நல்ல நடவடிக்கை: பார்ப்பன பயங்கரவாதி கைது

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், சென்னை 134 ஆவது வார்டில் (மேற்கு மாம்பலம்) ஒரே ஒரு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதை ஒட்டி, யு டியூப்(லிபர்டி) சேனல் அந்த வார்டு மக்களிடம் கருத்து கேட்டது. அதில் பேசிய ‘ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன்’ “பெரியார், அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரை கோட்சே கொன்றிருக்க வேண்டும். அதற்குப் பிறகு காந்தியைக் கொன்றிருக்க வேண்டும். நான் ஒரு இந்து தீவிரவாதி” என்று பேசியிருந்தார். வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியவரை சைபர் கிரைம் போலீசார், 28.02.2022 அன்று கைது செய்தனர். வழக்கம் போல், இவர் மனநலம் குன்றியவர் என்ற புரளியை கிளப்பி விட்டார்கள்.

பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்

You may also like...