Category: பெரியார் முழக்கம்

அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்

அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்

ஓபிஎஸ் யும், இபிஎஸ் யும் அஇஅதிமுகவை தமிழ்நாடு பாஜகவிடம் விலை பேசி கொண்டிருக்கும் போது முதுகெலும்புடன் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் அக்கட்சியின், முன்னாள் அவைத் தலைவர் பொன்னையன். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ‘அஇஅதிமுகவை பலியாக்கி தமிழ்நாட்டில்  தன்னை வளர்த்துக்கொள்ள பார்க்கிறது பாஜக’ என்று கூறியவர் அதன் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கோ, அஇஅதிமுகவிற்கோ, திராவிடக் கொள்கைக்கோ நல்லது அல்ல. என்று கூறியுள்ளார். கட்சியின் தொழில்நுட்ப அணி பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காவிரி முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக இரட்டை வேடம் போடுவதையும், தமிழ்நாடு பாஜக கள்ள மவுனம் சாதிப்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏதோ மக்கள் பிரச்சனையில் கவலை உள்ளவர் போல தினமும் நாடகம் நடத்தி வருகிறார் அண்ணாமலை. ஆனால், அக்கட்சியின் உண்மையான முகம் என்பதோ வேறு. பார்ப்பனியத்தையும், மதவெறியையும் பாதுகாப்பது தான் பாஜக வின் உண்மையான முகம். காசியிலும், மதுராவிலும் உள்ள...

இஸ்லாமிய வெறுப்பு அரசியல்: உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது – ஒன்றிய ஆட்சி

இஸ்லாமிய வெறுப்பு அரசியல்: உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது – ஒன்றிய ஆட்சி

ஒன்றிய பாஜக ஆட்சி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளின் கடும் எதிர்ப்பை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இந்திய ஒன்றியத்தில் நடைபெறுகிற இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுக்கள், வெறுப்புக் கருத்துகள் தற்போது உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வர இருக்கின்ற இஸ்லாமியர்களை எதிரி களாக கட்டமைத்து இந்துக்கள் வாக்குகளை திரட்டி விடலாம் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதற்கான திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு  கொண் டிருக்கின்றன. காசி, மதுராவில் உள்ள மசூதிகள், இந்துக்கள் கோவில்களை இடித்து கட்டப்பட்டுள்ளன என்று புதிதாக  உருவெடுத்துள்ளன. ஸ்ரீரங்கப் பட்டினத்திற்குள் நுழையப் போவதாக விஷ்வ இந்து பரிஷத் காரர்கள் அறிவித்து போராட்டமும் நடத்தி முடித்திருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கள் தீவிரமாக முடிக்கிவிடப் பட்டிருக்கின்றன. பாபர் மசூதி இடித்துவிட்டு அயோத்தியில் இராமர் கோவிலை கட்டலாம் என்று திட்டமிட்டவர்கள், மசூதி இடித்தவர்களையும் காப்பாற்றிவிட்டு, மசூதி இடித்தது நியாயம், அங்கே கோவில் இருந்தது என்பதற்கான தீர்ப்பையும்...

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மாநில உரிமைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழுத்தமாகக் குரல் கொடுத்து வருவது, பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு கடும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கி வருவதை உணர முடிகிறது. அண்மையில் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்வில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய ஆட்சி முடக்கி வைத்துள்ளதை பட்டியலிட்டுப் பேசியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்  தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் பிற மாநிலங்களுக்கும் பரவிடக் கூடும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. – பார்ப்பனிய சனாதன ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அண்மையில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத், மதுரை ஆதீனம், ஜீயர்கள், சாமியார்களைக் கூட்டி ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது. தமிழக அரசை மிரட்டியுள்ளதோடு, திராவிடர்  இயக்கக் கோட்பாடுகளையும் கண்டித்து ‘துறவிகள்’ பேசியிருக்கிறார்கள்....

கியான்வாபி பள்ளிவாசல் பிரச்சனை என்ன ?

கியான்வாபி பள்ளிவாசல் பிரச்சனை என்ன ?

காசி நகரில் இருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டுத்தான் முகலாய மன்னர் அவுரங்கசீப் கியான்வாபி பள்ளிவாசலை கட்டினார். எனவே அந்த பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இந்துத்துவ அமைப்புகளின் வாதம். வாரணாசி என்ற காசியில் கியான்வாபி பள்ளிவாசலும் காசி விஸ்வநாதர் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டிற்குமான இடைவெளி வெறும் பத்து மீட்டர் மட்டுமே. பெரும்பாலும் ஒரே வாசல் வழியாகவே இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர். மத ஒற்றுமையின் அடையாளமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு இடத்தை மத மோதலுக்கான காரணியாக இந்துத்துவ சக்திகள் மாற்றுகின்றனர். 1936இல் அப்பகுதி இந்துக்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து பள்ளிவாசல் இடத்தில் தங்களுக்கான உரிமையைக் கோரி பனாரஸ் நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தாக்கல் செய்தனர். முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நீதிமன்றம் 1937 இல் உறுதிப்படுத்தியது. 1991 இல் இந்த பள்ளிவாசல் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சோம்நாத் வியாஸ் என்பவர் வழக்கு தொடுத்தார். 1937...

பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளே குடும்ப வன்முறைக்குத் தீர்வாகும் முனைவர் எஸ். ஆனந்தி

பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளே குடும்ப வன்முறைக்குத் தீர்வாகும் முனைவர் எஸ். ஆனந்தி

பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி மற்றும் அதிகாரப்படுத்துதலுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தாலும்  குடும்ப வன்முறையில் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணங்களை ஆராய்ந்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 4) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரை யின் சுருக்கமான கருத்தை தமிழில் தருகிறோம். குடும்ப வன்முறைக்கு  பட்டியலிட்டுள்ள காரணங்கள்: கட்டாயத் திருமணம் : கட்டாயத் திருமணத்துக்கு பெண்கள் உள்ளாக்கப் படுவது ஒரு காரணம். நவீன குடும்ப வாழ்க்கைக்கான செலவுகளை சரி கட்ட பெண்கள் உழைப்பு ஊதியமில்லாமல் கட்டாயத் திருமண முறையில் சுரண்டப்படு கிறது. 20 முதல் 22 சதவீத பெண்களே திருமணத்துக்குப் பிறகு ஊதியம் பெறும் வேலைக்குப் போகிறார்கள். 60 சதவீத படித்த பெண்கள் குடும்பத்தைக் கவனிக்க வேலைக்குப் போகாமல் ஆணாதிக்கமும் ஜாதிக் கட்டமைப்பும் கொண்ட குடும்ப அமைப்புக்குள் ஆண்களின்...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்… 1 பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பல் செய்யும் கருத்தாளர்களாகவும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களாகவும் இருந்து களம் கண்டு எதிரிகளால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈகியர்களுக்கு இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மொழி உரிமைகளுக்காகவும், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழித் திணிப்புகளை எதிர்த்து வீரச்சாவு எய்தியவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளை எதிர்த்தும் களமாடி உயிர் ஈந்த எண்ணற்ற ஈகியர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மேலும், தமிழீழ மண்ணின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் ஈந்த இலக்கக் கணக்கானவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. 2 தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம்( எல் ஐ சி) உள்ளிட்ட பொதுத் நிறுவனங்களையெல்லாம் அம்பானி, அதானி உதுறைள்(உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் எல்ஐ சி, தொடர்வண்டித் துறை...

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை மயிலாப்பூர் கழகத் தோழர்கள், தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கக்கோரி கடந்த ஏப்.6ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகளிடம்  கோரிக்கை மனுவை வழங்கியதைத்  தொடர்ந்து நகரம் முழுதும் ஜாதிப்பெயைர நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தப் பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை...

2024 தேர்தல் களத்தில் இந்தி வெறியைத் திணிக்க பா.ஜ.க. திட்டம்

2024 தேர்தல் களத்தில் இந்தி வெறியைத் திணிக்க பா.ஜ.க. திட்டம்

பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக இருக்கக் கூடாது. நாங்கள் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என நினைக்கிறோம்,’ என இந்தி திணிப்புக்கு புது விளக்கத்தை தந்தார். இதற்கான காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுடெல்லி நகராட்சி கவுன்சிலில் தனது அனைத்து துறைகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ‘அலுவல் மொழி...

பார்ப்பனியத்தை தோலுரிக்கும் ஜாதி எதிர்ப்புப் படம் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆ. ராசா

பார்ப்பனியத்தை தோலுரிக்கும் ஜாதி எதிர்ப்புப் படம் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆ. ராசா

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, ‘நெஞ்சுக்கு நீதி’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்: தாங்கள் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் பார்த்தேன். திகைத்து மகிழ்ந்தேன். பொதுவாக திகைப்பில் மகிழ்ச்சிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால், ஒரு புதிய வேதியியல் மாற்றம் என்னை படம் பார்த்தபின் தொற்றிக் கொண்டதால் இருவேறுபட்ட பண்புகளைக் கொண்ட வார்த்தைகளை கோர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன். ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தயாரிப்பதற்கும் அதில் நடிப்பதற்கும், வெளியிடுவதற்கும், வர்த்தகம் மட்டுமே நிச்சயமாக நோக்கமாக இருந்திட இயலாது என்பதை சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பை உணர்ந்த ‘பெரியார்வாதி’ என்ற அடிப்படையில் உணர்கிறேன். இந்த திரைப்படம் வணிக நோக்கில் இலாபமா நட்டமா என்பதைவிட தமிழ் திரையில் இவ்வளவு அப்பட்டமாகவும், பட்டவர்த்தனமாகவும் சாதி பற்றிய புரிதலை – கண்ணோட்டத்தை – எவரும் இதுவரை தந்ததில்லை என்பதுதான் கொண்டாடப்பட வேண்டிய உண்மை. மகாத்மா பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர்...

சாமியாடுவது அற்புத சக்தியாம்? எட்வின் பிரபாகரன்

சாமியாடுவது அற்புத சக்தியாம்? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (9) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 15: 1995ஆம் ஆண்டு, செப்டம்பர் 21ஆம் நாள், தெற்கு புது டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் விநாயகர் சிலை, தும்பிக்கையின் மூலம் பாலை உறிஞ்சி விட்டதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. நாடெங்கும் பல விநாயகர் கோயில்களிலும் இதே சம்பவம் நடந்ததாக மக்கள் பரவசத்தோடு கொண்டாடினர். அறிவியலாளர்கள் அளித்த விளக்கம் என்னவென்றால், விநாயகர் சிலைகளில் உள்ள மிக நுண்ணிய துளைகளின் மூலமாக, தந்துகி எழுகை முறையால் (Capillary Rise Method), பால் உறிஞ்சப்படுகிறது என்பதேயாகும். அன்று மாலைக்குள், இந்த விளக்கம் பிடிக்காததாலோ என்னவோ, விநாயகர் சிலைகள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டன. தந்துகி எழுகை முறையில் இது நடக்குமானால், ஏன் இதற்கு முன் அப்படி...

தலையங்கம் பேரணிகள் முடிந்தன; அடுத்து என்ன?

தலையங்கம் பேரணிகள் முடிந்தன; அடுத்து என்ன?

மதுரையில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு, செஞ்சட்டைப் பேரணியை எழுச்சியுடன் நடத்தி முடித்திருக்கிறது. கருப்புச் சட்டை, நீலச் சட்டைப் பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மூன்றாவது பேரணி இது. மார்க்ஸ்-பெரியார்-அம்பேத்கர் கருத்தியல்கள் காலத்தின் தேவையாகியுள்ள சூழலில் நாட்டை பார்ப்பனப் பாசிசத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான முப்பெரும் தலைவர்களின் பொதுவான கூறுகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பார்ப்பனப் பாசிசம், மாநில அடையாளங்களை அழித்து ஒற்றை இந்தியாவாக்கி பிறகு அதை பாரத தேசமாக்கி, பாரத தேசத்தை இந்து இராஷ்டிரமாக்கிட வேண்டும் என்பதையே தனது இயக்கமாக நிர்ணயித்திருக்கிறது. வேதகால பார்ப்பனியம் மனுசாஸ்திரத்தையும் வேதங்களையும் சமூகத்தின் அடையாளங்களாக்கி மக்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து மிக எளிதாக அதில் வெற்றியும் பெற்றிருந்தது. மாநில எழுச்சிகள் சமூகநீதிக் கொள்கைகள் மொழி பண்பாட்டு அடையாளங்கள் படிப்படியாக மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியதன் வழியாக பார்ப்பனியம் கேள்விக்குள்ளானது. அரசியல் சட்டம் மக்கள் சமத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் உறுதி செய்தாலும் அதில் உடைப்புகளை உருவாக்கிட பார்ப்பனியம் தொடர்ந்து...

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் மே 29 அன்று நடந்த செஞ் சட்டைப் பேரணியால் மதுரை குலுங்கியது. கருஞ்சட்டைப் பேரணி, நீலச் சட்டைப் பேரணிகளைத் தொடர்ந்து செஞ் சட்டைப் பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுது மிருந்தும் இளைஞர்கள் பெண்களும் ஆண்களு மாய் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பார்ப்பபனிய பாசிசத்தை வீழ்த்துவோம்; இந்தியாவில் ஒற்றை ஆட்சியைத் திணிக்காதே; இது பெரியார் மண் – சனாதன சக்திகளை அனுமதியோம் என்று உணர்ச்சி முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக்கழக சார்பில் சென்னை, மேட்டூர், சேலம், நங்கவள்ளி, கொளத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து தனிப் பேருந்துகளிலும் வேன்களிலும் திரண்டு வந்திருந்தனர். கழகப் பெயருடன் கழகக் கொடி செஞ் சட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள், தந்தை...

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

தி.க. கொடியை உருவக்கிய பெரியார், நடுவில் உள்ள சிவப்பு வட்டம் பெரிதாகி, சிவப்புக் கொடியாக மாறும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.  மதுரை செஞ்சட்டை பேரணிக்குத் தலைமை யேற்ற கழகத் தலைவர் மாநாட்டில் ஆற்றிய உரை: பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நோக்கத்தை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் விளக்கியிருக்கிறார். இந்த மூன்று பேரணிகள் நடந்ததும் இதன் முதன்மை மாந்தர்களாக காட்டப்படுகிற பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் எளிய வஞ்சிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு தத்துவங்களை உருவாக்கிப் போராடியவர்கள். இந்த மண்ணில், சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்களும், பஞ்சமர்களும் தான் உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளானவர்களாக இருக் கிறார்கள். இந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், தனித்தனியாக இயங்கி வந்திருக் கிறோம். இது இயங்கக் கூடாது என்ற கருத்து 30’களில் தோன்றியிருந்தாலும், இடையில் பிரிவு, உறவு இரண்டும் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த வேளையில், இந்த நாட்டில்...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருப்பது காங்கிரசுக்கு முன்கூட்டியே தெரியும் வாய் கட்டி போராட்டம் நடத்தும் காங்கிரசார் பதில் கூறுவார்களா?

ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருப்பது காங்கிரசுக்கு முன்கூட்டியே தெரியும் வாய் கட்டி போராட்டம் நடத்தும் காங்கிரசார் பதில் கூறுவார்களா?

பேரறிவாளன் விடுதலையை ஏற்கவே முடியாது என்று காங்கிரசாரும், மனுவாதிகளும் பொங்கு கிறார்கள். இவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறதா? இந்த குற்றத்தில் நேரடியாக தொடர்புடைய 12 பேர் ஏற்கெனவே தேடுதல் வேட்டை என்ற பெயரால் காவல் துறையினால், சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதாவது நீதிமன்றம் போகாமலேயே மரண தண்டனையை விதித்து விட்டார்கள். பிறகு 26 பேருக்கு, குற்றவாளிகளுக்கு உதவினார்கள், சதியில் ஈடுபட்டார்கள் என்று கூறி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ‘தடா’ சட்டத்தின் கீழ் வழக்கு நடந்தது. வழக்கு இரகசியமாக நடந்தது. காந்தி கொலையில் கூட வழக்கு பகிரங்கமாகவே நடந்தது. 26 பேருக்கும் தூக்கு தண்டனையை விதித்தது சிறப்பு நீதிமன்றம். இவர்கள் தடா சட்டத்தின் படி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது. நேரடியாக உச்சநீதிமன்றம் தான் போக வேண்டும். உச்சநீதி மன்றம் குற்றவாளி என்று கூறப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்து விட்டது. இதிலிருந்தே வழக்கு எப்படி சி.பி.அய்.யால் புனையப்பட்டது...

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

மே 21இல் குடியாத்தத்தில் நடந்த கழக மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: குடியாத்தம், வேலூர் மாவட்டங்கள் திராவிடத்தின் கொள்கை வேர்களைத் தாங்கி நிற்கிறது, ஆரிய எதிர்ப்பு என்ற சனாதன வர்ணாஸ்ரம பார்ப்பன எதிர்ப்புக்கு களமாடிய முன்னோடிகள் இந்த மாவட்டத்தில் உண்டு. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, சமூக சீர்த்திருத்தப் படை ஒன்றை இப்பகுதியில் உருவாக்கி, தேனீர்க் கடை இரட்டைக் குவளைத் தீண்டாமை – பார்ப்பன உயர்ஜாதியினர் வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினார். சாவு சேதி சொல்லவும், பறை அடிக்கவும் தீண்டப்படாத மக்கள் மீது அவமானங்கள் சுமத்தப்பட்டதை எதிர்த்து பறை எரிப்புப் போராட்டம் நடத்தியபோது திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். 1954இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கை பரப்பு மாநாடு – குலக் கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடுகளில்...

மாநில உரிமைகளை உறுதிபடுத்தும் ‘ஜி.எஸ்.டி.’ தீர்ப்பு

மாநில உரிமைகளை உறுதிபடுத்தும் ‘ஜி.எஸ்.டி.’ தீர்ப்பு

மாநில உரிமைகளை உறுதிபடுத்தும் மற்றொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகள், வெறும் பரிந்துரைகள் மட்டும் தான். அதை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று , உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த பிரச்சனையில், ஒன்றிய அரசுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு சம உரிமை மாநில அரசுகளுக்கும் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது அரசியல் சார்ந்த இடமாக தற்போது மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த நிலை இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாக பாதிக்கச் செய்யும். எனவே ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பல்வேறு குழப்பங்களை தவிர்ப்பதற்காக மட்டுமே, கூட்டாட்சித் தத்துவத்தில் ஒன்றிய அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது” என்று உச்சநீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தி...

மே 29 – மதுரை செங்கடலாகட்டும்; கழகத் தோழர்களே திரண்டு வாரீர்!

மே 29 – மதுரை செங்கடலாகட்டும்; கழகத் தோழர்களே திரண்டு வாரீர்!

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்பு மாநாடும் செஞ்சட்டைப் பேரணியும் மதுரையில் மே 29 அன்று நிகழ இருக்கிறது. மதுரை காளவாசல் பகுதியிலிருந்து செஞ்சட்டைப் பேரணி பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங் கிணைக்கும் இந்தப் பேரணியில் பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள், பெண்களும் ஆண் களுமாய் செஞ்சட்டை அணிந்து தமிழ் நாட்டின் தனித்துவத்தை வர்க்க-வர்ண ஆதிக்க சக்திகளுக்கு உணர்த்தப் போகிறார்கள். ஏற்கனவே கருஞ்சட்டைப் பேரணி, நீலச்சட்டைப் பேரணியை நடத்தி முடித்து இப்போது நிறைவாக செஞ்சட்டைப் பேரணி புறப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை சீர்குலைத்து, பங்குகளைத் தனியாருக்கு வேகம் வேகமாக விற்கிறது ஒன்றிய ஆட்சி. பொன் முட்டையிடும் வாத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை அடி மாட்டு விலையில் விற்கிறது. காப்பீடு என்றால் அது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற கருத்தை உடைத்து,வெறும் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.அய்.சி., சந்தை மதிப்பில் 32 இலட்சம் கோடி ரூபாயையும் காப்பீட்டு சந்தையில் 70...

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான்  அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி  அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று...

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: பேரறிவாளன் விடுதலை என்பது அனை வருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளன் என்ற முறையில், ஈழம் தொடர்பானது என்று கருதிக் கொண்டு, ஏதோ பயங்கரவாதம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டு அரசுகள் அவர் மீது வழக்கு புனைந்ததும், தண்டிக்கப்பட்டதும் வேறு கதை என்றாலும் கூட, இப்போது இவரது விடுதலையை 30 ஆண்டுகள் கடந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த அரசுகளுக்கு குறிப்பாக ஆளுநருக்கு தலையில் குட்டு வைத்ததைப் போல இந்த தீர்ப்பினை நான் பார்க்கிறேன். அவர் நேரடியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று வழக்கே கூறினாலும், அவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப் பட்டது. அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்பும், இவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பதை எந்த மனிதநேயர் களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலானோரால் தேசத் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்தியைக் கொன்ற கோபால் கேட்சேவிற்கு 15...

திராவிட மாடல் காலத்தின் தேவைக்கேற்ற நவீனத்துவக் கோட்பாடு – விடுதலை இராசேந்திரன்

திராவிட மாடல் காலத்தின் தேவைக்கேற்ற நவீனத்துவக் கோட்பாடு – விடுதலை இராசேந்திரன்

இது பண்டைக்கால மன்னராட்சியின் பழைமைவாதக் கோட்பாடு அல்ல. சமகால மானுட விழுமியங்களை உள்ளடக்கிய நவீனத்துவ சிந்தனை. தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறை வெளியிட்ட ஓராண்டு ஆட்சி சாதனை மலரில் எழுதிய கட்டுரை. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஒரு கதையை கூறினார். அது சமூக நீதித் தொடர்பானது. “ஒரு புல்லாங்குழல் தரையில் கிடக்கிறது, அதற்கு மூன்று சிறுவர்கள் உரிமை கோருகிறார்கள். ஒரு குழந்தை, இந்தப் புல்லாங்குழலை எனக்கு மட்டுமே வாசிக்கத் தெரியும், எனக்குத் தருவது தான் சரி என்று கேட்கிறது. மற்றொரு குழந்தை, என்னிடம் விளையாடுவதற்கு எந்தப் பொருளும் கிடையாது. வாங்கித் தரும் நிலையில் எனது பெற்றோர்களும் இல்லை. எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறது. மூன்றாவது குழந்தை, இந்தப் புல்லாங்குழலை நானே எனது உழைப்பில் உருவாக்கி தவற விட்டுவிட்டேன், எனக்குத் தான் தர வேண்டும் என்று கேட்கிறது. இந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கான நீதியை பேசுகின்றன. மூன்றிலும் நியாயம்...

ஆவிகளை நம்புகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி – எட்வின் பிரபாகரன்

ஆவிகளை நம்புகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி – எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (8)   ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 13: 1972ஆம் ஆண்டு ஜார்ஜ் ஓவென் என்ற கணித மரபியலாளர் ஆவிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள எண்ணினார். அதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவில், ஜார்ஜ் ஓவென், அவருடைய துணைவி அய்ரிஸ் மற்றும் பலர் இடம்பெற்றிருந்தனர். குழுவின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பை உளவியலாளர் ஜோயெல் விட்டொன் ஏற்றார். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிலிப் என்ற நபரின் ஆவியை தொடர்புகொள்ள முயன்றதால், இது “பிலிப் பரிசோதனை” என்று அழைக்கப்பட்டது. இந்த பரிசோதனையின்போது, திடீரென்று அறையின் விளக்குகள் மங்கலாகிப் போகும். குழு உறுப்பினர்கள் பிலிப்பின் ஆவியை கேட்டுக்கொண்டதும், விளக்குகள் பிரகாசமாக எரியும். ஒருநாள் திடீரென்று, குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மேசையின் மீது ஒரு புகைப்படலம்...

‘ஆன்மீகத்தில்’ பதுங்குகிறது பார்ப்பனியம்

‘ஆன்மீகத்தில்’ பதுங்குகிறது பார்ப்பனியம்

ஆன்மீகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதே நமக்குப் புரியவில்லை. அகராதியில் இதற்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரிய வில்லை. ஆன்மீகம் என்பது ஒருகாலத்தில் எப்படி பார்க்கப் பட்டது? சனாதன வேதமதவாதிகள் ஒரு மதத்தைக் கட்டமைத்து, அதில் பார்ப்பனிய மேலாண்மையை உயர்த்திப் பிடித்து அதற்கான சடங்குகள், வழிபாட்டு முறைகளை உருவாக்கினார்கள். அப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு மதத்தை உருவாக்கியபோது, அதிலிருந்து விலகி நின்றவர்கள் ‘ஆன்மீகவாதிகள்’ என்று கருதப்பட்டார்கள். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார், அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, இப்படி ஏராளமான பட்டியல்கள் உண்டு. இவர்கள், கட்டமைக்கப்பட்ட சனாதன மதத்தின் கருத்துக்களை அப்படியே ஏற்காமல், அதில் பல கருத்துகளிலிருந்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர். பிறகு ஆன்மீகம் என்பது சில கார்ப்பரேட் சாமியார்களின் கைகளுக்கு வந்தது. யோகா, தியானம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, உலகம் முழுவதும் கிளைகளை அமைத்துக் கொண்டு, அதற்கு காப்புரிமை பெற்றுக் கொண்டு, அதோடு பன்னாட்டு வணிகத்தையும் செய்து கொண்டு கோடிக் கணக்கில் வணிகமாக, தொழிலாக...

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கோவை டாடாபாத் ஆறுமுக்கு சாலையில் 11.5.2022 புதன் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக 23.04.2022 அன்று கோவை மேட்டுப் பாளையத்தில் துவங்கி கோவை திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் 07.05.2022 வரை 28 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் பரப்புரையை கோவை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. நிறைவாக மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்வாக திராவிட மாடல் குறித்தப் பாடல்களை மேட்டூர் டி.கே. ஆர் இசைக் குழு வினர் பாடினர். இதில் கழகத் தோழர்கள் மேட்டூர் கோவிந்த ராஜ், கோவை கிருஷ்ணன், புரட்சித் தமிழன், பொள்ளாச்சி வினோதினி ஆகியோர் பாடல்களை பாடினர். பின்பு திராவிட மாடல் மண்டல மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு கோவை மாநகர கழகச்...

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

ஈரோடு மண்டல மாநாடு – பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும் ,திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும்...

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா, ஆணவப் படு கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் பாராட்டு விழா, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற (தி.மு.க.கூட்டணி) முதல் நகர்மன்ற பெண் தலைவர், மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றன. இம்முப்பெரும் விழா 25.04.2022 அன்று மாலை 5 மணியளவில், ராசிபுரம் கன்னட சைனியர் மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பிடல் சே குவேரா தலைமை வகித்தார்.திராவிடர் விடுதலை கழக நகர அமைப் பாளர் சுமதி மதிவதனி வரவேற்பு கூறினார். நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, இராசிபுரம் நகரத் தலைவர் அன்பரசன், வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய...

பல்லக்குத் தூக்குவதை எதிர்த்து குத்தூசி குருசாமி பேசியதற்காக சிறைத் தண்டனை பெற்றார்

பல்லக்குத் தூக்குவதை எதிர்த்து குத்தூசி குருசாமி பேசியதற்காக சிறைத் தண்டனை பெற்றார்

பட்டினப் பிரவேசம் என்ற பெயரில் சைவ மடாதிபதிகளை பல்லக்கில் வைத்து தூக்கும் மனித உரிமைக்கு எதிரான செயல் குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த குத்தூசி குருசாமி பேசி அந்தப் பேச்சுக்காக மூன்று வாரம் சிறைத் தண்டனைப் பெற்ற வரலாற்றை இளைஞர் களுக்கு நினைவுபடுத்துகிறோம். 1960 ஜூலை 25இல் தஞ்சை மாவட்டம் திருவையாறு என்ற ஊரில் குத்தூசி குருசாமி இவ்வாறு பேசினார். “மனிதன் மனிதனைச் சுமப்பது அநீதி. மோட்டார் வாகனம் வந்திருக் கின்ற இந்த நாளில் வாகனத்தையும், ‘சாமியையும்’ ஒரு லாரியில் வைத்து ஓட்டிச் செல்லலாம், பக்தர்களுக்குச் சுண்டைக்காய் அளவாவது புத்தியிருந் தால். பாட்டாளித் தோழர்கள், அர்ச்ச கரையும் வாகனத்தையும் என்றாவது ஒரு நாள் காவிரியாற்றுப் பாலத்தின் மேலே போகும்போது, தோள்பட்டை வலி பொறுக்கவில்லையே என்று காரணம் காட்டி, தவறுதலாக நடந்ததுபோல், காவிரியாற்றுக்குள் போட்டாலொழிய இதற்கொரு முடிவு காண முடியாது.” இந்தப் பேச்சுக்கும் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தி...

சிவத்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா? எட்வின் பிரபாகரன்

சிவத்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (7) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 11: மனித உடல் என்பது ஓர் உடல் அல்ல, அது மூன்று உடல்களால் ஆனது. அவை (1) ஸ்தூல சரீரம், (2) சூக்ஷ்ம சரீரம், (3) காரண சரீரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐம்பூதங் களின் சேர்க்கையால் உருவாக்கப் பட்டது ஸ்தூல சரீரம். ஸ்தூல சரீரத்தை தாண்டி, மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் உறைவிடம் சூக்ஷ்ம சரீரமாகும். இந்த சூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரத்தை சுற்றி ஒரு ஒளிவட்டத்தின் வடிவில் சக்தியாக பரிணமிக்கிறது. மனிதன் இறந்த பின், அவனுடைய ஆன்மா, சூக்ஷ்ம சரீரத்தின் மேலேறி சிறிது காலம் தன் உடலைச் சுற்றி அலைவதாகவும், அந்த சூக்ஷ்ம சரீரத்தை கரைத்து, காரண சரீரமாக மாற்றுவதற்கு தான்...

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதியவருக்கு உச்சநீதிமன்ற பதவியா?

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதியவருக்கு உச்சநீதிமன்ற பதவியா?

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தற்போது பரிந்துரை செய்திருக்கிறது. கொலிஜியம், எஸ்.வி.இரமணா தலைமையில் நான்கு பேர் அடங்கியக் குழுவைக் கொண்டதாகும். பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பேர்களில் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜம்ஷெத் பி. பார்த்திவாலா என்பவர் ஆவார். இவரது பின்னணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2015 டிசம்பர் 1 இல் ஹர்திக் பட்டேல் பிரிவுக்கு தனி ஒதுக்கீடு கேட்ட வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் வந்த போது, அவர் தெரிவித்த கருத்து கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் தனது தீர்ப்பில் இவ்வாறு கூறினார். “இந்த நாட்டை அழித்துவரும் இரண்டு கேடுகள் எதுவென்று என்னைக் கேட்டால், ஒன்று ‘இட ஒதுக்கீடு’, மற்றொன்று ‘ஊழல்’ என்று நான் கூறுவேன். நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த ஒரு குடிமகனும் இட ஒதுக்கீடு கேட்பது வெட்கக் கேடானது” என்று அவர் கூறியதோடு, “அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மட்டுமே இட...

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

மயிலாடுதுறை கடலூர் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் இணைந்து மே 4ஆம் தேதி மயிலாடுதுறையில் மாநாட்டினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி 16 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 10000 வண்ண துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் சுவர் விளம்பரமும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 500 சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மாலை 5 மணி அளவில் பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு  மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை ஏற்றார். வரவேற்புரை கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் வழங்க, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற மாநாட்டின் கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு. குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் பேசினார்கள். மந்திரம் இல்லை தந்திரமே என்ற...

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

  சங்கராபுரம் மாநாடு மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவினர் லெனின் சுப்பையா பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு எழுச்சியூட்டினர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு பங்கேற்றுப் பேசினார். ஏப்ரல் 3 ஈரோட்டில் நடைபெற்ற கழகத்தின் செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மாநில உரிமைகளைப் பறிக்காதே, கல்வி உரிமைகளைத் தடுக்காதே, மதவெறியைத் திணிக்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்று மண்டல மாநாடு நடத்துவது, அதனை விளக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைந்து மே 3 ஆம் நாள் சங்கராபுரத்தில் மாநாட்டினை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் நோக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் 3000 எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட்டது. 27 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. 500 சுவரொட்டிகள்...

நன்கொடை

நன்கொடை

திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா – திருப்பூர் மாநகர அமைப்பாளர் தனபால் இணையரின் மகள் பெரியார் பிஞ்சு யாழினி தனது சேமிப்புத் தொகையான ரூ.550-அய் தனது பிறந்தநாளையொட்டி 10.4.2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக வழங்கினார். பெரியார் முழக்கம் 05052022 இதழ்

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுடன் வாழும் சித்ராவிற்கும்- ஹரிகிருஷ்ணனுக்கும் 25.04.22 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இணையர் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக 1000 ரூபாய் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 05052022 இதழ்

மோடி ஆட்சியில் நடக்கும் வங்கி சூறையாடல் கொழுக்கிறார்கள் – பார்ப்பன பெரு முதலாளி ‘இந்துக்கள்’; வதைபடுகிறார்கள் – ஏழை எளிய ‘இந்துக்கள்’

மோடி ஆட்சியில் நடக்கும் வங்கி சூறையாடல் கொழுக்கிறார்கள் – பார்ப்பன பெரு முதலாளி ‘இந்துக்கள்’; வதைபடுகிறார்கள் – ஏழை எளிய ‘இந்துக்கள்’

அரசு வங்கிகளில் பல்லாயிரம் கடன் வாங்கி பட்டை நாமம் சாத்தி விட்டு வெளி நாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள். பார்ப்பன-பனியா ‘இந்துக்கள்’.உழைக்கும் இந்துக்கள் வங்கிகளில் பெறும் சில ஆயிரம் ரூபாய்க்கு அவமானப் படுகிறார்கள். 17 வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில், 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லையா. பஞ்சாப் நேசனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு தப்பியோடிவர்கள் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது மாமனார் மெகுல் சோக்சியும். அதனைத்தொடர்ந்து நாட்டையே உலுக்கிய 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் மோசடியில் குஜராத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி. ஷிப்யார்டு என்னும் கப்பல் கட்டுமான நிறுவனம் சிக்கியுள்ளது. இன்றைய தேதியில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடி. இந் நிறுவனத்திற்கு இடம் வழங்கியது குஜராத் மாநில பாரதிய ஜனதா...

“நடராஜ மகாத்மியம்” நூல் எழுதியவர் மீது பாஜக புகார் அளிக்குமா? தமிழ்நாடு பாஜவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

“நடராஜ மகாத்மியம்” நூல் எழுதியவர் மீது பாஜக புகார் அளிக்குமா? தமிழ்நாடு பாஜவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை U2Brutus வலைக்காட்சியில் சிதம்பரம் நடராஜன் சிலை குறித்து பேசியதற்காக இந்துமதக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியினர் அறிக்கை, புகார் என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘நடராஜ மகாத்மியம்’ என்ற நூலில் எழுதப்பட்டு இருக்கிற செய்திகளை மேற்கோள்காட்டி “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற நூலின்  முதல் பதிப்பில் 190, 191, 192, 193 ஆகிய பக்கங்களில் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி உள்ளதை எடுத்துப் பேசியிருக்கிறார். அதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும்,  எச். ராஜா என்பவரும் உடனடியாக அந்த வலைக்காட்சி யில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற அதி புத்திசாலித்தனமான கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். முறையான அரசியல் செய்வதற்கு சரியான காரணங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால், கடலில் தத்தளிக்கும் ஒருவர் துரும்பு கிடைத்தாலும் பிடித்துக்கொண்டு தப்பித்து விடலாம் என்று நம்புவதைப் போல, ...

‘ஆன்மீக உளவியல்’ எனும் கற்பனை எட்வின் பிரபாகரன்

‘ஆன்மீக உளவியல்’ எனும் கற்பனை எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (6) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 10: உப்டோன் பியல் சின்கிலைர் என்ற அமெரிக்க எழுத்தாளர், தன்னுடைய துணைவி மேரி கிரெய்க்குக்கு, Telepathy (நுண்ணுணர்வு) இருப்பதை அறிந்து கொண்டு, நுண்ணுணர்வில் ஆய்வு செய்தார். தன்னுடைய துணைவிக்கு நுண்ணுணர்வு திறனால் கிடைத்த அனுபவங்களை, “Mental Radio” என்ற பெயரில் நூலாக வெளி யிட்டார். தன் வீட்டுக்கு வரும் பல முக்கிய பிரமுகர் களுக்கு, தன் துணைவியின் நுண்ணுணர்வுத் திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். இதனால், அறிவியலை மிஞ்சிய ஆன்மீக உளவியல் உண்டு என்பது உறுதியாகிறது. விடை: எவ்வளவோ சோதனைகளை நடத்திய போதும், நுண்ணுணர்வை நிரூபிக்க ஒரு சான்றும் கிடைக்கவில்லை என்ற உண்மையை டால்க்விஸ்ட் (1994), ஹோக்கார்ட் (1995), ராபர்ட் கோகன் (1998), டெரென்ஸ் ஹைன்ஸ்...

தலையங்கம் மருத்துவக் கல்லூரியில் ‘சமஸ்கிருத துதி’ ஏன்?

தலையங்கம் மருத்துவக் கல்லூரியில் ‘சமஸ்கிருத துதி’ ஏன்?

மருத்துவக் கல்லூரிக்கு மனு போடுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க  வேண்டும் என்ற நடைமுறை, சென்னை மாகாணத்தில் நிலவியது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோதுதான் அது ஒழிக்கப்பட்டது. மீண்டும் சமஸ்கிருதப் பண்பாட்டை மருத்துவத் துறையில் திணிக்க ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியிருக்கிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், பத்திரப் பதிவு அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற விழாவில், இது வரை பின்பற்றப்பட்டு வந்த ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழியை மாற்றி ‘மகரிஷி சரக சபதம்’ என்ற சமஸ்கிருதத்தில் இருக்கும் உறுதி மொழியை ஆங்கில மொழி வழியாக உறுதி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மருத்துவக் கல்லூரியில் புதிதாக மாணவர் சேர வரும்போது அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் (White Coat Ceremony) ‘ஹிப்போகிரட்டிக்’ என்ற உறுதிமொழிதான் உலகம் முழுதும் ஏற்கப்பட்டு வருகிறது. இந்த உறுதிமொழியை ஆங்கில மருத்துவத் தின் தந்தையாகக் கொண்டாடப்படும் ஹிப்போகிரட்டீஸ் உருவாக்கினார்....

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம்-கோவை மாவட்டங்களில் “நமக்கான அடையாளம் திராவிட மாடல்” பரப்புரை – மக்கள் பேராதரவுடன் நடந்தது. விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் 23-04-22 அன்று காலை11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் கண்டமங்கலத்தில் தொடங்கியது.  பாக்கம் கூட்ரோடு, வளவனூர், கோலியனூர், விழுப்புரம் இரயில் நிலையம் நிறைவாக பழைய பேருந்து நிலையத்தில் இரவு 9 அளவில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ம.க.இ.க கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி பிரகாஷ், ராஜ் ஆகியோர் மக்களைக் கவரும் வகையில் பாடல்களை பாடி சிறப்பித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புரை செயலாளர் விஜி பகுத்தறிவு, பா. விஜய குமார், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் தோழர்கள் அழகர், தமிழ், லிங்க...

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

கழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

வங்கதேச டாக்காவில் மனிதநேயர் ஃபாரூக் நினைவு குருதிக்கொடை முகாம்

வங்கதேச டாக்காவில் மனிதநேயர் ஃபாரூக் நினைவு குருதிக்கொடை முகாம்

22.04.2022 அன்று காலை 9:30 மணி முதல் 1:00 மணி வரை டாக்கா தமிழ்ச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் இணைந்து ஃபாரூக் நினைவாக குருதிக் கொடை முகாமை நடத்தின. பெரியார் முழக்கம் 28042022 இதழ்

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

24-04-2022 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் பெங்களூர் ஹோட்டல் கேபிடல் அரங்கில் தாமரை வேணி – ஜார்ஜ் இணையரின் மகன் பீமாராவ் க்கும் மங்கம்மா-புஷ்பராஜ் இணை யரின் மகள் சந்தியாராணிக்கும் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி   தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது. மணவிழா மேடையில் பெரியார், அம்பேத்கர் படங்கள் சுயமரியாதைத் திருமணம் என்ற எழுத்துகளோடு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் தொடக்கத்தில் நிமிர்வு கலையகத் தோழர்களின் பறையிசை எழுச்சி யோடு முழங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சமதா  தேஷ்மானே, ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜிகானி சங்கர், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான  டாக்டர் பத்மாக்ஷி லோகேஷ், முனியஜினப்பா, லோகேஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். முனைவர் சமதா தேஷ்மானே பேசும்போது, தான் தாலியில்லாத சடங்கில்லாத திருமணத்தை 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திக் கொண்டு நலமாக வளமாக வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறி, வேத, புராண, சாத்திர...

‘இந்து’ விளிம்பு நிலை மக்களை நசுக்கும் பாரதிய ‘புல்டோசர்’ கட்சி

‘இந்து’ விளிம்பு நிலை மக்களை நசுக்கும் பாரதிய ‘புல்டோசர்’ கட்சி

இராம நவமி விழாக்களில் கலவரம் விளைவித்தார்கள் என்று சிறுபான்மை மக்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியினர் புல்டோசரை வைத்து தகர்த்து வருகின்றனர். புது டெல்லியிலும், மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த புல்டோசர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. உச்ச நீதிமன்றம் அதிர்ச்சியடைந்து தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து ‘உடனடியாக இந்த புல்டோசர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தடை வந்தப் பிறகும் கூட புல்டோசர் தாக்குதல்கள் தொடர்ந்தன, அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தற்போது “பாரதிய புல்டோசர் கட்சி”யாக உரு மாறியிருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக புல்டோசரை வைத்து வீடுகளை இடிக்கிறார்கள், அதே சமயம் பெரும்பான்மை இந்துக்களுக்குத் தான் நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், பெரும்பான்மையான இந்துக்களின் வாழ்வாதாரத்தை புல்டோசரை வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி மேலும் 143 பொருட்களுக்கு உயர்த்தப்படுவதாக...

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்…. 1)         பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100 2)         மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30 3)         50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்)         – ரூ. 30 4)         மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60 5)         தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள்                 – ரூ.  30 6)         பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்)       – ரூ. 60 7)         திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை)      – ரூ. 60 8)         கீழ் வெண்மணியும் பெரியாரும்         – ரூ. 60 9)...

கியூட்-நீட்-கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா? மு. இராமநாதன்

கியூட்-நீட்-கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா? மு. இராமநாதன்

ஒரு புதிய நுழைவுத் தேர்வு வந்திருக்கிறது. கியூட் அதன் பெயர் (CUET – Central University Eligibility Test). மத்திய பல்கலைக்கழகங்களுக்கான தகுதித் தேர்வு என்பது பொருள். இனிமேல் மத்திய பல்கலைக் கழக வளாகங்களுக்குள் மாணவர்கள் கால் பதிக்க வேண்டுமானால், இந்தத் தேர்வில் அவர்கள் கை நிறைய மதிப் பெண்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்துவருகிறது. இது தவிர கேட் என்றொரு நுழைவுத் தேர்வும் நடந்துவருகிறது; இது பொறி யியல் முதுநிலைப் படிப்பிற்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. ஏன் இப்படியான நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன? ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை யானது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குப் போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது (பத்தி 4. 42, பக்கம் 19). அதாவது அடுத்தகட்டமாக இந்த நுழைவுத் தேர்வுகள் எல்லாக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும்...

வினா – விடை

வினா – விடை

காஞ்சி குரு விஜயேந்திரனை விமர்சித்தவரை கைது செய்ய வேண்டும்.                 – தமிழ்நாடு பிராமண சமாஜம் கைது செய்வதோடு நிறுத்தக் கூடாது; விஜயேந்திரன் கொலை வழக்கில் எந்த சிறையில் இருந்தாரோ அதே அறையில் போட்டு பூட்ட வேண்டும்; அப்பத் தான் புத்தி வரும். ஆன்மீகப் பயணம் முடிந்தது; அடுத்து அரசியல் பயணம் தொடங்கு கிறேன். – சசிகலா தொடக்க விழா – கொடநாடு ‘எஸ்டேட்டில்’; இரண்டாவது விழா – கருநாடகா நீதிமன்றத்தில்; தவறாது வருக! சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலிருந்து முகலாயர் வரலாறு – ஜனநாயகம் பற்றிய பாடங்கள் நீக்கம்.. – செய்தி அதுக்கு பதிலாக புல்டோசர் வைத்து இடிப்பது; ஜீப் ஏற்றி சாகடிப்பது போன்ற ‘அகிம்சை’ தத்துவங்களை சேர்க்கலாம். நீதிமன்றத்தில் மாநில மொழியில் வழக்காட வேண்டும்; இல்லையேல் திருமண வீட்டில் மந்திரங்கள் ஓதுவதுபோல யாருக்கும் புரியாது. – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘ஆண்டி இந்தியன்’ எச்.ராஜா, எங்கே போயிட்டீங்க… இதுக்கு ‘ஹாட்டா’ ஒரு பதிலடி...

பிரெஞ்சுப் புரட்சியில் மரணிக்கப் போவோரின் பட்டியலை கசோட் கணித்தாரா? எட்வின் பிரபாகரன்

பிரெஞ்சுப் புரட்சியில் மரணிக்கப் போவோரின் பட்டியலை கசோட் கணித்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியம் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (5) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 8: பிரேசில் நாட்டைச் சேர்ந்த அரிகோ என்ற விவசாயி, பல மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய் களை குணப்படுத் தினார். துருப்பிடித்த கத்தியையும், கத்தரிக்கோலையும் வைத்தே அறுவை சிகிச்சை செய்தார். முறை யாக மருத்துவம் படிக்காத இவரால் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது? என்ற கேள்விக்கு மருத்துவ உலகில் பதில் இல்லை. விடை:முதலில் அரிகோ பல நோய் களை குணப்படுத் தியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. உலகப் புகழ் பெற்ற நாத்திக அறிஞர் ஜேம்ஸ்ரண்டி, 1982இல் இதை பற்றி “Film – Flam Psychics Especially Unicorns & other delusions” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மாயா ஜாலம் (தந்திரம்) செய்பவர்களின், மக்களை...

தலையங்கம் மக்கள் உரிமைகளை முடக்கும் ‘மனுவாத’ ஆளுநர்கள்

தலையங்கம் மக்கள் உரிமைகளை முடக்கும் ‘மனுவாத’ ஆளுநர்கள்

‘படைப்புக் கடவுள்’ பிர்மா மனுசாஸ்திரத்தை உருவாக்கி, பிராமண-சத்ரிய – வைசிய – சூத்திரர்களுக்கு தகுதி, கடமைகளை வகுத்திருப்பதால் அதன்படி வாழ வேண்டியதே தர்மம் என்று பார்ப்பனியம் சமூகத்தில் வர்ணாஸ்ரமத்தைத் திணித்தது. இதில் மக்கள் முடிவு செய்ய எந்த உரிமையும் இல்லை. அதேபோல் ஒன்றிய சாம்ராஜ்ய ‘பிரம்மாக்களால்’ – ‘மனுசாஸ்திரம்’ முறையாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர்கள் என்ற ‘தேவ தூதர்கள்’ – கல்வி, மொழி, பண்பாடு உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்காக அவர்களே தீர்மானிப்பார்கள். இதில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சிகளோ மக்களோ தலையிட முடியாது. தலையிட்டால் எருமை வாகனத்தின் மீது ‘சித்திரபுத்திரர்கள்’ விரைந்து வந்து “நரக”த்துக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என மிரட்டுகிறார்கள். ‘மனுவாதிகள்’ இப்போதும் வேறு வடிவத்தில் ‘ராமராஜ்யம்’ நடத்துகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு ‘திராவிட மாடல்’ பணியாது என்பது மட்டுமல்ல; திருப்பித் தாக்கும் என்று தமிழ்நாடு அரசு போர்ச் சங்கைக் கையில் எடுத்து விட்டது. தமிழ்நாட்டில்...

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

பரப்புரைப் பயணத்துக்கான 15 வெளியீடுகளில் ஒன்று “மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?” பெரியாரியவாதியும் ஊடக வியலாளருமான ர. பிரகாஷ் மிகச் சிறப்பாக ஏராளமான தகவல்கள் தரவுகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மக்களை எப்படி ஏமாற்று கிறார்கள்? ஜி.எஸ்.டி. கொள்கையால் மாநிலங்கள் வருவாய் எப்படி சுரண்டப் படுகின்றன? ஏர் இந்தியா, எல்.அய்.சி. பங்கு விற்பனைக்கு ஒன்றிய ஆட்சி கூறும் மக்களை ஏமாற்றும் போலி வாதங்கள் என்ன? அதில் உண்மை இருக்கிறதா? பொதுத் துறை நிறுவனங்கள் ஏன் தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது? பயனடைவது யார்? எப்படி விதிமீறல்கள் நடக்கின்றன? கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் வரிப்பணம் கொட்டி அழப்படுவதோடு வங்கிகள் கடன்களை வாரி வாரிக் கொடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள். கார்ப்பரேட் சேவைகளுக்காக பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் பரிசுகள்; பரிவர்த்தனைகள் என்ன? ஊழல் எதிர்ப்புக் கட்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் பா.ஜ.க.வின் போலி முகமூடியைக் கிழித்துக் காட்டும் ‘தேர்தல் பத்திரங்களின்’ கதை!...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை இயக்கங்கள் தொடங்கி எழுச்சி நடைபோட்டு வருகின்றது. சென்னை : முதல் நாள் தெருமுனைக் கூட்டம் : மாநில உரிமையைப் பறிக்கும், கல்வி உரிமையைத் தடுக்கும், மதவெறியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’-அய் ஆதரித்து, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டை விளக்கி, தெருமுனைப் பிரச்சாரம், சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில், (19.04.2022 மாலை 5:30 மணிக்கு மீர்சாகிப் பேட்டை மார்கெட் பகுதியில் 119ஆவது வட்ட கவுன்சிலர் திமுக கமலா செழியன் தொடங்கி வைத்தார். அடுத்ததாக அய்ஸ்ஹவூஸ்ஷேக் தாவூத் தெரு, இறுதியாக அய்ஸ்ஹவூஸ்கிருஷ்ணாம்பேட்டை பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, பிரகாசு, ஜெய பிரகாசு, தேன்மொழி ஆகியோர் மக்களிடம்  ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும்...

15 நூல்கள் தயாராகின்றன

15 நூல்கள் தயாராகின்றன

பரப்புரைப் பயணத்துக்கு 15 நூல்கள் தயாராகி வருகின்றன. தேவைப்படும் தோழர்கள் பிரதிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கக் கோருகிறோம். – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தொடர்புக்கு : 7373684049   பெரியார் முழக்கம் 21042022 இதழ்