Author: admin

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே

இந்தியா முழுமையும் பா.ஜ.க. பிடிக்குள் வந்திருப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை அக்கட்சி உருவாக்கி வருகிறது. உண்மையில், இந்தியாவின் 29 மாநிலங்களில் உள்ள 4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை 1516 மட்டும்தான். அதுவும் பெரும்பாலான 950 சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத், மகாராஷ்டிரா, கருநாடகம், உ.பி., ம.பி., இராஜஸ்தான் என்ற 6 மாநிலங்களில் மட்டும் இருக்கிறார்கள். 10 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. மாநிலங்கள் வாரியாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் விவரம்: தமிழ்நாடு  –     ஒருவர்கூட இல்லை சிக்கிம்    –     ஒருவர்கூட இல்லை மிசோராம் –     ஒருவர்கூட இல்லை ஆந்திரா   –     175 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 4 பேர் கேரளா    –     140  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. ஒருவர் மட்டும் பஞ்சாப்    –     117  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 3 பேர் மேற்கு வங்கம்  –     294  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 3 பேர் தெலுங்கானா    –     119  எம்.எல்.ஏ.க்களில்                      பா.ஜ.க....

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் கடுவனூரில்  மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர்  மு.நாகராசன் தலைமையில்  குழந்தைகள் பழகு முகாம்  நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இயக்கத் தோழர் அய்யனார் நிலத்தில் 23.05.2018  புதன்கிழமை அன்று  பந்தல் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டன. 5 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை (ஆண், பெண்) 90 மாணவர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளராக  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்  ஆசிரியர் சிவகாமி வருகை புரிந்து  பயிற்சி அளித்தார்.  சிவகாமி மகள் கனல், காலை முதல் மாலை வரை பேய், பிசாசு, கடவுள், மதம் போன்ற பொய்யானவைகளை  விளக்கியும் உலகம் எப்படி தோன்றியது உயிர் எப்படி தோன்றியது போன்ற அறிவியல் – விஞ்ஞானம் சார்ந்தவைகளை பற்றியும் விளக்கமாக மாணவர்களுக்கு கற்பித்தனர். பழகுமுகாமில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பொய்யான சாதி, மதம், கடவுள் சார்ந்த சிறு நாடகங்களை மாணவர்கள் நடத்தியது சிறப்பாக இருந்தன....

கர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’

கர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன், அவனது மனைவி உலகமாதேவி ஆகியோரின் அய்ம்பொன் சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் கோயிலிலிருந்து திருட்டுப் போனது. இப்போது குஜராத்திலுள்ள தனியார் அருங்காட்சியகத்திலிருந்து (அகமதாபாத் – சாராபாய் பவுண்டேஷன் காலிகோ அருங்காட்சியகம்) மீட்கப்பட்டு தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளையெல்லாம் பத்திரமாக மீட்டுத் தரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார், சிலைக் கடத்தல் தடுப்புக் குழு தலைமை காவல் அதிகாரி (அய்.ஜி.) பொன். மாணிக்கவேல் அவரது குழுவினர் ஒத்துழைப்புடன்! கண்டுபிடித்து மீட்டுவரும் இவர்கள் ஆகமமுறைப்படி சிலைகளுக்கு அருகே நெருங்கக் கூடாதவர்கள்; “சூத்திரர்கள்”. இந்த சிலையை 60 ஆண்டுகளுக்கு முன் திருடுவதற்குத் திட்டம் தீட்டித் தந்து, அதை விற்பதற்கு தரகராக செயல்பட்டது யார் என்றால், சீனிவாச கோபாலாச்சாரி என்ற பார்ப்பனர். தஞ்சை கோயில் ‘ஆகம விதிப்பபடி’ பகவானுக்குரிய கடமைகளை செய்து வரும் “பிராமண அர்ச்சகர்” உதவியோடுதான்இந்த திருட்டு நடந்திருக்கிறது. ஆகமத்தில் அர்ச்சகர் சிலை...

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘சமூக நல்லிணக்கம்’ என்ற போர்வையில் தமிழர் ஓர்மைப் பேசாமல் ஜாதி ஒழிப்புத் தளத்தில் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற் பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் சிவகங்கை கச்சநத்தம் ஜாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் வி.கே.எம். மகாலில் ஜூன் 3, 2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணிப்  பொறுப்பாளர் சாமுவேல் ராஜ், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் அமீர், வெற்றி மாறன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், சீனு ராமசாமி, மீரா கதிரவன், வழக்கறிஞர் அருள்மொழி, நவீன், மதிவண்ணன், கிரேஸ் பானு, மருத்துவர் ஷாலினி, யாழன் ஆதி, பா. இரஞ்சித், வழக்கறிஞர் ராஜகுரு, லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து: ஜாதியை எப்படி...

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

ஜுன் 23 & 24 சனி,ஞாயிறு , #பெரியாரியல்பயிலரங்கம் இடம்- #ஏற்காடு நிகழ்ச்சி நிரல் : 23-06-2018 சனிக்கிழமை காலை 10:00 மணி- தோழர்கள் அறிமுகம் காலை 11:00 மணி- தோழர் #விடுதலை இராசேந்திரன் (பெரியார் அன்றும் இன்றும்) மதியம் 1:00 மணி-உணவு இடைவேளை மதியம் 2:00 மணி-தோழர் #வீராகார்த்திக் (கடவுள் மறுப்பு தத்துவம் – பெரியார்) மாலை 3:30 மணி தேனீர் இடைவேளை மாலை 3:45. பேரா- #சுந்தரவள்ளி (உலக மயமாக்கல்-தாராளமயமான இந்திய அரசியலும்) மாலை 6:00 மணி தனிதிறமை (பேச்சுபயிற்சி,வீதி நாடகம்) இரவு 8:30 மணி உணவு இரவு 9:15 மணி கலந்துரையாடல் 24-06-2018 ஞாயிறு காலை -7:00 மணி தோழர் #பால்பிரபாகரன் (இட ஒதுக்கீட்டு வரலாறு) காலை 9:00 மணி காலை உணவு காலை 10:00மணி தோழர் #கொளத்தூர்மணி (இந்துத்துவம்- பெரியார் அம்பேத்கர்) காலை 12:00மணி தோழர் விடுதலை இராசேந்திரன் (களத்தில் திராவிடர் விடுதலைக்கழகம்) மதியம் 2:00...

தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாள் மாநாட்டில் திருமுருகன் காந்தி உரை சென்னை 30042018

தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாள் மாநாட்டில் திருமுருகன் காந்தி உரை சென்னை 30042018

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.. நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட்டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதல்...

தூத்துக்குடி படு கொலைகள் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – மேட்டூர்  23052018.

தூத்துக்குடி படு கொலைகள் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – மேட்டூர் 23052018.

  தூத்துக்குடியில் மனித உயிர்களைப்பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கர வாதத்தை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தி படு கொலைகள் செய்த மத்திய மாநில அரசுகளையும்,காவல்துறையையும் கண்டித்து 23.05.2018 அன்றூ மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச்செயலாளர் தோழர் சி.கோவிந்த ராசு தலைமை தாங்கினார்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரசெயலாளர் தோழர் அப்துல் கபூர்,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் தோழர் கருப்பண்ணன்,சேலம் மேற்கு மாவட்டத்தலைவர் தோழர் சூரியகுமார்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர் மோகன்ராஜ்,நாம் தமிழர் கட்சியின் நகரசெயலாளர் தோழர் மூர்த்தி,கழகத்தோழர் மா.சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தூத்துக்குடி சம்பவம் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார்.தோழர் குமரேசன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிந்தது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சாலை மறியல் மதுரை 22052018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சாலை மறியல் மதுரை 22052018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து 22052018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலை கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முண்ணனி,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல் துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது.

நிலம் பாழ், நீர் மறுப்பு ,நீட் திணிப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கருவேப்பிலங்குறிச்சி  28052018

நிலம் பாழ், நீர் மறுப்பு ,நீட் திணிப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கருவேப்பிலங்குறிச்சி 28052018

நிலம்,நீர் ,நீட் மறுப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கடலூர் – 28.05.2018. கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நிலம்,நீர் ,நீட் மறுப்பு விளக்கப் பொதுக்கூட்டம் 28.05.2018 அன்று கறிவேப்பிலங்குறிச்சியில் நடைபெற்றது .கழக மாவட்டச்செயலாளர் தோழர் நட.பாரதி தாசன் முன்னிலை வகித்தார். மாலை 6.00 மணிக்கு பெரம்பலூர் துரை தாமோதரன் அவர்கள் மந்திரமல்ல! தந்திரமே!! என்ற அறிவியல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தலைவர் தோழர் இளையரசன் நிகழ்ச்சியை நெறிப்படுத்த தோழர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து ஆசிரியர் அறிவழகன் தலைமை உரை ஆற்றினார். பின்பு தோழமை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் புதுச்சேரி பெ.சி.இ.தலைவர் தீனா,விழுப்புரம் மாவட்ட திவிக வெற்றிவேல்,பெரியார் சாக்ரடீஸ்,வி.சி.க திருமாறன்,த.வா.க சின்னத்துரை, பாலகுருசாமி, மற்றும் திருச்சி பெரியார் சரவணன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்டத் தோழர்கள் ராவண...

“மே 2018” “நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….

“மே 2018” “நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….

  திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மே 2018” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 💪🗣 சுயமரியாதையும் பொதுவுடைமையும்….சிறப்பு கட்டுரைகள் ⚖ நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் காவி பயங்கரவாதிகள் 🌋 தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம் 🙅‍♀ ஜாதி மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது 📚 அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள் 🗿பார்ப்பன மரபை எதிர்த்த உலகம் கொண்டாடும் நாட்டிய கலைஞர் இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழரும் முன்னாள் சுங்கத்துறை கண்காணிப்பு அதிகாரியுமான குகானந்தம் (குகன்) தாயார் ஜெயம்மாள் (86) – மே 27 அன்று முடிவெய்தினார். நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து இறுதி மரியாதைச் செலுத்தினர். கழகத் தோழர்களின் இறுதி வணக்க முழக்கங்களோடு இறுதி ஊர்வலம் புறப்பட்டு மீனம்பாக்கம் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குமின்றி அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 31052018 இதழ்

ஜனநாயகம் : அயர்லாந்தும் பார்ப்பன இந்தியாவும்

ஜனநாயகம் : அயர்லாந்தும் பார்ப்பன இந்தியாவும்

குழந்தைகள் பிறப்பது ‘கடவுளின் அருள்’ என்று மதங்கள் மக்களிடம் நம்பிக்கைகளைத் திணித்தன. ஆனால் மத நம்பிக்கைகளுக்கு மாறாக அரசுகளே குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைக் கொண்டு வந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தின. கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட அயர்லாந்து நாட்டில் செல்வாக்கு செலுத்தி வந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வராமல் அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1861ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி அயர்லாந்தில் கருக்கலைப்புகள் கூடாது என்ற தடையைத் திணித்தது. 1973ஆம் ஆண்டு அயர்லாந்து உச்சநீதிமன்றம் இந்தத் தடை சட்டவிரோதம் என்று அறிவித்து கருக்கலைப்புக்கு அனுமதித்தது. 1983இல் அயர்லாந்தில் செல்வாக்குள்ள கத்தோலிக்க பழமைவாதிகள், ‘கருக்கலைப்பு உயிர்க்கொலை – உயிரைக் காப்பாற்றுவோம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினர். அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மதவாதிகளின் கருத்தே வெற்றி பெற்றது. அரசியல் சட்டம் கருக்கலைப்புக்கு எதிராக திருத்தப்பட்டது. 2012ஆம் ஆண்டு இந்திய மரபு வழியைச் சார்ந்த அயர்லாந்தில் குடியேறிய 31 வயதுள்ள சவீதா...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது. பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) 2013ஆம் ஆண்டில் ஷேல் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 3.25 கிலோமீட்டருக்கு கீழே மண்ணுக்குள் இருக்கிற வண்டல் மண் பாறை இடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை ஷேல் எரிவாயு என்பார்கள். இதையும் மேலே கூறிய தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் எடுப்பார்கள். ஒரு கிணற்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர், 16 டேங்கர் மணல், 634 ரசாயனங்கள் கலந்து படுவேகமாக இந்த நஞ்சுக் கலவையை அந்த கிணற்றுக்குள் செலுத்தி, ஒரு செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் அந்தக் கிணற்றுக்குள் ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் 600 கிலோ அளவிலான எடை இறங்கும். இதிலிருந்து...

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

தூத்துக்குடியில் போராட்டம் தொடங்கிய முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீர பாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம் பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்...

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது மற்றும் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நடைபெற்ற போராட்டங்கள்: 1992 குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை விரட்டி அடிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலையை அமைக்க அரசாங்கத்தால் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மக்கள் ஆலையை அடித்து நொறுக்கினர். 15.7.1993 – இரத்தினகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். 1.8.1994 – தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது. தொடர்ச்சியாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. 16.1.1995 – மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கியது. 14.10.1996 – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது. 20.8.1997 – ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகேயுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள், ஸ்டெர்லைட்...

தலையங்கம் மே 22 – படுகொலைகள்

தலையங்கம் மே 22 – படுகொலைகள்

தமிழக வரலாற்றில் இரத்தக் கறைப் படிந்த நாள் மே 22. அன்னிய இராணுவம் ஒரு நாட்டில் படையெடுத்து – அந்த நாட்டு மக்களை ஈவிரக்கமின்றி கொன்றுக் குவிப்பதைப் போன்ற நிகழ்வு, தூத்துக்குடியில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகள் காவல்துறை வன்முறைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது தூத்துக்குடி காலித்தனம். ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூட வேண்டும் என்ற ஒரே குரல் தான் அங்கே அழுத்தமாக ஒலித்தது. “இந்த ஆலை இருக்கட்டும்” என்று அப்பகுதி யிலிருந்து ஒற்றைக்குரல்கூட கேட்கவில்லை. 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நச்சு ஆலையையே மூடாமல், அதன் இரண்டாவது பிரிவு தொடங்கவும் அனுமதித்த நிலையில் தான் மக்கள் போராட்டத்தைத் தீவிரமாக்கினார்கள். 99 நாட்கள்  அமைதியான போராட்டம் நடந்தது. எந்த அரசியல் கட்சிகளின் தலையீட்டையும் மக்கள் அனுமதிக்கவில்லை. மக்களின் 99 நாள் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தின. நூறாவது நாள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தவுடன் காவல்துறை தலையிட்டு பிளவை...

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை பார்ப்பன – பனியாக்களின் கட்டுப்பாட் டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி...

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடாகி வருகின்றன. ஜூன் 23, 24 நாட்களில் பயிற்சி நடக்கும். (இடம் – பின்னர் அறிவிக்கப்படும்) சமூக நீதி – வரலாறு  – கல்வித் துறை சந்திக்கும் ஆபத்துகள் குறித்து கல்வியாளர்கள், வகுப்புகளை நடத்துவார்கள். நுழைவுக் கட்டணம் : ஒருவருக்கு இருநூறு ரூபாய். (ரூ.200) முன் பதிவுக்கு : 9688310621 பெரியார் முழக்கம் 24052018 இதழ்

கடும் பெட்ரோல் விலை உயர்வு: அரசின் பகல் கொள்ளை

கடும் பெட்ரோல் விலை உயர்வு: அரசின் பகல் கொள்ளை

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஞாயிறன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரே நாளில் 35 பைசா உயர்ந்து 79.13 ஆகவும், டீசல் விலை 28 பைசா உயர்ந்து 71.32 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் தான் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என சப்பை கட்டு கட்டப்படுகிறது. ஆனால் கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 14ந்தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுகிறது.பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை தீர்மானிப்பதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. சர்வதேச சந்தை விலைக்கேற்பவே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கின்றன என்பது உண்மையானால், கடந்த 19 நாட்களாக விலை உயர்த்தப் படாதது ஏன்? தேர்தலுக்காக விலை உயர்வை தவிர்க்க முடியும் என்றால், பொது மக்களின்...

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திட சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை காவல்துறை கைது செய்தது. மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தஇந்த நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கழகம், ம.தி.மு.க., தமிழர் விடியல் கட்சி, எஸ்.டி.பி.அய்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், த.பெ.தி.க., தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. அனைவரும் கைது செய்யப்பட்டனர். இரவு விடுதலையாகும் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, மாண்டுபோன தமிழர்களுக்கும் விடுதலைப் புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர். பேராவூரணியில் : பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழக  சித.திருவேங்கடம்,  சிபிஎம் பொறுப்பாளர்கள் கருப்பையா, வேலுச்சாமி சி.பி.ஐ. பொறுப்பாளர்கள் ராஜமாணிக்கம், சித்திரவேலு, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தி.வி.க. தா.கலைச்செல்வன், மதிமுக குமார்,...

நீரவ் மோடி-அம்பானி-அதானி  கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’

நீரவ் மோடி-அம்பானி-அதானி கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’

மோடியின் நண்பரும், மோசடிப் பேர் வழியும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி, சிங்கப்பூர் பாஸ்போட் மூலம் இலண்டனில் பதுங்கியுள்ளார் என்று அமுலாக்கப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன. சமீபத்தில் அவ்வாறு அடுத்தடுத்து உலுக்கிய ஊழல்கள் நீரவ் மோடியின் ரூ 11,700 கோடி வங்கி மோசடியும் ரோடோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் 800 கோடி ஊழலும் ஆகும்.இது வெளிப்பட்ட ஊழல்தான் இன்னும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ரோடோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, நீரவ் மோடிக்கு சளைத்தவர் அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.கோத்தாரி அடித்த கொள்ளை ரூ.800 கோடியல்ல; ரூ.3695 கோடி என்பதும் அம்பலமாகி இருக்கிறது.இந்த இரு ‘கனவான்களும்’ வங்கிகளை எவ்வாறு “ஆட்டையை” போட்டார்கள் என்பது குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் வெளிவராத செய்தி ஒன்று உண்டு. வங்கிகளின் பணத்தை அதாவது மக்களின் பணத்தை “ஆட்டையை”...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. ஒரு பேராபத்தை தமிழகம் எதிர்நோக்கியிருக் கிறது. வரலாற்றிலே இவ்வளவு பெரிய பேராபத்தை தமிழகம் எப்போதாவது சந்தித்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாத் தளங் களிலும் தமிழகம், தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதுகுறித்துதான் இந்த மண்டல மாநாட்டிலே அறிவார்ந்த தலைவர்கள் பேசவிருக்கிறார்கள். அதிலே, தமிழகத்தின் நிலம் எப்படிப் பாழ்படுகிறது, வாழ முடியாத ஒரு பகுதியாக தமிழ்நாடு எப்படி மாற்றப்படுகிறது, இதனால் என்ன ஆகும் என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஒரு மனித இனத்திற்கு வாழ்வதற்கு அடிப்படை யானது மண். மண்தான் மனித வாழ்வை வடிவமைக் கிறது. ஒரு...

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

ஊர்திப் பயணத் தில் முழுமையாகப் பங்கேற்றத் தோழர்கள் : இரண்யா, கனலி, பரத், விஜி, மாரி அண்ணன், கொளத்தூர் குமார், புகழேந்தி, பாலு துரை, சரஸ்வதி, சுதா, கிருஷ் ணன், பிரபாகரன், கனல் மதி, சாமிநாதன், சங்கர், செல்வேந்திரன், இராசேந்திரன், தம்பி துரை, பிரதாப், பென்னட், அண்ணா துரை, சிவகாமி, முத்துக் குமார், செல்வம், அம்ஜத் கான், மலர், சங்கீதா, யாழிசை, யாழினி, மீனா, முத்துப்பாண்டி, சஜினா, சௌந்தர், சுசீந்திரன், திலீபன், ஜென்னி, மதிவதனி, கதிரவன், இளமதி, யாழினி, சூலூர் பன்னீர் செல்வம், ஜோதி, தமிழ்ச் செல்வன், அறிவுமதி, இராமச்சந்திரன், யுவராஜ், சத்தியராஜ், வேணுகோபால், கதிர்வேல், இரத்தினசாமி, விக்னேஷ், குமரேசன், பால் பிரபாகரன், துரைசாமி, கண்ணன், அய்யப் பன், சக்திவேல், கார்த்திக், சந்திரசேகர், தினேஷ், விஜயகுமார், கோபி, கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், . பறைக்குழுத் தோழர்கள் (மேட்டூர் காவேரிகிராஸ் பகுதி) : சக்திவேல், கார்த்திக், சந்துரு, விக்னேஷ், ஆர்.எஸ். விவேக்,...

ஏழுமலையானை ‘கைவிட்ட’ அர்ச்சகர்கள்

ஏழுமலையானை ‘கைவிட்ட’ அர்ச்சகர்கள்

பா.ஜ.க.-தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து  ‘அவாளு’க்குள் மோதல் கோயிலில் கடவுளிடம் நெருங்க வும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் ‘பிராமணர்கள்’ மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற ‘ஜாதியப் பாகுபாடு’ இப்போதும் ‘ஆகம விதிகள்’ என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் ‘பாகுபாட்டை’ உறுதிப்படுத்தும் ‘ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது. ஆகமவிதிகளின்படி பல கோயில் களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதி களை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்று களுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்ட தோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது.  அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப் பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம்...

எஸ்.வி. சேகரைக் கைது செய் காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை-கைது

எஸ்.வி. சேகரைக் கைது செய் காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை-கைது

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி….. சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தைத் தோழர்கள் முற்றுகையிடும் பேராட்டத்தை நடத்தி கைதானார்கள்.  கழகத் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சென்னை எழும்பூரில் 16.05.2018 அன்று மாலை 4 மணிக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.வி.சேகரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எஸ்.வி.சேகரை போல் வேடமணிந்து, கை விலங்கு பூணூலுடன் தோழர்கள் வந்தனர். எஸ்.வி.சேகரின் உருவப்படம் எரிக்கப்பட்டது. தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்),  ந.அய்யனார்  (தலைமைக் குழு உறுப்பினர்),  வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்),  இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்),  ஏசுகுமார்(வடசென்னை மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர்கள் 50 பேர் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு புதுப்பேட்டை சமூகநலக் கூடத்தில் அடைக்கப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். போராட்டம் நடக்க இருப்பதை அறிந்த காவல்துறை ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் நள்ளிரவில் ...

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி

மாணவர்கள் யு.பி.எஸ்.சி. நடத்துகிற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள். முதலில் பிரிலிமினரி என்ற தேர்வு. அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மெயின்ஸ் என்ற தேர்வு. அதன் பிறகு நேர்காணல். இந்தத் தேர்விலும் நேர்காணலிலும் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்… என பல்வேறு மட்டத்திலான பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தபிறகு அந்தந்த மாநிலங்களில் அந்தந்தத் துறைகளில் நியமிக்கப்படு கிறார்கள். அதாவது, தேர்வு எழுதிப் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் கிடைத்த உரிமையின் அடிப்படையில்  அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகிறார்கள். இந்த வழிமுறையின்படி, எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேர்வு முடிந்த பிறகு அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகலாம். இதன் மூலம்தான் அட்டவணை சாதியினரும், (மிக அரிதாக)  பழங்குடியினரும் இந்த உயர் பதவிகளை எட்ட முடிகிறது. மோடி அரசு இப்போது இதில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டு, அதை...

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம் ! தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை விடுதலை செய் ! தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை கைவிடு ! நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்களை இழிவு படுத்திய பார்ப்பான் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் காவல் துறை, நீதிமன்றம் உத்தரவிட்டும் சோடா பாட்டில் வீச்சு சமூக விரோதி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசின் காவல்துறை, வழக்குகளை கண்டு அஞ்சாமல், தலைமறைவாகாமல் காவல்துறை விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் பொது வெளியில் மக்களுக்காக இயங்கி வரும் தலைவர் ஆவார். எப்போதோ போடப்பட்ட வழக்கில் இப்போது அதுவும் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற நேரத்தில் தடுத்து கைது செய்வதற்கு என்ன அவசர அவசியம் வந்துள்ளது? மக்களுக்காக போராடுபவர்களையே குறிவைத்து இந்த காவல்துறை கைது செய்கிறது...

திருப்பூரில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 24052018

திருப்பூரில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 24052018

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் 24052018 மாலை 2.30 மணி அளவில் அரச பயங்கரவாத கூட்டமைப்பு சார்பாக ச காங்கேயம் சாலை சிடிசி கர்னரில் தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம் தோழர்கள் அனைவரும் வரவும் தொடர்பு எண் 9842248174

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதி வழியில் தன்னெழுச்சியாக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும், கண்டித்தும்.தமிழக முதல்வரை உடனே பதவி விலக வலியுறுத்தியும்,இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, மற்றும் இயக்குனர்,திரு, பாரதிராஜா. அவர்களின் தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகியவற்றின் சார்பில் நாளை (24-05-2018) வியாழன், மாலை 3 மணியளவில், சேப்பாக்கம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது,...

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து சென்னையில் மறியல் 22052018

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து சென்னையில் மறியல் 22052018

 சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட கழகத் தோழர்கள் காவல்துறையால் குண்டு கட்டாக இழுத்து செல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களாக போராடி வரும் மக்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையை ஏவி துப்பாக்கி சுடு நடத்தி 10 பேர்களுக்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து…. சென்னை அண்ணா சாலையில் 22.05.2018 மாலை 6.30 மணிக்கு தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்)அவர்கள் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தோழர்கள் அனைவரும் புதுப்பேட்டை சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தூத்துக்குடி  அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் 23052018

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் 23052018

23052018  மாலை பள்ளிபாளையத்தில்…! தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம். பங்கேற்ற அமைப்புகளுக்கு நன்றி. •புரட்சிகர இளைஞர் முன்னணி. •மகஇக. •SDPI. •சிபிஐ எம்-எல். •தமிழ்ப்புலிகள். •தமிழக தேசிய கட்சி. தொடரட்டும் அரச வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு.

தமிழ்நாட்டு அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு -திவிக கடும் கண்டனம்

தமிழ்நாட்டு அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு -திவிக கடும் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு திவிக கண்டனம்: தங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலை வேண்டாமென்று நூறு நாட்களாக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நூறாவது நாளாக இன்று முற்றுகைப் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்திருந்தார்கள். தமிழக அரசு துப்பாக்கிச் சூட்டில் 9 உயிர்களைப் பலி கொண்டு விட்டது. நூறு நாட்கள் போராட்டத்தின்போது மக்களை சந்தித்துப் பேசாத இந்த அரசு, மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்று 9 உயிர்களைப் பலி வாங்கியதற்குப் பிறகு நியாயம் பேசத் தொடங்கியிருக்கிறது. வன்முறை பிரச்னைக்கு தீர்வாகாது என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது தமிழக அரசின் ஆதரவோடு இங்கே வன்முறைகள் கண்மூடித் தனமாக கட்டவிழ்க்கப்பட்டன. அதற்கு அரசும் துணை போனது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. இப்போது நடப்பது ஒன்றும் அரசியல் போராட்டம் அல்ல. தூத்துக்குடியில் வாழ்கின்ற மக்கள் நடத்தும் போராட்டம். 20,000...

பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி சேகரைக் கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை 16052018

பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி சேகரைக் கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை 16052018

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக…இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் தலைமையில்…. உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குப் பிறகும் “காவல்துறை உறங்குவது ஏன்?” பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய… எஸ்.வி சேகரைக் கைது செய்க…. சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை 16.05.3018 (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு….வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகம்… தொடர்புக்கு : 7299230363

ஆலயங்களில் கேட்கிறது  ஆசிஃபாவின் குரல்  – மனுஷ்ய புத்திரன்

ஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல் – மனுஷ்ய புத்திரன்

ஆசிஃபாவை கோயில் பிரகாரத்தின் தூணில் கட்டி வைத்து மயக்க மருந்து கொடுத்து உணவளிக்காமல் வரிசையாக வன்புணர்ச்சி செய்தவர்கள் பிறகு ஏன் அவளது பிஞ்சுக் கால்களை முறித்தார்கள்? ஏன் அவளது தலையில் க.ல்லைப்போட்டுக் கொன்றார்கள்? சிறுமியாக இருந்தாலும் அவள் ஒரு பெண் அதுவும் அழிக்கப்பட வேண்டிய ஒரு இனத்தின் பெண் நாடோடியாக மேய்ச்சல் நிலங்களில் நிராதரவாக தூங்குபவள் அவளை வேட்டையாடுவது சுலபம் பெரும்பான்மையினால் வெகு சுலபமாக துடைத்தழிக்கக்கூடிய சிறுபான்மையினள் n இது மட்டும்தானா அல்லது இன்னும் காரணங்கள் இருக்கின்றனவா? n நம் தெய்வங்கள் எப்போதும்போல கண்களற்றவையாக இருக்கின்றன காதுகளற்றவையாக இருக்கின்றன இதயமற்றவையாக இருக்கின்றன தன் காலடியில் ஒரு சிறுமி கூட்டாக வன்புணர்ச்சி செய்யபடும்போதும் அவை மௌனமாக உறங்கிக் கிடக்கின்றன ஆனால் இந்த தேசம் இப்போது தெய்வத்தின் பெயரால் ஆளப்படுகிறது n குற்றவாளிகளை விடுவிக்கும்படி தேசியக்கொடியுடன் ஊர்வலம் போகிறார்கள் தேச பக்தர்கள் ஆசிஃபா ஒரு நாடோடி அவளது இனக்குழுவின் குதிரைகளை அவர்கள் செல்லுமிடமெல்லாம் நேர்த்தியாக...

சிலை உடைப்பு அரசியல் பெரியார் யுவராஜ்

சிலை உடைப்பு அரசியல் பெரியார் யுவராஜ்

உலகெங்கும் பல தலைவர்களுக்கு சிலைகளும், பல சம்பவங்கள் நடந்ததற்கு அடையாளமாய் நினைவிடமும் அமைக்கப் பட்டுள்ளன. ஆக சிலைகளும் நினைவிடங்களும் நினைவை போற்றுவதற்கும், நினைவுபடுத்திக் கொள்வதற்கும், அடுத்த தலைமுறைக்கு அதை சொல்வதற்கும் ஏற்படுத்தப்படுவதே. இதே போன்று புரட்சியாளர்களுக்கும் சிலைகள் வைக்கப்பட் டுள்ளன. அவை வழிபடுவதற்காக வைக்கப்பட்டது அல்ல. அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படுவதாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் குஷாணர்கள் மற்றும் ஹூணர்களால் மத்திய ஆப்கானிஸ்தானின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியான் பள்ளத்தாக்கில் உலகிலேயே உயரமான நிற்கும் இரு புத்தர் சிலையை அவர்கள் அமைத்திருந்தார்கள். முதல் சிலை 55 மீட்டர் உயரமும் இரண்டாம் சிலை 37 மீட்டரும் கொண்டதாகும். கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது. இப்பகுதி முழுவதும் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட குகைகளில் புத்த துறவிகள் வாழ்ந்து வந்தனர். கிபி 11 நூற்றாண்டில் கஜினி முகமது மேற்கு...

வரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள்  புலவர் இமயவரம்பன்

வரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள் புலவர் இமயவரம்பன்

பண்டைய நம் தமிழகத்தில் சாதி, குலம், வருணம் என்பன போன்ற சொற்கள் தமிழ் மொழியில் இல்லாமையால் அவை தமிழ்நாட்டிலும் இருந்ததில்லை என்பது வெள்ளிடை மலை. இடைக்காலத்தில்தான் பார்ப்பனர் தமிழர் களிடையே நால்வகைச் சாதியினை நாட்டினர். பின்பு நான்கினை நாற்பதாக்கி அதன்பின் நாலாயிரமாக வளர்த்துவிட்டனர். இப்பார்ப்பனர்கள் இத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழர்களிடையே ஏற்றத் தாழ்வினைக் கற்பித்தும் ஒரு சாதியினரைப் பிரிதோர் சாதியாரோடு மோதவிட்டும் வேடிக்கை பார்த்ததோடு அல்லாமல் அதனால் பலனும் அனுபவித்து வந்துள்ளனர். இவற்றில் ஒன்றுதான் “வலங்கை இடங்கை” சாதி பாகுபாடுகளும் அதன் காரணமாக இவ்விரு சாதிக் குழுவினர்களுக்குள்ளும் ஏற்பட்ட சண்டைகளும் ஆகும். இந்தப் பிரிவினை எப்போது ஏற்பட்டது? எவ்வாறு தோன்றின? என்பவைகள் பற்றி திட்ட வட்டமாகக் கூறுவதற்கு இல்லை. ஆனால் இந்தப் பாகுபாடுகள் தமிழகத்தில் இருந்து இருக்கின்றன என்பது மட்டும் கல்வெட்டுக் களாலும், செப்பேடுகளாலும், சில இலக்கியச் செய்யுள்களாலும், ஏன்? ஆங்கிலேயர்களின் குறிப்புக்களாலும் அவர்கள் கால நீதிமன்றத் தீர்ப்புகளாலும் அறிகின்றோம்....

சமயச் சடங்குகளால் கொல்லப்படும் நதிகள்

சமயச் சடங்குகளால் கொல்லப்படும் நதிகள்

மஹாளய அமாவாசை தினத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கங்கை மகா கும்பமேளா விழாவுக்காக அலகாபாதில் கங்கை – யமுனை – சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர் கோடிக் கணக்கான பக்தர்கள். இதனை விண்வெளி யிலிருந்து படம்பிடித்த ஐகோனோஸ் செயற்கைக்கோள், ‘உலக வரலாற்றில் அதிகமாகத் திரண்ட மனிதர்கள் கூட்டம்’ என்று வர்ணித்தது. அன்றைய தினம் மட்டுமே சுமார் மூன்று கோடிப் பேர் ஆற்றில் சடங்குகள் செய்து, புனித நீராடினார்கள். அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கோடிப் பேர் அங்கு நீராடினார்கள். விழாவுக்குப் பிறகு ஆற்றின் இயற்கையான உயிர்ச்சூழல் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இங்கு மட்டுமல்ல, அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி, காசி – கங்கை, கயா, யமுனை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியிலும் இதுபோன்று நம்பிக்கை சார்ந்த புனித விழாக்கள் மற்றும் சடங்குகள் ஏராளம் நடைபெறுகின்றன. தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். இங்கே ஓரளவு மாசுபடாத...

மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்!

மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்!

பெரியாருக்கு 19.12.1973 அன்றிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 20.12.1973 அன்று பொது மருததுவமனையில் சேர்க்கப்பட்டார்கள். 21.12.1973 அன்று திருவண்ணாமலையில் பெரியார் பேசுவதாக இருந்தது. 30ந் தேதி மாலை சுற்றுப்பயணத்தை எல்லாம் இரத்து செய்து விடலாமே என பெரியார் அவர்களிடம் கேட்டேன். ‘ஏன்?’ எனக் கேட்டார். “அய்யா அவர்களுக்கு உடல்நலம் சரியாக இல்லையே. டாக்டர்கள் பயணம் செய்யக் கூடாது எனச் சொல்லுகிறார்களே. அதனால்தான்  கேட்கிறேன்” எனச் சொன்னேன். எவ்வளவு நெருக்கடியிலும் நிகழ்ச்சிகளை இரத்து செய்ய விரும்பாத பெரியார், “கூட்டத்தில் பேசப் போவது நான் தானே! நீயோ, டாக்டர்களோ அல்லவே? போய் வேலையைப் பார்” எனக் கடுமையாகச் சொல்லிவிட்டார்கள். பெரியாருடைய முடிவுக்கே காரணமான நோயில் சிக்கி இருந்தபோதுகூட மரணத்தைச் சந்திக்கும் மூன்று நாட்களுக்கு முன்புகூட தன் சுற்றுப் பயணத்தைத் தொடர்வதில் எவ்வளவு கருத்தாக இருந்தார்கள் என்பதைப் பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைவரும் நினைவில் நிறுத்த  வேண்டும். – விடுதலை மேலாளர் என்.எஸ். சம்பந்தம், ‘உண்மை’...

பா.ஜ.க.வின் பாலியல் குற்றங்கள்  – ஒரு தொகுப்பு  – ‘கீற்று’ நந்தன்

பா.ஜ.க.வின் பாலியல் குற்றங்கள் – ஒரு தொகுப்பு – ‘கீற்று’ நந்தன்

உலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா? திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா? ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ – பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா? இந்துத்துவா – பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல்...

பெரியார் – உ.வே.சா. சந்திப்பும்  சொல்லாடலும்

பெரியார் – உ.வே.சா. சந்திப்பும் சொல்லாடலும்

தமிழ்ப் புலவர்களை, மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல; தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல. இன்றைய புலவர்கள், தமிழ் அபிமானிகள் தியரிடிகல், புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் (அனுபவ) தமிழ் அறிவு உடையவன் என்று கருதியிருப்பவன். (பெரியார்)   ஓர் இலக்கியச் சர்ச்சை ஒரு பக்கம் தமிழகத்தில் உயிர்ப்பான மிகப் பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மறுபக்கத்தில் அதற்குக் குறைவில்லாமல் இலக்கியச் சர்ச்சைகளும் நடந்துவருகின்றன. அதிலொன்று கடந்த பிப்ரவரி மாதம் காலச்சுவடு இதழில் வெளிவந்த ப.சரவணனின் “ஐயருக்கு எதிரான அபவாதம்” என்ற கட்டுரை. இந்தக் கட்டுரையின் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான ஒரு பிரச்சினையை, பொ.வேல்சாமி தனது முகநூல் பக்கத்தில் கிளப்பினார். மார்ச் மாதம் காலச் சுவடு இதழில் ப. சரவணனும் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான கேள்விக்கு விரிவான எதிர்வினையை ஆற்றியுள்ளார். அத்துடன் அவ்விதழின் வாசகர் கடிதப் பகுதியில் பொ.வேல்சாமியும், பா.மதிவாணனும் பார்ப்பனர்-வேளாளர் கூட்டு மற்றும் விலகல், கருத்து நிலை சார்பு,...

பெரியார் பங்கேற்ற திரைப்பட விழா

பெரியார் பங்கேற்ற திரைப்பட விழா

1972இல் ‘சூரிய காந்தி’ என்னும் படத்தின் நூறாவது நாள் விழா நிகழ்ச்சியிலே படத்தில் நடித்த கலைஞர்களுக்குப் பரிசு வழங்குவதற்கு பெரியாரை அழைத்தார்கள்  – படத் தயாரிப்பாளரும், டைரக்டரும். வழக்கம்போல பெரியார் நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே சென்றார். பெரியார் எப்போதும் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு வருபவர்களில் இருந்து சற்று மாறுபட்ட கூட்டம் அது. சினிமாக் கலைஞர்களைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம் பாதியும், சினிமா விழாவில் பெரியார் என்ன பேசப் போகிறார் என்பதைக் கேட்க வந்த கூட்டம் பாதியுமாக அரங்கு நிறைந்திருந்தது. தமிழக முதல்வர் கலைஞர் விழாவிற்குத் தலைமை வகித்தார். வரவேற்புரை நிகழ்த்தியவர் பேசும்போது, ‘ஒளரங்கசீப்பைப்போல கலையை வெறுக்கும் பெரியார் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டார். பெரியார் பேசும்போது, “நான் சினிமாவுக்கோ கலைகளுக்கோ எதிரியல்ல. சினிமா மக்களுக்கு அறிவு வர, தெளிவு பெறப் பயன்படவில்லையே என வருந்துகிறவன் நான். சினிமா உலகிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. போல் அறிவுப் பிரச்சாரம் செய்தவர்கள்...

நிதி ஒதுக்கீடு:  தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது ட பேராசிரியர் ஜெயரஞ்சன்

நிதி ஒதுக்கீடு: தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது ட பேராசிரியர் ஜெயரஞ்சன்

15ஆவது நிதிக் குழுவின் கொள்கைகளால் தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை நடுவண் ஆட்சி வஞ்சிக்கப்படுவதை சான்றுகளுடன் நிறுவுகிறது இந்த ஆய்வு. 15ஆவது நிதிக் குழுவின் விவகாரங்கள் இப்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது ஏன் என்று பார்ப்போம்… இந்த நிதிக்குழுவுக்கு இடப்பட்ட பணிகள் அல்லது வழிகாட்டுதல்கள்தான் இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த நிதிக் குழுவின் வழிகாட்டுதல்கள் பற்றி வன்மையாகக் கண்டிக்காத தலைவர்களே இல்லை. இவ்வளவு பெரிய எதிர்ப்புக் குரல் கிளம்பியது ஆச்சர்யமான ஒன்றுதான். இது ஒருபுறமிருக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு இதனால் தனது பெயர் இன்னும் மோசமாகி வருவதை உணர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை; மார்ச் 28ஆம் தேதியன்று அக்கட்சியின் முக்கியமான தலைவரான ராம்தேவ் நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என் .கே.சிங்கைச் சந்தித்துத் தென்மாநிலங்களில் எழும்பும் கவலைக் குரல்கள் பற்றி விவாதித்தாக ஒரு செய்தியை இந்து பத்திரிகை வெளியிட் டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் மற்றுமொரு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘தென்மாநிலங்கள் இதுகுறித்து கவலை...

கிராமப்புற மாணவர்களை பலி வாங்கிய ‘நீட்’

கிராமப்புற மாணவர்களை பலி வாங்கிய ‘நீட்’

‘நீட்’ தேர்வு முறையினால் தமிழ்நாட்டில் கிராமப்புறத்திலிருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒற்றைச் சாளர முறை வழியாக (ளுiபேடந றiனேடிற ளலளவநஅ) 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக மாணவர்கள் 4,225. நீட் தேர்வு அமுலுக்கு வந்த 2017இல் இது 3546ஆக குறைந்து விட்டது. அதே நேரத்தில் பிற மாநிலத்து மாணவர்கள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 2016இல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிற மாநிலத்தவர் 518; ‘நீட்’ தேர்வு முறையில் 2017இல் சேர்ந்த பிற மாநிலத்தவர் எண்ணிக்கை 715 ஆக அதிகரித்து விட்டது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்கள். பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை ‘நீட்’ தேர்வினால் குறைந்துவிட்டது. அரியலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்கு முன் 9 மாணவர்களும், நீட்டுக்குப் பிறகு 4...

அம்பேத்கர் தந்த எச்சரிக்கை!

அம்பேத்கர் தந்த எச்சரிக்கை!

சமூக சமத்துவம் மறுக்கப்பட்டால், ஜனநாயகக் கட்டமைப்பையே மக்கள் தகர்த்து விடுவார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்ட அவை 9.12.1946 அன்று முதன்முதலாகக் கூடியது. 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்டம் அரச மைப்புச் சட்ட அவையால் இறுதி செய்யப் பட்டது. 26.11.1949 அன்று நிறைவேற்றப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாள்கள் – அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட எடுத்துக் கொண்ட காலம் ஆகும். 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்ட அவையின் விவாதங்கள் முடிந்தபின், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இறுதியாக உரை நிகழ்த்தினார். அப்போது, எதிர்காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப் படுத்துவது குறித்த தன் கவலையையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தினார். 1994இல் மகாராட்டிரா மாநில அரசு ஆங்கிலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதன்மையான கர்த்தா டாக்டர் அம்பேத்கர் என்ற தலைப்பில், அம்பேத்கர் எழுத்துகளும் பேச்சுகளும் நூல் வரிசையில் 13ஆவது தொகுதியாக வெளியிடப்பட்ட நூலில் உள்ள...

ஊழல் புகாரில் உச்சநீதிமன்றம்

ஊழல் புகாரில் உச்சநீதிமன்றம்

இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களை சந்தித்தது, பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சைகள் அடங்க வெகு நாட்களாகலாம். இந்த நான்கு நீதிபதிகளின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு செயல் என்று ஒரு புறமும், நான்கு நீதிபதிகள் மரபை மீறி, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்றும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. இதில் உள்ள நியாயங்களை அலசுவதற்கு முன்னால் நாம் அடிப்படையாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.   லார்ட்ஷிப் என்று என்னதான் நாம் அழைத்தாலும், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்பதை நாம் மறந்து விடக் கூடாது.   எல்லா மனிதர்களுக்கும் இருக்கக் கூடிய ஆசா பாசங்கள், அபிலாஷைகள், விருப்பு வெறுப்புகள், பேராசைகள் ஆகிய அனைத்தும் இந்த நீதிபதிகளுக்கும் இருக்கும். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள சூழலை நாம் அலசிப் பார்த்தால், அரசியல், நிர்வாகம், ஊடகம், அதிகார மையம் என்று அனைத்து தரப்பிலும்...

ஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா? ர. பிரகாசு

ஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா? ர. பிரகாசு

சென்னை அணி சூதாட்டப் புகாரில் சிக்கி ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டபோது இந்தப் பார்ப்பனர்களுக்கு எந்த அவமானமும் ஏற்படவில்லை. கிரிக்கெட் இங்கு விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தால் தமிழ் நாட்டில் இப்போது நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பு இவ்வளவு தீவிரமாக இருந் திருக்காது. தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோய்க் கொண் டிருக்கிற வேளையில் இப்படியொரு சூதாட்டம், இப்படியொரு போலிப் பக்தியூட்டும் வெறியாட்டம் இங்கே தேவைப்படுகிறதா என்பதுதான் ஐபிஎல் எதிர்ப்பின் நோக்கமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் வீதிக்கு வந்து போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. நமக்குத் தெரிந்த வரையில் வீதிக்கு வராத கட்சி பாஜக மட்டும்தான். வீதிக்கு வராத ஒரே கூட்டம் பூணூல் உரிமைக்காக வீதிக்கு வந்த பார்ப்பனக் கூட்டம் தான். காவிரி உரிமைக்கான போராட்டம் மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களை...

‘பாலுறவு வன்முறை’யும்  மத உரிமைப் போராட்டம் தானா?

‘பாலுறவு வன்முறை’யும் மத உரிமைப் போராட்டம் தானா?

உலகையே உலுக்கியிருக்கிறது ஜம்முவில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமியின் கோரக் கொலை. கூடாரமடித்து குதிரை மேய்க்கும் தொழிலைச் செய்யும் இஸ்லாமிய ‘பேக்கர்வால்’ சமூகத்தைச் சார்ந்த ஆசிஃபா, ஜம்மு இந்து பண்டிட்டுகளால் (பார்ப்பனர்களால்) கடத்தப்பட்டு, கோயில் கர்ப்பகிரகத்துக்குள் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பிறகு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கான காரணம், ஜம்மு பகுதி ‘இந்து’க்களுக்கே சொந்தமானது; அங்கே இஸ்லாமிய நாடோடி சமூகம்  கூடாரமடிக்கக் கூடாது என்று மிரட்டுவதற்குத்தான். ஜனவரி மாதம் நடந்த இந்தப் படுகொலையை மூடி மறைக்கும் முயற்சிக்கு பா.ஜ.க. தனது அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறையின் புலனாய்வுக் குழு தொடர்ந்து மிரட்டப்பட்டு, பலமுறை குழு மாற்றியமைக்கப்பட்டு, பிறகு தீபிக்காசிங் என்ற வழக்கறிஞர், நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணையை நடத்த வேண்டும் என்று தொடர்ந்த பொதுநல வழக்கிற்குப் பிறகுதான் நீதிமன்றம் தலையிட்டு, மிரட்டல்களை நிறுத்தியது. வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரையே ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான ஐம்மு வழக்கறிஞர் சங்கம்...