‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

“குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு” விழாவை முன்னிட்டு நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பு 19.05.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு அருண் கோமதி தலைமை தாங்கினார், சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்ற ஊடகவியலாளர் சுகுணா திவாகர் ‘தமிழ்நாட்டின் சுடரொளி சுயமரியாதை இயக்கம்’ என்ற தலைப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் இரவிபாரதி ‘தமிழ்ச்சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
காவை அஜித் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஆய்வாளர் பழ.அதியமான், மாவட்டச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

You may also like...