Category: தலைமை கழகம்

ஆதித்தமிழர் பேரவையின் வேண்டுகோள்

அனைவருக்கும் வணக்கம், கீழே இருக்கும் கடிதம் இந்திய இரயில்வே துறையின் மந்திரி திரு. சுரேஷ் பிரபு அவர்களிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்தியன் இரயில்வே துறை சிறப்பாக செயல்பட கருத்து கேட்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும்  sureshprabhu@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு SUBJECT லைன் -இல் மட்டும் “END MANUAL SCAVENGING IN INDIAN RAILWAYS” என்பதை CUT  PASTE செய்து அனுப்பினால், இந்திய இரயில்வே துறையில் இருக்கும் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட அனைவரும் குரல் கொடுத்ததாக இருக்கும் என்று கருதுகிறேன். அனைவரும் இந்தத் தகவலை தத்தமது சமூக வலைதளங்கள் அனைத்திலும் பதிவு செய்தும், தங்களின் மின்னஞ்சல் வரிசையில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பியும், இதை பரப்ப உதவுமாறு ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக வேண்டுகிறேன். Dear Rail user, Our respected Prime Minister, Shri Narendra Modi Ji has a vision for this great nation and in this vision...

தோழர் கா.சு.நாகராசு தந்தையார் நினைவேந்தல்

24-12-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்குபொள்ளாச்சி, கா.க.புதூர் தோழர் நாகராசு அவர்களின் தந்தையார் சுப்பிரமணியன் அவர்களின் நினைவேந்தல், அவரது பூஞ்சோலைஇல்லத்தில் ந்அடைபெற்றது. நிகழ்வுக்கு பொள்ளாச்சி வெள்ளீயங்கிரி தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று கா.சு.நாகராசன் உரையாற்றினார். தனது உரையில் ஐம்பது வயதுவரை கடவுள் நம்பீகையாளராக இருந்த தனது தந்தை நாட்டிகரானதையும், அறுபது வயதில் சாதிப்பற்றினை விட்டொஇத்ததையும், தானும் தன் சகோதரர் குடும்பத்தார் அனைவரும் இயக்கப் பணியாற்றுவதற்கு அவரளித்த சுதந்திரத்தையும், ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்தார்.அதுபோலவே அவரது உடலை மருத்துவமனைக்கு அளிப்பதற்கு தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அனுமதி கொடுத்த பாங்கினை விளக்கினார். தொடர்ந்து தோழர்கள் மடத்துக்குளம் மோகன் (தி.வி.க), பொள்ளாச்சி விசயராகவன் (காட்டாறு), பொறியாளர் பரமசிவம் (தி.க), ஆறுச்சாமி (தி,மு.க), தோழர் அறக்கட்டளை சாந்தகுமார் ஆகியோரின் நினைவேந்தல் உரைகளைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவேந்தல் உரையாற்றினார்.தனது உரையில் ஆத்மா தத்துவத்தின் பொய்மைகளையும், பார்ப்பனர்களைக் கொண்டு நடத்தப்படும்  இறுதிச் சடங்கில் கூறப்படும் மந்திரத்தின்...

தமிழ் தேச மலைநாடு மக்கள் கட்சி மாநாடு

21-12-2015 அன்று மாலை 3-00 மணி தொடங்கி மாலை 6-30 மணிவரை, சேலம் போஸ்மைதானத்தில், தமிழ் தேச மலைநாடு மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பொ.பா.இராமசாமி தலைமையில் நடைபெற்றது. முழுதும் பழங்குடி மக்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இக்கட்சியியின் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அரசியல் சட்டம் அனுமதித்துள்ள ஐந்தாம் பட்டியலில் இணைப்பதின் வழியாக உரிமைகள்பல பெற உள்ள வாய்ப்புகள் பற்றியும், வன உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்துவதால் உள்ள நன்மைகள் குறித்தும், அதற்கென தமிழகம் தழுவிய ஒருங்கிணைந்த கிளர்ச்சிகள் நடதவேண்டிய தேவை குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேலம் பெ.இராசகோபால், கான்ஷிராம் பகுஜன் கட்சித் தலைவர் வடலூர் சாமிதுரை, நீலகிரி ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் எம். ஆல்வாஸ், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒய்.வின்சென்ட் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்

திரளான மக்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்ற கழகத்தின் சேலம் மாநாடு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழக தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. மாநாடு நடத்துவதற்கான 26-11-2015 அன்று கொடுத்தஅனுமதி கடிதத்திற்கு காவல்துறை நீண்ட அமைதிக்குப்பின் 17-12-2015 அனுமதி மறுத்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட முந்தையநாள் காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றத்தின் மூலம் கழகம் உடைத்தது. ”மக்களைப்பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்பமானது. தோழர் குமரப்பா தபேலா வாசிக்க, தோழர் சீனி தவிலும், தோழர் காளியப்பன் உறுமியும் வாசித்தனர். தோழர்கள் கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப்...

19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...

காவல்துறையின் தடையை தகர்த்து சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு !”

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன. சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை...

கழகம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்

உதவிக்கரம் நீட்டியோர் திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இணைந்து நடத்திய நிவாரணப் பணிகளுக்கு உதவிட முன்வந்தோர் பட்டியல்: திருப்பூர் வணங்காமண் ஆடையகம் சார்பில் ஊமை அழகிரி 150 புதிய சட்டைகள், 150 வேட்டிகள்; மேட்டூர் கழகம் சார்பில் அரிசி மூட்டைகள், தண்ணீர் பாக்கெட், பருப்பு, ரொட்டி, மருந்துகள், தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ஆனந்தன் 225 பெட்சீட்டுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக அரிசி மூட்டைகள், ரொட்டி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பினர். குவைத்திலிருந்து செந்தில் ரூ.50,000; தஞ்சையிலிருந்து மணி வண்ணன் ரூ.25,000; சூலூர் பனிமலர் ரூ.10,000; சென்னை பாண்டியன் ரூ.4000; அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் ரூ.44,000. குறிஞ்சி நாடன் ரூ.3,000; வளர் தங்கம் குடும்பத்தார் ரூ.2000. செந்தில் (எப்.டி.எல்.) வழியாக உதவியோர் ரூ.8,600. தேனி ஆசிரியர் மணிமேகலை ரூ.5000. சுவீட்சர்லாந்து இளம் இராயல் விளையாட்டுக் கழக சார்பில்...

சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு 12122015 மதுரை

12 டிசம்பர் 2015 அன்று காலை 9.30 மணி அளவில் சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருக்கும் இந்த மாநாடு மதுரை – கே.புதூரில் அமைந்து உள்ள டி நோபிலி அரங்கில் நடைபெற்றது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சாதி வேறுபாடுகள் கூடாதென சட்டம் வலியுறுத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரமுடியாதவர்களாக பெரும்பகுதி மக்கள் இருக்கின்றனர் என்றார் சாதி, மத ஆதிக்கம் அரசியலிலும், ஆட்சியிலும் நுழைவது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். எவிடன்ஸ் அமைப்பு சார்பில் மதுரை கோ.புதூர் டிநோபிலி அருள் பணி மைய அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமை கூடாது என்கிறது. அதன் பிறகு வந்த குடியுரிமைச்...

புதுச்சேரியில் முற்றுகைப் போராட்டம் 16122015

புதுச்சேரி அரசில் அரசுச் செயலாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அர்டசுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை மாதமே ஏமாற்றுதல் (420), அதிகார துஷ்பிரயோகம்...

சங்ககிரி ராச்குமார் திருமண வரவேற்பு

திரைப்பட இயக்குநரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் சங்ககிரி ராச்குமார்- தோழர் திலகவதி ஆகியோரின் திருமண வரவேற்பு சங்ககிரி மீனாட்சி திருமண மண்டபத்தில் 13-12-2015 அன்று நடைபெற்றது. வரவேற்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வட அமெரிக்க சியோட்டல் தமிழ்ச் சங்கத் தலைவர் அதியமான், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சன், சன் டி.வி. ராஜா, இசையமைப்பாளர் தாஜ்நூர் , ஈரோடு மருத்துவர் சக்திவேல் உட்பட கழகத் தோழர்களும், திரைப்படத் துறையினரும் கலந்து கொண்டனர்

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம் ! திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் கழக தோழர்களால் கடலூருக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு ஏற்கனவே அங்கு கிராம பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு வழங்க்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட பொருட்கள்,பொருளுதவி செய்தவர்கள் விவரம் : சந்திரசேகர் சி எம் டி கார்மெண்ட்ஸ் —அரிசி 100 கிலோ அருண்,சதிசு மற்றும் நண்பர்கள் ப்ளூ ஜே மென்ஸ் பௌட்டிக் — 300 சப்பாத்தி; 280 தண்ணீர் குவளை; 200 பிஸ்கட் பாக்கட். சிவகுமார் ஈரோ லுக் ஸ்டிக்கர்ஸ் – 25 கிலோ அரிசி; 50 நாப்கின்ஸ் அபிநயா, சவிதா, மனோஜ், அக்சதா, பாரதி விழி தற்காப்பு பயிற்சி கூடம் சூலூர்—- பிஸ்கட் 2 பெட்டிகள்(2௦௦ பாக்கட்); துணிகள் ; 50 கிலோ அரிசி. முத்துச்சாமி...

மதுரையில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு இடம் : டி நோபிலி அருள் பணி மையம், மெயின் அரங்கம்,கே.புதூர்,மதுரை – 7. மாநாடு – காலை 10.00 முதல் 1.00 மணி வரை. தலைமை : தோழர் இரா.நல்லக்கண்ணு இந்திய கம்னியூஸ்ட் கட்சி துவக்க உரை : தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மாநில செயலாளர், மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி, சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு : எவிடன்ஸ்.

சேலத்தில் 19122015 அன்று பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” திராவிடர் விடுதலைக்கழகம்,சேலம் மாவட்டம் நடத்தும் மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” ‘காலை முதல் இரவு வரை முழு நாள் மாநாடு’ நிகழ்சி நிரல். நாள் : 19.12.2015 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம் சேலம். தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கம். காலை 10 மணி – ‘கருத்தரங்கம்.’ நண்பகல் 2 மணி – ‘பட்டிமன்றம்.’ ———————————————————– மாலை 6 மணி, இடம் : போஸ் மைதானம் சேலம். இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கம், ”திறந்த வெளி மாநாடு.”

பாபர் மசூதியை மீட்க கருச்சட்டை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபியில் நடத்திய ”பாபர் மசூதியை மீட்க கருச்சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில்” 06.12.2015 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.  

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் !

கோபி தமிழர் கூட்டமைப்பு சார்பாக 06.12.2015 அன்று நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு மாமேதை அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிரான்சில் மாவீரர் நாள் – கழகத் தலைவர் உரை

தமிழீழ மக்களின் ஏற்பாட்டில் பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் கழகத்தலைவர் அண்ணன் கொளத்தூர்மணி அவர்கள் கலந்துக்கொண்டு 27112015 அன்று மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.. (உரை ஒலிப்பதிவு கேட்க) பின்பு பாரீசில் புலிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் 

கொளத்தூர் புலியூரில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு! கொளத்தூர் புலியூரில் ! திராவிடர் விடுதலைக் கழகம் வீரவணக்கம் செலுத்தியது. 27.11.2015 மாலை 6.05 மணிக்கு மாவீரர் வீரவணக்க பாடல் ஒலிக்க மறைந்த மாவீரர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள தளபதி ரோய் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி – முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள்.  இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த குற்றச்சாட்டு,  முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம்...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில், பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, 21-11-2015 அன்று நடைபெறவிருந்த “ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, 20-11-2015 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் சிலாங்கு மாநிலத் தலைவர் தோழர் பரமசிவம், செயலாளர் தோழர் பொன்வாசகம், பொருளாளர் தோழர் அன்பழகன், பெரியாரிய எழுத்தாளர் கவி ஆகியோர் அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து சந்தித்தனர். அடுத்து, அவரை தங்கள் மகிழுந்தில் அழைத்துக் கொண்டு, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் கடல் வழியாய் வந்து கால்பதித்த கடாரத்துக்கு ( இன்றைய கெடா மாநிலம் ) அழைத்து சென்று , அங்கு நடக்கும் அகழ்வாய்வு இடங்களையும், புஜாங்க் பள்ளத்தாக்கு எனும் மலை, ஆறு, பள்ளத்தாக்காக உள்ள இயற்கை அழகு கொஞ்சும் பகுதிக்கும் அழைத்து சென்றனர். அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள...

ஈழம் தீர்வா?

ஈழம் தீர்வா?

“ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் மலேசியாவில் உள்ள பினாங்கு மாகணத்தில் 21.11.15 அன்று நடைபெற்ற சர்வ தேச மனித உரிமை கழகத்தின் “இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் ” எனும் கருத்தரங்கில் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம்” எனும் நான்காம் அமர்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உரையாற்றினார். மேலும் அக் கருத்தரங்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சசீதரன், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி உள்ளிட்ட பல்வேறு தமிழீழ ஆதரவு தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் – மலேசியாவில் கழக தலைவர் உரை நிகழ்த்துகிறார் !

மலேசியாவிலுள்ள பினாங்கு மாநிலத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கழகத்தின் ‘இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும்’ எனும் கருத்தரங்கில் பேசுகிறார். 21.11.2015 சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு நடைபெறும் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் ” எனும் நான்காம் அமர்வில் ”ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் கழக தலைவர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும்,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சரீதரன் அவர்களும் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் திரு ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.

இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு தீர்மானங்கள்

மாநாட்டு தீர்மானங்கள் ! 08.11.2015 அன்று கழகதலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன்வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து நிதிஷ்குமார் தலைமையிலான சமூக நீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 2) குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன்வைத்து நடக்கும் பொதுநிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதிப்பதற்கும்,கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 3)...

ஜாதி ஆணவ படுகொலை, மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வேலூர் 06112015

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும்,மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராசேந்திரன்,கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா,கெளதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனார், விடுதலைசிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சந்திரகுமார், SDPI மாவட்ட தலைவர் தோழர் முகமது ஆசாத், ஆதித் தமிழர்பேரவை மாவட்ட செயலாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் தோழர் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சிங்கராயர்,...

காட்டாறு செய்திக்கு மறுப்பு

காட்டாறு செய்திக்கு மறுப்பு

//அடுத்த தலைமுறைக்கு அறிவாயுதம்’ என்ற அறிவிப்பை நாம் வெளியிட்ட நேரத்தில்,திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dvkperiyar.comஎன்ற தளத்திலும் பணிகள் தொடங்கிவிட்டன. அதில் 1925 முதல் 1938 வரை குடி அரசு,பகுத்தறிவு, புரட்சி, ஏடுகளில் வெளியான ஏறத்தாழ 2631 கட்டுரைகள் யூனிகோட் மற்றும் பி.டி.எஃப் வடிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பாராட்டுகிறோம்// http://www.suyamariyathai.org/indexnews.php?nid=213 இது குறித்து சில வார்த்தைகள் இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின் எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு, பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்து 1925 முதல் 1938 வரை 27 தொகுதிகளாகவும், 1930ல் பெரியாரால் வெளியிடப்பட்ட ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை ஒரு தொகுதியாகவும் தொகுத்து திராவிடர் கழகத்தின் வழக்குகளால் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பெற்று 2007ல் வெளியிட்ட அன்றே அனைத்து தொகுப்புகளையும் அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளமான periyardk.org பதிவேற்றம் செய்யப்பட்டது. ஓரிரு மாதங்களில் யூனிகோடாகவும்...

‘அருந்ததினர்’ மீதான  தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

‘அருந்ததினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டியைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவருக்கும் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தைச் சார்ந்த நதியா என்பவருக்கும் காதல் திருமணத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த மாவட்ட செயலாளர் போஸ் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்) நடத்தி வைத்துள்ளார். இதற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்ற தோழரை கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இதேபோன்று விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் ஆதிதிராவிடர் பரிமளா என்பவரை (பறையர் சமூகம்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரை விட்டே ஓட நேர்ந்தது. தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்ததாகவும், 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியதாகவும்...

இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை. கருத்தரங்கம் : நேரம் : காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : K.K.S.K.மஹால்,பவானி ரோடு,ஈரோடு. பொது மாநாடு : நேரம் : மாலை 6 முதல் 10 மணி வரை. இடம் : திருநகர் காலனி,ஈரோடு. தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் அப்துல்சமது,மனித நேய மக்கள் கட்சி, தோழர் ஆளூர் ஷாநவாஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தோழர் இரா.அதியமான்,நிறுவனர் தலைவர்,ஆதித்தமிழர் பேரவை, தோழர் புனிதப் பாண்டியன்,ஆசிரியர் தலித் முரசு, தோழர் வே.மதிமாறன்,முற்போக்கு எழுத்தாளர், தோழர் சுந்தரவள்ளி,முற்போக்கு எழுத்தாளர். மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் இசை நிகழ்சியும்,வீதிநாடகமும் நடைபெறும். தொடர்புக்கு : ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.9842712444 – 9944408677

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நேற்று 24.10.2015 சனிக்கிழமை காலை 10.மணிக்கு திருச்சி.சத்திரம் பேருந்து நிலையம்,ரவி அரங்கத்தில் நடைபெற்றது இதில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சியும் – திரையிடல் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – புகைப்பட காட்சியும் நடைபெற்றது பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.

இனி என்ன செய்யப்போகிறோம்? – குறுந்தகடு வழக்கிலிருந்து விடுதலை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இங்கு தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஈழத்தின் இன அழிப்பு குறித்து பெதிக வின் சார்பில் ”இனி என்ன செய்யப்போகிறோம்?” எனும் தலைப்பில் காணொலி குறுவட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஈழத்தில் நடைபெறும் போர் குறித்து தமிழக மக்களுக்கு உண்மைகளை விளக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது அக்குறு வட்டுக்களை வைத்திருந்ததாக கூறி தற்போதைய திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி இராம.இளங்கோவன் அவர்கள் காப்புரிமைச்சட்டத்தின் கீழ் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு 2½ மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அந்த வழக்கில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்களும் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு கோபி குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 20.10.2015 அன்று...

இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திருச்சியில் திரையிடல்

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ! கழக தலைவர் பங்கேற்கிறார் ! இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திரையிடல். இலங்கை கடற்படையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – புகைப்பட காட்சி. நாள் : 24.10.2015 சனிக்கிழமை காலை 10.மணி. இடம் :ரவி அரங்கம்,சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி. தலைமை : ”தோழர் பேரா.சரஸ்வதி”, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம். முன்னிலை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். வரவேற்பு : தோழர் ஜோதி நரசிம்மன். திறப்பவர் : ஓவியர் வீரசந்தானம். சிறப்புரை : ஜிவாஹிருல்லா,சட்டமன்ற உறுப்பினர். திரையிடல் சின்னப்பா தமிழர். மற்றும் தோழமை அமைப்புகள்.

சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம் – புத்தக வெளியீட்டு விழா !

புத்தக வெளியீட்டு விழா ! தோழர் பாலன் அவர்கள் எழுதிய ‘சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம்”. – ஈழத்தமிழ் அகதிகளின் துயரம் எனும் நூல் வெளியீட்டு விழா 16.10.2015 வெள்ளிகிழமை மாலை 5.00 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூல் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக ,பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் உரையாற்றினார்

மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜையை கொண்டாடாதே – ஆர்ப்பாட்டம்

மாவட்ட தலை நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் ! நாள் : 19.10.2015 திங்கட்கிழமை. அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசு அலுவகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! என வலியுறுத்தி. ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுகளை அரசு அலுவலகத்தில் நடத்துவது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகும். அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொது இடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.அரசு அலுவலர்களின் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டை பொது இடத்தில் நடத்தினால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக இயங்குவது என்பது சந்தேகத்திற்கிடமாகிறது. அரசு அலுவலகங்களில் மதவழிபாடு சார்ந்த சின்னங்கள், அடையாளங்கள் வைக்கக்கூடாது என்று 1968 -ல் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள...

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் எழுதிய ”மெளனத்தின் சாட்சியங்கள்” நூல் அறிமுகவிழா !

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் எழுதிய ”மெளனத்தின் சாட்சியங்கள்” நூல் அறிமுகவிழா ! நாள் : 03.10.2015 சனிக்கிழமை மாலை 6 மணி. இடம் : நல்லாயன் சமூக கூடம், வின்சென்ட் ரோடு, கோட்டை ,கோவை. சிறப்புரையாளர்கள் : தோழர் கொளத்தூர் மணி,தலைவர் , திராவிடர் விடுதலைக் கழகம், தோழர் ஜிவாஹிருல்லாஹ், மனித நேய மக்கள் கட்சி, தோழர் ரபீக் அகமது,SDPI தோழர் இரா.அதியமான்,ஆதித்தமிழர் பேரவை.

‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலை இராசேந்திரன் உரை அமெரிக்க-இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

ஊடகவியலாளர்கள் அய்யநாதன் எழுதிய ‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கருத்தரங்கமும் அக்.2, 2015 அன்று சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் நிகழ்வாக நடந்தது. காலை அமர்வில் அந்நூலை பழ. நெடுமாறன் வெளியிட, வைகோ பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் பானுமதி, டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் இராமு மணிவண்ணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். இரண்டாம் கட்ட அமர்வாக பிற்பகல் 3 மணியளவில் “அய்.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தலைமை யில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை: எனது நீண்டகால நண்பர் அய்யநாதன் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உந்தப்பட்ட அவர், தனது பத்திரிகையாளர் பணியையும் உதறிவிட்டு, செயல்களத்துக்கு வந்தவர். தமிழ் ஈழப்...

இடஒதுக்கீடு கொள்கை : மறு பரிசீலனை தேவையா? சங்பரிவாரங்கள் எழுப்பும் வாதங்களுக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் ஒரே குரலில் கூக்குரலிட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பாக இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டுக்கு (செப். 30, 2015) எழுதிய கட்டுரை இது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பே ஒழிக்க வேண்டும் என்று கருத்துகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும், பல ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கைதான் தமிழகத்தை இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர்த்தியிருக்கிறது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குறி பார்க்கும் முன்பே துப்பாக்கிக் குண்டு முந்திக் கொண்டு பாய்வது போன்றதே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் கருத்து உள்ளது என்பதுபோல்,“anti-quota can jumps the gun” என்று ‘டைம்ஸ்ஆப் இந்தியா நாளேடு இக்கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளது. விடுதலை இராசேந்திரன் கட்டுரையின் தமிழ் வடிவம்: “எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்; இல்லையேல் இடஒதுக்கீடு எவருக்குமே இருக்கக்...

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...

ஈ வெ ரா பெரியார் – வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா

          தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு எஸ். இராமகிருஷ்ணனின் ஈவெரா பெரியார் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா பாரதி புத்தக அரங்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் முதல் படியை பெற்று கொண்டார்

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.