பாவலர் தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்
சீரிய பெரியாரியலாளரும் கவிஞருமான தமிழேந்தி (69) அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் மே 5ஆம் தேதி காலை 7 மணியளவில் முடிவெய்தினார். தோழர் ஆனைமுத்து அவர்களின் மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி அமைப்பான புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகப் பணி யாற்றி வந்த தோழர் தமிழேந்தி பெரியார் இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு செயல்பட்டவர். குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழகத்துடன் மிகவும் நெருக்கம் கொண்டு கழக நிகழ்வுகள் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும் பேசியும் வந்தவர். சிந்தனையாளன் இதழ் தயாரிப்புப் பணியிலும் அதன் பொங்கல் ஆண்டு மலர் தயாரிப்பிலும் முக்கியப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சமகால அரசியலை மரபுக் கவிதை வடிவத்தில் கவிப் புனையும் ஆற்றல் அவரது தனித்துவமான சிறப்பு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புழல் சிறை வளாகம் முன்பு 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண் டிருந்தபோது உணர்ச்சி மேலிட்டு மயங்கி விழுந்தார்....