Category: பெரியார் முழக்கம் 2016

சீமானின் அநாகரீகம்: பாண்டேயின் பார்ப்பனியத்துக்கு கழகம் கண்டனம்

‘தந்தி’ தொலைக்காட்சியில் மூத்த பொதுவுடைமைவாதி அருணனை ஒருமையில் இழிவாகப் பேசிய சீமானையும், இதை கண்டிக்காத ‘தந்தி’ தொலைக்காட்சி நெறியாளர் பாண்டேயையும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கை. ‘தந்தி’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நேரலை விவாதத்தில் பங்கு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன் வைத்த மூத்த பொதுவுடமைவாதி, எழுத்தாளர், பேராசிரியர் அருணனை அருவருக்கத்தக்க வகையில் தடித்த வார்த்தைகளால் பேசியது கண்டிக்கத்தக்கதாகும். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் போது அதற்கு தக்க பதிலை, தன் நிலைப் பாட்டை நாகரீகமாக வெளிப்படுத்துவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துக்கு தக்க பதில் சொல்ல இயலாத நிலையில் ஒரு மூத்த பொதுவுடமைவாதியை நோக்கி, ‘உனக்கு தத்துவம் என்ன உள்ளது?’ என கேட்பதும், ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசுவதும், மோசமாக...

JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரி குடியாத்தத்தில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ! 29.02.2016 அன்று மாலை மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரிஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக இரா.ப.சிவா. மா.பெ.பொ.கட்சியின் தோழர் சீனி.பழனி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் தோழர் சுந்தர், அம்பேத்கர் தொழிலாளர் இயக்கத்தின் தோழர் மேயர் சுந்தர், கழக தோழர்கள் பார்த்தீபன் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தோழர் கோடீஸ்வரன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்பு தோழர்கள் உள்பட 40 தோழர்கள் கலந்துகொண்டனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு திவிக சார்பில் மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு ! சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.. மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

கொலை மிரட்டல்: பா.ஜ.க. கல்யாணராமன் மீது கழகம் காவல்துறையில் புகார்

கொலை மிரட்டல்: பா.ஜ.க. கல்யாணராமன் மீது கழகம் காவல்துறையில் புகார்

பா.ஜ.க.வில் பொறுப்பாளராக இருக்கும் கல்யாணராமன் என்பவர் தனது முகநூலில் தொடர்ந்து வன்முறையை தூண்டி விட்டும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் மற்றும் கழகத்தினர், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 10.2.2016 பகல் 11 மணியளவில் எழுத்துபூர்வ புகார் ஒன்றை அளித்தனர். தேசியக் கொடியை எரித்து முகநூலில் படம் வெளி யிட்டதாகக் கூறி மகேந்திரன் திலீபன் என்ற இளைஞரின் கையை காவல்துறை உடைத்தது போல், கொளத்தூர் மணி கும்பலுக்கும் சீமானுக்கும் நடக்கும் என்று மிரட்டலுடன் அந்த நபர் பதிவிட்டிருந்ததையும் நகல் எடுத்து புகார் மனுவில் தோழர்கள் இணைத்திருந்தனர். பெரியார் முழக்கம் 18022016 இதழ்

சுயமரியாதை திருமணம் சட்டமான நாளில் ஜாதி மறுப்பு மணவிழா

சுயமரியாதை திருமணம் சட்டமான நாளில் ஜாதி மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட கழகத் தோழர் ம.மனோகர்-வி.ஜெயமாலா ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, 17.1.2016 அன்று மாலை 6 மணிக்கு சிசுவிஹார் சமூகநலக் கூட்டத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்க, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில், வழக்கறிஞர் அஜிதா வாழ்த்துரை வழங்கினார். சுயமரியாதை திருமணம், சட்ட வடிவம் பெற்ற நாள் ஜன.17 என்பதால் அந்த நாளை தேர்வு செய்து, மண விழா நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. மயிலை கழக செயல் வீரர் மனோகர், கழகம் நடத்திய போராட் டங்களில் பங்கேற்றவர். ஈழத் தமிழர் உரிமைகளுக்காக இந்திய அரசைக் கண்டித்து அஞ்சலகம் முன் தாக்குதல் நடத்தியதாக தொடரப் பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 7 மாதம் சிறையில் இருந்தவர். காஷ்மீர் உரிமைக்கான போராட்டத்தில் பங் கேற்று கழகத் தலைவருடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பார்ப்பனர் பூணூல் அறுப்பு வழக்கில் காவல் துறை தொடர்ந்த...

பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் படத்திறப்பு

பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் படத்திறப்பு

‘சமத்துவ சமூகம் அமைப்பதற்கு பெரியாரியல் ஒன்றே தீர்வு’ என வாழ்ந்து காட்டியவர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் என்று படத்திறப்பில் தூத்துக்குடி பால்பிரபாகரன் குறிப்பிட்டார். பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் அய்யா அவர்களின் படதிறப்பு நிகழ்ச்சி பேராவூரணி ‘மெய்ச்சுடர்’ இதழ் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்து உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், ‘மெய்ச்சுடர்’ இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ ஆயர் ஜேம்°, தமிழக மக்கள் புரட்சிக்கழக பொதுச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பெருந்தொண்டர் சதாசிவம், படத்தினை திராவிடர் விடுதலைக்கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் திறந்து வைத்து நினைவஞ்சலி உரையாற்றினார். அவர் தனது உரையில், “பட்டுக்கோட்டை வளவன் அய்யா அவர்கள் திருக்குறள் மீது ஆழ்ந்த பற்றுதல் கொண்டவராகத்தான் இருந்தார். அந்த திருக்குறள் போதித்த சமத்துவ சமூகம் அமைவதற்கு பெரியாரியல் ஒன்றே...

பல்கலை பாகுபாடுகளை ஒழிக்க தோரட் குழு தந்த பரிந்துரைகள் : மதுரை கருத்தரங்கில் விளக்கம்

பல்கலை பாகுபாடுகளை ஒழிக்க தோரட் குழு தந்த பரிந்துரைகள் : மதுரை கருத்தரங்கில் விளக்கம்

3-2-2016 அன்று மாலை 5-00 மணிக்கு, மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் துரைராஜ் பீட்டர் அரங்கத்தில், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில், ‘கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் ரோகித் வெமுலா வின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச்...

‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’ – கன்யா குமார்

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார் மாணவர்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்: எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸ். ஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களின் தேசபக்தியாகும். எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள் ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங்பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ. அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப் படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை யில்லை. எங்களுக்கு மனுஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்...

27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்பப்பட் டுள்ளது. இதை முழுமை யாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி (13.2.2016) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இட ஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறு வனங்களிலும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர், ஐ.ஏ.எஸ்., அகாடமியின் தலைவர் சங்கர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ் வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர்சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கி னார். நிறைவாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமது கண்டன...

நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால்பிரபாகரன் பேச்சு

நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால்பிரபாகரன் பேச்சு

அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி விசாரணைகேட்டும், நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்டச்சேரி தலித் முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டும், நீதிமன்றத்தை அவமதித்த நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும். விழுப்புரம் தனியார் கல்லூரியில் மரணமடைந்த மூன்று மாணவிகளுக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பிப்ரவரி 2ம் தேதி மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, திராவிடர் விடுதலைக் கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக்...

அறிவியலின் மகத்தான புரட்சி

அறிவியலின் மகத்தான புரட்சி

உலகம் ‘படைக்கப்பட்டது’; அப்படிப் படைத்தவன், எல்லாவற்றுக் கும் மேலான ‘இறைவன்’ இதுதான், அனைத்து மதங்களும் மக்களிடம் திணிக்கும் நம்பிக்கை! அறிவியல் வளர்ச்சியடையாத – அச்சத்தால் உருவாக்கப்பட்ட கடவுள், மதங்களின் கருத்துகள் ஒவ்வொன்றாக மடிந்து வீழ்ந்து வருகின்றன. அறிவியல் அனைத்துக்கும் விடைகளைத் தந்து வருகிறது. அதற்கான தேடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் – எப்படி உருவானது என்பதை ‘பெரு வெடிப்பு’ அறிவியல் கொள்கை யும், உயிர் எப்படி பரிணாமம் பெற்றது என்பதை டார்வின் கோட்பாடும் மனித குலத்துக்கு வழங்கிச் சென்றன. வானவெளியில் சூரியன், நட்சத்திரங்கள், கிரகங்கள், கோள்கள் பற்றிய ஆய்வுகள் தொடங்கின. இது வரை இந்த கண்டுபிடிப்புகள் வெளிச் சங்களாக பார்வையில் மட்டுமே தெரிகின்றனவாகவே இருந்தன. இப்போது அண்ட வெளியில் அதிர்வு களின் ஓசையைக் கேட்கும் மகத்தான கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளது. ‘சார்பியல் கோட்பாடு’ என்ற அறிவியல் கண்டுபிடிப்பை வழங்கிய அய்ன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோட்பாட்டை முன் வைத்தார். அது...

ஜாதிக்கு ஒரு சுடுகாடு! இது சமத்துவ நாடா? மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டம்

ஜாதிக்கு ஒரு சுடுகாடு! இது சமத்துவ நாடா? மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டம்

நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்ட சேரி தலித் மக்கள் மீதான ஜாதிய அடக்கு முறைகளை கண்டித்து ஜாதிக்கொரு சுடுகாடு! ‘இது சமத்துவ நாடா?’ என்கிற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்தியாவில் பிறக்கும் குடிமக்கள், பிறக்கும்போதே ஜாதி அடையாளத் துடன் தான் பிறக்கிறார்கள். நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்று மயானத்தில் நின்று பாடுவதாக பழைய சினிமா பாடல் ஒன்று உண்டு. ஆனால் நடைமுறையில் இறந்த பிறகும் ஜாதி அடையாளம் மக்களை விடுவதில்லை. மதம் மாறினா லும் அது நிழல் எனத் தொடர்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் சமத்துவ உரிமையை அடிப்படை உரிமை என பிரகடனப்படுத்துகிறது. தலித்துகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் கூட இந்தியாவில் தீண்டாமை கொடுமை பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருநாள்கொண்டசேரியில் தலித் முதியவர்...

இனிப்பு வழங்கி, கலை நிகழ்வுகளுடன் கொண்டாட்டம்

இனிப்பு வழங்கி, கலை நிகழ்வுகளுடன் கொண்டாட்டம்

காதலர் நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு காதலர் நாளான பிப்.14 – ஜாதி எதிர்ப்பு, பெண்ணுரிமை நாளாக கொண்டாடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்கள், காதலர் நாளை ஜாதி, மதம் கடந்த காதலை வரவேற்கும் நிகழ்வாக கூட்டங்கள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது. ஒரு சில ‘இந்து’ மதவாத அமைப்புகளும், இ°லாமிய அமைப்புகளும் காதலர் நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில ‘இந்து’ அமைப்புகள் காதலர் நாளில் ‘நாய்களுக்கும் கழுதைகளுக்கும்” திருமணம் நடத்துவதாகக் கூறி, அநாகரிகமான போராட்டங்களை நடத்துவது வழக்கம். இதற்கு பதிலடி தரும் வகையில் கழகத் தோழர்கள் கடற்கரையில் காதல் இணையர்களுக்கு இனிப்பு வழங்கி, காதலர் நாளை ஆதரித்து துண்டறிக்கைகள் வழங்கி வந்தனர். இதனால் கடற்கரைக்கு வரும் காதல் இணையர்களை அடிப்பது துன்புறுத்துவது போன்ற மதவாத அமைப்புகளின் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இவ்வாண்டு, சென்னை மாநகர காவல்துறை காதலர் நாளில்...

தேச பக்தியைக் காக்க ‘இரும்புத் தடி-124ஏ’

தேச பக்தர்கள், தேச பக்தியைக் காப்பாற்ற இரண்டு ஆயுதங்களைத் தூக்கி இருக்கிறார்கள். ஒன்று இரும்புத் தடி; மற்றொன்று தேசத் துரோக சட்டம்! திலீபன் மகேந்திரன் என்ற த.பெ.தி.க.வைச் சார்ந்த இளைஞர், தனது முகநூலில் தேசியக் கொடியை எரிப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டாராம். அவர் பொது இடத்தில் அதைச் செய்ய வில்லை. ‘இந்திய தேசியத்தின்’ துரோகத்துக்கு தனது எதிர்ப்பாக வெளியிட்ட ஒரு போராட்ட வடிவம் அவ்வளவுதான்! உடனே ‘தேச பக்தி’ பீறிட்டுக் கிளம்பிய சென்னை புளியந் தோப்பு காவல்துறை, தேசபக்திக்காக இரும்புத் தடியை தூக்கியது. அந்த இளைஞரின் கை விரல்களை உடைத்து, ‘தேச பக்தி’யையும் சட்டத்தை மதிக்கும் தனது ‘மாண்பையும்’ கேவலமாக வெளிப்படுத்தியது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், ‘தேசபக்தி’யைக் காப்பாற்ற கன்யாகுமார் என்ற பீகாரைச் சார்ந்த மாணவனை ‘தேசத் துரோக’ வழக்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவின் கீழ் கைது செய்திருக் கிறார்கள். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட...

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

இந்து கோயில்களில் நுழைவதற்கே ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ அனைவருக்கும் பார்ப்பனர்கள் தடை போட்ட காலம் ஒன்று இருந்தது. அதுவே ‘ஆகம விதி’ – அதுவே தெய்வீக நடைமுறை என்று இறுமாப்பு பேசினர். இந்த ‘ஆகமம்’, ‘அய்தீக’ பூச்சாண்டிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தான் பெண்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடவும் கோயில் ‘திருக்குளங்களில்’ நீராடவும் உரிமை வழங்கப்பட்டது. அதுதான் 1947ஆம் ஆண்டின் 5ஆவது சட்டமாகிய ‘ஆலய பிரவேச உரிமை’ சட்டம். ‘ஆகமம்’, ‘அய்தீகத்துக்கு’ எதிராக அப்படி ஒரு சட்டம் வராதிருக்குமானால், இப்போது கும்பகோணம் ‘மகாமகத்தில்’ முழுக்குப் போடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். சைவ மடாதிபதிகளுக்கே கூட அந்த உரிமை கிடைத்திருக்காது. கோயில் நுழைவு உரிமை கிடைத்தாலும்கூட கோயில் ‘கருவறை’க்குள் கடவுளை நேரடியாக வணங்குவதற்கோ அல்லது உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கோ ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ மற்றும் பெண்களுக்கு உரிமை கிடையாது என்று கூறி, பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தை விட்டுத் தர மறுக்கிறார்கள்....

வினா… விடை…!

வினா… விடை…!

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை தொடர்ந்து நீடிப்பார். – செய்தி ‘மேடம்’ பா.ஜ.க. தலைவராகக் கூட முடியும். ஆனால், அதன் தந்தை அமைப்பான ஆர்.எ°.எ°.சில் ஒரு உறுப்பினராகக்கூட முடியாது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் புகாரில் திருப்பதி தேவ°தான அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை. – செய்தி இதுவே எங்க தமிழ்நாடாக இருந்திருக்குமானால் ‘ஏழுமலையானிடம்’ முன் அனுமதி பெறாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சட்டம போட்டு தடுத்திருப்பாங்கய்யயா…. சீதையை காட்டிலேயே தங்குமாறு காரணமின்றி தண்டித்த இராமன், இலட்சுமணன் மீது நடவடிக்கைக் கோரி பீகார் நீதிமன்றத்தில் சந்தன்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. – செய்தி ‘இராமனு’க்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்காமலே தள்ளுபடி செய்யறது எந்த ஊரு நியாயங்க… ‘இராம’ பகவானை இப்படியெல்லாம் அவமரியாதை செய்யாதீங்க… அந்த காலத்து ‘அக்கிரகாரங்களை’ ‘தொல் பெருமை’ப் பகுதிகளாக அறிவித்து புதுப்பிக்கிறது கேரள அரசு. – ‘இந்து’ செய்தி...

சென்னை அமைந்தகரையில் கழகம் எடுத்த பொங்கல் விழா

சென்னை அமைந்தகரையில் கழகம் எடுத்த பொங்கல் விழா

சென்னை அமைந்தகரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் வேலு முன்னெடுத்து நடத்திய பொங்கல் விழா சிறப்புடன் நடந்தது. விழாவில் மறைந்த நடிகர் சிவாஜி, ‘பராசக்தி’ திரைப்படத்தில் பேசிய நீதிமன்றக் காட்சி வசனத்தினை கழகத் தோழர் ரவி மகன் ஆசிக் சிறப்பாக பேசினார். புதுச்சேரி முரசு கலைக் குழுவினரின் பறையாட்ட இசை மற்றும் நமது தோழர்களின் துள்ளாட்டம் நடைபெற்றது. பெரியார் முழக்கம் 11022016 இதழ்

காந்தி படுகொலை ஆவணப்படம் வெளியீடு

காந்தி படுகொலை ஆவணப்படம் வெளியீடு

காந்தி படுகொலை குறித்து ஆவணப் படம் வெளியீடும், அதன் ‘உண்மை-பின்னணி’ என்ற தலைப்பில் கருத்தங்கமும் எஸ்.டி.பி.அய். கட்சி சார்பில் 3.2.2016 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எ°.எம். தெகலான் பாகவி ஆவணப்பட குறுந்தகட்டை வெளியிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கட்சியின் மண்டல செயலாளர் ஏ.கரீம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பொதுச் செயலாளர் சேக் முகம்மது அன்சாரி ஆகியோர் பேசினர். விடுதலை இராசேந்திரன், ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமாக பெண்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11022016 இதழ்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (11) தொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (11) தொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி. வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி தமிழகம் தனி நாடாகக் கூடாது என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார், ம.பொ.சி. அயல்நாட்டு உதவி?: “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடிய வில்லையே! கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்…… என்ன இருக்கிறது?: தமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற...

ரோகித் மரணத்திற்கு நீதிக் கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்

அய்தராபாத் பல்கலை தலித் ஆராய்ச்சி மாணவர் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. தூத்துக்குடியில் – பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு தலைமை உரையைத் தொடர்ந்து, ம.தி.மு.க.வின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ளுனுஞஐயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன் கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி...

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

அய்.நா. மனித உரிமை ஆணையர், சையத் அல் உசேன், கடந்த வாரம், தமிழ் ஈழப் பகுதிகளுக்கு நேரில் சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், தமிழர் அமைப்பினரையும் நேரில் சந்தித்திருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரும் அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேசுவரன், ஆணையரை சந்தித்து சிங்கள அரசால் நீண்டகாலமாக சிறைபடுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட இனப்படுகொலையின்போது ‘காணாமல்’ போனவர்களின் உறவினர்கள் அவர்களின் உருவப் படங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் ‘நலன்புரி நிலையம்’ என்ற உதவி மய்யத்தில் தமிழர்களை ஆணையர் சந்தித்துள்ளார். அப்போது போரில் பாதிப்புற்று, சொந்தப் பகுதிகளுக்கு திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்கள், “எங்களுக்கு விமான நிலையமும் வேண்டாம்; துறைமுகமும் வேண்டாம்; எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்திடமிருந்து மீட்டுத் தாருங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும், நேர்மையான மறுவாழ்வுக்கும் இலங்கை அரசுக்கும்...

பிப்.14 உலக காதலர் நாள் உயர்ந்த காதல் எது?

உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” – குடிஅரசு 21.7.45 நண்பர்களாகப் பழகி புரியுங்கள்! “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக் கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான்...

சிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

  பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நீண்டகால சிறைவாசிகளையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட் டோரை அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை பிப்ரவரி 7ஆம் தேதியன்று நடத்தியது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிப்ரவரி 7ம் தேதி மாலை 4 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஐதர்அலி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, மனித உரிமை அமைப்பு சார்பில் ஹென்றி டிபேன், புகழேந்தி, அருண்சோரி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், “இந்த நாட்டை ஒரு ஜனநாயக...

திலீபன் மகேந்திரன் கையை முறித்த காவல்துறைக்கு கழகம் கடும் கண்டனம்

இந்திய தேசியக் கொடியை எரிக்கும் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரனை காவல்துறை கைது செய்து, அவரது கையையும் மூன்று விரல்களையும் இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறது. கொடி எரிப்பு அவமதிப்பு என்றால், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரட் டும். ஆனால், காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக கையை உடைக் கும் அளவுக்கு போயிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம், காவல் துறையின் இந்த செயலை வன்மை யாகக் கண்டிக்கிறது. கடந்த 6ஆம் தேதி மயிலாடுதுறையில் “ஜாதிக் கொரு சுடுகாடு; இது சுதந்திர நாடா?” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் இந்த செயலுக்காக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினார். சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் இந்த வன்முறை வெறியைக் கண்டித்து, கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்தை...

மாநாட்டில் நன்கொடை

மாநாட்டில் நன்கொடை

தருமபுரி மாவட்டம் , பாலக்கோடு வட்டம், மேக்கனாம்பட்டி சு. வெங்கடேசன்-அ.வாசுகி இணையரின் மகள் இசைப்பிரியாவின் முதலாம் ஆண்டு (6.2.2016) பிறந்த நாள் மகிழ்வாக, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையாக சங்கராபுரம் கழக மாநாடு மேடையில் பொதுச் செயலாளரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 04022016 இதழ்

வினா… விடை…!

வினா… விடை…!

உயர்நீதிமன்றத்தின் 1200 நீதிபதிகளில் பட்டியல் இனப் பிரிவினர் 18 பேர் மட்டுமே. – செய்தி இந்த 18 பேர் எப்படி வர முடிந்தது என்பதை கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனைப் போடாமல் இருந்தால் சரி. பழ. கருப்பையா அ.இ.அ.தி.மு.க.விலிருந்து நீக்கம். – செய்தி அந்த கட்சி வரலாற்றில் முதுகெலும்போடு எதிர்ப்புக் குரல் கொடுத்து அதற்காகவே நீக்கப்பட்ட முதல் மனிதர். எனவே இது ‘சாதா’ நீக்கமல்ல; ‘புரட்சி’ நீக்கம்! ‘கும்பகோணம்’ என்ற சொல்லுக்கு ‘ஏமாற்றுதல்’, ‘மோசடி’ என்று 19ஆம் நூற்றாண்டு ஆங்கில அகராதியில் கூறப்பட்டிருந்தது. – ‘தமிழ் இந்து’ செய்தி ‘கும்பகோணம்’ மடத்தை ஆதிசங்கரர் மடம் என்று சங்கராச்சாரி ஏமாற்றியதால் அப்படி ஒரு அர்த்தம் வந்தது என்பதே அர்த்தத்துக்குள் அடங்கியுள்ள அர்த்தம் என அறிக! நடிகை ஹேமமாலினி நாட்டியப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.70,000-த்துக்கு மகாராஷ்டிர பா.ஜ.க. அ ரசு வழங்கியது. – செய்தி இது ரொம்பப் பழசு....

புரட்சிப் பெரியார் முழக்கம் வங்கி கணக்கு

புரட்சிப் பெரியார் முழக்கம் வங்கி கணக்கு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041 ifsc kvbl0001257 பெரியார் முழக்கம் 04022016 இதழ்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (10) நடுவண் அரசின் எதிர்ப்புக்கு அஞ்சிய ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (10) நடுவண் அரசின் எதிர்ப்புக்கு அஞ்சிய ம.பொ.சி. வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி “பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக் கிடையே நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை! மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்பு களில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு. காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வை யில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு. சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு. காமராசரிடமிருந்த “பக்தி (?)” யே விஞ்சியிருந்தது. “வடக்கெல்லை – தெற்கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களுக்கும், பேட்டிகளிலோ மத்திய அரசைக்...

மரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை குப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன

மரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை குப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜாதிக் கலப்புத் தடுக்கப்பட்டு உயர்ஜாதியினரின் ஆதிக்கத் திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது என மரபணு தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இனக் குழுக்களாக இருந்த சமூகங்கள் எப்போது சாதி அடையாளம் உள்ளவையாக மாறின? சுமார் 70 தலைமுறைகளுக்கு முன்னதாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக சாதிக் கலப்பு தடுக்கப் பட்டு ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயே திருமணம் மேற்கொள்ளப்பட்டு (அகமண முறை) ஜாதி அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்பெற்றதாக மாறியது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்காக 20 இனங்களைச் சேர்ந்த பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 367 தனி நபர்களின் மரபணுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக் கான மாதிரிகள் ஜாதிவாரியாகவும் மொழிவாரி யாகவும் நிலவியல் வேறுபாடுகளை கவனத்தில் கொண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. குஜராத், மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களும் மராத்தியர்களும் திராவிடச் சமூகங்களைச் சேர்ந்த பள்ளர், இருளர்...

‘காட்டாறு’ இதழ் குழு: ஒரு முக்கிய அறிவிப்பு

‘காட்டாறு’ மாத இதழ் கழகத்தின் அதிகாரபூர்வமானது அல்ல என்று ஏற்கெனவே அறிவித்துள்ளோம். அந்த இதழோடு தொடர்புடைய தோழர்கள் பொள்ளாச்சி விஜயராகவன், தாமரைக் கண்ணன், இராவணன், பல்லடம் விஜயன் – கழகத்தின் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும், ஆனால், கழகத்தில் உறுப்பினர்களாக தொடர்வதாகவும் எழுத்து மூலம் தலைமைக்கு தெரிவித்திருந்தனர். ஆனால், கழகத்தின் செயல் திட்டங்களில் இணைத்துக் கொள்ளாமல் அவற்றை விமர்சித்து, தங்களுக்கான தனி செயல் திட்டங்களோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கழக உறுப்பினர்களாக நீடிப்பதிலிருந்தும் அவர்களாகவே விலகிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி விலகிக் கொள்ளாமல், கழக உறுப்பினர்கள் என்று கூறிக் கொண்டே கழக செயல் திட்டங்களோடு முரண்பட்டு செயல்படுவது அமைப்பில் குழப்பங்களை உருவாக்கும் முயற்சிகளேயாகும். கழக செயலவை யிலும் தோழர்கள் பலரும் இதை சுட்டிக் காட்டினர். எனவே, ‘காட்டாறு’ இதழோடு தங்களை நேரடியாக இணைத்துக் கொண்டு தங்களுக்கான தனித்த செயல் திடடங்களோடு செயல்படும் தோழர்கள் திராவிடர் விடுதலை கழகத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிக்க...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (9) ஒரே ஆண்டில் மரணித்த ம.பொ.சி.யின் ‘தமிழ்த் தேச விடுதலை’ – வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (9) ஒரே ஆண்டில் மரணித்த ம.பொ.சி.யின் ‘தமிழ்த் தேச விடுதலை’ – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி ம.பொ.சி.தான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் ‘தமிழன் குரல்’ நூல்களி லிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம், உண்மை தான், ம.பொ.சி. அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சி.யை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சி.யே எழுதியுள்ளார். “பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருதுநகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெற விருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில்பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில்...

வினா… விடை…!

வினா… விடை…!

தமிழக சட்டப் பேரவை நான்கு நாள் மட்டும் நடந்தது. – செய்தி போதும்; போதும்; வெள்ளப் பாதிப்பு காலத்தில் ‘மேஜை தட்டும் திருவிழாக்களை’ இதற்குமேல் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. அமித்ஷா – பா.ஜ.க. தலைவராக இரண்டாவது முறையும் நீடிப்பார். – செய்தி டெல்லி, பீகார் பேரவை தேர்தல் முடிவுகளையே தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்து சேர்த்து சீரிய தொண்டாற்ற நாமும் வாழ்த்துகிறோம்! ரோகித் வெமுலா ‘தலித்’ இல்லை. – பா.ஜ.க. கண்டுபிடிப்பு சரி; அப்படியே வச்சிக்குவோம். அவரு ஒரு ‘இந்து’ தானே; ஒரு இந்துவுக்கு ‘இந்து தேசத்தில்’ இந்த நிலை வரலாமா? கும்பமேளாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி. – உளவுத்துறை எச்சரிக்கை எனவே, கும்பமேளாவுக்கு முழுக்குப் போட வருவதை தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பக்தி செலுத்துமாறு பக்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறப்பு உணவுகளுடன் நடந்து வரும் இந்து கோயில் யானைகள் புத்துணர்வு முகாமுக்குள் ஊடுருவ முயன்ற காட்டுயானைகளை வனத்துறை விரட்டி அடித்தது....

தந்தை பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள்

24-12-2015 அன்று திருச்சி மாவாட்டம் மணப்பாறை பகுதியில் தந்தை பெரியார் 42வது நினைவு நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு மூத்த பெரியார் தொண்டர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெரியார் பெருந் தொண்டர் சேகர் முன்னிலை வகுத்தார். கழகத் தோழர்கள் ஆசிரியர் தியாகுசுந்தரம், மகராஜா, சி.இரா. ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த தங்கராசு, மகராஜா, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனபால் சிறப்பாக சுவரொட்டிகள் ஒட்டி நிகழ்வினை ஒருங்கினைத்திருந்தார். பகுதியில் புதியதாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்தமைக்காக மூத்த பெரியாரியல் தோழர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தந்தை பெரியாரின் 42ஆவது நினைவு நாள் அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலைக்கும் இராயபேட்டை, மந்தைவெளியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. களப்பணியாற்றிய போது விபத்தில் உயிர் நீத்த கழகச்...

உற்சாக உணர்வலைகளோடு நடந்த கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் திருச்சியில் கரூர் புறவழிச் சாலையிலுள்ள இரவி ‘மினி ஹாலில்’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கியது திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி, கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். முடிவெய்திய கழகத் தோழர் மல்ல சமுத்திரம் கண்ணன், மூத்த பெரியார் தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம், ரோகித் வெமுலா ஆகியோர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, நிகழ்ச்சிகள் தொடங்கின. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக கடந்த ஜூலை மாதம் நடந்த தர்மபுரி செயலவைக்குப் பிறகு, கழக நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கழகக் கொள்கைகளை வெகு மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு...

பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...

“நான் பிறந்த ஜாதிதான் எனக்கு மோசமான விபத்து” – ரோகித் வெமுலா

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! ‘ஏகலைவன்’ என்ற ஆதிவாசிக்கு ‘துரோணாச்சாரி’ என்ற பார்ப்பன குரு வில்வித்தை கற்றுத் தர மறுத்தான். ஏகலைவனோ, துரோணாச்சாரி உருவத்தை செய்து, அதையே குருவாகக் கருதி வித்தையைக் கற்றுத் தேறினான். உண்மை அறிந்த துரோணாச்சாரி, “கீழ் ஜாதிப் பயலே; வில்வித்தை கற்கும் உரிமை உன் குலத்துக்குக் கிடையாதுடா! குருதட்சணையாக உன் கட்டை விரலை வெட்டித் தா” என்று கேட்டான். ஏன் தெரியுமா? கட்டை விரலை வெட்டி விட்டால் வில்லிலிருந்து அம்புகளை விடவே முடியாது அல்லவா? இது வரலாறு அல்ல; ஆனால் புராணக் கதைகளின் வழியாக பார்ப்பனர்கள் சமூகத்துக்கு உணர்த்தும் பாடம்! ‘ஏகலைவன்’கள் கதை முடிந்துவிட்டதா? இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பன துரோணாச்சாரிகளின் வாரிசுகள் அய்.அய்.டி., அய்.அய்.எம்., அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், மத்திய பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை இன்றும்...

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

பழமைச் சிந்தனை – ஜாதியம் – பெண்ணடிமையோடு இணைந்து நிற்கும் மரபுகளை தமிழர் மரபுகளாக முன் வைக்கப்படும்போது அது வெகு மக்களின் உணர்வாக மாற்றம் பெற்றுவிடுகிறது. அதிலே ஒன்றுதான் ஜல்லிக் கட்டு. மனித உயிர்களுக்கு ஆபத்துகளை உருவாக்கும் போட்டிகளுக்கு எல்லாம் தடை விதித்து விட்டார்களா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். நாம் தரும் விளக்கம் இதுதான். எந்த ஒரு போட்டியும், போட்டியில் பங்கேற்கும், இரு தரப்பு ஒப்புதலுக்குப் பிறகுதான் அரங்கேறுகிறது. இந்தப் போட்டியில் காளைகளின் சம்மதம் பெறப்பட்டதா? அந்த மாட்டுக்கு தங்களை ஒரு போட்டிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்பது புரியுமா? ஒரு மாடு ஆவேசமடைவதற்கு அடிப்படை, அது அச்சமூட்டப்படுவதால் மட்டுமே, அச்சத்தினால்தான் மிரண்டு ஓடுகிறது, காளை. அது சரிசமமாகப் போட்டிக் களத்துக்கு வந்து, என்னை அடக்கிப் பார் என்று சவால் விட்டு பிடரியை சிலிர்த்துக் கொண்டு நிற்கவில்லை – காளைகளின் இந்த அச்சம் மிக மோசமான வதை. இந்தப் போட்டியில்...

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூரில், இந்திய வரைபடம் மாட்டப்பட வில்லை. அங்கே மாட்டப்பட்டிருப்பது, ‘அகண்ட பாரதத்தின்’ வரைபடம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை ஒரே தேசமாக சித்தரிக்கிறது, அந்த வரைபடம். இந்தியாவின் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தின்போது உலகப் புகழ் பெற்ற அல் அஜிரா தொலைக்காட்சி, பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராம் மாதவ் என்ற பார்ப்பனரின் பேட்டியை ஒளி பரப்பியது. ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இறையாண்மை கிடையாது. அது இந்தியாவின் பகுதி’ என்று கூறி, அகண்ட பாரதத்தை நியாயப் படுத்தினார் இராம் மாதவ். ‘அகண்ட பாரத்’ என்ற ‘பாரத் வர்ஷா’ – கற்பனை உணர்வு அல்ல. இந்தியாவின் எல்லைகள் ‘பாரத் வர்ஷாவாக’ விரிவடைய வேண்டும் என்பதே தங்களின் இலட்சியம் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். (இந்தியாவில் ‘தேசிய’ ஏடுகள் எதுவும் இந்த  பேட்டிச் செய்தியை வெளியிடவில்லை) இந்து ‘பாரத் வர்ஷா’ கொள்கையை 1934இல்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (7.1.2016 இதழ் தொடர்ச்சி) வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதைக் கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர இராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்த பிராந்தியங்களில் வசிக்கின்ற பெரும் பான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் (ஹளளநஅடெல) என் நண்பர் விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல,...

பார்வதி ‘மேனன்’ பார்வதியாகிறார்!

பார்வதி ‘மேனன்’ பார்வதியாகிறார்!

தமிழ்த் திரைப்பட உலகை இப்போது பல மலையாள நடிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ‘பார்வதி மேனன்’ என்ற ஜாதி அடையாளத்தோடு வந்தார். அண்மையில் ஒரு தமிழ் நாளேடு, இது குறித்து அவரிடம் கேட்டது. “தமிழ் நடிகைகள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவது இல்லை. இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் மட்டும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் பயன்படுத்துகிறார்களே? என்பது கேள்வி. அதற்கு அந்த நடிகை இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்: “ஜாதி ஒரு பெருமையான விஷயம் கிடையாது. அதனால் எந்த மதிப்பும் வரப்போவது இல்லை. ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் என் பெயரிலிருந்து ஜாதி பெயரை நீக்கி விட்டேன். என் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களில் மேனன் என்ற வார்த்தை கிடையாது. படங்களின் ‘டைட்டில்’களில் (பெயர் அறிவிப்புகளில்) பார்வதி என்றே குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். எதிர் காலத்தில் என் குழந்தைகளுக்குக்கூட பள்ளிக்கூட...

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களில் ‘ஜாதி ஒடுக்குமுறை களுக்கு முன்னுரிமை தரப்படும்’ என்ற கருத்தை, பிரகாஷ் காரத், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒரு திருப்பம். இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரச் சுரண்டல் – சமூக ஒடுக்குமுறை என்ற இரண்டு பிரச்சினை களையே மய்யம் என்று தீர்மான நகல் கூறுகிறது. சமூக ஒடுக்குமுறை என்று பார்த்தால் பெண்கள், தலித், பழங்குடி யினர் மற்றும் மத அடிப்படையிலான மைனாரிட்டிகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் என்று சீத்தாராம்யெச்சூரி விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில், ஜாதி அமைப்புக்கு எதிரான கருத்தியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக்கப்படவில்லை.  ஜாதிய பாகுபாடுகள் – ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே நகல் தீர்மானம் பேசுகிறது. இன்னும் ஒரு நிலைக்கு மேலே போய் சீத்தாராம் எச்சூரி, கட்சியின் நிலையை இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்கிறார். “பொருளாதார அதிகாரத்தை...

தலையங்கம் ‘ரோகித்’களை காவு கேட்கும் ஜாதிவெறி!

படிக்கக் கூடாத கூட்டம் என்ற ‘மனு’ சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட சமூகம், சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து, உயர் கல்வி வரை எட்டிப் பிடிக்கும்போது அங்கும் ஜாதியம், அவர்களின் உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ‘பாரத சமூகத்தின்’ பார்ப்பன ஜாதி தர்மம்! நெஞ்சு பதறுகிறது. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் சமூகக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜாதி வெறி கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது தனது உயிரைப் பலியிட்டுக் கொண்டார். பார்ப்பன ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் ‘தலித்’ மாணவர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் பலரும் இந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிடக் கூடாது என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘சங்பரிவார்’ மாணவர் அமைப்பான ‘வித்யார்த்தி பரிஷத்’ உயர்கல்வி வளாகங்களில்...

பெங்களூரில் கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழா மாட்சி

கருநாடக மாநில திராவிடர் விடுதலைக் கழகம், பெங்களூர் சித்தார்த்த நகரில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 17.1.2015 அன்று நடந்த விழாவில் தோழர் வே.மதி மாறன் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று உரையாற்றினார். விழாவுக்கு சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தோழர்கள் சரவணன், இராமநாதன், சிவக்குமார், இலட்சுமணன், ‘கற்பி-ஒன்றுசேர்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் ஜார்ஜ், நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். வே. மதிமாறன் தனது உரையில், தமிழருக்கான புத்தாண்டு தை முதல் நாள்; சித்திரை அல்ல என்பதை ஆதாரங்களோடு எடுத்து விளக்கி, பெரியார்-அம்பேத்கர், ஜாதி இந்து மத பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை விரிவாக விளக்கி உரையாற்றினார். கழகத் தோழர் இல. பழனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 21012016 இதழ்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...

ஓம் சிவாய நம!

ஓம் சிவாய நம!

அது, 15,000 விஞ்ஞானிகள் கூடியிருந்த மாநாடு. நடந்த இடம் மைசூரு பல்கலைக்கழகம். உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கூடியிருந்தார்கள். பல ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. அதிலே ஒன்று விஞ்ஞானிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது. சிரித்து சிரித்து வயிறு ‘புண்’பட்டு விட்டது என்றுகூட சொல்லலாம், போங்க! “உலகத்திலேயே தலைசிறந்த சுற்றுச்சூழல்வாதி யார் தெரியுமா? எங்கள் சிவபெருமான்தான்” – இப்படி ஒரு ‘ஆராய்ச்சி’யை அள்ளிவிட்டு அகிலத்தையே குலுங்க வைத்திருப்பவர் அகிலேஷ் பாண்டே என்ற பார்ப்பனர். மத்திய பிரதேசத்தில் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியரான அவர் தனது கடுமையான ஆராய்ச்சியின் வழியாக கண்டறிந்த அரிய தகவல்கள் இதோ! “சிவபெருமான் தலையில் கங்கை இருக்கிறது; அந்த கங்கை நீரை சுத்தப்படுத்தும் வேலையை சிவபெருமானே செய்கிறார். சுத்தப்படுத்தியதோடு நிற்கவில்லை; அந்த நீரை மக்களுக்கும் உயிரினங்களுக்கும் விநியோகம் செய்தவரும் அவர்தான். இவரைவிட சிறந்த ஒரு சுற்றுச் சூழல்வாதி யார் இருக்க முடியும்?” 15,000 விஞ்ஞானிகள் நிறைந்த சபையில் இப்படியெல்...

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார்

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார் வாழ்வின் இறுதி வரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து காட்டிய ”தாதம்பட்டி இராஜூ”, தனது 94ஆவது வயதில் சென்னையில் 19.01.2016 அன்று காலை முடிவெய்தினார்.. தாதம்பட்டி இராஜூ, தந்தை பெரியாரின் மூத்த சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மருமகன் ஆவார். ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் செல்லா என்ற நாகலட்சுமியை திருமணம் செய்து கொண்டவர். செல்லா,மறைந்த ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி ஆவார். இளம் வயதில் கப்பற்படையில் பணியாற்றிய அவர், 1946இல் நடந்த கப்பற் படை எழுச்சிப் போராட்டத்தில்பங்கேற்றார். பிறகு, பெரியார் வாழ்ந்த காலத்தில் ‘விடுதலை’ நாளேட்டின் அலுவலக மேலாளராக 10 ஆண்டு காலம் பணிபுரிந்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக வடமாநிலத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிட தோழர் வே.ஆனைமுத்து அவர்கள், வடமாநிலங்களுக்கு சென்றபோது, அவருடன் சென்றவர்களில் ஒருவர் தாதம்பட்டி இராஜு.ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். வயதுமுதிர்ந்த நிலையிலும் இளைஞரைப்போல் தமிழகம் முழுதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது வழக்கம். 2003ஆம்...

பட்டுக்கோட்டை சதாசிவம் இறுதி நிகழ்வு

19.01.2016 அன்று முடிவெய்திய தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அய்யா அவர்களின் இறுதி நிகழ்வு 20.01.2016 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. 20.01.2016 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழக தோழர்கள்,திராவிடர் கழகம்.தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தி.மு.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது.அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன்,திருவாரூர் மாவட்ட தலைவர் ராயபுரம் கோபால்,பகுத்தறிவாளர்கழகத்தின் தரங்கை சா.பன்னீர் செல்வம்,பட்டுக்கோட்டை அண்ணாதுரை, இராம.அனபழகன்,மாங்காடு மணியரசு,சின்னத்தூர் சிற்றரசு, தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,ப.சு.கவுதமன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,ஈரோடு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மேட்டூர்...

வினா… விடை…!

வினா… விடை…!

பழனி கோயிலில் பக்தர் தூக்கு போட்டு தற்கொலை; 2 ஊழியர்கள் பணி நீக்கம். – செய்தி என்னுடைய சாவுக்கு பழனி முருகன் தான் முழு காரணம்னு அந்த பக்தர் கடிதம் எழுதி வச்சிருந்தாருன்னா, அப்ப யாரை பணி நீக்கம் செய்வீங்க… சென்னை அயனாவரத்தில் உள்ள கோயிலுக்குள் வழிபட வந்த இந்து முன்னணி பிரமுகரின் தங்க சங்கிலி திருட்டு. – செய்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவரும் தங்க நகை அணியக் கூடாது; பாதுகாப்புக்காக கவரிங் நகைகள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு தீர்ப்பை பெற்று விடலாமே! யோசிங்க…. ‘இராமாயணம்’ ஒரு புனித நூல்; அந்தப் பெயரை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு ஆனால், அரசியல் மற்றும் தொலைக்காட்சி வர்த்தகங்களுக்கு இராமாயணத்தைப் பயன்படுத்தலாம். இது ‘பழக்க வழக்கம்’ என்பதால் நீதிமன்றம் தலையிடவே முடியாது. இராமரின் தயவினால் ஆட்சிக்கு வந்த மோடி, உடனே இராமன் கோயில் கட்ட தேதி அறிவிக்க...

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன், தோழர்கள் குமார், செல்லத்துரை, பிரபாகரன், சந்திரசேகர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 14012016 இதழ்

திருச்சியில் கழக செயலவை கூடுகிறது

திருச்சியில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 24.1.2016 ஞாயிறு காலை 10 மணிக்கு திருச்சியில் கூடுகிறது. செயலவை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்கக் கோருகிறோம். இடம்: இரவி மினி ஹால், கரூர் புறவழிச் சாலை, திருச்சி. (கலைஞர் அறிவாலயம் அருகில்) பொருள் : கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் – கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல், புரட்சிப் பெரியார் முழக்கம் உறுப்பினர் சேர்க்கை. தோழமையுடன் கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 14012016 இதழ்