உபநிஷத்துகள் கூறுகின்றன : சிலை வழிபாடு மூடர்களுக்கு மட்டுமே உரியது!
அத்திவரதர் சிலை தரிசனத்துக்கு மக்கள் திரண்டார்கள். ஆனால் வேதங்களுக்கு விளக்கவுரை வழங்கிய உபநிஷத்துகள் சிலை வணக்கம் மூடர்களுக்கே உரியது என்று கூறுகிறது. “அக்நி ரதே லோத் துவிஜாதீ நரம் முனி நாம் ஹிருதி தைவதம்: பர்மாஸ்வ பாபுத்தாரம் சர்வத்ர சமதர்கின” – உத்தரகீதை – சுலோகம். இதன் பொருள் : துவிஜர்களுக்குத் தெய்வம் நெருப்பில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி இல்லாத மூடர்களுக்குத் தெய்வம் விக்கிரகத்தில்; சமதிர்ஷ்ட்டி உடையவர்களுக்கு தெய்வம் எங்கும். “தீர்த்தே தாதையோ எக்ஞே – கார்ஷ்ட்டே பாஷாண கேபதா சிவம்பசிய தீ மூடாத்மா சிலோதெஹெபர் திஷ்டி தர.” – ஸகந்தம் – ஞானயோக காண்டம் இதன் பொருள் : தீர்த்ததிலும், தானத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும், கல்வியிலும் சிவன் இருப்பதாக மூடர்கள் நினைக்கிறார்கள். சிவன் தனக்குள்ளாகவே இருக்கிறது. “சிவம் ஆத்ம நிபஸ்யந்தி ப்ரதி மாஸு நயோகிநோ, அக்ஞானம் பாவ நார்த்தாய மரதிம பரிகல்பிதா.” இதன் பொருள் : யோகிகள்...
