ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் உள்ளிட்ட மூன்று நூல்களை வெளியிட்டு ஆ.இராசா முழக்கம் ஆரிய திராவிடப் போராட்டம் தொடர்கிறது
கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணி யளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடை பெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ கவிஞர் பிரபஞ்சன் எழுதிய “ஈரோடு தமிழர் உயிரோடு”, கவிஞர் நா.காமராசு எழுதிய , ‘ஒரு குயிலின் போர்ப் பாட்டு’ ஆகிய நூல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. மருத்துவர் தாயப்பன், வழக்கறிஞர் அஜிதா, மு.செந்திலதிபன் (மதிமுக) ஆகியோர் நூல்களை திறனாய்வு செய்து உரையாற்றினர். நிறைவாக திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா சிறப்புரை யாற்றினார். கருஞ்சட்டைப் பதிப்பகம் இயக்குனர் பெல். இராசன் நிகழ்விற்கு தலைமையேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார். சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உரையில் – “ஆரிய திராவிடப் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் கருத்தாயுதங்களாக இந்த ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் உள்ளிட்ட முன்று...