‘ஜெ.’ மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது பெருங்குற்றமா!
‘நக்கீரன்’ மீதான தாக்குதலை கண்டிக்கிறோம் முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. புரதச் சத்தும், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவு மாட்டிறைச்சி. கோழி, ஆடு இறைச்சியைப் போல், மாட்டிறைச்சி மற்றொரு உணவு. உண்மையிலே ஜெயலலிதா மாட்டிறைச்சி உண்டிருப்பாரானால், அதனால் அவருக்கு பெருமையே தவிர, ‘இழிவு’ அல்ல. ‘பசு மாடு’ மட்டும் புனிதமானது என்று போராடுகிறவர்கள் பார்ப்பனர்கள் தான்! பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள், இதை கொள்கையாக வைத்துப் போராடி வருகின்றன. சென்னையில் பார்ப்பன பத்திரிகை விழா ஒன்றில் பங்கேற்க, ‘இந்துத்துவ’ பயங்கரவாதி,...