பணமாற்றம் செய்ய ‘க்யூ’ வரிசைக்கு பெரும்புள்ளிகள் வராதது ஏன்?

இனிப்போ, கசப்போ அதன் பெயர் மருந்து. அதையும் அருந்தச் சொல்வது அரசன் என்கிறபோது மக்கள் ஏற்கத்தான் வேண்டும். பழைய ஆயிரமும், ஐந்நூறும் செல்லாது என்ற ‘அரச’ அறிவிப்புக்கு இதுதான் இப்போதைய சமாதானமாக இருக்க முடியும். ஆனால், ஒட்டு மொத்த மக்களும் இந்த மருந்தை ஒன்றே போல்தான் சுவைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

பெரும்பாலான நடுத்தர, ஏழை மக்கள் நவம்பர் 9ஆம் தேதி இரவு ஒன்பது மணியிலிருந்து வங்கிகளின் வாசலில் நின்றுகொண்டுதான் இருக் கின்றனர். அனைவரின் கைகளிலும்

5 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை யில், அவ்வளவும் பழைய ரூபாய் நோட்டுகள். பணம் இருக்கிறவர்கள், வங்கிப் பக்கம் தென்படவே இல்லை. அரசியல்வாதிகளோ, தொழில் அதிபர் களோ, சினிமா நட்சத்திரங்களோ வங்கி வரிசையில் காணவில்லை. அவர்களிடம் இருக்கிற பணத்தை யார் மாற்றுகிறார்கள் என்பதுதான் பிரதான கேள்வியாக இப்போது எழுந்துள்ளது.

பண மாற்றத்துக்கு முக்கிய மேலிடத்தை அணுகும் வி.ஜ.பி.க் களிடம், அதிகார மைய ஆட்கள், “இதில் நாங்கள் உதவ முடியாது, நாங்கள் சொல்லி அனுப்பியதாக நீங்களே போய்ப் பார்த்து விடுங்கள். நாங்கள் ஒரு பட்டியலைக் கொடுத் துள்ளோம். அதில் உங்கள் பெயரும் இருக்கிறது” என்கிறார்களாம்.

அடகுக் கடை, ஜவுளிக்கடை, மொத்த விலைக் கடைகளை நிர்வகிக்கும் தொழிலதிபர்களும் வங்கிகளில் தொடர்புள்ள அரசியல் பின்புலம் கொண்ட பிரமுகர்களின் வீடுகளுக்குப் போய் வந்து கொண் டிருக்கிறார்கள். வாங்குகிற பணத்தில் மொத்தத்தில் 25 சதவீதம் கமிஷன் தொகையை அந்தப் பிரமுகர்கள் எடுத்துக் கொள்கின்றனர். (வங்கியில் கொண்டுபோய்க் கட்டினால் 70 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு 30 சதவிகிதம் மட்டுமே கொடுப்பார் களாம்) ஒரு கோடியைக் கொடுத்தால் மறுநாளே 75 இலட்ச ரூபாயைக் கொடுத்து விடுகிறார்கள். பணமும் கறுப்பு கணக்கிலிருந்து வெள்ளை யாக மாறி விடுகிறது.

மீடியேட்டராக செயல்படும் பிரமுகர்கள், அந்தப் பணத்தை வங்கி யில் செலுத்துவதில்லை. அப்படிச் செய்தால், அது அவர்களுக்கே இழப்பைக் கொடுக்கும். நேரடி யாகவே வங்கிகளில் தொடர்புள்ள மீடியேட்டர்கள் உதவியுடன் அந்தப் பணத்தை எடுத்து விடுகிறார்கள்.

நாளொன்றுக்கு நபர் ஒருவர் ரூ.4 ஆயிரம்தான் எடுக்க முடியும், என்ப தால், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற வற்றைச் சேகரித்து மொத்தமாக கையில் வைத்துக் கொண்டு ‘செய்வதைத் திருந்தச் செய்’ பாணியில் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

பல மாவட்டங்களில் ஆட்கள் இல்லை, முகவரி சரி இல்லை, முகவரி மாற்றம் என்று பல காரணங்களைச் சொல்லி குப்பையில் கொட்டப்பட்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள் இன்றைய தேதியில் இதற்குத் தான் பயன்பட்டிருக்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, எல்லாமே மிகப் பெரிய திட்டத்தின் பின்னணியைக் கொண்டிருப்பது விளங்க வரும். அதிகார மையத்தில் இருக்கும் பலர் நேரடியாக வங்கி களைத் தொடர்பு கொள்வதில்லை. வங்கிகளின் மீடியேட்டர்களை, தங்களுடைய உதவியாளர்கள் மூலமாக சந்திக்க வைத்து பணப் பரிமாற்றத்தை நடத்திவிடுகின்றனர்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமும் பழைய ஐந்நூறு, ஆயிரம் நோட்டுக்கள் மாற்றப்பட்டு பணப் பரிமாற்றம் பரவலாகி இருக்கிறது. நபர் ஒருவர் 2 இலட்ச ரூபாய் வரையில் முதலீடு என்ற கணக்கில் பலர் முதலீடு செய்துள்ளனர். ஒரு குழுவில் 200 பேர் வரையில் இருக்கிறார்கள்.

சரியாக 20 நாட்கள் கழித்து அந்தப் பணத்தை திரும்ப எடுத்து வந்து முதலீடு செய்ய கொடுத்தவரிடமே ஒப்படைத்துவிட  வேண்டுமாம். இதற்கு கமிஷனாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக உறுதி கொடுக்கப்பட் டுள்ளதாம். கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஏராளமான ‘அறக்கட்டளை’ கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கள் வெளியாகியுள்ளன. அறக் கட்டளையின் வாயிலாக 80ஜி பதிவுச் சட்டப்படி நன்கொடைகள் வழங்கு வது, பெறுவது என்று வேலைகள் வேகமாகப் போய்க் கொண்டிருக் கின்றன. புதிதாக நிறுவப்பட்ட கம்பெனிகள், ஏற்கெனவே இருந்து திவாலான கம்பெனிகள் ‘குரூப் ஆப் கம்பெனீஸ்’ என்ற அடிப்படையில் நூற்றுக்கணக்கில் கிளைகளைத் தொடங்கி அவற்றுக்கு அதேபோன்று இயக்குநர்களைப் போட்டுள்ளனர்.

பெரும்பாலான கம்பெனிகளில் இலாபத்தை குறைவாகக் காட்டியும், வேலை நடக்கிறது. இழப்பை அதிகமாகக் காட்டியும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி வரு கின்றனர். இவர்களின் கம்பெனிகளில் ‘கறுப்புப் பண’ முதலைகள் கோடிக் கணக்கில் பணத்தைக் குவிக்கின்றனர்.

ஒரு மாதம் கழித்து, புதிதாக ஆரம்பித்த குரூப் ஆஃப் கம்பெனீஸ் அதிபர்கள், தங்கள் கம்பெனியின் வாயிலாகவே 30 சதவிகிதக் கழிவுடன் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி மீண்டும் கறுப்பு முதலைகளின் கைகளுக்கேத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். அதேபோல் ஊழியர் களின் சம்பளப் பணத்தையும் பன்மடங்கு கூடுதலாகக் காட்டி அனைத்தையும் ‘வெள்ளை’ ஆக்கிக் கொண்டுள்ளனர்.

இலட்சக்கணக்கில் மட்டுமே தொகையைக் கையில் வைத்திருக்கும் நபர்கள், உள்ளூர் ஆட்களிடம், ‘ஆயிரம் ரூபாய்க்கு 300 ரூபாய் கமிஷன்’ கொடுப்பதாக உறுதி கொடுப்பதால், பரவலாகப் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் வங்கிகளின் வாசலில் உள்ளூர் ஆட்கள் காத்துக் கிடக்கின்றனர். வங்கிகளில் கொடுத்தால் 70 சதவிகிதம் வருமான வரியே போய்விடும் என்ற நிலையில் 30 சதவிகிதம் நஷ்டத்தில் இலாபம் தானே?

(‘ஜுனியர் விகடன்’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)

பெரியார் முழக்கம் 17112016 இதழ்

You may also like...