இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது
திராவிட இயக்க வரலாற்றுப் பக்கங்களில் சேலம் பல முத்திரைகளைப் பதித்து நிற்கிறது. 1944இல் நீதிக் கட்சி – திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலத்தில் தான். 1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், இந்தியா முழுதும் பேசும் பொருளாகியது. இராமன் உள்ளிட்ட வேத மதக் கடவுள்களை ஊர்வலத்தில் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு; பெரியார் அஞ்சவில்லை. ஆம்; அப்படித்தான் செய்தேன்; சூத்திரனாக இருக்க மாட்டேன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொருவரும் இதைத் தான் செய்வார்கள் என்றார் பெரியார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இப்பிரச்சினையை முன்வைத்து காங்கிரசாரும் பார்ப்பனர்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. “நீங்கள் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள்; என் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது” என்று பெரியார், கலைஞருக்கு தந்தி மூலம் பாராட்டினார். தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு; வேத மரபு எதிர்ப்பு மாநாடுகளை திராவிடர் விடுதலைக்...
