Category: பெரியார் முழக்கம்

அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

ஆத்தூரில் அம்பேத்கர் 126 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார்-அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில்  பெரியார் – அம்பேத்கர்  வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப் பட்டது. படிப்பகத்தை (வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரி யர் முருகேசன், பேராசிரியர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர். அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும்படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. சென்னையில் : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் விழா காலை 8 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை...

‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்

4.4.2017 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், “தோழர் பாரூக் படுகொலை கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும், இஸ்லாமிய...

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ்

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள். இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை – ஒரு விரிவான தொகுப்பு நீட் தேர்வும் – சமூக அநீதியும் புத்த தம்மம் ஒ வர்ணதர்மம் – அம்பேத்கர் துருக்கியில் கெமால் செய்த புரட்சி சீரடி சாய்பாபா யார்? – பரபரப்பான பின்னணித் தகவல்கள் பசுவதைத் தடையின் அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை மதங்கள் தேவையில்லை – இன்குலாப் கவிதை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 13042017 இதழ்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 07.04.2017 வெள்ளிக்கிழமை அன்று இரவு 6-00 மணிக்கு துவங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக்குழுவின் பறை ஜாதிக்கான இசை அல்ல பறை தமிழரின் இசை என்ற முழக்கத்தோடு பறை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நிமிர்வு கலைக்குழுவினர் பறைக்கேற்றவாறு பரதம் ஆடி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றனர். தொடர்ந்து நகர தலைவர் சி.தனசேகரன் தலைமையேற்க,  முருங்கப்பட்டி ரமேசு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. நகர செய்தி தொடர்பாளர்  சி.மோகன்ராஜ் பெரியார் தொண்டர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தி குறித்தும் அதை விளக்கியும் உரையாற்ற அவரைத் தொடர்ந்து கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். சக்தி பெரியாரியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் உரையாற்றினார். இவர்களைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் சாக்கோட்டை மு.இளங்கோவன், இம்மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்  இழிவையும், அடிமைத்தனத்தை யும் ஒழிக்க...

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

இந்தியாவில் நிறவெறி சில பகுதிகளில், சில இந்தியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கியிருக்க விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரும்போதும், வாடகைக்கு வீடு தேடும்போதும், வீதியிலும் பொது இடங்களிலும், எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் ஏற்படுகிற வெறுப்புணர்வுக்குக் காரணம், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் சாதி உணர்வுகள்தான். பட்டியல் இனத்தவரைத் தீண்டத்தகாதோராக காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் அதே அணுகுமுறையைத்தான், கருப்பாக இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக் கின்றனர். சாதியம் என்பது மிகப் பலரைத் தாழ்த்தியும், ஒரு சிலரை உயர்த்தியும் நடத்துவது. எளியவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பது. பொது இடங்களில் இந்தியச் சிறுவர்களும் புகைபிடிக்கின்றனர்; நாங்களும் அப்படிப் புகைத்தால், அது கஞ்சா அல்லது மரிஜுவானா தான் என்று முடிவுகட்டுகின்றனர் ஒலியை அதிகப்படுத்திப் பாட்டு கேட்டால் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர், அல்லது வீடு புகுந்து அடிக்கின்றனர். அதே அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் செய்யும்போது கேட்டு ரசிக்கின்றனர். நாங்கள் மிகவும் பின்தங்கிய கண்டத்திலிருந்து...

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

கடந்த காலங்களில் புலால் உண்ணாமைக்கான தொரு இயக்கம் நம்மிடையே இருந்தது. அதன் பிறகு தான் அந்த கருத்தாக்கம் தீண்டப்படும் சாதியினரின் சிந்தனையில் மின்னலைப்போல் உதித்தது. உயிரோடு இருக்கும் எருமையின் பாலை அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும்; செத்துப்போன அதே மாட்டின் பிணத்தை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். என்ன ஒரு விந்தை இது நாம் அவர்களைக் கேட்க வேண்டும். மரித்துப் போன உங்கள் தாயின் பிணத்தை மட்டும் ஏன் நாங்கள் சுமக்க அனுமதி மறுக்கிறீர்கள்? செத்த மாட்டை நம்மிடம் தருவதுபோல் அவர்கள் தாயின் பிணத்தையும் நம்மிடம் தானே தரவேண்டும். சிலர் எப்போதோ ‘கேசரி’ இதழில் எழுதியிருந்தார்கள். ‘சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 விலங்குகள் வரை செத்துப் போகின்றன. அவற்றின் இறைச்சி தோல், கொம்பு, எலும்பு, கால் பாதம், வால் இவற்றையெல்லாம் விற்பதால் 500 ரூபாய் வரை கிடைக்கும். தின்னக்கூடாது என்று இறைச்சியை ஒதுக்கி விட்டாலும் மற்றவைகளால் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது...

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மய்யமா? இந்த மாதிரியான கோயில்களை இப்போதைய அறிவியலால் கட்ட முடியுமா? என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மத அடிப்படைவாதிகள் எழுதுகிறார்கள். இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் ‘மகா சக்தி’ பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்’ தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் ‘இடிதாங்கி’யாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த ‘அறிவியல் பூர்வமான’ அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் உங்களிடம் சொல்லி இருக்கக் கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர்வீச்சுக் காரணமாகத்தான் ‘சிட்டுக் குருவி’ இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளதாகவும், அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும்....

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் ஏப்.2ஆம் தேதி மாலை 7 மணியளவில் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி கலந்துரையாடலை ஒருங்கிணைத் தார். தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் உரையைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் சென்னை மாவட்டக் கழக செயல்பாடுகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களை பரப்பும் இயக்கம், பரப்புரைக் கூட்டங்கள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் – இந்து மத எதிர்ப்பு – ஜாதி ஒழிப்புக்காக நடத்திய விவாதங்கள் குறித்து வடசென்னையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொரு மாதமும் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவெய்திய கழகத் தோழர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு மாவட்ட கழக சார்பில் ரூ.20,000/- நிதி வழங்கப்பட்டது.  40க்கும் மேற்பட்ட தோழர்கள்...

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

திருக்குறள் பெருமையைப் பேசுகிறார், தருண் விஜய் என்று தமிழ்நாட்டில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டு மழைகளை பொழிந்தவர்கள் உண்டு. பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான அவர், அரித்துவாரில் கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை வைக்கப் போவதாகக் கூறினார். வைதீகப் பார்ப்பனர்கள், திருவள்ளுவர்  ‘தீண்டத்தகாதவர்’ என்று கூறி, சிலையை ‘புனித நதி’க் கரையில் நிறுவ எதிர்த்தனர். அதற்குப் பிறகு ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்த போது சொரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இது ஆதிசங்கரர் அறக்கட்டளைக் குரிய இடம். ஆதிசங்கரர் சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர். கடைசியில் பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் சிலை திறப்பு நடந்தது. தருண் விஜய் இப்படியெல்லாம் நடத்திய ‘தமிழ்ப் பற்று’ நாடகம், இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. புதுடில்லி நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாட்டின் மாணவர் தாக்கப்பட்டது குறித்து சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு...

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

வழக்கறிஞர் போராட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு வஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள்

புது தில்லியில் சுமார் ஒரு மாத காலமாக போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்க சார்பில் 6.4.2017 அன்று ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம், அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க. ஆட்சியானா லும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. டெல்லியில் 25 நாள்களாக போராடும் விவசாயிகளை மோடி ஆட்சி திரும்பிப் பார்க்கக் கூட மறுப்பது தமிழர்களுக்கு இழைக்கும் அவமானம். மூன்று முறை மத்திய நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்துப் பேசிய பிறகு இறுதி சந்திப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தது என்று போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். என்ன...

தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா காளிப்பட்டி 06042017

சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி, சவுத் இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளீயில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் திரு. சவுந்திர ராசன் தலைமையில் 06042016 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிக்பாக்சிங் கழகப் பொதுச்செயலாளரும் பயிற்றுநருமான சிவபெருமாள் வரவேர்புரையாற்றினார். அடுத்து தந்தை பெரியார் அவர்களின் படத்தினைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்துவைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் அப்பள்ளியின் விழா அரங்குக்கு தந்தை பெரியார் விழா அரங்கம் எனப் பெயரிடப்படுவதை உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பிருதிவிராசன், புதுவை சிந்தனையாளர் கழகத் தலைவர் தீனா, சிந்தாமணியூர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேச்சேரி 05042017

05042017 அன்று மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் கிளைக்கழக செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் தோழர் காவை இளவரசனின் மந்திரமல்லதந்திரமே என்ற செயல்முறை விளக்கா நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து நங்கவள்ளீ அன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் உரைகளுக்குப் பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நங்கவள்ளி கிருட்டிணன்  நன்றி கூறலுடன் நிறைவுபெற்றது.

வாழ்க்கை இணையேற்பு விழா தோழர் நீலாவதி – சந்திரமோகன் நிலக்கோட்டை 02042017

கழகத்தின் எல்லா குழந்தைகள் பழகு முகாம்களிலும் கலந்துகொண்டு உளவியல், தன்நம்பிக்கை வகுப்புகளை திறம்பட எடுத்துவருபவரும், நிலக்கோட்டை தொழிர் சங்கத் தலைவர் தோழர் செல்வராசு அவர்களின் மகளுமான தோழர் நீலாவதி, சந்திர மோகன் ஆகியோரின் வாழ்க்கைதுணையேற்பு விழா பவுத்த நெறிப்படி, 02042017 அன்று காலை 9-00 மணியளவில் சிறப்புற நடந்தேறியது. வாழ்த்தரங்கம் தமிழ்நாடு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தகைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் முகில்ராசு, முனைவர் பள்ளப்பட்டி மணிமாறன், கும்பகோணம் இணைப்பதிவாளர் தோழர் ரமணிதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017 தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து    1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர். தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்....

“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”

முடிவெய்திய கழகத் தோழர் முனியாண்டி படத்திறப்பில் அவரது துணைவியார் இந்துமதி உருக்கமான பேச்சு வேலூர் மாவட்டம் மகேந்திரவாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் க. முனியாண்டி (45) கடந்த பிப்.22 ஆம் தேதி உடல்நலக் குறைவில் முடிவெய்தினார். நெமிலி கழகத் தோழர் திலீபனோடு உற்ற தோழராக களப்பணியாற்றியவர் முனியாண்டி. அவரது படத்திறப்பு நிகழ்வு கடந்த மார்ச் 25ஆம் தேதி பகல்  11 மணியளவில் நெமிலி தனபாக்கியம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. முனியாண்டியைப் போலவே அவரது துணைவியார் இந்துமதி, கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் உறுதியாக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரே தலைமை ஏற்றார். பெரியாரிய கொள்கை உணர்வோடு அவர் பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் தனது உரையில் : – “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்யே சண்டை வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோ ரும் சொன்னா மாதிரி எங்க வீட்டுக் காரருக்கு...

பாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

இசுலாமிய அடிப்படைவாதிகளால் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 29.03.2017, புதன்கிழமை மாலை 5.00மணிக்கு சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகே கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நங்கவள்ளி நகர துணைத் தலைவர் க.மனோஜ்குமார் தலைமையேற்க, நகர பொறுப்பாளர்கள் இராசேந்திரன், கண்ணன், செந்தில், உமாசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு, திருச்செங்கோடு நகரகழகத் தோழர் தனலட்சுமி, ராசு வெங்கடேசு (ஈரோடு), திராவிடர் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லைவேந்தன் உரையாற்றினர். திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நிறைவாக பேசினார். மத தீவிரவாதங்கள் தலைதூக்குவது, தமிழகத்தின் தனித்துவத்தை குலைத்து விடும் என்பதை விளக்கி உரையாற்றினார். பழ. உமாசங்கர் நன்றி கூறினார். மேட்டூரில் – கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்துக் கழகத்தின் சார்பில் 27.3.2017...

காவேரிப்பட்டினம் – அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘விநாயகன்’ வழிபாடு : மாவட்டக் கழகம் எதிர்ப்பு

கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ வளாகத்தில் அரசாணைகளுக்கு எதிராக விநாயகன் சிலையை திடீரென வைத்து பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அங்கே மருத்துவராக பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர் இரா. அரிராம் என்பவரே முன்னின்று இந்த பூஜைகளை நடத்திக் கொண்டிருக் கிறார். தகவல் அறிந்து கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் தி.குமார் தலைமையில் கழகத் தோழர்கள் மார்ச் 28ஆம் தேதி காலை மருத்துவ அலுவலர் அரிராமைச் சந்தித்து, அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது சட்டப்படி தவறு என்பதை சுட்டிக் காட்டி மனு ஒன்றை அளித்தனர். மனுவை அளித்து விட்டு வெளியே வரும்போது முன்கூட்டியே தகவல் அறிந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள்  மாவட்ட தலைவர் குமார் மற்றும் தோழர்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வாக்குவாதம் செய்தனர்.  தனது உயிருக்கோ, உடைமை களுக்கோ ஆபத்து ஏற்படுமானால் அதற்கு மருத்துவர் அரிராம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பொறுப்பு என்று காவேரிப்பட்டினம்...

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார். 6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என்று சட்டம் கூறினாலும் சட்டம் இந்த விதியை கட்டாயப்படுத்தவில்லை. நீதித் துறையில் தலித் நீதிபதிகள் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதும்...

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து மத, இறை மறுப்பாளராக இருந்தார் என்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் வெறிகொண்ட அவரது இஸ்லாமிய நண்பர்களே பாரூக்கை படுகொலை செய்து காவல்துறையிடம் சரணடைந் துள்ளார்கள். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய கலை இலக்கியவாதிகள் இந்த படுகொலையை கண்டித்துள்ளனர். ‘தமிழ்இந்து’ நாளேடு, தமிழகத்தில் உருவாகி வரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்று தலையங்கம் தீட்டியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இலக்கிய வாதிகளின் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய தவ்ஹீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையை பேசியதற்காக 31 வயது இளைஞர் ஒருவரை இழந்து நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பாரூக்கை இழந்த நிலையிலும் இஸ்லாமியர் களுடனான உறவு எப்போதும் நீடிக்கும் என்றும், பார்ப்பன – ஜாதிய – இந்துத்துவா கொள்கைகளே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதன்மையான...

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 20.3.2017 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின் தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல், சென்னை இரண்யா ஆகியோர் உரைக்குப் பின் சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மேட்டூர் டி.கே. ஆர். இசைக்குழுவின் பறைமுழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மீ. அம்ஜத்கான் நன்றியுரையாற்ற கூட்டம் நிறைவுற்றது. குருவையில் : ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “ஆணவ கொலைகளும், அண்மைகால பெண்கள் கொலைகளும்; தீர்வை நோக்கி” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர்.  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமையேற்க வேல்முருகன் வரவேற்புரை...

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

“இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 35 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள் 65 சதவீதம். இந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து இவர்களின் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’’. இது 2013-ம் ஆண்டு இறுதியில் ஆக்ராவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது. “தற்போது இந்தியாவில் 5 கோடி பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேரின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்’’ என்று தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த மாதம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு...

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ நடிகர் சத்தியராஜ், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக ரூ. 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையாக சென்னை மாவட்டக் கழக பொறுப்பாளர்களிடம் வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன்,  செந்தில், எப்.டி.எல்., ஆகியோர் நடிகர்சத்யராஜ் இல்லம் சென்று காசோலையைப் பெற்றுக் கொண்டனர். பெரியார் முழக்கம் 06042017 இதழ்

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான  பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

 ‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜைகளை நடத்தும்  அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் சாலைகளை ஆக்கிரமித்து பந்தல்களைப்போட்டு ‘குண்டர்’களைப்போல் செயல்படுகிறார்கள் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப். 17 ஆம் தேதி பாலியல் தொழிலாளர்களான பெண்களின் அமைப்பான ‘தர்பார் சமன்வே மகிளா கமிட்டி’ துர்கா பூஜை நடத்துவதற்கு கல்கத்தா காவல்துறை போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சானிப் சட்டர்ஜி துர்கா பூஜைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். அப்போது சாலையின் குறுக்கே பெரிய பந்தல்களைப் போட்டு பூஜைகள் நடத்தும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவது ஏன்? அமைச்சர்கள் குண்டர்களைப்போல் செயல் படுகிறார்கள் என்று குறிப்பிட்டதோடு இத்தகைய துர்கா பூஜை கொண்டாட்டங்கள் போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட  வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.   பெரியார் முழக்கம் 26092013 இதழ்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கை அணிவதையே பெரியார் எதிர்த்ததாக உண்மைக்கு மாறான ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.  பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த செய்தியை பரப்பியபோது, அதை மறுத்து பெரியார் ஆற்றிய உரை ‘விடுதலை’ 15.12.1968 இல் இடம் பெற்றுள்ளது. உரை விவரம்: இன்றைய தினம் பெருமை மிக்க மேயர் (வேலூர் நாராயணன்) அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டேன். சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72-75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தீன் ரீ-ஆக்ஷன் தான் அது வேறொன்றுமில்லை. உங்களுக்கு வயது அதிக மானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். வேறொன்றுமில்லை என்று...

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

25ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டணி. ஓய்வு பெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி. விக்னேசுவரன் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ராஜபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி யுள்ளன. இது இலங்கையை ஆளும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தமிழர்கள் வழங்கிய தீர்ப்பு என்பதில் இரண்டு வித கருத்துகளுக்கு இடமில்லை; போருக்குப் பிறகு ராஜபக்சே தமிழர் பகுதியில் மேற்கொண்ட ‘புனரமைப்பு’ நட வடிக்கைகளை ஊதிப் பெருக்கியும் அரசு செயல்பாடுகளால் தமிழர்கள் ராஜபக்சே ஆட்சியின் மீது கொண்டிருந்த வெறுப்பு குறைந்துவிட்டது என்றும் திட்டமிட்டு சில பார்ப்பன ஏடுகள் பரப்பிய கருத்துகள் உண்மையல்ல என்பதையும் இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த மாற்றம் தமிழர் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டு வரப் போவதும் இல்லை...

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 17.9.2013 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை எடுத்து நாட்டின் பொருளா தாரத்தை சரி செய்யக் கோரி திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மண்டல அமைப்புச் செயலாளர் விஜயன், செயலவைத் தலைவர் சு. துரைசாமி, மாவட்ட செயலாளர் க.அகிலன், மாநகர செய லாளர் ஜீவா நகர் குமார், மாநகர அமைப்பாளர் நீதி ராசன், மாநகரத் தலைவர் சண்முகம், முகில்ராசு, உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் குணசேகரன், மணிகண்டன், நகுலன், பிரசாத், மதுரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் கழகம் ராஜா, பாண்டித்துரை, சௌந்தர், விக்னேஷ், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக பெரியாரின் 135 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக இந்நிகழ்வுக்கு...

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு நீதிமன்றங் களே துணை போவதை சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ். சந்துரு, பகுத்தறிவுப் பரப்புரை செய்வோரை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ‘தி இந்து’ (செப். 22) தமிழ் நாளிதழில் இது குறித்து அவர் எழுதியது: மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திய தபோல்கரின் படுகொலை அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடெங்கும் மூடர் கூடங்கள் உருவாவதை தடுக்க சட்டங்கள் வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. மராட்டியத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வோரை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை அரசே தண்டித்த வரலாறுகளும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந் தில் மக்கள் பெருக்கத்துக்கு எதிராக குடும்பக் கட்டுப்பாட்டை அன்னிபெசன்ட் அம்மையார் வலியுறுத்தினார். அவர் கிறிஸ்துவ மதத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சிறையில் அடைத்தனர். 1925 இல் டார்வினின் பரிணாம...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

 ‘வினாயகன்’ சிலை பால் குடிப்பதாக புரளி. கோயில்களில் பக்தர்கள் கூட்டம். – செய்தி பால் குடித்த வினாயகன், சிறுநீர் கழித்தானா? தீண்டாமையில்லாத கிராமமாக பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிங்கா நல்லூரை தமிழக அரசு தேர்வு செய்து பரிசு வழங்குகிறது. – செய்தி எப்படியோ தீண்டாமை இல்லாத ஒரு கிராமத்தை அரும்பாடுபட்டு கண்டு பிடித்து விட்டீர்களே! மகத்தான சாதனை போங்க! மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு எல்லாம் சட்டங்களைக் கொண்டு வர முடியாது.          – ‘துக்ளக்’ சோ அப்போ, மூடநம்பிக்கைகளைப் பாது காப்பதற்கு சட்டம் கொண்டு வரலாமா? மயிலாடுதுறை – மயூரநாதசாமி கோயில் கோபுரத்தில் தங்கக் கலசம் திருட்டு; போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது.          – செய்தி கவனம்! மோப்ப நாய் மாமிசம் சாப்பிடாத ‘சைவ’மாகவும், ‘அக்மார்க்’ இந்துவாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை அனுமதிக்காது. வினாயகன் சிலை வைப்பதில் தகராறு; கோவையில் சிவசேனை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விசுவ இந்து பரிஷத்தினர்...

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

இஸ்லாமிய மதத்தை மறுத்து நாத்திகர் பண்பாட்டுக் கழகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு சார்பாக சென்னை பாரூக் நினைவு கூட்டத்தில் அலாவுதீன் பதிவு செய்த கண்டனம்: பாரூக் பிறந்த சமூகம் சார்ந்த இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறி எம்மில் பெரும்பாலான நண்பர்களைப் போலவே தன்னையும் மதமற்றவராக இஸ்லாமிலிருந்து வெளியேறியவர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு அல்லாமல் இஸ்லாம் என்பது அர்த்தமற்ற – அபத்தமானது. விமர்சனங்களுக்கும், விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டது அல்ல என்ற கருத்துகளையும் வலிமையாக வலியுறுத்தி வந்தார். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்து மதவெறியர்களுக்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாமர இஸ்லாமிய மக்களை திட்டமிட்டு அரணாக்கிக் கொண்டு, தங்களது சொந்த இலாபத்திற்காக மதத்தின் பெயரால் மக்கள் அனைவரையும் பிளவுபடுத்தும் ஆபத்தான செயலில் ஈடுபடுவதையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்களின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்க, படிக்கக் கூடாத மக்களாக முஸ்லிம்களை கையாளும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும் பயங்கரவாதிகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவ...

பாரூக்கின் தந்தை அளித்த பேட்டி

கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன். பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி: கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர்....

சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...

பாரூக் படுகொலை: இஸ்லாமிய எழுத்தாளர்கள் – ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலைதூக்குவது மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என்று இஸ்லாமிய எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பாரூக்கின் படுகொலை – பல இஸ்லாமிய சிந்தனை யாளர்கள், முற்போக்கு இஸ்லாமிய குழுவினரிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருப்ப தோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே நிலவிய நட்பு உறவையும் சிக்கலாக்கி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு  (மார்ச் 24, 2017) எழுதியிருக்கிறது. கீரனூர் ஜாகிர் ராஜா, நாவல் சிறுகதைகளை எழுதி வரும் இலக்கியவாதி. தன்னுடைய நாவல்களில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை எழுதி வருகிறார். ‘மீன்காரத் தெரு’  என்ற அவரது நாவலில் திண்டுக்கல் கீரனூர் இஸ்லாமியர்களிடையே நிலவும் வர்க்க குழு பாகுபாடுகளை சித்தரித்திருந்தார். தொழில் வணிகத்தில் வசதியுடன் வாழும் ‘இராவுத்தர்’ பிரிவினர், மசூதிகளில் சேவை பணி செய்யும் வசதி யற்ற ‘லப்பை’ பிரிவினருடன் திருமண உறவுகளை தடை...

மதுரையில் இரயில் மறியல்

மதுரையில் இரயில் மறியல்

தமிழகத்தை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை நிறுத்தக் கோரியும் சிங்கள அரசின் தமிழக மீனவர் படுகொலையைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் இரயில் மறியல் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்றது. மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா. மணி கண்டன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் அபுதாகிர், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் காசு.நாகராசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிட்டு ராசா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், கோபால் ராமகிருஷ்ணன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர். பெரியார் நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆளும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறே இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 22 தோழர்கள் காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டனர். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம்...

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் தபால்காரர் பதவிகளை நிரப்பக்கோரி கடந்த ஆண்டு 21.10.2016 அன்று தமிழ்நாடு  தபால் வட்டத்தின் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து நுழைவுத்தேர்வும் எழுதினர். இத்தேர்வில் தமிழில் கட்டாயமாக 25 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவேண்டும்.இதன் முடிவுகள் நான்கு நாட்களுக்கு முன்னர் இணையத் தில் வெளியிடப்பட்டது. தமிழில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் மற்ற தாள்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் தோல்வி அடைந்து இருந்தனர். ஏதோ, தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு தேர்வு நடப்பதுபோல் அவ்வளவு கடினமாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, தமிழில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியலைப் பார்த்ததும் நம்மவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை, தமிழர்களும் இல்லை அனைவரும் அரியானா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒருவருக்கும் தமிழ் தெரியவில்லை தொடர்பு கொண்ட சற்று நேரத்திற்கு பின் இவர்களின் அலைபேசிகள்...

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலையில்  : குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. கழக மாவட்டச் செயலாளர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். நீதி அரசர் (தலைவர்.பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,), போஸ் (சமூக ஆர்வலர்), முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்), இரமேஸ், இராஜேஸ் குமார், இராதாகிருஷ்ணன், (ஆஊருஞ(ஐ), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் உரையாற்றினர். மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 30032017 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம்  ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்து கிருட்டிணன் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிரப்பக் கூடிய இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நீட்  தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்ச் 19 பகல் 12 மணியளவில் நடந்தது. மத்திய கைலாஷ் அருகே மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டபோது காவல்துறை கைது  செய்தது. பாரி சிவக்குமார் தலைமையில் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, கோவைத் தோழர் பாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை ஏற்க, ம.தி.மு.க.நகரச் செயலாளர் நா.ஜோதிபாசு,   சி.பி.ஐ . எஸ். மணிமாறன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பாலகிருஷ்னன் ஆகியோரது கண்டன உரையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,  மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி, ஈரோடு மாவட்ட செயவாளர் வேணுகோபால் மற்றும் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் கண்டன உரையாற்றினர். திருப்பூர் தோழர் சங்கீதா நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

இஸ்லாம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை தி.வி.க. தோழர்  பரூக் ,  ஈரோடு மாவட்டம் (தெற்கு) சார்பாக 19.03.2017 அன்று மாலை 7 மணிக்கு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ப.குமார் தலைமை ஏற்க, மறைந்த தோழருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காவை இளவரசன், கோபி வேலுச்சாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர். தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

திருச்சி, உய்யகொண்டான் திருமலை, சண்முகா நகர், பணி நிறைவு வனச் சரக அலுவலர் இல. கோவிந்தசாமி கழகக் கட்டமைப்பு நிதியாக ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) கழகத் தலைவர் கொளத்துர் மணியிடம் வழங்கினார். நன்றியுடன் பெறப்பட்டது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். “கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

கழகத் தலைவர் கொளத் தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தற் கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண் காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன், அவரது குழுவினருடன் வந்து  ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர்  சேலம் முத்து கிருட்டிணனன் உடல் 16-3-2017 அன்று  காலை 6.00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்ட செயலாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8.00 மணிக்கே மாணவர் முத்து கிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத...

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

கழகத் தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

கழகத் தோழர் ஃபாரூக் கடந்த 16.03.2017 அன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும்கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் சமூகம் குறித்த கவலையோடு சிந்தித்து அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக்கின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக்  குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் துரைசாமி  வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy – Savings A/c No : 10235169636. IFSC Code : SBIN0009314.  State bank of india, Veerapandi...

கொள்கைத் தோழர் – கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது – இஸ்லாமிய அடிப்படைவாதம்

கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாருக், பெரியார் கொள்கையை ஏற்று கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது. கடந்த 16ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த கொடூர சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் ஃபாரூக். தொழில் தொடர்பாக பேச விரும்புவதாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்கு தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார். சுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கி கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு...