வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’
பீகார் – உத்திரப்பிரதேச இந்திக்காரர் களையே விரட்டி அடிக்கிறது, மோடியின் குஜராத். இவர்கள் ‘இந்து’ தேசத்தை உருவாக்கப் போகிறார்களாம். உண்மையில் ‘குஜராத்’ என்பது மோசமான உணர்ச்சியின் உதாரணம்தான். பிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜக வினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத் மாடல்’, பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங் களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருப்பதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தன் கோர வடிவத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக் கொண் டிருக்கிறது. அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்களின் காரண மாகவும், அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடியின் ‘குஜராத் மாடல்’ எந்த அளவிற்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதை இன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குஜராத்தி லிருந்து அச்சத்துடன் மீண்டும் தங்கள் மாநிலங் களுக்குத் திரும்பும் தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உண்மையில்...