ஜாதி ஆணவ படுகொலை, மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வேலூர் 06112015

வேலூரில் ஆர்ப்பாட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும்,மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராசேந்திரன்,கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா,கெளதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனார், விடுதலைசிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சந்திரகுமார், SDPI மாவட்ட தலைவர் தோழர் முகமது ஆசாத், ஆதித் தமிழர்பேரவை மாவட்ட செயலாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் தோழர் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சிங்கராயர், மா.பெ.பொ.க யின் தோழர் குப்பன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தோழர் ராஜேந்திரன், கழக வழக்கறிஞர் தோழர் துரை.அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.  திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,மாவட்ட தலைவர் தோழர் இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொளுத்தும் வெயிலிலும் கூட இந்த எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு அதன்பின் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது

20151106035403 20151106035405 20151106035432 20151106041216 20151106190816

You may also like...