தீபாவளி ‘பட்டாசு’ப் புகையால் மூச்சுத் திணறிய தலைநகரம்

தீபாவளி என்ற பண்டிகை நடந்து முடிந்துவிட்டது. நரகாசூரன் என்ற அசுரனை, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சூழ்ச்சியாகக் கொன்ற நாள். அசுரர்கள் கொன்று ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக, புராணக் கற்பனைக் கதையிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தீபாவளிக் கதை. அந்த தீபாவளி பண்டிகையாக மக்கள் மீது திணிக்கப் பட்டது. அந்த விழா கொண்டாட் டத்தைப் பட்டாசு வெடித்துக் கொண் டாடுங்கள் என்று ஒரு வழக்கமும் சமூகத்தில் திணிக்கப்பட்டது.

அசுரர்கள் என்பவர்கள் இந்த நாட்டின் உழைக்கின்ற மக்கள். தேவர்கள் என்பவர்கள் வேதங்களை ஓதி, மந்திரங்களை ஓதி, யாகங்களை நடத்தி உழைக்கின்ற மக்களை சுரண்டிக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு இந்த உழைக்கின்ற மக்கள் மிகப் பெரிய சவாலாக இருந்தார்கள். வேதங்களை கேள்வி கேட்டார்கள். அதன் காரணமாக இந்த அசுரர்கள் என்கிற உழைக்கும் மக்களை கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்பதற்காக பல அவதாரங்களை எடுத்து வந்து, கடவுள்கள் அழித்தார்கள் என்று ஆரிய, பார்ப்பனியப் புராணங்கள் பல கட்டுக்கதைகளை உருவாக்கியது. அந்த அடிப்படையில் கொண்டாடப் பட்டது தான் நேற்று நடந்த தீபாவளி. அதனுடைய விளைவு என்ன ?

இன்றைக்கு சென்னை நகரத்தில் மட்டும் 48 டன் குப்பைகள் அகற்றப் பட்டு இருக்கின்றன. குப்பையை எடுக்கின்ற அந்த விளிம்பு நிலையில் இருக்கின்ற தொழிலாளிகள், எவ்வளவு அல்லலுக்கு, எவ்வளவு மாசுக்கு உட்பட்டிருப்பார்கள் என்பதை மனித நேயத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஹணுஐ (ஹசை ணுரயடவைல iனேநஒ) என்று மாசு பற்றிய ஒரு கண்ணோட்டம், 50 ஹணு இருந்தால் நல்ல காற்று, 100 வரை இருந்தால் ஏற்றுக் கொள்ள முடியும். என்று கூறுகிறது ஹசை ணுரயடவைல iனேநஒ. ஆனால், நேற்று சென்னையில் 500 யும் தாண்டி இருக்கிறது ஹணு. இரண்டு மணி நேரத்தில் 45 சிகரெட் புகையினை ஒருவர் சுவாசித்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அத்தகைய பாதிப்புகளை சென்னை நகர வாசிகளுக்கு தீபாவளி கொண்டாட்டம் உருவாக்கியிருக் கிறது.

நுரையீரல் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அடுத்த சில வாரங்களில் மருத்துவமனையை நோக்கி வரப் போகிறார்கள் என்ற செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படி மனிதன் சுவாசிக்கும் காற்றைக் கெடுக்கின்ற ஒரு விழாவாக ஒரு மதத்தினுடைய விழா இருக்க வேண்டுமா? இது அறிவியலுக்கு உகந்தது தானா? இத்தகைய விழாக்களை இன்னும் எத்தனை ஆண்டுகாலம் கட்டி அழுது கொண் டிருக்கப் போகிறோம்? என்ற சிந்தனைகளை நோக்கி சமூகம் நகர்ந்தாக வேண்டும்.

பெரியார் முழக்கம் 11112021 இதழ்

You may also like...