Category: தலைமை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

கழகத் தோழர்களின் கவனத்திற்கு, (விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை ஒட்டி கழகத் தோழர்கள் அரசு துறைகளுக்கு வழங்க வேண்டிய விண்ணப்ப படிவ மாதிரிகள், நீதிமன்ற ஆணை ஆகியவை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.) விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு (25082017 வெள்ளி) இந்துத்துவ அமைப்புகள் நீதி மன்ற ஆணைகளை கொஞ்சமும் மதிக்காமல், தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளையும் காலில் போட்டு மிதித்தும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை விளைவித்தும், சிறு வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்வதும் என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள்,தமிழக அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்யத் தவறுவது நீதி மன்ற அவமதிப்பாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே,...

சமூக நீதி சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள் திருச்செங்கோடு 12082017

மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

01082017 மாலை 3 மணி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! நீதி மன்றங்களில் தமிழை் வழக்காடு மொழியாக்க வலியுருத்தி போராடி வரும் மதுரை வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை செல்லும் வழிலேயே பாதியில் மறித்து ஜனநாயக உரிமைகளை மீறி கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . வழக்கறிஞர்களை சந்திக்கச் செல்லும் வழிபில் நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 9.30 மணிக்கு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மாலை 3.00 மணிக்கு நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கழக தலைவரும், தோழர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

கழகத் தலைவர் கைது மதுரை 01082017

கொளத்தூர் மணி கைது… திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மதுரையில் நடைபெரும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்திற்கு சென்ற போது நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்…. தடை மீறி செல்ல விருந்த திராவிடர் விடுலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் ஆதரவாளர்கள் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கைது செய்யப்பட்டனர்.

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெருமைக்குரியவர் களாக இருந்த நாம் – இன்று வாழ்வுரிமை இழந்து நிற்கிறோம். காலம் காலமாக நமது முன்னோடித் தலைவர்கள் பெரியாரும் காமராசரும் அண்ணாவும் அவர் வழி வந்த தலைவர்களும் கட்டிக் காத்த தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளை நடுவண் பா.ஜ.க. மோடி ஆட்சியிடம் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோம். நமது தனித்துவத்தை அழிக் கிறார்கள்; இந்தியப் பண்பாட்டை – பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கிறார்கள்; நாம் இழந்து நிற்கும் உரிமைகளில் சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறோம். 2006ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வை நாம் ஒழித்து விட்டோம்; பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரியில் நமது மாணவ மாணவிகளை சேர்த்தோம்; கடும் உழைப்பால் நல்ல மதிப்பெண் எடுத்துக்கூட நமது வீட்டுச் செல்வங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. ‘நீட்’ தேர்வை எழுது என்று கட்டாயப்படுத்துகிறது மோடி ஆட்சி. திக்கு...

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

கோவை : 8.8.2017 – கோவை, சூலூர், பல்லடம், திருப்பூர் (தங்கல்) 9.8.2017 – குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி (தங்கல்) 10.8.2017 – அத்தாணி, அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி (தங்கல்) 11.8.2017 – கவுந்தபாடி, காஞ்சிக்கோயில், திங்களூர், பெருந்துறை (தங்கல்) 12.8.2017 – வெள்ளோடு, மொடக்குறிச்சி, கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : பன்னீர்செல்வம் (சூலூர்),  நிர்மல்குமார் (கோவை) மேட்டூர் : 8.8.2017 – மேட்டூர் தொடக்கம் : மேச்சேரி, தர்மபுரி, காவேரிப்பட்டிணம் (தங்கல்) 9.8.2017 – கிருட்டிணகிரி : பர்கூர், ஊத்தங்கரை(தங்கல்) 10.8.2017 – அரூர், வாழப்பாடி, சேலம் (தங்கல்) 11.8.2017 – ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை (தங்கல்) 12.8.2017 – ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : சி.கோவிந்தராசு (மேட்டூர்), கிருட்டிணன் (நங்கவள்ளி) மயிலாடுதுறை : 8.8.2017 – மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம்  (தங்கல்) 9.8.2017 – நாச்சியார்கோயில், வலங்கைமான், நீடாமங்கலம்,...

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் !  சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்  கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம் கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 2017 ஜூலை 10ஆம் தேதி காலை சென்னை கழகத் தலைமை நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 7 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காலூன்ற துடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளின் ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பரப்புரை இயக்கங்களை முன்னெடுப் பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடு மதக்கலவரங்கள் இல்லாத சமூகநீதி கோட்பாடுகளைப் பின்பற்றி ஏனைய மாநிலங் களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவதை சீர்குலைக்கும் சதிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதை கவலையுடன் தலைமைக்குழு பரிசீலித்தது. குறிப்பாக கல்வித் துறையில் மோடியின் குறுக்கீடு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு உருவாக்கி வரும் தடைகள், நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள...

தமிழ்நாட்டிற்கு தனி அரசியல் சட்டம் – திவிக வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு தனி அரசியல் சட்டம் இந்திய அரசியலமைப்பு – இந்தியாவை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அறிவிக்கிறது. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை; ஆனால் மாநிலங்களின் ‘இறையாண்மை’யை ஒடுக்கி, இந்தியாவை ஒற்றை தேசமாக்கி ஒற்றைப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனிய – வேத மதப் பண்பாட்டை – நடுவண் பா.ஜ.க. ஆட்சி கல்வி, மொழி, உணவு, பண்பாட்டுத் துறைகளில் திணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி உரிமை பறிக்கப்பட்டு, ஆள் தூக்கி அடக்குமுறை சட்டங்களும் மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் இந்த உரிமை பறிப்புகளைத் தடுத்திடவும், தமிழ்நாட்டுக்கே உரிய சமூக நீதி – சுயமரியாதைப் பண்பாடுகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கவும் தமிழ்நாட்டுக்கு தனியான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமைப் போராட்டத்தை தொடங்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. அண்டை நாடான மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில்...

பா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க – கழக மாநாடு அறைகூவல்

4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்: 1)            1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு...

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...

தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது! ஜூன் 5இல் சென்னையில் மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்பு கழக தலைமைக் குழுவின் முக்கிய முடிவுகள்

சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” – என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது.  1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி...

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் விரைவில்…

இந்திய அரசின் அலுவல் மொழி சட்டம் 1976 பிரிவு 1.ii. தமிழகம் நீங்கலாக அனைத்து இந்திய பகுதிகளுக்கும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தமிழகத்தில் எழுதும் ஒவ்வொரு இந்தி எழுத்தும் திணிப்பே. சட்ட விரோதமே. போராட்டங்கள் விரைவில்…  

மாட்டுக்கறி உணவு விழா குறித்து கழகத் தலைவர் அவர்களின் அறிக்கை

அன்பு தோழர்களே, வணக்கம். சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஏதோ மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு மாலைமரியாதை செய்ய வருவோருக்கு நல்லமுறையில் வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில்...

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது !

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது ! தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதிவெறியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ! தமிழக அரசே,! பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுக்கு தக்க இழப்பீடு வழங்கு ! அம்மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடு ! விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கிராமம் கே.தொட்டியப்பட்டி.இக் கிராமத்தில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 150 குடும்பங்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் எதுவும் இல்லை. ஆதிக்கசாதியான நாயக்கர் ஜாதி பகுதி குடியிருப்பில் குடிநீர் குழாய்கள் உள்ளன. கிராமத்திற்கு தள்ளி சுடுகாட்டு பகுதியில் குடிநீர்த்தொட்டி அமைந்துள்ளது.அந்த குடிநீர்த்தொட்டியின் கீழ் உள்ள குழாயில்தான் அருந்ததியின மக்கள் குடிநீர் பிடித்து வந்தார்கள்.ஆதிக்க ஜாதியினர் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்தும் மேலும் தங்கள் தண்ணீர் தேவைக்காக சுடுகாட்டு...

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...

தோழர் ஃபாரூக் படுகொலை

இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது. மறைந்த பழனிபாபா அவர்கள்‘’நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், மார்க்கத்தால் இசுலாமியன்’’ என பிரகடனப்படுத்தினார். சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கும் இந்து மத நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாத எம் உறவுகளுக்கும் எதிரான காவி மதவெறி பாசிசமே எமது முதன்மை எதிரி. பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பன சனாதன வேத மதமே முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மதம். பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் உழைத்தது சம உரிமையை மறுக்கும் வேதமதத்திற்கு எதிராகத் தான். தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார். பெரியாரின் நாத்திகத்தின் முதன்மை நோக்கம் “ஜாதி ஒழிப்பே”. பெரியார் அறிவியல் நோக்கில் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்தவர் அல்லர்....

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கழகம் ஆதரவு !

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 04.03.2017 அன்று நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்து கழகத்தின் ஆதரவினை தெரிவித்து உரையாற்றினார். மேலும் நெடு வாசல் கிராமம் அருகே ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றையும், அருகில் அமைக்கப்பட்டுள்ள ரசாயணக்கழிவு தேக்க தொட்டியையும் பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழ் நாட்டின் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். மீத்தேன் திட்டத்தை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த மாட்டோம் என சொன்ன மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எனும் வேறொரு பெயரில் வந்து இதே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மண்ணிற்கு அடியில் செய்யப்படும் நீர் விரிசல் முறை ஏற்படுத்தும் பாதிப்புகளை விவரித்து எந்த வடிவத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது...

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம்  தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுது மிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு சமுதாய இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் கோவை நோக்கி திரளுகிறார்கள். சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசு தேவுக்கு ஆட்சி...

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால், பா.ஜ.க. தமிழக அரசை மிரட்டிப் பணிய வைக்க திட்டமிடுகிறது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். ‘ஒன் இந்தியா’ இணையதள இதழுக்கு கொளத்தூர் மணி அளித்த பேட்டி: கேள்வி : ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண் இது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? கொளத்தூர் மணி பதில் :  மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றுவதற்கான முன்முயற்சிகளில் உதவுவது என்பதின் மூலம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களது போராட்டமாக காண்பிக்க முயற்சி மேற்கொண்டதன் அடையாளமாகத்தான் விவேகானந்தர் இல்லம் அருகில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால்தான் விவேகானந்தர் படத்தை வைத்துக் கொண்டு போராட்டம் தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு என்ன வேலை என்று...

திவிக வரவேற்கிறது இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு ஆதரவு’...

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக  நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட முடிவெடுத்திருக்கும் நிலையில் ஒரு  வேண்டுகோளை திராவிடர் விடுதலைக் கழகம் அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்களுக்கும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் முன் வைக்க விரும்புகிறது. தமிழ்நாட்டில் நீண்டகால சிறைவாசிகளையும் இராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாழும் 7 தமிழர்களையும் மாநில அரசுக்கு உரிய உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதை செய்தால் அது புதிய ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதோடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக்கும் சரியான நினைவுப் பரிசாக வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏற்கெனவே அண்ணா நூற்றாண்டின்போதும் கலைஞர் சட்டமன்றப் பணியின் 50ஆம் ஆண்டு நிறைவை யொட்டியும் ‘சுதந்திரம்’ பெற்று 25ஆம் ஆண்டு நிறைவுக்காகவும் தமிழகத்தில் இதேபோல் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் முழக்கம் 19012017 இதழ்

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்! சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம்

24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் : வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் – புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார...

வேத மரபு மறுப்பு மாநாடு சேலம் 24122016 தீர்மானங்கள்

24-12-2016 அன்று சேலத்தில் ,சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  நிறைவேற்றப்பட்ட தீர்மானம். வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றிவிட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் –  புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார சக்தியாகவும் மாற்றிக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி –...

நிதி தாரீர் ! “வேத மரபு மறுப்பு மாநாட்டிற்காக…….”

  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வரும் 24.12.2016 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வேத மரபு மறுப்பு மாநாடு சேலம், நேரு கலையரங்கம், போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. கருத்தரங்கம்- பேரணி – கலை நிகழ்ச்சி – பொது மாநாடு என ஒரு நாள் முழுவதும் நடைபெற உள்ள மாநாட்டிற்கான பணியில் கழகத் தோழர்கள் இரவு,பகலாக பணி செய்து வருகிறார்கள். மாநாட்டு பணிக்கான நிதியை கழக ஆதரவாளர்களிடம் பொது மக்களிடம் அணுகி திரட்டியும் கழகத் தோழர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தியும் பணியைத் தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசின் திடீர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மாநாட்டு பணிக்கான நிதி திரட்டும் பணி நெருக்கடியை சந்தித்துள்ளது. இம்மாநாட்டில் கழகம் வேத மரபிற்கெதிராக ஒரு புதிய அணிச்சேர்க்கையை முன்மொழிகிறது. இது பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேத மரபிற்கெதிரான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் கூட பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து...

”புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் !”

அன்பிற்குரியீர்! வணக்கம். வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை. புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வர்தா புயல். அரசு வேரோடு சரிந்த மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தை தர முயற்சிக்கிறது. நமக்கு இப்படி எல்லாமும் முழுமையாக இல்லாவிட்டாலும் நடந்து கொண்டுள்ளன. ஆனால் ஈழத் தமிழர் முகாம்களின் நிலை முற்றிலும் வேறாக உள்ளது. புயல் வந்து போய் ஒரு வாரமாகியும் இப்போது வரை கும்முடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாமில் எந்தப் பணியையும் இதுவரைக்கும் அரசு நிர்வாகம் தொடங்கவேயில்லை. கூரைகளாலும் சிமிண்ட் ஓடுகளாலும் வானம் மறைத்த வீடுகள், இன்னும் சரியாகச் சொன்னால் கூடுகள்தான் அவை. அனைத்தும் பெயர்ந்து...

சீருடையுடன் கூடுவோம்!

டிசம்பர் 24, சேலம் மாநாட்டுக்கு, தோழர்கள் கட்டாயம் கழக சீருடையான கருப்பு சட்டை – நீலநிற ஜீன்ஸ்  பேண்டுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். சீருடையில், பெரியார் பெரும் படையின் பேரணியும், அணி வகுப்பும் மாநாட்டில் மிகவும் முத்தாய்ப்பானது என்பதை சொல்லத் தேவையில்லை. பெரியார் இயக்க வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்திய பெருமை சேலத்துக்கு உண்டு. இதே சேலத்தில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக பெயர் மாற்றமும், பண்பு மாற்றமும் பெற்றது. இந்த சேலத்தில்தான் வேத மத மறுப்பின் தொடர்ச்சியாக 1971ஆம் ஆண்டு பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நாட்டையே கலங்கடித்தது! பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு மாநாட்டின் தலைப் பிலும் கருத்தரங்க தலைப்புகளிலும் புதிய யுக்தியை கழகம் பின்பற்றி யிருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காத வேத மத மறுப்பாளர்கள் பலரும் மாநாட்டில் பேசவிருக் கிறார்கள். மாநாட்டின் அரங்குகளுக்கும்  வேத மரபு மறுப்பாளர்களின்...

நிமிர் – மாத இதழ்

நிமிர் – மாத இதழ்

விரைவில் கழகத்தின் புதிய மாத இதழ் ‘நிமிர்’ தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் – எழுத்தாளர்கள் – படைப்பாளிகள் எழுதுகிறார்கள். – விரிவான அறிவிப்பு அடுத்த இதழில் பெரியார் முழக்கம் 08122016 இதழ்

2017ஆம் ஆண்டு கழக நாள்காட்டி தயாராகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் தயாராகி வருகின்றன. புதிய பொலிவோடு – அழகிய வண்ணங்களில் – சமுதாயத் தலை வர்களின் படங்கள் – சிந்தனைகள் – வரலாற்றுக் குறிப்புகளுடன்… நாள்காட்டியின் விலை : ரூ. 60 முன் பதிவு செய்வோருக்கு : ரூ. 50 தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். முன்பதிவு எண்ணிக்கைக்கேற்பவே நாள்காட்டிகள் அச்சிடப்படுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு : தபசி. குமரன், தலைமைக் கழகச் செயலாளர், பேசி: 9941759641

டிச.24-சேலத்தில் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’ தோழர்களே தயாராவீர்!

டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு. “சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்… ‘வேத மரபு’ மறுப்பு மாநாடு காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள். கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம்  வழங்கப்படுகிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது. கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது. தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள். வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள். வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை...

கழக சார்பில் புதிய மாத இதழ் : புத்தக சந்தை ரூ.2 கோடி கட்டமைப்பு நிதி திரட்ட இலக்கு கழக தலைமைக்குழு முக்கிய முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கடந்த நவம்பர் 13, ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் மயிலாடு துறையில் ‘புத்தகச் சோலை’ அரங்கில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இயக்கத்தின் வளர்ச்சி, கட்டமைப்பு, பெரியாரியலை முன்னெடுப்பதற்கான அணுகுமுறைகள், புதிய நூல்களை வெளியிடுதல், அதை மக்களிடம் விற்பனை செய்வதற்கான புத்தக சந்தைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. புதிய மாத இதழ் ஒன்றை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.  கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு அதற்கான பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொறுப்பாளர்                             மாவட்டங்கள் இரா. உமாபதி           ...

ரயில் மறியல் போரட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது !

காவிரி நதிநீர் உரிமையை பாதுகாக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தியும் நடைபெறும் இப்போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் முழு ஆதரவினை தெரிவித்து ரயில் மறியலில் பங்கேற்கிறது. அனைத்து விவசாய சங்கங்கள்,அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் (17.10.2016 – 18.10.2016) ஆகிய நாட்களில் நடைபெற இருக்கும் ரயில் மறியல் போராட்டத்தில் கழக தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                          அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி தலைவர்  திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 06102016 இதழ்

பெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்

தமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார். பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது. ஆனால், பெண்கள்...

கழகத் தோழர்களே! சமூக செயல் பாட்டாளர்களே! கண்காணியுங்கள்!

உங்கள் ஊரில் வினாயகன் சிலைகள் அனுமதி பெறப்படாத இடங்களில் வைக்கப்பட் டிருக்கிறதா? உயர்நீதிமன்றம் – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு களுக்கு எதிராக ‘பிளாஸ்ட் ஆப் பாரிஸ்’ சுட்ட களிமண்ணால் சிலைகள் செய்யப்பட் டிருக்கிறதா? வாகன விதிகளுக்கு எதிராக சரக்கு வாகனங் களில் ஆட்கள் கொண்டு வரப்படுகிறார்களா? உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி அலறி, மாணவ மாணவிகளுக்கும் நோயாளிகளுக்கும் பொது மக்களின் அமைதி யான உறக்கத்துக்கும் ஊறு செய்கின்றார் களா? சட்ட மீறல், விதி மீறல் களை கண்காணியுங்கள்! காமிராக்களில் படம் பிடித்து முகநூலில் பரப்புங்கள்! உள்ளூர் காவல்துறைக்கு புகார் மனுக்களை எழுத்துப் பூர்வமாக வழங்குங்கள்! கவனம்; கவனம்; விரைந்து செயல்படுங்கள்! பெரியார் முழக்கம் 25082016 இதழ்

தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் மின்னஞ்சல் முகவரி !

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையர் அவர்கள் வருகிற விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக மொத்தமாக ஒரு இடத்தில் தடைசெய்யப்பட்ட ரசாயண பூச்சு பூசப்பட்ட,பிளாஸ்ட் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை விநியோகிக்கும் பொருட்டு வைத்திருந்தால் அந்த இடம் குறித்த சரியான தகவலை அளிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். எனவே கழக தோழர்கள் அம்மாதிரியான தடைசெய்யப்பட்ட சிலைகளை மொத்தமாக வைத்திருக்கும் இடங்களை அறிந்து மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்திற்கு மின்னஞ்சல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் மின்னஞ்சல் முகவரி : Tnpcbmd3@vsnl.com Anpcb_chn@gov.in  

விநாயகர் சிலை கரைப்பின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல் ! விநாயகர் சிலை கரைப்பின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து 2004 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல். கழக தோழர்கள்,விநாயகர் சதுர்த்தி நிகழ்சியில் சிலைகளை கரைப்பது குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்ட காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு அளிக்கப்பட உள்ள கடிதங்களுடன் இத்தீர்ப்பின் நகலையும் இணைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கை மனு மாதிரிகள்

‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள் தடுத்து நிறுத்த கழகம் களமிறங்கும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 12.8.2016 அன்று மாலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம்’ நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருப்பதைப் போலவே அதன் 51ஏ பிரிவின்படி அடிப்படை கடமைகளையும் வரையறுத்துள்ளது. அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்பதை குடிமக்கள் அனைவரின் அடிப்படை கடமை என்று உள்பிரிவு ‘எச்’ (h) வலியுறுத்துகின்றது. இதனை வலியுறுத்தியே “நம்புங்கள் அறிவியலை! நம்பாதீர்கள் சாமியார்களை!” எனும் முழக்கத்தோடு அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் திராவிடர் விடுதலைக் கழகம் மக்களின் பெரு வரவேற்போடும், ஆதரவோடும் நடத்தி முடித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் இப்பயணங்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கியும் வந்த சிறு இடையூறுகளைக்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள்.செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்? அப்துல் சமது உரை- விலை-ரூ.115.  

அறிவியல் பிரச்சார பயணம் – கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு !

பரப்புரைப் பயணத்தின் செய்திகளை அனுப்புவது தொடர்பாக……… கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை ”நம்புங்க அறிவியல …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் முழக்கத்தோடு நடைபெறும் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் புறப்பட்டு சிற்றூர்கள்,நகரங்கள் வழியாக பயணித்து மக்களைச் சந்தித்து விழிப்புணர்வுப் பரப்புரை செய்ய உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 இடங்கள் என்கிற அளவில் தெருமுனைக் கூட்டங்களும், பொதுக்கூட்டங்களுக்குமான ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் செய்துவருகிறார்கள் 4 அணிகள் 5 நாட்கள் என 80 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த பரப்புரைப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வின் செய்திகளையும் தோழர்கள் தவறாது பதிவு செய்து, அதனை கழகத் தலைமைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்திகளை அனுப்புவதற்கென ஒவ்வொரு அணிக்கும் ஒரு தோழர் பொறுப்பெடுத்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றி குறைந்த அளவு 3 புகைப்படங்கள்,கலந்து கொண்டோர் மற்றும் செய்திகள் ஆகியவற்றைக்...

கழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !

கழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !

வாட்ஸ்அப் ஊடகம் மூலம் செங்குட்டுவன் வாண்டையார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டி விட்டு கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்கத்தோடும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து ஜாதி மோதலை உருவாக்கும் முயற்சியாக பேசி வருவதற்காக அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்கடந்த 23.03.2016 அன்று புகார் மனு அளிக்கப் பட்டது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி மற்றும் செந்தில் குனுடு ஆகியோருக்கு ஜாதி வெறியர்கள் அலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் கால், ஸ்கைப், நெட்கால் வாயிலாக எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் மறைந்திருந்து கோழைத்தனமாக ஆபாசமாக பேசுவதுதான் இந்த ஜாதி வெறியர்களின் வீரம் போலும்? இது...

முற்றுகைப் போராட்டம் ஏன்?

முற்றுகைப் போராட்டம் ஏன்?

தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார், ஓ. பன்னீர்  செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான். தென் மாவட்டங்களில் 5 ஆண்டு களில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து...

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! – துண்டறிக்கை

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துண்டறிக்கைகான செய்திகள் ! நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்! ஒவ்வொரு நாளும் பத்திரிகைளைப் புரட்டினால்…. தொலைக்காட்சிகளைப் பார்த்தால்…. நெஞ்சம் பதறுகிறது.! அப்பப்பா…. நம்முடைய மக்களில் பலரும் இந்த அறிவியல் யுகத்திலும் மூடநம்பிக்கைகளில் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? • சாமியார்களிடம் ஏதோ ‘மந்திர சக்தி’ இருப்பதாக நம்பி ஏமாந்து நிக்குறாங்க… • பிறக்கப் போவது பெண் குழந்தைகள் என்றால், அந்த மழலையை கருவிலேயே அழிக்கிறாங்க… 10 வயதுலேயே 30, 40 வயது ஆணுக்கு நம்ம பெண் குழந்தைகளை கல்யாணம் கட்டி அவுங்க வாழ்க்கையை பாழடிக்கிறாங்க. • “இந்த ‘சனியன்’ பொறந்ததுலேயிருந்து குடும்பமே விளங்காமல் போச்சு”ன்னு சோதிடக்காரர்கள் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளையே சாகடிக்கிறாங்க. • குடும்பத்தின் பிரச்சினைகள்; மன அழுத்தங்கள்; தங்களை கவனிப்பாரில்லையே என்ற ஏக்கம்; அச்சம்; இப்படி பல்வேறு உளவியல் காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளை...

இந்திய இராணுவமே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீரை விட்டு வெளியேறு!

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை: மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை. 2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி (வயது 22), “மோதல்” என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க முயலும் அந்த போராளி...

திவிக செயலவை தீர்மானங்கள் மேட்டூர் 25062016

  25062016 சனிக் கிழமையன்று சேலம் மாவட்டம், மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்ற, திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 – இரங்கல் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவுநர் (ஆனா ரூனா) அருணாசலம், திருச்சி இளந்தாடி துரைராசன், பெங்களூர் வேமண்ணா (எ) வி.சி. வேலாயுதம் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 2 – மாநில அரசின் உரிமை தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் – அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான் – மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7...

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : ”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து கழக தலைமைக் குழுவின் முடிவுகள் ! இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் ! தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 1) தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும்...

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திவிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்...