Author: admin

இந்தி அழிப்பு போராட்டம் சென்னை 05062017

ஜூன் 5ல் “இந்தி அழிப்பு போராட்டம்” திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. மத்திய அரசு அலுவலகங்களில் “இந்தி அழிப்பு போராட்டம்” தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை.! பா.ஜ.க அரசே.! திணிப்புகளை திரும்பப் பெறு.!! நாள் : 05.06.2017, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு…. இடம் : சாஸ்திரிபவன், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை : கொளத்தூர்.தா.செ.மணி தலைவர்.திராவிடர் விடுதலைக் கழகம் #இந்தி_திணிப்பை_எதிர்ப்போம்.! #இழந்துவரும்_உரிமைகளை_மீட்போம்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

04062017 அன்று சென்னையில் “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாடு. இந்தித்திணிப்பை எதிர்ப்போம் ! இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! எனும் முழக்கத்தோடு, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பில்.. நாள் : 04.06.2017. ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4 மணி இடம் : திருவான்மியூர் தெப்பக்குளம், சென்னை – 41. தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். சிறப்புரை : நீதியரசர்.அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி,உயர் நீதி மன்றம்,சென்னை. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். பேராசிரியர்.சரசுவதி அவர்கள். மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ! காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறையிசை, புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம்பெறும். விழித்தெழுவோம்.! தடுத்து நிறுத்துவோம்.! தமிழர்களே வாரீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

ஃபா கலெக்சன்ஸ் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் அவர்களின் துணைவியார் துவங்கியுள்ள ஃபா (faa) collections எனும் புதிய ஆயத்த ஆடை அங்காடியை இன்று 31.05.2017 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் தோழர் பாரூக்கின் குழந்தைகள். Shop address : FAA COLLECTIONS, No:6 60 feet road, North housing unit, OPP TMMK office, Selva puram, Coimbatore – 641026

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் திருச்செங்கோடு 31052017

.. தடையைத் தகர்க்க ஒன்று கூடுவோம்.. நாள்: 31.05.2017 இடம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்பு, திருச்செங்கோடு. திராவிடர் விடுதலைக் கழகம்

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழா சென்னை 28052017

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழாவில் சென்னையில் நடைபெற்றது. அதில் ஐயாவிற்கு மரியாதை செய்யும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியாரியல்வாதிகள்

மாட்டிறைச்சி தடைச் சட்டம் – திவிக ஈரோடு தெற்கு கண்டனக் வட்டம் 28052017

பாஜக மோடி பாசிச அரசின், மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை செய்த சட்டத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனக் கூட்டம் 28052017 அன்று, ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கப்பட்டது. தோழர் ரங்கம்பாளையம் கிருஷ்ணன் தலைமையேற்க, கிருஷ்ணமூர்த்தி வரவேற்க..சிவா சடையன் (திருச்செங்கோடு) செல்லப்பன் (மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு) சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சரவணன் (நாமக்கல் மாவட்டச் செயலாளர்)வெங்கட்,  ப.ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற வீரா கார்த்திக் (அறிவியல் மன்றம்) நிறைவுரையாற்ற, கமலக்கண்ணன் நன்றியுரையுடன் முடிந்தது. பங்கு பெற்றோர் சித்தோடு பிரபு , பிரபாகரன், யாழ் எழிலன், சென்னிமலை இசைக்கதிர்,  இனியன், பாரதி, சத்தியராஜ், திருமுருகன், மணிமேகலை, புனிதா, பேபி, மோகன் (புலி) பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) இளங்கோ, தமிழ்செல்வன், மாதேஷ்,  கவிப்பிரியா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.!

தோழர் ஃபாரூக் துணைவியார் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் துணைவியார் புதிதாக துவங்கவுள்ள   பா (faa) collection நாளை காலை 10 மணிக்கு  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துறை அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வருக.. பேச 9677404315

பாஜகவின் மாட்டிறைச்சி தடைச் சட்டம் – கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ! பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசு மாடு மட்டுமல்லகாளை,எருமை,கன்றுக்குட்டி, கறைவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்க்கக்கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம்,விவசாயி என்பதற்கான அடையாள சான்றுபௌள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம்.இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக்குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர்...

ஆணவ கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம் மதுரை 23052017

ஆணவ கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம் மதுரை 23052017

காதல் திருமணம் செய்த சுகன்யாவை பெற்றோர்களே எரித்து கொண்ட, சாதி ஆவண படுகொலையை கண்டித்து மதுரையில் தலைமை தபால் நிலையம் முற்றுகையில், திராவிடர் விடுதலை கழகம்  

மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் ஈரோடு 28052017

மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் ஈரோடு 28052017

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தெருமுனைக் கூட்டம்…. ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் 28.05.2017 மாலை 6:30 மணிக்கு மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம்.. ஆத்தூர் மகேந்திரனின் மந்திரமல்ல தந்திரமே அறிவியல் நிகழ்ச்சியும், இந்தி திணிப்பு சிறப்புரை தோழர் வீரா கார்த்தி ( தமிழ்நாடு அறிவியல் மன்றம்) தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி….. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க அழைக்கிறோம்….  

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடம்: திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை பல்வேறு தலைப்புகளில் இப் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 300/= (ரூயாய் முன்னூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி : ஆனந்த் – 9842815340 சபரி – 9095015269 கோவை...

தி.வி.க.  – தி.க. – த.பெ.தி.க. தோழர்கள் பங்கேற்பு: மயிலையில் கழகம் நடத்திய ‘நீட்’ எதிர்ப்பு பொதுக் கூட்டம்

தி.வி.க. – தி.க. – த.பெ.தி.க. தோழர்கள் பங்கேற்பு: மயிலையில் கழகம் நடத்திய ‘நீட்’ எதிர்ப்பு பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட சார்பில்  17.05.2017 மாலை 6:30 மணியளவில்  “நீட் தேர்வு விளக்க கூட்டம்” மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்றது. கழகத்தின் மயிலாப்பூர் பகுதி  தோழர் மாரிமுத்து  தலைமையில் பிரவீன், சஞ்சய், விஜயகாந்த், சரண், சிவா ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடினார். அதையடுத்து, மருத்துவர் எழிலன், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளான மே 17 அன்று பாலச்சந்திரன் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு பேசிய, மருத்துவர் எழிலன் மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் அரசு சுகாதார நிலையங்களை மூட நினைக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகத்தின் சார்பாக முகிலன் பங்கேற்று மத்திய அரசிற்கு அடிபணிந்து கிடக்கும் மாநில அரசை கண்டித்து உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் வழக்கறிஞர் துரை அருண் சட்டத் துறையில் திணிக்க முற்பட்ட அதே தேர்வு முறைகளை இப்போது மத்திய அரசு மருத்துவ...

திராவிடர் விடுதலைக் கழக கிளைக் கழக துவக்க விழா

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமையன்று  மாலை5.00 மணிக்கு கிளைக்கழக துவக்கவிழா நிகழ்வும் பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக அப்பகுதியில் கழகத்தின் கொடியை தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர் கா.சு வேலுச்சாமி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப்  பேச்சாளர்  கா.சு.வேலுச்சாமி, பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கழகத்தோழர் மணி தலைமை தாங்கினார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அப்பகுதியைச் சார்ந்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கொங்கு அமைப்புகளின் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை காந்தியின் கபட வாதங்கள்: தோலுரித்தவர் அம்பேத்கர்

காந்தியின் கபட வாதங்களை அம்பேத்கர் எப்படி எதிர் கொண்டார் என்பதை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி: இட ஒதுக்கீடு என்பதைகூட, பதவி பெறும் நோக்கத்திற்காக அம்பேத்கர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துக் கொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது. நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார். அது அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. ஆனால், அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதிக் கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார். இப்போது...

ஜூன் 4 சென்னை மாநாட்டு செயல் திட்டங்களை வகுக்க மாவட்டக் கழகம் கலந்துரையாடல்

ஜூன் 4 சென்னை மாநாட்டு செயல் திட்டங்களை வகுக்க மாவட்டக் கழகம் கலந்துரையாடல்

“தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாட்டிற்கான சென்னை நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்  20.05.2017 மாலை 5 மணிக்கு  இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டிற்கான அடுத்தகட்ட செயல்பாடுகள், தோழர்களின் மாநாட்டிற்கான பணிகள் என பல்வேறு செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டன.  தபசி குமரன், அன்பு தனசேகரன், வேழவேந்தன், அய்யனார், இரா.செந்தில்குமார் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களை கூறினர். பெரியார் முழக்கம் 25052017 இதழ்

பெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்

பெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) பெரியாரையும் அம்பேத்கரையும் சமகால இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிறுத்துகிறோம். அவர்கள் நாத்திகர்கள், அவைதீகர்கள் என்பதாலா? அவ்வாறு நிறுத்துவது நம் சமகாலத் தேவைப் பாடுகளை நிறைவு செய்ய முடியுமா? பெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்தவில்லை. ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவை, ஜேஎன்யூ மாணவர்களை நாமா இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தினோம். இல்லை, மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானாவில் தலித்துகள் தாக்கப்பட்டது, தாக்கப்படுவது, அதனால் தலித்துகள் இந்துத்துவத் திற்கு எதிராகப் போராடி வருவது ஆகியவற்றைப் பார்த்தால் நாமாக தலித்துகளை இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தவில்லை. இந்துத்துவமே அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது; எதிரிகளாக ஆக்கி வைத்துள்ளது. இதை இந்துத்துவ வாதிகள் சில சமயங்களில் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள்; சில சமயங்களில் மறைமுகமாகப் பேசுகின்றார்கள். ஆனால்...

ஜூன் 4 – தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு ஜூன் 5 – மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்புப் போராட்டம் சென்னையில் இரு பெரும் நிகழ்ச்சிகள்

நடுவண் பா.ஜ.க. ஆட்சியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து ஜூன் 5ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகப் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த இருக்கிறது. போராட்டத்துக்கு முதல் நாள் ஜூன் 4ஆம் தேதி சென்னையில் “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திறந்த வெளி மாநாடு நடக்கிறது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திருவான்மியூர் – தெப்பக்குளம் மைதானத்தில் இந்தி எதிர்ப்பு போராளிகள் “தாளமுத்து-நடராசன் நினைவு அரங்கில்” மாநாடு நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள், பறை இசையுடன் தொடங்கும் மாநாட்டில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கழகத் தலைவர், பொதுச் செயலாளரும் பங்கேற்கிறார்கள். தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு என்று மாநாட்டுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுதும் மாநாடு –...

இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்துவரும் உரிமைகளை மீட்போம்!

இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழி நடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம். ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை  ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு,  ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும், பதவிக்கு வரவும் ‘கீழ்ஜாதி’களுக்கு உரிமை இல்லை என திமிராட்டம் போட்டது. அதை சுக்குநூறாக உடைத்தெறிந்து, அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக, இட ஒதுக்கீடு சட்டங்களை உருவாக்கிக் கொண்டோம். அந்த சமூகநீதிதான் நமக்கான...

சித்தோட்டில் மாட்டுக் கறி விருந்து

சித்தோட்டில் மாட்டுக் கறி விருந்து

திராவிடர் விடுதலைக் கழகம் , சித்தோடு கிளைக் கழகத்தின் சார்பில் சித்தோடு வாய்க்கால் மேட்டில் 14.05.2017 மாலை 6:30 மணியளவில் பிரபு தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்னும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்தினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த வீரா கார்த்தி சமகால மாட்டுக்கறி அரசியல் பற்றியும் நீட் தேர்வைப் பற்றியும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கைகள் பற்றி சிறப்புரையாற்றினார். இறுதியாக கிருஷ்ண மூர்த்தி நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.  இக்கூட்டத்தில் இரசிபுரம் பிடல் சேகுவேரா, பள்ளிபாளையம் தோழர்கள் முத்துப்பாண்டி, தங்கதுரை, சரவணன், பாபு சென்னிமலை செல்வராஜ், சிவானந்தம், சித்தோடு தோழர்கள் கமலக்கண்ணன், பிரபாகரன், சத்யராஜ், சௌந்தர், கதிரேசன், சுர்ஜித் சேகர், ஜெய பாரதி, எழிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்....

தோழர் பாரூக் குடும்ப நிதி நன்கொடையாளர் பட்டியல்

தோழர் பாரூக் குடும்ப நிதி நன்கொடையாளர் பட்டியல்

ஈரோடு சிவக்குமார் –              ரூ.        10,000 சேலம் சீனு –              ரூ.        10,000 அலக்சு விட்டல் –              ரூ.        500 அருள் –              ரூ.        500 உலகநாதன் –              ரூ.        500 பெங்களூர் சித்தார்த் –              ரூ.        1,000 ரவி –              ரூ.        1,000 தாந்தோனி –              ரூ.        1,000 செல்வ பாண்டியன் –              ரூ.        1,000 ஜீவா –              ரூ.        2,500 அருண் சதீசு (சென்னை) –              ரூ.        1,000 ந. தங்கவேல் –              ரூ.        500 பிரபு –              ரூ.        500 விருதுநகர் கணேசமூர்த்தி –              ரூ.        1,000 டாக்டர் சக்திவேல் (ஈரோடு) –              ரூ.        5,000 தமிழரசன் அப்துல் காதர் –              ரூ.        5,000 வினோத் கந்தன் –              ரூ.        3,000 பேராசிரியர் சரசுவதி...

கழகத் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் 21052017

21.05.2017 மாலை 3 மணிக்கு விழுப்புரம் (மா) தி.வி.க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தோழர்கள் க.ராமர், பெரியார் வெங்கட், கா.மதி, ந.வெற்றிவேல், இளையரசன், சி.சாமிதுரை, தீனா( புதுச்சேரி), ந.அய்யனார் (த.செ.கு) உரையாற்றினர். கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மா.குமார் நன்றி உரையாற்றினர். கூட்டத்தில் கழக இதழ்கள் ‘பெரியார் புரட்சி  முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, மேற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழுப்புரம் கிழக்கு (மா) பொறுப் பாளர்கள்: இளையரசன் (மாவட்டத் தலைவர்), தினேஷ் (மா.செ), ஸ்ரீதர் (மா.அ), அழகு முருகன் (மா.து.த), பெரியார் ஜெயரக்சன் (மா.து.செ), விழுப்புரம் மேற்கு மாவட்டம், க. மதியழகன் (மா.த), க.ராமர் (மா.செ), சி.சாமிதுரை (மா.அ), ம.குப்புசாமி (மா.து.செ), மு.நாகராஜ் (த.அ.ம. மாவட்ட அமைப்பாளர்), வீ.வினோத் (த.மா.க. மாவட்ட அமைப்பாளர்),...

சங்கரன்கோவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதல் நிகழ்ச்சி 

  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த  மே 14 அன்று  அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணம் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் தோழர் வே.ராமசாமியின் நோக்க உரையுடன்  நிகழ்ச்சி தொடங்கியது .சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார்  “.பெரியார் இன்றும் என்றும் “அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர்  இந்துவாக சாக மாட்டேன் “கழக மாத இதழான நிமிர்வோம் ஆகிய நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன . .நிமிர்வோம் இதழ்கள் குறித்து மதுரை தோழர் மா.பா மணிஅமுதனும் ..அம்பேத்கரின் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் நூல்குறித்து தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத்  தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இன்றும் என்றும் நூல் பற்றியும் உரையாற்றினர் .பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார் ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு ,முள்ளிக்குளம்...

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு – சென்னை சுவரொழுத்து பணிகள்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்…. “இந்தி திணிப்பை எதிர்ப்போம் – இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு” சென்னை திருவான்மியூர் பகுதியில் “ஜீன் 04″ல் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பரம் தென்சென்னை பகுதியை சுற்றிலும் எழுதப்பட்டது…… முந்தைய நாள் தொடர்ச்சியாக 20052017 அன்று இரவும் தோழர்கள் சுவர் விளம்பரத்திற்காக பணிகளை மேற்கொண்ட போது….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னை 04062017

வெகுஜன மக்களின் மனதில் இந்தி படிப்பது அறிவென்றும், இந்தியை படித்தால் உயர்வென்றும் திட்டமிட்டு திணிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்தியை மொழியாக வட மாநிலத்தவர்கள் பிழைப்பிற்காக தென் மாநிலங்களில் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் என புலம் பெயர்ந்தபடி உள்ளனர். வட மாநிலங்களில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளவர்கள் கூட, தரமான கல்விக்கு தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் தமிழர்களுக்கு என்று தனித்துவமாக கலாச்சாரம், நாகரிகம் போன்றவையே காரணம். இந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் இல்லை அந்நிய மொழி அறிதல் அறிவே. ஆனால் அதுவே கட்டாயமாக்கப்பட்டு திணிக்கையில் நிச்சயமாய் எதிர்க்கக் கூடியதே . இந்தி ஏன் திணிக்கப்படுகிறது. பெரிதாய் ஆய்வுகள் தேவையில்லை. தனக்கென நாடில்லா ஆரியம், அகன்ட பாரத கனவிற்கு இந்து மதம் கொண்டு இந்தியாவை வடிவமைப்பது போலவே, அதை மேலும் பலப்படுத்தும் வண்ணம் ஒருமொழி கலாச்சாரத்தை கொண்டுவர முயலும் மொழி திணிப்பே இந்தியை அறிவென்பது. உலகத்தின் ஆதி...

பெரியாரியல் பயிலரங்கம் ! கொளத்தூர் 24052017 மற்றும் 25052017

பெரியாரியல் பயிலரங்கம் ! தலைப்புகள் – பயிற்சியாளர்கள் விவரம். நாள் : 24.05.2017.புதன் கிழமை மற்றும் 25.05.2017 வியாழக்கிழமை. நேரம் : காலை 9.00. மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : உக்கம்பருத்திக்காடு, பெரியார் படிப்பகம்,கொளத்தூர். ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், கொளத்தூர் ஒன்றியம்,சேலம் மாவட்டம். தொடர்புக்கு : 7373072737 – 9486127967 – 9994477623

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...

இராஜீவ் காந்தி – கொலை அல்ல, மரணதண்டனை

இராஜீவ் காந்தி – கொலை அல்ல, மரணதண்டனை

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ – இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ – திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், – நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ – அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க...

தோழர் பாரூக் படுகொலை – மலையாள நாளிதழ் கண்டன கட்டுரை

தோழர் ஃபாரூக் கொலை சம்பவத்தை கண்டித்தும் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரது படுகொலைகளைப் போன்றே ஃபாரூக் கொலை வழக்கையும் முக்கியத்துவம் கொடுத்து அணுகவேண்டும் எனும் சாரத்தில் இந்திய அரசியலில் இந்து இசுலாமிய மத மோதல்களின் தாக்கத்தையும் ஒப்பாய்வு செய்து கேரளாவில் மூத்த சமூக செயல்பாட்டாளர் எம் என் காரசேரி அவர்கள் எழுதி மாத்ருபூமி நாளிதழில் வெளியான கட்டுரை http://digitalpaper.mathrubhumi.com/m/1210299/Mathrubhumi/17-May-2017#issue/8/1

வெளி வந்துவிட்டது!  ‘நிமிர்வோம்’  மே இதழ்

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ மே இதழ்

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஜாதியக் கலாச்சாரம் – எம்.எஸ்.பாண்டியன் ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியான இந்தி – அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள் சுய நிர்ணய உரிமை கோருவது குற்றமா? இராமானுஜர் ஆயிரமாண்டு விழா : சில கேள்விகள் பசு பாதுகாவலர்களே பதில் சொல்லுங்கள்! – தலையங்கம் இந்தி: அம்பேத்கரின் எச்சரிக்கை ‘ஹோம’ குண்டப் புகை உடலுக்கு நல்லதா? – நக்கீரன் கடவுள் மறுப்பு: சங்க இலக்கியங்களி லிருந்து சுயமரியாதை இயக்கம் வரை – முனைவர் க. நெடுஞ்செழியன் ஜாதி அடையாளம் பெருமைக் குரியதா? – பெரியார் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com  

எழுச்சியுடன் சைக்கிள் பேரணி – கபடி போட்டி – பொதுக் கூட்டம் : மேட்டூர் (ஆர்.எஸ்) பகுதியில் அம்பேத்கர் விழா

எழுச்சியுடன் சைக்கிள் பேரணி – கபடி போட்டி – பொதுக் கூட்டம் : மேட்டூர் (ஆர்.எஸ்) பகுதியில் அம்பேத்கர் விழா

சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏப்.14 அன்று பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடந்தது. கபடி போட்டி, சைக்கிள் பேரணி, கலை நிகழ்ச்சி, பொதுக் கூட்டம் என்று நிகழ்ச்சிகள் எழுச்சி நடைபோட்டன. காலை 10 மணிக்கு மேட்டூர் அணை குட்டி (எ) பத்மநாபன் நினைவுத்திடலில் எஸ். முருகேசன், ஜம்பு நதி (மேட்டூர் ஹைடெக் திளை ஆஷ் பிரிக்ஸ்) ஆகியோர் கபடி போட்டியை தொடங்கி வைத்தனர். இறுதிப் போட்டியை பிற்பகல் என். சந்திரசேகரன் (நகர செயலாளர், அ.இ.அ.தி.மு.க.) தொடங்கி வைத்தார். முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை தேசிய சமூக விருது பெற்ற ஆ.டி.சலாம் (எ) தணிகாசலம் வழங்கினார். டி.கே.ஆர். நினைவு சுழற் கோப்பையை கே.இரமேஷ் (கே. அசோசியேட்ஸ்) வழங்கினார். இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரத்தை பி. ஸ்டாலின் (மேட்டூர் அசோசியேட்ஸ்), மே.த. சரவணன் (பேத அசோசியேட்ஸ்) ஆகியோர் வழங்கினர். புலவர் இமயவரம்பன் நினைவு...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை அம்பேத்கர் – ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர்

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். 14.4.2011 வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரை: புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு  சென்று படிக்கிற வாய்ப்பினைப் பெற்றார். அங்கு போய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங் களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத் துறையில் பட்டங்களைப் பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க...

பெரியாரின் சிந்தனைகளுக்கு – தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு!

பெரியாரின் சிந்தனைகளுக்கு – தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு!

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. சமகால சமூக அரசியல் சூழலில் பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிகள் பிரச்சினைகளை அணுகுவதிலும், மக்கள்  திரளைக்   கட்டமைப்பதிலும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை சுயவிமர்சனங் களோடு முன் வைக்கிறது இந்தப் பேட்டி. இந்திய தத்துவ மரபில் இலக்கியங்களில் புதைந்துள்ள முற்போக்கு கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். அந்தப் பார்வையில் விவாதங்களுக்கும் விமர்சனங் களுக்குமான அவசியத்தை வலியுறுத்து கிறார். திராவிடர் விடுதலைக் கழகம் சேலத்தில் நடத்திய வேத மரபு மறுப்பு மாநாடு, இந்த திசை வழியில் மேற்கொண்ட முன்முயற்சியாகும். உரத்த சிந்தனைகளுக்கு வழி திறந்து விடும் இந்த பேட்டியை அதன் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியத் தத்துவங்களுக்கு ஒரு சமகாலத் தன்மை உள்ளதா? அதாவது நமது சமகாலப் போராட்டங்...

உணவு உரிமை – கருத்துரிமையை பறிக்காதே! தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்: சேலத்தில் கழகத்தினர் கைது

மாட்டுக் கறியை உண்ணத் தடைபோடும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு – உழைக்கின்ற மக்களின் உணவு; புரதச் சத்து மிக்க உணவு; ஆடு மற்றும் கோழிக் கறியைச் சாப்பிடும் உரிமை இருக்கும்போது, உலகம் முழுதும் மக்களால் உண்ணப்படும் மாட்டுக்கறி உண்பதை மதத்தைக் காரணம் காட்டி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தடை போட்டுள்ளதோடு, கண்காணிப்புக் குழுக்கள் என்ற பெயரில் காலித்தனத்திலும்  இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மே 12ஆம் தேதி சேலம் நகரில் மாட்டுக்கறி அரசியல் கருத்தரங்கம் ஒன்றுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் தலைமையில் மாநகரத் தலைவர் த.பரமேசு முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர். மதியம் ரூ.50 கட்டணத்தில் மாட்டுக்கறி உணவு வழங்க ஏற்பாடாகியிருந்தது. ‘லால் மஜித் மண்டபம்’ என்ற தனியார் அரங்கில் நடந்த...

திருப்பூரில் மே தின விழா, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி,பொதுக்கூட்டம் 01052017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01052017 அன்று காலை முதல் இரவு வரை முழு நாள் நிகழ்வாக காலை தொடங்கி மாலை வரை விளையாட்டுப் போட்டிகள், மாலை பறை இசை, கலைநிகழ்ச்சி, இரவு  பரிசளிப்பு விழா மற்றும் மே தின விழா பொதுக்கூட்டம் திருப்பூர் இராயபுரம் மேற்கு திருவள்ளுவர் திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காலை 10 மணிக்கு கழக கொடியினை கழக பொருளாளர் தோழர் சு.துரைசாமி அவர்கள் கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி மே தின விழாவை துவங்கி வைத்தார்.  விளையாட்டு போட்டிகளை மாநகர செயலாளர் தோழர் மாதவன் தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் அப்பகுதி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மேடை நிகழ்வாக தோழர் காவை . இளவரசன் அவர்களின் மந்திரமா,தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. மே...

மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும் – கழக பொதுக்கூட்டம் பவானி 19052017

பவானியில், கழகப் பொதுக் கூட்டம் ! “மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும்” எனும் தலைப்பில். நாள் : 19.05. 2017 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.00 மணி. இடம்: பாவடித்தெரு,அந்தியூர் பிரிவு, பவானி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் ப.பா.மோகன், மூத்த வழக்கறிஞர், இந்திய கம்னியூஸ்டு கட்சி. மேட்டூர் T.K.R. இசைக்குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்.

கழக போராட்ட எதிரொலி – பெரம்பலூரில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பூஜை நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பார்ப்பனரை அழைத்து பூஜை செய்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து பெரம்பலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  12.05.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இதை அறிந்த பெரம்பலூர்  வட்டாட்சியர், பெரம்பலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக தலைவர் துரை. தாமோதரனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் பூஜை நடைபெறாது என்று உத்திரவாதம் அளித்ததை ஒட்டி போரட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. கடந்த வெள்ளிகிழமை அன்று பூஜை நடைபெறவில்லை.

ஜாதி சங்க மாநாட்டில் பெரியார் – வன்னியக்குல மாநாட்டில் பெரியார்

1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் பெரியார் சகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக்கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது. உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு...