Category: பெரியார் முழக்கம்

வினா… விடை…!

வினா… விடை…!

உத்தரகாண்ட்டில் காவல் துறையில் பணியாற்றிய குதிரையின் காலை உடைத்தார் பா.ஜ.க. எல்.எல்.ஏ.                – செய்தி நல்லா வேணும்! திமிர் பிடிச்ச குதிரை! வாயைத் திறந்து ‘பாரத் மாதாக்கி ஜே!ன்னு’ சொன்னாத்தான் என்ன?   தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை.          – பா.ஜ.க. அறிவிப்பு ஆமாங்க.. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சியுடன்கூட கூட்டணி வைக்க மாட்டோம். தனித்தே நிற்போம்!   கூடலூரில் புலியை சிக்க வைத்துப் பிடிக்க இளம் பசுங்கன்றை பயன் படுத்தினர் வனத் துறை யினர்.              – செய்தி காட்டுக்குள்ளும் ‘இந்து துவேஷிகளா?’ விடக்கூடாது! இரத்தம் சிந்தியாவது இந்து தர்மம் காக்க காடு அழைக் கிறது, இந்துவே ஓடி வா!   அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்தை வெளி யிட தடையை நீக்க தமிழக அரசு தொடர்ந்த வழக்கு வெற்றி.          – செய்தி முதலமைச்சர் உரிமையை மீட்டுத் தந்த முதலமைச் சருக்கு கோடானுகோடி நன்றி என்று முதலமைச்சர் படத் துடன் உடனே ஒரு...

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது  கேள்வி

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது கேள்வி

இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? “பார்ப்பனருக்கு சேவகம் செய்வதே இந்து ராஷ்டிரம்” என்றார், ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். “இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார் அப்துல் சமது. கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கின்ற சூழலில் அரசியல் கட்சிகள் எல்லாம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என ஆளாய் பறந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டினை இங்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகின்றது.  காவல் துறை அனுமதி மறுத்தும் உயர்நீதிமன்றத்தை அணுகி அதன் அனுமதியோடு இம்மாநாடு நடைபெறுகிறது.  அடுத்த தேர்தலைப் பற்றி யோசிப்பவர்கள் சாதாரண அரசியல்வாதிகள்; ஆனால் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் பெரியார் தொண்டர்கள்.  இதுதான் இம்மாநாட்டின்...

வாஸ்து மோசடியை எதிர்த்து  நுகர்வோர் கழகத்தில் புகார்

வாஸ்து மோசடியை எதிர்த்து நுகர்வோர் கழகத்தில் புகார்

அண்மைக் காலமாக வேகமாகப் பரவி வரும் மூட நம்பிக்கைகளில் ஒன்று ‘வாஸ்து’. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், செல்வந்தர்கள் என்று வசதி படைத்தவர்கள் ‘வாஸ்து’ மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர். தெலுங்கானா முதலமைச்சரான சந்திரசேகர ராவ், தனது ஆலோசகராக ‘வாஸ்து’ பண்டிதர் ஒருவரை நியமித் திருக்கிறார். பல தொலைக்காட்சி நிறுவனங்கள், ‘வாஸ்து’ மோசடிக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது தொலைக்காட்சிகளுக்கான நெறிமுறைகளுக்கே எதிரானது. கருநாடக மாநிலத்தில் ஒரு தொலைக்காட்சியில் ‘சரலா வாஸ்து’ என்ற நிறுவனம் ஒரு விளம்பர நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பேசிய வாஸ்து ‘குருஜி’ ஒருவர், தனது ‘வாஸ்து’ அறிவுரைப்படி வீடுகளை மாற்றியமைத் தவர்கள் பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபட்ட தாகக் கூறினார். இதைப் பார்த்து நம்பிய கருநாடகத்தைச் சார்ந்த ஒருவர், இந்த நிறுவனத்தின் ஆலோசனை பெற்று, பல இலட்சம் ரூபாய் செலவு செய்து தனது வீட்டை மாற்றி யமைத்தார்.இந்த ஏமாந்த மனிதரின் பெயர் மகாதேவ் துதிதால். வாஸ்து நிறுவனம், இதற்காக அவரிடம் ரூ.11,600 வசூலித்தது....

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சில கேள்விகள்

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சில கேள்விகள்

இந்து கோயில்களில் பெண்கள் வழிபாட்டு உரிமைகளைத் தடுக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். அதன் ஆண்டு அறிக்கையில் அறிவித்துள்ள செய்தி, ஏடுகளில் வெளி வந்துள்ளது. மதம், ஆன்மிகம் சார்ந்த பிரச்சினைகளில் ஆண்களும், பெண்களும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. வழிபாடுகளில் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். ஏற்கெனவே எடுத்திருந்த நிலைப்பாட்டை இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறது; வரவேற்க வேண்டிய முடிவு. ஆர்.எஸ்.எஸ். இந்த முடிவில் உண்மையாக இருக்குமானால் சில கேள்விகள் இருக்கின்றன. பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கூடாது. அவர்கள் ‘தீட்டுக்குரியவர்கள்’ அடிபணிந்து கிடக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்தும் மனுசாஸ்திரம், பகவத்கீதை மற்றும் ஆகமங்களில் வலியுறுத்தப்படும் கருத்துகளும் ஏற்கத் தக்கவை அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். அறிவிக்குமா? இது முதல் கேள்வி. ஜாதி – பால் வேறுபாடின்றி அர்ச்சகருக்குரிய கல்வித் தகுதியுள்ள எவரும் அர்ச்சகராகலாம் என்பதை ஆர்.எஸ். எஸ். ஆதரிக்க முன் வருமா? இது இரண்டாவது கேள்வி. மூன்றாவதாக –...

பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டனில் குடியேறிய பார்ப்பன உயர் ஜாதி இந்துக்கள், அங்கும் ஜாதியையும் தீண்டாமையையும் பின்பற்றி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் களிடையே நிலவும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. தெற்காசிய ஒற்றுமைக் குழு ‘ஜாதிய கண்காணிப்பு மய்யம்’ தெற்காசிய புலம் பெயர் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கினை நடத்தின. பிரிட்டனில் ‘ஜாதிய கண்காணிப்பகம்’ என்ற ஜாதிக்கு எதிரான அமைப்பு அங்கே இப்போதும் ‘இந்து’, ‘சீக்கியர்’ சமூகங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி தீண்டாமை பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. 2010ஆம் ஆண்டில் பிரிட்டனில் நிறவெறி பாகுபாடு களுக்கு எதிராக ‘சமத்துவ சட்டம்’ ஒன்றை அந்நாடு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான பிரிவையும் இணைக்க வேண்டும் என்று பிரிட் டனில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஜாதி எதிர்ப்பாளர்கள் – தொடர் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தினர்....

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு  தலித் இளைஞர் பலியானாரே!

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் மனைவி கண்முன்னே கணவரை மர்மக் கும்பல் வெட்டிய சம்பவம் திட்டமிட்ட ஜாதி வெறி படுகொலையாகும். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் (21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பழனியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் கவுசல்யா(19)க்கும் கடந்த 8 மாதங் களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர் கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் ஞாயிறன்று இருவரும் உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்தபோது (மார்ச் 13) மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சங்கரை அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டி யுள்ளனர். இந்த சம்பவத்தில் கவுசல்யாவும் படுகாயம் அடைந்தார். அங்கு...

கழகம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் பெரியார் சிலைகளை மூடமாட்டோம்

கழகம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் பெரியார் சிலைகளை மூடமாட்டோம்

“தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை; சிலையில் பதிக்கப்பட்டுள்ள பெரியார் கருத்துகளும் மூடப்படாது” என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி உயர்நீதிமன்றத்தில் கழக சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார். ”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டுள்ளனர். எங்களது இயக்கம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத சமுதாய மாற்றத்துக்கான இயக்கம். அரசியல் கட்சி கிடையாது. தேர்தலிலும்...

ஆட்சி அதிகார மமதையில் திமிர் பேசும் ராஜாக்கள் பதில் சொல்லட்டும்!

ஆட்சி அதிகார மமதையில் திமிர் பேசும் ராஜாக்கள் பதில் சொல்லட்டும்!

“வெகு மக்களை ‘சூத்திரர்’களாக்கும் ‘பூணூலை’ முதுகில் போட்டுக் கொண்டு மக்களை பிளவுபடுத் தும் கும்பல் சட்டைப் பையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு திரிவதுதான் ‘தேச பக்தி’ என்றால், இந்த தேசமே வேண்டாம்; அதில் மானங் கெட்ட குடிமக்களாக இருக்கவும் வேண்டாம்” என்பதே தன்மானமுள்ள தமிழனின் பதிலாக இருக்க முடியும். தேசத்தின் பற்று என்பது – அங்கே வாழும் மக்களின் உரிமைகளோடு பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது; பறக்கும் கொடியிலும் – கூவிடும் கூச்சலிலும் இல்லை! புரிந்து கொள்ளுங்கள்! – இரா பெரியார் முழக்கம் 17032016 இதழ்

தேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி?

தேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி?

பார்ப்பனக் கொழுப்புடன் பேசி வரும் பா.ஜ.க. எச். ராஜா, தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் வழக்கமான திமிரோடு பேசினார். தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும், தேசியக் கொடியை அவமதிப்பவர்கள் எவராக இருந்தாலும் அதை இந்த  தேசத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் ‘ஹிட்லர்’ குரலில் மிரட்டினார். ‘இவாள்’களின் தேச பக்தி,  தேசியக் கொடி எனும் துணிக்குள்தான் பதுங்கிக் கிடக்கிறது. மற்றபடி தேசத்தின் ‘இறையாண்மை’யை சர்வதேச நிதி மூல தனத்திடமும், பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்களிட மும் தாராளமாக அடகு வைப்பார்கள். ‘தேசியக் கொடி’யின் கீழே அமர்ந்து கொண்டு இதற்கான அடிமைப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பார்கள். அந்த அடிமைப் பத்திரத்துக்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். ‘அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கே’ என்று தேசபக்தியோடு கூறிக் கொள்வார்கள். ரவிசங்கர் என்ற ஆன்மீகப் பார்ப்பன வியாபாரி, யமுனை ஆற்றுப் படுகையில் சுற்றுச் சூழல் விதிகளுக்கு எதிராக ‘உலக கலாச்சார விழா’ என்று பல...

திராவிடர் விடுதலைக் கழகம் எரித்த மனுஸ்மிருதி “ஜெ.என்.யூ.”விலும் எரிகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் எரித்த மனுஸ்மிருதி “ஜெ.என்.யூ.”விலும் எரிகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் 2013, ஏப்ரல் 14 அன்று தமிழ்நாடு முழுதும் பொதுவிடங்களில் மனுசாஸ்திரத்தை தீயிட்டுக் கொளுத்தியது. அன்று கழகத் தோழர்கள் நடத்திய மனுசாஸ்திர எதிர்ப்பை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. அதே மனுசாஸ்திர எரிப்பு இப்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் நடந்திருக்கிறது. மார்ச் 8 – சர்வதேச மகளிர் நாளில் மனுசாஸ்திரத்தை தீயிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் என்பதுதான், குறிப்பிடப்பட வேண்டியதாகும். ‘ஜெ.என்.யூ.’ பல்கலைக்கழகத்தின் அகில் பாரத் வித்யத்தி பரிஷத் துணைத் தலைவர் ஜட்டின் கோரயா, அதே அமைப்பின் பிரதீப் நர்சஸ் உள்ளிட்ட மாணவர்கள் கன்யாகுமார் மீது தேசத் துரோக சட்டத்தை பா.ஜ.க. அரசு ஏவியதற்குப் பிறகு, பரிஷத்திலிருந்து விலகி விட்டார்கள். அரியானாவிலிருந்து ‘ஜெ.என்.யூ.’வுக்கு படிக்க வந்த இந்த ‘தலித்’ மாணவர்களை கன்யாகுமார் கைதும், அய்தராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா மரணமும் மிகவும் பாதித்துவிட்டன. பரிஷத்தின் ‘இந்துத்துவா’ கொள்கை, ‘தலித்’ விரோதமானது என்ற முடிவுக்கு வந்தவர்கள், அதிலிருந்து...

அமாவாசையில் பிறந்த பிள்ளை

அமாவாசையில் பிறந்த பிள்ளை

மாடு செத்தால் எடுத்துப் போய்தின்று விடுகிறார்கள். குதிரை செத்தால் சாப்பிடாமல் புதைதது விடுகிறார்கள். இவைகள் சொர்க்கத்தில் இருக்கின்றன; நரகத்தில் இருக்கின்றன என்று எவரும் கருதுவதில்லை. ஆனால் இந்த முட்டாள்தனத்தை மனிதனுக்குத்தான் ஒட்ட வைத்து விட்டார்கள்.                                                   – பெரியார், ‘விடுதலை’ 22.11.1972 பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சாதகம் பார்க்கிறேன் என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார் என்றால் இது குதிரைச் சாதகம், இது கழுதைச் சாதகம் என்று கூற மாட்டானே! உடனே பொருத்தம் பார்த்து சரியாக இருக்கிறது என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்துக்கு வித்தியாசம் தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூற முடியும் என்று நம் மக்கள் கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லையே!                                             – பெரியார், ‘விடுதலை’ 9.10.1964   அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று சோசியத்தில் நம்பிக்கையுள்ளவன் கருதினாலும் அவன் வீட்டில் ஒரு அமாவாசையில் பிறந்த ஒருவன்...

தீ மிதிப்பது பக்தியாலா?

தீ மிதிப்பது பக்தியாலா?

தீயில் மனிதன் நடப்பது என்பது ‘கடவுள் செயல்’ என்றும், கடவுள் மீது உள்ள பக்தியின் காரணமாகவே நடக்க முடிகிறது என்றும் மக்கள் நம்பி னார்கள். மதவாதிகள் தங்கள் மதத்தைப் பரப்ப இம்முறையைத் தங்கள் மத விழாவாகப் பயன்படுத்தினார்கள். இம்முறை இந்தியாவிலும், மலேசியா விலும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், பரவலாக இந்துக்களும், சில இடங்களில் முகமதியர்களும் தீமிதி விழாக்களை நடத்துகிறார்கள். தீ குழியின் அமைப்பு : தீ குழியின் அளவு ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டிருக்கும். சராசரியாக 15 அடி நீளமும், 5 அடி அகலமும், 2 அடி உயரமும் உடையதாக இருக்கும். பாற்குழி ஒன்று இருக்கும். (பசு அல்லது வெள்ளாட்டின் பால் நிரப்பப்பட்ட சிறிய குழி) முதலில் பெரிய பெரிய மரக்கட்டைகளை எரிய விடுகிறார்கள். அந்த மரக்கட்டைகள் எரிந்து தணல் கட்டிகளாக ஆன பின்னால் இரண்டு மூன்று பேர் நீளமான மூங்கிற் குச்சிகளைக் கொண்டு தணல் கட்டிகளைக் குத்தி உடைத்து தீ குழி...

முகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை

முகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சி அருவி பக்கத்தில் இரமணகிரி மடம் உள்ளது. அதில் அருகிலுள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரியின் மகன் ஆனந்த சுவாமி (22) சாமியாராக இருக்கிறார். மழை வேண்டியும் மக்கள் நலனுக்காகவும் இந்த சாமியார் வெள்ளிக்கிழமை (சூன் 11, 2004) இரவு 8 மணிக்கு 7 அடி ஆழத்தில் மூடிய குழிக்குள் தவம் இருக்கத் தொடங்கினார். ஞாயிறு காலை சரியாக 8 மணிக்கு வெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என அவரது சீடர்கள் அறிவித்தார்கள். இதைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தார்கள். இந்தச் சாமியார் இதற்கு முன்னர் குழிதோண்டி குழிக்குள் ஒரு நாள் தவம் இருந்து உயிரோடு வெற்றிகரமாக வெளியே வந்து தனது ‘சக்தி’யை பக்தர்களுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். முதலில் நிலத்துக்குள் குழி தோண்டி அதற்குன் முன்கூட்டியே சுவாமி சிலைகள், படங்கள், பூசைப் பொருள்கள், பழங்கள், தண்ணீர் முதலியன வைக்கப்படும். அதன் பிறகு...

டாஸ்மாக் முற்றுகை:கழகத் தோழர்கள் கைது

டாஸ்மாக் முற்றுகை:கழகத் தோழர்கள் கைது

சென்னை மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் (மயிலாப்பூர் பகுதி) மற்றும் அனைத்து இயக்கங்கள் – பொது மக்கள் ஒருங்கிணைந்து 3.7.2016 பிற்பகல் 12.30 மணியளவில் சென்னை மயிலாப்பூர் செயின்மேரீஸ் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை (மதுபான) அகற்றக்கோரி, முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மயிலை பகுதி தலைவர் இராவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை பொருப்பாளர்கள் ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, முனுசாமி, நாகேந்திரன், தென் சென்னை மாவட்ட பொருப்பாளர்கள் வேழவேந்தன், சு. பிரகாசு, ஜான் மண்டேலா, எப்.டி.எல். செந்தில், வேலு, பகுதி பொருப்பாளர்கள் மாரி, மனோகர், சிவா, விழுப்புரம்அய்யனார்,  குமரன், நந்தா உள்பட இப்பகுதியை சார்ந்த முகிலன், சுரேஷ், கமலேஷ், பிரவின், பார்த்தா, பாஸ்கர், $தர், ஏராளமான சுய உதவிக் குழு பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 22072016 இதழ்

பரப்புரைப் பயணம்:  சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

பரப்புரைப் பயணம்: சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16, ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் கமலக் கண்ணன் இல்லத்தில் நடைபெற்றது. எழிலன் தலைமை வகித்தார். கழகப் பொருப்பாளர்கள் இரத்தினசாமி, சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 89 வயதான மூத்த பெரியார் தொண்டர் இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். சித்தோடு பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது. கழகப்பரப்புரைப் பயணத்தை நடத்துவது குறித்தும் கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பு குறித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தோழர்களுக்கு கமலக்கண்ணன் சிற்றுண்டிவழங்கினார். பெரியார் முழக்கம் 22072016 இதழ்

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

(பேய், பயம் என்பது ஒரு மனநோய். நினைத்ததைப் போன்றே பேசி, நடிக்கும் மனநோய்க்குப் பெயர்‘குளோசொலேலியா’. மனநல மருத்துவர் டாக்டர் கோவூர் சிகிச்சை அளித்த ஒரு பேய் பிடித்தவரின் கதை இது)   காலி ரிச்மண்ட் கல்லூரியில் கோவூர் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண் டிருந்த காலம். 1946ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்காகப் பயின்று கொண்டிருந்த சில மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் கோவூர்.மே மாதத்தில் ஒரு சனிக்கிழமை வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜயசிங்கா என்ற மாணவன் கோவூரிடம் வந்தான். ‘என்ன விஷயம்’ என்று கேட்டார். தன் தந்தை ஒரு அரசாங்க அதிகாரி என்றும், அவரிடம் கடமை புரியம் ஒரு பியூன் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துபோன கர்ப்பிணியான ஒரு மீனவப் பெண்ணின் ஆவியால் பீடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைப் போன்றே பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினான். தன் வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளியே அந்தப் பியூனின் வீடு இருப்பதாகவும்...

முகநூல் தோழர்கள் நடத்திய பயிற்சி வகுப்பு

முகநூல் தோழர்கள் நடத்திய பயிற்சி வகுப்பு

முகநூலால் இணைந்த பெரியாரியல் தோழர்கள் முகநூலையும் தாண்டிய களப்பணிக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாய் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் 9-7-2016, 10-7-2016 இரண்டுநாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்தியனர். தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், பேராசிரியர் நடராஜன் வகுப்புகளை எடுத்தனர். கோபால் இராமகிருஷ்னன், இரா. செந்தில் குமார் (குனுடு), வைரவேல், ஆனந்த் பொள்ளாச்சி, அருள்குமார், சோமசுந்தரம், அருள் நாராயணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பகுத்தறிவாளர் பாசறை பெரியாரியலை கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு. பெரியார் முழக்கம் 22072016 இதழ்

வாட்டி வதைக்கும் ‘வாஸ்து’ நம்பிக்கை

‘வாஸ்து’ நம்பிக்கை, இப்போது படித்தவர்கள், அரசியல்வாதிகள், மேல்மட்டத் தினரிடம் வேகமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள்,  இப்போதெல்லாம் மக்களை நம்புவதைவிட யாகங்களையும் வாஸ்துக்களையும், சோதிடர்களையும் நம்பத்துவங்கிவிட்டனர். இந்த ஆலோசகர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால், மக்கள் ஆதரவு கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். சென்னை கடற்கரைச் சாலையில் கையில் சிலம்புடன் ஆவேசத்துடன் நீதி கேட்கும் கண்ணகிசலை, கடந்தகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியால்  2002இல் அகற்றப்பட்டது. போக்குவரத்துப் பிரச்சினைதான் காரணம் என்று பொருந்தாத ஒரு சமாதானம் சொல்லப்பட்டாலும், ‘வாஸ்து’ நம்பிக்கையின்படிதான் அது அகற்றப்பட்டது என்று செய்திகள் வந்தன. தமிழக முதலமைச்சர் அந்த வழியாகக் கோட்டைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி இப்படி ஒரு சிலை நிற்பது முதலமைச்சருக்கு நல்லது அல்ல என்று சில வாஸ்து பண்டிதர்கள் கூறியதால், சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தியாவில் பிரதமர்கள், முதலமைச்சர்கள், தலைவர்கள், உயர் அதிகாரிகள், இந்த வாஸ்து மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் மக்கள் வரிப் பணத்தைப் பாழாக்கி, தங்கள் அலுவலகக் கட்டிடங்களை...

சுற்றுச் சூழல் போராளி பியூஸ் மீதான சிறை தாக்குதலுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, சேலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திர வதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த அவர்களை சிறையில் தாக்கி சித்திரவதை செய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர...

“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது?”

தெரு ஓரத்தில் மக்களைக் கூட்டி தாயத்து விற்கும் மந்திரவாதிகளின்மோசடிகளைக்கூட நம்பிக் கொண்டிருந்தவர்கள் நாம். இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி திரைப்படங்களில்கூட காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு திரைப்படத்தில் நடிகர் மயில்சாமி தாயத்து விற்பார். கூட்டத்தோடு கூட்டமாக தனது ஆளையே நிற்க வைத்து, பிறகு அந்த ஆளையே மந்திரத்தால் மயங்கி விழுந்தவர்போல நடிக்க வைத்து படுக்க வைப்பார். சூழ்ந்து நிற்கும் கூட்டம் பற்றி நன்றாக புரிந்த அந்த ஆசாமியை படுக்கவைத்து உடலையும் முகத்தையும் துணியால் மூடி, மயில்சாமி கூட்டத்தினர் பற்றி கேள்வி  கேட்பார். மயங்கி படுத்திருப்பது போல் நடிக்கும் ஆசாமியிடமிருந்து சட்டென்று பதில்கள் வரும். வேடிக்கைப் பார்ப்பவர்கள் சட்டைப் பையில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து போடா விட்டால் ‘இரத்தம் கக்கி சாக வேண்டி வரும்’ என்று மந்திரவாதி மிரட்டுவார். கூட்டத்தில் நிற்கும் நடிகர் வடிவேலு பையில் உள்ள பணம் முழுவதையும் போடாமல் 10 ரூபாய் மட்டுமே போட, மயங்கிக் கிடக்கிற மனிதன், அந்த ஆள் பணம் முழுவதையும் போடவில்லை என்று...

கிரகங்களிலும் ஜாதி

கிரகங்களைப் பற்றிய ஜோதிடர்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை. கிரகங்களை ஆண், பெண் என்று மட்டுமல்ல ‘அலி’ என்றுகூட வகைப்படுத் தியிருக்கிறார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் அது நிஜமே. சூரியன், செவ்வாய், குரு ஆண்கள்! சந்திரன், சுக்ரன், ராகு பெண்கள்! புதன், சனி, கேது ‘அலி’கள்! மனிதர்களைப் போல் கிரகங்களைப் பாவிக்க  ஆரம்பித்து விட்டால் பிறகு சகல கல்யாண குணங்களையும் கொடுத்துவிட வேண்டியது தானே. எந்தக் கிரகம் உயரம், குட்டை, சமம்? எது வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை? எது எதற்கு என்ன உடைவாகனம் யாது? என்றெல்லாம்   பட்டியலிட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சாதிப் பாகுபாடுகூட வகுத்து விட்டார்கள்!  குரு, சுக்ரன் – பிராமண ஜாதி; சூரியன், செவ்வாய்- ஷத்திரிய ஜாதி; சந்திரன், புதன் – வைசிய ஜாதி; சனி – சூத்திரஜாதி; ராகு, கேது – சங்கிரம ஜாதி – என்று எழுதி வைத்திருக்கிறார்கள். படுமோசமான கிரகம் என்றும், ஏழரை...

படித்தவர்களை ஏன் ‘பேய்’ பிடிப்பதில்லை?

பேய், பிசாசு உண்மையா? அறிவியல் ரீதியான ஒரு அலசல். பேய், பிசாசு, ஆவிகளை அச்சத்தால் மக்கள் நம்புகிறார்கள். பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’ உலவுவதாகப் பொதுவாக யாரும் அதேபோல் நம்புவதில்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக யாரும் நம்புவதில்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் யாரை தொந்தரவு செய்கின்றன தெரியுமா? படித்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை, அய்.பி.எஸ். அதிகாரிகளை, மருத்துவர்களை, பொதுவாக படித்த ஆண்களை தொந்தரவு செய்வதில்லை. அதேபோல் பார்ப்பன ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்வதில்லை. இன்று வரை இவர்களையெல்லாம் ஏன் பேய், பிசாசு, ஆவிகள் தொந்தரவு செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே “பேய், பிசாசு, ஆவிகள், கிராமப்புற மக்களை அதிலும் படிப்பு...

நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத் தொலைக்கிறான்

நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள் இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 ஒ 30 = 45 ஒரு ஆண்டிற்கு …………………… 540 மணி எமகண்டம் 1 மாதத்திற்கு…. 1.30 ஒ 30 = 45 ஒரு ஆண்டிற்கு………………….. 540 மணி அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்) ஒரு ஆண்டிற்கு… 48 ஒ 12=576மணி நவமி (மாதத்திற்கு 2 நாள்) ஒரு ஆண்டிற்கு ………………….. 48 ஒ 12=576 மணி மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 ஒ 30 = 45 ஒரு ஆண்டிற்கு 540 மணி (மாதத்தில் 3 நாட்கள்) கரிநாள் ஒரு ஆண்டிற்கு…. 864 மணி (பாட்டிமை மாதம் 2 நாட்கள்) பிரதமை ஒரு ஆண்டிற்கு….. 48 ஒ 12=576 மணி சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு ஒரு நாள்.. .. 24 மணி சந்திர கிரகணம் ஒரு ஆண்டிற்கு ஒரு நாள் 24 மணி மதம் சார்ந்த...

சோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை!

பேராசிரியர் அருணன் எழுதிய ‘மூடநம்பிக்கை களிலிருந்து விடுதலை’ நூலிலிருந்து. ஜோதிடம் ஓர்அறிவியல் என்று கதை விடுகிறார்கள். இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவருக்கு – ஜோதிடருக்கு – ‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே’ என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே. எனினும் பலரது நெஞ்சங்களிலும் எழுகிற ஒரு கேள்வி என்னவென்றால் ‘கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு தானே சோதிடம் கணிக்கிறார்கள். நாம் வாழுகிற இந்த பிரபஞ்சத்தில்தானே கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அவற்றின் நிலை மாற்றங்கள் மனிதனை பாதிக்காதா?’ என்பதாகும். இது சற்று விரிவாக விசாரணை நடத்த வேண்டிய விஷயம். முதலில் கிரகங்கள் குறித்து இந்த  ஜோதிட வித்வான்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்போம். ‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு,கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின்...

அறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி

சந்திரன் ஒரு தெய்வம் அல்ல; அது அறிவியல் பார்வையில் ஒரு கோள்! சந்திரன் மீது பூமியின் நிழல்படுவதே (கிரகணம்) என்று கூறினார், கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலாளர் ஆனக்ஸாகரஸ். ஏதன்சு நகரத்து மதவாதிகள் இவரது கருத்து மத விரோதமானது என்று கூறி இவரைக் கொல்ல முயன்றனர். ஏதன்சு நகர மன்னர் பெரிக்ளீஸ் இவரது நண்பராக இருந்ததால், கொலை முயற்சி தடுக்கப்பட்டது. இவரை ஏதன்சு நகரை விட்டே துரத்தி விட்டனர். சூரியன் தான் இயங்குகிறது என்ற மத நம்பிக்கைக்கு மாறாக, சூரியனைச் சுற்றி பூமிதான் இயங்குகின்றது என்ற உண்மையை வெளியிட்டார், கோபர்நிகஸ். மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்; கலகம் செய்தனர். புராட்டஸ்டண்ட்  மதத்தை நிறுவிய மார்ட்டின் லூதர், கோபர்நிகசை ‘முட்டாள்!’ என்று கூறி  இழிவுபடுத்தினார். எதிர்ப்புக்காக தனது முடிவை விட்டுக் கொடுக்காத  கோப்பர்நிகஸ், படுத்த படுக்கையாக கிடக்கும் போதும் தனது கொள்கைகளை நூலாக வெளியிட்டுப் பரப்பினார். விண்வெளியில் விண் கோள்களின் இயக்க விதிகளைக்...

‘மாட்டுக்கறி’ சாப்பிடுவோர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகலாம்!

அருணாசலப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருக்கும் 3000 பேரில் பெரும்பாலோர் மாட்டுக் கறி சாப்பிடுவோர் என்ற தகவல் வெளி வந்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களே இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பிரச்சார செயலாளராக உள்ள (பிரச்சார் பிரமுக்) மன்மோகன்  வைத்யா, 2015 டிசம்பர் 8 – அளித்த பேட்டியில் “மாட்டிறைச்சி சாப்பிடுவோர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருப்பதில் எந்தத் தடையும் இல்லை. மாட்டிறைச்சி உண்ணுவோருக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ்.மீது உருவாக்கப்படும் தவறான ‘பிம்பத்தை’ நீக்குவதற்கு நாங்கள் தீவிரமாக முயன்று வருகிறோம். இந்தியாவை முதன்மையான நாடாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரு மத அமைப்பு அல்ல. அது ஒரு சமூக அமைப்பு. மாட்டிறைச்சியை தடை செய்ய ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தவில்லை. மக்களின் உணவுப் பழக்கங்களில் தலையிடுவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. தேச விரோதிகள் மட்டுமே எங்களின் எதிரிகள்” என்று...

கழகம் உள்ளிட்ட இயக்கங்களின் கூட்டறிக்கை காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை: மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கி விட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை.  2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிரு க்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி                            (வயது 22), “மோதல்” என்ற பெயரில் இந்திய  இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க...

சோதிடத்தை மறுத்த கடவுள் நம்பிக்கையாளர்கள்

கடவுள் நம்பிக்கையாளர்களே சோதிடத்தை நம்ப மறுக்கிறார்கள் – சோதிடம் ஒரு மோசடி என்று கூறியிருக்கிறார்கள்.   அப்துல் கலாம் : இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் தனது பதவிக் காலத்தை மக்களின்  பாராட்டுகளோடு முடித்துக் காட்டினார். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் அப்துல் கலாம். குடியரசுத் தலைவர் பதவிக்கு  அவரை வாஜ்பாய்பிரதமராக இருந்த பா.ஜ.க. ஆட்சி தேர்வு  செய்த போது கூட பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான பொறுப்பு மத்திய அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைச்சர் எந்த நாளில் பதவியேற்பு  விழாவை வைத்துக் கொள்ளலாம்; சோதிடப்படி உங்களுக்கு  ‘நாள் நட்சத்திரத்திற்கு’ ஏற்ற நல்ல நாள் எது என்று கேட்டார். அதற்கு அப்துல்கலாம் இவ்வாறு பதில் அளித்தார். “பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது சூரியனையும் சுற்றிக் கொண்டி ருக்கிறது. காலம், நேரம் இரண்டுக்குமே இந்த சுழற்சிதான் காரணம். என்னைப் பொறுத்தளவில் எல்லா நாள்களும் நல்ல...

கல்வி வள்ளல் காமராசர் 114 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிருட்டிணகிரி 24072016

24-7-2016 அன்று மாலை 6-30 மணியளவில், கிருட்டிணகிரி, ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த தோழர் பழனி நினைவுமேடையில், கிருட்டிணகிரி நுகர்வோர் சேவை சங்கத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசரின் 114ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நுகர்வோர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளருமாகிய இராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். நுகர்வோர் சேவை சங்கத்தின் தலைவர் தட்டக்கல் கோவிந்தசாமி, செய்தியாளர் கிருஷ்ணமூர்த்திராவ், சக்தி மனோகரன் ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் காமராசரின் கல்வி சேவைகளை, தனது முதல் அமைச்சரவையை பார்ப்பனர் பங்கேற்காத அமைச்சரவையாய் அமைத்த பாங்கினை, அறநிலைய பாதுகாப்பு அமைச்சராகவும்ம், உள்துறை அமைச்சராகவும் தாழ்த்தப்பட்டோரை நியமித்த சமூகநீதி சிந்தனையையும், இந்த்துத்துவ மதவாத வன்முறையாளர்கள் தனது வீட்டுக்குத் தீ வைத்து சூறையாடியபோதும் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றுவதை அனுமதிக்காத துணிச்சலையும் விரிவாக எடுத்துரைத்தார். வழக்குரைஞர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்புரையாற்றார்....

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் பெற்றோருக்கு ஆறுதல்

23-7-2016 அன்று இரவு 7-00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருலாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செய்லாளர் முகில் ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் மருத்துவர் சரவணின் இல்லம் சென்று அவரது பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்களோடு உரையாடி வந்தனர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தி

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

23-7-2016 அன்று மாலை 4-30 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) மருத்துவ முதுநிலை (பொது மருத்துவம்) படிப்பில் இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் 77ஆம் இடம் பெற்று, அனுமதியான பத்தே நாட்களில் மர்மமான முறையில் இறந்துபோன திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரவணனின் கொலையைக் கண்டித்தும், வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் குண கோகுல் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மூர்த்தி, வி.சி.க.வின் மாநிலத் துணைச் செயலாளர் துரை வளவன், ஆதிதமிழர்ப் பேரவையின் வழக்கறிஞர் அணிச் செயலாளர் கனகசபை, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சரவணின் தந்தை கணேசன் சரவணனின்...

காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 21072016

கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய அரசே!  காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! இந்திய ராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு! எனும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 21.7.16 அன்று மாலை 4 மணிக்கு கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் அபதுல் சமது மனித நேய மக்கள் கட்சி, ஏ.கே. கரீம் எஸ.டி.பி.ஐ, சுந்தரமூர்த்தி த.வி.இயக்கம், பொழிலன் த.மக்கள் முன்ணனி, கரு.அண்ணாமலை த.பெ.திக, முகமது ரபீக் ராஜா பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சதீஷ் CPImட மக்கள் விடுதலை, செந்தில் இளந்தமிழகம் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தபசிகுமரன், உமாபதி, வேழவேந்தன், இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம்.

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் 17 இடங்களில் கொடியேற்று விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 22.9.2013 அன்று காலை 9.30 மணிக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்லப்பன், மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் சுகுணா, ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், செயலாளர் சிவானந்தம், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வராசு, குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், லோகநாதபுரம் மோகன், கிருஷ்ணன், வெங்கட், கலைமதி, பள்ளிபாளையம் ரமேஷ், புகைப்படக் கலைஞர் எழில் ஆகியோர் உள்பட 74 தோழர்கள் இந்நிகழ்வில் பங்குக் கொண்டனர். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், சென்னை வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பெரியார் சிலையிலிருந்து தோழர்கள் ஊர்வலமாக இரு சக்கர...

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் மக்கள் விழா எடுக்கிறார்கள். ஆனால் காந்திக்கும் ராஜாஜிக்கும் அரசுகள் தான் விழா எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய தோழர் நீலவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி அடையாளமற்ற அமைப்பாக செயல்படுவதைப் பாராட்டினார். செப்.17 அன்று மந்தைவெளி சந்தைப் பகுதியில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில், வீரமரணமடைந்த தோழர் நீலவேந்தன் ஆற்றிய உரை: மனித குலத்தை பிரித்த மதத்தை அழிக்கப் பிறந்த வீரர், மனுதர்ம தத்துவத்தில் நெருப்பு வைத்த சூரர், வர்ண ஜாதி நெறி திரை கிழித்த மேதை, வரலாறு நமக்கு அளித்த புரட்சிக்கானப் பாதை புரட்சியாளர் அம்பேத்கரையும், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் சுயநல பூமியில், தன்னைக் கூட சுத்தம் செய்யாமல் பூமியை சுத்தம் செய்ய புறப்பட்ட ஈரோட்டுக் கிழவன் தந்தை பெரியாரையும், உள்ளே கனன்றுகொண்டிருக்கிற சூடான பூமியின் குளிர்ச்சியான மேலோட்டில் கடைசி இரண்டு மனிதர்கள் வாழுகிற வரை அவர்களுக்கிடையிலான சமூக, அரசியல், பொருளாதார...

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே! சொன்னா கேளுங்க சுயமரி யாதை வேணுங்க – பெரியார் சொன்னதையுங் கொஞ்சம் சிந்திச்சிதான் பாருங்க! தமிழரே…. நீங்க செய்த தெய்வத்துக்கு நீங்க பூசை செய்யத் தடுப்பவ னாருங்க? – கொஞ்சம் நீங்க நெனைச்சிப் பாருங்க – தடுப்பாணை நீங்களே உங்க வீட்டுக் கழைப்பது தப்புங்க! பள்ளுப் பறைய னென்றாக்கிப் பிறப்பிலே ஊனத்தை செய்தவ னாருங்க? – கொஞ்சம் உண்மை உணர்ந்திடப் பாருங்க – அந்த உலுத்தனை நீங்களே சாமிஎன் றழைப்பது தப்புங்க! ஆரிய வேதத்தை மதமென்றே அருந்தமிழ் நெறியைக் கெடுத்தவ னாருங்க? – கொஞ்சம் ஆர யோசித்துப் பாருங்க – ஆரிய அயோக் கியனை விட்டு வைப்பதே தப்புங்க! எங்கிருந்தோ வந்தே நம்மிடம் இரந்து தின்று கிடந்தவ  னாருங்க? – கொஞ்சம் நீங்களே எண்ணிப் பாருங்க – அந்த நன்றி கேடனைக் கும்பிட்டுக் கூனுவது தப்புங்க! தமிழையும் மண்ணையும் கெடுத்தும் தானே மேலோன் என்பவ  னாருங்க?...

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மத்தியப் பிரதேசம், போபாலில் நடைபெறும் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்துக்காக முஸ்லீம் பெண்கள் அணியும்  10,000 பர்தாக்கள் தைக்கப்பட் டுள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்தார். “பர்தாக்களை தைத்த டெய்லர் ரூ.44.60 லட்சத் துக்கு ரசீது கொடுத்துள்ளார். இதில் ரூ.42 லட்சத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் செலுத்தியுள்ளது” என்றார். டெய்லர் அளித்த கட்டண ரசீதையும் செய்தி யாளர்களிடம் அவர் காண் பித்தார். இதனிடையே காங் கிரசின் குற்றச் சாட்டை  மறுத்துள்ளார் மத்தியப் பிரதேச பா.ஜ.க. மூத்த தலைவர் தீபக் விஜய் வர்ஜியா. மோடிக்கு கருப்புக்கொடி: திருச்சியில் கழகத்தினர் கைது 26.9.2013 அன்று திருச் சிக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு எதி ராக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார் பாக காலை 11.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கிய சாமி தலைமையில் கருப்புக் கொடி...

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இரு சக்கர வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா நிகழ்வுகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு குஞ் சாண் டியூரிலுள்ள சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மண்டல செயலாளர் அ.சக்தி வேல் மாலை அணி வித்தார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறைமுழக்கத்துடன் பேரணி ஆரம்பமானது. ஜஸ்டின்ராஜ் தொடக்கவுரையாற்றினார். சமத்துவபுரத்திலிருந்து இரு சக்கர வாகன பேரணி மல்லிகுந்தத்தை நோக்கிச் சென்றது. மல்லிகுந்தத்தில் தம்புசாமி கழகக் கொடியேற்றி இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் சிறப்பான காலை உணவை மல்லிகுந்தம் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேச்சேரி பேருந்து நிலையத்தில் சூரி கொடியை ஏற்றி வைத்தார். கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில்லில் அருள், நங்கவள்ளியில் இந்திரா, பனங்காட்டூரில் செந்தில் கழகக் கொடிகளை ஏற்றினர். குஞ்சாண்டியூரில் தியாகி திலீபன் வாகன நிறுத்தக உரிமையாளர் அருள் அனைவருக்கும் கேக் வழங்கினார். ஆர்.சி. பிளாஸ்டிக்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம்; சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பதவி பறிபோகும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தவறை, இப்போது நாம் சரி செய்கிறோம்.   – சட்ட அமைச்சர் கபில்சிபல் இப்போது நீங்கள் செய்த தவறை ராகுல் காந்தி சரி செய்துள்ளார். ராகுல் செய்த தவறுக்காக சோனியா, மன்மோகனை சரி செய்து வருகிறார். அட போங்கப்பா, நீங்களும் உங்க தத்துவமும்! முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காந்தி சிலைக்கு மரியாதை  செலுத்த வரும் பொது மக்களை தடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  – செய்தி காந்தி என்பவரும் ஒரு முக்கிய பிரமுகர் தான் என்பதை காவல்துறைக்கு புரியும்படி நன்றாக எடுத்துச் சொல்லி யிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. பரவாயில்லை, விடுங்கள். ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவிலிருந்து சுமார் 1350 தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.          – செய்தி இந்தத் தகவலையும் தகவல் உரிமை...

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கையில் உறுதி மிக்கவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேடைகளிலும் தோழர்களிடத்தும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டிருந்த வருமான தோழர் நீலவேந்தன், அருந்ததியருக்கு 6 விழுக்காடு உள் ஒதுக்கீடு கோரி திருப்பூர் பார்க் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தீ வைத்து, எரித்துக் கொண்டு உயிரா யுதமானார். 26.9.2013 அதிகாலை 2 மணி யளவில் திருப்பூரில் இந்த கோர சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. ‘தீக்குளிப்பு’ என்ற ‘உயிரிழப்பு’ சமூகப் போராளிகளுக்கு உகந்தது அல்ல என்பது நமது உறுதியான கருத்து. மேடைகளில் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளை அற்புதமாக பேசக் கூடிய ஒரு வலிமையான பேச்சாளரை செயல் வீரரை நாம் இழந்திருக்கிறோம். செய்தி அறிந்தவுடன் கழகப் பொரு ளாளர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், பல்லடம் மண்டல அமைப்புச் செயலாளர்  விஜயன், வெளியீட்டுச் செயலாளர் தமிழ்ச் செல்வி, மேட்டூர் மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேல், மற்றும் கோவை திருப்பூர் சேலம்...

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

மதச் சார்பற்ற நாட்டில் மத நிகழ்வுகளுக்கு அரசு அலுவலகங்களில் இடமிருக்கக் கூடாது. ஆனால், அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டக் கூடாது என்று அண்ணா முதல்வரானவுடன் தி.மு.க. ஆட்சியில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணைகள் மீறப்பட்டு, கடவுள் படங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. பல்வேறு மதத்தினரும், மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் பணியாற்றும் அலுவலகங்கள், கோயில்களாகவோ பஜனை மடங்களாகவோ மாற்றப்படக் கூடாது. இந்த நிகழ்வுகள் மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் பரப்புரைக்கு மறைமுக வழியமைக்கும் ஆபத்தும் அடங்கியுள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாட் டத்தை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி,அக்டோபர் 7 ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   – தலைமைக் கழகம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர். வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழனிச்சாமி, சரோஜா ஆகியோரின் தாயார் கு. பாவாயம்மாள் 4.10.2013 அன்று முதிர்ந்த வயதில் முடிவெய்தினார். அவரது சொந்த கிராமமான உக்கம்பருத்திக்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, சட்டமன்ற உறுப்பினர்கள் உ. தனியரசு, எஸ் .ஆர். பார்த்திபன் (தே.மு.தி.க.), தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுச் செயலாளர் வை.காவேரி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், வெளியீட்டு செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், செயலாளர்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

7.10.2013 அன்று அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகளை தடை அமுல்படுத்தக் கோரி காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு காலை 11 மணிக்கு கழகம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்களித்த பொறுப்பாளர்கள் இனியன், நேரு தாஸ் , பால முரளி, அன்ரூஸ் , பாலகிருஷ்ணன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40 தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசு உரையாற்றினார். வெண்பா முதலாம் ஆண்டு பிறந்த நாள் கோவை மாநகர மாவட்டக் கழகத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்–கிரிஜா இணையர் மகள் வெண்பாவின் முதலாமாண்டு பிறந்த நாள் (7.10.2013 அன்று) மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க.வும் இணைந்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும். போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க. தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழக மாவட்ட அமைப்பாளர் காளிதாசு, ம.தி.மு.க. மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார், தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூரில்...

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலத்தில் ஜாதி மத வெறி சக்திகள் தாக்க முயன்றதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலைக் கண்டித்து சென்னையில் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பார்ப்பனிய சக்திகள், சில ஜாதி வெறியர்களை சேர்த்துக் கொண்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம். பெரியார் இயக்கங்கள் பல்வேறு பெயரில் இயங்கினாலும் பெரியார்  கொள்கை பரப்புதலுக்கு தடை என்று வந்தால் அதை சந்திக்க களமிறங்கும். இதை பார்ப்பன சக்திகள் புரிந்து கொள்ளட்டும்! பெரியார் முழக்கம் 10102013 இதழ்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (செப்.22) மராட்டியத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக  பேராசிரியர் வசந்த் நடராசன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும்விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்ததெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் கால கட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ் பானிய விசாரணைகள் நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது. இப்போது ‘இஸ் லாமிய தீவிரவாதம்’ தலை தூக்கியிருப்பது, சிலர் குறிப்பிடுவதுபோல் வெவ் வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இஸ் லாம் மதத்துக்கும், கிறிஸ் துவ மதத்துக்கும் இடையிலான மோதல்தான். அதன்...

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்திட கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 13.9.2013 அன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதி தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பால். அறிவழகன் மற்றும் பல தோழர்களும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர். நாகர்கோயிலில் 13.9.2013 அன்று கழக சார்பில் கோயிலில் முடங்கிடும் தங்கத்தைப் பொருளாதார சீர்கேட்டை தடுப்பதற்குப் பயன்படுத்தக் கோரி நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வழக்குரைஞர் வே.சதா...

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

22.9.2013 அன்று உடுமலை மடத்துக்குளம் வட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரமாக நடைபெற்றது. விழாவிற்கு கழகச் செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையேற்றும், தமிழ்நாடு அறிவியல் மன்ற திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் இரா. மோகன் முன்னிலையேற்றும் நடத்தி வைத்தனர். முதலில் பெதப்பம்பட்டியில் காலை 10 மணிக்கு கு.கவிதா கொடியேற்றினார். தொடர்ந்து நால்ரோட்டில் உடுமலை வட்ட அமைப்பாளர் ப. குணசேகரன், உடுமலை குட்டைத் திடலில் பெரியார் பிஞ்சு சு.ம. தேனிலா, சுடரொளி, உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், மடத்துக்குளம் நால் ரோட்டில் சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் முகில்ராசு, கடத்தூர் புதூரில் தமிழ்நாடு அறிவியல் மன்ற கோவை மாவட்ட பொறுப்பாளர் விஜயராகவன், கடத்தூரில் சு. துரைசாமி, காரத்தொழுவில் மாவட்டச் செயலர் அகிலன், கணியூரில் தம்பி பிரபா ஆகியோர் கொடி யேற்றினர். மாலை 3 மணிக்கு...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரை மாநகராட்சி மரணச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இது குறித்து மேயர், ஆணையரிடம் அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.            – செய்தி விளக்கம் அளிப்பதற்கு முன்பு, மேயரும் ஆணையரும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை கையோடு எடுத்து வரச் சொல்லுங்கள்; கவனம்! நாட்டிலுள்ள ஏழைகள் நாணயமானவர்கள்; நம்பத் தகுந்தவர்கள்.        – ப. சிதம்பரம் ஆகவே நாணயமானவர்களை அதிகரிக்கச் செய்வோம்! அவர்கள் எண்ணிக்கை பெருகு வதற்கு நம்பத் தகுந்த ‘பட்ஜெட்’ போடுவோம்! இந்து கோயில்களை உண்மையான பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.                                                – இல. கணேசன் “இவர் உண்மையான பக்தர்தான்” என்று எந்தக் கடவுளாவது நற்சான்றிதழ் தர முன் வந்தால் பரிசீலிக்கலாம். காந்தியடிகள் சிலைக்கு இலவச மின்சாரம் அளிக்க விதிகளில் இடமில்லை.  – சேலம் மின்சார வாரியம் அறிவிப்பு நியாயம் தானே? காந்திக்கு என்ன ஓட்டா இருக்குது? எனக்கு இந்தி தெரியாது. ஆனால், திருச்சியில் மோடி பேசிய விதமும்...

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழ்நாட்டில் பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி உருவாக காய் நகர்த்தி வரும் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மோடியை நியாயப்படுத்தி, ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் எழுதிய கட்டுரைக்கு மறுப்புரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஜீ.வி.’க்கு எழுதிய மறுப்பு இது. 9.10.2013 அன்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கதர் ஆடையில் காவிக் கறை எதற்கு?’ என்ற தலைப்பில் அந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறு சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அக்கட்டுரையின் முழுமையான வடிவத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியாவில் அடுத்து அமையப் போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்று மலரப் போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராக இல்லை. தேர்தல் வழியாக மட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், “இந்தியாவின்...