Category: பெரியார் முழக்கம்

‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள்

‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள்

‘மனுதர்மம்’ – ‘பிராமணர்களுக்கு’ உரிய தொழிலாக, ‘வேதம் கற்றல், வேதம் கற்பித்தல், யாகம் நடத்துதல், யாகம் நடத்த உதவுதல் பணக்காரர்களாக இருந்தால் பிச்சை கொடுத்தல், ஏழையாக இருந்தால் பிச்சை எடுத்தல்’ என்று கூறுகிறது. (அத் 1 – ஸ்லோகம் 88) ஷத்திரியனுக்கு ‘மக்களைக் காத்தல், பிச்சைப் போடுதல், வேள்வி செய்வது, வேதம் கற்பது, புலன் இன்பத்தில் பற்றுக் கொள்ளாது இருத்தல்’ என்று கூறுகிறது. (அத் 1, ஸ்லோகம் 89) ‘ஆடு மாடு மேய்த்தல், கொடையளித்தல், யாகம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்கு கடன் தருதல், நிலத்தைப் பயிர் செய்தல்’ ஆகியவை வைசியனுக் குரிய தொழிலாகக் கூறுகிறது. (அத் 1 – ஸ்லோகம் 90) ‘சூத்திரனு’க்கு உரிய தொழிலாக ‘மனுதர்மம்’ கூறுவது …..? “மேலாண்மை படைத்த இறைவன் சூத்திரருக்கு விதித்துள்ள ஒரே கடமை, மேல் வர்ணத்தாருக்கு, அவர் தம் மதிப்பு மரியாதை குன்றாமல் உழைத்தல்”. (அத் 1. ஸ்லோகம் 91) ‘பிராமணன்’, ‘சத்திரியன்,...

காடுவெட்டி குருவின் பேச்சு: மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா?

காடுவெட்டி குருவின் பேச்சு: மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா?

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரைப் பவுர்ணமி நாள் விழாவில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு முன்னிலையில், “வன்னிய சாதிப் பெண்களை எவராது கலப்பு திருமணம் செய்தா தொலைச்சுப்புடுவேன்” என்று மிரட்டியுள்ளார். ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் தனக்கான உரிமைகளைக் கோரும்போது இப்படி சாதி வெறி பேசுவது மிக மோசமான பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தும் பேச்சாகும். மக்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பிய அந்த நேரடி நிகழ்ச்சியில் குருவின் பேச்சை பலரும் கேட்டார்கள். ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையும் (மே 13) இவ்வாறு வெளியிட்டுள்ளது: “நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியில்தான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு வைச்சா… தொலைச்சுப் புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.” காடுவெட்டி குருவின் பேச்சு, மருத்துவர்...

‘மனுதர்ம’த்தின் அதிகாரம்: ஆய்வாளர் ரொமிலா தாப்பர் கேள்வி

‘மனுதர்ம’த்தின் அதிகாரம்: ஆய்வாளர் ரொமிலா தாப்பர் கேள்வி

இராமாயணத்தையோ மதநூல்களையோ சமூகப் பார்வையில் ஆய்வு செய்து ஏதேனும் நூல் வந்தால், உடனே அதைத் தடை செய்ய பார்ப்பனர்களும் இந்துத்துவா அமைப்புகளும் மத அமைப்புகளும் கூக்குரலிடுகின்றன. ஆனால், ‘பிராமணனை’ உயர்வுபடுத்தி ‘சூத்திரனை’ பார்ப்பனரின் வைப்பாட்டி மகன் என்று இழிவுபடுத்தும் ‘மனுதர்மம்’ தடைபோடப்படவில்லை. ‘மனுதர்மத்தின்’ புதிய பதிப்புகள் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பார்ப்பன ஏடுகள் அதற்கு மதிப்புரை எழுதி பாராட்டுகின்றன. எந்த ஒரு நூலுக்கும் தடை கோரும்போது கண்மூடித்தனமாக ஊடகங்கள் அதற்கு ஆதரவாக கருத்துகளை உருவாக்குவது சரிதானா? என்ற கேள்வியை மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் எழுப்பியுள்ளார். “இந்த நூல் எங்கள் மதத்தினரின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாகப் புண்படுத்துகிறது என்று எதிர்ப்பு வந்தால், ஊடகங்கள் அப்படிப் புண்படுத்துவது என்று கூறப்படுவது உண்மையா என்பதை ஆய்வு செய்ய வேண்டாமா? எதிர்ப்பு தெரிவிக்கும் மத அமைப்பு எது? அந்த மதத்தில் குறிப்பிட்ட எந்தப் பிரிவினரின் உணர்வு பாதிக்கப்பட்டுள்ளது? இது குறித்து ஆராய்வது கிடையாது....

பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது

பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது

தாழ்த்தப்பட்டோர் பழங்குடிப் பிரிவினருக்கு அரசுப் பதவிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிடும் மாயாவதி ஆட்சியின் ஆணையை உ.பி. உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த பதவி உயர்வை உறுதி செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தபோது 1925 இல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். பெரியார் அன்று வலியுறுத்திய கொள்கையையே இன்று காங்கிரசாரும் பேசுகிறார்கள் என்பதே பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. நாடாளு மன்றத் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி பதிலளிக்கையில், இடஒதுக்கீட்டின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, புதிய மசோதா ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது என்றும், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார். இத்தகைய இடஒதுக்கீடுகளின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ஏற்கனவே பல மாநில அரசுகள் இது தொடர்பாக கொண்டு வந்த பல சட்டத் திருத்தங்களை நீதிமன்றங்கள்...

மேட்டூரில் ‘மே’ நாள்

மேட்டூரில் ‘மே’ நாள்

பெரியார் தொழிலாளர் கழகம் மேட்டூர் அனல் மின்சார நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பாக மே 1 தொழிலாளர் தினத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் கி.முல்லைவேந்தன் தலைமை வகித்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். பெரியார் தொழிலாளர் கழக தலைவர் சக்திவேல், செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்று விழா நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்களும் கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, ‘மே’ நாள் கொண்டாடப் பட்டது. பெரியார் முழக்கம் 17052012 இதழ்

கழகத்தின் புதிய வெளியீடுகள்

கழகத்தின் புதிய வெளியீடுகள்

பரப்புரைப் பயணத்துக்காக கழக சார்பில் வெளியிடப்பட்ட புதிய நூல்கள்: இந்துவாகச் சாக மாட்டேன் – டாக்டர் அம்பேத்கர் – பக். 32; நன்கொடை : ரூ.10. தேச பக்தி – தேசியம் என்னும் சூழ்ச்சி – பெரியார் – பக். 32; நன்கொடை : ரூ.20. ஜனநாயகத்தின் முட்டாள்தனம் – பெரியார் – பக். 32; நன்கொடை : ரூ.20. புராணங்களை எரிக்க வேண்டும் – பெரியார்- பக். 32; நன்கொடை : ரூ.20. சபாஷ் அம்பேத்கர் – பெரியார்     – பக். 30; நன்கொடை : ரூ.10. இடஒதுக்கீடு உரிமைப் போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி – பக். 46; நன்கொடை : ரூ.30. தீண்டாமையை ஒழிக்கும் வழி               – பெரியார்- பக். 32; நன்கொடை : ரூ.10. மேற்கண்ட சிறு வெளியீடுகள் புதிதாக மக்களிடம் பரப்பப்பட்டன. தொடர்புக்கு : சேலம்: 9786316155  – கோவை :...

‘இராமன் பாலம்’ புரட்டைக் கண்டித்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

‘இராமன் பாலம்’ புரட்டைக் கண்டித்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், “மணல் திட்டு இராமன் பாலமா? அது தேசிய சின்னமா” கண்டன ஆர்ப்பாட்டம் 7.4.2012 சனிக்கிமை மாலை 4 மணியளவில் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் செ.நாவாப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் சி.ஆசைத்தம்பி, திருமால், திருநாவுக்கரசு, பெ.கோவிந்தன், லோ.கோபி, சு.தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ப.கண்ணன், பெரியார் தி.க. இல. சிலம்பன், ந. வெற்றிவேல், ந. அய்யனார், விடுதலை சிறுத்தை ஆ.இராமலிங்கம், வி.வி.மு. பெரியார் வெங்கட் ஆகியோர் உரையை தொடர்ந்து, நங்கவள்ளி அன்பு கண்டன உரை நிகழ்த்தினார். ச.கா. இளையராசா, கு.க. சாக்ரடீசு, விழுப்புரம் மா.கணேசன், சங்கர் உள்பட பல பகுதிகளி லிருந்தும் ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப் பாட்டத் தில் இராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்கிற அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர்.   பெரியார் முழக்கம் 17052012 இதழ்

மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவுக்கு ‘மனுதர்மக் கும்பலின்’ எதிர்ப்பு

மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவுக்கு ‘மனுதர்மக் கும்பலின்’ எதிர்ப்பு

பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் என்பதற்கு அவர்களின் வேதங்களே சான்று கூறுகின்றன. வால்மீகி இராமாயணத்தில் இராமன் மாட்டுக்கறியை சுவைத்து சாப்பிட்டதை விரிவாக எடுத்துக் கூறுகிறது. புத்தர் இயக்கம் கால்நடைகளை தீயிலிட்டு எரிக்கும் பார்ப்பன யாகங்களை எதிர்த்தது. உழைக்கும் மக்களின் உற்பத்திக் கருவிகளான ஆடு மாடுகள், உயிருடன் நெருப்பில் பொசுக்கப்படும் யாகத்தால், விவசாயம் கடும் நெருக்கடிக்குள்ளானது. எனவே விவசாயத்தை தொழிலாகக் கொண்ட திராவிடர்கள் புத்தரின் கருத்துகளை ஏற்றனர். பார்ப்பனர்களின் செல்வாக்கு இழந்தது. மீண்டும் தங்களை உயிர்ப்பித்துக் கொள்ள பார்ப்பனர்கள் புத்த மதத்தில் மக்கள் செல்வாக்குள்ள கருத்துகளை தங்கள் கருத்துகளாக ‘சுவீகரித்து’க் கொண்டனர். அப்போதுதான் பார்ப்பனர்கள் ‘மாட்டிறைச்சி’ சாப்பிடுவதை கைவிடுகிறார்கள். ‘சைவ’த்துக்கு மாறுகிறார்கள். மாட்டிறைச்சி உண்பவர்கள் தீண்டத்தகாதவர் கள்; இழிவானவர்கள் என்ற மனுதர்ம சிந்தனையை பார்ப்பன சிந்தனையை சமூகத்தில் திணித்தார்கள். இப்போதும் இங்கே உணவு முறையில் மூன்று பிரிவினர் உண்டு. ஒன்று – சைவம்; இரண்டு – அசைவம்; மூன்று – மாட்டிறைச்சி சாப்பிடும் அசைவம்....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: வால்மீகி இராமாயணத்தை சீனிவாச அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சி.ஆர். நரசிம்ம ஆச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். அதில்… எண்பது மைல் அகலம், எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இராமன் பாலம் கட்டியதாகத்தான் வால்மீகி இராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு முப்பது மைல் தூரம் தான். எனவே எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இங்கு பாலம் கட்டியிருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் கூட இராமாயணப்படி இராமன் கட்டியது மிதக்கும் பாலம் தானே தவிர, நிலம் வரைக்கும் இருந்த பாலம் அல்ல. அது மட்டும் அல்லாமல் இராமாயணக் கதைப்படி இராமன் திரும்பி வந்தவுடன், இதன் வழியாக அரக்கர்கள் வந்துவிடுவார்கள் எனக் கருதி, அம்பு எய்தி பாலத்தை அழித்து விடுகிறான். நாம் வைக்கும் வாதங்கள் என்னவென்றால்…. சூர்ப்பனகை இங்கு வருகிறாள், அவள் தாக்கப்பட்ட...

அந்த இமயமும் பசிபிக்கும் எமக்குச் சொந்தம்!

அந்த இமயமும் பசிபிக்கும் எமக்குச் சொந்தம்!

மேல்கோடி பலூச்சி முதல் கீழ் முனையின் பர்மா வரை படர்ந்து, அகன்று, பாரின் உச்சி என உயர்ந்து நிற்கும் இமயத்தை பற்றி என்ன தோன்றும்?  அதன் ஒப்பிலாக் குளிர் உறை பேரூர்களான ஸ்ரீநகர், சிம்லா, முசௌரி, நைனிடால், டார்ஜிலிங், ஷில்லாங் பற்றி  எல்லாம் என்ன உணர்வு ஏற்படும்? வியப்பு – இனிய பூரிப்பு – அமைதியான ஆனந்தம் – இந்த இமயம் எமது என்ற பெருமை – எந்த நினைவை எப்படி அளந்து எப்படித்தான் சொல்ல முடியும்? அது அளவையில் அடங்காப் பேருணர்வு! பசிபிக் பெருங்கடல் நான்கில் மூன்று பகுதி நீர் சூழ் உலகில் – கடலில் பெருங் கடலாய் இருக்கும் பசிபிக் கடலைப் பற்றி என்ன தோன்றும்? ஆழ்கடல்! இமயம் அளவு உயரம் தலைகீழாகப் போவது போன்ற பள்ளங்களை – படுபாதாளங்களை, ஆழ அகலங்களைக் கொண்ட கடல்! இந்தக் கடலினுள்ளேயே எரிமலைகளாம், மூழ்கி மூழ்கிப் போன கோடிக்கணக்கான கப்பல்களாம், நாகரிகத்தின்...

நன்கொடை

நன்கொடை

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் 5.5.2012 அன்று நடைபெற்ற நாத்திகர் விழாவில் தங்கள் ஆண் குழந்தைக்கு    ‘கபிலன்’ என்று பெயர் சூட்டியதன் நினைவாக ரூ.500 நன்கொடையாக கழக ஏட்டுக்கு வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 17052012 இதழ்

இமயமும் பசிபிக்கும் எமக்கே சொந்தம் சங்க மித்ரா

இமயமும் பசிபிக்கும் எமக்கே சொந்தம் சங்க மித்ரா

அனல் வீசும் எழுத்துக்களால் ஆரியத்தைச் சுட்டெரித்த எழுத்தாளர் சங்கமித்ரா முடிவெய்திவிட்டார். ஆனாலும் அவர் எழுத்துக்கள்  உயிர்த் துடிப்புடன் வாழ்கின்றன.  பெரியாரை மதிப்பீடு செய்து, அவரது பேனா முனையிலிருந்து வெடித்து எழுந்த இந்தக் கருத்து விதைப்பை, அவரது நினைவாக  ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. பெரியார் முழக்கம் 17052012 இதழ்

ஆகமக் கோயிலிலிருந்து அறநிலையத் துறை அமைச்சர் வரை ஆட்டிப் படைக்கிறது ‘மனுதர்மம்’

ஆகமக் கோயிலிலிருந்து அறநிலையத் துறை அமைச்சர் வரை ஆட்டிப் படைக்கிறது ‘மனுதர்மம்’

“சூத்திரன் அருகில் இருக்கும்போது பிராமணன் வேதம் ஓதலாகாது.” – மனுதர்மம் அத்4; சுலோகம் 99 “கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்’ அர்ச்சகர் ஆகக் கூடாது என்ற நிலையே இன்றும் நீடிக்கிறது. அந்த உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்கிறது மனு நீதி. இப்போதும் சட்டங்களை புறந்தள்ளி விட்டு, ‘ஆட்சி’ செய்து வருகிறது. ‘மனுநீதி’ இதற்கு சான்றாக சட்டமன்றத்தில் மே 8 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆற்றிய உரையை கீழே தருகிறோம்: தமிழகச் சட்டமன்றத்தில் 8.5.2012 இந்து சமய அறநிலையத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்றுப் பேசுகையில்: “பெரியார் நூற்றாண்டையொட்டி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி மகாராஜன் குழு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி கம்பரசம்பேட்டையில் அனைவருக்குமான வேத – ஆகம பயிற்சிக் கல்லூரி...

கிராமம் கிராமமாய் சுழன்று வீசுகிறது பிரச்சார அலை! சேலம் (மேற்கு) மாவட்டத்தின் தீவிர களப் பணிகள்!

கிராமம் கிராமமாய் சுழன்று வீசுகிறது பிரச்சார அலை! சேலம் (மேற்கு) மாவட்டத்தின் தீவிர களப் பணிகள்!

சேலம் மேற்கு மாவட்டக் கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. புயலாய்ச் சுழன்று வீசும் மாவட்டக் கழகப் பரப்புரை இயக்கம் பற்றிய தொகுப்பு. கொங்கனாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை, முல்லை பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசின் தமிழின வாழ்வுரிமை விரோதப் போக்கைக் கண்டித்து 26.1.2012 சனிக் கிழமை மாலை 4 மணிக்கு கொங்கனாபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத் திற்கு சேலம் மாவட்ட அமைப்பாளர் முத்து மாணிக்கம் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நங்கவள்ளி கிருட்டிணன், கோகுலக் கண்ணன் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் முல்லை வேந்தன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்களும்,பொறுப்பாளர்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். இளம்பிள்ளை வெ....

கழக ஏட்டுக்கு 100 சந்தாக்கள்: தென் சென்னை மாவட்டக் கழகம் வழங்கியது

கழக ஏட்டுக்கு 100 சந்தாக்கள்: தென் சென்னை மாவட்டக் கழகம் வழங்கியது

30.4.2012 அன்று காலை சென்னையில் மறைந்த கழகத் தோழர் பத்ரி நாராயணன் 8 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும், குடும்பத்தினரும் வீரவணக்கம் செலுத்தினர். அன்று மாலை இராயப்பேட்டை வி.எம். தெருவில் தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் மற்றும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  நிகழ்வின் தொடக்கத்தில் புதுச்சேரி தலித் சுப்பையாவின் விடுதலைக் குரல் கலைக் குழுவினர் சாதி ஒழிப்பு மக்கள் விடுதலை, ஈழ விடுதலை இசை நிகழ்ச்சி நிகழ்த்தினர். தோழர் பா. செல்வக்குமார் தலைமை யில் சு.பிரகாசு முன்னிலை வகிக்க, கழகப் பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றி னர். இறுதியில் தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமா பதி,...

மனம் திறக்கிறார் நீதிபதி கே. சந்துரு சாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்

மனம் திறக்கிறார் நீதிபதி கே. சந்துரு சாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்

கிராம ஊராட்சிகளில் காந்தியடிகள் சொன்னதுபோல் கிராம ராஜ்யம் வாழ்கிறதா, அம்பேத்கர் சொன்னது போல சாதி ஆதிக்க சக்திகளின் ராஜ்யம் நிலவுகிறதா என உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கேள்வி எழுப்பினார். திருநெல்வேலியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் ஏப்.28 அன்று உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியலின பிரதி நிதிகளின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. கலந்துரையாடலை துவக்கி வைத்து நீதிபதி கே. சந்துரு உரையாற்றினார். அவரது பேச்சு: அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு தான் தீண்டாமை ஒழிப்பு. அந்த வகையில் பொதுவான வழக்கங் களை மீறி, ஒரு நீதிபதியாகிய நான் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பது என்பது நாங்கள் எடுத்த உறுதி மொழியின் ஒரு பகுதிதான். மேலும், தற்போது எங்களுக்கு விடு முறை காலம் என்பதால் என்னுடைய பணிக்கு எந்த பங்கமும் இல்லாமல் நான் இந்த கூட்டத்தில்கலந்து கொள் கிறேன். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விவேகானந்தர் சென்னையிலுள்ள தன்னுடைய ஆசிரியர்...

மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் தொடர் மின்வெட்டுக்கு காரணம் மத்திய அரசின் சதியே! மத்திய அரசே, நெய்வேலி மின்சாரம் முழுமையும் தமிழ்நாட்டுக்கே வழங்கு! மின்சாரம் வேண்டும்; ஆனால் மக்களை கொல்லும் அணு மின்சாரம் வேண்டாம்! கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்காதே! என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19.3.2012 திங்கள் மாலை 5 மணிக்கு மேட்டூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டத் திற்கு கழக மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டத்தில் ஆதி தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ் வுரிமை கட்சி ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர் களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் நங்க வள்ளி அன்பு, தமிழக வாழ் வுரிமை கட்சி அமைப்பாளர் வைத்தியர் மணி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச் செயலாளர் வெ.சிவராமன் ஆகியோர் கண்டன உரை...

இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள்

இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள்

சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்களின் செயல்பாடுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. சேலம் மேற்கு மாவட்டம் சலகண்டாபுரத்தில் 10.2.12 வெள்ளி மாலை 5 மணிக்கு கழகத்தின் சார்பாக மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டித்து மாநாடு, பொதுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கி.முல்லைவேந்தன், செயலாளர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மாலை 5 மணிக்கு பறை முழக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சி 30 நிமிடங்கள் பறை முழக்கமும், 5.30 மணி முதல் 7.00 மணி வரை காவை இளவரசனின், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சியும், 7 மணி முதல் 8 மணி வரை பகுத்தறிவு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய பொதுக் கூட்டம், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு,...

தலையங்கம் நாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்!

தலையங்கம் நாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்!

“ஜனநாயகமும்-சாதி அமைப்பும், ஒன்றையொன்று சார்ந்து பயணிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனநாயகம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி அமைப்போ, சமூகத்தில் மேலானவர், கீழானவர் என்ற வேறுபாடுகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏதேனும் ஒன்று சாகடிக்கப்பட வேண்டும். இன்றைக்கு நாம் ஒன்றுபட்டு, ஜனநாயகத்தின் பெருமைகளை முழுமையான மகிழ்ச்சியில் கொண்டாடுகிறோம். அதே நேரத்தில் நாம் சாதி அமைப்பை நம்மிடமுள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி, வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.” – இவ்வாறு நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டிருப்பவர் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் திருமதி மீரா குமார். நாடாளுமன்றம் தொடங்கி 60 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் அதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் (மே 13, 2012) தமது உள்ளக் குமுறலை சமூகத்தின் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஜாதி அமைப்புக்கும், பார்ப்பனிய இந்து மதத்துக்கும் எதிராக வாழ்நாள் இறுதிவரை உறுதியாகக் குரல் கொடுத்த பாபு. ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் மீராகுமார். எனவே,...

‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம்: நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள்

‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம்: நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள்

‘மனுதர்மம்’ இப்போது எங்கே இருக்கிறது? இப்படி ஒரு கேள்வி சிலரால் முன் வைக்கப்படுகிறது. அவர்கள் நாட்டின் நடப்புகளைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்வியை கேட்க மாட்டார்கள். ‘மனுதர்மம்’ புதிய பதிப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ‘தினமலர்’, ‘துக்ளக்’ போன்ற பத்திரிகைகள், அதன் உள்ளடக்கங் களைப் பாராட்டி, நூல் மதிப்புரைகள் எழுதி வருகின்றன. இதோ கடந்த 13 ஆம் தேதி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் வெளி வந்த ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டுகிறோம். திருமணங் களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் மந்திரங்கள் பற்றி ‘மனுதர்மம்’ என்ன கூறுகிறது என்பதை விளக்கி சாது ஹரிதாசா என்ற வேதப் பார்ப்பனர் இந்தக் கட்டுரையை எழுதியிருக் கிறார். மனுதர்மத்தை முழுமையாக நியாயப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை.  ‘மனுதர்மம்’ குலத் துக்கு ஒரு திருமண முறையை முன் வைப்பது மிகவும் நியாயமானதுதான் என்றும், அதை முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள் மோட்சம் போகலாம் என்றும் கூறுகிறது அக்கட்டுரை. வர்ணங்களைக் கடந்து சாதிகளைக் கடந்து நடக்கும் திருமணங்களில்...

தி.க.விலிருந்து விலகி  கழகத்தில் இணைந்தனர்

தி.க.விலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த கழகக் கூட்டத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இளைஞரணி தலைவர் இரா. பரந்தாமன் தலைமையில் குன்றத்தூர், அனகாபுத்தூர் பகுதிகளைச் சார்ந்த தோழர்கள் சிலம்பம் சிவாஜி, து.முருகவேல், கு.கரிகாலன், மு.திவாகரன், ஆர். விஜயகுமார், ஜெய்சி, பிரபு, முருகன், நெடுஞ்சேரலாதன், சார்லஸ் ஆன்டணி மற்றும் செல்லதுரை ஆகியோர் திராவிடர் கழகத் திலிருந்து விலகி, கழகத்தில் இணைந்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அனைவருக்கும் கருப்பு ஆடை அணிவித்தார். பெரியார் முழக்கம் 24052012 இதழ்

இனப்படுகொலை ஆட்சியில்இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம்

இனப்படுகொலை ஆட்சியில்இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம்

ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் மே 16, 17, 18 தேதிகளில் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களுக்கும், தமிழ் ஈழத்தில் ராணுவத்தால் மரணத்தைத் தழுவிய பல லட்சம் தமிழர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு உருக்கத்துடனும் உணர்வலைகளுடனும் கடந்த 19 ஆம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் திராவிடர் கழக சார்பில் நடைபெற்றது. “இனப்படுகொலை ஆட்சியின் கீழ் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது! அய்.நா.வே! இந்திய அரசே! ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து” என்ற முழக் கத்தை முன் வைத்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டத் தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். பெரும் மாநாடு போல் காட்சி அளித்தது. தேனிசை செல்லப்பா குழுவினரின் எழுச்சி இசையோடு தொடங்கிய நிகழ்ச்சிக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை முன்னின்று மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த  கரு. அண்ணாமலை வரவேற் புரையாற்றினார். வழக்கறிஞர்...

உடுமலையில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

உடுமலையில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை திருப்பூரில் மிகச் சிறப்பாக கொண்டாடும் விதத்தில் மாவட்டத்தில் 100 இடங்களில் பிரச்சார நிகழ்ச்சியை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, திராவிடர் இயக்க நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக் கூட்டம் 18.5.2012 வெள்ளி மாலை 7 மணிக்கு உடுமலைப் பேட்டைவெங்கட கிருஷ்ணா ரோடில் நடைபெற்றது. உடுமலைப் பேட்டை நகர, ஒன்றிய கழகம், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. தொடக்க விழாப் பொதுக் கூட்டத்திற்கு உடுமலை நகர கழகத் தலைவர் யாழ். நடராசன் தலைமையேற்றார். உடுமலை நகரப் பொருளாளர் மு.வேல்முருகன், க.இரமேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பகுத்தறிவாளர் பேரவைப் பொறுப்பாளர் பல்லடம் திருமூர்த்தி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட கழகச் செயலாளர் கா.கருமலையப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பனிர் இரா. மனோகரன், தலைமைக் கழகப் பேச்சாளர் திண்டுக்கல் துரை. சம்பத், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன் ஆகி யோர் உரையாற்றினர். சிறப்புரையாக ம.தி.மு.க. அரசியல்...

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (10)  லண்டனில்  உயிர் நீத்த  டாக்டர் டி.எம்.நாயர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (10) லண்டனில் உயிர் நீத்த டாக்டர் டி.எம்.நாயர்

1919ஜனவரியில் டாக்டர் டி.எம். நாயர் சென்னை திரும்பியதும், ‘சவுத் பரோ’ கமிட்டியைப் புறக்கணிக்கும் படி பார்ப்பனரல்லாதாரைக் கேட்டுக் கொண்டார். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்துக்கும் தனித் தொகுதிக்கும் விரோதமான கருத்துக் கொண்ட இரு பார்ப்பனர்கள் அடங்கிய இக்குழு வினரால் எந்த நியாயமும் கிடைக் காது என்று எடுத்துக் கூறினார். எதிர் பார்த்தது போலவே ‘சவுத்பரோ’ குழு வகுப்பு அடிப்படையில் சட்ட மன்றத்தில் தொகுதி ஒதுக்கக் கூடாது என்று தீர்ப்புக் கூறி விட்டது. ஆனால், இக் கமிட்டியின் முடிவை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ‘மாண் டேகு-செம்ஸ் போர்டு’ மசோதா ஜூன் மாதம், இரண்டாவது முறை யாக பரி சீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, அதற்கென நியமிக்கப்பட்ட நாடாளு மன்ற பொறுக்குக் குழு (துடிiவே ளுநடநஉவ ஊடிஅஅவைவநந)வின் முன் தங்கள் வாக்கு மூலங்களை அளிக்க, இந்தியா விலிருந்து  பல்வேறு அரசியல் கட்சி களும்,சங்கங்களும் இங்கிலாந்து சென்றிருந்தன. ஹோம்ரூல் இயக்கம், முஸ்லிம் லீக், காங்கிரஸ், சென்னை...

‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம்

‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம்

குழந்தை பெறுவதற்கான தடைகளை மருத்துவ விஞ்ஞானம் தகர்த்து விட்டது. கருத்தரிக்கும் சக்தி இல்லாமல் போவோருக்கு, நன்கொடை மூலம் குருதிக் கொடை பெறுவதுபோல், விந்துக் கொடை பெறும் முறைகளும் வந்து விட்டன. இதற்காக குருதிகளை சேகரிப்பதுபோல், ‘விந்து’களை கொடையாகப் பெற்று, சேகரிக்கும் மய்யங்கள் செயல்படுகின்றன. இந்த மய்யங்களிலிருந்து விந்துக்களைப் பெற்று, ஊசி மூலம் உடலில் செலுத்தி, கருவை வயிற்றில் வளர்த்து பெறப்படும் விஞ்ஞானக் குழந்தைகள் ஏராளமாக பிறந்து வளர்ந்து வருகின்றனர். குருதிக்கு, சாதி-மத வேறுபாடுகள் கிடையாது. விஞ்ஞானம், ரத்தத்தின் பிரிவுகளை பட்டியலிட்டுள்ளது. சாதிகளைக் கடந்து, ஒவ்வொரு தனி மனிதருக்கும் ரத்தத்தின் பிரிவுகளை கண்டறிந்து, தேவைப்படும்போது அந்தப் பிரிவு ரத்தம் மட்டுமே ஏற்றப்படுகிறது. அதை மட்டுமே உடலும் ஏற்கும். இதேபோல், சாதி மத அடையாளங்களைக் கடந்து பெறப்படும் விந்துகளும், பெண்களின் கருப்பையில் செலுத்தப்படுகின்றன. ஆனாலும்கூட மருந்துவ விஞ்ஞானம் மகத்தான சாதனைகளை செய்து, மனித குலத்தை உய்விக்க வந்தாலும்கூட, ‘மனுதர்ம’ சிந்தனை மட்டும் மாறவே இல்லை....

சோலையார்பேட்டையில் தமிழர் சமூகவியல் கல்வி முகாம்

சோலையார்பேட்டையில் தமிழர் சமூகவியல் கல்வி முகாம்

2012 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வேலூர் மாவட்டம் சோலையார்பேட்டை கே.கே.சி. திருமண மண்டபத்தில் தமிழர் சமூகவியல் கல்வி முகாம் நிகழ்த்தப் பெற்றது. 12.05.12 காலை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.  கே.சி.காமராஜ் (முன்னாள் நகராட்சித் தலைவர் மற்றும் அ.மே.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தவைலர்) தலைமையேற்றார். புலவர் பூபதி வரவேற்புரையாற்றினார். சிவலிங்கம், அன்பு தனசேகர், டேவிட் பெரியார் சோலை வி.கே. செல்வ ராஜ், கே.சி.கே. பிரபாகரன், பூங்குளம் வேலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிய தென் செய்தி ஆசிரியர் பூங்குழலி வருகை புரிந்தார். பெரியாரியலாளர் ஓவியா, ‘பெண் அடிமைப் படுத்தப்பட்ட வரலாறு’ குறித்தும், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், ‘தமிழினத்தின் சமூக ஜனநாயகம்’ என்னும் தலைப்பிலும் கற்பித்தனர். இறுதியில் மாணவர் அய்யங்களுக்குத் தலைவர் கொளத்தூர் மணி விடையளித்தார். 13.5.12 அன்று புலவரேறு கி.த. பச்சையப்பன்...

ஓமலூரில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

ஓமலூரில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

26.5.2012 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் சேலம் மாவட்டம் ஓமலூரில், கழகம் சார்பாக நாத்திகர் விழா மற்றும் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஓமலூர் செவ்வாய் சந்தையிலிருந்து பறை முழக்கத்துடன் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பேருந்து நிலையம் வரை எழுச்சியுடன் நடை பெற்றது. பேரணியின் முன்பே நங்கவள்ளி அன்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி வருவதையும், அதன் நோக்கத்தையும் ஒலிபெருக்கியின் மூலமாக அறிவித்துக் கொண்டு வந்தார். பேரணியில் பெண்கள் தீச்சட்டிகளை எடுத்துக் கொண்டனர். குழந்தைகளெல்லாம் உடல் முழுவதும் ஊசிகளை குத்தி, அதில் எலுமிச்சைப் பழங்களை தொங்கவிட்டு வந்தனர். சிந்தாமணியூர் ஜெயபிரகாஷ் கன்னத்தில் அலகு குத்தி வந்தார். தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன் மற்றும் கோவிந்தபாடி சென்னியப்பன் ஆகியோர் முதுகில் அலகு குத்தி ஒரு ஆம்னி வேனையும், அம்மாபேட்டை செந்தில் மற்றும் இளம்பிள்ளை தனசேகர் ஆகியோர் முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனையும்  இழுத்து வந்தனர். இளம்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும்...

குடிஅரசு வாசகர் வட்டத்தில் கொளத்தூர் மணி ஆய்வுரை

குடிஅரசு வாசகர் வட்டத்தில் கொளத்தூர் மணி ஆய்வுரை

குடிஅரசு வாசகர் வட்டம் கடந்த 20.4.2012 அன்று வடசென்னை பெரம்பூரில் இராஜலட்சுமி அரங்கத் தில்  திராவிடர் இயக்க வரலாறு ஆய்வு, தொடர் சொற்பொழிவு மாதந்தோறும் சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் குடிஅரசு வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில், திராவிடர்-தமிழர் என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆய்வுரை நிகழ்த்தினார். திராவிடர்-தமிழர் இயக்கத்தினர்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் தமிழ் தேசியவாதி களுக்கு வலிமையான மறுப்புரையாக அமைந்த இந்த உரை இணையத்தின் வழியாக நேரலை செய்யப் பட்டது. அரங்கத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றது போலவே உலகமெங்கும் வாழும் தமிழர்களும் நிகழ்ச்சியை நேரிடையாகக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.  இக்கூட்டத்தில் வழக்கறிஞர் சங்கர் தலைமையேற்க, வழக்கறிஞர்; பா.அமர்நாத் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் கு.குமாரதேவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குடிஅரசு வாசகர் வட்டத்தின் சார்பாக கழக தலைவருக்கு கேடயமும் பொன்னாடையும் வழங்கப்பட்டது. திலீபன் நன்றியுரையாற்றினார். நிகழ்வை இணைய தளம் வழியாக நேரலை...

மும்பையில் கூடங்குளம் எதிர்ப்பு: பினாயக் சென் பங்கேற்பு

மும்பையில் கூடங்குளம் எதிர்ப்பு: பினாயக் சென் பங்கேற்பு

மும்பை தாதர் டாக்டர் அம்பேத்கர் நினைவு இடமான சைத்ய பூமியில் மே 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு   கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தேசிய அளவிலான போராட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் பினாயக் சென், இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், வழ. கமயாணி, மா.கதிரவன், நாடோடி தமிழன், பால்வண்ணன், கத்துவாராயண், ருடேஸ், தமிழ்மணி பாலா, ஆதி வருண் என பெரும் திரளாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்,. கூடங்குளம் அணுஉலையை உடனே மூட வேண்டும் எனவும், போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டதை திருப்பிப் பெற வேண்டும் எனவும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியை சி.என்.டி.பி. கொங்கன், வினஷ்கரி பிரகல்ப் விரோதி சமிதி, கொங்கன் பசாவ் அந்தோலன், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தனர். பெரியார் முழக்கம் 31052012 இதழ்

‘மனுவாதிகளின்’ – கரூர் தீர்மானம்

‘மனுவாதிகளின்’ – கரூர் தீர்மானம்

“இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்ய பரிந்துரைக்கப் படுகிறது.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 12 “சூத்திரனின் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும்.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 13. “மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணத்தாரும் தமக்குள்ளே மணம் புரிதல் வேண்டும் என்பவர்.” –  அம்பேத்கர். மனுவின் இந்த பார்ப்பன சட்டங்களே சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. மனு கூறிய பிராமண – சத்திரிய – வைசிய – சூத்திரப் பிரிவுகளில் ஏற்பட்ட கலப்பு சாதிக் குழுக்களாக சமூகத்தைப் பிரித்துப் போட்டு விட்டது. இந்த சாதிக் குழுக்கள் தங்கள் சாதி அடையாளத்தை பாதுகாக்கவே துடிக் கின்றன. மீறினால் குடும்பப் பாசம் உறவுகளையே பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெற்ற மகளையே கொலை செய்யக்கூடிய வெறிக்கு உள்ளாகி விடுகிறார்கள். ‘தமிழினப் போராளியாக’ பெருமைபடுத்தப்படும் மருத்துவர் ராமதாசு முன்னிலையிலேயே அவரது “தளபதி”யாக அவராலேயே பெருமைப்படுத்தப்...

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு

பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம் இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்! ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது. திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம். 1938 ஆம் ஆண்டில்...

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

1919 – இந்திய சீர்திருத்த விஷய மாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாமஸ் பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப் பினரின் தூண்டுதலின்படி படுக்கையி லிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி யார் ஒரு சிறப்புக் கமிஷனை நிய மித்தனர். அந்தக் கமிஷன ஜூலை 18 இல் மருத்துவமனைக்கே சென்று சாட்சியம் பெற முடிவு செய்திருந்தது. எனினும் நாயரின் உடல்நிலை காரண மாக அன்று சாட்சியம் பெற முடிய வில்லை. நீரிழிவு மற்றும் நிமோனியா நோய் கடுமையாகி ஜூலை 19 அன்று காலை 5 மணியளவில் நாயர்முடிவு எய்தினார். அவரது உடல் லண்டனில் ‘கோல்டெர்ஸ் கிரீன்’ என்ற இடத்தில் எரிக்கப்பட்டு  ‘அஸ்தி’ சென்னைக்கு டாக்டர் ஏ.ஆர். மேனன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. ‘அஸ்தி’யைக் கண்டு, பார்ப்பனர் அல்லாதார் குறிப் பாக ஆதிதிராவிடர்கள் தங்கள் தள நாயகன் முடிவெய்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்...

அமெரிக்காவில் மரண தண்டனையில் நடந்த ஆள் மாறாட்டம்

அமெரிக்காவில் மரண தண்டனையில் நடந்த ஆள் மாறாட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு கார்லோஸ் டெலுனா என்ற அப்பாவி இளைஞர் செய்யாத கொலை குற்றத்துக்காக மரண தண்டனைக்கு உள்ளானார். உண்மையில் அந்தக் கொலையை செய்தவர் கார்லோஸ் ஹெர்னான்டஸ் என்ற மற்றொரு இளைஞர். கார்லோஸ் என்ற பெயர் ஒற்றுமையும் உருவ ஒற்றுமையும் இருவருக்கும் ஒன்றாகவே இருந்தது. மரண தண்டனைக்குள்ளான இளைஞர் இறுதி வரை இந்தக் கொலையைத் தான் செய்யவில்லை என்றும், கொலை செய்த உண்மையான குற்றவாளியின் பெயரைக் கூறியும்கூட அரசு வழக்கறிஞர்கள் அதை ஏற்கவில்லை. கார்லோஸ் ஹெர்னாண்டஸ் என்ற பெயரில் ஒரு ஆளே கிடையாது என்று அரசு வழக்கறிஞர்கள் அடித்துக் கூறினார். மரண தண்டனைக்குள்ளாகும் இறுதி நேரத்தில்கூட ‘நான் அப்பாவி, குற்றமற்றவன்’ என்று கூறிக் கொண்டே அவன் மரண தண்டனையை சந்தித்தான். கொலம்பியா சட்டக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவர்கள் குழு ஒன்று இதுபற்றி 2004 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 8 ஆண்டு ஆய்வுக்குப் பிறகு...

குத்துச்சண்டையும் சதுரங்க விளையாட்டும்

குத்துச்சண்டையும் சதுரங்க விளையாட்டும்

உட்கார்ந்த இடத்தில் பேண்ட் கோட் அணிந்துக் கொண்டு குளுகுளு அறையில் நடக்கும் சதுரங்க விளையாட்டு, ‘மூளை’க்கு வேலை கொடுப் பதால் அதற்கு ‘பிராமண’ப் பெருமையை சமூகம் வழங்குகிறது. உடலை வருத்தி விளையாடும் விளை யாட்டுகளுக்கு ‘சூத்திர’ நிலைதான். தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர் விசுவநாதன் ஆனந்த், மாஸ்கோவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த கெய்ஃபாண்டை வென்று, 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளார் என்று பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதி பாராட்டுகின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதிகூட வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். ஆனால், கடந்த வாரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. இது ஆர்வம் காட்டப்படாமல் ஒதுக்கப்பட்ட செய்தி. சீனாவில் நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் இந்தி யாவைச் சார்ந்த இரண்டு பெண்கள் வெற்றி வகை சூடி, உலகப் பரிசைப் பெற்றுள்ளார்கள். மந்தாகினி, நீத்துசாகல் என்பது அந்தப் பெண்களின் பெயர்....

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: மனுதர்மக் காவலருக்கு புகழாரம்! காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாக அச்சிட்டு வெளியிட்டு இன்று வரை பரப்பி வருகிறார்கள். அவரது ஜெயந்தியை (அதாவது பிறந்த நாள்) முன்னிட்டு ‘இந்து’ நாளேட் டில் பார்ப்பனர் ஒருவர் ‘மகா சுவாமி’ புகழ் பாடும் கட்டுரை ஒன்றை (ஜூன் 1, 2012) எழுதியிருக்கிறார். அக் கட்டுரையில் சீனியர் சங்கராச்சாரியின் கருத்து ஒன்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நாடு ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் இவ்வாறு கூறினாராம். ஆட்சியாளர்களுக்கு அரசியல் சட்டமே உயர்வான தர்ம நூல். ஆனால், ஆட்சியாளர், உழைக்கும் மக்கள், வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது தர்ம சாஸ்திரங்களே என்று ‘மகா பெரியவர்’ கூறியதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். “மகா பெரியவர்” கூறும் தர்ம...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம்

அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை.   தமிழர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்றால், பிற மொழியாளர்கள் ‘திராவிடர்’ என்று எப்படி தங்களை அழைப்பார்கள்? திராவிடர் இயக்கம் வேறு; திராவிட இயக்கம் வேறு. தமிழ்மொழி பேசுவதால் பார்ப்பனரை தமிழர்களாக ஏற்பீர்களா? திராவிடர் வடமொழிச் சொல்லாக இருந்தும் பார்ப்பான் அதை ஏற்க மறுப்பது ஏன்? பிற மன்னர் படையெடுப்பால் வென்ற பகுதி யில் தமது முகவர்களைக் குடியமர்த்தியதற்குக் காரணம் என்ன?   இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்;...

மீண்டும் நுழைவுத் தேர்வா?

மீண்டும் நுழைவுத் தேர்வா?

கல்வித் துறையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்திய அரசு 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. இதனால் தமிழகச் சூழலுக்கு பொருந்தாக கல்வி முறைகளை மத்திய அரசு திணித்து வருகிறது. மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல் இப்போது இந்தியா முழுமைக்கும் ஒரே நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வரப் போவதாகக் கூறியுள்ளார். கிராமப்புற மாணவர்களை பாதிக்கக் கூடிய நுழைவுத் தேர்வு முறை தமிழ் நாட்டில் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் நுழைவுத் தேர்வை இந்திய ஆட்சி திணிப்பதை தமிழ்நாடு ஏற்காது. மீண்டும் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். பெரியார் முழக்கம் 14062012 இதழ்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

1919 – அது மட்டுமா? நாயர் லண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிரஸ் சார்பில்  சுயராஜ்யம் கேட்டு வாதாடவும், நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா இன்னும் பலர் இங்கிலாந்திலேயே இருந்தும், துக்கம் விசாரிக்கக்கூட செல்லவில்லை. இச் செயலானது, ‘காங்கிரஸ், தேசியத் திலகங்களின்’ மனிதாபிமானமற்ற தன்மையை யும், யோக்கியதையையும், வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியது. காலஞ்சென்ற தலைவர் டாக்டர் நாயர் அவர்கள் ஒரு புரட்சி வீரர், சுயமரியாதை வீரர், அவரை ஒரு ‘திராவிட லெனின்’ என்று சொல்ல வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் பின்னாளில் கூறினார் என்றால், அவரின் புகழுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?  பாலக்காட்டில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர், மலையாளம் தந்த மாமேதை! சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பின், இங்கிலாந்து சென்று மருத்துவத் துறையில் பட்டம் பெற்று, அங்கு...

திட்டக் குழுவும் கல் முதலாளிகளும்

திட்டக் குழுவும் கல் முதலாளிகளும்

நகரத்தில் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.32 வருமான  வந்தாலும், கிராமத்தில் ரூ.28 வருமானம் வந்தாலும் அவர் வறுமைக்கோட்டைத் தாண்டி விட்டார் என்கிறது திட்டக்குழு. திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா, உலகமயமாக்கல் கொள்கையின் தீவிர ஆதரவாளர். அமெரிக்க முதலாளியின் கருத்தை செயல்படுத்தும் ஏவலர். ரூ.28 வருமானம் வந்தவருக்கு வறுமை ஒழிந்தவிட்டது என்று கூறிய இவர், டெல்லியிலுள்ள தனது திட்டக் குழு அலுவலகத்தின் இரண்டு கழிப்பறைகளை சீரமைக்க ரூ.35 லட்சம் செலவிட்டுள்ளார். ‘ஸ்மார்ட் கார்டு’ கையில் வைத்திருப்போர் மட்டுமே, இந்தக் கழிப் பறையை பயன்படுத்த முடியுமாம். வெளி நாட்டுப் பயணங்கள் வேண்டாம், நட்சத்திர ஓட்டல் கூட்டங்கள் வேண்டாம் என்று மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்கும்போது இரண்டு கழிப்பறைகளை திருத்தி அமைக்க ரூ.35 லட்சம் செலவிடலாமா என்ற கேள்விகள் எழுப்பப்படு கின்றன. நியாயமான கேள்விதான். வறுமை கோட்டுக்கும் நவீன கழிப்பறை சொகுசுவுக்கும் இடையே உள்ள பாகுபாடு, ‘பிராமண-சூத்திர’ பாகுபாடுகளின் மறு வடிவம் தானே. ‘மனுதர்ம’ தத்துவமே...

மக்கள் பிரதிநிதியும்  மனுதர்மத்தின் அடிமையே!

மக்கள் பிரதிநிதியும் மனுதர்மத்தின் அடிமையே!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரானாலும் ‘மனுதர்ம’த்துக்குத்தான் அவர் கட்டுப்பட வேண்டும் என்பதே நடைமுறை! ‘மனுதர்மம்’ கட்டளை யிட்டுள்ள மனித ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தான் ஊராட்சிகளில் ‘ரிசர்வ்’ தொகுதி முறை கொண்டு வரப்பட்டது. சட்டம் ‘தலித்’ தொகுதியை வரையறுத்து, ‘தலித்’ வேட்பாளரைத் தேர்வு செய்தா லும், சட்டம், ‘மனு’வின் பார்ப்பன கூட்டத்தின் முன் மண்டியிட்டு வருகிறது. இதுவே இப்போதும் நீடிக்கிறது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்தின் தலைவன் வி.கருப்பன், தலித் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கடந்த 7 மாதங்களாக பஞ்சாயத்து கூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரும் உரிமை கிடையாது. தரையில் தான் உட்கார வேண்டும. ஏனைய தலித் அல்லாத உறுப்பினர்கள் மட்டும்நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். ஊராட்சி துணைத் தலைவர் ஆறு தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர் கூடிப் பேசி முடிவுகளை எடுப்பார்கள். நீட்டிய இடத்தில் பஞ்சாயத்து தலைவர் கையெழுத்திட்டாக வேண்டும். மாநில காவல்துறை இயக்குனருக்கு தன் மீது இழைக்கப்படும்...

இந்தியாவில் இனவாதம்

இந்தியாவில் இனவாதம்

இந்தியாவிலும் இனப் பாகுபாடு இன வெறி இருக்கிறது என்றும், இங்கே இனவெறி இல்லை என்று நடிக்க வேண்டாம் என்றும், ‘இந்து’ ஏட்டில் (மே 29) ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். இந்தியா வின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலத்தவர்களை இந்தியாவின் பிற மாநிலங்களில் வெறுப்புக்குரியவர்களாகவே அவர்களிடம் பாகுபாடு பார்க்கிறார்கள் என்று அந்தக் கட்டுரை கூறியது. அது உண்மைதான் என்றா லும், மேல் கீழ் அடுக்கு வரிசையில் சாதியமைப்பு சமூகத்தைக் கூறு போட்டு காலங்காலமாய் மக்களை ஒதுக்கி வைத்திருப்பதை இக்கட்டுரையாளர் கண்டு கொள்ளவே இல்லை. அறிவாளிகள் என்று கூறப் படும் பிரிவினரும், நடுத்தர வர்க்கமும், சாதியமைப் பால் நிலைநாட்டப்பட்டுள்ள ‘இன ஒதுக்கலை’ப் பற்றி கள்ள மவுனம் சாதிப்பதால் இந்தக் கொடூர மான அமைப்பு தேசத்தின் பிரச்சினையாக்கப் படாமல், காப்பாற்றப்பட்டு வருகிறது இந்த உண்மையை ஜூன் 1 ஆம் தேதி அதே நாளேட்டில் இனியன் இளங்கோ எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்....

பெண்ணின் பெயர் அடையாளத்தையும்  பெயர்த்து எறியும் மனுதர்மம்

பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்

நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன மனுதர்மம். இந்த மனுதர்ம சிந்தனைதான் இன்றும் சமூகத்தின்  வாழ்க்கை முறை. ‘இந்து’ நாளேட்டில் வாரம்தோறும் பெண்ணியம் பற்றி கட்டுரை எழுதி வரும் கல்பனா சர்மா  (மே 27) எழுதியுள்ள கட்டுரையில் மராட்டி யத்தில் தான் சந்தித்த, புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மராட்டியத்தில் பழமையில் ஊறிய குடும்பத்தில் வந்தவர் அந்தப் பெண். திருமணம் முடிந்தவுடன், கணவர் வீட்டில், பெண்ணின் பெயரையே மாற்றி விடும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் தொடருகிறது என்று கூறுகிறார் கட்டுரை யாளர். உஷா என்ற இந்தப் பெண்ணின் பெயர் திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாரால் ‘தபசியா’...

மக்கள் உயிருடன் விளையாடும் மருந்து நிறுவனங்கள்!

மக்கள் உயிருடன் விளையாடும் மருந்து நிறுவனங்கள்!

மத்தியில் ஆளும் ஆட்சி மக்களுக்காகக் கவலைப்படுவதைவிட, பார்ப்பன-பன்னாட்டு நிறுவனங்களின் நலன் காக்கவே துடிக்கிறது. மக்கள் வாழ்க்கையில் மருத்துவ நலன் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் ஒரு காலத்தில் இந்தியாவில் அமலில் இருந்த காப்புரிமைச் சட்டத்தினால் மருந்துகள் குறைவான விலையில் கிடைத்து வந்தன- பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக இந்த சட்டத்தை விலக்கிக் கொண்டுவிட்டது, இந்திய பார்ப்பன ஆட்சி.  இதனால் மருந்துகள் விலை கடுமையாக உயரத் தொடங்கி விட்டன. சமீபத்தில் உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஒரு கேள்வியை அரசிடம்  வைத்தது.  இந்தியாவில் இன்றியமையாத மருந்துகள் விலை, ஏழை எளிய மக்கள் பயன்படுத்துமளவுக்கு அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே அந்தக் கேள்வி. இதற்கு பதிலளிக்காமல் அரசுத் துறைகள் மவுனம் சாதித்து வருகின்றன. இந்திய ஆட்சி, மருத்துவத் துறையில் 100 சதவிதம் அன்னிய மூலதனத்தை அனுமதித்துவிட்டதால், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாக இந்தியா மாற்றப்பட்டுவிட்டது. இன்றியமையாத  மருந்துகளாக 348 மருந்துகளை இந்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில் விலைக்...

நாமக்கல் மல்லசமுத்திரம் ஒன்றிய கழக துவக்க விழா

நாமக்கல் மல்லசமுத்திரம் ஒன்றிய கழக துவக்க விழா

7.5.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரத்தில் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக துவக்கவிழா மற்றும் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  இப்பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் தலைமையேற்றார். தோழர்கள் கோபி, சங்கர், தீனா, அன்பழகன், ம.தி.மு.க.வை சார்ந்த வைகோ கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட செயலாளர் சாமிநாதன், இளம்பிள்ளை கோகுல கண்ணன் ஆகியோர் உரைகளை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சிற்பிராசன் நிகழ்ச்சியின் துவக்கத்திலும், தோழர் களின் உரைகளுக்கு இடையேயும் ‘மந்திரமா, தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினார். சில மாதங்களுக்கு முன்பு முதல் கலந்துரையாடல் கூட்டம் கூட்டி, அதில் முடிவு செய்யப்பட்ட தீர்மானத்தின்படி இந்த துவக்க விழா பொதுக் கூட்டத்தை தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பேருந்து நிலையம் முதல் பொதுக் கூட்ட மேடை வரை...

சேலம் ஆத்தூரில் மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம்

சேலம் ஆத்தூரில் மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில், பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 8.5.2012 செவ்வாய் கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆத்தூர் மகேந்திரன் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். தோழர் சிற்பி இராசன் மந்திரமில்லை தந்திரமே நிகழ்ச்சியை நடத்தி விளக்கமளித்தார். நரசிங்கபுரம் மணி உரையாற்றினார். கணபதி நன்றியுரையாற்றினார். அன்று இரவு கங்கையம்மன் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழகத்தின் பரப்புரை பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். தோழர்கள் அந்தப் பலகையில் தினமும் ஒரு கருத்தை எழுதி பரப்புரை செய்து வருகின்றனர். பெரியார் முழக்கம் 14062012 இதழ்

களப் பணியில் கழகத் தோழர்கள் பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள்

களப் பணியில் கழகத் தோழர்கள் பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள்

20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ஒன்றிய புதிய பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். பொறுப்பாளர்களை மாவட்ட தலைவர் அறிவித்தார். ஒன்றிய அமைப்பாளர் – சி. விசயன்; ஒன்றிய தலைவர் – நா.முத்துக்குமார்; ஒன்றிய செயலாளர் – க. ஆறுமுகம்; ஒன்றிய துணை தலைவர் – சு.வடிவேலு; ஒன்றிய துணை செயலாளர் – நா. ரமேசு; ஒன்றிய பொருளாளர் – மா.பிரகாசு.  ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள்: ப. குணசேகரன், நா.சின்னச்சாமி, ராஜீவ்காந்தி, சேகர்,சண்முகசுந்தரம், வடிவேலு, க.குமார், பொன்னுச்சாமி, சி. இரங்கசாமி, செல்லதுரை, சுந்தரி. தமிழ்நாடு மாணவர் கழகம் – பல்லடம் ஒன்றியம் – செந்தில் குமார், இரா. மணிகண்டன், இராமராஜ், ப. பொன்னுச்சாமி. அய்யம்பாளையம் தோழர் வடிவேலுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதிய...

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

கேள்வி : மனு…. மனு… என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே! பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சாஸ்திரம் பற்றி. கேள்வி : அது என்ன மனுதர்ம சாஸ்திரம்? பதில் : அப்படி கேளுங்க. இப்ப, நம்முடைய வாழ்க்கையைப் பாருங்க. கோயிலுக்குப் போனால், அங்கே பார்ப்பான் தான் அர்ச்சகர். கல்யாணம்னு வந்தா, பார்ப்பனர்களை வைத்துதான் நடத்துறோம். புது வீடு கட்டி குடிபோகும் போதும், அவர்களைத் தான் கூப்பிடுகிறோம். இறந்தவர்களுக்கு ‘திதி’ கொடுக்கவும், அவருதான்! கோயில் கும்பாபிஷேகம் செய்யுறதும் அவருதான்! கேள்வி : உண்மைதான். எதுக்கு, இப்படி எல்லாத்துக்குமே பார்ப்பனர்களை மட்டுமே அழைக்க வேண்டும்? அவுங்க மட்டும்தான் ஆண்டவன் கிட்ட தொடர்பு கொள்ளும் உரிமை உண்டா? பதில் :  சரியான கேள்வி. இங்கேதான் ‘மனுதர்மம்’ வருது. இந்த ‘மனுதர்மம்’ என்றால் என்னன்னு பார்ப்போமா? இது சமஸ்கிருதத்துல எழுதப்பட்டது. பார்ப்பனர்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘துருளுகூஐஊநு’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட இல்லாதிருந்த பெரியாரை, தன் தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகி யிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும், கவர்னரும் இருமுறையும், தானும்...

10 நாட்கள்: 80 ஊர்களில் சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

10 நாட்கள்: 80 ஊர்களில் சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் பயணத்தின் தொடக்க நிகழ்வுப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. மந்தைவெளி மார்க்கெட் அருகில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றுகிறார்கள். சிற்பி இராசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் நிகழ்ச்சியை நடத்துகிறார். ஜூன் 23 இல் சென்னை இராயப்பேட்டையிலிருந்து பயணம் தொடங்கி – திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 80 ஊர்களில் 10 நாட்கள் பரப்புரைக் கூட்டங்களை நடத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் ஜூலை 2இல் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. சிற்பி இராசன், கு.அன்புதனசேகரன், டேவிட் பெரியார், எ.கேசவன், இரா....