Category: குடி அரசு 1937

திருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா.  சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா. சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்

  நான் பிரசாரத்திற்குப் புறப்பட்டுப்போகும் வழியில் இங்குள்ள பிரசாரகர்களுக்கு ஏதோ சில திட்டங்களை வகுத்து விட்டுப் போகலா மென்றுதான் வந்தேன். இது ஒருவர் பட்டம் பெற்றதன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் ஒரு பாராட்டு விருந்துக் கூட்டம். அதிலும் சமீபத்தில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் என்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுத் தங்கள் பகுத்தறிவை உபயோகிக்கக்கூடிய எளிய அறிவுடையவர்களாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தோழர்கள் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் ஒரு நண்பரால் காண்பிக்கப்பட்ட “ஆனந்தவிகடன்” பிரதியை (7.2.37ந் தேதி) புரட்டிப் பார்த்ததில் அதில் சில விஷயங்கள் என் கண்களுக்குப் புலப்பட்டன. ஏதோ அவைகளைப் பற்றி சில வார்த்தைகள் கூறுகிறேன். “ஆனந்தவிகடன்” தனது தலையங்கக் குறிப்பில் 1920ம் வருஷத்தில் இம்மாகாணத்தில் எல்லா சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் சேர்ந்து சம்பளம் நாலுகோடி ரூபாய்; 1934-ம் வருஷத்தில் அதே சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளம் பத்தரைக்கோடி ரூபாயென்றும், குறிப்பிட்டிருப்பதோடு, இவ்வளவு சம்பள உயர்வுக்கும் காரணம் ஜஸ்டிஸ் மந்திரிகளின் நிர்வாகம் தான் என்றும்...

காங்கிரஸ் ஏன் ஏற்பட்டது?  சம்பளம் உயர்ந்ததே காங்கிரசால்தான்

காங்கிரஸ் ஏன் ஏற்பட்டது? சம்பளம் உயர்ந்ததே காங்கிரசால்தான்

    சைமன் கமிஷனை பஹிஷ்கரித்தவர்கள் அவரால் சிபார்சு செய்த சட்டசபைக்குப் போகலாமா? தோழர்களே! நான் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சொல்ல இங்கு வரவில்லை. வரும் தேர்தலுக்கு கஞ்சா குடிக்கிறவன் கூட ஒரு அபேட்சகராய் நின்று சட்டசபைக்குப் போக உரிமை உண்டு. புதிய சீர்திருத்தத்தில் ஏழெட்டு மந்திரிகள் உண்டு. யார் மந்திரியாய் வந்தாலும் ஒரு காரியம்தான் செய்ய முடியும். யார் சட்டசபைக்குச் சென்றாலும், முதலில் இந்த இராஜாவுக்கும் அவர்கள் பின் சந்ததிக்கும், அவர்கள் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசத்துடன் நடக்கிறேன் என்று சத்தியம் செய்து இராஜ விஸ்வாசப் பிரமாணம் எடுத்தக்கொள்ள வேண்டும். இன்று நடக்கப் போகிற தேர்தலில் காங்கிரசின் பேரால் நிற்கிறவர்கள் தனிப்பட்ட தங்கள் சொந்த யோக்கியதையைப் பற்றிக் கூறாமல், கட்சியின் பேரை உபயோகித்து ஓட்டுக்கேட்கிறார்கள். ஏன்? ஆசாமிகள் யோக்கியதை வெளியானால் காங்கிரஸ் புதைக்கப்பட்டு விடும். இதனால்தான் எங்கு பார்த்தாலும் கட்சியின் பேர் அடிபடுகிறது. அதுவும் பொய்யும் புளுகும் கூறி...

முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கயவர்களா?

முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கயவர்களா?

முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஷெட்யூல் (தாழ்த்தப்பட்ட) வகுப்பாருக்கும் காங்கிரஸ் இழைத்துவந்த கொடுமைகள் அச்சமூகத்தில் சுயமரியாதை உள்ள மக்கள் அறியாததல்ல. அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள தனித்தொகுதி உரிமைகளை ஒழிப்பதற்கு ஆக காங்கிரஸ்காரர்கள் ஆதியில் இருந்தே பட்டபாடும் செய்த சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியிருந்தும் அவ்வவ் சமூகங்களில் உள்ள வீரர்களான சில தலைவர்களால் அது பெறப்பட்டு காப்பாற்றப்பட்டு இன்று அச்சமூகங்கள் அரசியலிலும் அரசியல் சேவைகளிலும் பங்குபெற முடிந்தது. ஒரு நாட்டில் அரசியல் சீர்திருத்தமோ, உரிமையோ, சுதந்திரமோ எது கிடைப்பதானாலும் எவ்வளவு கிடைப்பதானாலும் அவற்றில் பங்கு பெற அந்நாட்டிலுள்ள ஒரு மதத்துக்கோ, ஜாதிக்கோ, வகுப்புக்கோ இடமில்லாமல் அவ்வகுப்பை ஒடுக்கி அழுத்தி எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் வகுப்புக்கே பெரும்பங்கும் போவதாய் இருந்தால் அச் சுதந்திரங்கள் எப்படிப்பட்டவையானாலும் எதற்குதவும் என்று கேட்கின்றோம். இந்நாட்டில் முஸ்லீம்கள் அரசியலில் தனி உரிமை பெறுவதற்கு முன் இந்துக்களிடையில் தீண்டப்படாதவர்களாய் இருந்ததை எந்த மனிதனாவது “எந்த கயவ”னல்லாதானாவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம். “துலுக்கனைத் தொட்டால்...

தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணம்

தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணம்

  தோழர்களே! சமீபத்தில் நடக்கப்போகும் சென்னை சட்டசபை தேர்தல் பிரசாரம் பலமாய் நடைபெறுகிறது. இதுவரை நடந்த பிரசாரங்களைவிட இந்த சீர்திருத்த விஷயத்தில் அதிகக் கிளர்ச்சி இருந்து வருகிறது. அதற்கேற்ப குழப்பமும் பலாத்காரமும் கூட நடைபெறுகின்றன. தோழர்கள் ஜவஹர்லால், மாளவியா, ஜின்னா கூட்டங்களில் குழப்பம், கலவரம் நடப்பதோடு மாளவியா, ஜவஹர்லால் கூட்டங்களில் செருப்புகளும், கற்களும், அழுகு முட்டைகளும், சாணி உருண்டைகளும் விழுந்துவிட்டன. அடிதடிகள், குத்து வெட்டுகள், கொலைகள் நடந்துவிட்டன. பணங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகின்றன. வசவுகளோ மீன்கடை, கள்ளுக்கடைகள் போல் நடைபெறுகின்றன. கூட்டங்களில் பேசப்படும் பேச்சுகளும் பொய்யும், பித்தலாட்டமும், ஈனப்பழிகளும் அபாண்டப் புரட்டுகளும் கொண்டவைகளாகவே இருக்கின்றன. மறைந்து நின்று கொன்ற புராண சூழ்ச்சி இழிதன்மை நிகழ்ச்சிக் கதைகள் போலவே “தலைவர்கள்” நடத்தைகள் இருந்து வருகின்றன. இவைகளின் பயனால் கிடைக்கும் வெற்றி தோல்விகளின் பயன்களோ மிகமிக அற்பமான பயனைக் கொடுக்கக்கூடியதும் ஒரு குறிப்பிட்ட வகுப்பு ஆதிக்கத்துக்கு அரணா அழிவா என்பதைத் தவிர வேறு...

எல்லா மாகாணங்களிலும் காங்கிரசிற்குத் தோல்வி

எல்லா மாகாணங்களிலும் காங்கிரசிற்குத் தோல்வி

சட்டசபை எலக்ஷன் நாள் நெருங்கிவிட்டது. காங்கிரஸ்காரர்களின் பிரசாரம் அளவிட்டுச் சொல்ல முடியாத மாதிரியில் நடைபெறுகின்றது. இன்னது தான் பேசுவது, இன்ன கொள்கையைத்தான் சொல்லுவது என்று இல்லாமல் குடிகாரர்கள் வெறிகாரர்கள் போல் வாயில் வந்ததை எல்லாம் உளறிவருகிறார்கள். எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்கின்ற கவலையால் எதை வேண்டுமானாலும் சொல்லவும் என்ன வேண்டுமானாலும் செய்யவும் காங்கிரசுக்காரர்கள் துணிந்து விட்டார்கள். தோழர்கள் சத்தியமூர்த்தியாரும் ராஜகோபால ஆச்சாரியாரும் தங்களால் கூடுமான அளவு எல்லாவித தந்திரங்களையும் கையாண்டு பார்த்து விட்டார்கள். பஞ்ச தந்திரத்தையும் கையாண்டுவிட்டார்கள். பார்ப்பனர்கள் கட்டுப்பாடாய் கூடி சகல முயற்சியும் செய்துவிட்டார்கள். இனிச் செய்ய வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை என்று சொல்லத்தக்க வண்ணம் செய்து இப்போதே ஓய்வடைந்துவிட்டார்கள் என்று கூடச் சொல்லலாம். இதன் பலன் மாத்திரம் சைபர் (0) என்பதை நாம் உணர்ந்து விட்டோம். அவர்களும் ஒரு அளவுக்கு உணர்ந்து தங்கள் ஸ்வரத்தை குறைத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த ஆத்திரத்தில் செய்வது இன்னது என்று தோன்றாமல்...

காங்கிரசின் தோல்வி

காங்கிரசின் தோல்வி

காங்கிரசானது எவ்வளவுதான் பொய்ப்பிரசாரங்கள் செய்து பாமர மக்களை ஏமாற்றி வந்த போதிலும் எவ்வளவுதான் கட்டுப்பாடாக எல்லாப் பார்ப்பனர்களும் எல்லா பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்து வந்திருந்த போதிலும் கடைசியாக புதிய சீர்திருத்தத் தேர்தலில் நல்ல பரிசுத்தமான தோல்வியை அடைந்து விட்டது என்பதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தத் தோல்வியை அறிவதற்கு யாரும் தேர்தல் வரை காத்திருந்து தேர்தல் முடிவைக்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமலே முடிவு வெளியாகிவிட்டது. இந்த விபரத்தை “தினமணி” பத்திரிகையில் கண்டபடியே மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். அதாவது இந்தியாவில் உள்ள 11 மாகாணங்களுக்கும் உள்ள சட்டசபைகளின் அசம்பளி என்னும் கீழ் ஸ்தானங்களுக்கு மொத்த ஸ்தானங்கள் 1585 ஆகும். அவற்றிற்கு காங்கிரஸ்காரர்கள் போட்டி போட முன் வந்திருப்பது 758 ஸ்தானங்களுக்கு மாத்திரமேயாகும். 758 ஸ்தானங்களிலும் வெற்றி பெற்றாலும் அது மொத்த ஸ்தானங்களில் பகுதியைவிடக் குறைந்த ஸ்தானங்களேயாகும். ஆகையால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று...

காங்கிரஸ்காரர்கள் காலித்தனம்  யாரும் மறந்துவிடமாட்டார்கள்

காங்கிரஸ்காரர்கள் காலித்தனம் யாரும் மறந்துவிடமாட்டார்கள்

  தலைவர் அவர்களே! தோழர்களே! இந்தப் பக்கங்களில் நாங்கள் வருவதாகத் தெரிந்தவுடன் காங்கிரஸ்காரர்கள் வெகு தடபுடலாக அவசர அவசரமாக ஓடி எங்களைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எங்கள் கூட்டங்களுக்கு யாரும் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காலிகளுக்கு உத்திரவு செய்து கொண்டே ஓடுகிறார்களாம். அது போலவே இரண்டு ஒரு இடங்களில் எங்கள் கூட்டத்திற்கு கொஞ்ச தூரத்தில் காலிகளும் குடிகாரர்களும் நின்று கொண்டு வரும் ஆட்களைத் தடுத்து திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பதையும் கெட்ட வார்த்தைகள் பேசி வைவதையும் பார்த்தோம். ஒரு கூட்டத்தில் கல்லுகள் போட்டதுடன் செருப்பும் வீசி எறியப்பட்டது. அது உள்ளூர்க்காரர் மீது விழுந்து செருப்பு போட்டவனை மறுநாள் உள்ளூர்க்காரர்களே நன்றாய் செருப்பாலடித்ததாகவும் கேள்விப்பட்டேன். சென்றவாரம் நானும் தோழர் பாண்டியனும் அய்யம்பாளையத்துக்குப் போனபோதும் அங்கு சிலர் மூக்கில் கள்ளு ஒழுகக் குடித்துவிட்டு கண்டபடி கூப்பாடு போட்டும், சிறு பையன்களைக் கொண்டு கூப்பாடு போடச் செய்தும் சுமார் 1000ம் பேர் வரை கூட்டத்தில்...

ஆச்சாரியார்

ஆச்சாரியார்

  தோழர் ராஜகோபாலாச்சாரியார் போர் முனைக்கு வந்துவிட்டார். என்ன போர் என்றால் வீரப்போர் அல்ல, மற்றென்னவெனில் சூழ்ச்சிப்போர், வஞ்சப்போர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆச்சாரியார் என்றும் இதற்குத்தான் அருகதையானவர், ஏனெனில் அவருக்கு உடல் வலிமை கிடையாது. தோல்வியைச் சகிக்கும் மனவலிமையும் கிடையாது. ஆதலால் இப்படிப்பட்டவர்கள் என்றும் சூழ்ச்சியைத்தான் நம்புவார்கள். அவர்களுக்குத்தான் சூழ்ச்சித்திறமும் ஏற்படக்கூடும். ஆச்சாரியார் வெற்றிபெற்று மந்திரி ஆசனத்தில் அமர்வாரானால் மற்ற விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு மகிழ்ச்சியடைவதில் முதல்வராக இருக்க நாமே முயலுவோம். அம்மகிழ்ச்சி ஏதாவது ஒரு நன்மையை எதிர்பார்த்து என்று சொல்ல முடியாது. ஆனால் பரிதாபத்தால். ஆச்சாரியார் திடமான தியாகி, மகத்தான தியாகம் செய்தவர். அவர் மந்திரி பதவி ஏற்றால் அவர் விஷயத்தில் யாரும் பொறாமைப்பட வேண்டியதில்லை, அவரது சூழ்ச்சிக்குப் பலர் ஆத்திரப்படக்கூடும் தான். அப்படிப்பட்ட ஆத்திரங்கள் கூட தோல்வி அல்லது சக்தியற்ற தன்மையின் எதிரொலி என்றுதான் சொல்லுவோம். ஏனெனில் ஆத்திரப்படுகிறவர்களும் தங்களாலான சூழ்ச்சிகள் செய்து பார்த்துத்தான் முடியாமல் போய் ஆத்திரப்படுபவர்களாய்...

காந்தியார்

காந்தியார்

    இனியும் உங்களுக்கு காந்தி பைத்தியமா? இன்று காங்கிரசின் பேரால் தேர்தலில் நிற்கும் பித்தலாட்டக்காரர்கள் காந்தி பெயரைச்சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள். ஆனால் நாம் இந்த 3 வருஷ காலமாகவே காந்தியாருக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி வருகிறோம். அதை பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் மறைத்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் – வருகிறார்கள். அப்படிப்பட்ட புரட்டுகளை வெளியாக்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். அதாவது 22.1.37ந் தேதி தோழர் காந்தியாரை சென்னையில் “சுதேசமித்திரன்” நிருபர் பேட்டி கண்டு பேசியபோது அவர் சொன்னதாவது:- “ராஜீய விஷயத்தில் எனக்கு சிரத்தை கிடையாது.” “அவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு இஷ்டம் இல்லை.” “உண்மை சத்தியாக்கிரகி என்கிற முறையில் இதை சொல்லுகிறேன்.” “வரப்போகும் தேர்தல் முடிவுகள் உத்தியோக பிரச்சினைகள் முதலிய விஷயங்களில் எனக்கு எவ்வித அபிப்பிராயமும் இல்லை” என்று பேசி இருக்கிறார். (இவ்வாக்கியங்கள் 22.1.37ந் தேதி “சுதேசமித்திரன்” 6-வது பக்கம் 3-வது கலம் “சென்னையில்...

கடற்கரைக் கூப்பாடு

கடற்கரைக் கூப்பாடு

  தேர்தல் போர் ஆரம்பமாகிவிட்டது. அபேக்ஷகர் பெயர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே நாம் கூறியுள்ளபடி நமது கட்சிக்கு அபேக்ஷகர் பஞ்சம் ஏற்படவில்லை; ஏற்படவும் செய்யாது. காங்கரஸ் பகட்டு வெற்றியில் மயங்கி – காங்கரஸ் ஆர்பாட்டங்களுக்கு அஞ்சி – தன் காலில் நிற்க ஆண்மையின்றி – காங்கிரசில் சரணாகதி அடைந்து இச்சகம் பாடும் துடை நடுங்கிகள் சிலர் போனாலும், நம் கட்சிக் கொடிக் கீழ்நின்று போராடத் துணிவுகொண்டு நிற்கும் வீரர்கள் ஏராளமாக இருந்து வருவது மகிழத்தக்கதே. நமக்குப் பத்திரிகைகள் குறைவாக இருக்கலாம்; தொண்டர்கள் குறைவாக இருக்கலாம்; பிரசாரகர்கள் குறைவாக இருக்கலாம். எனினும் நாம் அஞ்சத் தேவையில்லை. ஏன்? அபிமானிகள் ஏராளமாயிருக்கிறார்கள். நமது கட்சியால் நலம் பெற்றவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள். நாம் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகளோ அனந்தம். நமது எதிரிகள் எதிர்பார்க்கிறபடி தமிழ் நாட்டார் முச்சூடும் அப்பாவிகள் அல்ல. அப்பாவிகளாயிருந்தால் நமது கட்சிப் பெயரால் அந்தஸ்துடையவர்கள் தேர்தலுக்கு முன்வரத் துணிவு கொண்டு இருக்க மாட்டார்கள். தென்னாட்டாருக்கு...

திருவாரூரில் கேள்விகளுக்கு  ஈ.வெ.ரா. பதில்

திருவாரூரில் கேள்விகளுக்கு  ஈ.வெ.ரா. பதில்

    கேள்விகள் ~shend சமதர்மம் விரும்பும் தாங்கள் தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கேட்பது அழகா? காங்கிரசு மகாசபை பிராமணர்களுக்கு மாத்திரம்தான் சொந்தமா? ஜவஹர்லாலை ஏன் கண்டிக்கிறீர்கள்? பணக்காரர்களை நீங்கள் ஆதரிக்கலாமா? “ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்கிற ராமசாமியுடன் மற்றவர்கள் சேரலாமா?” என்று கேட்கப்பட்ட அச்சு நோட்டீசும் கொடுக்கப்பட்டது. ~subhead பதில்கள் ~shend வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது சமதர்மக் கொள்கையைச் சேர்ந்ததேயாகும். இன்றைய சீர்திருத்தம், அரசியல், சுதந்திரம் என்பவைகள் எல்லாம் அதிகாரம், பதவி, உத்தியோகம் ஆகியவைகளாகத்தான் இருக்கின்றன. எனக்குத் தெரிய 1900 முதலே இன்று வரை அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் பல மதம் பல ஜாதியாக மக்கள் பிரிந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் பிறவியினால் இழி மக்களாகக் கருதப்பட்டு அரசியலில் உத்தியோகம், பதவி அதிகாரம் ஆகியவைகளில் 100க்கு ஒருவர் இருவர் கூட இருப்பதற்கு இல்லாமல் விலக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாய் கல்வி செல்வம், நல்வாழ்வு ஆகியவைகள் அடைவதற்கில்லாமல் அநேக காலமாக மிருகங்களிலும் கேவலமாக...

சத்தியமூர்த்தியாரின் மாயாமாலம்

சத்தியமூர்த்தியாரின் மாயாமாலம்

  தோழர் சத்தியமூர்த்தியார் நிலக்கோட்டை தாலூகாவிற்குள் பிரசாரத்துக்குப் போனபோது அங்கு ஏதோ சில காலிகளோ அல்லது பொறுப்பற்ற வேடிக்கைப் பிள்ளைகளோ ஒரு மோட்டார் கார் மீது கல் போட்டார்களாம். அதற்காக பத்திரிகைகள் தனது அடிமையாய் இருக்கின்றன என்கின்ற ஆணவத்தால் நீண்ட அறிக்கைகளை வெளியிட்டு மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி மீது துவேஷத்தைக் கிளப்பி வருகிறார். அறிவுள்ள மக்கள் யாரும் இந்த விஷமும் மாய மாலமும் கொண்ட அறிக்கையை லட்சியம் செய்யமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த சின்ன காரியத்துக்காக (அதுவும் உண்மையாய் நடந்ததோ இல்லையோ) இவ்வளவு “ஆத்திரம்” காட்டி தடபுடல் செய்யும் சத்தியமூர்த்தியாற் காங்கிரஸ் காலிகள் கதர் குல்லாயுடனும் கொடியுடனும் செய்த எத்தனையோ காலித்தனங்களைப் பற்றி ஏன் ஆத்திரப்படவில்லை என்று கேட்கின்றோம். சேலத்தில் தான் பிரசன்னமாயிருந்த கூட்டத்திலேயே எதிர்க்கட்சிப் பிரமுகர்களை கேள்விகள் கேட்டதற்காக கதர் குல்லாயும் கொடியும் பிடித்திருந்த காங்கிரஸ் காலிகள் கடினமாய்த் தாக்கித் துன்பப்படுத்தியதற்கு தன்னைப் பொறுத்தவரை ஒரு மாதகாலம்...

காங்கிரஸ் மிரட்டலுக்கு சர்க்கார் பதில்

காங்கிரஸ் மிரட்டலுக்கு சர்க்கார் பதில்

  காங்கிரசானது இதுவரை நாட்டில் பொய்ப் பிரசாரத்தாலும் காலித்தனத்தாலும் உயிர் வாழ்ந்து வந்தது என்பது அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். இப்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால் காங்கிரசின் காலித்தனத்தைப்பற்றி பொது ஜனங்களும் எதிர் அபேட்சகர் களும் அதிகமாகக் கூப்பாடு போட்டு அரசாங்கத்தாருக்கு தகவல் கொடுக்க ஆரம்பித்தார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கைகள் அனுப்பி பொதுக் கூட்டங்களில் காலித்தனம் நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் தெரிவித்திருக்கிறார்கள். இதை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் போலீசுக்காரரை மிரட்டி பலவிதமாகப் பயமுறுத்திப் பேசினார்கள். அதாவது, தேர்தலில் தாங்களே ஜெயிக்கப்போகிறார்கள் என்றும், போலீஸ் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்றும், அப்போது போலீசுக்காரர்கள் விஷயத்தில் கடினமான முறைகள் கையாளப்படும் என்றும், பல போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என்றும் பலவாறாகப் பேசினார்கள். சூசனை காட்டினார்கள். இதனால் உண்மையிலேயே சில போலீஸ்காரர்கள் பயந்து கொண்டேதோடு சில போலீசார் காங்கிரசுக்கு அனுகூலமாய் இருந்து காலித்தனத்துக்கு உதவி செய்தும் வந்ததானது அரசாங்க தகவலுக்கு எட்டியபின்...

காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?

காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?

  அதற்கு கொள்கை இல்லை அது ஒரு சமூகம் தவிர மற்ற சமூக முன்னேற்றத்தைத் தடுக்கவே வேலை செய்கிறது. வருணாச்சிரமம் சம்மந்தப்பட்ட பழைய முறைகளை புதுப்பிக்கவே வேலை செய்கிறது. அதனிடத்தில் ஒரு காலத்திலாவது நாணயம் இருந்ததில்லை. அதில் சமய சஞ்சீவிகளும், காலிகளும், வருணாச்சிரமிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதன் தலைவர்கள் சொல்லுகின்ற காரியங்கள் எதுவும் அனுபவ சாத்தியமானதல்ல. அதனால் இதுவரை ஒரு பலனும் ஏற்பட்டதில்லை. அது ராஜபக்தி – சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லுகிறது. ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள் தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்படப் போகிறீர்கள். குடி அரசு – வேண்டுகோள் – 17.01.1937 ~cstart ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏன்   ஓட்டு செய்ய வேண்டும்? ~cmatter அது சமூக முன்னேற்றத்தையும் மக்கள் சமத்துவத்தையும் கொள்கையாய் கொண்டு பாடுபடுகிறது. வருணாச்சிரம முறையை மாற்றி மக்களை சுயமரியாதையுடன் வாழ வேலை செய்து கொண்டு...

பார்ப்பனர்களின் விளம்பர முறை

பார்ப்பனர்களின் விளம்பர முறை

  தோழர் ஜவஹர்லால் காரில் போகும்போது ஒரு மாட்டு வண்டி குறுக்கே நின்றதாம். அதை அந்த வண்டிக்காரனால் விலக்க முடியவில்லையாம். தோழர் ஜவஹர்லால் கீழே இறங்கி வண்டியை மூங்கிலைப் பிடித்து ஒரு ஓரமாய் தள்ளி விட்டுவிட்டு தன் வண்டியை ஓட்டிக்கொண்டு போனாராம். மாட்டு வண்டிக்காரன் “நான் அதிர்ஷ்டசாலி” என்றானாம். இது அசோசியேட் பிரசில் வெளியாகி பார்ப்பனப் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் போடப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய பரோபகார காரியம்? எவ்வளவு பெரிய மனிதன் ஜவஹர்லாலைப் புகழ்ந்து விட்டான் பாருங்கள். ஆகவே ஒரு ஆசாமியை பார்ப்பனர்கள் பெரிய ஆள் ஆக்க வேண்டுமானால் எவ்வளவு மானமற்ற முறையில் விளம்பரம் செய்து பாமர மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை குறிப்பிடவே இதை எழுதுகிறோம். இது போலவே “காந்தியார் பூனைக் குட்டியுடன் விளையாடினார்!!” “ஒரு பழுத்த கிழவி ஜவஹர்லாலை கும்பிட்டாள்!!!” “ஒரு பெண் பட்டேலுக்கு ஆலாத்தி எடுத்தாள்!!!!” என்பது போன்ற அற்ப பிரசாரம் செய்து பாமர மக்களை...

பாஞ்சாலத்தில் “ஜஸ்டிஸ்” கட்சி

பாஞ்சாலத்தில் “ஜஸ்டிஸ்” கட்சி

  “100க்கு 50 விகிதமாவது உத்தியோகம் அளிக்க வேண்டும் “உருது அரசியல் பாஷையாக இருக்க வேண்டும்” பஞ்சாப் யூனியனிஸ்ட் கòக்குத் தலைவரான முஸ்லீம் சமூகத் தலைவர் சர். சிக்கந்தர் அயாத்கான் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது “நாங்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிப்போம், அதிகாரத்துக்கு வந்தால் அந்தப்படியே நடப்போம், குறைந்தபக்ஷம் 100க்கு 50 வீதமாவது உத்தியோகங்கள் முஸ்லீம்களுக்கு அளிப்போம். உருது பாஷையை தான் அரசியல் பொது பாஷையாக ஏற்படுத்துவோம்” என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆக அங்குள்ள காங்கிரசுக்காரர் முஸ்லீம் கò வகுப்பு வாதக் கò என்றோ தேசத்துரோக கò யென்றோ கூறி முஸ்லீம் கòயை யூனியனிஸ்ட் கòயை வெட்டிப் புதைக்கவேண்டும் என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அப்படிக் கூறுகிறவர்களின் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்திருப்பார்கள். ஏன் வகுப்புரிமை கேட்பதையும் ஜனத்தொகைக்குத் தகுந்த உத்தியோகம் அந்தந்த வகுப்புகளுக்கு வழங்குவதையும் அரசியல் திட்டத்தை ஏற்று நடத்துவதையும் உருது பாஷை வேண்டுவதையும் தேசத்...

ஐயோ, பட்டாபிஷேகம்  நின்று விடுமே!  பொம்மனுக்கும் – திம்மனுக்கும் சம்பாஷணை

ஐயோ, பட்டாபிஷேகம்  நின்று விடுமே! பொம்மனுக்கும் – திம்மனுக்கும் சம்பாஷணை

  – சித்திரபுத்திரன் ~cmatter பொம்மன்:- ஐயோ! பட்டாபிஷேகம் நின்று விடுமே! இனி நமக்கு ராஜாவே இல்லாமல் போய் விடுமே! நாம் என்ன செய்கிறது? திம்மன்:- ஏன் – ஏன் அப்படி அழுகிறாய்? அழாதே. பொ:- இல்லே-ஏ காங்கிரசில் பட்டாபிஷேகத்தை பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்களே ராஜகுடும்பத்தார் இதை லட்சியம் செய்யாவிட்டாலும் பார்லிமெண்டார் இதை லட்சியம் செய்து பட்டாபிஷேகத்தை நிறுத்தி விடுவார்களே! பிறகு நமக்கு ராஜா வேண்டாமா? அதுதான் அழுகை ஆனந்தக்கண்ணீராய் வடிகிறது. தி:- அட போடா மடையா! யாரோ பட்டாபிஷேகத்தை பஹிஷ்கரித்தால் யாரோ நிறுத்திவிடுவார்களா? உனக்கு புத்தியில்லையா? இதற்காக அழுகிறாயே. பொ:- யாரோவா? ஜவஹர்லால் என்ன, சத்தியமூர்த்தி என்ன? கமலாதேவி என்ன இப்படிப்பட்ட தேசாபிமான ரத்தினங்கள் தீர்மானித்திருக்கிறார்கள்! அதுவும் 1000000000 இன்னம் எத்தனையோ சைபர் கொண்ட ஜனங்கள் கைதூக்கி இருக்கிறார்கள்! அப்படி இருக்க பட்டாபிஷேகம் எப்படி நடக்கும்? பொ:- நமக்கு ஆகத் தீர்மானித்திருக்கிறார்களே ஒழிய பிரிட்டிஷாருக்கு ஆக தீர்மானிக்கவில்லை. அதற்கு உதாரணமாக...

தேர்தல் தொல்லை

தேர்தல் தொல்லை

  ஜஸ்டிஸ் இயக்கம் ஏற்பட்டு சுமார் 20 வருஷம் ஆகின்றது. அக்கட்சிப்பிரமுகர்கள் பதினாறு வருஷகாலமாய் அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள். அதன் பயனாக அக்கட்சியின் முக்கிய கொள்கைகளான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதிலும் அனுபவ சாத்தியமான கிளர்ச்சியால் தகுதியுள்ள அளவுக்கு அரசியல் முன்னேற்றம் பெறுவது என்பதிலும் சிறிதும் பிற்போக்கில்லாமல் கூடுமானவரை பலன் ஏற்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை. பதினாறு வருஷகாலம் அதிகாரத்தில் இருந்து வருகிற இயக்கம் எதுவானாலும் பாமரஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்தான். அதுவும் மக்களின் நித்திய வாழ்க்கைத் திட்டங்களில் கலந்துள்ள அதிகாரத்துவம் எப்படிப்பட்டதானாலும் எவ்வளவு நன்மை பயப்பதானாலும் பாமரமக்களின் மகிழ்ச்சிக்குப் பாத்திரமாவது என்பது மிக மிக கஷ்டமான காரியமேயாகும். அதுவும் முக்கியமாக நம் நாட்டில் அது முடியாத காரியம் என்றே தான் சொல்லித் தீரவேண்டும். ஏனெனில் பொது மக்களில் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாதவர்கள். மற்றும் பல மதம், பல ஜாதி, பல உள் வகுப்பு என்று...

காங்கிரஸ் என்றால் என்ன?

காங்கிரஸ் என்றால் என்ன?

  ஜெயிலுக்குப் போவது கல்லுளி மங்கன் வேலை மொண்டி பிள்ளையை வாடகைக்கு  வாங்கி காட்டி பிச்சை கேட்பதா? தலைவரவர்களே! தோழர்களே! இங்கு நாங்கள் வந்த சமயத்தில் எங்களுக்கு செய்த வரவேற்புக்கு மிகுதியும் நன்றி செலுத்த வேண்டியவன். ஊர்வலங்களும் வாத்தியங்களும் ஜே கோஷங்களும் வழி நெடுகச் செய்த வரவேற்பு ஆடம்பரங்களும் இந்த ஜஸ்டிஸ் இயக்கத்தில் உங்களுக்கு உள்ள பற்றுதலையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் காட்டுகின்றன. நமது ஊக்கமும் உற்சாகமும் இப்படி செலவழிக்கப்படுவது எனக்கு விருப்பமில்லை. காரியத்தில் மக்களுக்குள் இயக்கத் தன்மையையும் அது செய்த வேலையும் எடுத்துச் சொல்லுவதில் செலவழிக்கப்பட வேண்டும். ஆச்சரியமில்லை ஜஸ்டிஸ் இயக்கம் என்றால் தீண்டாமை போல் மக்கள் பாவிக்கிறார்கள் என்று தலைவர் எடுத்துக் கூறினார். அதற்கு பொது ஜனங்களும் நம் எதிரிகளுமே காரணமல்ல. நாம் பொது ஜனங்களுக்கு வேலை செய்கிறோம் என்கின்ற மமதையில் இருந்து விட்டோமே ஒழிய நமது வேலையை பாமர ஜனங்கள் உணர்ந்தார்களா என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. நமது எதிரிகள் செய்யும்...

காங்கிரசின் பிற்போக்கு

காங்கிரசின் பிற்போக்கு

இந்திய மக்கள் கால்நடையில் இருந்து மாட்டுவண்டி பிரயாணம் ஆகி குதிரைவண்டியாகி ரயில் வண்டி ஆகி சைக்கிள் வண்டி ஆகி மோட்டார் வண்டி ஆகி ஆகாயத்தில் பறக்கும் ஏரோப்ளான் பிரயாணத்துக்கு வந்திருக்கிற காலத்தில் இன்றைய காந்தி சகாப்தத்திலும் ஜவஹர் அயனத்திலும் பழயபடி மாட்டு வண்டிப் பிரயாணம் மறுபடியும் துவக்கப்பட்டுவிட்டது. அதாவது பெய்ஸ்பூர் காங்கிரசில் தலைவர் ஜவஹர்லாலை 6 காளைமாடு பூட்டிய வண்டியில் வைத்து ஊர்வலம் செய்தார்களாம். காங்கிரஸ்காரர்களின் இந்த பிற்போக்கு உணர்ச்சியில் நாம் ஆச்சரியப்படத்தக்கது ஒன்றும் இல்லை. ஏனெனில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ராத்தல் நூல் பூச்சிக்கூடு இழைபோல் நூற்கும் யந்திரங்கள் வந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு வாரத்துக்கு ஒரு ராத்தல் நூல் மொந்தம் பழம் மொத்தம் நூற்கும்படியான கைராட்டினத்தை வைத்து பூஜிக்கிற தலைவரான காந்தியாரின் சிஷ்யர் மாட்டு வண்டிக்கு போவதில் எப்படி அதிசயமிருக்க முடியும்? காந்தியார் இன்று மக்களை ஏமாற்றி மகாத்மா ஆன ரகசியமே பழய காட்டுமிராண்டித் தனத்தை –...

தர்மபுரி தேர்தல் வண்டவாளம்  அழுவதற்கு வெட்கமில்லையா?

தர்மபுரி தேர்தல் வண்டவாளம் அழுவதற்கு வெட்கமில்லையா?

    சேலம் ஜில்லா போர்டு பிரிவினையான விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். அதில் சேலம் ஜில்லா போர்டு என்பதற்கு காங்கிரஸ்காரர் பிரசிடெண்டாக வந்துவிட்டார். அதற்கும் நாமினேஷன் கொடுத்த பிறகுதான் தேர்தல் நடந்திருக்கிறது. அது போலவே சென்னை மாகாணத்தில் மற்றும் எவ்வளவோ ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டு நாமினேஷன்கள் கொடுக்கப்பட்ட பிறகே இதுவரை பெரிதும் பிரசிடெண்ட் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இனியும் நடக்கப்போகின்றன. கோயமுத்தூர் ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. ஈரோடு ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. முன் சொன்ன சேலத்திலும் அப்படியே நடந்தது. அதுபோலவே தான் தருமபுரி ஜில்லா போர்டும் நடந்திருக்கிறது. இந்த நிலையில் பிரசிடெண்ட் தேர்தலில் காங்கிரஸ் அபேக்ஷகர் தோல்வி அடைந்துவிட்டதற்கு பார்ப்பன பத்திரிக்கைகள் ஜஸ்டிஸ் கட்சி மீது ஆத்திரத்தைக் காட்டி வசவு மாலை சூட்டுகின்றன. தர்மபுரி நடவடிக்கையைப் பார்த்தவர்களுக்கு ஜில்லா போர்டுக்கு காங்கிரசிற்கு இயற்கையிலேயே மெஜாரட்டி கிடையாது என்பது விளங்கும். ஓட்டு ஒன்றுக்கு 2000, 3000, 4000 ரூபாய் கொடுத்து சில...

புறமுதுகு கொடுத்தோடிய ஆச்சாரியார்

புறமுதுகு கொடுத்தோடிய ஆச்சாரியார்

  மறுபடியும் போர் முனைக்கு  வந்து விட்டார் இதில் ஆச்சரியமொன்றுமில்லை ~cmatter தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் வட ஆற்காடு ஜில்லா போர்ட் தேர்தலிலும் திருச்சி முனிசிபல் தேர்தலிலும் காங்கிரஸ்காரர்களின் அயோக்கியத்தனம் வெளியாகி தலைவர்கள், மகா தியாகிகள், பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்றவர்களின் யோக்கியதையும் வெளியாகி காங்கிரஸ் என்றால் சீ என்னும்படியான நிலைமைக்கு வந்து விட்டவுடன் (தோழர் ராஜகோபாலாச்சாரியார்) மனம் நொந்து “இன்றிலிருந்து சென்னையிலோ (சென்னை மாகாணத்திலோ ப-ர்) அல்லது வெளியிடங்களிலோ (வெளிமாகாணத்திலோ – என்றுதான் அப்போது காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர் களும் கருதி விசனப்பட்டிருக்கிறார்கள் ப-ர்) உள்ள எந்த காங்கிரஸ் கமிட்டி அலுவல்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை.” என்று 11-8-36ந் தேதியில் ஒரு அறிக்கை எல்லா பத்திரிக்கைகளுக்கும் வெளியிட்டு விட்டு துறவு பூண்டுகொண்ட விஷயம் அந்த தேதி பத்திரிகை களில் இன்றும் யாவரும் காணலாம். நாம் அன்றைய தினமே மறுபடியும் ஆச்சாரியார் பார்ப்பன பிரசார அரசியலுக்கு வருவார்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஜே!

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஜே!

வங்காளம் “தேசீயத்துக்கு” படு தோல்வி ஆனால் சமூக ஒற்றுமை ஏற்பட்டது வங்காளத்தில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் “இருந்த வகுப்பு வாதப் பேய்” “மாண்டு மடிந்து” தீர்க்காயுள் பெற்று விட்டது. அதாவது ராஜி ஏற்பட்டு விட்டது. வகுப்புரிமைக்கு சிரஞ்சீவிப்பட்டம் கிடைத்து விட்டது. “தேசீயம்” செத்து ஒழிந்தது. இரு கட்சித் தலைவர்களும் கூடி இரு சமூகத்துக்குள்ளும் ராஜி செய்துகொண்டார்கள். ராஜி நிபந்தனை இன்று அரசாங்கம் முஸ்லீம்களுக்கு அளித்துள்ள விகிதாச்சார வகுப்புரிமை வகுப்புத் தீர்ப்பு அதில் கண்டபடி 10 வருஷ காலத்துக்கு ஆக்ஷேபிக்கப்படக்கூடாது. இரு சமூகத்தார் சம்மதித்தால் மாத்திரம் அதைப்பற்றி மத்தியில் யோசிக்கலாம். மந்திரிசபை அமைக்கப்படுவதில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகுதிக்கு தகுந்தபடி பகுதி எண்ணிக்கை கொடுக்கப்படவேண்டும். சர்க்கார் உத்தியோகம் மற்ற பிரதிநிதித்துவம் ஆகியவைகளில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகை விகிதப்படி பகுதி விகிதாச்சாரம் ஒதுக்கப்படவேண்டும். யோக்கியதாம்சப் பரீøை குறைந்த அளவுக்கே ஏற்படுத்தப்படவேண்டும் என்பதாகும். இந்த நிபந்தனைகள் 1933ம் வருஷத்திலேயே பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டியில் எடுத்துரைக்கப்பட்டனவாம். அப்போதே முஸ்லீம்கள் ஒப்புக்கொண்டார்களாம். ஆனால் இந்துக்கள்...

காங்கிரஸ் “ஜெயித்தது”

காங்கிரஸ் “ஜெயித்தது”

காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலுக்கு இதுவரை தமிழ் நாட்டில் அபேக்ஷகர்களை நிறுத்தப்பட்டதிலிருந்தே ஒரு அளவுக்குக் காங்கிரசின் கொள்கை வெற்றி பெற்று விட்டதென்றே கூறலாம். என்னவெனில் இன்று தென்னாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஆயுதம் என்பதும் அவ்வாதிக்கத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியால் ஏற்படப் போகும் ஆபத்திலிருந்து தப்புவதற்காகவே காங்கிரஸ் நடத்தப்படுகிறது என்பதும் அறிஞர் அறியாததல்ல. அதற்கு ஆகவே காங்கிரஸ் இன்று சட்டசபை வேட்டை ஆடுகின்றது. முடிவு எப்படி இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு வெற்றி ஏற்பட்டுவிட்ட தென்றுதான் சொல்லவேண்டும். என்ன வெற்றி என்றால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சட்டசபைக்குப் பொதுத் தொகுதி மெம்பர்கள் பெண்கள் உள்பட 64 பேர்களேயாகும். இந்த 64 ஸ்தானங்களுக்கு இதுவரை காங்கிரஸ் 62 ஸ்தானங்களுக்கு ஆட்களை நிறுத்தி இருக்கிறது. இவற்றிலும் தோழர்கள் சுப்பையா, சொக்கலிங்கம், அண்ணாமலை, காமராஜ நாடார், கிருஷ்ணசாமி பாரதி, ஆதிகேசவ நாயக்கர், சேலம் சுப்பிரமணியம், ராமநாதன், கிருஷ்ணசாமி பாரதி மனைவி முதலிய சுமார் பதின்மர்களை அவர்கள்...

காங்கிரஸ் தீர்மானங்கள்

காங்கிரஸ் தீர்மானங்கள்

பெய்ஸ்பூரில் கூடிக் கலைந்த 50 – வது காங்கிரசைப் பற்றிக் “குடி அரசி”ல் நமது அபிப்பிராயத்தை எழுதிவிட்டு காங்கிரஸ் தீர்மானங்களின் தன்மையைப் பற்றி பின்னால் எழுதுவதாக எழுதியிருந்தோம். காங்கிரசின் 20 தீர்மானங்களில் ஒரே ஒரு தீர்மானம் மாத்திரம் பொதுஜனங்களின் கவனத்துக்குக் கொண்டு வரத்தக்கதாகும். மற்ற தீர்மானங்கள் சடங்குத் தீர்மானங்களேயாகும். ஆதலால் அவற்றைப் பற்றி குறிப்பிடாமல் முக்கிய தீர்மானத்தைப் பற்றியே கவனம் செலுத்துவோம். அதாவது, சட்டசபை தேர்தலைப் பற்றிய தீர்மானம். “1935-ம் வருஷத்து இந்திய கவர்ன்மெண்ட் ஆக்ட் என்னும் அரசியல் சீர்திருத்தமானது இந்தியருடைய விருப்பத்துக்கு மாறானது. ஆதலால் அதை இந்த காங்கிரஸ் நிராகரிக்கிறது. அதனோடு ஒத்துழைப்பது இந்திய சுதந்திர எழுச்சிக்கு துரோகம் செய்ததாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவின் மீது உள்ள ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கத்தினால் ஏற்கனவே சுரண்டப்பட்டுள்ள இந்திய மக்களை இந்த புதிய அரசியல் இன்னும் கசக்கிப்பிழிந்து வேலை வாங்கி தரித்திரர்களாக்கும் என இக்காங்கிரஸ் அபிப்பிராயப்படுகிறது. ஆகையால், இந்த புதிய...

கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா

கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா

  தோழர்களே! இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.செளந்திரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். ஆனால் நான் பேசவேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும். ~subhead பகுத்தறிவு ~shend உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணரவேண்டும். காலதேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு...

சீர்திருத்தத்தை உடைப்பது சம்பாஷணை

சீர்திருத்தத்தை உடைப்பது சம்பாஷணை

  – சித்திரபுத்திரன் ~cmatter சுப்பு:- மணி என்ன விஷேசம்? சும்மா யோசிக்கிறாயே? மணி:- ஒன்றும் இல்லை, இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டுமே என்று பார்க்கிறேன். சுப்பு:- அதற்கு ஆக என்ன செய்யப் போகிறாய்? மணி:- நம்ம பெண்களுக்கெல்லாம் பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடலாம் என்று யோசிக்கிறேன். சுப்பு:- என்ன முட்டாளாய் இருக்கிறாயே? தேவதாசி முறையை ஒழிப்பவன் பொட்டுக் கட்டுவதை நிறுத்துவானா? தன் பெண்களுக்கும் பொட்டுக் கட்டுவானா? மணி:- இல்லைய்யா, அப்படிச் செய்யாவிட்டால் வேறு சிலர் தங்கள் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிடுவார்கள். ஆதலால், நாம் நம் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிட்டால் அவர்களது பொட்டுக் கட்டும் தொழிலும் அவர்கள் தேவதாசித் தொழில் செய்வதும் தடுக்கப்பட்டுவிடாதா? சுப்பு:- அதனால் நமக்கு என்ன லாபம்? எப்படியாவது அந்தத் தொழிலை நிறுத்துவதா அதை நாம் மேற்கொள்ளுவதா? மணி:- நாம் பொட்டுக்கட்டி நம்ம பெண்களை விவசாரித்தனம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அந்தத் தொழில் நின்றுவிடாதா? சுப்பு:- இது என்ன...

காந்தியின் பழைய பாடம்

காந்தியின் பழைய பாடம்

பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகத்தில் தோழர் ஜவஹர்லால் முக்கிய நடிகரானாலும் காந்தியாரும் முக்கிய நடிகரில் முன்னணியில் இருப்பவரானதால் அவரது நடிப்பும் கவனிக்கத்தக்கதாகும். அவர் வெறும் பழம் பாடங்களைப் படித்து பழய ஆசாமிகளுக்கு ஆறுதலளித்து இருக்கிறார். காங்கிரஸ் எங்கு புரட்சிகரமான காரியத்தை நினைத்துவிடுமோ என்று பயந்த பணக்காரர்களுக்கும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் பயம் நீங்கும்படியாயும், தைரியம் உண்டாகும்படியாகவும் தந்திரமாய் பேசி மழுப்பி இருக்கிறார். ஆனால் தோழர் காந்தியார் இதுவரையில் பேசிவந்த பாமரத்தனமான பேச்சுகளிலெல்லாம் இந்த காங்கிரஸ் பொருட்காட்சி திறப்பு பேச்சு பல அம்சங்களில் மிக மிக பிற்போக்கானது என்பது நமது கெட்டியான அபிப்பிராயமாகும். எப்படி எனில், “பருத்தி நூல் முனையிலும், ராட்டை முனையிலுமே சுயராஜ்யம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இது பழம் பாடம் என்று சொல்லி தள்ளிவிடலாம். ஆனால் சுயராஜ்யத்துக்கு “நான்கு முக்கிய அம்சம்” கூறுகிறார். அவையாவன:- அனைவரும் இன்புற்றிருக்க வசதி வேண்டும். யாரும் பசியால் வாடக்கூடாது. செளகரியமான வாழ்க்கைக்கு அவசியமான எல்லா...

ஏமாற்றுந் திருவிழா

ஏமாற்றுந் திருவிழா

  ஜவஹர் கதம்பம் ~cmatter படித்த மக்கள் என்பவர்கள் பாமர மக்களை ஏமாற்றுந் திருவிழாவாகிய காங்கிரஸ் பெய்ஸ்பூரில் கூடிக் கலைந்தது. கும்பமேளா – மகாமகம் (மாமாங்கம்) என்கின்ற திருவிழாக்களுக்கு செய்யும் விளம்பரம் போலவே விளம்பரங்கள் செய்யப்பட்டு ஏராளமான மக்களைக் கூட்டுவித்து அவர்களுக்கு புரியாத பல விஷயங்களைப் பேசி அவர்களுக்கு சம்பந்தமில்லாத பல தீர்மானங்களைச் செய்து கலைந்தாகிவிட்டது. தேசியப் பத்திரிகைகளும், தேசியத் தலைவர்கள் என்று விளம்பரம் பெற்றவர்களும் இந்தப் பேச்சுக்களையும் தீர்மானங்களையும் புராணப் பிரசங்கம் போல் புகழ்ந்து பேசி காங்கிரசுக்கு போயிருக்காத பாமர மக்களையும் குழப்பி ஏமாற்றி ஆகிவிட்டது. நமது நாட்டில் உள்ள மக்களில் 100க்கு 10பேர்களே படித்தவர்கள். இந்த பத்துப் பேர்களிலும் முக்காலே அரைக்கால்வாசிப் பேர்கள் அகவிலை அறிய முடியாத பெரிய ஜாதிக்காரர்களும் அகவிலை அறிய வேண்டிய அவசியமில்லாத வக்கீல்கள், டாக்டர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தண்டசோத்து ஆசாமிகளும் ஆகவே இருப்பார்கள். இந்தக் கூட்டத்தார்களே பிரதானமாய் இருந்து முக்கிய பங்கெடுத்து...

ஜஸ்டிஸ் கட்சியாரின் எதிர்கால வேலைத் திட்டம்

ஜஸ்டிஸ் கட்சியாரின் எதிர்கால வேலைத் திட்டம்

  தோழர் ஈ.வெ.ராமசாமியின்  வேலைத்திட்டம் உள்பட   (1) ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை சாதித்த வேலைகளை பொது ஜனங்கள் அறிந்தே இருக்கின்றார்கள். எல்லா சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பமளிப்பதும் தேசத்தின் பொதுவான முன்னேற்றத்திற்கு உழைப்பதுமே ஜஸ்டிஸ் கட்சியார் வேலையின் அடிப்படையான கொள்கைகளாக இருந்து வந்திருக்கின்றன. கிராமவாசிகள் க்ஷேமாபிவிர்த்தி, ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், பொதுஜன சுகாதார அபிவிருத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து வசதிகள், குடித்தனச்செட்டு, கூட்டுறவு பாங்கி ஏற்பாடு, சகல சமூக ஆண் பெண் குழந்தைகளுக்கு சம வசதியுடன் ஆரம்பக் கல்வி முன்னேற்றம், அறநிலையப் பாதுகாப்பு, குடியிருப்பு பாத்தியதை, குடிவாரப் பாதுகாப்பு, கிராம வாசிகளுக்கும் நகர வாசிகளுக்கும் அதிகப்படியான நலம் ஏற்படும் முறையில், ஸ்தல ஸ்தாபன முனிசிபல் நிர்வாகம் நடத்துதல். இவை முதலியனவே ஜஸ்டிஸ் கட்சியாரின் முக்கியமான நோக்கங்களாக இருந்து வந்திருக்கின்றன. இவற்றை அனுசரித்து பல காரியங்கள் செய்யப்பட்டும் இருக்கின்றன. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயங்களையும் பற்றி எவ்வளவோ விஸ்தாரமாக எழுதலாம். ஆனால்,...

ராமநாதபுரம் ஜில்லாவில்

ராமநாதபுரம் ஜில்லாவில்

ஈ.வெ.ரா. பிரசங்கம் தலைவர் அவர்களே! தோழர்களே! இந்திய அரசியலில் புதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரப்போகிறது. அது சம்பந்தமாக இனியும் ஒன்றரை மாதத்தில் தேர்தல் நடக்கப்போகிறது. காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் போட்டி போடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். அதற்காக பொது ஜனங்களிடமிருந்து ஒரு அளவுக்கு பணமும் வசூலித்துக்கொண்டார்கள். பண ஆத்திரமும் பதவி ஆத்திரமும் அதிகார ஆத்திரமும் கொண்டவர்களாகப் புதிது புதிதாகத் தேடிப்பிடித்து தங்கள் கட்சியில் சேர்த்து எலக்ஷனுக்கு நிறுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து மற்ற ஆட்களின் தேர்தல் செலவுக்கு பணமும் வசூலித்து சேர்த்து வருகிறார்கள். இந்தப் பணங்களால் பார்ப்பனர்களை தேர்தலுக்கு நிறுத்தியும், காலிகளுக்கு கொடுத்து காங்கிரசுக்காரர்கள் அல்லாதவர்களுடைய தேர்தலுக்கு இடையூறு செய்தும் தொல்லை விளைவிக்கப் போகிறார்கள். நாம் வெறும் தர்ம நியாயம் பேசிக்கொண்டு வீணாய் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம். நமது நேரம் மிகவும் விலை உயர்ந்த நேரமாகும். ஏற்கனவே நாட்டில் காங்கிரஸ்காரர்களால் ஏராளமான விஷமப்பிரசாரம் நடந்தாய் விட்டது. தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்றும், சர்க்கார்...

ஒன்றுக்கொன்று பொருத்தம்

ஒன்றுக்கொன்று பொருத்தம்

  – சித்திரபுத்திரன்   இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமிபாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டார்கள். சுப்ரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள். இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணியன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன்றான்; சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தது. அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக்கொண்டிருப்பதுமாக இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரிய புராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரிபக்தர்கள் கதையும் அனேகமாக ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதைக்...

ஜாதிமுறை

ஜாதிமுறை

    சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே! “குடி அரசு” தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்றும் சொல்லப்பட்டதோடு அந்த சாதிகள்தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக்காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் þ சாதிக்கிரமத்தை அதாவது ஆதி சாதி என்பவைகளான, பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக்கொண்டும் தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக்கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக்கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக்கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும்...

மோட்சமும் நரகமும்

மோட்சமும் நரகமும்

மனிதன், உடல், உயிர், மாயை எனும் முப்பொருளாக ஆக்கப் பட்டிருக்கின்றான் என்று சைவர்களும், பிரம்மமே மாயா சம்மந்தப்பட்டு இவ்வுலகில் ஜீவர்களாய்த் தோன்றியிருக்கிறது என்று ஸ்மார்த்தர்களும் “ஆன்மா” என்றொரு பொருளை இறைவன் சிருஷ்டித்து மனித உடலுக்குள் புகுத்தியிருக்கிறான் எனச் சில மதங்களும், இவ்வாறு ஒன்றிற்கொன்று முரணாக, நாம் முன் அதிகாரங்களில் விளக்கிக் காட்டியபடி கூறிவருகின்றன. ஆனால் எல்லா மதங்களும் “ஆன்மா” செய்த நன்மை தீமைக்குத் தகுந்தவாறு மோட்சமும் நரகமும் எய்துமென்பதை அபிப்பிராய பேதமின்றி ஒத்துக் கொள்கின்றன. ஆனால் மோட்சமும் நரகமும் எவ்வாறு இருக்கும் என்றால் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகவே வர்ணிக்கின்றது. எந்த நாட்டான் நரகத்தைப்பற்றி எழுதியிருந்தாலும் தத்தம் நாட்டிலுள்ள கொடிய பிராணிகளும், பயங்கர உருவங்களும், கஷ்டமான அனுபவங்களும்தான் நரகத்திலேயிருப்பதாகவும், அவ்வாறே மோட்சத்திலும் தத்தம் நாட்டிலுள்ள உயர்ந்த பிராணிகளும், மரஞ் செடி, கொடி, பழ வர்க்கம், உணவு, பெண்கள் முதலிய போக போக்கியங்களுமிருப்பதாகவே எழுதி வைத்திருக்கின்றான். நரகமும் மோட்சமும் பணம் பறிப்பதற்குப் புரோகிதர்களால்...

மத வெறி

மத வெறி

  உலகில் மதங்கள் என்பவைகள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தியவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்கதரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங்களாலேயே மூல புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரச்சாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்துபோய்விடுமே என்கின்ற பயம் உலகிலுள்ள எல்லா மதஸ்தர்களிடமும் ஆதி முதல் இன்றுவரை இருந்துதான் வருகின்றது. இந்த அபிப்பிராயத்திலும், காரியத்திலும் உலகில் இன்ன மதம் உயர்வு, இன்ன மதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை. சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆட்களையோ, அல்லது இரண்டாயிரம் ஆட்களையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு...

“விடுதலை” நாளேடாகியது!

“விடுதலை” நாளேடாகியது!

    1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படி போட்டியிட்டு சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது என்ற உறுதிமொழியைக் கேட்டது. சில மாதங்கள் அமைச்சரவை அமைக்க மறுத்து நாடகமாடியது. ஆளுநர் உறுதிமொழி ஏதும் தராத நிலையிலேயே காங்கிரஸ் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைச்சரவை அமைக்க முன் வந்தது. எனவே இதற்கு “சரணாகதி” அமைச்சரவை என்று பெரியார் பெயர் சூட்டினார். சரணாகதி அமைச்சரவை நடத்திய பார்ப்பன ஆட்சியை எதிர்த்து பெரியார் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் போர் முரசு கொட்டிய காலம் இது. சரணாகதி அமைச்சரவையையும், காங்கிரசையும் – காங்கிரசிடம் அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்ட பார்ப்பனரல்லாதார்களையும் அனல் பறக்கும் விவாதங்களால் அம்பலப்படுத்தி, காங்கிரசின் சூழ்ச்சிக்குப் பலியாகி விடாதீர்கள் என்று பார்ப்பனரல்லாத மக்களை எச்சரிக்கும் பெரியாரின் தலையங்கங்களும் எழுத்துக்களுமே இத் தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. பெரியார் தனது இளமைக்கால வரலாற்றை தன் வரலாறாகப் பதிவு செய்துள்ள முக்கியத்துவமிக்க...

காங்கிரஸ் அரங்கேற்றிய நாடகம்

காங்கிரஸ் அரங்கேற்றிய நாடகம்

1937 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜüன் முடிய “குடி அரசு” ஏட்டில் இடம் பெற்றிருந்த பெரியார் எழுத்து பேச்சுகளைக் கொண்டுள்ள இந்த முதல் தொகுதி 424 பக்கங்களைக் கொண்டுள்ளது. தலையங்கங்கள் உரைகளாக 117 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகள் பதிவாகியுள்ளன. “குடி அரசு” வார இதழாக வெளிவந்து கொண்டிருந்த இதே காலகட்டத்தில் “பகுத்தறிவு” மாத இதழாகவும், “விடுதலை” வாரம் இரு முறை இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தன. 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்காக உருவாக்கிய அரசியல் சட்டத்தின் கீழ் காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். நீதிக்கட்சி தோல்வியை சந்தித்த காலகட்டம்; இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான பெரியார் எழுத்து – பேச்சுகள் – இந்த பின்னணியில் சுழலுவதால், பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த புதிய அரசியல் சட்டதிருத்தம் தொடர்பான சுருக்கமான ஓர் அறிமுகத்தை முன் வைக்கிறோம். 1919 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்த இரட்டை ஆட்சி முறை...