பாஞ்சாலத்தில் “ஜஸ்டிஸ்” கட்சி

 

“100க்கு 50 விகிதமாவது உத்தியோகம் அளிக்க வேண்டும்

“உருது அரசியல் பாஷையாக இருக்க வேண்டும்”

பஞ்சாப் யூனியனிஸ்ட் கòக்குத் தலைவரான முஸ்லீம் சமூகத் தலைவர் சர். சிக்கந்தர் அயாத்கான் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது

“நாங்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிப்போம், அதிகாரத்துக்கு வந்தால் அந்தப்படியே நடப்போம், குறைந்தபக்ஷம் 100க்கு 50 வீதமாவது உத்தியோகங்கள் முஸ்லீம்களுக்கு அளிப்போம். உருது பாஷையை தான் அரசியல் பொது பாஷையாக ஏற்படுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு ஆக அங்குள்ள காங்கிரசுக்காரர் முஸ்லீம் கò வகுப்பு வாதக் கò என்றோ தேசத்துரோக கò யென்றோ கூறி முஸ்லீம் கòயை யூனியனிஸ்ட் கòயை வெட்டிப் புதைக்கவேண்டும் என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அப்படிக் கூறுகிறவர்களின் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்திருப்பார்கள். ஏன் வகுப்புரிமை கேட்பதையும் ஜனத்தொகைக்குத் தகுந்த உத்தியோகம் அந்தந்த வகுப்புகளுக்கு வழங்குவதையும் அரசியல் திட்டத்தை ஏற்று நடத்துவதையும் உருது பாஷை வேண்டுவதையும் தேசத் துரோகம் என்று சொன்னால் அப்படி சொல்லுவதை மனித சமூகத் துரோகம் என்று முஸ்லீம்கள் 100க்கு 99 பேர் கருதுகிறார்கள். தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதாருக்குள் இருப்பது போல் அவர்களுக்குள் கூலிகளும் சமூகத் துரோகிகளும் மிக மிகக் கொஞ்சம். ஆனால் இங்கு அப்படி இல்லை. இங்கு உண்மையாகவே பார்ப்பனரல்லாத இந்துக்கள் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள் என்று பார்ப்பனர்கள் சொல்லுவதையும் எழுதி வைத்திருப்பதையும் உண்மை என்று நம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆதலாலேயே அவர்களுக்கும் ஆள் கூட்டம் சேருகிறது. வகுப்புரிமை கேட்பதை தேசத் துரோகம் என்று பார்ப்பனர்கள் சொல்லுவதற்கு பார்ப்பனரல்லாதார்கள் பலர் ஆமாம் சாமி போடுகிறார்கள்.

ஆதலால்தான் நாம் பல சமயங்களில் இஸ்லாம் சமயம் சமூக விஷயத்தில் மற்ற சமயத்தை விட சுயமரியாதை உள்ளது என்று சொல்லுகிறோம். எப்படி இருந்தாலும் கூடிய சீக்கிரம் இந்தியா பூராவும் “ஜஸ்டிஸ்” கò தாண்டவமாடப் போகிறது என்பது மாத்திரம் உறுதி.

குடி அரசு – கட்டுரை – 17.01.1937

You may also like...