சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப்படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக ‘திராவிடனில்’ காணப்படு கிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ; ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ² (சட்டசபைத் தேர்தல் தீர்ந்த தற்குப்)பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன ரல்லாதார்களை யாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப்பார்களா என்பதை தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 03.10.1926

You may also like...

Leave a Reply