ஈரோடு வடக்கு மாவட்டக் கழக செயல் திட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட கழக மாதந்திர கலந்துரையாடல் கூட்டம்  16.10.2022 ஞாயிறு அன்று  கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது.  நிகழ்விற்கு கழக வெளியீட்டுச் செயலாளர்  இராம. இளங்கோவன்  தலைமையேற்க,  அருளானந்தம்  முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. மாவட்ட கழகத்திற்கு பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாவட்டத் தலைவர் – நாத்திக சோதி, மாவட்ட செயலாளர் – எலத்தூர் செல்வக்குமார், மாவட்ட அமைப்பாளர் – சதுமுகை பழனிச்சாமி, கோபி நிவாசு,  மாவட்ட பிரச்சார அணி செயலாளர் – வேணுகோபால், கோபி ஒன்றிய செயலளர் – செகநாதன், கோபி நகர தலைவர் – ரகுநாதன், கோபி நகர செயலாளர் – அருளானந்தம், நம்பியூர் ஒன்றிய செயலாளர் – ரமேசு, நம்பியூர் ஒன்றியத் தலைவர் – அழகிரி, சத்தி ஒன்றிய செயலாளர் – புதுரோடு சிதம்பரம், கூசூ பாளையம் ஒன்றிய செயலாளர் – கருப்பணன், அந்தியூர் ஒன்றிய செயலாளர் –  சென்னியப்பன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் – வேல்முருகன், பவானி ஒன்றிய செயலாளர் – வினோத், பவானி ஒன்றிய அமைப்பாளர் – செல்வம் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

  1. வருகின்ற 9.11.2022 அன்று குருவரெட்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் பெரியார் தொண்டர் பிரகலாதனின் முதலாம் ஆண்டு  நினைவு நாள் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில் மழை காலம் முடியும் வரை வாரந்தோறும் ஒவ்வொரு பகுதி தோழர்களின் இல்லங்களுக்கு செல்வது என்றும் அனைவரையும் ஒருங்கிணைத்து குடும்ப விழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோ 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தோழர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 27102022 இதழ்

You may also like...