அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருதுநகர் அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஒன்றை இயற்றக் கோரியும் 15.07.2024 அன்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்டக் கழக காப்பாளர் தளபதி முன்னிலை வகித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாநகரத் கழகத் தலைவர் பாலு, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் பெரியார் முத்து, தேனி மாவட்ட அமைப்பாளர் தேனி ராயன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சந்துரு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், ஆதித்தமிழர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினார்கள். நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் கண்டன...
