சுடுகாட்டில் “பேய்” நடமாடுகிறது என்ற மூடநம்பிக்கையை அம்பலப் படுத்தத் திட்டமிட்டார். தனது...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை 0

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை

கழகச் செயல்வீரர்களே! ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை தொடங்கி விட்டீர்களா? ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. நான்கே பக்கங்களில் வெளிவரும் அந்த ஏடு, காலத்தின் அறை கூவலுக்கு உறுதியாக முகம் கொடுத்து வருகிறது என்ற உண்மை, அதன் வாசகர்களுக்குத் தெரியும். பெரியார் எழுத்து-பேச்சுகளை ‘குடிஅரசு’ தொகுதிகள் வழியாக நாம் வெளியிட முயன்றபோது அதற்கு தடைபோட முயன்றவர்கள் முன் வைத்த வாதங்களை முனை மழுங்கடித்தது ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’. பெரியாருக்கு எதிராக திசை திருப்பும் வாதங்களையும் வரலாற்றுத் திரிபுகளையும் முன் வைக்கும் சக்திகளின் முகத் திரையைக் கிழித்துக் காட்டி வருவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தான். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தன்னை ஒப்படைத்துக் கொண்டு விடாமல் எந்த முகாமிலிருந்து பெரியாரிய எதிர்ப்புக் குரல் வந்தாலும் அதை உறுதியாக எதிர்ப்பதிலும் எங்கேயிருந்து பெரியாரியத்தின் ஆதரவுக் குரல் வந்தாலும் தயக்கமின்றி வரவேற் பதிலும் முன்னிற்பதும் ‘புரட்சிப்...

‘இராமனு’க்குப் பிறந்தவர்களே நாட்டை ஆளவேண்டும் என்போரே! ‘இராமன்’ எப்படி பிறந்தான் தெரியுமா? 0

‘இராமனு’க்குப் பிறந்தவர்களே நாட்டை ஆளவேண்டும் என்போரே! ‘இராமன்’ எப்படி பிறந்தான் தெரியுமா?

மத்திய இணை அமைச்சராக இருக்கும் சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பெண் சாமியார், டெல்லியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “டெல்லியை இராமனுக்குப் பிறந்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா? அல்லது முறை தவறிப் பிறந்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா?” என்று பேசியுள்ளார். இதற்கு நாடாளுமன்றத்திலும் நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘இராமனுக்குப்’ பிறந்தவர்கள்தான் நாட்டின் நல்லாட்சிக்குத் தகுதியானவர்கள். நாட்டின் உண்மையான குடிமக்கள் அவர்கள்தான் என்ற இந்தக் கருத்து, ஏதோ, இந்தப் பெண் அமைச்சரின் உணர்ச்சிகரமான பேச்சு என்றோ, மதவெறித் தனத்தின் வெளிப்பாடு என்றோ கருதிடக் கூடாது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், ‘இராமனை’ தங்களின் கடவுளாக ஏற்றுக் கொண்டால் இந்தியா வில் வாழலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை வழங்கிய கோல்வாக்கர் எழுதியிருக்கிறார். 1939இல் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களில் பாடிய பாடல், இப்படி கூறுகிறது: “நான் பிறந்த தாய்நாடே உன்னை வணங்குகிறேன் என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன் எங்களை விரைவில்...

உயர்நீதிமன்ற புதிய நியமினங்களில்  மேலும் பார்ப்பனர்களை நியமிக்க முயற்சியா? 0

உயர்நீதிமன்ற புதிய நியமினங்களில் மேலும் பார்ப்பனர்களை நியமிக்க முயற்சியா?

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளுக்கான 60 இடங்களில் தற்போது 43 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 17 பேருக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்க இருப்பதாக தெரிகிறது. காலியாக உள்ள 17 நீதிபதிகள் பதவிகளில் பார்ப்பனர்களைக் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாக அறிகிறோம். ஏற்கெனவே தலைமை நீதிபதி, இரண்டாவதுநிலையில் உள்ள நீதிபதி உள்பட 7 பார்ப்பனர்கள் இருக்கும் நிலையில், மேலும் பார்ப்பனர்களை நியமிப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். இதில் பார்ப்பனரல்லாதவர்களை தேர்வு செய்வதற்கு 50 வயதுக்கு மேலும், பார்ப்பனர்களுக்கு மட்டும் 50 வயதுக்கு கீழே உள்ளவர்களாக தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. 50 வயதுக்குள்ளே தேர்வு செய்யப்படும் பார்ப்பனர்கள், உச்சநீதிமன்றம் வரை செல்லவும் நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியத்தில்’ இடம் பெறவும் இயலும் என்பதால் இப்படி ஒரு சதி திட்டமிடப்படுகிறது. சமூக நீதிக்கு இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலம் தமிழகம். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது இதே போன்று பார்ப்பனர்களை அதிகமாகக் கொண்ட நீதிபதிகள் பட்டியல்...

இளமையை தொலைத்த பேரறிவாளனும் ‘பிரிட்ஜ்மேனும்’ 0

இளமையை தொலைத்த பேரறிவாளனும் ‘பிரிட்ஜ்மேனும்’

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது. கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, இளமைக் காலம் முழுதும் 27 ஆண்டு சிறையில் அடைக்கப்பட் டிருந்த ஒருவர், இப்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ரோனி பிரிஜ்மேன் என்ற கருப்பர் இனத்தைச் சார்ந்த அவர், விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். “இவர்தான் கொலைகாரர்; அதை நான் நேரில் பார்த்தேன்” என்று அமெரிக்க போலீஸ் ஒரு 12 வயது சிறுவனைப் பிடித்து பொய்சாட்சி சொல்ல வைத்தது. இந்த சம்பவத்தை 2011இல் ‘சீன்’ என்ற அமெரிக்க பத்திரிகையின் செய்தியாளர், மீண்டும் புலனாய்வு செய்தார். போலீஸ் பொய் வழக்கை தயாரித்தது உண்மை என்று தெரிந்தவுடன், “அப்பாவிகளுக்காக உதவும் வழக்கறிஞர் குழு” பிரிட்ஜ்மேனுக்காக வழக்கை நடத்த முன் வந்தது. 27 ஆண்டுகளுக்கு முன் பொய் சாட்சி சொன்ன 12 வயது சிறுவன் தனது சாட்சியத்தை திருத்திக் கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறினார். இப்போது நீதிமன்றம் அவரை விடுதலை...

தலையங்கம் – அதிகார உச்சத்தில் பார்ப்பனர்கள்! 0

தலையங்கம் – அதிகார உச்சத்தில் பார்ப்பனர்கள்!

பார்ப்பனர்கள் சமூக-அரசியல்-பொருளாதாரத் துறைகளில் தொடர்ந்து ஆதிக்க சக்திகளாகவே நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏதோ விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல எழுதவும் பேசவும் தொடங்கியிருக்கிறார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் சேஷாத்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், பார்ப்பனர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுதியிருக்கிறார். சமுதாயத்தை இப்போதும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தங்களின் மேலாண்மையைத் திணித்துக் கொண்டிருப்பது பார்ப்பனர்கள்தான். சிற்பி உருவாக்கிய ‘கடவுள் சிலைக்கு’, சக்தியூட்டக் கூடிய தங்களின் மந்திரம் தான் என்கிறார்கள். கட்டி முடிக்கப்பட்ட கோயிலானாலும், புனரமைக்கப்பட்ட கோயிலானாலும் அதன் தீட்டுகளை கழித்து தூய்மைப்படுத்தும் ‘கும்பாபிஷேக’ உரிமை, தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நிலைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். கோயிலுக்குள் கர்ப்பக்கிரகம் வரை நுழைந்து கடவுளை நெருங்கவும், அந்தக் கடவுளிடம் தங்களது சம°கிருத மொழியிலேயே உரையாடவும் தாங்கயே உரிமைக்குரியவர்கள் என்று மார்தட்டுகிறார்கள். திருமணமானாலும், வீடு திறப்பு என்றாலும் 60ஆம் திருமணமானாலும் இறந்தவர்களுக்கு ‘திதி’ என்றாலும் அதற்கு வேத மந்திரங்களை ஓதி கடவுள்களை ஏற்கச் செய்யும் ‘காப்பீட்டு உரிமைகள்’...

தலையங்கம் – எது ‘தாய் மதம்’? 0

தலையங்கம் – எது ‘தாய் மதம்’?

இந்துக்கள் அல்லாதவர்கள் – இந்து மதத்துக்கு திரும்புவது, மதமாற்றம் அல்லவாம்! அதற்குப் பெயர் ‘தாய் மதம் திரும்புதல்’ என்கிறது சங் பார்ப்பன பரிவாரம்! வழமைபோல் இதுவும் அவர்கள் முன் வைக்கும் ஒரு புரட்டுவாதம் தான்! இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் தாய் மதம் ‘இந்து’ என்றால், ‘இந்து’ என்ற சொல் – வேதம், புராணம், சமஸ்கிருதம் உள்ளிட்ட – எந்த நூலிலும் இடம் பெறாதது ஏன்? இது 1927 ஆண்டிலேயே பெரியார் எழுப்பிய கேள்வி; இதுவரை விடை கிடைக்காத கேள்வி. பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகனாக’ கொண்டாடும் இராஜகோபாலாச்சாரி எனும் இராஜாஜி, “இந்து மதம் என்பது அண்மைக் காலத்திய புதிய பெயர்” என்கிறார். (ஆதாரம்: Hinduism-Docrine and way of life) “இந்துமதம் தெளி வற்றது; வரையறை ஏதும் இல்லாதது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த நீதிபதி இராசமன்னார் ஒரு தீர்ப்பில் கூறினார். (மைக்கேல் எதிர் வெங்கடேசன் வழக்கு -1952) “இந்து...

பகவத்கீதைப் பற்றி விவேகானந்தர் கூறியது என்ன? 0

பகவத்கீதைப் பற்றி விவேகானந்தர் கூறியது என்ன?

பகவத் கீதையை தேசிய நுலாக்க முயற்சிக்கிறது மோடி அரசு. இவர்கள் போற்றும் விவேகானந்தரே, பகவத் கீதை மீதான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். அக்கருத்துகளின் தொகுப்பு இது. கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. வியாசரால் நூல் எழுதப்பட்ட காலத்திலேயே கீதையும் அதனுடன் இருந்ததா அல்லது பிற்காலத்திலேயே கீதையும் அதனுடன் இருந்ததா அல்லது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டும். கிருஷ்ணன் எனும் பெயரால் வரலாற்றில் யாரேனும் இருந்தாரா? குருச்சேத்திரப் போர் உண்மையில் நடந்ததா? அர்ச்சுனனும் அவனைப் போன்ற பிறரும் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவரா என்பதையெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். வேத வியாசர் என்ற பெயரில் பற்பல காலகட்டங்களில் பலர் வாழ்ந்துள்ளனர். இவருள் கீதையை எழுதியவர் யார்? வியாசர் என்பது ஒரு பட்டம்தான். தனிப்பட்ட யாருடைய பெயரும் அல்ல. புராணங்களை இயற்றுகின்ற எவரையும் வியாசர் எனும் பெயரால் அழைப்பது அக்காலத்திய மரபு. ஆதிசங்கரர் பகவத் கீதைக்கு விளக்கவுரை எழுதுவதற்கு முன்னர் கீதை...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பகவத் கீதையை காமசூத்திரத்தோடு ஒப்பிட்டு ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் இழிவுபடுத்துவதா? – இந்து முன்னணி கண்டனம் வாத்சாயர் எழுதிய சமஸ்கிருத ‘இலக்கிய’மான காமசூத்திரத்தை இந்து முன்னணி, இப்படி இழிவு படுத்தலாமா? நோயிலிருந்து குணம் பெற பக்தர்கள் ‘பிராமணர்’ சாப்பிட்ட எச்சில் இலை மீது உருளும் ‘பிரார்த்தனை’யை தடை செய்யக் கூடாது. – உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வாதம் அதுக்கு அம்புட்டு சக்தியா? அப்படின்னா, மோடி யிடம் பேசி, இந்த ‘எச்சலை’களுக்கு காப்பீட்டு உரிமை வாங்கிடுங்கோ… கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் பள்ளிகளுக்கு விடுமுறையை இரத்து செய்து, மனித வளத்துறை அமைச்சகம் உத்தரவு. – செய்தி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை விடுமுறையும் கிறிஸ்துவர்கள் கொண்டு வந்தது தானே! அதையும் இரத்து செய்து பாருங்களேன்…! திருநள்ளாறு சனிப் பெயர்ச்சிக்கு வரும் பக்தர்கள் – அங்குள்ள நளன் குளத்தில் முழுக்குப் போட்டு, கட்டிய ஆடையை குளத்திலேயே விட்டு விடுகிறார்கள். – செய்தி முழுக்குப் போட்ட இந்த நாள் முதல் நீ...

1957; நவம்பர் 26 : ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்! 0

1957; நவம்பர் 26 : ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்!

பொள்ளாச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நவம்பர் 26ஆம் நாள் கீழ்க்கண்ட சட்ட எரிப்புப் போராட்டத்தை விளக்கும் துண்டறிக்கையை மாணவர்கள்-மக்களிடம் வழங்கினர். பிறவி வருண சாதி ஒழிப்புக்காக பெரியாரும், அவரின் இயக்கமும் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தின் 57 ஆம் ஆண்டின் நிறைவு நாள் சிந்தனைகள். பெரியார் என்ற அந்த மாமனிதர் தமிழர்களின், உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, மேற்பாட்டிற்காக, எடுத்த போராட்டங்கள் ஏராளம்! 26.12.1926இல் சுயமரியாதை இயக்கம் நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டு பெரியார் மறையும் நாள் வரையில் “பிறவி வருண சாதி ஒழிப்பில்” நாட்டம் கொண்டிருந்தார். 1929 செங்கற்பட்டு, 1930 ஈரோடு, 1931 விருதுநகர் மாநாடுகளிலும், 1932 “சுயமரியாதை இயக்க சமதர்மம் கட்சி”யாரின் வேலைத் திட்ட க் கூட்டத்திலும், 1940 திருவாரூர், 1944 சேலம், 1945 திருச்சி, 1948 தூத்துக்குடி நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் “பிறவி வருண சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் தீண்டப்படாதாருக்குச் சமூக...

அடக்குமுறை-கருத்துரிமை பறிப்புகளை எதிர்த்து 2014இல் கழகத்தின் எதிர்நீச்சல் பயணம் 0

அடக்குமுறை-கருத்துரிமை பறிப்புகளை எதிர்த்து 2014இல் கழகத்தின் எதிர்நீச்சல் பயணம்

அடக்குமுறைகள், கருத்துரிமை பறிப்புகள் என்றுஅரசுகளின் தடைகளைத் தாண்டி, திராவிடர் விடுதலைக் கழகம் எதிர் நீச்சலில் களப்பணியாற்றிய ஆண்டு 2014. தமிழக உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கூட்டங்கள் என்றாலும், பகுத்தறிவு பரப்புரையானா லும் தமிழர் திருநாள் விழாவானாலும் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடைகளையும் அடக்குமுறைகளையும் ஏவிய தமிழக காவல்துறை அதன் வழியாக தனது ‘கொடூர முகத்தை’ வெளிச்சப்படுத்தியது. இதற்காக கழகத் தோழர்கள் கொடுத்த விலை அதிகம். 8 மாதங்கள் வரை கழகத் தோழர்கள், கழகத் தலைவர் – தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை யிலடைக்கப்பட்டனர். அடக்குமுறைகளை எதிர் கொண்ட கழகம், உறுதியாக தனது கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தது. மக்கள் சந்திப்பு இயக்கம், கழகத் தீர்மானங்கள், விளக்கப் பரப்புரை, அகமண முறை எதிர்ப்புப் பரப்புரை, கிராமம் கிராமமாக பகுத்தறிவு பரப்புரை (சேலம் மேற்கு மாவட்டம் 20 ஊர்களில்) என்று ஒரே நேரத்தில் நான்கு பரப்புரை இயக்கங்களை – ஒரு வாரம், 10...

சுப்பிரமணியசாமிக்காக பதவி பறிக்கப்பட்ட ஐ.ஐ.டி. இயக்குநர் 0

சுப்பிரமணியசாமிக்காக பதவி பறிக்கப்பட்ட ஐ.ஐ.டி. இயக்குநர்

சுப்ரமணிய சாமியின் கருத்து – தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்றும், அவர் கருத்துகள் பா.ஜ.க. வின் கருத்து அல்ல என்றும் தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்னப்பர் போன்ற பா.ஜ.க.வின் ‘சூத்திர’ தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க.வில் சுப்ரமணியசாமி செல்வாக்குள்ள நபராகவே உலவுகிறார் என்பதற்கு சான்றாக அண்மையில் ஒரு செய்தி வந்துள்ளது. டெல்லி அய்.அய்.டி. (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் இரகுநாத். கே.செவ்கவோன்கர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அய்.அய்.டி. – குடி யரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட் டிலுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு. ஆனால், இவரது பதவி விலகல் கடிதம், மனித வளத் துறை அமைச்சரால் ஏற்கப்பட்டிருக்கிறது. கட்டாயப் படுத்தப்படுத்தி மோடி ஆட்சி இவரிடமிருந்து விலகல் கடிதத்தை வாங்கியுள்ளதாக தலைநகரில் செய்திகள் உலா வருவதாக ‘இந்து’ நாளேடு (டிச.29) கூறுகிறது. காரணம், சுப்ரமணிய சாமியின் பிரச்சினைதான் 1969ஆம் ஆண்டு சுப்ரமணியசாமி, இந்த நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்து, பிறகு இந்திரா...

கடவுள், மத அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கும் பகுத்தறிவுக் காவியம் 0

கடவுள், மத அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கும் பகுத்தறிவுக் காவியம்

அமீர்கான்-ராஜ்குமார் கூட்டணி யில் வெளி வந்திருக்கும் ‘பிகே’ இந்தி திரைப்படம் ஆங்கில உள் தலைப்பு களுடன் சென்னையில் திரையிடப்பட் டிருக்கிறது இந்தப் படம். திரைப்பட வரலாற்றில் புதிய திருப்புமுனையை உருவாக்கியிருப்பதை நம்மால் உரத்துச் சொல்ல முடியும். கடவுள், மதம் என்று மனிதர்கள் உருவாக்கிய கற்பனைகளை கூர்மையான பகுத்தறிவு வினாக்களால் தகர்த்து உடைக்கிறது. வேற்றுக்கிரக விண்வெளி வீரரான அமீர்கான், விண்வெளிக்கலம் ஒன்றில் பூமியில் வந்து இறங்கியவுடன் அவரிடமிருந்த ‘ரிமோட் கன்ட்ரோல்’ கருவியை இராஜ°தான் பாலைவனத்தில் ஒருவர் திருடிக் கொள்கிறார். மீண்டும் அந்த கருவி இருந்தால் மட்டுமே விண்வெளிக்கு திரும்ப முடியும் என்ற நிலையில் ரிமோட் கன்ட்ரோலைத் தேடித் திரியும்போது, அது கிடைக்காத நிலையில் ‘இனி கடவுளால் மட்டும்தான் தேடித் தர முடியும்’ என்று பலரும் அறிவுரை கூறுகிறார்கள். கடவுளைத் தேடும் முயற்சியை தொடங்குகிறார். கடவுளும் கிடைக்காத நிலையில் ‘கடவுளைக் காணவில்லை’ என்று கடவுள் படத்தை அச்சிட்டு வீதி வீதியாக வழங்கி தேடத் தொடங்குகிறார்....

முற்போக்கு பேசினாலும் ஜாதிப் பெருமையை விடாதவர்கள் பார்ப்பனர்களில் ஏன் ஒரு ‘வால்டேர்’ உருவாகவில்லை? 0

முற்போக்கு பேசினாலும் ஜாதிப் பெருமையை விடாதவர்கள் பார்ப்பனர்களில் ஏன் ஒரு ‘வால்டேர்’ உருவாகவில்லை?

மதச்சார்பின்மை பேசிக் கொண்டு ‘இந்துத்துவா’ எதிர்ப்பாளர்களாக வலம் வரும் பார்ப்பனர்களிடமும் அவர்களின் பார்ப்பனியப் பிறவி பெருமிதம் அடிநாதமாக இயங்கிக் கொண்டிருப்பதை விவரிக்கிறது இக்கட்டுரை, ‘அவுட் லுக்’ இதழில் (டிச.1) எஸ்.ஆனந்த் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே தரப்படுகிறது. பார்ப்பனர்களிலேயே தங்களை மிகவும் மேலாகக் கருதிப் பெருமைப்படுவோர் “கவுத் சரஸ்வதி பிராமணர்” என்ற பார்ப்பனப் பிரிவினர். தங்களின் பிறவிப் பெருமைக்கு ஒரு ‘கற்பனை’யை வரலாறாக அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆறு ஓடிய காலத்திலேயே இவர்கள் ரிக் வேதத்தை ஓதியவர் களாம்! (இப்போது அப்படி ஒரு ஆறு கிடையாது. ஆனாலும் பூமிக்கடியில் அது ஓடிக் கொண்டிருப் பதாக பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.) விஷ்ணு ‘பரசு ராமனாக’ அவதாரம் எடுத்து வந்து சத்திரிய வம்சத்தையே 21 முறை தாக்கி பூண்டோடு அழித்து விட்டபோது, சத்திரியர்கள் இடத்துக்கு ‘சரசுவதி பிராமணர்கள்’ வருவார்கள் என்று அறிந்த ‘பரசு ராமன்’ அவர்களுக்கான ‘புண்ணிய பூமி’யை சகா...

‘பாரத ரத்னா’ விருது பெறும் மாளவியா-வாஜ்பாய் அரசியல் பின்னணி என்ன? 0

‘பாரத ரத்னா’ விருது பெறும் மாளவியா-வாஜ்பாய் அரசியல் பின்னணி என்ன?

மோடியின் ஆட்சி மதன் மோகன் மாளவியா-வாஜ்பாய் இருவருக்கும் நாட்டின் உயர் விருதாக கருதப்படுகிற ‘பாரத ரத்னா’ விருதுகளை வழங்க முடிவு செய்திருக்கிறது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியவாதிகள் என்ற அடையாளத்தோடு வாழ்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு சாதனைகள் ஏதும் நிகழ்த்தாதவர்கள். மதச்சார்பற்ற நாடு என்று கூறப்படும் இந்தியாவில் ஆட்சி அதிகாரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதற்கு இந்த அறிவிப்புகளும் ஒரு சான்று. வாஜ்பாய்- மதன் மோகன் மாளவியாவின் பின்னணிகள் என்ன? வாஜ்பாய் யார்? ‘ஜென்டில்மேன் வாஜ்பாய்’ என்று சில தமிழ் நாட்டு தலைவர்கள் அவரைப் புகழ்ந்தாலும் வாஜ்பாய் தீவிர மதவெறியர் என்பதே அவரது வரலாறு. சில சான்றுகள்: 1. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய் இவ்வாறு பேசினார்: “நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள்மீது அமர்ந்து கொண்டு, பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

‘தில்லை நடராஜன்’ கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். – செய்தி கோயில் உரிமை ‘அவாளு’க்கு மட்டும்; தேர் இழுக்கும் உரிமை ‘சூத்திராளுக்கு’ மட்டும்! ‘இந்து ஒற்றுமை’ ஓங்குக… பிற மதத்திலிருந்து ‘தாய் மதத்துக்கு’ திருப்பும் இயக்கத்தை விசுவ இந்து பரிஷத் தீவிரமாக நடத்துகிறது. – செய்தி அமெரிக்கா, இலண்டன்னு ‘பிற தேசம்’ போன இந்துக்களை ‘தாய் தேசம்’ நோக்கித் திருப்பும் இயக்கத்தையும் நடத்துவேளா? ‘மிஸ்டு கால்’ போட்டால் பா.ஜ.க.வில் உறுப்பின ராக முடியும். – செய்தி 10 ‘மிஸ்டு கால்’ வந்தால் ‘டாக்டைம்’ சலுகை உண்டுன்னு அறிவிச்சுப் பாருங்க, இன்னும் ஆதரவு பெருகும்! ஸ்ரீரங்கம் ‘சொர்க்க வாசல்’ திறப்பின்போது பக்தர்களுக்கு உதவிட 108 ஆம்புலன்ஸ். – செய்தி நியாயம்தான். உண்மையாகவே எந்த பக்தராவது சொர்க்கத்துக்குப் போயிடாம தடுக்க வேண்டியது கோயிலின் கடமையாச்சே! கடமை தவறுவது, ‘கடவுளுக்கே’ ஆகாது. டெல்லி – தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி...

காந்தி கொலை வழக்கு விசாரணை : சில தகவல்கள் 0

காந்தி கொலை வழக்கு விசாரணை : சில தகவல்கள்

• காந்தியார் கொலை வழக்கு 1948 மே மாதம் இறுதியில் டெல்லி செங்கோட்டையில் தொடங்கி 7 மாதங்கள் நடந்தன. டிசம்பர் 30ஆம் தேதி நிறைவடைந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச் ஆத்ம சரண். • வழக்கு விசாரணை வெளிப்படையாக நடந்தது. உரிய அனுமதி பெற்று வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். • வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் சாவர்க்கருக்கு 8 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். கோட்சே உட்பட ஏனையோருக்கு தலா ஒரு வழக்கறிஞர் மட்டுமே வாதிட்டார். • வழக்கின் முதன்மைக் குற்றவாளியான கோட்சே, நாராயண் ஆப்தே இருவரும் சாவர்க்காரின் சீடர்கள். இவர்களின் செயல்பாடுகள் அனைத்துக்கும் சாவர்க்கர் ஆதரவு இருந்ததை காவல்துறை தரப்பு நிரூபித்தது. ஆனால், சதித் திட்டத்தை சாவர்க்கார் தான் உருவாக்கித் தந்தார் என்பதை மட்டும் அரசு தரப்பால் நிரூபிக்க முடியாததால் அவர் வழக்கிலிருந்து விடுதலை ஆனார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு சாவர்க்கார் நடுநாயகமாக அமர்ந்து எடுத்துக் கொண்ட...

காந்தி எழுதாத கட்டுரையை எழுதியதாகக் கூறிய பொய்யர்கள் 0

காந்தி எழுதாத கட்டுரையை எழுதியதாகக் கூறிய பொய்யர்கள்

பாபர் மசூதிக்குள் நள்ளிரவில் ராமன் சிலைகளைப் போட்டு, அது ‘ராமஜென்ம பூமி’ என்று சங்பரிவாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை காந்தி ஆதரித்தார் என்று உண்மைக்கு மாறாக பொய்யான ஆதாரங்களை பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களே எழுதினார்கள். இந்தப் புரட்டுகளை அம்பலப்படுத்தி பிரபல எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: காந்திஜி எந்த இலட்சியங்களுக்காகப் பாடுபட்டாரோ அவற்றை நிராகரித்து வரும் சங் பரிவார் தனது அரசியலை நியாயப்படுத்திக் கொள்ள காந்திஜியின் பெயரையே பயன்படுத்திக் கொள்ளும் மோசடியை செய்து வருகிறது. பிரிட்டனில் செயல்படும் வி°வ இந்து பரிஷத்தின் தலைவரான எல்.சி. பௌன்ஞ் என்பவர் அயோத்தி பிரச்சினைப் பற்றி இந்துக்களின் கருத்து என்ன என்று விளக்கக் கடிதம் ஒன்றை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அளித்தார். இராம ஜென்ம பூமி பற்றிய சர்ச்சையைப் பற்றி காந்திஜியின் கருத்துக்கள் 27.7.1927 தேதியிட்ட ‘நவஜீவன்’ பத்திரிகையில் வெளி வந்துள்ளதாகக் கூறிய அவர் அவற்றைத் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார்....

“பார்ப்பனர் தீர்த்துக் கட்டி விடுவார்கள்” காந்தியாரை எச்சரித்தார் பெரியார் 0

“பார்ப்பனர் தீர்த்துக் கட்டி விடுவார்கள்” காந்தியாரை எச்சரித்தார் பெரியார்

1927இல் பெங்களூரில், பெரியார், காந்தி அழைப்பை ஏற்று அவரை சந்தித்துப் பேசினார். அப்போது பெரியார் காங்கிரசை விட்டு விலகி, 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இராஜாஜி உடனிருந்hர். “இந்து மதத்தில் இருந்துகொண்டே நாமெல்லாம் சீர்திருத்தம் செய்யலாம்” என்றார் காந்தி. “இப்படி செய்தால் பார்ப்பான் உங்களை விட்டு வைக்க மாட்டான்” என்றார் பெரியார். “இராஜாஜி கூடவா அப்படி?” என்று காந்தி கேட்கிறார். உடனே பெரியார், “இராஜாஜி திறமையானவர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். புத்திக் கூர்மையானவர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவர் இனத்திற்கு அதை பயன்படுத்துகிறார். பொது மக்களுக்கு பயன்படுத்துவதில்லை” என்று இராஜாஜியை வைத்துக் கொண்டே சொன்னார். “அப்படியா, பார்ப்பனரில் யாருமே யோக்கியன் இல்லையா? கோபாலகிருஷ்ண கோகலே யோக்கியமாக யில்லையா?” என்று கேட்கிறார். “மகாத்மாவின் கண்ணிற்கே ஒருவர்தான் தெரிகிறார். என் கண்ணிற்கு என்ன தெரியும்?” என்று சொல்லி பெரியார் கிளம்புகிறார். அப்போது பெரியார் சொல்கிறார், “நீங்கள் இந்து மதத்திற்கு ஜால்ரா போடும்வரை பார்ப்பான் உங்களை...

பம்பாயில் வெடித்துக் கிளம்பிய பார்ப்பன எதிர்ப்பு: அன்றைய உள்துறை அமைச்சர் பதிவு செய்த வரலாறு 0

பம்பாயில் வெடித்துக் கிளம்பிய பார்ப்பன எதிர்ப்பு: அன்றைய உள்துறை அமைச்சர் பதிவு செய்த வரலாறு

காந்தியார், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில் – மராட்டிய மக்கள் எப்படிப்பட்ட உணர்வு களைக் கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பார்ப்பனத் தன்மையை தெளிவாகவே அடையாளம் கண்டுகொள்ள முடியும்! மராட்டிய மண்ணில் – காந்தியார் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி வந்தவுடன் பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாத மக்கள் வீறுகொண்டு எழுந்தார்கள். கொலை செய்த கோட்சேவுக்கும், தங்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சாதிக்க முயன்றாலும், மராட்டிய மக்களுக்கு அந்த மண்ணிலே உருவான இயக்கத்தின் பின்னணிகள் புரியாதா? எனவே ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எதிராக மட்டுமல்ல; பார்ப்பனர்களுக்கு எதிராகவே மராட்டிய பார்ப்பனரல்லாத சமுதாயம் கொதித்து எழுந்தது! தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் இந்த செய்திகளை எல்லாம் – அப்போது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டன! மராட்டிய மாநிலத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு எழுந்த அந்தக் காலக்கட்டத்திலே, அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் துவாரகா...

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா 0

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா

தமிழீழத்தை மீட்டெடுக்க தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் போராடி, சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத் தாலும் வெல்லமுடியாத தளபதியாகத் திகழ்ந்த பிரிகேடியர். பால்ராஜ் அவர்களைப்பற்றிய ”பிரிகேடியர் பால்ராஜ்- சமர்க்கள நாயகன்” (இராவணன் பதிப்பகம் பதிப்பித்த) நூல் வெளியீட்டு விழாப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது. விழாவில் புதுச்சேரி மாநிலக் கழகத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் தலைமை உரையாற்றினார். அவ் வுரையில், ”ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது சிங்களர்கள் அல்ல! இந்திய ஆட்சியாளர்கள்!!” என்பதைக் குறிப்பிட்டார். தோழர் இர.தந்தைப் பிரியன் வரவேற்புரையாற்றினார்.நூலினைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி வெளியிட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர். தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். நூலின் முதல்படியினைத் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். கொளத்தூர் மணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால நிலையினை...

காந்தியார் மறைவு: பெரியார் வானொலியில் பேச்சு 0

காந்தியார் மறைவு: பெரியார் வானொலியில் பேச்சு

காந்தியார் மறைவு செய்தி வந்தவுடன், தமிழ்நாட்டு வானொலி நிலையம் தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பேச செய்தது. கலவரங்களில் ஈடுபட வேண்டாம் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார். “பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்களனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது, அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை பெற்றுவிட்டன. காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக் குரியதாகும். பல திறப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்து கொண்ட காந்தியார், இக் கொடுந் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்களென்றால் இது மிகவும் வெறுக்கத் தக்கதாகும். இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிகார கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வரவேண்டும். வடஇந்தியாவில் நடைபெற்றுவரும் கலவரங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியேயாகும்....

கோட்சே ஆர்.எஸ்.எஸ். நெருக்கமான தொடர்புகள் – ஆதாரத்துடன்… 0

கோட்சே ஆர்.எஸ்.எஸ். நெருக்கமான தொடர்புகள் – ஆதாரத்துடன்…

காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு! மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை, ‘Story of my life’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில், “காந்தியாரை சுட்டுக் கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்” என்று எழுதியிருக்கிறார். ஏ.ஜே. குர்ரான் எழுதிய ‘Millitant Hinduism in Indian politics’ என்ற நூலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவருடன், சுற்றுப் பயணங்களில் உடன் சென்று கொண்டிருந்தவன் கோட்சே என்பதை எடுத்துக் காட்டி யிருக்கிறார். நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, காந்தியாரைக் கொலை செய்யப் புறப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகளை தனது வாக்குமூலத்தில் விவரிக்கிறார். காந்தியாரை சுட்டுக்கொல்ல சென்றபோது, கோட்சே பாடிய பிரார்த்தனைப் பாடலை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அது ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களில் பாடப்படும் சமஸ்கிருதப் பிரார்த்தனைப் பாடல். கோட்சே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்துவிட்டு, பிறகு அதிலிருந்து விலகிப் போய்விட்டார் என்ற...

கோட்சேயின் சமூகப் பின்னணி 0

கோட்சேயின் சமூகப் பின்னணி

கோட்சேயின் குடும்பத்தில் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில், அது பிறக்காத சூழலில் கோட்சேயை பெண் குழந்தையாக பாவித்து மூக்குத்தி மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை அணிவித்து வளர்க்கப்பட்டார். இதனால் கோட்சேயின் பாலின அடையாளம் குழப்பமாகி அது அவருக்கு சிக்கலான இளம் பருவமாக இருந்தது. அரசியலிலும் சமூகத்திலும் ஆதிக்கத்திலேயே இருந்து வரும் சித்பவன் சாதிக் குடும்பம், திடீரென வறுமையில் வீழ்ந்தது. அதிகாரமில்லாததால் ஏற்பட்ட விரக்தியும், பாலின அடையாளச் சிக்கலும் சேர்ந்து கொண்டு அவனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்கும் பொருட்டு அவனை ஒரு தீவிரவாதியாக மாற்றியிருக்கலாம் என்று அரசியல் உளவியலாளர் ஆசிஸ் நந்தி, ‘உளவியலின் விளிம்பு’ (எட்ஜ் ஆப் சைக்காலஜி) என்ற நூலில் குறிப்பிடுகிறார். “பெண்கள் தனக்கு முன்னால் நிற்பதையே வெறுப்பவர். கடுமையான தலைவலியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்பட்டவர். ஒருமுறை இந்தத் தலைவலியால் அவதிப்பட்டபோது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். கண்விழித்துப் பார்த்த போது தனக்கு ‘பெண் நர்சுகள்’ பணிவிடை செய்தது தெரிந்தது! உடனே ஆத்திரமடைந்து...

காந்தியார் கொல்லப்பட்ட அந்த நேரத்தில்… 0

காந்தியார் கொல்லப்பட்ட அந்த நேரத்தில்…

1948 ஜனவரி 30, பார்ப்பன கொலைவெறிக்கு காந்தியார் பலிகடா ஆன நாள் அதுதான்! புதுடில்லியில் உள்ள பிர்லா மாளிகையில் – தனது அறையிலிருந்து காந்தி புறப்பட்டார்; அதுவரை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக் கொண்டிருந்தவர் – பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று பட்டேலிடம் விடைபெற்றுக் கிளம்பி, பிரார்த்தனை மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காந்தியாரின் பேத்தி ஆவா காந்தி, மருமகள் மனு காந்தி ஆகியோர் தோள் கொடுக்க – தோட்டத்தைக் கடந்து பிரார்த்தனை மேடைக்கு வந்தார்; மண்டபத்தை அடைய இன்னும் 4 அடிகளே எடுத்து வைக்க வேண்டும். 500 பேருக்கு மேல் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது; அப்போது கூட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 35 வயதுடைய இளைஞன் ஒருவன் வந்தான். தனது உடலை வளைத்து குனிந்து ‘பிராணம்’ (சல்யூட்) செய்தான். காந்தியார் திரும்பி மரியாதை செலுத்தினார். ‘இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகி விட்டது அல்லவா?’ என்று கேட்டான். காந்தியார் சிரித்துக் கொண்டே, ‘ஆம்; நேரமாகி...

இராமாயண எரிப்பு ஏன்? 0

இராமாயண எரிப்பு ஏன்?

இராமாயணத்தை ஆரியர் – திராவிடர் போராட்டம் என்றும்; ‘இராமாயணக் கதை திராவிடரை இழிவுபடுத்துவதற்காகவே ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதை’ என்றும்; ‘இராமாயணக் கதை ஆரியருக்குத் திராவிடர்கள் மீது இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பார்ப்பனரால்) புனையப்பட்ட கதை’ என்றும்; ‘இராமன் ஆரியத் தலைவன் – இராவணன் திராவிட அரசன்’ என்றும்; மற்றும் ‘இராமாயணம் புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ என்றும்; ‘இராமாயணம் நடந்த கதையல்ல, சரித்திரத்தில் பட்டது அல்ல, நீதியும் அல்ல’ என்றும்; ‘இராமாயணம் பார்ப்பனர்கட்கு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைத் தொகுப்பு’ என்றும் – மற்றும் பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்படப் பார்ப்பனராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும், சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழறிஞர்களாலும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றன. அவைகட்கு அன்று முதல் இன்று வரை எந்த அறிவாளியும் – தமிழரில் எந்தப் புலவரும் ஆட்சேபணையோ, மறுப்போ கூறியது கிடையாது. மற்றும், இந்த...

தீண்டாமையை எதிர்த்த காந்தி மீது மலம் வீசிய பார்ப்பனர்கள் 0

தீண்டாமையை எதிர்த்த காந்தி மீது மலம் வீசிய பார்ப்பனர்கள்

ஆய்வாளர் இராமச்சந்திர குகா வெளியிடும் தகவல் தீண்டாமையை எதிர்த்து காந்தியார் பேசியதற்காக சங்பரிவாரங்களின் முன்னணி அமைப்பாகிய ‘இந்து மகாசபை’ காந்திக்கு கருப்புக் கொடி காட்டி, கலவரம் செய்ததோடு காந்தியாரை 1934ஆம் ஆண்டிலேயே கொல்லவும் முயற்சி செய்தது. இந்த வரலாற்று உண்மைகளை எழுதியிருப்பவர் இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளராக கருதப்படும் இராமச்சந்திர குகா இது குறித்து ‘இந்து°தான் டைம்°’ நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: “காந்தியின் தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் கடும் அச்சுறுத்தலை சந்திக்க வேண்டியிருந்தது. காரணம், தீண்டாமை எதிர்ப்பு – இந்து பழமைவாதத்தின் ஆணிவேரையே அசைப்பதாகும். அப்போது சங்கராச்சாரிகள், காந்தியை கடுமையாகக் கண்டித்தனர். “சம°கிருதம் பற்றி துளிகூட தெரிந்திராத ஒரு பனியாவுக்கு, இந்து புனித நூல்கள் பற்றி என்ன தெரியும்? இந்து புனித சா°திரங்கள் தீண்டாமையை அங்கீகரித்திருக்கிறது. அதையெல்லாம் மறுத்துப் பேச காந்திக்கு யோக்கியதை கிடையாது” என்று சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காந்தியை இந்து மதத்திலிருந்து விலக்கி...

காந்தி மீது 9 முறை நடந்த கொலை முயற்சிகள் 0

காந்தி மீது 9 முறை நடந்த கொலை முயற்சிகள்

சுனிபாய் வைத்யா என்ற குஜராத் மாநிலக்காரர் காந்தி கொலை பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதினார். அப்போது அவருக்கு வயது 85. சர்வோதய இயக்கத்திலும், வினோபாவின் பூமி தான இயக்கத்திலும் பங்கு பெற்றவர். இவர் குஜராத்தில் ‘பூமி புத்ரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இந்திராவின் அவசர நிலைக் காலத்தில் 7 மாதம் சிறையில் இருந்தவர். காந்தியைக் கொன்ற கோட்சேயை – மாவீரனாக சித்தரித்து, மராட்டியத்தில் ஆர்.எ°.எ°.காரர்கள் நாடகம் நடத்தியபோது இந்த முதியவர் கொதித்தெழுந்து, காந்தி கொலை பற்றிய ஒரு நூலை வினா-விடை வடிவத்தில் எழுதினார். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் வேறு பல மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மதுரையில் ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’ என்ற அமைப்பின் சார்பில் – இதன் தமிழ் பதிப்பும் வெளி வந்திருக்கிறது. அதில் காந்தியைக் கொலை செய்வதற்கு – சுமார் 9 முறை முயற்சிகள் நடந்தன என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்....

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா 0

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா

காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் தினேஷ்குமார் சகோதரரும், மு. ரமணி -கு.குருசாமி மகனுமான மு.இராஜேஷ், மறைமலை நகர் கே.நாகலட்சுமி-சு.கேசவன் ஆகியோரின் மகள் கே. காயத்ரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா 4.1.2015 ஞாயிறு மாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, வே. மதிமாறன், வ. வேம்பையன், மு.பிச்சைமுத்து, மா. சமத்துமணி, சு. செங்குட்டுவன் (மாவட்ட தலைவர்) வாழ்த்துரை வழங்கினர். பெண் வீட்டார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தி.வி.க. – தி.க. தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 15012015 இதழ்

7000 ஆண்டுகளுக்கு முன்பு விமானம் விட்டார்களாம்! 0

7000 ஆண்டுகளுக்கு முன்பு விமானம் விட்டார்களாம்!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த, மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரசில் (ஜன.3-7) படிக்கப்பட்ட சில கட்டுரைகள் – சர்வதேச விஞ்ஞானிகளிடையே இந்தியாவை கேலிக்கும் அவமானத் துக் கும் உள்ளாக்கியிருக்கிறது. ‘சமஸ்கிருதத்தில் அறிவியல்’ என்ற தலைப்பில் ஒரு தனி அமர்வு அமைக்கப்பட்டதாம் அதில் ‘ஆய்வு’ கட்டுரை ஒன்றை படித்திருக்கிறார், விமான கேப்டனாக இருந்த போடாஸ் என்பவர், 7000 ஆண்டு களுக்கு முன்பே, முன்னோர்கள் விமானம் ஓட்டியதாகவும், அந்த விமானம் பூமியில் மட்டுமல்ல, வானமண்டலத்திலேயே கிரகங்கள் விட்டு கிரகங்களுக்கு பறந்ததாகவும் – ஏதோ, பள்ளிக்கூட மாணவன் தேர்வு மதிப்பெண்ணுக்கு எழுதும் கற்பனைக் கட்டுரை போல தரம் தாழ்ந்த ஒரு ‘ஆய்வை’ முன் வைத்திருக்கிறார். கொதித்துப் போன, அமெரிக்காவில் ‘நாசா’வில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானி காந்தி ராமனும், 200க்கு மேற்பட்ட அறிவியல் விஞ்ஞானி களும் இந்த உரையை வன்மையாகக் கண்டித்ததோடு, இதுபோன்ற கட்டுரைகள், இந்திய அறிவியலின் பெருமைகளை மிகவும் கீழ்த்தரமாக்கி விடும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்....

தலையங்கம் – படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்! 0

தலையங்கம் – படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்!

சமூகம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு மதவாத சக்திகள், ஜாதியவாதிகளைத் தூண்டிவிட்டு நடத்தி வரும் போராட்டம் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவாகும். இந்த நிலையில் படைப்பிலக்கியவாதிகள் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நம்பிக்கையைத் தருகிறது. திருச்செங்கோடு தேர்த் திருவிழா நாளில் திருமணமான ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் உறவு கொள்ளும் ஒரு பழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிலவியதை கதைக்களம் சுட்டுகிறது என்பதாலேயே திருச்செங்கோட்டையே இழிவுபடுத்துவதாக மதவாத சக்திகள், உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கதவடைப்பு நடத்தும் அளவுக்கு எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளனர். ஒரு படைப்பாளி, சமூக தொன்மங்களை தனது கற்பனை கலந்து படைப்பாக்கும் உரிமைகளை அச்சுறுத்துவது மிக மோசமான வன்முறை என்றே கூற வேண்டும். தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் சங்பரிவாரங்கள், இத்தகைய பிரச்சினைகளை ஆங்காங்கே உருவாக்கி வருகின்றன. அந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது தெரிகிறது....