Author: admin

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி ஏதோ பெரியார் தான் சூத்திரன், சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுள்ளார் என்று சொன்னார்கள். ஆனால் 1996 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பிலேயே சூத்திரன் என்று கூறுகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை முடக்கு வதாகவே பாஜ.க. ஆட்சி கல்விக் கொள்கை இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கினார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ஆரியர்கள் வடக்கில்தான் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தெற்கில் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நடத்தினார்கள். அந்த பண்பாட்டு படையெடுப்புக்கு எதிர்ப்பாக பண்பாட்டுப் புரட்சியை பெரியார் செய்தார். பார்ப்பன எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பு. பார்ப்பன பண்பாடு என்பது ஒவ்வொரு துறைதோறும் நம்மை அடிமைப்படுத்திய, கேவலப்படுத்திய பண்பாடு. நாம் கட்டிய கோயிலில் நமக்கு வழிபாடு நடத்தக்கூட உரிமை இல்லை என்று சொன்னார்கள். பெரியார் நடத்திய கடைசிப் போராட்டம் இதற்காகத்தான். பெரியார் நடத்திய போராட்டங்களில் நாத்திகப் போராட்டங்கள் இரண்டு மட்டும்தான். விநாயகர் சிலையை உடைத்தார், இராமர்...

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்கும் அதுஅதிகாரத்தைக் கைப்பற்று வதற்கும் உதவியது என்று ‘தினமலர்’ நாளேடு எழுதியுள்ளது. அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமி விவகாரம், மத்தியில் தற்போது ஆளும் பா.ஜ.க.,வுக்கு, 1996 முதலே, ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் முக்கிய பிரச்னையாக அமைந்திருந்தது. மேலும், ஒவ்வொரு தேர்தலிலும், இந்தப் பிரச்னையை முன்வைத்து செய்த பிரச்சாரங்களால், அந்தக் கட்சி படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. ‘அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும்’ என, பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி உருவாக்கிய இயக்கம், ‘கோவில் கட்ட வேண்டும்’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பில் முடிந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில், இந்த விவகாரம், பா.ஜ.க.,வுக்கு தேர்தல்களில் மிகப் பெரிய உதவியை செய்துள்ளது. கடந்த, 1980களின் இறுதியில் மற்றும் 1990களின் துவக்கத்தில், ஒரு சிறிய கட்சி என்ற நிலையில் இருந்து, மிகவும் முக்கியமான கட்சியாக பா.ஜ.க., உருவெடுக்க ராமர் கோவில் உதவியுள்ளது. கடந்த, இரண்டு தேர்தல்களில்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொது அமைதி கருதி வரவேற்றாலும், தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் (நவம். 11, 2019) தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த ஏடு எழுப்பியுள்ள கேள்விகளின் சுருக்கமான தமிழ் வடிவம்: 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் இராமன், சீதை சிலைகள் போடப்பட்டதையும் மசூதியை இடித்ததையும் சட்ட விரோத நடவடிக்கைகளாக தீர்ப்பு கூறியிருப்பது மதச்சார்பின்மை கொள்கைக்கு உளவியலாக வலுசேர்க்கிறது என்றாலும் உச்சநீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்ததோடு இந்துக்களுக்கே அந்த இடம் உரிமையானது என்று தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தாலும் தீர்ப்பு அதை நியாயப்படுத்தியிருக்கிறது. நிலத்துக்கான உரிமை கோரி இரண்டு சமூகங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. வழக்கில் இணைத்துக் கொண்ட ஒரு சமூகம், திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கியது. மசூதியை இடித்தது விசுவ இந்து பரிஷத். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது பாரதிய ஜனதா. இந்த வன்முறையை அரங்கேற்றிய பிரிவு 1989ஆம் ஆண்டு ‘குழந்தை...

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் துறை அறிக்கையை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தொல்லியல் அறிக்கை ஏற்கனவே ஆய்வாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளரும் பல வரலாற்று நூல்களை எழுதியவருமான டி.என். ஜா, இந்த தொல்பொருள் ஆய்வின் நம்பகத் தன்மைக் குறித்து ‘தி வயர்’ இணைய ஏட்டுக்கு ஏற்கனவே பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. அயோத்தியில் இந்த அகழ்வாய்வை நடத்தியபோது தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்தவர் பி.பி. லால். அவர் வெளியிட்ட முதல் ஆய்வு அ றிக்கையில் பாபர் மசூதிக்கு கீழே நடத்தப்பட்ட அகழ்வாய்வில் “தூண் தளங்கள்” இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு இந்தத் ‘தூண் தளங்களே’ ஆதாரம் என்று சங்பரிவாரங்கள் கூறி வந்தன) பிறகு 1989ஆம் ஆண்டில் ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில்’ (அய்.சி.எச்.ஆர்.) இது குறித்து அவர் ஒரு கட்டுரை...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது  சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு தானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்து வைத்த வாதங்கள் அத்தனையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது  என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949 ஆம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்...

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தமிழரசி-கொளத்தூர் குமார் ஆகியோரின் மகன் இனியன், காவலாண்டியூர் கலைச்செல்வி- விஜயகுமார்  ஆகியோரின் மகன் வளவன், அக்டோபர் 5, 6 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) நடத்திய மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைத்துப் பாராட்டினார். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள மத அடையாள சுவரொட்டிகளை அகற்றுமாறு 16.10.2019 அன்று அரசு போக்குவரத்து கழகக் கோவை மாவட்ட மேலாண் இயக்குநரைச் சந்தித்து கோவை திவிக சார்பில் நேருதாஸ் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர், அப்படி இருந்தால் தவறு தான் நிச்சயம் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  உடன் கலந்து கொண்ட தோழர்கள்: ஃபெரோஸ், வேல்முருகன் புஇக, இராவணன் தமிழ்ப் புலிகள்,  அஸ்வின் புஇமு,  ஜின்னா. பெரியார் முழக்கம் 07112019 இதழ்

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழக  கல்லக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 02.11.2019 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சங்கராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராசு, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், ந. வெற்றிவேல், அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சமுதாய (குமுகாய) மக்களும் நுகர்வோராக வணிகம் செய்கின்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையில் எழுதப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றக்கோரி மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு  சாதி பெயர் எழுதப் பட்டுள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம்  சாதி பெயரை அகற்றக்கோரி வேண்டுகோள் வைப்பது என்று மாவட்ட கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையிலிருந்து...

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான நிமிர்வோம் 11ஆவது வாசகர் வட்ட சந்திப்பு, தலைமை அலுவலகத்தில் 03.11.2019 அன்று மாலை 5.30 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தேன்ராஜ் மற்றும் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத்தின் நோக்கம் மற்றும் இனி வரும் காலங்களில் வாசகர் வட்ட சந்திப்புகள் குறித்து, நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்கவுரை யாற்றினார். அதைத் தொடர்ந்து, வாசகர் வட்டத்தின் முதல் அமர்வில், ‘இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் விளைவித்த கலகம்’ என்ற தலைப்பில் அருண்குமார், ‘உயர்ஜாதி – ஏழை இடஒதுக்கீடு குறித்து’ தினேஷ்குமார், ‘சாதியக் கொடுமை யும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளரும் கழகத் தோழருமான பிரகாசும் உரையாற்றி னார்கள். இரண்டாம் அமர்வில், சட்ட எரிப்பு போராட்டத்தின் பெருமை மிகு வரலாறு குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்...

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

பெரியார் திருக்குறளையே கடுமையாகக் கண்டித்தார் என்று பா.ஜ.க. – சங். பரிவாரங்கள் பேசி வருவதற்கு மறுப்பாக பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்துகளின் ஒரு தொகுப்பு. ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய ‘திருக்குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியு மாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர் களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக் குரிய தக்க ஆதாரமாய் அமைந்திருக்கிறது. திருக்குறள் ‘தெய்வீகத் தன்மை பொருந்திய’ ஒருவரால் எழுதப்பட்டது என்பதாகவோ அல்லது...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவரும், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, பொருள்சார் பண்பாடு போன்ற துறைகளில் பெரும் பங்காற்றி வருபவருமான பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் (ஆ.சி.) அவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் (னு.டுவை.) வழங்கப்பட்டது. 22.10.2019ஆம் நாள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் ஆ.சி.க்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. தமிழியல் ஆய்வுப் புலத்தில் 50 ஆண்டு கால அயராத பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தேர்ந்த களஆய்வு, பரந்தபட்ட நூலறிவு, அறிஞர்களுடன் நடத்தும் விவாதங்கள், உழைக்கும் மக்கள் சார்பு ஆகியவை அவருடைய தனித்தன்மை. எந்த விருதையும் அவர் தேடிச் சென்றதில்லை. அவருக்கு கல்விப்புலம் சார்ந்த இவ்விருதினை வழங்குவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமை சேர்த்துக் கொண்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.  பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். ஆ. சிவசுப்பிரமணியன் 1960ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் தமிழியல்...

கழக ஏட்டிற்கு நன்கொடை

கழக ஏட்டிற்கு நன்கொடை

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் – தமிழன்பு இணையர் தங்கள் மகள் இளந்தமிழ் பிறந்த நாள் மகிழ்வாக கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு  ரூ.1500/- நன்கொடை அளித்துள்ளனர். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

திருவள்ளுவர் – ‘இந்து’வா?

திருவள்ளுவர் – ‘இந்து’வா?

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சிலர் அவமதித்துள்ளனர். திருவள்ளுவருக்கு ‘காவி அடையாளம்’ தந்து ஒரு பா.ஜ.க. பிரமுகர் முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த சிலை அவமதிப்பு நடந்திருக்கிறது. திருவள்ளுவர் ஓர் இந்து என்றும், திருக்குறள் இந்து மத நூல் என்றும் பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வருகிறார்கள். திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; இறந்து போன சந்திரசேகரேந்திர சரசுவதி என்ற காஞ்சி மூத்த சங்கராச்சாரி என்ன கூறுகிறார்? “அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை  அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித் தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை… வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள் விஷ்ணு சாமியே அல்ல, சிவன்தான் சாமி, விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்....

அயோத்தி தீர்ப்பு: என்ன நடக்கப் போகிறது?

அயோத்தி தீர்ப்பு: என்ன நடக்கப் போகிறது?

உச்சநீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் எவருக்கு உரிமை உடையது என்பது குறித்து தீர்ப்பை வழங்க இருக்கிறது. தீர்ப்பு வருவதால் நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகாமல் தடுப்பதற்கு முன்னேற்பாடுகள் நடக்கின்றன. தமிழக முதல்வரை அழைத்தும் ஆளுநர் பேசி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டாட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என்று சங்பரிவாரங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் நடத்திய இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அயோத்திப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதன் கடந்தகால வரலாறுகள் ஓர் உண்மையை உணர்த்துகின்றன. நீதி – சட்டம் என்ற அமைப்புகளை முடக்கி ‘கும்பல் வன்முறைகளே’ தீர்மான சக்திகளாக செயல்பட்டிருக்கின்றன. 1949ஆம் ஆண்டு நள்ளிரவில் பாபர் மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, இராமன், சீதை பொம்மைகளை மசூதிக்குள் போட்டு மசூதி சுவரில் இராமன் உருவத்தை படமாக வரைந்தார்கள். அப்போதே அத்துமீறி நுழைந்த குற்றத்தின் கீழ்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

யாரெல்லாம் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள் என சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாட்டு பாடும் பார்ப்பனர்கள் எல்லாம்  ஜாதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டனர். பெரியார் குறளை எதிர்த்தார் என்று திரிபுவாதம் பேசும் பா.ஜ.க. – சங் பரிவாரங்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் விளக்கப் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை சரியான பதில் அளித்திருக்கிறது. வள்ளுவர் – ஓர் இந்து; திருக்குறள் – ஓர் இந்து மத நூல் என்று இப்போது பா.ஜ.க.வினர் பேசுவதற்கு முன்பாகவே அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: பெரியாரை தமிழின விரோதி, தமிழ் மொழி விரோதி, தமிழ் இலக்கிய விரோதி என்று ஒரு கூட்டம் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கிற வேளையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டைப் பற்றி, அதனுடைய விளக்கக் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 1949இல் பொங்கலை ஒட்டி நடந்த 2 நாள் திருக்குறள்...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?” திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன.ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அத்தனைதையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ராமர் கோயிலை இடித்து விட்டு தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன.அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா? அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை ! பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவவாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுயர பெரியார் சிலை உள்ளது. இந்த பெரியார் சிலையின்...

நீலச் சட்டைப் பேரணி  டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

நீலச் சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

கோவையில், புரட்சியாளர்  அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்க உள்ள  நீலச்சட்டைப் பேரணிக்கும், சாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைக்கப்படும் தலைவர்களின்  நாள் ஒதுக்கல் போன்ற சில காரணங்களால்,  கோவை நீலச்சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் நாள் என இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் 2019, டிசம்பர் 22 என மாற்றிப் பதிவிடுமாறும், பயண ஏற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 31102019 இதழ்

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

கீழடியிலும் சிந்துவெளியிலும் விளையாட்டுப் பொருள்கள் அதிகம் கிடைத்துள்ளன கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து  பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசினார். அவரது பேட்டியிலிருந்து: கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட் டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004இல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரிய வில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது....

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று பா.ஜ.க.வினர் பேசுவது உண்மைகளைத் திரிப்பதாகும். ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டைப் பிரதி பலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து வெறியரான  மூஞ்சே என்ற பார்ப்பனர்தான் அவருக்கு உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். ஞானத் தந்தைகளாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் திலகரும், சிவாஜியும்தான். 1910ஆம் ஆண்டிலிருந்து 1915ஆம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற இவர் தங்கிய விடுதி அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங் களாக செயல்பட்டன. பல வன்முறை இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர் களும் அங்கு வருவது உண்டு. இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை...

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 16.10.2019 அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் ஓ.டி முருகன் கோவில் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா –  திருக்குறள் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ,  தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர், சௌ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இல.குமார் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, அ.சி.சின்னப்பத் தமிழர் (தமிழ்வழிக் கல்வி இயக்கம்), ஆவடி நாகராசன் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சிவ செந்தமிழ்வாணன் (தமிழ் தேசக் குடியரசு இயக்கம்), க.சூரியா (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), என்.கே.மூர்த்தி (டாக்டர் கலைஞர் பத்திரிக்கையாளர் சங்கம்), கார்வேந்தன் (திராவிடர் கழகம்), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக பூ.இராமலிங்கம், (திராவிடர் கழகம்) ...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து, ஜூனியர் விகடனுக்கு 19.10.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி. “ஆமாம், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய இராணுவத்தை அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சுதான் தமிழக… ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங் களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்....

தீவாளி, நல்விழா நாளா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தீவாளி, நல்விழா நாளா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! ‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம் நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? ‘ என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்! உனக்கெது தெரியும் உரைப்பாய் ‘என்று கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள். தீவா வளியும் மானத் துக்குத் தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவீரே! நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

தேசியக் கல்விக் கொள்கை: விளிம்பு நிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

1920ஆம் ஆண்டு வரை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெண்களுக்குப் பட்டம் அளிக்கப்படவில்லை. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ (யniஅயட கயசஅ), ‘1984’ போன்ற புதினங்கள் இன்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தறிவு இல்லாதவர் களுக்கு ஓட்டுரிமை இல்லை என்ற நிலையைக்கூட வரலாறு பதிவு செய்திருக்கிறது. இவை அனைத்தும், கல்வி என்பது ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் பெற்றுத்தரும் என்பதற்கான அடையாளச்சான்றுகள். துப்பாக்கிகளைவிடவும் புத்தகங்களைப் பார்த்து பயப்படும் ஆட்சி யாளர்கள் உண்டு என்பதைத்தான் கல்வி என்னும் கருவி காலந்தோறும் நிரூபித்து வருகிறது. அதனாலேயே அது எந்தவிதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் உற்று நோக்க வைக்கிறது. ‘இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட கல்வி (ஐனேயை உநவேசநன நனரஉயவiடிn) என்பதே குறிக்கோள்’ எனத் தொடங்கும் தேசியக் கல்விக்கொள்கை, என்னவெல்லாம் பேசி இருக்கிறது என்பதை எவ்வளவு உற்று நோக்குகிறோமோ, அதைப் போலவே அதை எப்படிப் பேசியிருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம். கல்வி என்பது, எப்படிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்? கல்வியாளர்...

இராமானுஜர் சீர்திருத்தம் – நாமத்தை பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா? பெரியார்

நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும், கூட்டுறவிலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக (சீர்திருத்தம்) செய்து வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று? இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதிகளா யுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த புகழுக்காகவும், பெருமைக் காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது. சிலர் இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோத மாய் சில பெரியோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த்தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண் டாடுகிறார்கள்; படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய...

கீதையின் வஞ்சகப் பின்னணி (3) கடவுள் மறுப்பாளர்களை இழிவுபடுத்தும் ‘கீதை’

பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை – தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் – ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு – கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். பெரியார் இயக்கத்துக்கான வரலாற்று ஆவணம் என்று கூறுமளவுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்:   ட    இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸ் வேண்டு கோளை ஏற்று, கி.பி.1785இல் சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதன்முதலாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல மேலை நாட்டு ஆய்வாளர்கள், இதற்குப் பிறகு தான் கீதையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினர். ட    ரிக் வேத காலத்தில் கருநிறம் கொண்ட ‘அரக்கனாக’ ஆரியர்களால் ஒதுக்கப்பட்ட...

கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு

வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கலிலியோவின் வாக்குமூலம் மதம் அறிவியலாளர்களைக் கொடூரமாக தண்டித்தது. கலிலியோ பூமியே சூரியனை சுற்றுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக கத்தோலிக்க சபையின் எட்டாம் அர்பன் கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்தார். இறுதிக்காலம் முழுவதையும் சிறையிலேயே அவர் கழித்தார். மதச்சபை முன் அவர் துணிவுடன் அளித்த வாக்குமூலம் இது. “கலிலியோ கலிலியாகிய நான் 1633ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதியாகிய இன்று இந்தச் சபையின் முன்னால் எனது வாக்கு மூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக் கிறேன். மதிப்புக்குரிய நீதிபதிகளும் மரியாதைக் குரிய அதிகாரிகளும் கற்றறிந்த கணவான்களும் இந்த அரங்கில் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இந்த எளிய கைதி மிகுந்த பணிவோடு ஒரு சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது எனக்கு எதிரான வழக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் இங்கே மோதிக்கொள்கின்றன. சூரியனை எதிர்க்க பூமி திரண்டு வந்திருக்கிறது. பகுத்தறிவுக்கு எதிராகப் பரலோகம் களம் இறங்கியிருக்கிறது. தேவனோடு...

கார்ப்பரேட் வரிக் குறைப்பு… பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா? வரியைக் குறைத்திருக்க வேண்டியது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அல்ல… மக்கள் விரும்பி செலவு செய்யும் பொருள்களுக்குத்தான்.

“இந்தியப் பொருளாதாரத்தை சீர்செய்ய, மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குளிர்காய்ந்து வருவது என்னவோ பெரு நிறுவனங்கள்தான். மோடி தலைமையிலான அரசு, இதை மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது’’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். கார்ப்பரேட் வரிக்குறைப்பு சில தினங்களுக்கு முன்பு, ‘‘இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகவில்லை. சிறப்பாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக் கிறது’’ என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன். பிறகு அவரே, ‘‘இந்தியப் பொருளா தாரத்தில் மந்தநிலை கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது’’ என்றும் தெரிவித்தார். அத்துடன், மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, “பொருளாதார மந்தநிலையை சீர்செய்வதற்காகவும், ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு கின்றன’’ என்றார். இந்த நிலையில், சமீபத்தில் கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 37ஆவது கூட்டத்தில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அந்த அறிவிப்பின்படி, `‘உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரி, 30 சதவிகிதத்திலிருந்து 25.2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது....

ஆய்வாளர்கள் பார்வையில் பெரியார்

‘40 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ‘தேசவிரோதிகளின்’ பட்டியலில் எந்த இடத்தில் இருப்பார் என்பதைக் கற்பனை செய்யத் தேவையில்லை. தமிழகத்தில் பெரி யாரைக் கொண்டாடுபவர் களும் இருக்கிறார்கள், வெறுப் பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்பு களிலுமே அவர் தவிர்க்க வியலாத ஆளுமையாகவே இருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஆய்வுப் புலத்தில் பெரியாரை எப்படிப் பார்க்கிறார்கள்? வரலாற்றாளர் ராமச் சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருது கிறார். தனது ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார். ‘புரட்சிகர சீர்திருத்தவாதி’ என்பது பெரியாரைப் பற்றிய அவரது கட்டுரையின் தலைப்பு. குஹாவின் நூலில் பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தோடு அவரது தேர்ந் தெடுக்கப்பட்ட எழுத்தும் பேச்சும் மொழி பெயர்க்கப் பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. 1927இல் ஆகஸ்ட்டில் குற்றாலத் திலும் அதே ஆண்டு அக்டோ பரில் சென்னை பச்சையப்பன்...

இதுதான் கீதை குழப்பமும் முரண்பாடும்

கீதை மற்றொன்றையும் செய்கிறது என்று ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தவித உரிமையும் அளிக்கப்படாமல் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு சமூகரீதியிலும் பொருளியல் ரீதியிலும் பின்னுக்கு தள்ளப்பட்ட மக்கள் எதையும் கேட்காமல், எந்தத் தேவைக்கும் குரல் எழுப்பாமல் ஆமைகளைப்போல் அடங்கிக் கிடப்பதற்கான மனப்பான்மையை இந்நூல் உருவாக்குகிறது. வளர்க்கிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்கின்ற மூடநம்பிக்கையை இவர்கள் மனத்தில் விதைத்து எவ்வித எழுச்சியும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளும் கேவலமானதையும் கீதை செய்கிறது. அர்ச்சுனனின் அய்யங்களைத் தீர்க்கும் வகையில் கிருஷ்ணன் கூறியதாக எழுதப்பட்ட பாடல்கள் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. போரிடுவது சத்திரிய ஜாதி தர்மம். ஆகவே போரிடு. அறைகூவலை ஏற்றுப் போரிடு. இல்லையேல் கோழை எனத் தூற்றப்படுவாய். போரிட்டு வென்றால் அரச உரிமை. ஆகவே போரிடு. போரில் மாண்டாலும் மேல் உலகப் பதவி கிடைக்கும். எனவே போரிடு. என்றெல்லாம் போரிடத் தூண்டியவன் கிருஷ்ணன். அடுத்த நிமிடத்தில் “ஆசையைத் துறந்து,...

பகுத்தறிவுப் பாவலர் உடுமலை நாராயண கவி பா. விஜய் செப்டம்பர் 25-ந் தேதி உடுமலை நாராயண கவி பிறந்தநாள்.

கவிஞன் மானுடத்தின் ராஜ கம்பீரம். தோற்றத்தால் இளைத்தாலும், செல்வத்தால் சிறுத்தாலும் சீற்றத்தால் நிமிர்ந்து நிற்கும் ஆளுமையுடையவன் கவிஞன். யார் விமர்சிப்பினும் தன் படைப்பை உலகின் உச்சியில் வைத்து போற்றிக் கொள்வான். தன் கண்ணீரை யும் வியர்வையுமே தன் படைப்புகளுக்கு பாசனமாக ஊற்றிக் கொள்பவன். அப்படி ஒரு ஆளுமை கவிஞர்தான் உடுமலை நாராயண கவி. சக மனிதனை மதித்தாலே தன் கிரீடம் சரிந்து விடும் என்று கருதும் படைப்பாளி அல்ல அவர். ஒரு ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து கோடம்பாக்கம் மூலம் பாட்டொலிக்கும் திசையில் எல்லாம் தன் பாட்டுக் குதிரை பறந்த போதும் அதே இயல்போடு அதே இதயத்தோடு வாழ்ந்த ஒரு அற்புத ஒளிக்கீற்று அவர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டையில் உள்ள பூவிளைவாடி எனும் சின்ன ஊரில் முத்தம்மாள், கிருஷ்ணசாமி தம்பதியருக்கு பிறந்த இவர் நாராயணசாமியாகவே அழைக்கப் பட்டார். வறுமை இவரை வாழ்க்கையில் செதுக்கியது. பசி ஒரு கட்டத்தில் வயிற்றுக்கு பழகிப்பழகி...

கீழடி: வெளிச்சத்துக்கு வரும் ஆய்வுகள்

கீழடி ஆய்வை முடித்துவிட்டு ஒரு பக்க அறிக்கையோடு விடைபெற்றது மத்திய தொல்லியல் துறை. தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்விற்குப் பிறகே உண்மைகள் வெளிவரத் தொடங்கின. உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, சென்ற வாரத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொடர்பான அறிக்கை. “கீழடியில் கிடைத்த கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். எழுத்தறிவும், சிறந்த கைவினைத் தொழில்நுட்பமும், உள்நாடு மற்றும் வெளிநாடு வணிக வளமும் கொண்ட இந்நாகரிகத்தின் காலம் கிமு 600” என்று அது கூறுகிறது. அதாவது, கீழடியின் வயது 2600 என்று கூறும் அந்த அறிக்கை, அந்தக் கால கட்டத் திலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததையும் விரிவான ஆதாரங்களோடு நிறுவ முயல்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கண்ட முயற்சியின் விளைவு இது என்பதையும், கீழடியை அணுகும் விதத்தில் இனியேனும் மத்திய அரசு சிறப்புக் கவனம் அளிக்க...

பெரியாரை விமர்சிக்கும் ‘தமிழ் தேசியர்’களின் குழப்பம் ப. திருமாவேலன்

மறைமலை அடிகள், பாவாணர், இலக்குவனார் முன் வைத்த கருத்துகளைப் படித்துவிட்டு பிறகு பெரியாரிய எதிர்ப்பாளர்கள் பேச வரட்டும். தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய ராஜராஜ சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த ஜமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய ஜரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க...

இதுதான் கீதை பிறப்பிலேயே பேதம்

மனிதகுலம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்து அறியப்படுகின்றனர் என்று கீதை கூறுகிறது. அத்யாயம் 18 பாடல் 41இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ப்ராஹ்மண க்ஷத்ரிய விசாம் சூத்ராணாம் ச பரந்தப கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப் பிரனவர் குணை செயல்களின் அடிப்படையிலும் இயற்கையில் அமைந்துள்ள குணங்களின் அடிப்படையிலும் இப்பிரிவினைகள் என்கிறது கீதை. நான்கு வர்ணங்களுக்கும் பொறுப்புகளை வரையறுத்துவிட்டு, அடுத்தவர்க்கான கடமைகளை ஏற்று அரைகுறையாக செய்வதைவிட அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே செய்வதுதான் சரி என்கிறது கீதை. வேறு வகையில் சொன்னால், அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிறது கீதை. பார்ப்பனர் வேதம் படித்து படிப்பிக்க வேண்டுமாம். இப்பொழுது என்ன நிலை? பார்ப்பனர் எல்லாத் தொழிலையும் செய்கிறார்கள். அதைப் போலவே சத்திரியரும். பாதுகாப்புப் பணியில் எல்லா ஜாதிக் காரர்களும் உள்ளனர். இதிலும்கூடத் தலைமையில் பார்ப்பனர்கள்! யார் நடக்கிறார்கள் கீதைப்படி? இந்துக்களுக்குக் கீதை எங்கே வழிகாட்டு கிறது? பொய் சாட்சி சொல்பவன்கூட கீதையில்...

வணிக மயமாகும் வழிபாடுகள் கோயில் உண்டியலில் காசு போட வேண்டும் என்று எந்த புராணம் கூறுகிறது?

மனித வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்சனை உள்ளது. எல்லா மனிதர்களுக்கும் ஏதாவதொரு வகையில் கஷ்டம் இருக்கிறது. அன்றாட உணவுக்கும், பிழைப்புக்கும் வழியில்லாமல் தெருவோரங்களில் வீடின்றி வாழும் மனிதர்கள் நம் கண்முன்னே நடமாடுகின்றனர். நமது துயரத்துக்குக் காரணம் என்ன என்பதை யோசிப்பதைத் தவிர்த்து, கடவுளே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளை நகர்த்த ஒரு நம்பிக்கை தேவையாக இருக்கிறது. கடவுள் எங்கே இருக்கிறார் என்பதற்கு மார்க்சியத்தின் பதில் இதோ… “இரக்கமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாகவும், இதயமில்லாத இந்த உலகத்தின் இதயமாகவும், ஏதுமற்ற ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக கடவுள் இருக்கிறார்”. கடவுளை பல தரப்பட்ட மக்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வழிமுறைகளில் வழிபட்டு வருகின்றனர். தினமும் உழைத்துக் களைத்த உழைக்கும் வர்க்கத்தினர் தன் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வந்தால், தம் மனபாரம் குறைந்ததாக நம்புகின்றனர். அவ்வழிபாட்டுக்கு தன் உழைப் பின் ஒரு பகுதியை செலவிடவும் செய்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பகுதி...

இதுதான் கீதை தேர் எரிந்தது – ஏன்?

பாரதப் போர் பாண்டவர்க்கு வெற்றியாக முடிந்த பின்னர் தேரிலிருந்து இறங்குமாறு அர்ச்சுனனிடம் கூறுகிறான் கிருஷ்ணன். பகவானான கிருஷ்ணன்தான் முதலில் இறங்க வேண்டும் என்கிறான் அர்ச்சுனன். இதை ஏற்காத கிருஷ்ணன், அர்ச்சுனனைக் கீழே இறங்குமாறு அதட்டுகிறான். அவனும் கீழே இறங்கி நின்றான்.  அதன் பிறகு தேரில் இருந்து கிருஷ்ணன் இறங்குகிறான். அவன் இறங்கிய அடுத்த நொடியில் தேர் எரிந்து சாம்பலானது. அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன் கேட்டானாம், “யாரும் நெருப்பு வைக்காமல் தானாகவே தேர் எரிந்தது எப்படி?” என்று கேட்டானாம். அதற்கு கிருஷ்ணன் கூறிய பதில்தான் அவன் எப்பேர்ப்பட்ட கபடன்! அயோக்கியன் என்பதை எடுத்துக் காட்டும். “எவ்வளவோ முறைகேடுகளைக் கையாண்டுதான் இந்தப் போரில் உங்களை வெற்றி பெறச் செய்தேன், தெரியுமா? நியாயத்திற்குப் புறம்பான செயல்கள்தான் தேர் எரிந்ததற்குக் காரணம். நான் தேரில் அமர்ந்திருந்ததால் தான் தேர் எரியவில்லை; நான் இறங்கியதும் தேர் எரிந்து விட்டது” என்றானாம். அர்ச்சுனன் இறங்காமல், கிருஷ்ணன் முதலில் இறங்கியிருந்தால் தேரும் அர்ச்சுனனும்...

‘இந்தி-இந்துஸ்தானி’ உருவானது எப்போது? தேவ்தான் சௌதுரி – தமிழாக்கம்: எஸ்.வி. ராஜதுரை

ஆங்கிலம் அன்னிய மொழி; ‘இந்தி’ இந்தியாவின் மொழி என்று பா.ஜ.க.வினர் பேசி வருவது உண்மையல்ல. ‘இந்துஸ்தானி’ என்ற மொழியை உருவாக்கியதே ஒரு பிரிட்டிஷ்காரர்தான் என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறது கட்டுரை.   காலஞ்சென்ற எனது தாய்வழிப் பாட்டி – 1940களில் கொல்கத்தாவில் தத்துவ இயலும் உயிர் இயலும் படித்தவர் – நான் சிறுவனாக இருந்த போது ஒருமுறை என்னிடம் கூறினார்: “நவீன ஹிந்தி மொழியின் பிறப்பிடம் கொல்கத்தா, அங்குதான் அது கொல்கத்தா விலுள்ள வில்லியம் கோட்டையில் ஆங்கிலேயர்களால் புதிதாக உருவாக்கப்பட்டது.” அண்மையில் நடத்தப்பட்ட ‘ஹிந்தி நாள்’ நிகழ்ச்சிகளில், ஹிந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று உரத்துச் சொல்லப் பட்டதை செய்தித்தாள்களில் படிக்கும்போது, என் பாட்டியின் சொற்கள் நினைவுக்கு வந்தன. அவர் சொன்னதைப் பரிசீலிக்கவும் உண்மையைக் கண்டறியவும் முனைந்தேன். ‘மறைக்கப்பட்ட உண்மை’களை அறிந்துகொள்ளவும் ஹிந்தியின் ‘இரகசிய வரலாற்றை’ப் புரிந்து கொள்ளவும் விரும்பினேன். நான் கண்டறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்; இந்தியாவிலுள்ள மொழிகள் பற்றிய...

காந்தி 150

காந்தி 150 காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் காந்திய சிந்தனைகள் விவாதப் பொருளாகியிருக்கிறது. காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, கதர், மதுவிலக்கு உள்ளிட்ட சமுதாயக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டதால் தான் பெரியார் காங்கிரசில் சேர்ந்து, அந்தக் கொள்கைகளுக்காக கடுமையாக உழைத்தார். அதே சமுதாயப் பார்வையில் காங்கிரஸ் வகுப்புவாதி பிரதிநிதித்துவம் என்ற சமூகங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சம உரிமைப் பங்கீட்டுக்கு முன்வரவேண்டும் என்ற கொள்கைக்கு கட்சிக்குள்ளே போராடினார். பார்ப்பனப் பிறவி ஆதிக்கவாதிகள் அதற்கு உடன்படவில்லை. காந்தியார் திட்டவட்டமான நிலை எடுக்க முடியாத ஊசலாட்டத்தில் இருந்தார். காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார், அதற்குப் பிறகும் காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சமுதாயக் கொள்கைகளை ஆதரித்தே வந்தார். 1927இல் பெங்களூரில் காந்தியை நேரடியாக சந்தித்து உரையாடிய பிறகே காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். காந்தியின் சமூகச் செல்வாக்கு பார்ப்பனியத்தை வளர்ப்பதற்கு பார்ப்பனர்களால் பயன்படுத்தப்படுவதை உணர்ந்த பெரியார், காந்தியின் ‘பிம்பத்தை’ தகர்ப்பது பார்ப்பனிய எதிர்ப்புக்கான தேவை என்பதை உணர்ந்திருந்தார். சமூகத்தில்...

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

  09.10.2019 அன்று ஜாதி  ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை யொட்டி  பரமக்குடி யிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செய லாளர் சந்திர போஸ் ஆகியோர் காலை 10:30 மணிக்கு புகழஞ்சலி செலுத்தினர். உடன் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன், மேலூர் பொறுப்பாளர் சத்யமூர்த்தி, ஆய்வு மாணவர் மாளவிகா, பொன்னான்டி உள்ளிட்ட மதுரை மாவட்டக் கழகத்  தோழர்கள் மற்றும் தியாகி இமானுவேல் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு  தியாகி இமானுவேல் பேரவை மானாமதுரையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஜாதி ஒழிப்பு கருத்தரங்’கிற்கு  தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போஸ் தலைமை தாங்கினார்.  தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.ஷெரீப், கழகத் தலைவர் கொளத்தூர்...

‘குரூப் 2’ தேர்வுகளில் உருவாக்கிய தமிழக அரசு மாற்றம் சரியா?

‘குரூப் 2’ தேர்வுகளில் உருவாக்கிய தமிழக அரசு மாற்றம் சரியா?

கிராமப்புற மாணவர்களை பயற்சிக் கல்லூரி நோக்கி துரத்துகிறது ‘குரூப் 2’ தேர்வுக்கு தமிழ் வினாத்தாள் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வினாத்தாள் நீக்கப்பட்டாலும் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு இடம் பெற்றுள்ளது என்றும் ஆழமான தமிழ் அறிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் விளக்கம் தந்துள்ளது. சரி… புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது…? மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான். ஆனால், தமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது. இனி தமிழில் அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெற முடியாது இதனால் அதிகம்...

மோடி ஆட்சி – கருத்தாளர்களையும் ஒடுக்குகிறது ஓராண்டு காலம் சிறையில் வாடும் புரட்சிகர சிந்தனையாளர்கள்

மோடி ஆட்சி – கருத்தாளர்களையும் ஒடுக்குகிறது ஓராண்டு காலம் சிறையில் வாடும் புரட்சிகர சிந்தனையாளர்கள்

புரட்சிகர சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களை நகர்ப்புற தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி ஓராண்டு காலமாக சிறையில் அடைத்து வைத்துள்ளது மோடி ஆட்சி. ஹிட்லர் ஆட்சியில் நடந்த அதே அடக்குமுறைகள் அப்படியே பின்பற்றப்படுகின்றன. “புனே அருகே பீமா-கோரேகான் பகுதியில் மாவோயிஸ்ட்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். புலனாய்வு செய்ததில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. பீமா-கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிரதமரைக் கொலை செய்யும் முயற்சி யில் பங்கிருக்கிறது,” இப்படி சொல்கிறது காவல் துறை. புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியான வரவர ராவ் உள்ளிட்ட 9 செயல் பாட்டாளர்கள், கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள். பேஷ்வா பார்ப்பனர்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். காவல் துறையினர் உள்பட...

மதிப்புரை தன் வரலாறு மட்டுமல்ல; இயக்க வரலாற்றையும் பேசும் நூல்

மதிப்புரை தன் வரலாறு மட்டுமல்ல; இயக்க வரலாற்றையும் பேசும் நூல்

கொங்கு மண்டலத்தில் திராவிட இயக்கத்தை வளர்த்த தூண்களில் ஒருவரான மு. கண்ணப்பன் வரலாறு நூலாக வெளி வந்திருக்கிறது. 39 தலைப்புகளில் ஏராளமான தகவல்களைத் திரட்டி சுவைபட எழுதியிருக்கிறார், நூலாசிரியர் வழக்கறிஞர் ஒ. சுந்தரம். மு. கண்ணப்பன், இயக்கத்தில் மாணவப் பருவத்திலே இணைத்துக் கொண்டு 23 வயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவராகி, 1953லேயே இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை மாணவர்களைத் திரட்டிப் போராடி பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். 1956ஆம் ஆண்டு திருச்சியில் கூடிய தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்றதோடு மட்டுமின்றி, ‘தி.மு.க. தேர்தல் அரசியலில் போட்டியிட வேண்டுமா?’ என்று நடத்திய வாக்கெடுப்பில், போட்டியிடக் கூடாது என்று வாக்களித்த 4203 தோழர்களில் மு. கண்ணப்பனும் ஒருவர்.  ‘ஓட்டுக்காக இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று, தான் கருதியதாக மு. கண்ணப்பன் கூறுகிறார். 1962இல் அண்ணா அறிவித்த விலைவாசி உயர்வு எதிர்ப்புக்கான மறியலில் பங்கேற்று, 4 மாத...

டெல்லியில் ஒரு வாரம் யாகமாம் இந்திய கலாச்சாரம் வேத கலாச்சாரமாம்

டெல்லியில் ஒரு வாரம் யாகமாம் இந்திய கலாச்சாரம் வேத கலாச்சாரமாம்

புதுடில்லியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து, அக்.9 முதல் ‘சதுர்வேதா சாவர்க்கர் மகாயக்ஞா’ என்ற யாகம் நடத்தியுள்ளனர். நான்கு வேதங்களைப் பரப்புவதற்கு இந்திய நாகரிகம் வேத நாகரிகமே என்பதை உணர்த்தவும், வீட்டு நிகழ்வுகளில் வேத சடங்குகளைப் பின்பற்ற வைக்கவும் இந்த யாகம் நடத்தப்படுவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித் துள்ளது. மத்திய அமைச்சர் இதில் பங்கேற்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்ற பாரம்பரிய  அமைப்பு, வேதகலாச்சார அடிப்படையிலான இந்து தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களை உறுப்பினராக சேர்க்க ஆர்.எஸ்.எஸ். மறுத்து வருவதோடு அதன் துணை அமைப்புகள் எல்லாவற்றுக்கும் சமஸ்கிருதப் பெயரையே சூட்டியுள்ளது. 1939ஆம் ஆண்டு வரை ஆரிய நாட்டை வணங்குகிறோம் என்று இந்தியிலும், மராத்தியிலும், பிரார்த்தனை செய்து வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிறகு இதை பார்ப்பனர்களின் “தெய்வீக மொழி”யான சமஸ்கிருதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டார்கள்! தங்களின் சுயரூபத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய அந்தப் பாடல் வரிகளை...

டிசம்பர் 22 – கோவையில்  நீலச் சட்டைப் பேரணி

டிசம்பர் 22 – கோவையில் நீலச் சட்டைப் பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 22 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20.10.2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க,  உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம். கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் டிச 15 இல் இருந்து டிச 22 ஆக மாற்றப்பட்டுள்ளது

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

பாஜக தலைமையிலான மத்திய அரசு ‘ஒரே நாடு – ஒரே சந்தை – ஒரே வரி’ என்பதை படிப்படியாக செயல்படுத்தியது போலவே, ‘ஒரே நாடு – ஒரே ஆட்சி’ என்ற நிலைக்கும் திட்டமிடுகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது, மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே மக்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகவே இருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப் போக திட்டமிடுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் மத்திய அரசு நினைத்தால்தான் முடியும் என்று நம்பவைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. இந்தியா கூட்டுறவு- கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கிவருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், சந்தை, மக்கள் தொகை என தனித்துவமாக விளங்கிவருகின்றன. அந்தந்த மாநிலத்துக்குத் தேவையானதை மாநில அரசுகள்தான் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் முடியும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், எல்லா வற்றையும் மத்தியில் இருந்தே கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிடுகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 15ஆவது...

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?  கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ? கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

” *பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?* *”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !”* அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் *கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை !* பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,பல்கலைக் கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேலு,உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவ வாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.(காண்க : அழைப்பிதழ் ) இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக...

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து / அக்டோபர் 2019 மாத இதழ்

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் அக்டோபர் 2019 மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – காந்தி 150 !* 📖 *பகவத் கீதை தத்துவ நூலா.?* 💥 *கீழடி: துரோகமும் வெளிச்சமும்* 📝 *இந்தி- இந்துஸ்தாணியை உருவாக்கியது யார்?* ❗ *பெரியாரை விமர்சிக்கும் தமிழ்தேசியர்களின் குழப்பம்!* இன்னும் அரசியல் பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- (ஆண்டு கட்டணம்) 💰தனி இதழ் விலை – ₹ 20/- *தொடர்புக்கு : 7299230363*, *7373684049*

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!”  – கொளத்தூர் மணி

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!” – கொளத்தூர் மணி

  நன்றி:- ஜூனியர் விகடன் `ஆமாம், நாங்க தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சு தான் தமிழக, ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங்களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். “உங்களுக்கும் சீமானுக்குமான தொடர்பு எப்படி உருவானது?” “திரைப்பட வாய்ப்பு தேடி கிராமங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கும் அடைக்கலம் கொடுப்பார் கவிஞர் அறிவுமதி. அப்படி வந்தவர் தான் சீமான். 2001 ஆம் ஆண்டு, தந்தை...

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 15 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20-10-2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க, உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்