Category: தலைமை அறிக்கை

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் !

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் !

“முக்கிய வேண்டுகோள் !” – கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி. வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் ! Pபட்டியல் இன பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க...

கழக தலைவரின் நிகழ்ச்சிகள் புகைப்பட தொகுப்பு

கழக தலைவரின் நிகழ்ச்சிகள் புகைப்பட தொகுப்பு

மதுரை முருகேசன் – வாசுகி இல்லத் திறப்பு – 27052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி  28052018 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது – ஆர்ப்பாட்டம்  சென்னை 29052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம்  30052018 மணப்பாறை பொதுக்கூட்டம் பெரியார் சிலை திறப்பு வெங்கடசமுத்திரம் 02062018 ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016 கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018  

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் 23, 24 தேதிகளில் ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பால் பிரபாகரன், பேரா. சுந்தரவள்ளி, வீரா கார்த்திக், வகுப்புகளை எடுக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ.100/-                      முன் பதிவு அவசியம். தொடர்புக்கு:  ஃபிடல் செகுவேரா, இராசிபுரம். பேசி: 9788593863 பெரியார் முழக்கம் 07062018 இதழ்

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

ஜுன் 23 & 24 சனி,ஞாயிறு , #பெரியாரியல்பயிலரங்கம் இடம்- #ஏற்காடு நிகழ்ச்சி நிரல் : 23-06-2018 சனிக்கிழமை காலை 10:00 மணி- தோழர்கள் அறிமுகம் காலை 11:00 மணி- தோழர் #விடுதலை இராசேந்திரன் (பெரியார் அன்றும் இன்றும்) மதியம் 1:00 மணி-உணவு இடைவேளை மதியம் 2:00 மணி-தோழர் #வீராகார்த்திக் (கடவுள் மறுப்பு தத்துவம் – பெரியார்) மாலை 3:30 மணி தேனீர் இடைவேளை மாலை 3:45. பேரா- #சுந்தரவள்ளி (உலக மயமாக்கல்-தாராளமயமான இந்திய அரசியலும்) மாலை 6:00 மணி தனிதிறமை (பேச்சுபயிற்சி,வீதி நாடகம்) இரவு 8:30 மணி உணவு இரவு 9:15 மணி கலந்துரையாடல் 24-06-2018 ஞாயிறு காலை -7:00 மணி தோழர் #பால்பிரபாகரன் (இட ஒதுக்கீட்டு வரலாறு) காலை 9:00 மணி காலை உணவு காலை 10:00மணி தோழர் #கொளத்தூர்மணி (இந்துத்துவம்- பெரியார் அம்பேத்கர்) காலை 12:00மணி தோழர் விடுதலை இராசேந்திரன் (களத்தில் திராவிடர் விடுதலைக்கழகம்) மதியம் 2:00...

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம் ! தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை விடுதலை செய் ! தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை கைவிடு ! நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்களை இழிவு படுத்திய பார்ப்பான் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் காவல் துறை, நீதிமன்றம் உத்தரவிட்டும் சோடா பாட்டில் வீச்சு சமூக விரோதி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசின் காவல்துறை, வழக்குகளை கண்டு அஞ்சாமல், தலைமறைவாகாமல் காவல்துறை விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் பொது வெளியில் மக்களுக்காக இயங்கி வரும் தலைவர் ஆவார். எப்போதோ போடப்பட்ட வழக்கில் இப்போது அதுவும் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற நேரத்தில் தடுத்து கைது செய்வதற்கு என்ன அவசர அவசியம் வந்துள்ளது? மக்களுக்காக போராடுபவர்களையே குறிவைத்து இந்த காவல்துறை கைது செய்கிறது...

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதி வழியில் தன்னெழுச்சியாக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும், கண்டித்தும்.தமிழக முதல்வரை உடனே பதவி விலக வலியுறுத்தியும்,இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, மற்றும் இயக்குனர்,திரு, பாரதிராஜா. அவர்களின் தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகியவற்றின் சார்பில் நாளை (24-05-2018) வியாழன், மாலை 3 மணியளவில், சேப்பாக்கம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது,...

தமிழ்நாட்டு அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு -திவிக கடும் கண்டனம்

தமிழ்நாட்டு அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு -திவிக கடும் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு திவிக கண்டனம்: தங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலை வேண்டாமென்று நூறு நாட்களாக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நூறாவது நாளாக இன்று முற்றுகைப் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்திருந்தார்கள். தமிழக அரசு துப்பாக்கிச் சூட்டில் 9 உயிர்களைப் பலி கொண்டு விட்டது. நூறு நாட்கள் போராட்டத்தின்போது மக்களை சந்தித்துப் பேசாத இந்த அரசு, மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்று 9 உயிர்களைப் பலி வாங்கியதற்குப் பிறகு நியாயம் பேசத் தொடங்கியிருக்கிறது. வன்முறை பிரச்னைக்கு தீர்வாகாது என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது தமிழக அரசின் ஆதரவோடு இங்கே வன்முறைகள் கண்மூடித் தனமாக கட்டவிழ்க்கப்பட்டன. அதற்கு அரசும் துணை போனது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. இப்போது நடப்பது ஒன்றும் அரசியல் போராட்டம் அல்ல. தூத்துக்குடியில் வாழ்கின்ற மக்கள் நடத்தும் போராட்டம். 20,000...

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் ! 15-4-2018 ஞாயிறு அன்று,ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.: தீர்மானம்: 1 அ) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஆதாரமாகவும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரிநீரை, (அளவில் குறைவாக இருப்பினும்,) கர்நாடக அரசிடம் இருந்து நிரந்தரமாகக் கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட; உச்சநீதிமன்றத்தின் தீர்;ப்புக்குப் பின்னரும் சொந்த அரசியல் லாபங்களுக்காக காவிரி மேலண்மைவாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு இம்மாநாடு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.. மத்திய அரசு மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக கவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஆ) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் போராடிய அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், கலைத் துறையினருக்கும் இம்மாநாடு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும்...

நடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்!

நடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்!

காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக – தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு பறித்துவிட்டது. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் – இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground – தீர்ப்பு பக்.451) 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார். 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கவரும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கவரும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது

இதற்கு முன்பு இரண்டு முறை இந்து அமைப்புகள் ரத யாத்திரையை நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலம், சோமநாதபுரத்திலிருந்து அத்வானி தொடங்கிய ரத யாத்திரை. அடுத்து, கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை முரளி மனோகர் ஜோஷி சென்ற ரத யாத்திரை. இந்த இரண்டு ரத யாத்திரைகளும் வன்முறையைத் தூண்டிவிட்டு சமுதாய பதற்றத்தை ஏற்படுத்தியவைதான். ஒன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது. இப்போதும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழலில் வட இந்தியாவில் உள்ள அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்களின் மன உணர்வை வாக்குகளாக மாற்றும் முயற்சியாகத் தான் இதைப் பார்க்கிறோம். இந்தப் பயணம் வந்துகொண்டிருக்கிற எல்லா இடங்களிலும் பாஜகவும், ஆர்எஸ்.எஸ்ஸும்தான் ஆதரவாக இருந்து கொண்டிருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து எல்லா மாநிலங்களின் டிஜிபிகளுக்கும் ரத யாத்திரை குழுவுக்கு அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென்று அறிக்கை வந்ததாகவும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் நிலவுகிற பொது அமைதி, எல்லாரோடும் இணங்கி இருக்கிற ஓர் இணக்கமான சூழலை உடைத்து...

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

மார்ச் 20 காலை 8மணி தமிழக எல்லை செங்கோட்டை_புளியரை_சந்திப்பில் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை புளியரை சந்திப்பு மார்ச் 20 காலை 8 மணி இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் வை.கோ – ம.தி.மு.க தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் சீமான் – நாம் தமிழர் தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது – ம.ஜ.கட்சி தோழர் சரீப் – த.ம.ஜ.க தோழர் பாளை ரஃபீக் – ம.ம.மு.கழகம் தோழர் பாலன் – த.தே.ம.முன்னணி தோழர் அதியமான் – ஆ.த.பேரவை தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் தோழர் ஜக்கையன் – ஆ.த.கட்சி தோழர் பொழிலன் – த.ம.மு தோழர் வெண்மணி – ஆ.த.கட்சி தோழர் தமிழ்நேயன் –...

செய்நன்றி கொன்றவன் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள வாய்ப்பளியுங்கள் – தோழர் கொளத்தூர் மணி எழுத்தாளர் ஏகலைவனுக்கு கோரிக்கை

செய்நன்றி கொன்றவன் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள வாய்ப்பளியுங்கள் – தோழர் கொளத்தூர் மணி எழுத்தாளர் ஏகலைவனுக்கு கோரிக்கை

ஏகலைவன் அவர்களுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில். —————————— தோழர், நீங்கள் கூறியதைப் போலன்றி இரவிச்சந்திரனன், நளினியைத் தவிர அனைவரையும் சிறையில் சந்திதுள்ளேன். (மேலும் நான் ஏதேனும் நூல் எழுதுவதாய் இருந்தால் அடிக்கடி சந்திக்கலாம்) மரணதண்டனைக் குறைப்புக்குப் பின்னர் மனுவில் பெயர் எழுதிக் கொடுத்தும் பலமுறை முருகனும் சாந்தனும் சந்திக்க வந்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக சிறைக்கு சென்று ‘யாரையும்’ பார்ப்பதில்லை என்பது உண்மையே, பல காரணங்கள் அதற்குண்டு. நீங்கள் கூறியுள்ளவாறு கவுந்தபாடி பேரறிவாளன் என்னிடம் புத்தகத்தைக் கொடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை அவரிடமே உறுதிசெய்து கொள்ளுங்கள். //தாங்கள் மிகப்பெரும் தலைவர். இதில் உள்ள எழுவரையுமே சந்தித்தீர்களா. யார் யாரை? எத்தனைமுறை என்றெல்லாம் நான் கேட்க முடியாது. அது தேவையற்றதும் கூட.// என்னைத்தான் கேட்கமுடியாது. அவர்களையே கேட்டிருக்கலாமே? பார்க்கப்போகாத இந்த காலகட்டத்தில்கூட அவர்களுக்காக வெளியே இருந்து என்னென்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை அவர்களே சொல்வார்களே! பெரியார் பெயரைக் குறிப்பிடாதது தொடர்பாக பெரியார்மீது...

எழுத்தாளர் ஏகலைவன் – வரலாறுகளை அறிந்து கொள்ளவும்

எழுத்தாளர் ஏகலைவன் – வரலாறுகளை அறிந்து கொள்ளவும்

“எழுத்தாளர் ஏகலைவன் அவர்களின் இரண்டு பதிவுகள் குறித்தே எனது இப்பதிவு”  – தலைவர் தோழர் கொளத்தூர் மணி முதல் பதிவு ஏகலைவன் தி.மு.க. வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு எழுதியது…. காவல்துறையின்கெடுபிடிகள் ……. *பரோலில் வந்தவருக்கு நியாயங்களும், உரிமைகளும் மறுக்கப்படுகிறது;.* ———————————————— இராஜீவ் படுகொலையில், தம்பி அருப்புக்கோட்டை இரா.பொ.இரவிச்சந்திரனைச் சேர்க்கப்பட்டு , ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கு சரியானபடி புலனாய்வு செய்யப்படவில்லை என்று நாம் பலமுறை சொல்லி வருகிறோம். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரோல் வழங்கியுள்ளது. பரோலுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கட்டும். அவரை சந்தித்து நலன் கேட்க வருபவர்களிடமும் நெருக்கடிகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது காவல் துறை. வீட்டைச் சுற்றி அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல மற்ற ராஜீவ் படுகொலையில் தண்டனை பெற்று பரோலில் வந்தவர்களுக்கெல்லாம் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. இரவிச்சந்திரனுக்கு மற்றவர்களைப் போல ஊடக வெளிச்சமும் இல்லை, மற்ற கைதிகளுக்கு கிடைக்கும்...

‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ முடிவு இரத யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் மறியல்!

‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ முடிவு இரத யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் மறியல்!

நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி  வருகின்றன. தமிழ்நாட்டை தங்களது பிடியில் கொண்டு வரச் செய்யும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ். பேரணிகளை நடத்தினார்கள். இச் செயலுக்கு ஒத்துப்போன தமிழ்நாடு அரசு, மோடியின் பொம்மை அரசாகவே இருந்துவருகிறது. நிவேதிதா நூற்றைம்பதாவது ஆண்டு நினைவு இரதயாத்திரை மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் தொடங்கி வைக்க கோவையிலிருந்து சனவரி 22 முதல், பிப்ரவரி 22 சென்னை வரைநடந்து முடிந்துள்ளது.     27 மாவட்டங் களினூடாக 35 கல்லூரிகளுக்குள் நுழைந்து இரண்டு இலட்சம் மாணவர்களைச் சந்தித்து, 3000 கி.மீ பயணத்தை முடித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னே மட்டும் வளர்மதி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவை கல்வி நிறுவனங்களைக் காவி மயமாக்கும் முயற்சியின் பகுதியாகும். விஸ்வ ஹிந்து பரிசத்தின் ஏற்பாட்டில் அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை “இராமராஜ்ய இரதயாத்திரை” என்ற பெயரில் கீழ்வரும் முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி...

ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் – விடுதலை இராஜேந்திரன்

ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் – விடுதலை இராஜேந்திரன்

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டதைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் பெரியார் சிலைகள் உடைக் கப்படும்’ என்று பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப் பட்டது. அது, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தனக்குத் தெரியாமல் தன் அட்மின் அந்தக் கருத்தை வெளியிட்டுவிட்டதாக ஹெச்.ராஜா சொல்லி, அதற்கு வருத்தமும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் கேட்டோம். அவர், நம்மிடம் தெரிவித்த கருத்து: “ஹெச்.ராஜாவின் முகநூலில் வெளியான கருத்து தமிழகத்தில் எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் மனதையும் அந்தக் கருத்து புண்படுத்தியிருக்கிறது. ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால், கோழைத்தனமான, தொடைநடுங்கி அரசாக தமிழக அரசு இருப்பதால், அது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும்  ஜாதி வன்கொடுமை

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்துக் குட்பட்ட கிராமங்களில் தலித் குடும்பங்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், ஜாதி ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து நடப்பது அதிகரித்து வருகிறது. வழக்கம்போல காவல்துறை தலித் மக்கள் மீதான தாக்குதல் என்றால் அலட்சியம் காட்டுவது போலவே இதிலும் செயல்பட்டு வருகிறது. தற்போது திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தைச் சார்ந்த ஆராயி (4), அவரது மகள் தனம் (15), மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவன் சமையன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துவிட்டார். உயிருக்குப் போராடிய நிலை யில் ஆராயியையும் அவரது மகள் தனத்தையும் முதலில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து, அங்கு பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச் இராஜாவின் முகநூல் பதிவிற்கு கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கண்டனம்

பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச் இராஜாவின் முகநூல் பதிவிற்கு கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கண்டனம்

தமிழ்நாட்டில் 99 விழுக்காடு மக்களுக்கு எதிராக பெரியார் பேசினார். ஆனால் தனக்கு எதிராக பேசினாலும் பலருக்கு அவர் தான் பாதுகாவலர் என்ற அடிப்படையில் தான் தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் எச். இராஜாவின் இப்படிப்பட்ட பேட்டிகள் ஒருவேளை அவர் எந்த இனத்திற்காக நிற்கிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தை சார்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இராஜாவிற்கு அறிவுரை சொல்லுங்கள் அமைதியாக இருக்க சொல்லுங்கள் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக கூடும் என்பதால் இந்த இடத்தில் மக்களிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்  

ஸ்ரீ மத் சடகோப இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு – கருத்தரங்கம்

ஓர் வேண்டுகோள் ! அனைவருக்கும் வணக்கம். இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் ! எதிர்வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண மண்டபத்தில் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த திட்டமிட்டிருந்த கருத்தரங்கை நடத்தினால் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கற்பனைத் திறன் மிகுந்த கொளத்தூர் ஆய்வாளர் முடிவுக்கு வந்துள்ளார். எனவே நாம் அனுமதிக்கு விண்ணப்பிக்காத அந்த நிகழ்வை நமக்கு சொந்தமான பெரியார் படிப்பகத்துக்குள் கலந்து உரையாடுவதையே, நுழைவுக் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே வந்து நிகழ்வைக் கேட்கலாம் என்று அறிவித்து நடக்கும் உள்ளரங்கு கூட்டத்தையே நடத்த அனுமதி மறுத்துள்ளார். மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டு கதவுகளில் வருவாய்த்துறை...

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன்,எச்.ராஜா ஆகியோர் தமிழை அவமதித்ததற்காக திருவள்ளுவர் சிலை முன்பு நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் ! – கொளத்தூர் மணி அறிவிப்பு

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன்,எச்.ராஜா ஆகியோர் தமிழை அவமதித்ததற்காக திருவள்ளுவர் சிலை முன்பு நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் ! – கொளத்தூர் மணி அறிவிப்பு. இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை ! தமிழை அவமதித்த காஞ்சி விஜயேந்திரனுக்கு கடும் கண்டனம் ! சென்னையில் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா என்பவர் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவை எச்.ராஜா நடத்தினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் விழாவில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது பார்பனத் திமிருடன் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்தார்.இதனை எச்.ராஜாவும் கண்டும் காணாமல் இருந்து தமிழர்களை அவமதித்துள்ளார். அது போலவே நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலேயே காஞ்சி விஜயேந்திரனுக்கு மட்டும்...

தோழர் இரஞ்சித்

தோழர் இரஞ்சித்

“இயக்குனர் தோழர் ரஞ்சித் ஒரு பேட்டியில் பெரியார் பெயரை கூறாதது தவறா ?” – விடுதலை ராஜேந்திரன் இயக்குனர் இரஞ்சித் ஒரு பேட்டியில் பெரியார் பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் மூகநூலில் பதிவிடப்படுகின்றன. இது தேவையற்ற வேலை என்பது தான் எனது கருத்து. “அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இருவரும் ஜாதி ஒழிப்புக்காக போராடிய தலைவர்கள்”. அம்பேத்கர் பெயரை சொல்லக் கூடாது, பெரியார் பெயரை சொல்லக் கூடாது அல்லது அம்பேத்கர் பெயரை சொல்ல வேண்டும் பெரியார் பெயரை சொல்ல வேண்டும் என்று பெயருக்குள் புகுந்து கொண்டு தத்துவங்களை பின்னுக்கு தள்ளுவது என்பது அம்பேத்கரிய கொள்கைக்கோ பெரியாரிய கொள்கைக்கோ உடன்பாடன ஒன்றல்ல. இரஞ்சித் அவர்கள் பெரியாரை குறிப்பிடவில்லை என்பதற்காக அவரை பெரியாருக்கு எதிராளராக சித்தரிப்பது என்பது ஒரு மிக பெரிய தவறு. ” பெரியார் பேசிய ஜாதி ஒழிப்புக்கு தான் இரஞ்சித் குரல் கொடுக்கிறார். இன்னும்...

திவிக செயலவை தீர்மானம் சேலம் 29122017

29122017 வெள்ளியன்று, சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள் தீர்மானம் 1 சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியா சராசரியைவிட அதிகமாகிவிட்டது என்றும், வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே காரணம் என்றும் கூறியுள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணி நியமனங்களுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலத்தினரும், நேபாளம், பூட்டான் நாட்டவரும், வெளிநாடுகள் பலவற்றிலிருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்குடன் இந்தியா வந்துள்ளோரும் – தமிழ்மொழி தெரியாதோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிற மாநிலத்தவர்களுக்கு பணி...

மக்கள் மன்றத் தோழர்கள் கைது! கழகம் கடும் கண்டனம்

மக்கள் மன்றத் தோழர்கள் கைது! கழகம் கடும் கண்டனம்

காஞ்சி தொடர்வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படத்தை குப்பையில் வீசிவிட்டு சங்கராச்சாரி படத்தை வரைந்ததைத் தட்டிக் கேட்டு களமிறங்கிய காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் கைதுசெய்யப்பட்டதோடு அவர்கள் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் தஞ்சைத் தமிழன் விடுத்துள்ள அறிக்கை: 21 டிசம்பர் 2017 அன்று காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தின் வாயிலில் மாட்டப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை குப்பையில் போட்டுவிட்டு அந்த இடத்தில் இந்துமதக் குறியீடுகளும், அதை ஒட்டிய சுவர்களில் சங்கராச்சாரிகளின் படங்களும் வரையப்பட்டிருந்தன. அவ்விடத்தில் தலைவர் அம்பேத்கரின் படத்தை  மீண்டும்  நிறுவிய குற்றத்திற்காக டிச.27 அன்று மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெசி, தஞ்சை தமிழன், பாலு ஆகியோர் பிணையில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைய மேலாளர் சீனிவாசலு அவர்கள்...

பறி போகும் தமிழர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே துண்டறிக்கை; மண்டல மாநாடுகள்;  டிசம்பர் 29இல் சேலத்தில் தலைமை செயற்குழுக் கூட்டம்  ஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்

பறி போகும் தமிழர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே துண்டறிக்கை; மண்டல மாநாடுகள்; டிசம்பர் 29இல் சேலத்தில் தலைமை செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூட்டம் டிசம்.16, 2017 காலை 11 மணியளவில் ஈரோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கழகப் பொறுப்பாளர்கள் கடந்த அக்டோபரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக கழக செயல்பாடுகள் குறித்து கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் குழுவில் கருத்துகளை முன் வைத்தனர். செயல்பாடுகள் இல்லாத கழக அமைப்புகள் – செயல்படக் கூடிய கழக அமைப்புகள் – அமைப்புகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கழக செயல்பாடுகளை மேலும் தீவிரமாக்குவது குறித்தும் விவாதிக்கப் பட்டது. கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தலைமைக்குழு விவாதித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடுவண் ஆட்சி தலையீட்டால், தமிழக இளைஞர்களை கடுமையாகப் பாதிக்கும் வேலை வாய்ப்புகள், தமிழக தேர்வாணையத்தின் அறிவிப்புகள், நீட் திணிப்பால் உருவாகியுள்ள நெருக்கடிகள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களாக பிற மாநிலத்தவர்களை தேர்வு...

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் டிசம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் டிசம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் டிசம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளில் சிலவற்றின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்களை காண சுட்டிகளை சொடுக்கவும்   தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் 07122017 திராவிடத்தால் எழுந்தோம் விளக்கப் பொதுக்கூட்டம் குமரி குலசேகரம் அரசமூடு 09122017 தமிழ் மதி இல்லவிழா குமரி மாவட்டம் பள்ளியாடி 10122017 பெண்கள் சுயமரியாதை மாநாடு ஈரோடு 16122017 பொறிஞர் அம்புரோசு படத்திறப்பு விழா தூத்துக்குடி 17122017 மாவோயிஸ்ட் தியாகிகள் தோழர் குப்புராஜ் – தோழர் அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சி மதுரை 18122017  

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நவம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நவம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளில் சிலவற்றின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்களை காண சுட்டிகளை சொடுக்கவும்     மக்கள் தளபதி  பள்ளீகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்திற்கு கழக தலைவர் சந்திப்பு 09112017  கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்தில் கழகத் தலைவர் 09112017 தோழர் கோகுலக் கண்ணன் – தோழர் பிரேமா வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017 அம்பேத்கர் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017 நீடாமங்கலம் நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் 25112017 சட்ட எரிப்பு நாள் போராளிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் சூலூர் 26112017 சுகுமார் படத்திறப்பு விழா மேட்டூர் 27112017 மாவீரர் நாள் நினைவேந்தல் புதுச்சேரி 27112017 கொளத்தூர் மாவீரர் நாள் நிகழ்ச்சி புகைப்படம் 27112017 கல்வி நிறுவன படுகொலைகளை கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வேலூர் 28112017   தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம்...

டிசம்பர் 16இல் ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு

இடம் :                 வீரப்பன் சத்திரம், ஈரோடு மாலை 5 மணி வரவேற்புரை               :                 கவிப்பிரியா தலைமை       :                 மணிமேகலை முன்னிலை                   :                 சங்கீதா, முத்துலட்சுமி உரை : சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.) பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்) திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்) ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) நிறைவுரை : கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் நன்றியுரை : சுமதி காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு மாவட்டம் (தெற்கு) தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!   பெரியார் முழக்கம் 30112017 இதழ்

தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?

நண்பர்களே! சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் பட்டியலில் கேரளாவைச் சார்ந்த டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சுப்ரமணிய பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஒருபோதும் பணியாற்றியவர் அல்லர். எங்கோ டெல்லியில் வழக்கறிஞராக உள்ள ஒருவரை தமிழ் நாட்டிற்கும் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லாத ஒருவரை நியமிப்பது சரியா? சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ் நாட்டில் இன்றும் கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரிவினர்களான பிரன்மலைக் கள்ளர்கள், வண்ணார், அருந்ததியர், ஆசாரி, கோனார், முத்தரையர், நாவிதர், போயர், மற்றும் ஏராளமான சமூக பிரிவினரும் மற்றும் பெயரளவில் ஒருவர் மட்டுமே இருக்கும் மீனவர், வன்னியர் போன்ற சமூகப் பிரிவுகளில் ஏராளமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எங்கோ டெல்லியில் இருக்கும் அதிலும் கேரளாவைச் சார்ந்த...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதி

“தலைமைக் கழக அறிவிப்பு !” தோழர்களுக்கு வணக்கம், வருகிற டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை (01.12. 2017) அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், வாய்ப்புள்ள இடங்களிலும் பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதிகளில் செய்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசுப் பணியாளர்களாக தமிழ்நாட்டினருக்கே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் கர்நாடகம்,குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருப்பதைப் போல புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் வாய்ப்புள்ள தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்ட பயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், ‘நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம்: 26.10.2017 –       காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு  – கோபி 27.10.2017  – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017  – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017  – காலை 10.00 – நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00...

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை தீபாவாளி கொண்டாட்டம் தேவை தானா?

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை தீபாவாளி கொண்டாட்டம் தேவை தானா?

இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை – தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன? உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக்கின்றன. தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தவும் பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் அக்டோபர் இறுதிவரை தடை விதித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள். வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளு படிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலை யில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை...

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக  தோழர்களை சந்திக்கிறார்கள் !

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்டபயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’,‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம் : 26.10.2017 – காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு – கோபி 27.10.2017 – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017 – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017 – காலை 10.00 -நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00 – திருப்பூர்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                      அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி  தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்   விண்ணப்பங்கள் தரவிறக்க

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை.

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று 02.09. 2017 மத்திய பா.ஜ.க.வின் நீட் தேர்வினால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அரியலூர் அனிதாவின் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். அவ்வமயம் கழகத் தோழர்கள்,நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கழகத் தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிலவற்றின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்களை காண சுட்டிகளை சொடுக்கவும்   மே 17 தோழர்களுக்காக அறிவுரைக் குழுமம் சென்னை 29062017 மஞ்சள் நாடகம் சென்னை 30062017 ஆதி தமிழர் கட்சியின் ‘நடுகல்’ ஏடு வெளியீடு சென்னை 30062017   காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை 15072017 காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் 16072017 பேரா. ஜெயராமன் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை 18072017 காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அந்தியூர் 21072017 இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 30ஆம் ஆண்டு கருத்தரங்கம் சென்னை 29072017   பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது சென்னை 06082017 தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017   நாகராஜ் – அசுவிதா இணையேற்பு திருப்பூர் 10092017 தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா 16092017 கணியூர்,...

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

கழகத் தோழர்களின் கவனத்திற்கு, (விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை ஒட்டி கழகத் தோழர்கள் அரசு துறைகளுக்கு வழங்க வேண்டிய விண்ணப்ப படிவ மாதிரிகள், நீதிமன்ற ஆணை ஆகியவை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.) விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு (25082017 வெள்ளி) இந்துத்துவ அமைப்புகள் நீதி மன்ற ஆணைகளை கொஞ்சமும் மதிக்காமல், தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளையும் காலில் போட்டு மிதித்தும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை விளைவித்தும், சிறு வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்வதும் என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள்,தமிழக அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்யத் தவறுவது நீதி மன்ற அவமதிப்பாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே,...

சமூக நீதி சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள் திருச்செங்கோடு 12082017

மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

01082017 மாலை 3 மணி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! நீதி மன்றங்களில் தமிழை் வழக்காடு மொழியாக்க வலியுருத்தி போராடி வரும் மதுரை வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை செல்லும் வழிலேயே பாதியில் மறித்து ஜனநாயக உரிமைகளை மீறி கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . வழக்கறிஞர்களை சந்திக்கச் செல்லும் வழிபில் நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 9.30 மணிக்கு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மாலை 3.00 மணிக்கு நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கழக தலைவரும், தோழர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

கழகத் தலைவர் கைது மதுரை 01082017

கொளத்தூர் மணி கைது… திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மதுரையில் நடைபெரும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்திற்கு சென்ற போது நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்…. தடை மீறி செல்ல விருந்த திராவிடர் விடுலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் ஆதரவாளர்கள் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கைது செய்யப்பட்டனர்.

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெருமைக்குரியவர் களாக இருந்த நாம் – இன்று வாழ்வுரிமை இழந்து நிற்கிறோம். காலம் காலமாக நமது முன்னோடித் தலைவர்கள் பெரியாரும் காமராசரும் அண்ணாவும் அவர் வழி வந்த தலைவர்களும் கட்டிக் காத்த தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளை நடுவண் பா.ஜ.க. மோடி ஆட்சியிடம் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோம். நமது தனித்துவத்தை அழிக் கிறார்கள்; இந்தியப் பண்பாட்டை – பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கிறார்கள்; நாம் இழந்து நிற்கும் உரிமைகளில் சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறோம். 2006ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வை நாம் ஒழித்து விட்டோம்; பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரியில் நமது மாணவ மாணவிகளை சேர்த்தோம்; கடும் உழைப்பால் நல்ல மதிப்பெண் எடுத்துக்கூட நமது வீட்டுச் செல்வங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. ‘நீட்’ தேர்வை எழுது என்று கட்டாயப்படுத்துகிறது மோடி ஆட்சி. திக்கு...

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

கோவை : 8.8.2017 – கோவை, சூலூர், பல்லடம், திருப்பூர் (தங்கல்) 9.8.2017 – குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி (தங்கல்) 10.8.2017 – அத்தாணி, அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி (தங்கல்) 11.8.2017 – கவுந்தபாடி, காஞ்சிக்கோயில், திங்களூர், பெருந்துறை (தங்கல்) 12.8.2017 – வெள்ளோடு, மொடக்குறிச்சி, கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : பன்னீர்செல்வம் (சூலூர்),  நிர்மல்குமார் (கோவை) மேட்டூர் : 8.8.2017 – மேட்டூர் தொடக்கம் : மேச்சேரி, தர்மபுரி, காவேரிப்பட்டிணம் (தங்கல்) 9.8.2017 – கிருட்டிணகிரி : பர்கூர், ஊத்தங்கரை(தங்கல்) 10.8.2017 – அரூர், வாழப்பாடி, சேலம் (தங்கல்) 11.8.2017 – ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை (தங்கல்) 12.8.2017 – ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : சி.கோவிந்தராசு (மேட்டூர்), கிருட்டிணன் (நங்கவள்ளி) மயிலாடுதுறை : 8.8.2017 – மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம்  (தங்கல்) 9.8.2017 – நாச்சியார்கோயில், வலங்கைமான், நீடாமங்கலம்,...

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் !  சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்  கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம் கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 2017 ஜூலை 10ஆம் தேதி காலை சென்னை கழகத் தலைமை நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 7 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காலூன்ற துடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளின் ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பரப்புரை இயக்கங்களை முன்னெடுப் பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடு மதக்கலவரங்கள் இல்லாத சமூகநீதி கோட்பாடுகளைப் பின்பற்றி ஏனைய மாநிலங் களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவதை சீர்குலைக்கும் சதிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதை கவலையுடன் தலைமைக்குழு பரிசீலித்தது. குறிப்பாக கல்வித் துறையில் மோடியின் குறுக்கீடு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு உருவாக்கி வரும் தடைகள், நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள...

தமிழ்நாட்டிற்கு தனி அரசியல் சட்டம் – திவிக வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு தனி அரசியல் சட்டம் இந்திய அரசியலமைப்பு – இந்தியாவை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அறிவிக்கிறது. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை; ஆனால் மாநிலங்களின் ‘இறையாண்மை’யை ஒடுக்கி, இந்தியாவை ஒற்றை தேசமாக்கி ஒற்றைப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனிய – வேத மதப் பண்பாட்டை – நடுவண் பா.ஜ.க. ஆட்சி கல்வி, மொழி, உணவு, பண்பாட்டுத் துறைகளில் திணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி உரிமை பறிக்கப்பட்டு, ஆள் தூக்கி அடக்குமுறை சட்டங்களும் மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் இந்த உரிமை பறிப்புகளைத் தடுத்திடவும், தமிழ்நாட்டுக்கே உரிய சமூக நீதி – சுயமரியாதைப் பண்பாடுகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கவும் தமிழ்நாட்டுக்கு தனியான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமைப் போராட்டத்தை தொடங்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. அண்டை நாடான மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில்...

பா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க – கழக மாநாடு அறைகூவல்

4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்: 1)            1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு...

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...

தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது! ஜூன் 5இல் சென்னையில் மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்பு கழக தலைமைக் குழுவின் முக்கிய முடிவுகள்

சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” – என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது.  1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி...

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் விரைவில்…

இந்திய அரசின் அலுவல் மொழி சட்டம் 1976 பிரிவு 1.ii. தமிழகம் நீங்கலாக அனைத்து இந்திய பகுதிகளுக்கும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தமிழகத்தில் எழுதும் ஒவ்வொரு இந்தி எழுத்தும் திணிப்பே. சட்ட விரோதமே. போராட்டங்கள் விரைவில்…  

மாட்டுக்கறி உணவு விழா குறித்து கழகத் தலைவர் அவர்களின் அறிக்கை

அன்பு தோழர்களே, வணக்கம். சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஏதோ மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு மாலைமரியாதை செய்ய வருவோருக்கு நல்லமுறையில் வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில்...

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது !

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது ! தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதிவெறியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ! தமிழக அரசே,! பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுக்கு தக்க இழப்பீடு வழங்கு ! அம்மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடு ! விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கிராமம் கே.தொட்டியப்பட்டி.இக் கிராமத்தில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 150 குடும்பங்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் எதுவும் இல்லை. ஆதிக்கசாதியான நாயக்கர் ஜாதி பகுதி குடியிருப்பில் குடிநீர் குழாய்கள் உள்ளன. கிராமத்திற்கு தள்ளி சுடுகாட்டு பகுதியில் குடிநீர்த்தொட்டி அமைந்துள்ளது.அந்த குடிநீர்த்தொட்டியின் கீழ் உள்ள குழாயில்தான் அருந்ததியின மக்கள் குடிநீர் பிடித்து வந்தார்கள்.ஆதிக்க ஜாதியினர் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்தும் மேலும் தங்கள் தண்ணீர் தேவைக்காக சுடுகாட்டு...

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...