கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

சேலம் : கோவில் வெள்ளாரை சேர்ந்த கழகத் தோழர் K. நாகராஜ் 22.01.2024 அன்று சாலை விபத்தில் முடிவெய்தினார்.

அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.  உடலுறுப்பு தானம் செய்வோரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தோழர் நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தோழரின் உடலுக்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜி, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெள்ளார் சுற்றுவட்டாரப் பகுதியில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...