கோலாலம்பூரில் பகுத்தறிவு கருத்தரங்கு

மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பெரியார் அரங்கில் 8.7.2018 ஞாயிறு மாலை மூன்று மணி அளவில் ‘பகுத்தலும்-புகுத்தலும்’ என்ற தலைப்பில் மாண வர்கள் மற்றும் இளை ஞர்களுக்கான கட்டண மில்லா கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வரவேற்புரை வழங்கினார், நெறியாளர் சி.மு.விந்தைக்குமரன். எப்.காந்தராஜ் (மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர்) தொடக்க உரை நிகழ்த்தினார்.  கெ.வாசு (துணை தலைவர், மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்) தலைமையேற்றார். மரு.கிருட்டிணன், பாரி சுந்தரம், செம்பியன், பட்டுக்கோட்டை கவிமணி ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள். மு.முகிலன் நன்றி உரை நிகழ்த்தினார்.  இதுபோன்ற கருத்தரங்கம் நாடளாவிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று  தொகுப்புரை வழங்கிய, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி கூறினார்.

பெரியார் முழக்கம் 12072018 இதழ்

You may also like...