Category: பெரியார் முழக்கம்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சரத்பிரபு உடல் பிரத பரிசோதனை முடிந்து தில்லியிலிருந்து 18.1.2018 இரவு 11 மணிக்கு திருப்பூரில் அவரின் இல்லத்தை வந்தடைந்தது.  மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, வடசென்னை மாவட்ட  செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கழகத் தோழர்கள் 10 பேர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் காலை 7 மணிக்கு இடுவம்பாளையம் இடுகாடு சென்று இறுதியஞ்சலி செலுத்த திட்டமிட்டு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களோடு மருத்துவர் சரத்பிரபு அவர்களின் இல்லத்தில் ஒன்றுகூடினர். அங்கிருந்து 3 கிலோமீட்டர் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. இந்த மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலையே என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டு இதன் மீதான மேற்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியிறுத்தினர். தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, இளந்தமிழகம், அம்பேத்கர் தேசிய இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட தோழர்களை காவல் துறை கைது செய்து இரவு எட்டு மணிக்கு...

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

கோபி இளங்கோவன்           –                 ரூ.1,00,000/- சென்னை கு. அன்பு தனசேகர்        –                 ரூ.1,00,000/- மேட்டூர் மார்டின்     –                 ரூ.50,000/- மேட்டூர் சம்பத்           –                 ரூ.50,000/- மயிலாடுதுறை இளையராசா      –                 ரூ.20,000/- மயிலாடுதுறை மகேஷ்    –                 ரூ.10,000/- சேலம் மேச்சேரி சூரி (எஸ். எஸ். சில்க்ஸ்)              –                 ரூ.10,000/- சூரிய குமார் (கொளத்தூர்)                 –                 ரூ.10,000/- வேணுகோபால்        –                 ரூ.10,000/- காவை சசி      –                 ரூ.10,000/- நல்லதம்பி மெடிக்கல்ஸ்                   –                 ரூ.10,000/- கோவிந்தராஜ்             –                 ரூ.5,000/- காவை இளவரசன்                   –                 ரூ.5,000/- விஜி    –                 ரூ.5,000/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வளர்ச்சி நிதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர், திருவரங்கம்டாக்டர்...

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

பிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்

பிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்

நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்தரங்கு நடத்திய மண்டபம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி கருநாடக பா.ஜ.க.வினர் பசுமாட்டு மூத்திரம் தெளித்து, துளசி செடிகளோடு தீட்டு கழிக்கும் சடங்குகளை நடத்தியுள்ளனர். கருநாடக மாநிலம் கன்வர் மாவட்டத்தில் சிர்சீ எனும் ஊரில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த ஜன.13 அன்று திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பிரகாஷ் ராஜும் கருத்தரங்கில் பேசியவர்களும் இந்து எதிர்ப்பாளர்கள்; மாட்டுக்கறி சாப்பிடக் கூடியவர்கள்; எனவே ‘புனித காரியங்கள்’ நடக்கும் மண்டபம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, மாவட்ட பா.ஜ.க. பெண்கள் பிரிவு தலைவர் ரேக்கா ஹெக்டே என்பவர் தலைமையில் சிரிசி பா.ஜ.க. இளைஞர் பிரிவு தலைவர் விஷால் மராத்தே உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கடந்த ஜன.15 அன்று திடீரென்று மண்டபத்துக்குள் நுழைந்து, மண்டபம் முழுதும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்தனர். ஜன.13 அன்று மண்டபத்தில் கருத்தரங்கு நடத்திய நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவருடன் பேசியவர்கள் இந்து மத எதிர்ப்பாளர்கள்; மாட்டுக்...

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

கழக சார்பில் திருப்பூரில் ஜன.14 அன்று காலை 8 மணி முதல் மாலை வரை, வீரபாண்டிப் பிரிவு பெரியார் திடலில் கோலாகலமாக கொண் டாடப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆடிட்டர் பழனிச்சாமி பொங்கல் வழங்கி தொடங்கி வைத்தார். 9 மணியளவில் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமுதம் இரா. கணேசன் தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமையில் பரிசளிப்பு விழா பொங்கல் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பு களைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர். பங்கேற்றோர் : முகில்ராசு (மாவட்டத் தலைவர்), மு. ரவிச்சந்திரன் (மாவட்ட பொருளாளர்), சு. நீதிராசன் (மாவட்ட செயலாளர்), க. அகிலன் (மாவட்ட அமைப்பாளர்), வி. தனபால் (மாநகர தலைவர்), சி. மாதவன் (மாநகர செயலாளர், த.சங்கிதா (மாவட்ட அமைப்பாளர்), மா. இராம சாமி (தெற்கு பகுதி செயலாளர்), அ.க. கருணாநிதி (வடக்குப் பகுதி செயலாளர்), சு. முத்துக்குமார்...

பெரியாரின் ‘இதழில்’ தனித்துவமானது

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமனிடம் ஒரு நேர்காணல். (சென்ற இதழ் தொடர்ச்சி) பெரியாரின் அறிவியல் பார்வை குறித்து…? அவர் தான் சொன்ன அனைத்திற்கும் அறிவியல் பார்வை கொண்டே விளக்கமளித்துள்ளார்… தமிழர்களின் பண்பாட்டு விசயங்களில் அவர் பார்வையே இன்னும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது என்றால் மிகையல்ல. குறிப்பாக தீபாவளி குறித்து அவர் பல சூழலில் பேசியுள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நிகழ்வு நம் பண் பாட்டின் அடையாளமா என்பதை அறிவியலின் துணை கொண்டே விளக்கினார். அது குறித்த விவாதங்கள் இன்றளவிலும் நடைபெறுவதையும், இக்கால தலைமுறையினர் பலர் அதை எவ்வாறு ஏற்றுக் கொண்டு பல மூடபழக்கங்களை புறந்தள்ளு கின்றனர் என்பதையும் பார்க்க முடிகிறதே. அது போலவே பெண்கள் கர்ப்பத்தடை குறித்து அவரின் பதிவுகள், அவரின் அறிவியல் தொலைநோக்குப்...

தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங், ஒரு தலித் மாணவன். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கும் மாணவர். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவரது இலட்சியம், கனவு. ஆனால் அந்தக் கனவு நிறைவேற இந்த சமூகம் அனுமதிக்கவில்லை. ஜஸ்ப்ரீத் சிங் வறுமையால் வாடும் சாதாரண தலித் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த பிள்ளையான இவரோடு, மற்ற மூன்று இளைய சகோதரிகளையும் உள்ளடக்கியது அவரது குடும்பம். தந்தை வேலைக்குப் போகிறார். தாய் வீட்டு வேலைகளையும் கவனித்தபடியே தூங்கும் நேரம் தவிர எப்போதுமே தையல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார். படிப்பில் திறமையுடன் விளங்கிய ஜஸ்ப்ரீத்தின் படிப்புக்காக மொத்தக் குடும்பமுமே ரத்தத்தை வியர்வை யாக்கி, உழைத்துத் தியாகம் செய்தது. மகனை ஒரு ஊர் போற்றும் மருத்துவனாகப் பார்க்க அந்தத் தாயும் ஆசைப்பட்டாள். மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சிணைக்கு...

மோடி அரசு கொல்ல சதி : தொகாடியா அலறல்

மோடி அரசு கொல்ல சதி : தொகாடியா அலறல்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகிலஇந்தியத் தலைவர் பிரவீன் பாய் தொகாடியா என்ற பார்ப்பனர் 15.1.2018 அன்று திடீரென மாயமானதாக கூறப்பட்டது. குஜராத் போலீசார்தான் அவரை கைது செய்திருப்பதாக விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.இந்நிலையில் தொகாடியா, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக, சுயநினைவில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே பிரவீன் தொகாடியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது குரலை அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் தொகாடியா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீசார் தன்னை மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்கவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தப்பித்து வந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.  “அவர்கள் (மோடி அரசு) என்னை என் கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தனது நண்பர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது” என்றார். பெரியார் முழக்கம் 25012018 இதழ்

பார்ப்பன உயர்கல்வி நிறுவனத்தின் அவமதிப்பு மற்றொரு மாணவர் பலியானார்!

தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி பயிலச் செல்லும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பார்ப்பன உயர்கல்வி நிறுவனங்கள் காட்டும் பாகுபாடு – திணிக்கும் மனஅழுத்தத்தால் உயிர்ப் பலியாகி வருகிறார்கள். தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்.டி. எனப்படும் முதுநிலை பொது மருத்துவ படிப்பில்முதலாம் ஆண்டு படித்து வந்த திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபு (24) தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி தனலட்சுமி. செல்வமணி காங்கயம் சாலையில் சொந்தமாக டையிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சரத்பிரபு என்கிற மகனும், சினேகபொன்மணி என்கிற மகளும் உள்ளனர். சரத்பிரபு கோவை மருத்துவக்கல்லூரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்முடித்துவிட்டு கேரள மாநிலம் திருச்சூரில் நீட் கோச்சிங் முடித்து கடந்த2017 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் எம்.டி., பொது மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாயன்று இரவு தனது...

கிருஷ்ணராயபுரத்தில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

கிருஷ்ணராயபுரத்தில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

6-1-2018 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கோவக்குளத்தில் பெரியாரின் 44ஆவது நினைவு நாள் பொதுக் கூட்டம், பேரூர்க் கழக ம.தி.மு.க. மாணவரணியின் ஏற்பாட்டில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு கரூர் மாவட்ட ம.தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் பொறியாளர் காமராஜ் தலைமையேற்றார். தமது தலைமை உரையில் பெரியாரைப் பின்பற்றவேண்டிய தேவைகளை விளக்கியதோடு.கோவக்குளத்தில் பெரியாரின் நினைவு நாளன்று நிறுவப்பட்ட பெரியாரின் மார்பளவு சிலை வருவாய், காவல்துறையால் அகற்றச் செய்யப்பட்டதை எடுத்துரைத்ததோடு, அடுத்த பெரியார் நினைவு நாளுக்குள் அச்சிலை உரிய அனுமதியோடு நிறுவப்படும் என்பதை உறுதிபட எடுத்துரைத்தார். மாவட்ட ம.தி.மு.க.விவசாய அணித் துணைச்செயலாளர் மரு.முத்து வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், கரூர் பகுத்தறிவு மன்றத் தலைவர் வழக்குரைஞர் குடியரசு, த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு, தி.மு.க. பேரூர்க் கழக செயலாளர் எம்.மகாலிங்கம் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர்...

அம்பேத்கர் – பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்!

அம்பேத்கர் – பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்!

அம்பேத்கர்-பெரியாரிடையே மோதலை உருவாக்கும் சதித் திட்டத்தை சங் பரிவாரங்கள் அரங்கேற்றி வருகின்றன. அந்த வலையில் உண்மையான கொள்கை உணர்வு கொண்ட பெரியார்-அம்பேத்கர் இயக்கங்கள் விழுந்துவிடக் கூடாது. திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில், ‘பெரியார் பெயரை உச்சரிக்கவில்லை’ என்று முகநூலில் ‘விவாதப்போர்’ நடந்து வருகிறது. தலைவர்களின் பெயரை உச்சரிப்பது என்பதைவிட அந்தத் தலைவர்கள் இலட்சியங்களைப் பேசுகிறார்களா? என்பதுதான் முக்கியம். ஜாதி ஒழிப்புக் கருத்துகளைப் பேசும் ஒவ்வொருவரும் அம்பேத்கரிஸ்ட்டுதான்; பெரியாரிஸ்டுதான். அம்பேத்கரைப் பேசும்போது பெரியார் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று பெரியாரிஸ்டுகள் எழுப்பும் கேள்விகள் தேவையற்றவை என்பதே நமது கருத்து. தலித் அல்லாதவர்களைவிட ‘தலித்’ மக்கள் ஜாதி ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகிறார்கள் என்பதே உண்மை. ஜாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகிறவர்களின் கூடுதலான உணர்வுகளையும் நியாயங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்களே பெரியாரிஸ்டுகளாகவும் இருக்க முடியும். சொல்லப் போனால் அம்பேத்கர், பெரியாரைப் பற்றி அதிகம் பேசாத நிலையில் பெரியார் தான் அம்பேத்கரைப் பற்றி பேசினார். அம்பேத்கரை...

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள்ப் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: (4.1.2018 இதழ் தொடர்ச்சி) “கரூர் மாவட்டம் வாங்கலில் 14.12.2016 அன்று மாலை ‘புதிய மணல்குவாரி அமைக்கக் கூடாது, ஏன்?’ என்ற ஆலோசனைக் கூட்டம் முடிந்து,...

‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றால் அர்த்தம் என்னவோ?

‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றால் அர்த்தம் என்னவோ?

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் படிக்கிற எவருக்கும் ஆண்டாள் ஒரு தேவதாசியாக இருக்கலாம் எனும் சந்தேகம் வராமல் போகாது. எச் ராஜாவே “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்று பெருமையோடு பேசியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவோ? தான் சூடிய மாலையை விஷ்ணுவிற்கு அனுப்பினால் அதன் பொருள் அந்தக் கடவுளை மணந்தார் என்பது. பொட்டுக்கட்டும் சடங்கில்தான் ஒரு கடவுளை மணப்பது வரும். அப்புறம், தனது பாடல்களில் விஷ்ணு தன்னை உறவுகொள்ள வரவேண்டும்...

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்!

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார். சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர். தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார். அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும். இனி உரையாடலிலிருந்து…. தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்…? என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை ரயில்வேதுறையில் பணியாற்றினார். அய்யா பெரியாருடனும், மணியம்மையாருடனும் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். பழைய தஞ்சை மாவட்டத் தில் சுயமரியாதை இயக்க,...

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட – முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே! நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்! மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் தரப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வேலை கிடைக்காத இளைஞர்களின் தேசிய சராசரியைவிட (3.6) தமிழ்நாடு கீழாக நிற்கிறது (3.7). 2.45 இலட்சம் பொறியாளர்களும், 4307 டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக் கிறார்கள். 2017 மார்ச் 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நமது இளைஞர்கள் 81.30 இலட்சம் பேர். பதிவு செய்யாமலே வேலை தேடி அலைவோர் இதைவிடப் பன்மடங்கு என்பதை சொல்லத் தேவை இல்லை. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு...

‘குடிஅரசு’ வழக்கு :‘விடுதலை’க்கு ஒரு விளக்கம் !

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதை எதிர்த்து ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்டார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கச் செயலாளர் கி.வீரமணி அவர்கள். ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் வரை அறிவித்த பிறகும் இழப்பீடு கேட்கும் பிரதான வழக்கை அவர்கள் கைவிடத்தயாராக இல்லை. 2010க்குப் பிறகு மீண்டும் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தவே விரும்புகிறார்கள் என்பதையே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. “மீண்டும் நாங்கள் புதிய வழக்கைப் போடவில்லை; ‘புரட்சிப்பெரியார் முழக்கம்’ தவறான செய்தியை வெளியிடுகிறது” என‘விடுதலை’ ஏடு மறுத்துள்ளது. ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்புகள் வந்த பிறகும் வழக்கை அத்துடன் முடித்துக் கொள்ளாமல், பழைய வழக்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோண்டி எடுத்துத்...

‘திராவிடத்தால் எழுந்தோம்’ குமரியில் விளக்கக்கூட்டம்

‘திராவிடத்தால் எழுந்தோம்’ குமரியில் விளக்கக்கூட்டம்

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரச மூடு சந்திப்பில் நடைப் பெற்ற “திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர் நீதி அரசர் ஆகியோர் தலைமை தாங்கினர். கழகத் தோழர்கள் தமிழ் அரசன், தமிழ் மதி, மஞ்சு குமார், ஜான் மதி, சூசையப்பா, இரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்ணு வரவேற் புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்: கேரளாபுரம் முருகன், மேசியா, சத்திய தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார், ‘மந்திரமல்ல! தந்திரமே!’ எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். 1913-ல்,கோயிலுக்கு நன்கொடையாக ரூ 10,000 கொடுக்குமளவிற்கு பணக்காரரா யிருந்தாலும் சர். பிட்டி. தியாகராயர் அவமானப்படுத்தப்பட்டதும், எவ்வளவுப்...

குமரி மாவட்டம் – பள்ளியாடி – தமிழ் மதி இல்லவிழா

குமரி மாவட்டம் – பள்ளியாடி – தமிழ் மதி இல்லவிழா

குமரி மாவட்ட கழகச் செயலாளர் தமிழ் மதி-பிரேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10.12.2017, ஞாயிற்றுக் கிழமை மதியம் 12.00 மணிக்கு பள்ளியாடி இருதய அரங்கில் கொண் டாடப்பட்டது. விழாவில் தமிழ் மதியின் உறவினர்கள், கழகத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள், சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர்.  தமிழ் மதி பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ்ப் பெயர் ஏன் சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்கு அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம் மூடநம்பிக்கைகள் குறித்தும், பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார்....

அறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா?

அறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா?

கோவிலுக்குள் தமிழ் ஒலிக்க முயற்சி எடுக்காத பாரதிய சனதா கட்சி, ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் பற்றி பேசுவது அபத்தம். 28.12.2017 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் “தமிழகம் பெரியார் மண் அல்ல; ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் நிறைந்த மண்” என்றார். வேதங்களையும், மநு நீதியையும் ஏற்றுக்கொண்டு மதவாத ஆட்சி புரியும் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த ராகவன், தமிழர்களிடம் ஓட்டுவாங்குவதற்காக ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுத்துப்போட்டுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐயா ஆறுமுகசாமி திருவாசகம் ஓதுவதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் எதிர்த்தபோது அதை எதிர்க்க முடியாத பா.ச.க. இப்போது ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுப்பது ஏன் என்று தெரியாதவர்களா தமிழர்கள்? உங்களின் ஓட்டரசியலுக்கு நாயன்மார்கள் தேவைப்படுகிறார்கள், ஆலயங்களுக்குள் திருவாசகம் தேவையில்லை என்றால் உங்களின் எண்ணத்தை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். தமிழகம் என்றுமே “பெரியார் மண்தான்”. கடவுள் நம்பிக்கை கொணட...

பேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் – ஒடுக்கப்பட்ட மக்கள்

பேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் – ஒடுக்கப்பட்ட மக்கள்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே வட்டாரத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1ல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா பார்ப்பனர் படையை முறியடித்தனர். தலித் பிரிவைச் சார்ந்த மகர் வீரர்கள், கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைந்து போரிட்டனர். அந்த வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனிலிருந்து வந்த வணிக நிறுவனம் பிற்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசே, கம்பெனியின் கீழிருந்த பகுதிகளைத் தன் வசம் எடுத்துக் கொண்டது. பேஷ்வா ஆட்சி என்பது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த மன்னராட்சி. அவர்களது படைப் பிரிவுகளில் ஆங்காங்கே மஹர் (தலித்) சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள். பேஷ்வா மன்னர் முதலாம் பாஜி ராவ் 1740ல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு உள்ளேயும் படைப்பிரிவுகளிலும் மஹர் மக்கள் பல்வேறு அவமதிப்புகளைக் கூடுதலாகச் சந்திக்கத் தொடங்கினார்கள்.கொடூரமான ஜாதிய ஒடுக்குமுறைகள் தடைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தால்...

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழ் குறித்து வாசகர் வட்டம் (31.12.2017) மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தினை வே.இராமசாமி ஒருங்கிணைத்தார். பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்ற – மார்க்சிய  – பெரியாரிய ஆய்வாளர் க.காமராசன் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூல் குறித்து விரிவாகப் பேசினார். தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். மா.தேன்ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சேலம் செயலவையில் ‘மதிப்புமிகு வணக்கம்’

சேலம் செயலவையில் ‘மதிப்புமிகு வணக்கம்’

29.12.2017 அன்று சேலத்தில் நடந்த திவிக செயலவை கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, தன் உரையினூடே, இனி தோழர்கள் அனைவரும் தலைவர் கொளத்தூர் மணியை சந்திக்கும் போது குறைந்தது ரூ.100/- என நன்கொடை கொடுத்து வணக்கம் வைக்க வேண்டும் என்றும் அது மதிப்புமிகு வணக்கம் என்றும் வேண்டிக்கொண்டார். அதன் பின் பேச வந்த சேலம் மாவட்ட பொறுப்பாளர் சூரியகுமார், ரூ.500 கொடுத்து நானே இந்த மதிப்புமிகு வணக்கத்தினை தெரிவித்து ஆரம்பித்து வைக்கிறேன் என்றார். பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் ரூ. 100 கொடுத்தார். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சலசலப்புகளை முறியடித்து எழுச்சியுடன் நடந்த ஈரோடு காஞ்சிக் கோயில் தெருமுனைக் கூட்டம்

சலசலப்புகளை முறியடித்து எழுச்சியுடன் நடந்த ஈரோடு காஞ்சிக் கோயில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.01.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் காஞ்சிக்கோயில் நான்குமுனை சந்திப்பில் யாழ் எழிலன் தலைமையில் தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது.   சவுந்தர் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சார்ந்த  வீரா கார்த்தி பேசத் துவங்கிய பத்து நிமிடங்களில், அங்கு வந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கொங்கு அமைப்பைச் சார்ந்த கும்பல் கலவரம் செய்து கூட்டத்தை முடக்கும் நோக்கில் பேசாதே பேசாதே இந்துவைப் பற்றி பேசாதே என்று கூச்சலிட்டனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.  தொடர்ந்து வீரா கார்த்தி நீட் தேர்வின் ஆபத்து குறித்தும், தமிழ்நாடு தேர்வாணையம் குறித்தும் மாட்டுக்கறி தடை பற்றியும் உரையாற்றினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கை குறித்து பேசினார் . பெரியார் இயக்கம் இது போன்ற எண்ணற்றத் தடைகளை சந்தித்த இயக்கம் இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது, இன்னும் மூன்று மாதங்கள் கழித்து காஞ்சிக்...

கோபி, கோவையில் பெரியார் நினைவு நாள்

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ், அருளானந்தம், சுப்பிரமணி, ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர், மாணவர் கழக தோழர் அறிவுமதி, பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை : கோவை நகரில் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் 44ஆவது நினைவுநாளை மிகச்சிறப்பாக நடத்தியது. மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் சிலைக்கு மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டனர்.  மாணவர் கழகப் பொறுப்பாளர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சமூக செயல்பாட்டாளர்கள், வழக்குரைஞர்கள் மீது அடக்குமுறை சட்டம் பாய்வதற்கு கடும் கண்டனம்

சமூக செயல்பாட்டாளர்கள், வழக்குரைஞர்கள் மீது அடக்குமுறை சட்டம் பாய்வதற்கு கடும் கண்டனம்

அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் 8.1.2018 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: வீரப்பன் தேடுதல் வேட்டை எனும் பெயரில் பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும், திட்டமிட்டு நடத்திய பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் எனக் கூறி 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது வரையிலான மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த குடியுரிமை பாதுகாப்பு நடுவம் மாநில ஒருங்கிணைப்பாளரும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான முருகன், மாவோயிஸ்டுகள் என்று கைது செய்யப்பட்ட சந்திரா மற்றும் கலா ஆகியோருக்காக எந்த வழக்கு பார்த்து வந்தாரோ அதே வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2017 ஜனவரி 8 அன்று கொடுஞ்சட்டமான தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் (ரயயீய) கீழ் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஓர் ஆண்டு காலமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்....

பெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி

ஈரோட்டில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் மணிமேகலை நிகழ்த்திய தலைமையுரை: விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்த  எம் தந்தையும், இவ்வுலகில் தோன்றிய அத்துணைப் புரட்சிக்காரர் களையும் விட, பெண்ணுரிமைக்கும் அவர்தம் விடுதலைக்கும் பெரியதாய் சிந்தித்த… குரல் கொடுத்த… போரிட்டக் கலகக்காரரான எங்கள் அய்யாவை பெரியாரை நன்றியோடு கைகூப்பி வணங்குகிறேன். இப்பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் நோக்கத்தையும் தற்காலப் பெண்களின் நிலையையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் அவல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை இங்கு வந்திருக்கிற ஆளுமைகள், விசாலமாக வும், விசாரணையுடனும், பெரும் தரவு களோடும் எடுத்துரைக்க இருப்பதால், நான் சிறியத் தகவல் ஒன்றோடு என் தலைமை உரையை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். நாங்கள் களப்பணிக்கு சென்ற போதெல்லாம் மக்களின் எண்ணங்கள், குறிப்பாக பெண்களின் மத்தியில் பெரியார் பற்றிய உருவகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். பெரியார் என்பவர் கடவுளை மறுப்பவர்! பெரியார் என்பவர்...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு  பெரியாரின் கனவாக இருந்த அனைத்து சாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக (23-12-2017) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  க.இராமர், செ.வே.ராஜேஷ்,  பூ.ஆ. இளையரசன், க.மதியழகன், ந.அய்யனார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக இராஜேந்திரன், தமிழ்ச் சங்கம் சார்பாக கவிஞர் முருகேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சாகித்ய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு

மக்கள் கவிஞர் இன்குலாப்பின் கவிதை நூலுக்கு நடுவண் அரசு ‘சாகித்ய அகாடமி’ விருது வழங்க முன் வந்ததை, அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இது குறித்து குடும்பத்தினர் தந்துள்ள விளக்கம்: இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது: “எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’ “அவ்வப்பொழுது விசாரணைக் காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும். அதற்கும் மேலே என் பேனா அழுந்துகையில் எழுத்தாளன் எவனுக்கும் கிடைக்காத பரிசு இந்திய மண்ணில் எனக்கு நிச்சயம். ‘’ இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபுக்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம்.ஆனால் இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும்காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார். அரசு முகங்கள் மாறலாம். ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாத மும், வர்க்கபேதமும், வன்முறையும் தலைவிரித்தாடிக்...

புதிய தொழிற்சாலைகள் இல்லை; வேலை வாய்ப்பின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது

புதிய தொழிற்சாலைகள் இல்லை; வேலை வாய்ப்பின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கை இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாத மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கூறுகிறது. 15 வயதிலும் அதற்கு மேற்பட்ட வயதிலும் பல மாதங்களாக வேலை வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை (3.8 சதவீதம்). தேசிய சராசரியைவிட (3.7) அதிகரித்திருக்கிறது. கருநாடகத்தில் இந்த அடிப்படையில் எடுத்த கணக்கீட்டின்படி வேலை கிடைக்காதவர்கள் 1.4 சதவீதம். தெலுங்கானாவில் (2.7 சதவீதம்), ஆந்திராவில் (3.5 சதவீதம்), குஜராத்தில் (0.6 சதவீதம்), மகாராஷ்டிராவில் 1.5 சதவீதம். சென்னை வளர்ச்சி ஆய்வு மய்யத்தின் (எம்.அய்.டி.எஸ்.) பொருளாதார பேராசிரியர் எம். விஜயபாஸ்கர் இது குறித்து, “தமிழ்நாடு போன்ற தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் படித்தவர்கள். அவர்கள் கல்விக்கு ஏற்ற nவைலகள் கிடைக்க வில்லை. தங்கள் கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்” என்று ‘டைம்ஸ் ஆப்...

மக்கள் மன்றத் தோழர்கள் கைதைக் கண்டித்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவப் படத்தை நீக்கியதைக் கண்டித்து, ஒரு குறிப் பிட்ட மத அடை யாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையைக் கண்டித்தும், வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4.1.18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில்  சிறை சென்று மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து மரியாதை செய்தனர். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

சேலம் தலைமைச் செயலவையில் சேலம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஜி.பி. கோவிந்தராஜ், கொளத்தூர் சூரி உறுதி கூறியவாறு, சேலம் மேற்கு மாவட்டக் கழகம்,  ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு 500 சந்தாக்களை உடனடியாக சேர்த்து அதற்கான கட்டணத்தையும் அனுப்பி வைத்துள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு எப்போதுமே கூடுதல் சந்தாக்களை சேகரித்து, ஏட்டின் உயிர்ப்புச் சக்தியாகத் திகழும் மேட்டூர் பகுதி மீண்டும் தனது கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளது. இது முதற் கட்டம். தொடர்ந்து சந்தா சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என்று கழகப் பொறுப்பாளர் ஜி.பி.கோவிந்தராஜ் கூறியுள்ளார். மேட்டூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் இந்த செயல்பாட்டை ஏனைய மாவட்டக் கழகங்களும் செயல்படுத்துமா? பெரியார் முழக்கம் 11012018 இதழ்

பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக கழகத்திடம் ரூ.15 இலட்சம் இழப்பீடுக் கோரி மீண்டும் கி.வீரமணி வழக்கு

பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதற்காக பதிப்புரிமை சட்டப்படி தனக்கு ரூ.15 இலட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி மீண்டும் உயர்நீதிமன்றம் வந்துள்ளார். பெரியாரின் ‘குடிஅரசு’ வார இதழில் இடம் பெற்றிருந்த பெரியாரின் பேச்சு எழுத்துக்கள் நீண்டகாலமாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிடாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம், காலவரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டது. பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடும் உரிமை தங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிட உரிமை இல்லை என்றும், கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘குடிஅரசு’ பதிப்பாசிரியரும், அன்றைய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது வழக்கு தொடரப்பட்டது. 2009ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்துரு, பெரியார் தி.க. வெளியிட்ட ‘குடிஅரசு’ தொகுதிகளுக்கு 2008ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை...

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 04012018

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்தும் பட்டு நகரம்பேரறிஞர் அண்ணா படத்தை தவிர்த்தும் மற்ற மத அடையாளங்கள் இடம் பெறாமல் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்தும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4/1/18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, தலைமை கழக உறுப்பினர் தோழர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறை சென்ற மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து...

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர்  அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, 2017 அக்டோபர் 26ஆம் நாள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் கடந்த 2017 டிசம்பர் 17ஆம் நாள் தூத்துக்குடி மூவிபுரம் முத்து மகாலில் நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.அ.குமார் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன், தூத்துக்குடி வே.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைந்த சுயமரியாதை சுடரொளி பொறிஞர் சி. அம்புரோசு நினைவலைகளை, கழகத் தோழர்கள் செ. செல்லத்துரை, ச.கா. பாலசுப்பிரமணியன், குமரி மாவட்ட அமைப்பாளர் சேவியர் (எ) தமிழரசன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் குறும்பை மாசிலாமணி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கண்ணதாசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ச. தமிழன், சட்டக் கல்லூரி மாணவர் அர்ஜூன், எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்டப் பொருளாளர்...

சேலத்தில் கழக செயலவைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 29.12.2017 அன்று சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கில் பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. வரவேற்புரை –  கோவிந்தராஜ், கடவுள் மறுப்பு – ஈரோடு மணிமேகலை. உரை நிகழ்த்தியோர்: ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) , வீ. சிவகாமி (த.நா. அறிவியல் மன்றம்), பாரி சிவகுமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்), விஜயகுமார் (இணையதள பொறுப்பாளர்), பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), இராம. இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சக்திவேல் (மேட்டூர்), பன்னீர் செல்வம் (சூலூர்), அய்யனார் (சென்னை), உமாபதி (சென்னை), மணிமேகலை, சண்முகப்பிரியன், சூரியக்குமார், நாத்திகஜோதி, சாமிநாதன், முத்துப்பாண்டி, முகில் ராசு, நீதியரசன், பாரதிதாசன், செந்தில் (விருதுநகர்), காமாட்சிபாண்டியன் (மதுரை), மருதமுத்து, அன்பு (நாகை), தாமோதரன் (பெரம்பலூர்), இளையரசன் (விழுப்புரம்),  கிருஷ்ணன் (கிருஷ்ணகிரி), இரத்தினசாமி, வேழவேந்தன், செந்தில், டேவிட் (சேலம் கிழக்கு), வேணுகோபால் (பவானி), துரைசாமி (பொருளாளர்), மோகன் (மடத்துக்குளம்),...

கழகத்திற்கு புதிய மின்னஞ்சல்

  கழகத்தின் சார்பில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக் கழகங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகள் ஆகியவற்றை செய்திகளாக கழகத் தலைமைக்கு எளிமையாக அனுப்ப தோழர்களின் வசதிக்காக ஒரு புதிய  மின்னஞ்சல் முகவரி  உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகள் அனுப்பும் பொழுது நிகழ்வுகளின் புகைப்படங்கள், நாள், நேரம், கலந்து கொண்ட அமைப்புகள், கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் ஆகிய விபரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் செயல்பாடுகளை கழக இதழான பெரியார் முழக்கம்,கழக இணையம், கழக சமூக வலைத் தளங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல தாங்கள் அனுப்பும் செய்தி பெரிதும் உதவும். ஆதலால்  கழக சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தவறாமல் பதிவு செய்வதும் நிகழ்வின் ஓர் அங்கமே எனவே கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் செய்திகளை அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். newsdvk@gmail.com – திராவிடர் விடுதலைக்...

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

27.12.2017 காலை கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற் பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத்தோழர்கள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

கோவையில், நூல் வெளியீட்டு விழா

கோவையில், நூல் வெளியீட்டு விழா

“இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27.12.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் கோவை  அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது.  த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் நூலை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணிநூலை பெற்றுக்கொண்டார்.  தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: “நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் இயற்கை வளங்கள் வரைமுறையற்று சூறையாடப்படுவதை எதிர்த்தும், தமிழகத்தின் தற்சார்பை பாதுகாக்கவும், மக்களின் கருத்துகளுக்கு எதிராக வளர்ச்சி...

சேகர் குப்தாவின் துணிச்சலான கட்டுரை ஊழலிலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி; ‘தலித் சூத்திரருக்கு’ வேறு நீதி

சேகர் குப்தாவின் துணிச்சலான கட்டுரை ஊழலிலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி; ‘தலித் சூத்திரருக்கு’ வேறு நீதி

‘பார்ப்பனர்’ ஊழலுக்கும் – ‘சூத்திரம் பஞ்சமர்’ ஊழலுக்கும் வேறுபாடு உண்டு. மனு சாஸ்திரம் கட்டளையிடுவதுபோல ‘பிராமண ஊழலு’க்கு பரிசும், சூத்திர ஊழலுக்கு தண்டனையும் காத்திருக்கிறது. இங்கே வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் ஆசிரியர் சேகர் குப்தா பல்வேறு ஆங்கில ஊடகங்களில் கட்டுரை எழுதி வரும் பிரபலமான மூத்த பத்திரிகையாளர். ஊழலுக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பை மிக்க துணிச்சலோடு அம்பலப் படுத்தியிருக்கார் சேகர் குப்தா. அரசியலில் ஊழல்களுக்கும் சாதிகளுக்கும் என்ன தொடர்பு? ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்குகளில் பிடிபடுவதும், தண்டிக்கப் படுவதும் அதிகமாகிறதா? சில உண்மைகளை ஆராய்வோம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்...

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலையின்போதுபெரியார் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு: கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா? இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால...

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி கூடிய தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்த உடனடியாக களமிறங்கினர். நாமக்கல் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில்  மாணவர்கள் சந்திப்பு, திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 31.12.2017 அன்று காலை 11:30 மணிக்கு தொடங் கியது. நிகழ்வில், ராசிபுரம், மல்லசமுத்திரம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மனோஜ் தலைமை வகிக்க, தோழர்கள் வே.ஜீவிதா மற்றும் நித்யா முன்னிலை வகிக்க மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. மாணவர்களிடையே, நீட், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழர் விரோத போக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்ட புதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். கலந்துரையாடலுக்குப் பின்,  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பிரச்சனைகளை பரப்புதல், கல்லூரி நுழைவாயிலில் காலை நேரங்களில் (வாய்ப்பைப் பொறுத்து) துண்டறிக்கைகளை கொடுத்தல், துறை சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு துண்டறிக்கைகளை...

வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  கழகக் கட்டமைப்புக்கு 1 இலட்சம் நன்கொடை

வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் கழகக் கட்டமைப்புக்கு 1 இலட்சம் நன்கொடை

  சேலத்தில் நடந்த கழக செயலவைக் கூட்டத்தில் கழகக் கட்டமைப்பு நிதிக்காக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் ரூபாய் ஓர் இலட்சம் நன்கொடையை கழகத் தலைவரிடம் பலத்த கரவொலிக் கிடையே வழங்கினார்.

தொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா?

தொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா?

இந்தியாவை மதசார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே கூறப்பட் டுள்ளது. ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக அரசு அலுவலகங்களை ஆக்கி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது 1992ஆம் ஆண்டில் மத்திய அரசில் வீற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியில், நாடாளுமன்ற குழு சமூக கலவரங்களைப் பற்றி ஆய்ந்து, அரசு அலுவலகங்களிலும், இடங்களிலும் குறிப்பிட்ட மத சின்னங்களை வரைவதும், கருத்துக்களை பொறிப்பதும், மத வழிபாடுகள் நடத்துவதுமே முதன்மைக் காரணமாக அமைகிறது என சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் உள்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவ்வாறான செயல்பாடுகளைத் தடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் கண்டிப்பான சுற்றறிக்கையை அனுப்பியது ஆனால் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் அரசு அனுமதித்துள்ள டாக்டர் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு, சங்கராச்சாரி படத்தை வரைந்த சட்ட விரோத நடவடிக்கையை மாற்றி, மீண்டும் அம்பேத்கர் படத்தை பழையபடி வைத்த காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்...

சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்

மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் சமூக நீதி மறுக்கப்பட்டு, கல்வி வேலை வாய்ப்புகளை இழந்து, இருண்ட எதிர்காலம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தயார் செய்யும் பரப்புரை இயக்கங்களைத் தொடங்க சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவு செய்தது. கல்லூரிகள் மாணவர் விடுதிகளில் இந்த ஆபத்துகளை ஆதாரங்களோடு விளக்கும் வெளியீடு, துண்டறிக்கைகளை தயார் செய்து, மாணவர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இந்த செயல் திட்டத்துக்கு கழகப் பொறுப் பாளர்கள் முழுமையாக அனைத்து உதவிகளை யும் வழங்குவது எனவும் தலைமைக்குழு முடிவு செய்தது. 29122017 வெள்ளியன்று, சேலம் விஜய ராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப் பட்டத் தீர்மானங்கள். சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே...

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

23-12-2017  வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கத்திற்கு நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார். குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர். அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த....

“அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!”

“அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!”

பெரியார் இறுதி ஊர்வலம் நடந்த  டிசம்.25, 1973 நாளில் ‘மக்கள் குரல்’ நாளேட்டில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோலை எழுதிய உணர்ச்சிகர கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். ஆர். சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சரித்திர நாயகர்கள் பலரை வரலாறு சந்தித்திருக்கிறது. சமுதா யத்தில் மறுமலர்ச்சி காண போதி மரத்திலிருந்து புறப்பட்ட புத்தன் வெற்றி பெறவில்லை. அவனது சமுதாய மறுமலர்ச்சி சமயத்தின் ஒரு கிளையானது. தென்னகத்தே ஒரு இராமலிங்கன் தோன்றினான். முடை நாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கங்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டான். கடைசியில், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்று கடையை மூடி நடையைக் கட்டினான். அவனது இயக்கமும் சமயத்தின் ஒரு வடிகாலானது. ஆனால் இந்த நூற்றாண்டில் ஈரோட்டிலிருந்து ஒரு வெண்தாடி வேந்தன் ஊன்றிய தடியோடு ஊர் முழுக்கச் சுற்றுலாக் கிளம்பினான். அவன் தனது சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்திற்கு சமுதாயத்தை, கடவுளை, சாஸ்திரத்தை அடித்தளமாகக் கொள்ளவில்லை. அத்தனைத் தீமைகளுக்கும் அவைகளே ஊற்றுக்கண் என்பதை உணர்ந்தான்! எனவே சாதியைச்...

கழகம் எடுத்த பெரியார் நினைவு நாள்

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொறுப்பாளர் சீனி. கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச்  செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங் கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். குமரி : பெரியாரின் 44ஆவது, நினைவு நாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.  நீதிஅரசர் (பெ.தொ.க தலைவர்)  தலைமை...

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

காஞ்சி மக்கள் மன்றம் பெரியார் நினைவு நாளை டிசம்பர் 24 அன்று வேலூரில் எழுச்சியுடன் நடத்தியது. பெரியார் பூங்கா அருகில் மாலை 5 மணியளவில் மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் தொடங்கின. மக்கள் மன்ற தோழர்கள் கோபி வரவேற்புரையாற்ற சதீஷ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளர் நீலசந்திரகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர், எஸ்.டி.பி.அய். மாநில பொறுப்பாளர் ஜி.எஸ். இக்பால், கண் மருத்துவர் தி.ச. முகமது சயி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் சுதாகர், ஆவணப்பட இயக்குனர் பாலா, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் சிவா, மக்கள் மன்றம் தோழர்கள் அபிநயா, திலகவதி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே...