Category: குடி அரசு 1926

மகாஜன நேசன் 0

மகாஜன நேசன்

கோயமுத்தூரிலிருந்து வெளியாகும் ‘மகாஜன நேசன்’ என்னும் ஒரு சகோதரப் பத்திரிகை “கோயமுத்தூர் ஜில்லா தேர்தலும் கவுண்டரும்” என்கிற தலையங்கத்தின் கீழ் ஒரு வியாசத்தை பிரசுரித்துவிட்டு அதன் கீழ் பத்திராதிபர் குறிப்பாய், “இவ்வியாசத்தை பிரசுரம் செய்ததின் நோக்கம் யாதெனில் ‘குடி அரசு’ப் பத்திரிகையின் மேல் ஜனங்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் போக்கி உண்மைத் தொண்டு புரியும்படி தூண்டுதற்பொ ருட்டே வியாசத்தைச் சற்று அப்பத்திரிகையை உயர்த்திப் பேச இடமளித் தோம்” என்று எழுதி ஆசிரியர் என்று கையொப்பமிட்டிருக்கிறார். இதில் இவ்விதம் குறிப்பு எழுதியது அப்பத்திரிகை நடந்து கொள்ள வேண்டிய தன்மைக்கு மீறினதென்றும் ‘குடி அரசி’ன் மீது பொதுஜனங் களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்குமானால் அதைப் போக்குவதற்கும் ‘குடிஅரசு’ உண்மைத் தொண்டு செய்யாமலிருந்தால் அதைச் செய்யும்படி செய்வதற்கும் ‘மகாஜன நேசன்’ அணுக வேண்டிய வழி இது வல்லவென்றும் ‘நேசனுக்கும்’ அழுந்திக் கிடந்த பொறாமை இது ஒரு சந்தர்ப்ப மாய்‘நேசனை’ அறியாமலே நேர்ந்து விட்டதென்று மாத்திரம் இதுசமயம் தெரிவித்துக் கொள்ளுகிறோம்....

வேளாள கனவான்களின் பொறுப்பு 0

வேளாள கனவான்களின் பொறுப்பு

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தலுக்கு மூன்று ஸ்தானங் களுக்கு நான்கு கனவான்கள் நிற்கிறார்கள். மூன்று கனவான்கள்தான் வெற்றி பெறக்கூடும். இதில் தோல்வியடைவது யார் என்கிற விஷயத்தில் உண்மை யை ஒழிக்காமல் வெளியிட வேண்டுமானால், இது சமயம் உள்ள நிலைமை யின்படி, ஸ்ரீமான் சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் அவர்களாவது அல்லது ஊ.ஏ. வெங்கிட்டரமணய்யங்கார் அவர்க ளாவது தோல்வியடைய நேரிடுமென்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுள் ஸ்ரீமான் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் தோல்வியடைய நேரிட்டால் இச்சில்லா வாசிகள் பெரும்பான்மையாக உள்ளதும் பொறுப்பும் அந்தஸ்துமுள்ளதுமான வேளாள சமூகத்திற்கு தங்களது சமூக நலத்தை நாடும் யோக்கியதை இல்லையென்றுதான் சொல்ல வேண்டி வருமென்று சொல்லவே பயப்படுகிறோம். ஆனால் அச்சமூகத்திய தலைவரும் பிரதிநிதி யுமான ஸ்ரீமான் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் தோல்வியடை வதில் ஆச்சரியமொன்றுமில்லை என்றும் சொல்லுவோம். ஏனெனில் சென்ற தேர்த லிலும் இதே மாதிரி அதாவது கொங்குவேளாள சமூகத்திற்கே இரண்டு கண்கள் என்று சொல்லத்தகுந்த மாதிரியில் இச்சில்லாவில் இரண்டு...

ஜஸ்டிஸ் கக்ஷி கனவான்களே! 0

ஜஸ்டிஸ் கக்ஷி கனவான்களே!

நீங்கள் உண்மையாய் பார்ப்பனரல்லாதாரின் நண்பர்களானால் உடனே கதரை உடுத்துங்கள். அதுதான் உங்களுக்கு பரீiக்ஷ. கதர் தரித்திரத்தைப் போக்கி எல்லோருக்கும் விடுதலை அளிக்கும். “காங்கிரஸ் சுயராஜ்ஜியம்” பார்ப்பனருக்கு மாத்திரம் உத்தி யோகமும் ஆதிக்கமும் அளிக்கும். குடி அரசு – பெட்டிச் செய்தி – 24.10.1926

யோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா? 0

யோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா?

வரப்போகும் சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகப் பார்ப்பனர்கள் எல்லோரும் அதாவது, உத்தியோக பார்ப்பனர், வக்கீல் பார்ப்பனர், மிதவாதப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், வாத்தியார் பார்ப்பனர், ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஆகிய எல்லோரும் ஒன்றுகூடி அவரவர்கள் தங்களுக்கும் எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லாமல், ஏதாவது கொஞ்சம் இருந்தாலும் அதை அடியோடு மறந்து விட்டு ஒரேமாதிரி பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதைப்பற்றி பல தடவை எழுதி இருக்கிறோம். உதாரணமாக உத்தியோகப் பார்ப்பனர்கள் விஷயமாய், சர்.சி.பி. அய்யர் அவர்கள் ஜினிவா மகாநாட்டுக்கு அனுப்பப் பட்டபோது ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் இது சமயம் போகிறாரே என்று ஓலமிட்டதிலிருந்தே தெரிந்திருக்கலாம். மிதவாதப் பார்ப்பனர்கள் விஷயத்தில் மகா மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ‘இந்திய ஊழிய சங்கம் வெந்து போனதற்காக பணம் சேர்க் கிறேன்’ என்கிற பேரால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு சென்று பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி வைது பேசுவதிலிருந்தே தெரிய லாம். வக்கீல் பார்ப்பனர்கள் விஷயத்தில் “ஜமீன்தார் தொகுதிக்கு...

தமிழ்ப்பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள் 0

தமிழ்ப்பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள்

தஞ்சாவூர் “கரந்தை தமிழ்ச்சங்க”த்தினின்றும் “தமிழ்ப் பொழில்” என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர்.வேங்க டாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப் போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம் என்றும் இடைய றாது உரிய காலங்களில் வெளிவரற்குறிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் ‘பொழில்’ சிறிது காலந்தாழ்ந்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய காலஅளவு கொஞ்சம் பெரிதாக நீண்டது. முன் ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டிருக் கின்றன. நிற்க, ‘தமிழ்ப் பொழிலி’ன் முன்னேற்றங் கருதி உழைக்க ஆங்கில மும் தமிழும் கற்று வல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ.கந்தசாமி பிள்ளை யவர்கள், எம். ஆர்.ஏ.எஸ்., அரசர்மடம் பள்ளிக்கூட தமிழாசிரியர் சாமி சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன் வந்துள்ளார்கள். இவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்றி வெளியிடங் கட்குச் சென்று பொழிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார். திருவாளர் உடையாரவர்கள்...

ஈரோடு முனிசிபாலிட்டி 0

ஈரோடு முனிசிபாலிட்டி

நாளது அக்டோபர் µ 19 – தேதியின் சுதேசமித்திரனில் ‘ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு ஒரு மறுப்பு’ என்னும் தலையங்கத்தின் கீழ் ஈரோடு சேர்மென் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களுடைய கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸ்ரீமான் நாயக்கர், ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களைப் பற்றி எழுதியிருந்ததற்குப் பதில் அனுப்பி பிரசுரம் செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஸ்ரீமான் நாயக்கர் அப்படிச் செய்ய வில்லையென்றும் ஸ்ரீமான் முதலியார் எழுதியிருக்கிறார். அது உண்மைக்கு விரோதமானது. ஸ்ரீமான் முதலியார் ‘குடி அரசு’க்கு எழுதிய மறுப்பில் ஸ்ரீமான் நாயக்கருக்கும் தனக்கும் பழைய விரோதமிருப்பதாகக் குறிப்பிட்டு சில விஷயங்கள் எழுதியிருந்தார். அவ்விரோதத் தன்மையைப் பொறுத்தவரை விவகரிக்காமல் நிறுத்தி விட்டு அவர் மறுத்த விஷயத்திற்கு மாத்திரம் அவருடைய மறுப்பையும் அவற்றிற்குச் சமாதானத்தையும் முறையே வெளியிடத் தீர்மானித்தே ஸ்ரீமான் முதலியார் பொய்யென்று மறுத்த மூன்று முக்கிய விஷயங்களை அப்படியே எடுத்தெழுதி அவற்றிற்கு சமாதானம் தக்க ஆதாரத்துடனும் தேதி கையெழுத்து முதலியதுகளுடனும் எழுதிவிட்டு இவற்றையும் ஸ்ரீமான் முதலியார் மறுக்கிறாராவென்று...

தீ பா வ ளி                                                   கதர்!  கதர்!!  கதர்! ! ! 0

தீ பா வ ளி கதர்! கதர்!! கதர்! ! !

தீபாவளியை தேசபக்திக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறீர் களா? அல்லது தேசத் துரோகத்திற்கு உபயோகப்படுத்தப் போகிறீர்களா? நாளிது ஐப்பசி µ 19 ² க்குச் சரியான நவம்பர் µ 4 ² வியாழக் கிழமை இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் மிகுதியும் கொண்டாடத் தக்க தீபாவளி என்னும் பண்டிகை வரப் போகிறது. அப்பண்டிகை கொண்டா டுவது என்பதற்கு எண்ணெய் ஸ்நானம் செய்து புதிய வஸ்திர மணிந்து பட்டாசு சுட்டு பலகாரம் சாப்பிடுவதுதான் முக்கியச் சடங்காக இருக்கிறது. இவற்றுள் எண்ணெய் ஸ்நானம் செய்வதிலும் பலகாரம் செய்து சாப்பிடு வதிலும் நமது நாட்டிற்கு எவ்விதக் கெடுதியும் இல்லை. ஆனாலும் புதிய வஸ்திரமணிவது என்பது முக்கியமாக ஏழைகளின் வாயில் மண்ணைப் போட்டு அவர்களைப் பட்டினி கிடக்கச் செய்வதற்கும் பெரும் பாலும் நமது நாட்டுச் செல்வத்தை அன்னிய நாட்டார் கொள்ளை கொண்டு போவதற்குமே உதவுகிறது. நமது நாட்டிற்கும் நமது நாட்டுப் பெரும் பான்மையான மக்க ளுக்கும் நலமும் நல்வாழ்வும் உண்டாக...

மார்க்கெட்  நிலவரம் – சித்திரபுத்திரன் 0

மார்க்கெட் நிலவரம் – சித்திரபுத்திரன்

சட்டசபை ஓட்டு ஒன்றுக்கு               1 முதல் ரூ.5 ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக்காரருக்கு               ரூ.100 கணக்குப் பிள்ளைக்கு               ரூ. 50 பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு               ரூ. 25 கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக்காரருக்கு               ரூ.5000 முதல் 15000 வரை கடன் முனிசிபல் சேர்மென்களுக்கு               ரூ.1000 முதல் ரூ. 1500 வரை கடன் வைஸ் சேர்மென்களுக்கு               ரூ.250 முதல் ரூ. 500 போலிங் ஆபீசர்கள் நிலவரம் பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்குவாரில்லை. முனிசிபல்...

கோயமுத்தூர் ஜில்லா தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா தேர்தல்

கோயமுத்தூர் ஜில்லாவின் சார்பாக சென்னை சட்டசபைக்குப் பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்கள் மூன்று பேரும் பார்ப்பன அபேக்ஷகர் ஒருவரும் ஆக நான்கு அபேக்ஷகர்கள் நிற்கிறார்கள். இந்நான்கு கனவான் களும் பெயருக்கு மாத்திரம் தனித்தனிக் கக்ஷியைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் தத்துவத்தில் பார்ப்பனரல்லாத கக்ஷிக்கு மூன்று பேரும், பார்ப் பனக் கக்ஷிக்கு ஒருவருமாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, ஸ்ரீமான் அய்யங்கார் தேவஸ்தான மசோதாவையும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தையும் எதிர்ப்பதினாலும், ஸ்ரீமான் செட்டியார் முதலா னவர்கள் இவ் விரண்டையும் மனப்பூர்வமாய் ஆதரிப்பதினாலும் தெரிந்து கொள்ளலாம். நாம் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்தது போலவே சட்டசபைகள் மூலம் குடிமக்களுக்கு எவ்வித அரசியல் நன்மையும் செய்ய முடியவே முடியாது என்பதை இப்பொழுதும் சொல்லுகிறோம். ஆனால் வேளாள குடிமக்கள் இந்நாட்டில் உள்ள மற்ற எல்லா மக்களைவிட உயர்ந்த தன்மை உடையவர்களாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி விவ காரம் முதலியவைகளால் குடி கெடுவதையும் வைதீகச் சடங்குகளால் தாழ்த்தப்பட்டு...

ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரியார்                கொல்லத் தெருவில் ஊசி விற்பனை 0

ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை

மகா மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக ஊர் ஊராய் பிரசங்கம் செய்து வருகிறார். இந்த முறையில் கோயமுத்தூருக்கும் வந்து மாணவர் சங்கத்திலும் “வகுப்பு வாதத்தால் ஏற்படும் தீங்கு” என்பதைப் பற்றி பேசியிருக்கிறார். வகுப்பு வாதத்திற்கு ஏற்பட்ட கட்சி தன்னை ஜனநாயகக் கட்சியென்றும், தேசீயக் கட்சி என்றும் சொல்லிக் கொள்வது தகாது என்றும், இதைப்போல் இந்திய ராஜீயத் துறையில் அதிகமான கேட்டை விளைவிப் பது வேறெது வுமில்லை என்றும் கூறுகிறார். இதில் எவ்வளவு புரட்டுகள் இருக்கின்றன என்பதை யோசியுங்கள். முதலாவது, ஸ்ரீமான் சாஸ்திரி இந்திய மக்களின் சார்பாக பேசுவதற்கே யோக்கியதை அற்றவர் என்பதே நமதபிப்பிராயம். அவர் நமது சர்க்காருக்கு உள் உளவாயிருந்து தனக்குப் பெரிய அந்தஸ்தும் பட்டமும் பதவியும் பெற்றுக் கொண்டு தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கும் பெரிய பெரிய உத்தி யோகத்தை வாங்கிக் கொண்டவர். அல்லாமலும்,தேசத்திற்காகவும் ஜனநாயக தத்துவத்திற்காகவும் பாடுபட வந்த அவதார மூர்த்தியாகிய மகாத்மா காந்தியை...

0

சோதனை காலம் சென்னை மாகாணத்தில் சிறப்பாய் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் பார்ப்பனீய ஆதிக்கத்தின் பலனாய் கட்டுக் குலைந்து, தாழ்த்தப் பட்டு சுயமரியாதையை இழந்து, நாட்டின் நலத்தை மறந்து ‘மூலபலச் சண்டை’ என்பது போல் தம்மில் ஒருவர் மேல் ஒருவர் பகைமை கொண்டு அரசியலிலும் சமூக இயலிலும் மீளா அடிமையாகி உழல்வதைக் கண்ட பெரியார்களான ஸ்ரீமான்கள் டாக்டர் நாயர், தியாகராயர், மகாத்மா காந்தி ஆகியோர் முறையே பார்ப்பனரல்லாதார் இயக்கமென்றும், ஒத்துழை யாமை இயக்கமென்றும் பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர். இவற்றை அறிந்த நமது பார்ப்பனர்கள் தங்களது கட்டுப்பாட்டாலும், செல்வத்தாலும், சூழ்ச்சியாலும், அதிகார வசதியாலும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கொல்லவும், மகாத்மாவின் ஒத்துழை யாமை இயக்கத்தை ஒழிக்கவும் முயற்சி செய்து வெற்றிக்குறியைக் கண்டு விட்டார்கள் என்றே சொல்லலாம். பார்ப்பனரின் இவ்வெற்றிக் குறிக்கு தமிழ் நாட்டைப் பொறுத்த வரை ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் போன்றோர்களும் இந்தியா தேசத்தைப் பொறுத்தவரை தேசபந்து...

‘குடி அரசு’ வாசகர்களுக்கு                           ஓர் உண்மையான முன்னறிவிப்பு 0

‘குடி அரசு’ வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு

அன்புள்ள வாசகர்களே! இதுசமயம் நமது ‘குடி அரசு’ வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத்தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி ‘குடி அரசு’க்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்கு மென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி. மூலம் அனுப்பிப் பார்க்க விருக்கிறோம். தேர்தல் முடிந்த உடன் வி.பி.திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர்களுக்கும், முன் பணமனுப்பாதவர்களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது ‘குடி அரசு’ அரசியலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, இதி காசம்,...

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு                ஒரு வேண்டுகோள் 0

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சென்னை மாகாண வட மத்தியபாக ஜமீன் தொகுதியான சித்தூர், செங்கல்பட்டு, சென்னை, கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் ஆகிய ஜில்லாக்களின் ஜமீன்தாரர்கள் பிரதிநிதியாக சென்னை சட்டசபைக்கு வரப்போகும் தேர்தலுக்கு கனம் பனகால் ராஜா அவர்களுக்குப் போட்டியாக சென்னை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் என்கிற ஒரு பார்ப்பனர், ஜமீன்தார் என்கிற பேரால் நிற்கிற விஷயம் எல்லோரும் அறிந்ததே. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நாம் இதைப் பற்றி எழுதியிருந்தோம். ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் சட்ட சபைக்கு நிற்கும் நோக்கமெல்லாம் எவ்வகையிலாவது பனகால் ராஜாவை சட்டசபையிலிருந்து துரத்திவிட்டுப் பார்ப்பன ஆதிக்கத்தைச் சட்ட சபையில் நிலை நிறுத்த வேண்டும் என்கிற எண்ணமே. ஆதலால் பார்ப்பன ரல்லாத ஜமீன்தார்கள் ஓட்டுகளே 100க்கு 75 பேராக இருந்தும் பனகால் ராஜாவின் விரோதிகளான இரண்டொரு ஜமீன்தாரர்களின் ஆதரவையும் ஸ்ரீமான் அல்லாடி ஐயரின் வக்கீல் உத்தியோகத்தின் பலனாய் அடிமை கொண்ட சில ஜமீன்தாரர்களுடைய உதவியையும், மற்றும்...

செந்தமிழ்ச் செல்வி                                     ( மாத வெளியீடு ) 0

செந்தமிழ்ச் செல்வி ( மாத வெளியீடு )

நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலை சிறந்து நிற்கும். மேனாடுகளை நோக்க நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல்வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துக்களை ஒருங்கு திரட்டி உணர்த்தலால் மக்கள் அறிவை பண்படுத்து தலில் பத்திரிகைகள் வல்லன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் ‘அரசியல் கிளர்ச்சியில்’ பாய்ந்து செல்லும் வேகத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின் றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லாருக்கும் பயன்படத்தக்க ஒரு ஸ்திரமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத்தை பிணித்திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்ய வல்லன மாத வெளியீடுகளேயாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதா னமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளி வர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடுகளிற் சிறந்தது நமது “செந் தமிழ்ச் செல்வி” எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத் திலும்...

தமிழ்நாட்டிலிருந்து                             ‘மற்றொரு இந்தியத் தலைவர்’ 0

தமிழ்நாட்டிலிருந்து ‘மற்றொரு இந்தியத் தலைவர்’

பண்டித மோதிலால் நேரு அவர்கள் தனக்கு அசௌகரியம் ஏற்படும் போதெல்லாம் நம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களில் ஒருவரைத்தான் பதில் (ஆக்டிங்) தலைவராய் நியமிப்பது வழக்கம். அது போலவே சென்ற வாரமும் தனக்கு லாகூரில் இருக்க சவுகரியமில்லாததால் ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது ஸ்தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார். முதல் தடவை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அழைப்புவந்தது. மறுதடவை ஸ்ரீமான் எ. ரங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம் தடவை ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி களுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந் தடவை கும்பகோணம் சக்கரவர்த்தி ஐயங் காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம். ‘‘இந்தியாவின் பாக்கியமே பாக்கியம். அதிலும் தமிழ்நாட்டின் பாக்கியமே பாக்கியம்.’’ குடி அரசு – செய்தி விளக்கம் – 10.10.1926

யாருக்கு ஓட்டு கொடுப்பது – சித்திரபுத்திரன் 0

யாருக்கு ஓட்டு கொடுப்பது – சித்திரபுத்திரன்

ராஜு : என்னப்பா சுந்தரம் சட்டசபை எலக்ஷன் வந்து விட்டதே, கண்டவர்கள் எல்லாம் அபேக்ஷகராய் நிற்கிறார்களே இவர்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது. சுந்தரம்: யாருக்கோ ஒருவருக்குப் போட்டால் போகிறது. நாம் என்ன ஒத்துழையாதாரா? யாருக்கும் போடுவதில்லை என்று சொல்லுவ தற்கு. அதெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் ஒத்துழைப்பேற்பட்டதோடு ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஒத்துழைப் பதாய்ப் போய்விட்டது. ராஜு:நீ சொல்லுவது சரிதான். ஆனாலும், அதிலும் தராதரம் இல்லையா? சுந்தரம்: தராதரம் என்ன? சுயராஜ்ஜியக் கட்சிக்காரருக்குத்தான் போட்டு விடேன். ராஜு: அதென்ன அவ்வளவு அசார்சமாய்ச் சொல்லுகிறாய். சுயராஜ்ஜியக் கட்சி என்றால் என்ன? அதன் கொள்கை என்ன? அதன்றி வேறு கட்சிகள் என்ன என்ன இருக்கிறது? இவைகள் தெரிய வேண்டாமா? சுந்தரம்: ஓஹோ ! இதுவே இன்னமும் உனக்குத் தெரியாதோ. சரி சரி, நீ சரியான தற்குறி போல் இருக்கிறாய். சுயராஜ்யக் கட்சி என்பது அரசியல் கட்சி என்று பெயர். அது முதலில் ஒத்துழையாமை...

வெற்றி நமதே சட்டசபைத் தேர்தலில்                                  பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வெற்றி உறுதி 0

வெற்றி நமதே சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வெற்றி உறுதி

சென்னை மாகாண சட்டசபை முதலியவைகளுக்கு இம்மாதம் நாலாம் தேதி அபேக்ஷகர்கள் நியமனம் செய்யப்பட்டு விட்டது. அபேக்ஷ கர்கள் பற்பல கக்ஷிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு நியமனம் பெற்று இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர் கட்சி, பார்ப்பனரல்லாதார் கட்சி என்னும் இரண்டு கட்சிகளுக்குள்ளாகவே ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் இரு கட்சிகளையும் பற்றி லட்சிய மில்லாமல் தங்கள் சுயநல மொன்றையே பிரதானமாய்க் கருதி நின்றிருக் கலாம். அதாவது, பார்ப்பன ரல்லாதார்களில் யார் யார் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நிறுத்தப்பட்டிருக் கிறார்களோ அவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தை உத்தேசித்தே அக்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக, சுயராஜ்யக் கட்சியில் இருக்கும் பார்ப்பன ரல்லாதாராகிய ஸ்ரீமான்கள் முத்தையா முதலியார், துளசிராம் போன்ற பலரைச் சொல்லலாம். இவர்கள் முதலில் ஜஸ்டிஸ் கக்ஷியில் இருந்து மனஸ்தாபத்துடன் விலகினவர்கள். இப்போது சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இதற்குக் காரணம் இதுசமயம் பார்ப்பனர் தயவில்லாமல் சட்டசபைக்கு வர முடியாது என்கிற பயமும்,...

5000 ரூபாய் இனாம் 0

5000 ரூபாய் இனாம்

தமிழ்நாட்டுச் சார்பாக இந்திய சட்டசபைக்குச் சென்ற தடவை ஒருவர் தவிர எல்லோரும் ஐயங்கார் பார்ப்பனர்களாகவே நின்றார்கள். இந்தத் தடவையும் அதேமாதிரி எல்லோரும் ஐயங்கார் பார்ப்பனர்களாகவே நிற்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் சார்பாய் இந்திய சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதிக்கு நிற்கும் ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் நிற்கிறார். எப்படியாவது ஸ்ரீமான் சக்கரை செட்டியாரை தோற்கடித்துத்தான் வெற்றிபெற ஆசைப்பட்டு பணங் கொடுத்து ஆள்களைச் சேர்த்து பொய்ப் பிரசாரம் செய்கிறார். இதற்காகத் தன்னைப் பெரிய தியாகி என்று சொல்லச் சொல்லுகிறார்; தனக்கு ஓட்டுக் கொடுத்தால் சீக்கிரம் சுயராஜ்யம் வருமென்று சொல்லச் சொல்லுகிறார். ஆனால் ஒருவராவது இதுவரை ஐயங்கார் என்ன தியாகம் செய்தார் என்று சொல்லவில்லை. ஒருவராவது இதுவரை ஐயங்காரின் சுயராஜ்யத் திட்டம் இன்னது என்று சொல்லவில்லை. ஐயங்கார் தியாகமெல்லாம் வக்கீல் உத்தி யோகத்தில் மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பாதித்துப் பணம் சேர்த்து வருவதோடு, காலி ஆசாமிகளுக்கும் கொஞ்சம் கூலி கொடுத்து பார்ப்பனரல் லாதார் கட்சியையும்...

டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல் 0

டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல்

ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு சுயராஜ்யக் கட்சியைப் பார்ப் பனர் கட்சி என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும், தேர்தலில் சுயராஜ்யக் கட்சி வெற்றி பெற்றால் பார்ப்பன ஆதிக்கம் ஓங்குவதுடன் பார்ப்பன ரல்லாதாருக்கு மீளாத ஆபத்து வரும் என்றும் சொன்னதிலிருந்து, நமது பார்ப்பனரும், அவர்களிடம் கூலி பெற்று வயிறு வளர்க்கும் கூலிகளும், பத்திரிகைகளும் டாக்டர் நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது “நாயுடு சங்கதியை வெளிப்படுத்தப் போகிறோம். அவர் ஜயிலில் நடந்து கொண்டதை வெளிப்படுத்துகிறோம்” என்று என்ன என்னமோ ஈனத்தனமாய்க் கூச்சல் போடுகின்றார்கள். அப்படியானால் டாக்டர் நாயுடுவின் செய்கை என்ன என்பதை ஒரு கை பார்த்தே விடலாம். சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம் , பிராந்தி, சாப்பிடு கிறாரா? சுயராஜ்யக் கட்சி பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களிலெல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம் பிராந்தி விற்றுப் பணம்...

உண்மையான தீபாவளி 0

உண்மையான தீபாவளி

தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து, பெருவாரியான இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்து தங்கள் குழந்தை குட்டிகள், மக்கள், மருமக்கள் முதலானவர்களோடு களிக் கும் ஒரு பெரிய பண்டிகையாகும். அப்பண்டிகையன்று ஏழையானாலும் பணக்காரனானாலும் கூலிக்காரனானாலும் முதலாளியானாலும் பண்டிகை யை அனுபவிப்பதில் வித்தியாசமில்லாமல் தங்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி ஸ்நானம் செய்வதும், புது வஸ்திரங்களை அணிவதும், பலகாரங் களை உண்பதும் முக்கிய கொள்கையாகும். இக்கொள்கைகள் எந்த தத்துவங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதில் எவ்வளவு அபிப்பி ராய பேதங்கள் இருந்த போதிலும், பொதுவாய் மக்கள் சந்தோஷத்திற்கு புதிய வஸ்திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதானால் ஏழைத் தொழிலா ளருக்கு ஒரு விடுதலையும் ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லா மல் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும் களிப்பும் பலவிதமாயிருந்தாலும், பெரும்பாலும் மேற்படி தீபாவளியானது ஏழைத் தொழிலாளர்களுக்கு பெருந் துரோகத்தை செய்வ தற்கே வருவதாகவும் போவதாகவும் ஏற்பட்டு விட்டது. இவ்வித துரோகத் திற்கு பணக்காரர்களும் உத்தியோகஸ்தர்களுமேதான் பெரும்பாலும் ஆதரவளிப்...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும் 0

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப்படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக ‘திராவிடனில்’ காணப்படு கிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ; ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ² (சட்டசபைத் தேர்தல் தீர்ந்த தற்குப்)பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன ரல்லாதார்களை யாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப்பார்களா என்பதை தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 03.10.1926

இந்தியாவின் ‘ஏக தலைவ’ரான           ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரின் முடிவான லக்ஷியம் 0

இந்தியாவின் ‘ஏக தலைவ’ரான ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரின் முடிவான லக்ஷியம்

எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட் டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ‘ஏக தலைவரான’ ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லக்ஷியம் தான் இருக்கிறதாம். அதாவது:- 1. ஸ்ரீமான்கள் ஏ.ராமசாமி முதலியாரவர்களையும், பனகால் ராஜா வையும் சென்னை சட்டசபையில் ஸ்தானம் பெறாதபடி செய்து விடவேண்டும். 2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 3. ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும். ஆகிய இம்மூன்று லக்ஷியங்களும் நிறைவேறிவிட்டால் பிறகு, தான் ராஜீய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனித னுக்குச் செல்வம், பெண்,கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லக்ஷியமான தாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப்பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்ட தாம். மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்னபடி சென்னை சட்ட சபையில் ஸ்ரீமான்கள் ஏ.ராமசாமிமுதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா...

நவசக்தி 0

நவசக்தி

இத் தலைப்பைக் கண்டவுடன் ‘நவசக்தி’க்கும் ‘குடிஅரசு’க்கும் ஏதா வது போர் நிகழுமோ என பலர் சங்கடப்படவும், பலர் சந்தோஷப் படவும், பலர் வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைக்கவும் இடங் கொடுக்குமோ என்று நினைக்கிறோம். ஆனாலும் அம்மாதிரியாக எதிர்பார்ப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாற்றமடையக் கூடும். நிற்க, சென்ற ‘குடி அரசு’ இதழில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காரை ஸ்ரீமான் முதலியாரவர்கள் தொழிலாளர் சங்கத்திற்கு அழைத்து அவரை அறிமுகப்படுத்தி வைத்ததைப் பற்றி எழுதி யிருந்தோம். அதைக் கண்டு அவரது ‘நவசக்தி’ ‘குடிஅரசை’ ச்சீறி இருக் கிறது. ஆனால் அதற்காக நாம் சீற்றம் கொள்ளவில்லை. தொழிலாளருக் கென்றே அவதரித்தவர் எனத் தொழிலாளரின் நன்மதிப்பையும், பின்பற்று தலையும் பெரிதும் பெற்ற ஸ்ரீமான் முதலியாரவர்கள் வாக்கால் “ஸ்ரீமான் அய்யங்கார் தொழிலாளர் விஷயத்தில் மிகுந்த சிரத்தை உள்ளவர் என்றும், காங்கிரஸ் அக்கிராசனப் பிரசங்கத்தில் தொழிலாளரைப் பற்றிக் கூற வேண்டும் என்றும், ஸ்ரீமான் அய்யங்கார் சட்டசபையில் தொழிலாளருக்கு ஏற்ற சீர்திருத்தங்கள் செய்ய வேண்டு மென்றும்” கேட்டுக்கொண்டால்...

“தேசிய அறிக்கை” 0

“தேசிய அறிக்கை”

மேல்படி தலையங்கம் கொண்ட அறிக்கையொன்று சென்னை ‘தமிழ்நாடு’ காரியாலயத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்டதை வேறு இடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதை அனுசரித்து ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்களால் ஒரு அச்சடித்த அழைப்புக் கார்டும் சிலருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவ்வழைப்புக்கு யாவரும் போக வேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகிறோம் . ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தாயாருக்கு இது சமயம் கடினமான காயலா வாயிருக்கிற படியால் 9-ந் தேதிக்கு சென்னை போக அவருக்கு சவுகரியமாயிருக்குமோ இருக் காதோ என்பது சந்தேகமாயினும் அது பற்றி நமது அபிப்பிராயத்தை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தேசீய அறிக்கையில் குறித்திருக் கும் ஒரு விஷயத்தை நாமும் பலமாய் ஆதரிக்கிறோம். அதாவது, “சுயராஜ்யக் கக்ஷி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாகப் பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்னும் வளர விட்டுக் கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும்” என்ப தாகும். இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்ன தாகவே கொண்டுள் ளோம். ஆதலால் ‘தமிழ்நாடு’ம்...

தீண்டாமை விலக்குச் சட்டம் 0

தீண்டாமை விலக்குச் சட்டம்

“பொதுத் தெருக்களில் எவரையேனும் நடக்கக்கூடாது என்று தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் போடலாம்” என்கிறதாக ஒரு பிரிவை சென்னை ஜில்லா லோக்கல் போர்டு சட்டங்களில் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறி விட்டதாகவும், முனிசிபாலிட்டி சட்டத்திலும் இவ்வித திருத்தம் செய்யவேண்டுமென்று கொண்டு வரப்பட்ட திருத்தம் தான் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்ரீமான் வீரய்யன் அவர்களால் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பு : இவ்வித சட்டம் செய்யப்பட்டது பற்றி நாம் மிகுதியும் களிப்பெய்துகிறோமானாலும் பார்ப்பன வக்கீல்களும் பார்ப்பன நீதிபதிகளும் இச்சட்டம் செய்தவர் கருத்துப்படி பலனளிக்கச் சம்மதிப்பார்களா? அவர் களது சட்ட ஞானமும் பாஷ்ய ஞானமும் இச்சட்டத்தை உயிருடன் வைத் திருக்கச் சம்மதிக்குமா என்று கேட்கிறோம்? ( ப – ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 03.10.1926

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்

நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாக சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித்திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோட்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேக்ஷகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவானான ஸ்ரீமான் வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து தங்கள் சமூகத் தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக்காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந் தன்மை யையும் குலாபிமானத்தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்டதினாலே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை ஸ்தானம் கிடைத்து விடும் என்று நம்பி அஸ்வாரஸ்யமாய் இருந்துவிடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரசாரம் செய்து கிராமத்து குடியான மக்களு...

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம் 0

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம்

ஸ்ரீமான் பி.எஸ். குருசாமி நாயுடு அவர்களும் ஸ்ரீமான் ஒ.எ.ஓ.கே. லட்சுமணன் செட்டியார் அவர்களும் ராயப்பேட்டை டிவிசன் நகரசபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்கள். இதில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் நியமனத் தேதியில் கௌரவ மாஜிஸ்திரேட்டாக இருந்ததால் சட்டப்படி அபேக்ஷக ராயிருக்க அருகரல்லவென்று கமிஷனர் அவரை நீக்கித் தேர்தல் நடத்த உத்திரவிட்டார். இதன் மேல் அத் தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள் சென்னை ஸ்மால் காஸ் கோர்ட்டில் ஒரு பார்ப்பன நீதிபதியிடம் தடை உத்திரவு வாங்கினார்கள். அது அவரிடமே நிவர்த்தி செய்யப்பட்டும், மறுபடியும் இதன் பேரில் நமது பார்ப்பனர் ஹைக் கோர்ட்டில் பார்ப்பன ரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம் ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள். இதையும் அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த மூன்று ஜட்ஜிகளால் உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள் உத்திரவிற்கு விரோதமாய் மறுபடியும் ஒரு பார்ப்பன ஹைகோர்ட் ஜட்ஜிடம் நமது பார்ப் பனர் அத்தேர்தலையும் நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள்....

“காங்கிரஸ் விளம்பர சபை” 0

“காங்கிரஸ் விளம்பர சபை”

நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் ‘காங்கிரஸ் விளம்பர சபை’ என்பதாக ஒரு யோக்கியப் பொறுப்பற்றதும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரிலும் அவர்கள் இயக்கத்தின் பேரிலும் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் எழுதி வருகிறார். இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இதுகள் ஒவ்வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற்கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ‘ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம். அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத் தில் மூடு வண்டியில் அகப்பட்டு திக்கு முக்காடி இறந்து போன சம்பவத்தைக் குறித்து 22.9.26 ² சுதேசமித்திரனில் பார்ப்பனரல்லா தார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கக்ஷியார் இதைப்பற்றி ஒன்றும்...

பனகால் ராஜாவின் உளறலா?  பார்ப்பனர்களின் போக்கிரித்தனமா? ( மித்திரனின் விஷமம் ) 0

பனகால் ராஜாவின் உளறலா? பார்ப்பனர்களின் போக்கிரித்தனமா? ( மித்திரனின் விஷமம் )

தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த தூதர்களுக்கு சென்னை மந்திரிகள் ஒரு விருந்து நடத்தியிருக்கிறார்கள் . அவ்விருந்தில் அத்தூதர் களை பனகால் ராஜா பாராட்டிப் பேசுகையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்பட்ட பல நன்மைகளைப் பற்றியும், தென்னாப்பிரிகா போன்ற பல குடியேற்ற நாட்டின் சம்பந்தத்தைப் பற்றியும் சில வார்த்தைகளும் சொல்லி விட்டு இந்தியாவிலிருக்கும் சில பண்டைக்கால நாகரீகத்தின் வேறுபாடு களுக்காக எங்களைத் தாழ்வாய் கருதக்கூடாது, தற்கால சமூக சம்பிரதாயங் களுக்கு அதுகள் பிடிக்காமல் இருப்பது வாஸ்தவம்தான் ஆனால் அவை துரிதமாக மறைந்து வருகிறது என்று சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன் என்று பேசியிருக்கிறார். (இது சுதேசமித்திரனிலேயே இருக்கிறது) இந்த வார்த்தைகளுக்காக மித்திரன் ‘பனகால் ராஜாவின் உளறல்’ என்று போக்கிரித் தனமான தலையங்கமிட்டு இதைக் குறிப்பிட்டிருப்பதுடன் ‘தேசாபிமானமற்ற மந்திரி’ என்கிற தலையங்கங் கொண்ட வியாசமும் எழுதியிருக்கிறான். அதோடு தென்னாப்பிரிக்காவில் உள்ள தங்கள் கோவில்களில் ‘நாய்களும், கருப்பு மனிதர்களும் உள்ளே வரக்கூடாது’ என்று விளம்பரம் எழுதி ஒட்டியிருப்பதற்காக மிகவும் வருந்துவதாக...

சென்னை வாசிகளே                                       என்ன செய்யப் போகிறீர்கள் ?  -சித்திரபுத்திரன் 0

சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள் ? -சித்திரபுத்திரன்

ஈரோடு ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்திர முதலியார், ஆரியா, சக்கரை செட்டியார் , தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், பம்பாய் புலி ஜயகர் ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தியாகிகளை யெல்லாம் காங்கிரசை விட்டுப் போகும்படி துரத்திவிட்டு இவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டுப் போய் விட்டதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் போய்விட்டதென்று சொன்னவரும் இன்னமும் வக்கீல் தொழிலில் மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டு இருப்ப வரும், நேற்று காங்கிரசில் வந்து சேர்ந்தவருமான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது பி.ஏ.,பி.எல்., 20 வருஷத்திற்கு முன் படித்திருந்தும் நாளது வரை வக்கீல் உத்தியோகத்திற்கு போகாதவரும் பள்ளியில் படிக்கும்போதுமுதலே தேசத்திற்காகப் பேசி, தேச பக்தராயிருந்த பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டு லண்டனுக்குப் போனவருமான ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் என்கிற பார்ப்பனரல்லா தாருக்கு ஓட்டுச் செய்கிறீர்களா? தேசத்திற்காக 5 வருஷ காலம் ஜெயிலுக்குப் போன...

இந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்                                                                         பனகால் ராஜாவுக்கே ஜே! 0

இந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் பனகால் ராஜாவுக்கே ஜே!

தென்னாட்டுப் பார்ப்பனர்களின் எவ்வளவோ சூழ்ச்சிக்கும் தப்பி இந்துமத பரிபாலன மசோதா என்று சொல்லப்படும் தேவஸ்தான மசோதா சட்டசபையில் சட்டமாக நிறைவேறி விட்டது. தேவஸ்தான சட்டம் சட்ட சபைக்கு வந்தவுடன் பலர் அதை முட்டித் தள்ளிவிட என்ன என்னமோ சூழ்ச்சிகள் செய்து பார்த்தும் சுமார் 500 திருத்தப் பிரேரேபணைகளைக் கொண்டு வந்து தங்களால் ஆனவரையில் அதை ஒழிக்கப் பார்த்தார்கள். கடைசியாகப் பொது ஜனங்களின் அதிகப் படியான பிரதிநிதிகளும் சர்க்காரும் இவைகளுக்குக் கொஞ்சமும் மனந் தளராமல் ஒரே உறுதியாய் இருந்து சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். திருத்தப் பிரேரேபணைகளின் யோக்கியதைகளைச் சரியாய் கவனித்து வந்தவர்களுக்கும் சட்ட சம்மந்த மாய் கிளப்பப் பட்ட ஆnக்ஷபணைகளை சரியாய் கவனித்து வந்தவர்களுக் கும், இச்சட்டத்தை ஆnக்ஷபித்தவர்கள் கருத்து என்ன என்பது விளங்கா மல் போகாது. இதில் பொதுமக்கள் கவனத்தைக் கவரத்தக்க ஒரு திருத்தப் பிரேரே பணையைப் பற்றி இதில் பிரஸ்தாபிப்போம். அதாவது எல்லா கோவில்களிலும் பஞ்சமர்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும்...

தமிழ்நாட்டுத் தலைவர்கள் 0

தமிழ்நாட்டுத் தலைவர்கள்

காஞ்சீபுரம் மஹாநாட்டில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளையாவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்று சொல்லப்படும் ஸ்ரீமான்கள் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களும் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள் என்று நாம் அப்போது எழுதியிருந்தோம். பிறகு எப்படியோ நாட்டின் நல்ல காலத்தின் பலனாய் இவ்விருவர்களும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை பிரிந்த தல்லாமல், அவர் தலைமை வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும் தாங்கள் இருப்பது சரியல்ல என்று கருதி ஏதோ சாக்கைச் சொல்லிக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். இவ்விரு கனவான்களும் தைரியமாய் வெளி வந்த காரணம் மறுபடியும் தங்களில் யாரும் ஸ்ரீமான் அய்யங்காருடன் போய் சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க நினைக்க மாட்டார்கள் என்கிற பரஸ்பர நம்பிக்கைதான் அய்யங்காரின் “பூளவாக் கையும்”, “அரசியல் யோக்கியதையும்” தைரியமாய் வெளியிட இடம் கொடுத்தது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதற்கு உதாரணம், ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தனது பத்திரிகையில் “உரிமையில்லா...

கோயமுத்தூர் ஜில்லா                              சட்டசபைத் தேர்தல் நிலைமை 0

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் நிலைமை

கோயமுத்தூர் ஜில்லாவில் சட்டசபைத் தேர்தலுக்கு ஏற்பட்ட 3 ஸ்தா னங்களுக்கு இதுவரை ஐந்து கனவான்கள் நிற்கிறார்கள். அவர்கள்:- ஸ்ரீமான் சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், டி.எ. ராமலிங்கம் செட்டியார், சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார், பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் ஆகிய ஐந்து கனவான்கள். இவர்களுள் ஸ்ரீமான்கள் வெங்கிட்டரமணய்யங்கார், ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகிய மூவரும் இதற்கு முன் இரண்டு தடவை 6 வருஷம் சட்டசபையிலிருந்து அப்பதவியையும் பெருமையையும் அனு பவித்து வந்தவர்கள். இவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை. ஏனெனில் சட்டசபையில் அரசியல் சம்பந்தமாய் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது நமது தாழ்மையான தும் உறுதியானதுமான அபிப்பிராயம். ஆனால் அதன் மூலம் தங்கள் தங்கள் சமூகத்தின் சுயமரியாதைக்கு ஏதாவது உழைக்க அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்பதோடு அப்பதவி ஒரு கௌரவமும் அந்தஸ்து முள்ள ஸ்தானம் என்றே தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில்...

தற்கால நிலைமையும் நமது கடமையும் 0

தற்கால நிலைமையும் நமது கடமையும்

சகோதரி சகோதரர்களே! நான் இந்த ஊரில் தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு நடந்த பிறகு இன்று தான் முதல் தடவையாக வந்திருக்கிறேன். இந்தக் காஞ்சீபுரம் நமது சரித்திர புராணக் காலங்களில் எப்படி முக்கியமானதோ அது போலவே தற்கால அரசியல் சமூகவியல் முதலிய இயக்கங்களின் சரித்திரத்திற்கும் முக்கிய மானதாக இருந்து வருகிறது. ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாக ஏற்படுவதற்கும், பெசண்டம்மை யாரின் அரசியல் வாழ்வில் மாற்றம் ஏற்படவும், இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமதி சரோஜினியம்மாள் அக்கிராசனத்தின் கீழ்க் கூடிய சென்னை மாகாண கான் பரன்சில்தான் அஸ்திவாரம் போடப்பட்டது. அது போலவே காங்கிரஸ் இயக் கம் தேசத்தில் செல்லுபடியற்றதாகவும், சுயராஜ்யக் கட்சிக்கு உளைமாந்தை வரவும், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வெளியாகவும் இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு மகாநாட்டில் தான் அஸ்திவாரம் போடப்பட்டது. காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அப்புறம் தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா தேசத்தி லேயே அரசியலிலும் சமூகயியல்களிலும் பெரிய...

ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் 0

ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்

ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் இம்மாதம் 16-ல் கோவையிலிருந்து கொழும்பு மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குப் பிரயாண மாகிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலுள்ள பார்லிமெண்ட் பிரதிநிதிகள் எல்லோரையும் ஆஸ்ற்றிய அரசாங்கத்தார் தருவித்து ஒவ்வொரு பார்லி மெண்டின் நடவடிக்கைகளையும் போக்கையும் பற்றி எடுத்துப் பேசி ஒருவ ருக்கொருவர் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை பரிமாறிக் கொள்வதற் கும் நன்மையான முறைகளை ஒவ்வொருவரும் ஒருங்கே கையாளவும், தீமையின் முறைகளைக் கைவிடவும் ஒரு பயிற்சி ஏற்படுவதற்காக கூடப் படும் ஏகாதிபத்தியம் மந்திராலோசனை சபைகளின் பிரதிநிதிகள் கூட்ட மொன்று ஆஸ்த்திரேலியா அரசாங்கத்தாரால் கூட்டப்படுகிறது. இக்கூட்டத் திற்குப் பிரிட்டிஷாருக்குள்ள “குடியேற்ற நாடுகளின் பார்லிமெண்ட்” என்று சொல்லப்படும், மந்திராலோசனை சபையார்கள் எல்லாம் தங்கள் தங்கள் சபைச்சார்பாக பல பிரதிநிதிகளை தெரிந்தெடுத்தனுப்புகிறார்கள். அது போலவே நமது இந்தியாவுக்கும் ³ மகாநாட்டுக்கு இந்திய பிரதிநிதி யாக இந்தியா சட்டசபையாரும் நமது ராஜாங்க சபையாரும் நமது ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரையும் மற்றொரு ஐரோப்பியரையும் தெரிந் தெடுத்திருக்கிறார்கள். ³...

பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன? கும்பகோணத்து “பிராமணனின்” லஜ்ஜையும் சீற்றமும் 0

பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன? கும்பகோணத்து “பிராமணனின்” லஜ்ஜையும் சீற்றமும்

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான் களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப் பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும் , சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரி கைகளும், “பிராமணன்” என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகை யும் கூச்சல் போடுகின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்ப னன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளை யும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்த வன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மை யாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல. உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் ‘சுவாமி’ என்று கூப்பிட வேண்டும்?...

பார்ப்பனர் தேர்தல் முழக்கம் 0

பார்ப்பனர் தேர்தல் முழக்கம்

சென்னையில் தேர்தல் முழக்கம் தெருத்தெருவாய் முழங்குகிறது. பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஸ்ரீமான்கள் எஸ்.சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகள், எ.ரெங்கசாமி அய்யங்கார் எம்.கே. ஆச்சாரியார் முதலியவர்கள் மடாதிபதிகள் பணத்தாலும் மகந்துகள் பணத்தாலும் தெருத் தெருவாய், ஜில்லா ஜில்லாவாய்ப் பார்ப்பனரல்லாத சில கயவர்களையும் சேர்த்துக் கொண்டு தேர்தல் முழக்கம் செய்கிறார்கள். அம்முழக்கத்தில் உபயோகிக்கும் தந்திரங்கள் என்னவென்று பார்ப்போமானால், பார்ப்பன ரல்லாதார் முற்போக்குக்காக ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் இயக்கங் கள் மீது, பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி தூஷணை செய்வதும், தேசத்திற்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் உழைத்து வரும் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும், பொல்லாப்பு களையும் பழிகளையும் சொல்லி அவர்களிடம் பொது ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகும்படி செய்வதுமாகவே இருக்கின்றன. இதன் பயனாய்ப் பார்ப்பனரல்லாத பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் ஓட்டு பெற்று சென்னை சட்டசபை, இந்தியா சட்ட சபை முதலிய ஸ்தானங்கள் பெற்று அவற்றின் மூலம் ஏற்பட்ட உத்தியோகங்கள் அதிகாரங்கள் முழுவதையும் தங்கள் இனத்தவர்களாகிய...

சேவையும் பாராட்டுதலும் 0

சேவையும் பாராட்டுதலும்

கனவான்களே! நான் உங்கள் அழைப்பிற்கு வந்தேனேயொழிய பிரசங்கம் செய்ய வரவில்லை. முதலியாரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லும்படி அக்கி ராசனர் கட்டளையிட்டார். நான் அவரை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளு கிறேன். ஸ்ரீமான் முதலியார் எனது நண்பர்; அவரைப் பற்றி நான் புகழ் பேசுவது எனக்கும் ஒழுங்கல்ல; ஸ்ரீமான் முதலியார் அவர்களும் இதைப் பொறுக்கமாட்டார். அல்லாமலும் இது சமயம் அவர் தேர்தல் வேலையில் இருக்கிறார். நான் ஏதாவது இப்பொழுது அவரைப் பற்றி பேசுவதாயிருந் தாலும் அதை பொது ஜனங்களோ அல்லது அவர் போன்ற அபேக்ஷகர்களோ முதலியாருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நான் அவரைப் புகழ்வதாய் நினைக்கக் கூடும். தவிரவும் ஸ்ரீமான் முதலியார் அவர்களும் இம்மாதிரி ஆடம்பரத்தையும் வரவேற்பையும் விரும்பும் சுபாவமுடையவரல்லர் என்பது என்னுடைய அனுபவம். ஆனால் என்ன செய்வார் பாவம். இந்தக் காலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்பவர்களுக்கு இந்த மாதிரி ஆடம் பரமும் வரவேற்பும் விளம்பரங்களுமே பிரதான யோக்கியதாம்சமாய்ப் போய்விட்டதால், இவரும் சட்டசபைத்...

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின்                   சமத்துவ ஞானம் 0

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் சமத்துவ ஞானம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனது வெற்றிக் கொண்டாட்டத்தில் பேசும் போது சமத்துவத்தைப் பற்றிச் சொன் னதில் “ஜாதி வித்தியாசத்தை சமூக விஷயங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் விஷயத்தில் அது வேண்டாம்” என்று சொன்னதாக 6 -ந் தேதி ‘மித்திரனில்’ காணப்படுகிறது. இதன் தத்துவம் என்ன என்பதை அவர் பின்னால் திரியும் கோடாரிக் காம்புகள் யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம். சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் என்றால் என்ன? அவர்கள் பிராமணர்கள் நாம் சூத்திரர்கள் என்பதை வைத்துக் கொள்ள வேண்டியதும் பிறவியிலேயே அவர்கள் உயர்ந்தவர்கள், நாம் தாழ்ந்தவர்கள் என்கிறதும் தானா அல்லவா? அல்லாமல் எல்லோரும் சமம் என்கிற கருத்தாயிருந்தால் சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் எதற்காக இருக்க வேண்டும் என்கிறார். தவிர அரசியலில் ஜாதி வித்தியாசம் வேண்டாம் என்றால் அதனின் தத்துவம் என்ன? அரசியலில் உள்ள எல்லா சுதந்திரங்களையும் பதவி களையும் உத்தியோகங்களையும் ஜாதி வித்தியாசமில்லாமல் ‘‘படித்த வர்களும் கெட்டிக்காரர்களும்...

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் ஆசை 0

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் ஆசை

நமது ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரும் அவரது கோஷ்டியாரும் காங்கிரஸ் பிரசாரம் என்கிற பெயரை வைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாத சமூகத்தை அடியோடு அழிப்பதற்காக ஆங்காங்கு செய்து வரும் பிரசாரத் தைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வருகிறோம். அதன் மூலம் அவர்கள் கோருவது என்ன என்பதையும் அவர்களின் ஆசை என்ன என்பதையும் பொதுமக்கள் ஒருவாறு அறிந்திருக்கலாம். ஆனால் சமீபகாலமாய் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் பல பதவிகள் அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், தமிழ்நாடு சுயராஜ்ய கக்ஷித் தலைவர், எல்லா இந்திய சுயராஜ்ய கட்சித் தலைவர், எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகள் அடையக் கோரி செய்து வந்த பிரயத்தனங்கள் பலித்து விட்டதின் பலனாய்த் தலை கிறுகிறுத்துப்போய் குடிகாரன் வெறிகாரன் பேசுவது போல் பேசத் தொடங்கி விட்டார். இதன் பலனாய் அவரது உள்ளக் கிடக்கை அப்படியே வெளியாய் விட்டது. அதென்னவெனில் இம்மாதம் 10 ² ‘தமிழ்’ சுயராஜ்யாவில் 6-ம் பக்கத்தில் அரசாங்கத்தார் என்ன செய்கிறார்கள் என்கிற...

வடஆற்காடு ஜில்லாவுக்கு சட்டசபை அபேக்ஷகர்கள் 0

வடஆற்காடு ஜில்லாவுக்கு சட்டசபை அபேக்ஷகர்கள்

பார்ப்பனர் ஆயுதமாகிய காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக வடஆற்காடு ஜில்லாவுக்கு மைலாப்பூர் அய்யங்கார் ‘சுவாமி’களால் சட்ட சபைக்கு நிறுத்தின பான்மையும், நிறுத்தப்பட்ட மூன்று கனவான்களின் யோக்கியதையைப் பற்றியும், ஆரணி, ஆற்காடு ஜில்லா காங்கிரஸ்வாதி ஒருவர் எழுதிய கடிதத்தை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதை ஊன்றிப் படிப்பவர்களுக்கு அய்யங்கார் சூழ்ச்சிகளின் தத்துவம் விளங்கா மல் போகாது. அதிற்கண்ட ஸ்ரீமான் செட்டியார் பார்ப்பனரல்லாதாரிடம் வரும் போது நானும் பார்ப்பனரல்லாத வகுப்பைச் சேர்ந்தவன். எப்படி யாவது நமது நாட்டுப் பார்ப்பனீயத்தை ஒழித்தால்தான் சுயராஜ்யம் வரும் என்று சொல்லு வார். பார்ப்பனர் இடம் செல்லும் போது “ஏமி சுவாமிலூ மனக்கெப்புடு அமாவாச சூத்திரவாள்ளரு எப்புடு அமாவாச” என்று கேட்பார். அதாவது “என்ன சுவாமிகளே நமக்கு என்றைக்கு அமாவாசை, சூத்திரன்களுக்கு என்றைக்கு அமாவாசை” என்று கேட்டல். அல்லாமலும் காங்கிரஸ் வாதி எழுதியிருப்பது போல் தனக்கு லாபம் இல்லாமல் அவரிடம் ஒரு காரியமும் இருக்காது. நமது மந்திரிகளைக் காணும்போது நான்...

சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம் 0

சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்

எனதருமை வாலிப சகோதரர்களே! இச்சங்கத்திற்குப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் எனப் பெயரிட் டிருப்பதே பார்ப்பனரல்லாதாராகிய நமது பிற்கால nக்ஷமத்தில் மிகுதியும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இன்றைய தினம் வாலிபர்களாயிருக்கிற உங்க ளில் இருந்துதான் புத்த பகவானும், மகாத்மா காந்தியும், நாயர் பெருமானும், தியாகராயரும் போன்றோர் தோன்ற வேண்டும். இவர்கள் எல்லாம் உங்க ளைப் போல் வாலிபர்களாயிருந்தவர்கள்தான். எந்தத் தேசமும் எந்தச் சமூக மும் பெரும்பாலும் அவ்வத் தேசத்திய வாலிபர்களைக் கொண்டுதான் முன் வந்திருக்கிறதே அல்லாமல் பெரியோர்களையும் முதியோர்களையும் கொண் டல்ல. உலக வாழ்க்கையில் ஈடுபட்ட பெரியோர்களிடம் பொது நலமும் தியாக புத்தியும் காண்பது மிகவும் அரிது. சுயநலந்தான் வளர்த்து கொண்டு போகும். அவர்கள் பொதுநலத்திற்கு உழைப்பதாய்க் காணப்படுவது அவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்துத்தான் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். மகாத்மா வைப் போலவும் நாயர் பெருமான் போலவும் தியாகராயர் போலவும் சிலரே உண்மையான பெரியோர்களாய் இருக்கக்கூடும். உதாரணமாக, நாயர் பெரு மானுக்கும் தியாகராயருக்கும் பதிலாக வந்த...

ஜேஷ்டபுத்திரனும் தேசபக்தனும் 0

ஜேஷ்டபுத்திரனும் தேசபக்தனும்

சென்ற ஜுலை µ 25, 26 நாட்களில் இக்கொழும்பில் நடந்தேறிய இந்திய வாலிபர் சங்க ஆண்டுவிழாவிற்கு தலைமை வகிக்க திருவுளங் கொண்டு இனனாடடைந்து அறிய உயறிய சொற்பொழிவுகள் சில நிகழ்த்தி தாய்நாடு போந்த உண்மை தேசபக்தரும் நம் தமிழணங்கின் திருக்குமாரருமாகிய உயர்திரு. கலியாணசுந்தர முதலியாரவர்கள் இவ்வூ ரையடைந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தி பிரவூர் சென்றதைப்பற்றி இக்கொழும்பு மாநகரில் கௌரவ நடேசையரவர்களால் பிராமண ரல்லாதாரின் உதவியாலும் முயர்ச்சியாலும் நடத்தப்படுகிற தேசபக்த னென்னும் தமிழ்ப்பத்திரிகையை தற்பொழுது பி.பி. அய்யங்கார் என்பவ ரால் நடத்தப்படுகிறதாம். இப் பக்தனுக்கும் முதலியாருக்கும் என்ன வருத்தம்? இப்பத்திரிகைக்கு எவ்விதத்திலாவது ஏதாவது உதவியோ சந்தா அல்லது விளம்பரம் சேர்த்துக்கொடுத்தோர்களும், காங்கிரஸ் காரர்களும் போலி தேசாபிமானிகளும் பொதுக்காரியங்களுக்கென்று பணம் திரட்ட வருவோரும், பணக்காரர், செட்டிகள், பிராமணர்கள் முதலிய வர்களில் எவராவது இந்நாட்டிற்கு வருவதாகயிருந்தால் உடனே போற்றிப் புகழ்ந்து “நல்வரவாகுக” என்றும் தாய்நாடு செல்வதாகயிருந்தால் சென்று வருகவென்றும் பத்தி பத்தியாக அவர்களை சிறப்பித்து எழுதுகிற இப்பக்தனுக்கு...

தலைவர் பதவி பெறும்                                  வழி 0

தலைவர் பதவி பெறும் வழி

நம் நாட்டில் தேர்தல்களில் பதவிகள் பெறுதல், பட்டம் பெறுதல், சர்க்கார் உத்தியோகம் பெறுதல் முதலிய பல காரியங்கள் பெரும்பாலும் முக்காலே மூணு வீசமும் கண்ணியக் குறைவாலும் பொய்ப் பிரசாரத்தாலும் இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகிறது என்பதை சத்திய நெறியுடைய எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் பிரசி டெண்ட் என்கிற ஸ்தானம் கொஞ்ச காலமாய் அப்படிக்கில்லாமல் தனிப் பட்ட மக்களின் சுதந்தி ரத்திற்கு விடப்பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டு பிரசாரம் பண்ணியும் பணம் செலவு செய்தும், பொய் வாக்குத்தத்தம் செய்தும் இதுவரை யாரும் அந்த ஸ்தானத்தை அடைந்த தில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததின் பலனாய் இப்போது இதற்கும் மற்ற தேர்தல்களைப் போலவே யோக்கியதைகள் ஏற்பட்டுப் போய்விட்டது. ஏனெனில் மற்ற தேர்தல்களையும் பட்டங்களையும் உத்தியோகங்க ளையும் பெற நமது பார்ப்பனர்கள் என்னென்ன முறைகள் கையாண்டு அதன் யோக்கியதையைக் கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும் பிரவேசித்து விட்டார்கள். ஸ்ரீமான்...

வைப்பாட்டிக் கதை 0

வைப்பாட்டிக் கதை

சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யம் வந்துவிட்டால் பார்ப்பனரல்லாத ஸ்ரீகளை பார்ப்பனர் தங்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதாகவும், அது பார்ப்பனரல் லாதார் சமூகத்திற்கே அவமானமாய் விட்டதாகவும் ஸ்ரீமான் சீனிவாசய் யங்கார் ஒரு கூட்டத்தில் நீலிக் கண்ணீர் விட்டார். இதைப் பார்த்து அவரது இரண்டொரு பார்ப்பனரல்லாத சிஷ்யர்களும் பின்பாட்டுப் பாடி தங்கள் சமூகத்திற்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூலி மாரடித்துக் கொண்டார் கள். இவர்கள் உண்மையிலேயே நாயக்கர் சொன்னதற்காக மாரடித்துக் கொண்டார்களா? அல்லது அய்யங்காரின் உப்புக்காக மாரடித்துக் கொண் டார்களா? என்பதைக் கவனிப்போம். பார்ப்பனரல்லாதார் ஸ்ரீகளைப் பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக இருக்க சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதில் என்ன தப்பு. இதற்கு முன்னமே அந்த சட்டம் அமுலில் இருக்கிறதை இவர்கள் அறிந்தும் இன்றுதான் இதை நாயக்கர் சொல்லக் கேட்டவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள். இந்து உலகத்தில் பார்ப்பனர்...

தேர்தல் படிப்பினை 0

தேர்தல் படிப்பினை

இவ்வாரம் சென்னையில் நடந்த முனிசிபல் தேர்தல்களில் பார்ப்பனர் கட்சிக்கு இரண்டு ஸ்தானங்களும், பார்ப்பனரல்லாத கக்ஷிக்கு ஒரு ஸ்தான மும், இரண்டு கட்சிக்கும் பொதுவான கக்ஷி என்கிற சுயேச்சைக் கட்சி என்பா ருக்கு ஒரு ஸ்தானமும் கிடைத்திருக்கிறது. பொதுப்படக் கூறும்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு சென்ற மாத தேர்தலில் ஜயம் கிடைத்தது போல் பூரண ஜயம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இப் பூரண ஜயம் பெறாததற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியாரின் அளவுக்கு மீறின நம்பிக்கையே அல்லாமல் பார்ப்பனக் கட்சியின் சாமர்த்தியமும் செல்வாக்கும் அல்லவே அல்ல. அம்மன் கோவில் வார்டில் ஜயம் பெற்ற சுயேச்சைக் கட்சி என்று சொல்லிக் கொண்டவராகிய டாக்டர் ஆசீர்வாத நாடார், தான் பார்ப்பனரல் லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்றும் பார்ப்பனக் கட்சி யாகிய சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல வென்றும் தன்னையே ஜஸ்டிஸ் கட்சி அபேக்ஷகராய் நிறுத்தும்படியும் எவ்வளவோ தூரம் கேட்டுக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியார் கவனியாமல்...

பார்ப்பனரல்லாத பிரமுகர்களின்                 சுற்றுப் பிரயாணம் 0

பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் சுற்றுப் பிரயாணம்

இவ்வருட இறுதியில் நடைபெறப்போகும் இந்தியா சட்டசபை, சென்னை சட்டசபை முதலிய தேர்தல்களுக்கு கூடுமானவரை நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை அழுத்தி, பார்ப்பன ஆட்சியை நிலைநாட்ட பல வழிகளிலும் செய்து வரும் சூழ்ச்சிகள் நமது நாட்டில் அறியாதார் இருப்பார்கள் என்று நாம் நினைக்கவில்லை. ஆனாலும் பார்ப்பனரல்லாதாரில் சில சுயநலக்காரர்களையும் வயிறு வளர்க்க வேறு வகையில்லாதவர்களையும் ஆயுதமாகக் கொண்டு பாமர மக்களை ஏமாற்ற நமது பார்ப்பனர் செய்து வரும் தந்திரங்களைக் கண்டு நாம் பயப்படாம லிருக்கவும் முடியவில்லை. உதாரணமாக, தமிழ் நாட்டில் இந்தியா சட்டசபை தேர்தலுக்கும் சென்னை சட்டசபைத் தேர்தலுக்கும் காங்கிரசின் பேரைச் சொல்லிக்கொண்டும் சுயராஜ்யம் பெறுவதற் கென்றும் நிறுத்தப் பட்டிருக்கும் ஆசாமிகளை கவனிக்கும் போது பாமர ஜனங்கள் இதை நம்பி இந்த ஆசாமிகளுக்கு ஓட்டுக் கொடுத்து சட்டசபைகளுக்கு அனுப்பி விட்டால் கண்டிப்பாய் பார்ப்பன ஆட்சிக்கு வழி ஏற்பட்டுவிடுமென்பதில் சந்தேக மில்லை. எப்படியெனில் சென்னை முதல் திருநெல்வேலி வரை யிலும் நிறுத்தப்பட்டிருக்கும் கனவான்கள் சற்றேறக்குறைய எல்லோருமே...

ஓர் வேண்டுகோள் 0

ஓர் வேண்டுகோள்

பார்ப்பனரல்லாதாருக்கு ஒர் வேண்டுகோள் என்னும் தலைப்பின் கீழ் 25.7.26 ² ‘குடி அரசு’ தலையங்கம் எழுதி பார்ப்பனரல்லாதாரின் சுயமரியா தையைக் காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவப்படுத்தவும், பொது அரசியல் உரிமையை எல்லாச் சமூகமும் சமமாய் அடைய இந்திய மக்க ளுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெறவும், ‘குடி அரசி’ன் தத்துவங் களை வைத்து சில திட்டங்களை வகுக்கவும், அவற்றை தமிழ் மக்கள் சேர்ந்து கட்டுப்பாடாய் நிறைவேற்றவும், ஒரு அறிக்கை வெளியிடவும், அவ்வறிக் கையில் பல கனவான்களின் கையொப்பங்களையும் சேர்த்து வெளியிட வேண்டுமென்ற விருப்பங் கொண்டு யார், யார் இத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறார்களோ, அக்கனவான்கள் பெயரை அவ்வறிக்கையில் வெளியிட வேண்டும். ஆகையால் தங்கள் தங்கள் பெயரையும் முழு விலாசத் தையும் சம்மதத்தையும் எழுதியனுப்புமாறு வேண்டிக் கொண்ட தில் இதுவரை சுமார் ஆயிரம் பெயர்களுடைய கையெழுத்தும் சம்மதமும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இன்னும் இத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளும் கனவான்கள் தயவு செய்து சீக்கிரத்தில்...

மலையாளக் குடிவார மசோதா 0

மலையாளக் குடிவார மசோதா

இவ்வார சட்டசபையில் நமது பார்ப்பனர்கள் கடும் சூழ்ச்சிகளுக் கிடையில் மலையாளக் குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டது. இனி மலையாளத்தில் உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன் மூலம் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதையும் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளு கிறோம். குடி அரசு – சிறு குறிப்பு – 05.09.1926

இந்துமத பரிபாலன மசோதா 0

இந்துமத பரிபாலன மசோதா

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் நமது பார்ப்பனர்களுக்கு எமனாய் விளங்கும் இந்துமத பரிபாலன மசோதா முக்கால் பாகம் பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுக்கிடையில் பெரும் பாகம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும் நிறைவேற்றப்பட்டு மலையாளக் குடிவார மசோதாவைப் போல் பூரண வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்விரண்டு மசோதாவையும் எதிர்த்தவர்களுக்கு அடுத்த தேர்தலில் தக்கபடி புத்தி கற்பிப்பார்கள் என்றே நம்புகிறோம். குடி அரசு – சிறு குறிப்பு – 05.09.1926