Category: பெரியார் முழக்கம்

வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’

வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’

பீகார் – உத்திரப்பிரதேச இந்திக்காரர் களையே விரட்டி அடிக்கிறது, மோடியின் குஜராத். இவர்கள் ‘இந்து’ தேசத்தை உருவாக்கப் போகிறார்களாம். உண்மையில் ‘குஜராத்’ என்பது மோசமான உணர்ச்சியின்  உதாரணம்தான். பிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜக வினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத் மாடல்’, பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங் களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருப்பதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தன் கோர வடிவத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக் கொண் டிருக்கிறது. அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்களின் காரண மாகவும், அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடியின் ‘குஜராத் மாடல்’ எந்த அளவிற்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதை இன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குஜராத்தி லிருந்து அச்சத்துடன் மீண்டும் தங்கள் மாநிலங் களுக்குத் திரும்பும் தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உண்மையில்...

தலையங்கம் ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன்  அரசு பின் வாங்கியது

தலையங்கம் ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் தங்களுடைய ஜாதியப் பெருமைக ளையும் ‘தீண்டாமை’ வெறுப்பு களையும் சேர்த்து சுமந்து கொண்டே போகிறார்கள். குறிப்பாக பிரிட்டனில் இந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற ‘தலித்’ மக்களுக்கு எதிராக ‘தீண்டாமை’ மறைமுகமாக திணிக்கப்பட்டே வருகிறது. இதற்காகவே ‘ஜாதிக் கண்காணிப்பு’ என்ற அமைப்பு ஒன்று பல ஆண்டு களுக்கு முன்பே இலண்டனில் உருவாக்கப்பட்டது. ‘ஜாதிப் பாகுபாடு காட்டுவதும் இனபாகுபாடுதான்’ என்று வலியுறுத்திய இந்த அமைப்பு, ஜாதிப் பாகுபாட்டை தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக வற்புறத்தி வந்தது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் ‘இந்து’ மதத்தின் பெயராலும் ‘கோயில் பாதுகாப்புக் குழு’ என்ற பெயராலும் சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்படக் கூடாது என்று அரசை நிர்ப்பந்தித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இது குறித்து விவாதங்கள் பிரிட்டனில் நடந்து வந்தன. ஜாதியப் பாகுபாடு இனப் பாகுபாடுதான்...

சபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது

சபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது

“இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் இந்து மதத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; பெண்ணுரிமையை ஏற்கிறோம்; ஆனால் பெண்களுக்கு சமத்துவத்தை மறுக்கும் மதங்களை எதிர்க்க மாட்டோம்” என்பதுதான் இங்கே பொதுவான முழக்கமாகவே இருந்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக சபரிமலை அய்யப்பன் கோயில் ‘தீட்டாகிறார்கள்’ என்ற காரணத்துக்காக பெண்களில் கோயில் வழிபாட்டு உரிமைக்குப் போடப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆனாலும் அய்யப்பன் கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்களான தந்திரிகள், கேரள அரசை மிரட்டி வருகிறார்கள். கேரள அரசு தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு போட்டால்தான் அரசு பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறார்கள். ‘நாயர் சொசைட்டி’ என்ற உயர்ஜாதியினரின் அமைப்பும் பந்தளம் மன்னர் குடும்பமும் தீர்ப்புக்கு எதிராக ஆட்சியை மிரட்டுகிறது. கேரள காங்கிரஸ்காரர்களும் பா.ஜ.க.வின ரோடு கைகோர்த்துக் கொண்டு பெண்கள் உரிமைக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சும் பெண்களுக்கு எதிராகவே பேசுகிறது. பெண்களையே இன்னும் ‘சுயம்சேவக்குள்ளாக’ அங்கீகரிக்காமல் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராகத் தடை செய்து வைத்திருக்கும் அமைப்பிடமிருந்து...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  ஈரோடு வடக்கு மாவட்ட கோபி ஒன்றிய கழகத்தின் சார்பில் கொடி யேற்றம் மற்றும் தமிழர் கல்வி உரிமை பரப்புரை பயணம் ஆகியன 30.09.2018 ஞாயிறு அன்று சிறுவலூரில் நடைபெற்றது. சிறுவலூர் பகுதியில் அமைந்துள்ள கழகத்தின் கொடிக்கம்பத்தில் கழக வழக்குரைஞர் தோழர் செகதீசன் கழகக் கொடி யினை ஏற்றி வைத்து பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து  தலைமை கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். அப்பகுதியில் நம் தோழர்களுக்கு கோபி ஒன்றியத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் தேனீர் வழங்கி நம் பயணம் தொடர வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து எலந்தக்காடு பகுதியில் தோழர் சுந்தரம், மூப்பன் சாலையில் நதியா, கிழக்கு தோட்டம் பிரிவில் கிருட்டிணசாமி, மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் பெரியார் பிஞ்சு அகிலன், கொளப்பலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார்...

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் கடந்த 22.10.2018 திங்கள் கிழமை அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி ஒரு சுற்றறிக்கையை வெளியிட் டிருந்தார். அதில் என்ன பயிற்சி என்றோ, யார் நடத்துகிறார்கள் என்றோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட் டிருந்தது. 22.10.2018 அன்று காலை பயிற்சி வகுப்புக்குச் சென்ற சுமார் 600 ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வகுப்பை நடத்த வந்தவர்கள் “இதிகாச சங்காலன சமிதி” என்ற வடமொழிப் பெயருடனும் வரலாற்றுத் தொகுப்புப் பேரவை என்று தமிழிலும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். பயிற்சியை நடத்தி யவர்கள் சுப்பிரமணியம் மற்றும் டி.வி.ரங்கராஜன் ஆகியோர். இதனை ஒருங்கிணைத்தவர் இந்துத்துவ அமைப்பின்...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (4) நாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (4) நாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி இன்றைக்கும் ராமனை உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது. நாம் இராவணனை உயர்த்திப் பிடிக்கிற கூட்டம். இருவரும் கற்பனைக் கதாபாத்திரங் கள் என்பதில் நமக்கு எந்தக் கருத்து மாறு பாடும் இல்லை. அவர்கள் எழுதியபடியே பார்த்தாலும்கூட என்றுதான் நாம் சொல்லு கிறோமே தவிர, நாம் அதை நம்பிக்கொண்டு பேசவில்லை. கம்பர் ஒரு இடத்தில், ’இரக்கம் எனும் பொருளிலா அரக்கன்’ என்று இராவணனைப் பற்றி சொல்லியிருப்பார். இராமன்தான் தீயவன், இராவணன் அல்ல என்று நிறுவுவதற்காக நாடகம் ஒன்று நடந்தது. எல்லோரும் இறந்துபோன பிறகு வழக்கு நடக்கும் என்பதுபோல கற்பனையில் இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கும். நீதி தேவன் முன்னால் எல்லோரும் நிற்பார்கள். என்னை இரக்கமெனும் பொருளிலா அரக்கன் என்று கம்பர் சொல்லிவிட்டார் என்று கம்பர் மீது இராவணன்...

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில்...

தலையங்கம் வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை

தலையங்கம் வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்தோடு மத்திய மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்குவது இல்லை. அதன் காரணமாக இளையச் சமூகம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. படித்த இளைஞர்களே வேறு வழியின்றி கிரிமினல்களாக மாறும் நிலையை ஆட்சிகள்தான் உருவாக்கி வருகின்றன. உருவாகும் வேலை வாய்ப்புகளைக் கூட நிரந்தரப் பணிகளாக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக குறைந்த ஊதியத்தில் நியமிக்கவே மத்திய மாநில ஆட்சிகள் விரும்புகின்றன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தொடர்வண்டித் துறையில் 13 இலட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் தென்னக தொடர்வண்டித் துறையில் மொத்தம் 1இலட்சத்து 2 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ஆகிய மண்டலங்கள் அடங்கியுள்ள இப்பிரிவில் 15,000 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. தொடர்வண்டித் துறையில் சில மாதங்களுக்கு முன்பு, 90,000 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு விண்ணப்பங்கள் கோரியபோது, வந்த விண்ணப்பங்கள் 2 கோடியே 30 இலட்சம். அந்த...

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல!

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல!

பட்டாசுகளுக்கு முழுமையான தடைஇல்லை என்றாலும் ‘தீபாவளி’ நாளில் இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். 6 மாதம் மற்றும் 14 மாத குழந்தைகள் சார்பில் அவர்களின் பெற்றோர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.இந்தப் பட்டாசு வெடிப்பால் உருவாகும் மாசு – அதனால் தங்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளால் உயிர் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே பட்டாசுகளுக்கே தடை போட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த தொழிலாளர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற் சங்கமான ‘சி.அய்.டி.யு.’ சங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். “காற்று...

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

திராவிடர் இயக்க எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் இணையர் செ.தாமரைச் செல்வி 17.10.2018 மாலை முடிவெய்தினார்.  இராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்திற்கு 18.09.2018 கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் இல்லம் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினர். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

17.09.2018 அன்று காலை 9 மணிக்கு 20 இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் கொள்கை பாடல்களை ஒலிக்கச் செய்து ஊர்வலமாகச்  சென்று குருவ ரெட்டியூர் பகுதியிலுள்ள பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு தி.க மற்றும் காவலாண்டியூர் பகுதி தி.வி.க. தோழர்கள் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறகு காலை சிற்றுண்டி குருவைப் பகுதித் தோழர்கள் ஏற்பாடு செய்தனர். காவலாண்டியூர் பகுதி தோழர்கள் சுமார் 50 பேர் ஊர்வலமாகச் சென்று மிளகாய் பொதை, கண்ணாமூச்சி, பாலமலை பிரிவு, செ.செ. காட்டுவளவு , செட்டியூர், மூலக்கடை பகுதிகளில் உள்ள அரசினர் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பெரியாரைப் பற்றி  காவை ஈஸ்வரன் உரையாற்றினார். பிறகு அனைத்து ஆசிரியர்களுக்கும் நிமிர்வோம் மற்றும் கழக வெளியீடுகள் அடங்கிய தொகுப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கண்ணாமூச்சி, செ.செ. காட்டுவளவு, காவலாண்டியூர், செட்டியூர்,...

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டதாக சில சமூக விரோத சக்திகள் போலியாக ஒரு சுவ ரொட்டியை முகநூலில் வடிவமைப்பு செய்து வெளியிட்டு, அதைக் காரணமாக வைத்து கழகத் தோழர்களை அலைப்பேசி வழியாக ஆபாசமாக பேசி வருகின்றனர். இதற்கு கழக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுப்பு விவரம்: இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக-விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலைத் தளங்களில் சமூக விரோதி களால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடு துறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில்  பரப்பப்படுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும்  வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிக விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம்...

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 7ஆவது சந்திப்பு தலைமை அலுவலகத்தில் 21.10.2018 மாலை 6 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கடந்த மார்ச், ஏப்ரல் மாத இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஸ்கர் ‘டார்வினின் பரிணாமக் கோட்பாடு’ என்ற தலைப்பிலும், செந்தில்குமார் (குனுடு) ‘ஆர்.எஸ்.எஸ். பிடியில் அம்பேத்கர் பல்கலைக் கழகம்’ என்ற தலைப்பிலும், ஜெயபிரகாஷ் ‘தமிழ் சினிமாவில் சாதிய ஊடுறுவல்கள்’ என்ற தலைப்பிலும் தங்களது பார்வையையும், கருத்துகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இமானுவேல் துரை ‘நிமிர்வோம் இதழைக் குறித்தும் அதன் தேவையை குறித்தும்’ பேசினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இதழ்களைக் குறித்து தோழர்களின் கருத்துகளுக்கும், வெளியிடப்படும் கட்டுரைகளின் நோக்கத்தைக் குறித்தும் சிறப்பாக கருத்துரையாற்றி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற “சீரடி சாய்பாபாவின் பின்னணி என்ன?” என்ற கட்டுரையைக் விளக்கியும் உரையாற்றினார்.  வாசகர் வட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (3) ‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (3) ‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்

திராவிட நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று அண்ணா கூறவில்லை; பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய கூட்டாட்சியை பேசினார். அம்பேத்கரும் இதே கருத்தைத்தான் கூறினார் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உருவான பிறகுதான் வங்காளத்தில் இந்தி எதிர்ப்பு பேசப்பட்டது. மராட்டியத்தில் பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் ஒற்றுமையில் ஒரே இந்தியா பேசிய பல தலைவர்கள் இந்தியை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். அம்பேத்கர் கூட இதைத்தான் பேசி யிருக்கிறார். தென்னிந்தியாவும், வட இந்தியாவும் வேறு என்று அம்பேத்கர் பேசுகிறார். ஆரம்பத்தில் அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது ஒன்றுபட்ட இந்தியாவைப் பற்றி அவர் பேசியிருக்கலாம். அந்த அரசியல் சட்டம் அவர் மட்டுமே எழுதியதல்ல. எல்லோரும் இணைந்து எழுதியது. அதை சட்ட சொற்களால்...

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

03.10.2018 அன்று மாலை 4.30 மணியளவில் செங்குன்றம் மார்கெட், முசாபர் பங்களா பகுதியில் பெரியார் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சுந்தரவள்ளி, பெரியார் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னுரை வழங்கிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல்புகாரி, “பெரியார் அவர்களோடு இசுலாமிய சமுதாய தலைவர்களும் மக்களும் முன்பு மிகவும் இணக்கமாக பயணித்ததை குறிப்பிட்டு தற்போது இசுலாமிய சமுதாயம் பெரியாரிடம் இருந்து சற்று விலகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடவுள் மறுப்பை மட்டுமே காரணம் காட்டி பெரியாரிடம் இருந்து இசுலாமிய சமுதாயம் தள்ளி இருக்கவேண்டியதில்லை பெரியாரிடம் கற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் தங்கள் சமுதாயத்திற்கு நிறைய இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “இன்றைய காலகட்டத்திற்கு பெரியாரின் மிக அவசியத் தேவையை தங்கள் இசுலாமிய சமுதாய மக்களுக்கு எடுத்துச்சொல்லவே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ததாகவும்” தோழர் அலீம் அல்புகாரி குறிப்பிட்டார். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

61 பேரை பலி கொண்ட ‘இராவணன் எரிப்பு’ தசரா நடத்தியவர்களை கைது செய்: பொது மக்கள் போராட்டம்

61 பேரை பலி கொண்ட ‘இராவணன் எரிப்பு’ தசரா நடத்தியவர்களை கைது செய்: பொது மக்கள் போராட்டம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் ‘இராவணனை’ எரிக்கும் தசரா விழா கொண்டாட்டத்தின்போது இரயில் தண்டவாளத்தில் நின்று விழாவை வேடிக்கைப் பார்த்தவர்கள் மீது இரயில் மோதி 61 பேர் பலியாகி விட்டார்கள். விழாவில் பட்டாசு வெடிப்பு சத்தத்தில் இரயில் வந்த சத்தம்  கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது ‘தசரா விழா’ கொண்டாட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் ஆவேசமாகப் போராடி வருகிறார்கள். தொடர்வண்டி ஓட்டுனரையும் கைது செய்ய வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸ் படை வந்தபோது போலீசார் மீது மக்கள் கல் வீசி தாக்குதல்களை நடத்தினர். 61 பேரை சாகடித்த இந்த கொண்டாட்டத்தில் தொடர்வண்டி காவல்துறை எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கையை தயார் செய்துள்ளது. விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள். மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் விஜய் மதன் அவரது மகன் சவுராப் மதன்...

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

வைணவக் கோயிலான காஞ்சிபுரம் தேவ ராஜசாமி கோயிலில் தென்கலை அய்யங்கார் களுக்கும் வடகலை அய்யங்கார்களுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. வடகலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘தமிழ் பிரபந்தங்களை’ பாடக் கூடாது என்கிறார்கள். தென்கலை அய்யங்கார்கள், ‘ஆச்சாரியா வேதாந்த தேசிகரின்’ தமிழ் பிரபந்தங்களைப் பாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ் பிரபந்தம் பாட அனுமதிக்கக் கோரி சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழ் பிரபந்தத்தைப் பாடலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்.22ஆம் தேதி தள்ளி வைத்தார். இந்த நிலையில் சீனிவாசன் என்பவர் தமிழ் பிரபந்தத்தை ஒரு நாள் மட்டும் பாடாமல், தொடர்ந்து பாடுவதால் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘சரசுவதி பூஜை’ நாளன்று நீதிமன்றம் விடுமுறை. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியதால் வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் வீட்டிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

நாங்களும்கூட’ (Metoo) இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் மிரட்டல்களுக்கு உள்ளான பெண்கள், இந்த இயக்கத்தின் வழியாக மனம் திறந்து பேசுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை என்றாலும், துணிவோடு வெளியிடுவதற்கான பாதுகாப்பான சமூக சூழல் இப்போதுதான் வந்திருக்கிறது. இதில் குற்றக் கூண்டில் நிறுத்தப்படுகிற தனி நபர்கள் யார் என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிரச்சினைகள்தான் முக்கியம் என்பதே நமது கருத்து. பெண்கள் ‘உல்லாசத்துக்கும் இன்ப நுகர்ச் சிக்குமான’வர்கள் என்ற கருத்தியலை சமூகத்தில் கட்டமைத்தது ஆண் ஆதிக்க சிந்தனை. அந்த ஆணாதிக்க சிந்தனையை உரமிட்டு வளர்த்தது.  பொதுப் புத்தியில் திணித்து வைத்தது – மதங்களும், மதங்கள் கற்பித்த சடங்குகள் – பெண்கள் குறித்த பார்வைகள் தான். எந்த ஒரு ஆணும் தனது ‘பாலுறவு வக்கிரமங்களை’ பெருமையோடு பகிர்ந்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்கிறது. அதற்காக எந்த ஆணும் வெட்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெண் அப்படி சமூகத்தில் பேசத்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா?  கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு என்பது எந்த விதமான ஜாதி,மதம்,இன அடையாளங்களோடு இருக்கக் கூடாது. அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுளின் படங்களோ அதற்கு வழிபாடோ நடத்தப்படக் கூடாது என்பது அரசாணை. அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டி 17.10.2018 காலை கொளத்தூர் ஒன்றிய அலுவலகம், கொளத்தூர் காவல்நிலையம், கண்ணாமூச்சி தொடக்க கூட்டுறவு வங்கி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அரசு அலுவலகங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கொளத்தூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று அதற்கான அரசாணையை கொடுத்தனர். அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மீறி 17.10.2018 மாலை கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரான காவலாண்டியூர் சசிகுமார் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தோழர்கள் சென்று கேட்டதற்கு அது அவரவர் விருப்பம் , யார்...

பா.ஜ.க. ஆட்சியில் சட்ட  வரம்புகளை மீறும் ஆளுநர்கள்

பா.ஜ.க. ஆட்சியில் சட்ட வரம்புகளை மீறும் ஆளுநர்கள்

நக்கீரன் எழுதிய கட்டுரைக்காக தமிழக ஆளுநர்மாளிகை, ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மீது காவல்துறையில் நேரடியாக புகார் தந்ததோடு இந்திய தண்டனைச் சட்டம் 124அய் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் இந்த சட்டத்தில் பிணை கிடைக்காமல் தடுப்பதற்கும் பிடிவாரண்ட் இன்றி கைது செய்வதற்கும், ஆளுநர் இந்தக் கொடூர சட்டத்தைக் கையில் எடுத்தார். எழும்பூர் மாஜிஸ்திரேட் இந்தச் சட்டம் வழக்குக்குப் பொருந்தாது என்று கூறி சிறையிலடைக்க மறுத்து விட்டார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பலரும் சட்ட வரம்புகளை மீறுபவர்களாகவே இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க...

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தாள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 138 ஆவது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராசர் 118 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழா பொதுக் கூட்டம்,  13.10.2018 ம் தேதி குமாரபாளையம்  பேருந்து நிலையத்தில்  மாலை 5 மணிக்கு, டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் தலித் மக்களின் உரிமை சார்ந்த பாடல்கள் மூலம் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்விற்கு, கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மேலும், கேப்டன் அண்ணாதுரை மாவட்ட காப்பாளர், சரவணன் மாவட்ட செயலாளர், வைரவேல் மாவட்ட அமைப்பாளர், முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர், மோகன் குமாரபாளையம், ரேணுகா திராவிடமணி குமாரபாளையம் ஆகியோர் முன்னிலை வகிக்க, குமாரபாளையம் இரா.மோகன் வரவேற்புரையாற்றினார். மேலும் நிகழ்வில், காமராசர் உருவப்படத்தை அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி திறந்து வைத்தார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை சாக்கோட்டை இளங்கோவன், தந்தை பெரியார் உருவப்படத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி...

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் அக்.13, 2018 பிற்பகல் 2 மணியளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு  அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். களப்பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை 10 கழகப் பொறுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுகளை விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழக ஏடுகளுக்கான சந்தா சேர்ப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கழகத் தோழர்களை கழகத் தலைவர் பொதுச்செயலாளர் சந்தித்து, கழக...

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் செயலவையில் பங்கேற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை முன் வைத்தனர். செயலவைக் கூட்டங்களில் கழகத் தலைவருக்கு வணக்கம் கூறுவதற்கு பதிலாக நன்கொடை வழங்கி உரையைத் தொடர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து, மடத்துக்குளம் மோகன் தலைவருக்கு ரூ.500/- வழங்கி உரையைத் தொடர்ந்தார். தோழர்கள் ஆர்வமாக வரவேற்றனர். சிலர் அதேபோல் ரூ.100, ரூ.200 என்று தலைவரிடம் வணக்கம் கூறி நன்கொடை வழங்கினர். மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. சாக்கோட்டை இளங்கோவன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடி தோழர்களை மகிழ்வித்தார். தலைமைக்குழு மற்றும் செயலவைக் கூட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கழகக் கட்டமைப்பு நிதி – கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பில் மாவட்டங்களின் பங்களிப்பைத் தோழர்கள் அறிவித்தனர். நிமிர்வோம் இதழுக்கு மாதம் 1000 நன்கொடை தருவதாக அறிவித்த ஆசிரியர் சிவகாமி, முதல் தவணையாக ரூ.5,000 வழங்கினார். சென்னை அன்பு தனசேகர் மாதம் ரூ.1000 வழங்குவதாக...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் கூட இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டை மட்டும் விலக்கி வைத்து ஆட்சி மொழி விதிகளை உருவாக்கியதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி இந்தியாவைப் பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நான்கைந்து ஆண்டு களுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் ஒரு நூலை எழுதினார். அவர் ஒரு வங்க நாட்டுக்காரர். அவரோடு இணைந்து அந்த நூலை எழுதியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ழின் தெரசு. அந்த நூலில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைத்தான் அவர்கள் குறிப்பிட் டார்கள். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் இந்தியாவோடு இல்லாமல் இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று...

கல்விக்கண் திறந்தது ‘சரசுவதி’யா? ‘காமராசரா’?

கல்விக்கண் திறந்தது ‘சரசுவதி’யா? ‘காமராசரா’?

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வரு கின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக் கின்றன.  இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது.  பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. பண்டிகைக் கொண்டாடும் நம்பிக்கை யாளர்களில் 60 சதவீதம்...

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு. வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது. அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான். இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான். அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 1872 பஞ்சத்தை ஒட்டித் தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய்ச் சேர்ந்தனர். அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி. 1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர்.  144 வருடங்களுக்கு...

பார்ப்பனிய பா.ஜ.க.  நடத்தும் ‘புஷ்கரம்’

பார்ப்பனிய பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்கரம்’

வேதகால பார்ப்பன ஒடுக்குமுறை கலாச் சாரத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க பார்ப் பனர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக் கிறார்கள். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் தாமிரபரணி மகா புஷ்கரம். ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி, பிறகு விடுதலையான இறந்துபோன காஞ்சிபுரம் ஜெயேந்திரன், காவிரி புஷ்கரத்தை நடத்தினார். இப்போது தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள்ளே கடலில் கலக்கும் ஒரே நதியான தமிழர் பண்பாட்டோடு இணைந்து நிற்கும் தாமிர பரணிக்கு வேத முலாம் பூசி புஷ்கரம் நடத்துகிறார்கள். அது என்ன புஷ்கரம்? குருபகவான் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசியான விருச்சிக இராசிக்கு ‘வீடு’ மாற்றுகிறானாம். முன்பணம் வாடகை இல்லாமல் வீடுகளை மாற்றிக் கொள்ளும் உரிமை இந்த இராசி பகவான்களுக்கு மட்டுமே உண்டு. தாமிரபரணி விருச்சிகராசிக்கான நதியாம். 144 ஆண்டு களுக்குப் பிறது இந்த விழா கொண்டாடப் படுவதால் இது மகாபுஷ்கரமாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது புஷ்கரமாம்.இந்த ‘மகா புஷ்கரத்’துக்கு தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்...

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

900 மாணவர்களை அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தவரும் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அகில இந்திய தேர்வுப் போட்டிகளுக்கு பயிற்சி அளித்தவரும் சமூக நீதி உணர்வோடு சமூக நீதிக்கான திறவுகோலாக தனது சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியை உருவாக்கிக் கட்டி வளர்த்தவருமான சங்கர், தனது இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது. அவரது மறைவுக்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய திருப்பூரில் கூடிய கழக செயலவை, 2 நிமிடம் மவுனம் காத்து மரியாதை செலுத்தியது. பெரியார் முழக்கம் 18102018 இதழ்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக;  ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக; ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

திருப்பூரில் அக்.13ஆம் தேதி கழக தலைமைக் குழு ஆலோசனையைத் தொடர்ந்து அடுத்த நாள் அக்.14ஆம் தேதி கழக செயலவை திருப்பூர் வாலிப்பாளையம் ‘டைய்யர்ஸ் அசோசியேஷன்’ அரங்கில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தொடங்கி யது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் வரவேற்புரை யாற்றினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி செயலவையின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார். 40 செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாலை 6 மணி வரை செயலவை நீடித்தது. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். செயலவை தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்பு களை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது....

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில்  முப்பெரும் விழா

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

எம்.ஜி.ஆர். நகல் கழக செயல் பாட்டாளர் கரு. அண்ணாமலை, தோழர்களுடன் இணைந்து நடத்தி வரும் அமைப்பு ‘கற்க கல்வி அறக் கட்டளை’. கரு. அண்ணாமலை மற்றும் சக தோழர்கள் வீ.பொற் கோவன், குமணன், விருகை செல்வம், மூவேந்தன்,குன்றத்தூர் சசிக்குமார், விநாயகமூர்த்தி, மணி மொழியன், சு,துரைராசு, இராமபுரம்  க,சுப்பிரமணி, கரிகாலன், சிலம்பம் சிவாஜி, மதன்குமார், சட்டக் கல்லூரி மாணவர்கள் சுரேசு, அன்பரசன், அம்பேத்கர் துரை மற்றும் தோழர்களின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட 8 இலட்ச ரூபாய் செலவில் “கற்க” கல்வி அறக்கட்டளை சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கல்வித்தந்தை காமராசர் நினைவுநாள், தமிழ்வழிக் கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு உதவி வழங்கும் விழா ஆகிய “முப்பெரும் விழா” 2.10.2018 அன்று சிறப்பாக நடந்தது. முகநூலில் பார்த்து கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள், எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் (இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய காரணமானவர்கள்), விழாவில் கலந்துகொண்டு...

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

1.10.2018 அன்று விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் கல்வி உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், பாக்கம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக கடுவனூர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து பாக்கம் பொதுக் கூட்டம் மேடை வரை தோழர்கள் பறையிசையுடன் பேரணியாக வந்தனர். கடுவனூர் – பாக்கம் இரண்டு ஊர்களில் பெரியார் சிந்தனை பலகை திறப்பு, கல்வெட்டு திறந்து கழகக் கொடியையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் கழகத் தோழர்களின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. பெரம்பலூர் தாமோதரன் ‘மந்திரமல்ல, தந்திரமே’ என்ற அறிவியல் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இரா. துளசிராஜா தலைமை வகித்தார். என்.மா. குமார், தே. இராமச்சந்திரன், மு. நாகராஜ், சா. நீதிபதி,  கே.வே. ராஜேஷ், சி. ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க ச.கு....

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து ஒன்றியப் பகுதியில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் செய்வது என மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 23.09.2018 ஞாயிறு அன்று அந்தியூர் ஒன்றியம் அத்தாணி பகுதியில் பரப்புரைப் பயணம் துவங்கியது. அத்தாணி பகுதியில் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், யாழ்மதி ஆகி யோரின் பாடல்களுடன் பரப்புரைப் பயணம் துவங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணு கோபால், நம்பியூர் இரமேசு, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்றம்  சுந்தரம் நன்றி கூறினார். அடுத்து பயணம்  கீழ்வானி பகுதிக்குச் சென்று அடைந்தது. கீழ்வானி பகுதியில்  வீரா கார்த்திக்,  இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். கீழ்வானி இந்திரா நகரில் அமைந்துள்ள கழகக் கொடிக் கம்பத்தில் ...

உயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

உயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

மத்திய அரசு உயர்கல்வி தொடர்பாக விவாதத்திற்கு முன்வைத்துள்ள மசோதா முன்வரைவு முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டும். இந்த மசோதா பல்கலைக்கழக மானியக்குழுவை அழித்தொழிக் கிறது. உயர்கல்விக்கு மானியம் வழங்கும் அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கையில் கொடுக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவிற்குப் பதிலாக உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்ற புதிய அமைப்பை முன் மொழிகிறது. உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகளில் அரசு தலையிடாது என்று கூறும் மசோதா இந்நிறுவனங்கள் எந்த ஒழுங்காற்று முறையுமின்றி தம் விருப்பப்படி செயல்பட வழி வகுக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் அம்சங்களை கண்காணிக்கவும் பொதுவாக உயர்கல்வி பற்றியப் பரிந்துரைகளை அவ்வப்பொழுது தேவை கருதி உருவாக்கி அரசுக்கு அளிக்கவும் புதிதாக அமைக்கப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்திற்கு (ழiபாநச நுனரஉயவiடிn ஊடிஅஅளைளiடிn) தலைவர், துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். தலைவரையும் துணைத் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் முறை மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது....

கழக ஏட்டுக்கு 100 சந்தா;  கால்பந்து போட்டிகள்  மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

கழக ஏட்டுக்கு 100 சந்தா; கால்பந்து போட்டிகள் மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

27.09.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்மேரீஸ் பாலம் அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி சார்பாக மாநில சுயாட்சியின் நாயகன் டாக்டர் கலைஞர் நினைவரங்கில் பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் கால்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை த.குமரன் தலைமையில், தோழர்கள் பி.அருண், து.அரவிந்தன், இரா.பரணிதரன் ஆகியோர் முன்னிலை யில் சீ.பிரவீன் குமார் வரவேற்புரையாற்ற தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன் ஒருங்கிணைத்தார். முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் பகுத்தறிவு, நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பகுதி மக்கள் ஓரணியாகத் திரண்டு வந்து பகுத்தறிவு கருத்துகளைக் கேட்டு சிந்தித்தனர். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் அருண்,  திருமூர்த்தி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான், கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

ஏழு தமிழர் விடுதலை : ஆளுநரின் தாமதம் சட்டப்படி சரியானதல்ல

ஏழு தமிழர் விடுதலை : ஆளுநரின் தாமதம் சட்டப்படி சரியானதல்ல

ஏழு தமிழர்கள் விடுதலையில் அமைச்சரவை யின் முடிவை ஆளுநர் தாமதப்படுத்துவது சட்டப்படி சரியானது அல்ல என்பதை விளக்கி வழக்கறிஞர் மனுராஜு சண்முக சுந்தரம், ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்து உத்தரவிடுவதை மேலும் தாமதப்படுத்துவது ‘சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்படுவதோ அல்லது சட்டப் பாதுகாப்போ எந்தவொரு நபருக்கும் மறுக்கப்படக் கூடாது’ என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 14-வது கூற்றை மீறுவதாகும். ஏழு தமிழர்களின் வழக்கு ஏராளமான திருப்பங்களைக் கொண்டது. அவர்களது கருணை மனுக்கள் 2000 தொடங்கி 2011 வரைக்கும் 11 ஆண்டுகள் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமலேயே உயர் அதிகார மையங்களில் கிடப்பில் போடப்பட்டிருந்தன. 2011 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றமே அவர்களது மரண தண்டனையை இரத்துசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய ஒன்றியம் எதிர் வி.ஸ்ரீஹரன் (முருகன்) (2005) வழக்கில், உச்சநீதிமன்றம் மரண தண்டனை இரத்து செய்து எஞ்சிய...

செயலவைக் கூட்டம் – மாற்றுத் தேதி அறிவிப்பு

செயலவைக் கூட்டம் – மாற்றுத் தேதி அறிவிப்பு

பெருமழை அறிவிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநில செயலவைக் கூட்டம் வரும் அக்.14 ஞாயிறு அன்று, திருப்பூரில் நடைபெறும். நாள் : 14.10 2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் :                காலை 9.00 மணி இடம் :                 டைய்யர்ஸ் அசோசியேசன் கட்டிடம், முருகன் கோயில் பின்புறம், வாலிபாளையம், திருப்பூர். கழக செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தின்  மற்ற செயலவை உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள். – கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 11102018 இதழ்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. நீண்ட நெடிய காலம் தன்னுடைய அரசியலால், எழுத்துகளால், இலக்கியப் பணிகளால், கலை செயல்பாடுகளால் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞரை நாம் இழந்து நிற்கிறோம். இதில் தலைப்பே கூட கருஞ்சட்டைக் கலைஞர் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பெரியார் இயக்கத்தில், சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய கலைஞர், அதற்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்ற பிறகு தன்னுடைய வீரியமிக்க சொற் பொழிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் எழுச்சியை, இன எழுச்சியை ஏற்படுத்தியதில் ஒரு பங்கு உடையவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பெரியாரின் தொண்டர் என்ற அடிப்படையில், பெரியாரிய பார்வையில் அவர் ஆற்றிய பணிகள், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி நாம் பேசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டு தோழர்கள் ’கருஞ்சட்டைக் கலைஞர்’ என்ற தலைப்பைக் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன். “உலகத்தின்...

கழக வளர்ச்சிக்கு நன்கொடை

கழக வளர்ச்சிக்கு நன்கொடை

கருவூலத் துறை கணக்கு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும் மயிலாடுதுறையில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளராக செயல்பட்டவருமான பெரியாரியலாளர் அரங்கராசன் கழக வளர்ச்சிக்கு ரூ.15,000 நன்கொடை வழங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியரும் அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலா விழா மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியருமான அண்ணாதாசன் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். கழக ஆதரவாளர் மயிலாடுதுறை பி. இராசேந்திரன் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்) பெரியார் முழக்கம் 04102018 இதழ்

சாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா-கவுசல்யா உருக்கமான சந்திப்பு

சாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா-கவுசல்யா உருக்கமான சந்திப்பு

தெலுங்கானாவில் தொழில் அதிபரின் மகள் அம்ருதா, பிரனாய் என்ற தலித் இளைஞரை காதலித்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். அம்ருதாவுக்கு வயது21. பிரணாய்க்கு வயது 24. இவர்களின் குழந்தை அம்ருதாவின் வயிற்றில் வளருகிறது.  அம்ருதாவின் தந்தையான தொழில் அதிபர், கூலிப்படையை வைத்து பிரணாயை வெட்டிக் கொலை செய்து விட்டார். இதற்காகக் கூலிப் படைக்கு அவர் கொடுத்த பணம் ஒன்றரை கோடி ரூபாய். இணையர்  இருவருமே படித்தவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்தவர்கள். இளம் காதல் கணவனை இழந்து தவிக்கும் அம்ருதா, “எனது வயிற்றில் வளரும் குழந்தையை ஜாதி எதிர்ப்புப் போராளியாக வளர்ப்பேன். இனி நானும் ஒரு ஜாதி எதிர்ப்புப் போராளி” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதேபோல் ஜாதி வெறிக்கு தனது கணவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா, ஓடோடிச் சென்று அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அம்ருதாவுக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றையும் எழுதி நேரில்...

பெரியார் – திராவிட இயக்கம் குறித்து நடந்த இரண்டு நாள் ஆய்வரங்கம்

பெரியார் – திராவிட இயக்கம் குறித்து நடந்த இரண்டு நாள் ஆய்வரங்கம்

பெரியார் திராவிட இயக்கம் குறித்து இரண்டு நாள் ஆய்வரங்கம் ‘திராவிட அரசியல் வரலாற்றுத் தடங்கள்’ என்ற தலைப்பில் 2018  செப்டம்பர் 29, 30 ஆகிய இரு நாட்களிலும் சென்னை இராஜா முத்தையா ஆராய்ச்சி நூலக வளாக அரங்கில் நடைபெற்றது. சமூக மாற்றத்துக்கான ஆய்வு நடுவம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இராஜா முத்தையா ஆராய்ச்சிக் கழகம் ஒருங் கிணைந்து நடத்திய இந்த ஆய்வரங்கில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வாளர்கள் ஆய்வுரை வழங்கினர். அது குறித்து விவாதங்களும் நடந்தன. செப். 29 அன்று காலை 10 மணிக்கு ‘பொது மன்றமும் மாறும் சமூக அடையாளங்களும்’ தலைப்பில் தொடங்கிய முதல் அமர்வை முனைவர் ராஜன்குறை நெறியாள்கை செய்தார். வீ.எம்.எஸ். சுபகுணராஜன் – ‘பெரியார் ஜாதிச் சங்கங்களும் ஜாதி ஒழிப்பும்’ என்னும் தலைப்பிலும், பேராசிரியர் ஜி.அலோசியஸ் – ‘சூத்திரத் தன்மையிலிருந்து சுயமரியாதைக்கு’ என்னும் தலைப்பிலும், பேராசிரியர் சுந்தர் காளி – ‘தமிழகத்தில் பொது மன்ற...

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

திருப்பூரில் பெரியார் சிலையின் சுற்றுச் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எச்.ராஜாவின் பிறந்தநாள் சுவரொட்டிகள் பா.ஜ.க.வினரை வைத்தே கிழித்தெறியப் பட்டது. தமிழகம் முழுவதும் பெரியார் சிலையை சேதப்படுத்தல் மற்றும் சிலையை அவமானப்படுத்தும் விதத்தில் இந்துத்துவவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலைகள் உள்ள இடத்தின் சுற்றுச்சுவரில் வெள்ளியன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. திட்டமிட்டு வன்முறையை உண்டாக்கும் வகையில் இந்துத்துவவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த செயலை அறிந்த பெரியாரிய அமைப்பினர் அவ்விடத்தில் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு தயாராகினர். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டுவதற்காக திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பாஜகவினரே கிழித்து எறிய வேண்டும் என பெரியார் அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து பாஜக நிர்வாகிகளிடம் பேசிய காவல்துறையினர், அக்கட்சியைச் சேர்ந்தவர்களை...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (4) கலைஞர் சந்தித்த ‘ஜாதிய-பாகுபாடுகள்’

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (4) கலைஞர் சந்தித்த ‘ஜாதிய-பாகுபாடுகள்’

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் பங்கேற்று நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) 1990களில் உலகமயமாக்கல் எனும் தாராளமயக் கொள்கையை அன்றைய நரசிம்மராவ் ஆட்சி இந்தியாவுக்குள் கதவு திறந்து விட்டது. அதன் பிறகு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அரசு ஒதுங்கிக் கொண்டு, தனியார் துறைகள் மேலாதிக்கம் பெறத் தொடங்கின. இந்தப் பின்னணியில் 1996-2001ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த கலைஞரின் செயல்திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தின் மிகச் சிறந்த நிர்வாகம் நடைபெற்ற காலமாக இது, இன்றளவும் பேசப்படுகிறது. தனியார் துறை வேகமாக வளர்ந்து கல்வியை தனியார் மயமாக்கிய அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களை அதிகமாகத் தொடங்கினார் கலைஞர். 1989இல் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் திருநெல்வேலியிலும், 2000-த்தில் பெரியார் பெயரில்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் கருஞ்சட்டைக் கலைஞர் என்ற தலைப்பில் செப்டம்பர் 30ஆம் தேதி திருச்செங்கோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் து.சதிசுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு இரா.தர்சினி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் மாவட்ட தலைவர்  மு.சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலைஞரின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் ஆகியோரும் உரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பேசுகையில், “காவிகளை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றபோது உறுதியளித்திருக்கிறார். அவருடைய பாதையில் நாங்களும் காவிகளை எதிர்க்க உறுதியாய்...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும்...

1971இல் சேலம் மாநாட்டில்  பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது

1971இல் சேலம் மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது

1971ஆம் ஆண்டு ஜன.23, 24ஆம் தேதிகளில் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பெரியார் முன்னிலையில் திராவிடர் கழகம் ஒரு புரட்சிகர தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘ஒருவரின் மனைவி மற்றொருவருடன் உடல் உறவு கொண்டால் – அதை கிரிமினல் குற்றமாகக் கருதக் கூடாது’ என்ற அத்தீர்மானம் அப்போது பொது வெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ போன்ற பார்ப்பன நாளேடுகள் திரித்து, ‘ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொண்டு போவது குற்றமல்ல’ என்று செய்தி வெளியிட்டன. இதை எதிர்த்து அந்த ஏடுகள் மீது திராவிடர் கழகம் நீதிமன்றத்தில் (சென்னை பெருநகர 5ஆவது நீதிமன்றம்) வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்ந்த பிறகும், மீண்டும் ஒரு முறை ‘இந்து’ நாளேடு, அதே போன்று ‘திரிபு’ செய்தியை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் அந்த ஏட்டின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ‘இந்து’ ஏடு...

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். காவி ஆட்சியை வீழ்த்துவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்போது அறிவிக்கிறார். இவரே எங்களது கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று ஏற்கனவே கூறியவர் தானே? இது முரண்பாடு அல்லவா? என்று கேட்டார்கள். முரண்பாடு அல்ல என்று நான் பதில் கூறினேன். பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ‘இந்து’க்கள் என்ற பட்டியலில் தான் அடைத்து வைக்கப்பட் டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலை உருவாக்கி அவர்களுக்கு சமூகநீதி உரிமைகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்ற நிலையை உருவானதற்கே அடிப்படை என்ன? இந்த மக்களை இந்துக்களாகி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாக்கி,  அவர்கள் மீது சுமத்திய இழிவை நீக்கவும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தரவும் இந்த இடஒதுக்கீடு பட்டியல்களே வந்தன! ‘இந்துக்கள்’ என்றாக்கப்பட்டதால் உழைக்கும் மக்கள் கொடுத்த கடும் விலை இது. திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் – சுயமரியாதை,...

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

15.09.2018 அன்று கழகத் தலைவர்  கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற தமிழர் கல்வி உரிமை மீட்புப் பயணம் குறித்த தலைமைக் குழு – பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் –  இயக்கக் கொள்கைப் பரப்புரைக்கும்,  மக்களிடையே கருத்துகளை எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் கலைக்குழுக்களின் தேவை குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் முதல் முன்னெடுப்பாக தமிழ்நாடு மாணவர் கழகமும், மாற்றம் பகுத்தறிவு கலைக் குழுவும் இணைந்து சேலம் மாவட்டம் கொளத்தூர், உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் இரண்டு நாள் பறை பயிற்சிப் பட்டறையை எதிர்வரும் 3.11.2018,  4.11.2018 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணமாக ரூ.500 (பயிற்சி, உணவு செலவுகள் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான பயிற்சிக் கட்டணம்  ரூ.1200 ஆகும். பயிற்சி பெற விரும்பும்  கழகத் தோழர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களுக்குத்...

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி நடத்தும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டி 23.09.2018 அன்று காலை 8.00மணிக்கு குருபுரம் விளையாட்டு திடலில் தொடங்கப்பட்டது. போட்டியை காங்கிரசை சார்ந்த ஐடீஊ பாலு தொடங்கி வைத்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். மாலை 6.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகை தந்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து, இறுதி சுற்றுக்கு தகுதியான அணிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து இறுதிச் சுற்றை தொடங்கி வைத்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

வடசென்னை  கழகம் நடத்திய கருத்தங்கம்

வடசென்னை கழகம் நடத்திய கருத்தங்கம்

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளில் அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம் 22.09.2018 அன்று மாலை 6 மணிக்கு தாய் ரமாபாய் பவன், பெரம்பூரில் தட்சணாமூர்த்தி முன்னிலையில், நா.பாஸ்கர் வரவேற்புரையாற்ற, இராஜீ தலைமையில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங் கிணைத்தார். இந்த கருத்தரங்கத்தில் “பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆய்வுரையாற்றினார். “பா.ஜ.க ஆட்சியில் சந்திக்கும் அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் .ஆளுர் ஷாநவாஸ்  சிறப்புரையாற்றினார். இறுதியாக வட சென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 17.09.18 அன்று  மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. எழுத்தாளர் வி.எம்.எஸ் சுபகுணரஜன்,  பேராசிரியர் கல்யாணி, ஆசிரியர்  இராமமூர்த்தி ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை மருதம் இரவி கார்த்திகேயன்   ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, கழகத் தலைவரை சால்வை அணிவித்து வரவேற்று நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து கேட்டுகொண்டிருந்தார். தி.மு.க. கட்சித் தோழர்கள், அய்.ஏ.எஸ் பயிற்சி மாணவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினர் அய்யனார்,  விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன்,  செஞ்சி பெரியார் சாக்ரட்டீஸ்,  சென்னை தம்பி மண்டேலா, நடராசன், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி பரப்புரை செயலாளர் விஜி,  இளங்கோவன்,  பெரியார் கணேசன், அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27092018 இதழ்