Category: பெரியார் முழக்கம்

பாவலர்  தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்

பாவலர் தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்

சீரிய பெரியாரியலாளரும் கவிஞருமான தமிழேந்தி (69) அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் மே 5ஆம் தேதி காலை 7 மணியளவில் முடிவெய்தினார். தோழர் ஆனைமுத்து அவர்களின் மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி அமைப்பான புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகப் பணி யாற்றி வந்த தோழர் தமிழேந்தி பெரியார் இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு செயல்பட்டவர். குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழகத்துடன் மிகவும் நெருக்கம் கொண்டு கழக நிகழ்வுகள் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும் பேசியும் வந்தவர்.  சிந்தனையாளன் இதழ் தயாரிப்புப் பணியிலும் அதன் பொங்கல் ஆண்டு மலர் தயாரிப்பிலும் முக்கியப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சமகால அரசியலை மரபுக் கவிதை வடிவத்தில் கவிப் புனையும் ஆற்றல் அவரது தனித்துவமான சிறப்பு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புழல் சிறை வளாகம் முன்பு 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண் டிருந்தபோது உணர்ச்சி மேலிட்டு மயங்கி விழுந்தார்....

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ்த் தொடர்ச்சி: கோவை சுரேஷ் பாபு   –      ரூ. 20,000 குவைத் பாண்டியன்    –      ரூ. 20,000 ‘இட்லி’ தயாரிப்பாளர் இனியவன்    –      ரூ. 20,000 சென்னை தோழர்கள் : உதயசங்கர், கார்த்திகேயன், டாக்டர் சுந்தர், –      ரூ. 20,000 கோவை தங்கவேலு, அரிகிருஷ்ணன் இணைந்து    (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம்...

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? பாவலர் தமிழேந்தி

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? பாவலர் தமிழேந்தி

பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் பெரியாரும் தமிழும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது. பெரியாரின் முன்னோர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பின்னாளில் அவர்கள் தமிழ்நாட்டிற்குக் குடிபெயர்ந்து பல ஆண்டுகளாய் இங்கு வாழ்ந்து தம் தாய்மொழியாகத் தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டவர்கள். இது பற்றிப் பெரியாரே பின்வருமாறு கூறுவார்: “என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதை நான் தினசரி பேச்சு வழக்கில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். இருந்தாலும் தமிழ்மொழியால்தான் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.” (விடுதலை 21.5.1959) “மேலும், எனக்கு மொழிப் பற்று, இனப்பற்று, கடவுள் பற்று, நாட்டுப் பற்று, மதப் பற்று...

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு இணையரின் மகன் சி.இரா. கதிர்முகிலன் – அ. நஜ்முன்னிசா ஆகியோரின் காதல், மத மறுப்பு மணவிழா 24.4.2019 காலை 11 மணியளவில் சிறப்புடன் நிகழ்ந்தது. அதே நாளில் சிவகாமி-முகில்ராசு இணையரின் புதிய இல்லத் திறப்பு விழாவும் சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசையோடு தொடங்கியது இல்லத் திறப்பு. இல்லத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். மணமக்களுக்கு பேராசிரியர் சரசுவதி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்வுக்கு கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். அவர் தமது உரையில் ஆசிரியர் சிவசாமியும் தோழர் முகில்ராசுவும் கழகத்துக்கு முழு நேரக் களப்பணியாளர்களாக தொண்டாற்றுவதையும் கழகத் தோழர்களுக்கு நெருக்கடி வந்தால், ஓடோடிச் சென்று உதவி வருவதையும் திருப்பூர் மாவட்டத்தில் கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து களப்பணியாற்றுவதில் முனைப்பும் ஆர்வமும் காட்டி செயல்படுவதையும்...

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா –    மகளிர் தினவிழா –  சிறந்த பெண் சேவையாளர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா இராசிபுரம் கன்னட சைனீகர் திருமண மண்டபத்தில் 21.4.2019 ஞாயிறு மாலை  5.45 மணியளவில்  தொடங்கியது சுமதி மதிவதனி (தி.வி.க. இராசிபுரம்) தலைமை தாங்கினார். மணிமேகலை (தி.வி.க. ஈரோடு) வரவேற்புரை யாற்றினார். வி.பாலு (தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்), கழகத் தலைவர் கொளத்தூர்மணி, முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) நிகழ்வில் சிறப்புரையாற்றினர். 1)     மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நீதி காக்கவும் துணிச்சலாக களமாடி வருகிற முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு ‘மக்கள் அரசியல்’ விருதினையும், 2)     கரூர்மாவட்டம் பள்ளப்பட்டியைச் சார்ந்த பெரியார் பற்றாளரும் இந்தியாவின் தலைசிறந்த 100 இயற்கை வேளாண்மை விவசாயிகளில் ஒருவராக டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப் பட்டவரும், காடுகளை அழித்தொழித்த ஈஷா யோகா...

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது. சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30  அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி...

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

சேலம் மேட்டூரில் ஏப்ரல் 27ஆம் தேதி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாத்திகர் விழா என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் சக்திவேல் மனு அளித்திருந்தார்.  தேர்தலைக் காரணம் காட்டி, மாவட்ட ஆட்சியரை அணுகக் கூறி, காவல்துறையினர் மனுவைத் திரும்ப அளித்தனர். தங்கள் மனுவைத் திரும்ப அளித்ததன் மூலம் நிகழ்ச்சியைத் தாமதப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, விழாவுக்கு அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், கருமலைக்கூடல் காவல் நிலையத்தினருக்கும் உத்தரவிடக் கோரி சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை இரண்டு நாட்களில் பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். நாட்கள் கடந்தபின்னும் இன்னும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காமல் தாமதம் செய்வதால் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக சக்திவேல் அறிவித்துள்ளார். விரைவில் நீதிமன்ற அனுமதி பெற்று மூடநம்பிக்கைக்கு எதிரான நாத்திகர் விழா...

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

திருப்பூர் தொழிலதிபரும் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ்  நிறுவனருமாகிய லோகு, கழக கட்டமைப்பு நிதியாக ரூபாய் ஒரு லட்சம் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். இந்தச் சிறப்பான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்பிரமணிக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 02052019 இதழ்

தேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு  அனுமதி

தேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம், அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்குறுதி யளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களிலே போலீஸ் பாதுகாப்புடன் இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது. கடந்த மார்ச் 2016ல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை  HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல் (பாறையிடுக்கு எரிவாயு), டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங் களைத் தேர்வு செய்யவும், இலாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி, வருமானத்தில் பங்கு என்கிற புதிய நடை முறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றி யமைக்கப்பட்டது. மேலும், கடந்த 01.08.2018 அன்று நடந்த மத்திய அமைச்சரவைக்...

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

பதியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் வாய்ப்புக்கேற்ப மாற்றிப் பேசும் கெடுவாய்ப்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டுள்ளது. அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்தும் தவறானப் போக்காகும். பாவேந்தர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல. “மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு வஞ்சர்க்கோ கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியிருப்பு விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்மானம் பாயும் தலை மேடை நமக்குத் தாண்டி அந்த வாட்படை நமைஅவரின் போருக்கு ஒப்படை” பெரியார் குறித்துப் பாவேந்தர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். 1908ஆம் ஆண்டு நடந்த புலவர் தேர்வில் மாநி லத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றவர் அன்றைய கனக சுப்புரத்தினம். மயிலம் ஸ்ரீஷண்முகன் வண்ணப்பாட்டும், மயிலம் சுப்பிரமணியர் துதியமு தும் பாடிக்கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், அதே ஆண் டில் புதுவை வேணு நாய்க்கர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் முதன்முதலாய்ப்...

கிராமத்துப் பெண் கோமதியின் உலக சாதனை

கிராமத்துப் பெண் கோமதியின் உலக சாதனை

“கோமதி… கோமதி… இந்தப் பெயரை உச்சரிக்காதவர்களே கிடையாது. திருச்சியை திரும்பி பார்க்காதவர்களே இல்லை. ஆனால், இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருப்பதையே அறியாத அப்பாவியாக இருக்கிறாள் அந்தத் தாய்” திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் போதிய பேருந்து வசதிகள்கூட இல்லாத மிகவும் பின்தங்கிய கிராமம் முடிகண்டம். இந்த கிராமத்திற்கு செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் படை யெடுத்தனர். கிராமமே ஒன்றுகூடி ஆச்சரியப்பட்டது. என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ?  என முணுமுணுக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் கோமதி வீடு எங்கே இருக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேட்க, மேலும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதற்காக? என்று ஒருவர் கேட்க, ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் என்று ஊடக செய்தியாளர்கள் கூறியதைக் கேட்ட கோமதியின் உறவினர்களும் ஊர் மக்களும் இன்ப வெள்ளத்தில் நீந்தினர். தோஹாவில் நடந்த ஆசிய ஓட்டப்பந்தயம் 800 மீட்டர் பிரிவில் கோமதி தங்கப் பதக்கத்தை வாங்கிய...

மோடி ஆட்சியின் கீழ் காஷ்மீர்

மோடி ஆட்சியின் கீழ் காஷ்மீர்

மோடி ஆட்சியின் முறைகேடுகள் பற்றிய தொகுப்பு : (கடந்த இதழ் தொடர்ச்சி) மோடி 2014ஆம் ஆண்டு, காஷ்மீருக்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையோடு பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆட்சிக்கு வந்த பிறகு மோடியின் முதல் காஷ்மீர் வருகைக்கே காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க., மெஹ்பூபா முஃப்தி கட்சியான பிடிபியுடன் கூட்டணி அமைத்து ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக  ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டங்களும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமானதால் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற மாநில அரசு கலைக்கப்பட்டு காஷ்மீரில் 2018ஆம் ஆண்டு கவர்னர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 2015ஆம் ஆண்டு காஷ்மீரில் புர்கான் வானி இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் இராணுவத் தினரால் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது. இதில் பல்லாயிரம் பேர் குழந்தைகள் உட்பட தங்கள் பார்வையை இழந்தார்கள். தங்கள் எதிர்காலத்தை...

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

விழுப்புரம் கழகம் தீவிரம் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்  20.04.2019 அன்று காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் பூஆ. இளையரசன் ஒருங்கிணைத்தார், மாவட்டச்  செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.   கழகத்தின் அடுத்தகட்ட செல்பாடு மற்றும் தலைமைக் கழக அலுவலகத்திற்கான நிதியை விரைவாக. மே 15 க்குள் வசூலித்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் மற்றும்  பயிற்சி வகுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது மாவட்ட துணைத் தலைவர் சிறீதர், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு,  கிருஷ்ணராஜ், மூர்த்தி மற்றும் தோழர்கள் கெஜராஜ், சிலம்பரசன், அருண், திருமாவளவன், சிறீநாத், மதியழகன், வசந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு கழகம் தீவிரம் கழகக் கட்டமைப்பு நிதி தொடர்பான, திருச்செங்கோடு  நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் 28.04.2019 மாலை...

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ் தொடர்ச்சி: ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் லோகு – ரூ. 1,00,000/- ரமேஷ்-ஜீவராணி – ரூ. 20,000/- 3. நெமிலி திலீபன் – ரூ. 20,000/- ஹேமலதா, சென்னை – ரூ. 20,000/-      (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம் 02052019 இதழ்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீழாக மாற்றி தொழில் அதிபர்களால் இலாபம் அடைந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. தலைமை நீதிபதி மீது புகார் கூறிய பெண் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. அதில் நீதிமன்றத் தீர்ப்புகளை ‘டைப்’ செய்யும் பணியில் இருந்த போது, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “மோசம், மிக மோசம்” என்று கூறிய வரிகளை அப்படியே “நல்லது மிகவும் நல்லது” என்று தலைகீழாக மாற்றம் செய்து பதிவு செய்வார். முக்கியமாக வங்கிக் கடன் தொடர்பாக பெரிய நிறுவனத்தினர் மீது வரும் தீர்ப்புகளில் முன்கூட்டியே இவரிடம் நிறுவனத்தின் முக்கிய நபர்கள் பேசி வைத்ததைப் போல் இவர் மாற்றிவிடுவார். இதன்மூலம் பல பெரிய தொழில் நிறுவன முதலாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த விவகாரம் ரஞ்சன் கோகோய் தலைமையில் உள்ள குழுவில் இவர் எழுத்தராகச் சேர்ந்த 2015ஆம் ஆண்டில்...

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

06.04.2019 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி  அறிவழகன்  வீட்டில் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கழகத்தின் கட்டமைப்பு நிதியாய் ரூபாய் 20000 மே மாதம் 10-ந் தேதிக்குள் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது வருகின்ற 17ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தலைமைக் கழகத்தின் முடிவான திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பதை ஆதரித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் சிதம்பரம் கடலூர் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது மே மாதம் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர். நட பாரதிதாசன் (மாவட்டத் தலைவர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம்...

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய சவப் பரிசோதனை அறிக்கையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் ‘பிரண்ட் லைன்’ இதழ் அதை வெளிக் கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையை அலசி மருத்துவர் புகழேந்தி ‘ஜூனியர் விகடன்’இதழில் எழுதிய கட்டுரை இது. தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மறக்கமுடியா பெருந் துயரம்! துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர்களின் உடற் கூராய்வு சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளார் தடயவியல்துறை மருத்து வரான புகழேந்தி. அவரிடம் பேசுகையில், “சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின், கந்தையா, தமிழரசன், செல்வசேகர் ஆகியோரின் உடல்களுக்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை ஆய்வு மற்றும் அறிக்கைகள் அவசரக் கோலத்தில் நடந்துள்ளன என்பதை உடற்கூராய்வு அறிக்கைகளை வைத்தே சொல்ல முடியும். போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் 151-ன்படி இறந்தவர்கள் அணிந் திருந்த...

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரிலுள்ள அண்ணலின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 10.04.2019 புதன் கிழமை மாலை 4.00க்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத வெறியர்கள் பெரியார் சிலையை உடைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பட்டத் திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ் தலைமையேற்றார். அதில் பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்தும், பார்ப்பன மதவாதத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட், கல்லை சங்கர், செ.வே ராஜேஷ், பெரியார் பாரதி, கார்மேகம், ஜெ.க. வேலாயுதம், துளசி உள்ளிட்ட 30 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம் நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00மணிக்கு அமைப்பாளர் தமிழ் அரசன் தலைமையுரையுடன் துவங்கியது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஸ்ணு ‘சாதியால் அம்பேத்கர் சந்தித்த பாதிப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் டி.மத்தியாஸ், ‘அம்பேத்கரின் இன்றையத் தேவை’ என்ற தலைப்பிலும், தமிழ்மதி ‘அம்பேத்கரை விழுங்கும் இந்துத்துவா’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்பு கேள்வி பதில் நிகழ்வுகள் நடைப்பெற்றது. மஞ்சுகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் தோழர்கள் ரமேஸ்பாபு, இராஜேஸ்குமார், சஜிகுமார், முத்து, இரவி, சங்கர், இராஜேந்திரபிரசாத் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

மோடி ஆட்சியில் பாடத் திட்டத்தில் இந்துத்துவா திணிப்பு – காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகள் – வங்கிப் பண பரிமாற்றத்தில் நிகழ்ந்த மோசடிகள் பற்றிய ஒரு தொகுப்பு: மோடியின் ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வி : 2014இல் மோடியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்று  சொல்லப்பட்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டு 230 பக்க வரைவு தயார் செய்யப்பட்டது. பிறகு அதையும் மாற்றியமைத்து சுப்ரமணியம் என்பவர் தலைமையின் கீழ் ஒரு புதிய குழு தொடங்கப்பட்டு வரைவு தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்று வரை முடியவில்லை. இந்தியாவில் 2009ஆம் ஆண்டு கல்விக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் 1 முதல் 8ஆம் வகுப்பு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழும், 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் அனைத்தும் இராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா பையன் திட்டத்தின் கீழும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால்,...

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் 13.3.2019 அன்று உடுமலைப்பேட்டை குமரலிங்கம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், ‘தந்தை பெரியார் வழியில் சமூகநீதி’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘பெண் விடுதலைத் தளத்தில் சமூகநீதி’ தலைப்பில் தமுஎச மாநிலத் துணைச் செயலாளர் சுந்தரவள்ளி, ‘அண்ணல் அம்பேத்கர் ஒளியில் சமூகநீதி’ தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழ்த் தேசிய மரபில் சமூகநீதி’ தலைப்பில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் வே. பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாலை 4 மணிக்கு சங்கர் தனிப் பயிற்சி மய்யக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

02.04.2019 அன்றுகாலை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில்…. துப்புரவு பணியாளர்கள் சாக்கடை அடைப்பு, குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலையில் எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இன்றி வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த மயிலாப்பூர் பகுதியின் இளைஞர்கள் பீரவீன்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களைப் பாதுகாப்புக் கருவியின்றி வேலை செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பணியாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்திய வார்டு 123ஆவது பகுதி மாநகராட்சி பொறுப்பாளர் பலராமனைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். பாதுகாப்புக் கருவிகளை உடனே தருமாறும், அதன் பின்னே அவர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், பலராமன்முன்னுக்கு பின்னான பதில்களைத் தோழர்களிடம் கூறியுள்ளார். துப்புரவுப் பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் பாதுகாப்பு கருவிகளிலின்றி ஈடுபட அனுமதிக்க முடியாது எனக் கூறி, கழக மயிலாப்பூர் பகுதித் தலைவர் மாரி மற்றும் தோழர்கள் சென்னை மாநகராட்சியில்...

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

இலங்கையில் கிறித்தவர்களைக் குறி வைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. இந்தியாவில் ‘இராம இராஜ்யம்’ அமைக்கத் துடிக்கும் சக்திகள், சிந்தனையாளர்களைக் கொலை செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் மதம் குறித்து 78 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிகழ்த்திய உரை இது. அக்கிரசானர்  அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப் படுவதுமாகும். ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது...

தலித் மக்கள் வீடுகளை சூறையாடிய  பா.ம.க. வன்முறைக்கு கழகம் கண்டனம்

தலித் மக்கள் வீடுகளை சூறையாடிய பா.ம.க. வன்முறைக்கு கழகம் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில் பா.ம.க.வினர் திட்டமிட்ட கலவரத்தில் இறங்கி தலித் மக்களின் வீடுகளைத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தொல் திருமாவளவன் சின்னம் பானை என்பதால் பானைகளை வீதிகளில் போட்டு பா.ம.க.வினர் உடைத்துள்ளனர்.  இதைத் தட்டிக் கேட்டார்கள் என்பதற்காக தலித் மக்களின் வீடுகளை பொன்பரப்பி கிராமத்தில் கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். பா.ம.க.வுடன் இந்து முன்னணியினரும் இதில் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ‘கீழ் விஷாரம்’ வாக்குச் சாவடியைக் கைப்பற்ற பா.ம.க.வினர் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர். அன்புமணி இராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தமேடு கிராமத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டுகளை பா.ம.க.வினர் போட்டுள்ளனர். ‘இந்து’ ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது. வீடியோ பதிவுகளும் வெளி வந்துள்ளன. பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ்...

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். மதுரை முருகேசன் வாசுகி – ரூ.20,000/- விடுதலை இராசேந்திரன் – ரூ.20,000/- சென்னை அண்ணாமலை (எம்.ஜி.ஆர். நகர்)-ரூ.20,000/- (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம் 25042019 இதழ்

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையில் கிறித்துவர்களைக் குறி வைத்து அவர்களின் வழிபாட்டு இடங்களிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்து 310க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர். 500 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்னர். மட்டக் களப்பில் ஈஸ்டர் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த தமிழர்களும் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவைச் சார்ந்த 5 பேர் உயிர்ப் பலியாகியுள்ளனர். சிறுபான்மை மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்றாலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மீது இலங்கை அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் தாக்குதலுக்கு குறி வைக்கப் பட்டவர்கள் – மதத்தின் அடிப்படையில் தான் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. உலகம் முழுதும் மத பயங்கரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று இந்த பட்டியல் விரிவடைந்து நிற்கிறது. தங்களின் ‘கடவுள்’ ஆணையை ஏற்று ‘மத அரசாட்சியை’ உருவாக்குவதற்காக மனித...

பிரெஞ்சு நாளேடு அம்பலப்படுத்துகிறது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இடைத் தரகரா மோடி

பிரெஞ்சு நாளேடு அம்பலப்படுத்துகிறது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இடைத் தரகரா மோடி

ரிலையன்ஸ் நிறுவனம், பிரான்ஸ் அரசிடம் ரூ. 1,124 கோடி வரித் தள்ளுபடி பெற்றிருப்பதன் மூலம், ரபேல் பேரத்தில், அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி, இடைத்தரகராக செயல்பட்டிருப்பது நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.  இதுதொடர்பான விவரம் வருமாறு: இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவரான அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் அட்லாண்டில் பிளாக் பிரான்ஸ்’ எனும் பெயரில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றை, பிரான்சில் நடத்தி வருகிறார். ஆனால், பிரான்ஸ் அரசுக்கு செலுத்த வேண்டிய 151 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 1182 கோடி) அளவிற்கான வரியை, கடந்த 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரை அம்பானி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், முதற்கட்டமாக 7.3 மில்லியன் யூரோவை (ரூ. 57 கோடி) செலுத்த, ரிலையன்ஸ் நிறுவனம் சம்மதித்துள்ளது. 2014 கால கட்டத்தில் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன....

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்கு வதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை....

புல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்

புல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்

அதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகார பூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. (‘தி ஸ்க்ரால்’ பத்திரிகையில் கல்பனா சர்மா எழுதிய கட்டுரை) காஷ்மீரில் உள்ள புல்வாமா என்னும் ஊரில் பிப்ரவரி 14 அன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 40 ரிசர்வ் காவல்துறை வீரர்களின் மரணத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் முக்கியமான ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி செய்திகள், இதுவரை எட்டாத உற்சாகத்தையும் பரவசத்தையும் அடைந்துள்ளன. இது ஆபத்தானதாக இல்லாமல் இருந்தால், வியப்பானது என்று சொல்லி ஒதுக்கிவிடலாம். ஆனால், ஊடகங்களின் இந்தப் போக்கு தேர்தல் காலத்தில் அதீதமான தேசியவாதத்திற்கான தீனியைப் போட்டிருக்கிறது. இந் நிகழ்வின் உடனடி எதிர்வினை என்பது காஷ்மீரிகள் மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் – மீதான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் பிறரின் தாக்குதலாகும். வரப்போகும் தேர்தலில் இது முக்கியமாகக் கருதப்படும். ஏற்கெனவே, பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா...

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

தென்னகத்தை அடக்கும் வடநாடு: அம்பேத்கர் தந்த எச்சரிக்கை

தென்னகத்தை அடக்கும் வடநாடு: அம்பேத்கர் தந்த எச்சரிக்கை

2019 தேர்தல் களம் வடக்கு, தெற்காகப் பிரிந்து நிற்கிறது. பா.ஜ.க. வடநாட்டுக் கட்சியாகவே செயல்படுகிறது. தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்று திராவிடர் இயக்கத்தின் கருத்தை ராகுல் காந்தியும் ப. சிதம்பரமும் பேசி  வருகின்றனர். இந்த ஆபத்தை டாக்டர் அம்பேத்கரே சுட்டிக் காட்டியிருந்தார். அம்பேத்கர் 128ஆவது பிறந்த நாள் நினைவாக அம்பேத்கர் கருத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துகள் இந்தியா வில் உருவாகிவிடும் என்பதை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர் ‘மொழி வழி மாநிலங்கள் குறித்த சிந்தனை’ என்ற நூலில் அவர் எழுதியிருப்பதாவது : மாநிலங்களின் பிரிவினைக்கான ஆணையம் மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, தென்னாடு வடநாடு மோதல்களுக்கும் வழி வகுத்திருக் கிறது. உ.பி, பீகார் என்ற இரண்டு பெரிய மாநிலங்களையும் அப்படியே நீடிக்க அனுமதித்துவிட்டார்கள். இந்த வடமாநிலங் களுக்கு வலிமை சேர்ப்பது போல், மற்றொரு பெரிய மாநிலமாக மத்திய பிரதேசமும்,...

‘பிரண்ட் லைன்’ பத்திரிகை ஆய்வு உ.பி. பீகாரில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு

‘பிரண்ட் லைன்’ பத்திரிகை ஆய்வு உ.பி. பீகாரில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு

உ.பி. பீகாரில் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று ‘பிரண்ட் லைன்’ இதழ் (ஏப். 26, 2019) – அதன் செய்தியாளர்கள்  தந்துள்ள தகவல் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலில் உ.பி.யில் பா.ஜ.க. 71 இடங்களைப் பிடித்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் 2013இல் நடந்த முசாஃபர் நகர் கலவரம். மதக் கலவரத்தில் முஸ்லிம்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் உடைமைகள் அழிக்கப் பட்டன.  60 பேர் உயிர்ப் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.  இந்து – இஸ்லாமியர் என்ற அடிப்படையில் வெறுப்பு அரசியலை பாஜ.க.வும் – ஆர்.எஸ்.எஸ்.சும் திட்டமிட்டு உருவாக்கியது. எனவே இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களை தேர்தலில் பாஜ.க. ஜாதி மற்றும் கட்சிகளைக் கடந்த அறுவடை செய்ய முடிந்தது. இப்போது அந்த நிலை மாறி விட்டது. 2014இல் 16 இடங்களை வென்ற பாஜ.க. மேற்கு உ.பி. பகுதியில் ஏப்.11, 17 தேதிகளில் இப்போது முதல்...

மோடியின் 10 சதவீத இடஒதுக்கீடு ஒரு ஏமாற்று வித்தை 445 உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

மோடியின் 10 சதவீத இடஒதுக்கீடு ஒரு ஏமாற்று வித்தை 445 உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

திறந்த போட்டியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி ஆட்சி அவசர அவசரமாய் கொண்டு வந்தது. தேர்தலில் வாக்கு அரசியல் நடவடிக்கையே தவிர, உண்மையாக அந்த 10 சதவீத ‘ஏழைகளுக்கு’ பயன் கிடைக்க வேண்டும் என்பது அல்ல. இது குறித்து இந்து ஆங்கில நாளேட்டில் (ஏப். 10, 2019) ஒரு ஆய்வுக் கட்டுரை வெளி வந்துள்ளது. ஏற்கனவே உயர் கல்வியில் மேற்குறிப்பிட்ட பொருளாதார நலிந்த பிரிவினர் 10 சதவீதத்துக்கு கூடுதலாகவே இடம் பெற்றிருக்கின்றனர் என்பதை புள்ளி விவரங்களுடன் நிறுவியுள்ளது அக்கட்டுரை. கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள்: மத்திய மனித வளத் துறை அமைச்சகம் 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படுத்தும் ஒரு முறையை 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி தர வரிசையை முறைப்படுத்தும் தேசிய நிறுவனம் ஒன்று உருவாக்கப் பட்டது. (National Institute Ranking Frame Work-NIRF) இந்த நிறுவனம் 2018இல் 445...

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் மகன் கதிர் முகிலனுக்கும், திருப்பூர் அப்துல் ஜப்பார் – சுபைதா பேகம் ஆகியோரின் மகள் நஜ் முன்னிசாவிற்கும் 3.4.2019 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் வாழ்க்கை இணையேற்பு நடைபெற்றது. இது மத மறுப்புத் திருமணமாகும். பெரியார் முழக்கம் 11042019 இதழ்

வெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.: 200 எழுத்தாளர்கள்  கூட்டறிக்கை

வெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.: 200 எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

  வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர், ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ், ‘புக்கர்’ விருதுபெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், எழுத்தாளர்கள் நயன்தாரா சாகல், ஜெர்ரி பிரின்டோ, ஆனந்த் டெல்டும்டே, நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட், பி. சிவகாமி, விஜயலட்சுமி, விஜய்பிரசாத் முதலான 200 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டு, இந்தி, ஆங்கிலம், தமிழ், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, காஷ்மீரி உள்ளிட்ட மொழிகளில் தங்களின் வேண்டுகோளை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின்குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. தாங்கள் விரும்பியபடி சாப்பிடுவதற்கான உரிமை, வழிபடுவதற்கான உரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமையை அனைவருக்கும் சமமாக வழங்கியிருக்கிறது. அதேபோன்று ஆட்சியிலிருப்போரின் கருத்துக்களை விமர்சிப்பதற்கான பேச்சுரிமையையும் வழங்கியிருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பேராலும், சாதியின் பேராலும், வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று பாகுபாடு ஏற்படுத்தியும், குடிமக்கள் தாக்கப்படும் மற்றும் கொல்லப்படும்...

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக – தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு துரோகம் செய்ததை மறக்க முடியுமா? 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் – இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground – தீர்ப்பு பக்.451) 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார். 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த...

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை : தமிழிசை தடுமாறுகிறார்

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை : தமிழிசை தடுமாறுகிறார்

இராமர் கோயில் கட்டுவோம்; சமஸ்கிருதத்தைப் பள்ளிப் பாடமாக்குவோம் என்கிறது பா.ஜ.க. தேர்தல் அறிக்கை. ‘நீட்’ குறித்து மவுனம் சாதிக்கிறது. தமிழிசையிடம் இது குறித்து செய்தியாளர் கேட்டபோது நீட் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்று சமாதானம் கூறியிருக்கிறார். சபரிமலை கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் சபரிமலையில் பாரம்பரிய முறையை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக இதே தேர்தல் அறிக்கைதான் கூறுகிறது. இதற்கு தமிழிசையிடம் பதில் உண்டா? பெரியார் முழக்கம் 11042019 இதழ்

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

பகுதி 1   மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. 600 கோடி ஓட்டு: மோடி உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார். இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி மட்டும் தான். அதிலும் ஓட்டு போடும் மக்கள் 80 கோடி பேர் தான். இந்த 80 கோடி பேரில் 600 கோடி ஓட்டு பெற்று பிரதமர் ஆனதாக மோடி குறிப்பிடுகிறார். இப்படியொரு  அறிவாளி பிரதமரை இந்தியா கொண்டிருப்பதற்கு என்ன தவம் செய்ததோ! குஜராத்திலிருந்து முதல் பிரதமர்: மோடியின் பொய் குஜராத்திலிருந்து பிரதமராகும் முதல் நபர் தான் மட்டுமே என மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். ஆனால் உண்மை? இந்தியாவின் வரலாற்றில் நான்காவது பிரதமராக மொரார்ஜி தேசாய் குஜராத்திலிருந்து வந்தவர் தான். ஆனால் மோடி தன்னை குஜராத்திலிருந்து...

எடப்பாடி ஊழல் பற்றிப் பேசலாமா

எடப்பாடி ஊழல் பற்றிப் பேசலாமா

தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளுக்கு நாள் தரம்தாழ்ந்து பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை ‘நீ, வா, போ’ என்று ஒருமையில் பேசத் தொடங்கி விட்டார். ‘தமிழ் இந்து’ நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. முதலமைச்சரை மட்டும் குறை சொல்லிவிட்டதாக எவரும் கருதி விடக் கூடாது என்பதற்காக மு.க. ஸ்டாலினும் தரக்குறைவாகப் பேசுவதாக அந்த ஏடு எழுதியுள்ளது. எங்கே, எந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அப்படித் தரம் தாழந்து ஒருமையில் பேசினார் என்பதை நேர்மையோடு எடுத்துக்காட்ட அந்த ஏடு தயாராக இல்லை. தி.மு.க. ஆட்சி – ஊழல் ஆட்சியை நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். காக்னிசன்ட் என்ற அமெரிக்க நிறுவனம், தமிழ்நாட்டில் அதன் கிளையைத் தொடங்க தமிழக ஆட்சியாளர் களுக்கு 20 இலட்சம் டாலர் இலஞ்சம் கொடுத்த செய்தி அமெரிக்க நீதிமன்றத்தில் அம்பலமாகி அதற்காக அந்நாட்டு நீதிமன்றம் அந்த...

ஆர்.எஸ்.எஸ்.சின் சதி : மு.க. ஸ்டாலின் விளக்கம்

ஆர்.எஸ்.எஸ்.சின் சதி : மு.க. ஸ்டாலின் விளக்கம்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கிருஷ்ணன் குறித்துப் பேசியதாக வன்முறையில் இறங்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ். சதி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: கேள்வி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கி.வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப்பற்றி தவறாகப் பேசியதாக  சொல்கிறார்களே, அதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா? மு.க.ஸ்டாலின்: அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சல்ல அது. ஏற்கெனவே அவர் திராவிடர் கழகத் தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சாகும். யாரையும் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேச வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசவில்லை. அவர் சில உதாரணங்களைச் சொல்லி பேசியிருக்கிறார். அதை இன்றைக்கு சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில், அதனை தவறாகத் திரித்து, மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தினைக் கொண்டு போக வேண்டும் என்கிற நோக்கில் திட்டமிட்டு செய்திருக்கின்ற சதி இது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணாவின்...

தேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத்திருத்தம்

தேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத்திருத்தம்

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறையை கூச்சநாச்ச மின்றி பயன்படுத்தி வருகிறது மோடி ஆட்சி. தேர்தல் ஆணையமோ, மல்லிகைப் பூவில் அடிப்பதுபோல் பா.ஜ.க.வினருக்கு ‘காதல் கடிதங்களை’ எழுதிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு நேர்மையாக ஆணையம் செயல்படுவதுபோல் மக்கள் காதில் பூ சுற்றுகின்றனர். தேர்தல் களத்தை நேர்மையாக நடத்துவதாக நாடகம் போடும் மோடி ஆட்சியின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது ‘தேர்தல் பத்திரம்’ தொடர்பான வழக்கு. அது என்ன தேர்தல் பத்திரம்? கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர்  அருண் ஜெட்லி அறிமுகப்படுத்திய திட்டம். இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும் நிறுவனங்கள் ரொக்கமாகப் பணம் தருவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வங்கியில் மின்னணு எந்திரம் வழியாக நன்கொடை செலுத்தி தொகைக்கான பத்திரத்தைப் பெற்று அந்தப் பத்திரத்தை கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இதற்காக இந்திய ஸ்டேட் வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரையில்...

பா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி

பா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி

தேர்தல் நடத்தி விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வருகிறது மோடி ஆட்சி. ‘தூர்தர்ஷன்’ என்ற அரசு தொலைக்காட்சி சேவையும் அகில இந்திய வானொலியும் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த பிறகு விதிகளுக்கு மாறாக ‘நமோ டிவி’ என்ற தொலைக்காட்சி சேவையை பா.ஜ.க. தொடங்கியிருக்கிறது. ஒரு தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட வேண்டுமானால் அதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த ஒப்புதல் ஏதும் பெறாமலே இந்த ‘நமோ டிவி’ தொடங்கப்பட்டு விட்டது. மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் தம்பட்டமடிக்கப்படுகின்றன. மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ‘டி.வி.’, ‘டிடிஎச்’ (Direct to Home) அலைவரிசையைப் பயன்படுத்தி வருகிறது. எதிர்கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ‘இது தனியார் விளம்பர சேவை; தொலைக்காட்சியல்ல’ என்று விளக்கம் கூறுகிறது பா.ஜ.க. இந்தத் தொலைக்காட்சி உரிமையாளர்...

‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ முறையைக் கொண்டு வந்தது யார்?

‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ முறையைக் கொண்டு வந்தது யார்?

மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு தனித்தனியாக அனுமதி பெறும் ‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமத்தை பெற்றால் போதும்; ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமிக்கடியில் உள்ள எந்த இயற்கை வளங்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பன்னாட்டு முதலாளிகள் இந்திய இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிப்பதற்காக, ‘தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டம்’ என்ற புதிய கொள்கையின்படி எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அடையாளம் கண்டு அதை ஏலம் விட்டுக் கொண்டுள்ளது. இதில் பெயரளவிற்கு ஒரு சில இடங்களை மட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு பெரும்பாலான இடங்களை தனியார், பன்னாட்டு கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு 28.8.2018இல் நாடு முழுவதும் 55 இடங்களை ஏலத்திற்கு விட்டதில் வேதாந்தா நிறுவனம் 41 இடங்களைப் பெற்றுள்ளது. எச்.ஓ.இ.சி. ஒரு இடம் பெற்றுள்ளது. மீதியுள்ள 13 இடங்கள்தான் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்...

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பகுத்தறிவு சிந்தனையற்றவர்களுக்கு எதிராக வும், சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ரீதியாக, மக்களைத் துண்டாட நினைப்பவர் களுக்கு எதிராகவும் வாக்களிப்போம் என்று நாடு முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கூட்டமைப்பான இந்தியக் கலாச்சாரக் கழகம், இந்தியக் கல்வி அ றிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியப் புள்ளியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் 154 விஞ்ஞானிகள் இணைந்து இந்த அறைகூவலை விடுத் துள்ளனர். அமித் ஆப்தே, சோரப் தலால், ரமா கோவிந்த ராஜன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மொழியின் பெயராலும், வாழும் பகுதியின் பெயராலும், பாலினத்தின் பெயராலும் மக்களுக்கு எதிராக பாகுபாட்டை ஏற்படுத்தி அவர்களைக் கொலை செய்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும்....

நினைவிருக்கிறதா?   திராவிடக் கட்சிகளை வீழ்த்த யாகம் நடத்திய பா.ஜ.க.

நினைவிருக்கிறதா? திராவிடக் கட்சிகளை வீழ்த்த யாகம் நடத்திய பா.ஜ.க.

‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று ஊர்தோறும் சுவர்களில் எழுதி, திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்று சூளுரைத்த பா.ஜ.க. தான் இப்போது அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் எடப்பாடி நல்லாட்சியையும் ‘தேசபக்த’ மோடி ஆட்சியையும் கொண்டு வருவோம் என்று பேசி வருகிறது. 2018 ஜனவரி 26, 27, 28 தேதிகளில் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை ஒழித்து இந்து சாம்ராஜ்யம் அமைக்க பல கோடி ரூபாய் செலவில் பார்ப்பன புரோகிதர்களை வைத்து யாகம் நடத்தியது பா.ஜ.க. ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள ஏ.பி.டி. பள்ளி வளாகத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் தகரப் பந்தல் அமைத்து சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 300 பார்ப்பனப் புரோகிதர்கள் வேதம் ஓத நடத்தப்பட்டது அந்த யாகம். இராமாயணத்தில் – இராமன் செய்த யாகத்துக்குப் பிறகு நடந்த மிகப் பெரும் யாகம்  இதுதான் என்றார்கள், யாகம் நடத்திய பா.ஜ.க.வினர், காஞ்சி இளைய சங்கராச்சாரி...

சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!

சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!

இந்துத்துவ அமைப்புகள் தற்போதைய கல்விமுறை ஆங்கிலேயர் களால் கொண்டுவரப்பட்டது என்றும், இதனை நீக்கிவிட்டு மீண்டும் பழைய குருகுல முறைக் கல்வியை கொண்டுவரவேண்டுமென்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது இவர்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறத்துவங்கியுள்ளது, குருகுலக் கல்விக்காக புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சாமியார் ராம்தேவ் அமர வைக்கப்பட் டுள்ளார்.  ஆங்கிலேயர் வருகைக்கும் முன்பு பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்கும் நிலை இருந்தது. சூத்திரர்கள் உள்ளிட்டோர் அங்கு கல்வி கற்க அனுமதியில்லை. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தியா இருண்ட காலத்தில் இருந்து வந்தது. 1700-களில் ஆங்கிலேயர்கள் இந்தியா விற்கு வருகை தந்த பிறகு சீரழிந்து கிடந்த சமுகத்தை கல்வியின் மூலம் மேம்படுத்த முயலும்  நோக்கத்தில், மதத்தின் பரப்புரையின் மூலமாக மிசனரிப்பள்ளிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டன. முக்கியமாக தென் இந்தியாவில் அதிகமாக துவங்கப்பட்டன. இதன் விளைவாக 1800களுக்குப் பிறகு இந்தியாவின் எழுத்தறிவு 5 விழுக்காடாக உயர்ந்தது, இதனைத் தொடர்ந்து 1900-களின் துவக்கத்தில்...

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?” • சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. • முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். • அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது...

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. அறிவியல் – மோடி ஒரு நாட்டின் மக்களை எப்படியெல்லாம் வழி நடத்த வேண்டும் என்று பல தலைவர்களின் பட்டியலைக் கொடுக்கலாம். ஆனால் எப்படி வழி நடத்தக் கூடாது என்று  கேட்டால் தயங்காமல் மோடியின் பெயரைப் பரிந்துரைக்கலாம். நாட்டின் அறிவியலாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய அவையில் மோடி பேசியது, “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. இதற்குக் காரணம், அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்ததால் தான் இது நடந்திருக்கிறது. விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் இது நடந்திருக்ககிறது” என்றார். அறிவியல் பாதையில் உலகம் விண்வெளி யில் வீடு அமைக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் மத நம்பிக்கைகளை உட்புகுத்தி கிஞ்சிற்றும் அறிவுக்கு உட்படாத நிகழ்வுகளை அறிவாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகிறார். தன் அரசியலுக்கு கர்ணனையும், விநாயகரையும்கூட விட்டு விட்டு வைக்க...

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

23.2.2019 அன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் பேராசிரியர் கல்யாணி ஒருங்கிணைப்பில் நடந்த பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உரைக்குப் பின்  திராவிடர் விடுதலைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  பழங்குடி மக்கள் மீது அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். நிறைவுரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன் பேசினார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்முடி, சமூக சமத்துவப் படை தலைவர் ப. சிவகாமி, அய்.ஏ.எஸ்., மனித நேய மக்கள் கட்சி ப. அப்துல் சமது, த.நா. மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லி பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ. இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கடலூர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர்  இராவண கோபால், திண்டிவனம் நகர...