Author: admin

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

தூக்குத் தண்டனைக்குள்ளாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு முழு ஆயுள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன். பெரியார் இலட்சியங்களில் ஊன்றி நின்று, திராவிடர் விவசாய சங்கத்தை அப்பகுதியில் வழி நடத்தி, பிறகு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தன் மீது திணிக்கப்பட்ட ‘முக்கொலை’ பொய் வழக்கில் அரசு அதிகாரத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகி மீண்டும் திராவிடர்கழகத்தில் இணைந்து விவசாய சங்கத்தை வழி நடத்தி, இறுதியில் தமிழர் தன்மானப் பேரவையைத் தொடங்கி, 84ஆம் அகவையில் முடிவெய்தினார், தோழர் ஏ.ஜி.கே.! தங்களை  விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய களப்போராளிகள். ஏ.ஜி.கே.வை சமூகப் போராளியாக்கிய இளம்பருவ அனுபவங்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் முயற்சி – உழைப்பால் வெளி வந்திருக்கும் ‘ஏ.ஜி. கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலிலிருந்து சில பகுதிகள்: நாகையை அடுத்த அந்தணப்பேட்டை  வயல்களால் சூழப்பட்ட இருண்ட கிராமம். சேறு, சகதியாகிக் காயக்கூடிய மண்பாதை. சில ஒற்றையடிப் பாதைகள். இருட்டு ஆரம்பித்தால்...

கருத்தரங்கம்: ஈழம்… தொடரும் துயரமும்; நமது கடமையும்!

நாள் 25-09-2016 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கவிக்கோ மன்றம், சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை. தலைமை: பேராசிரியர் சரசுவதி, கருத்தாளர்கள்: பேராசிரியர் மணிவண்ணன், அருட்தந்தை குழந்தைசாமி, விடுதலை இராசேந்திரன், தியாகு. சிறப்புரை: மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன். நன்றியுரை: த.தமிழினியன் நிகழ்ச்சித்தொகுப்பு: முகேஷ் தங்கவேல் நிகழ்ச்சி ஏற்பாடு: நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் தொடர்புக்கு: +91 9444145803, +91 9751524004 தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

“படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க” என்று தோழர் ‘ஏ.ஜி.கே’ வின் முழக்கத்தை முன் வைத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 4ஆம் தேதி பகல் 11 மணியளவில் அவரது சொந்த கிராமமான நாகை அந்தணப் பேட்டையில் நடந்தது. முன்னதாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. தோழர் ஏ.ஜி.கே. எனும் அ.கோ. கஸ்தூரிரங்கன் படத்தை தோழர் தியாகு திறந்து வைத்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், தோழர் மணியரசன் மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், முடிவெய்திய தோழர் ‘ஏ.ஜி.கே.’ அர்ப்பணிப்பு, போர்க் குணம், மனித நேயம், போராட்ட வடிவங்கள், கீழத் தஞ்சை மாவட்டத்தில் ஜாதி – பண்ணையடிமை ஆதிக்கத்தை ஒழிப்பதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினர். ஏ.ஜி.கே. அவர்களின் மகள் வழக்கறிஞர் கல்பனா நன்றி கூறினார். மன்னை காளிதாசு, மயிலாடுதுறை இளையராசா, சாக்கோட்டை...

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

தொலைக் காட்சிகளில் பேய், பில்லி, சூன்யம், திகில், குரங்குக் கதைகள் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. சிறிதும் சமூகப் பொறுப்பின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற கொள்கைகளுக்கு எதிராக நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வருகின்றன இந்த தொலைக்காட்சிகள் பற்றி மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 1850 புகார்கள் பார்வையாளர்களிடமிருந்து குவிந்துள்ளன. இதில் 1250 புகார்கள் இந்த மூடநம்பிக்கை நிகழ்ச்சிகள் தொடர்பானவை. மற்றவை ஆபாசம், வன்முறை தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றிய புகார்கள். இது வரை ஆபாசம், வன்முறை பற்றிய புகார்கள் மட்டுமே அதிகம் குவிந்த நிலை மாறி, இப்போது மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகார்கள் முதல்முறையாக அதிகரித்துள்ளன. தொலைக்காட்சிகள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக ‘ஒளி பரப்புகள் உள்ளடக்கத்துக்கான புகார் கவுன்சில்’ (பிசிசிசி) என்ற அமைப்பு உள்ளது. மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகம் இந்த புகார்களை மேற்குறிப்பிட்ட அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ‘பிசிசிசி’...

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

இந்தியாவிலேயே ஜாதிய மோதல்கள் நடப்பதில் இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்து விட்டது. இது தமிழகத்துக்கே அவமானம். தேசிய குற்றப் பதிவு ஆவணம் (நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) 2015ஆம் ஆண்டுக்கான  அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜாதிய மோதல்கள் நடப்பதில் முதலிடத்தில் உ.பி.யும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் பீகாரும், நான்காவது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் இடம் பிடித்துள்ளன. 2015இல் தமிழகத்தில் 426 ஜாதிய மோதல்கள் நடந்துள்ளன. உயிரிழந்தோர் 578 பேர். உ.பி.யில் நடந்த 724 மோதல்களில் உயிரிழந்தோர் 808;. பீகாரில் 258 மோதல்களில் உயிரிழந்தோர் 403; 2014ஆம் ஆண்டைவிட தமிழகத்தில் ஜாதிய மோதல் 100 மடங்கு அதிகரித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2014இல் நடந்த 211 மோதல்களில் உயிரிழந்தோர் 257 பேர். தமிழர் சமூகத்தில் ஜாதிய வகுப்புவாத வெறியூட்டப்படுவது ஆபத்தானது என்று இது குறித்து ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், சமூக ஆய்வாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ்...

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலத்தை, குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்; இரசாயனம் பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின்போது மின் கம்பம் மற்றும் பாலத்தின்மீது மோதி சிலைகளை பாதிப்பு ஏற்படும் என்பதால், உயரமான சிலைகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் திடீர் கோவில்கள் அமைத்தல் கூடாது. சிலை அமைப்பாளர்களின் பெயர், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்களை காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். அலைபேசியை அணைத்து வைக்காமல் இருக்க வேண்டும். காவல் துறை அனுமதித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். சிலை வைக்க, கீற்று அல்லது துணியால் வேயப்பட்ட கொட்டகையாக இருக்கக் கூடாது. கல்நார் அல்லது இரும்பு தகடு பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கடலில் கரைக்க வேண்டும். ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்....

மதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே! பெரியார் கைத்தடி ஊர்வலம்

பதட்டத்தை உருவாக்கக்கூடிய விநாயகன் சிலை ஊர்வலம் என்பது மத ஊர்வலம் அல்ல; மதத்தின் பெயரால் நிகழும் அரசியல் ஊர்வலம். சென்னை நகரில் ‘மிலாது நபி’ ஊர்வலம் இஸ்லாமிய அமைப்புகள் நீண்டகாலம் நடத்தி வந்தன. அமைதியாக மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் நடந்து வந்தது. இதற்குப் போட்டியாக மதவாத அரசியல் சக்திகள் ‘விநாயகன்’ சிலை ஊர்வலத்தை அதற்குப் பிறகுதான் தொடங்கின. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊர்வலங்களால் பதட்டம் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க இரண்டு ஊர்வலங்களையும் தவிர்த்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியின் கோரிக்கையையேற்று, இஸ்லாமியர் அமைப்புகள் மீலாது நபி ஊர்வலத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அது முதல், நபிகள் நாயகம் பேரணி, சென்னையில் நடக்கவில்லை. ஆனால், விநாயகன் ஊர்வலத்தை கைவிட மதவாத அரசியல்வாதிகள் மறுத்து விட்டனர். 1996இல் பெரியார் திராவிடர் கழகம் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலை ஊர்வலம் நடக்கும் என அறிவித்தது. தி.மு.க. ஆட்சி, இரு ஊர்வலங்களுக்கும்...

தமிழின எதிரி R.S.S. அலுவலகம் முற்றுகை சென்னை 20092016

கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய தமிழின எதிரி “ஆர்.எஸ்.எஸ்”சை கண்டித்து கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாள்கள், தோழர்கள் 500 பேர் கைது! இன்று 20.09.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் ன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தலைமை அலுவலகம் முற்றுகை. கைது செய்யப்பட்ட அரங்கில் காஞ்சி மக்கள் மன்ற தோழர்களின் எழுச்சியான புரட்சிகர கலை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன    

தமிழர் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணி 20092016

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்  20092016 மாலை 4 மணி இடம்  பேராவூரணி அண்ணா சிலை அருகில்   தலைமை தோழர் சித. திருவேங்கடம், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திவிக கண்டன உரை தோழர் பால் பிரபாகரன் பரப்புரை ச் செயலாளர், தவிக தோழர் ஆறு. நீலகண்டன் கொள்கை பரப்புச் செயலாளர், தமபுக மற்றும் சனநாயக முற்போக்கு இயக்கத் தோழர்கள் தொடர்புக்கு 9865621895 9524428253

தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவிப்பு

தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாளான 17092016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு கழக பரப்புரைச் செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர் மாரிச்சாமி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட அமைப்பாளர் பால் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் வே. பால்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகம் பிரபாகரன், திலீபன், அறிவழகன், செ.செல்லதுரை, செ.பால்துரை, கோஆ குமார், இ.குமாரசிங் மற்றும் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரை வாழ்த்தியும், ஜாதி ஒழிப்புக் குறித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்காக தூத்துக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன

பெரியார் பிறந்தநாள் விழா ஆனைமலை

தலைவர்பெரியாரின் 138-வதுபிறந்தநாள் விழா ஆனைமலையில் கழகதோழர்களால் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் சமத்துவபுரத்தில் பெரியார்சிலைக்கு மாலைஅணிவித்தனர். கழககொடியை புனிதா, கீதாஆகிய தோழர்கள்ஏற்றி வைத்தனர். பின்பு பெரியார்படத்திறப்பு நிகழ்வு நடந்தது. விழாவில்பெரியார் திராவிடர்கழக ஒருங்கிணைப்பாளர் காசு.நாகராசு. அம்பேத்கர்இளைஞர் முன்னணி தலைவர்   கவி.மணிமாறன் மற்றும்கழகத்தோழர்கள் வே.வெள்ளிங்கி, ராசேந்திரன், அப்பாதுரை, அரிதாசு, மணிமொழி, ஆனந்த், கணேசு, முருகேசன் உள்படதோழர்கள் 75பேர்கலந்து   கொண்டனர். மதியம் மாட்டுக்கறி விருந்தில் பொதுமக்கள்என 200பேர்பங்கேற்றனர்

பெரியார் 138 பிறந்தநாள் விழா கோபி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி களின் சார்பாக பேரணி நடைபெற்றது.பேரணி கோபி சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக அய்யா சிலைக்கு வந்தடைந்த்து. அய்யா சிலைக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில. கலந்து கொண்ட அனைவரும் பெரியாரியல் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் அய்யாவுடைய கருத்துக்களை  வலியுறுத்தி ஒவ்வொரு அமைப்பின் பொறுப்பாளர்களும் உரையாற்றிய பின் பொதுமக்கள் அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இப்பேரணியில் திக,திவிக, தபெதிக,திமுக, மதிமுக, நாம்தமிழர்,விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசிய முன்னணி,காந்தி மன்றம், தமிழ்வட்டம் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் செய்தி தோழர்நிவாசு மனோகரன்

நாமக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில்… நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமையில்,காவேரி நாகரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியில் சென்று நகரின் எட்டு இடங்களில் கழகக் கொடியேற்றப்பட்டது மற்றும் பெரியாரின் பொன்மொழி வாசகப் பலகை திறக்கப்பட்டது,பல்வேறு இடங்களில் பெண் தோழர்கள் கொடியேற்றினர்,இறுதியாக கத்தேரி சமத்துவபுரத்தில் வாகனப் பேரணி முடிவடைந்த்து,பின்பு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கினர்,இந்நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து பகுதி தோழர்களும் பங்கேற்றனர். திருச்செங்கோட்டில்… நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,நகரின் இரு பகுதிகளில் கழகத் தோழர்கள் வை.தனலட்சுமி,ச.ராஜலட்சுமி ஆகியோர் கழகக் கொடியேற்றினர்,பின்பு பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் கழகத் தோழர்கள்,ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில்… நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமையில்,பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர்...

பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்ட அய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,நகரத் தலைவர் பிரகாசு,நகர செயலாளர் சரவணன்,நகர பொருளாளர் கோபி ,நகர இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் மற்றும் குப்புசாமி, சங்கர்,தம்பிதுரை, தங்கராஜ், வேணுகோபால்,பிரகாசு,பாலண்,சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

குமரி மாவட்ட தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டத்தில் அறிவுலகத் தலைவர் தந்தை பெரியாரின் 138 வது பிறந்த நாள் விழா குமரி மாவட்ட கழகம் சார்பாக மார்த்தாண்டம் ம.தி.மு.க அலுவலகத்தில் வைத்து கழகத் தோழர். சூசையப்பா தலைமையில் நடைப்பெற்றது. பொருளாளர் தோழர். மஞ்சுகுமார் வரவேற்புரையாற்றினார்.செயலாளர்.தோழர்.தமிழ் மதி ’பெரியாரியல் பற்றி கருத்துரையாற்றினார். கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெ.தொ.க தலைவர்.நீதி அரசர் நன்றி கூறி முடித்தார்.  

கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா !

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமையில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொளத்தூர் சோதனைச்சாவடியில் கோவிந்தராசு, பேருந்து நிலையத்தில் ஆட்டோ செல்வம், வடக்கு ராஜா வீதி ஓவியர் மூர்த்தி, திருவள்ளுவர் நகரில் காயத்திரிசீமா, உக்கம்பருத்திக்காட்டில் லக்கம்பட்டி சக்தி, தார்காடு விஜயகுமார், லக்கம்பட்டியில் பெரியசாமி, நீதிபுரம் டைகர் பாலன் ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். தோழர்களுக்கு மதிய உணவு தார்காடு தர்மலிங்கம் இல்லத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 20 இருசக்கர வாகனங்களில் 35 தோழர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழக தலைவர் தோழர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூரில் தோழர் சுந்தரமும், செ.செ.காட்டுவளவில் தோழர் சின்ராசு, கண்ணாமூச்சியில் தோழர் மாரியப்பன், மூலக்கடையில் தோழர் இராசேந்திரன், காந்தி நகரில் தோழர் சரசுவதி ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடையில் தோழர் இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.”

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.” கழக தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். நாள் : 18.09.2016 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: நல்லாயன் திருமண மண்டபம், டவுன் ஹால், கோவை.

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பிரச்சார கூட்டம். 17.09.2016 மாலை 6மணிக்கு பெரியார் சிலை அருகில் மன்னார்குடி தலைமை : இரா.காளிதாசு மாவட்டசெயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். சேரன்குளம் சு.செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் …………………………………………………… சிறப்புரை ………………… தஞ்சை விடுதலைவேந்தன் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை கழக பேச்சாளர் திராவிடர் விடுதலைக் கழகம்… ………………………………………………………… திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

நுகும்பல் தோழர்கள் ஜானகி – இளையராஜா இணை ஏற்பு விழா காஞ்சி – 04092016

தமிழ்நாடு மாணவர் இயக்கத் ( CP ML மக்கள் விடுதலை மாணவர்  அமைப்பு ) தலைவர் தோழர் இளையராஜா திருமணம். விழுப்புரம் மாவட்டம், நுகும்பல், போரூரில் 4-9-2016 அன்று மாலை 7-00 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்திவைத்தார். தோழர்கள் மீ.தா.பாண்டியன், சி பி எம் எல் மக்கள் விடுதலைப்  பொதுச்செயலாளர் பாலன், திருநங்கை பானு, மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எழுத்தாளர் பிரேமா ரேவதி, தமிழ்த்தேச குடியசு கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

சடங்குகளை மறுத்து பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் ஆணுக்கும் தாலி அணிவித்து சீர்திருத்த திருமணம்.. தோழர் நிரஞ்சன்குமார்

5-9-2016 அன்று காலை, சென்னை, பழையவண்ணாரப்பேட்டை, ஏழாயிரம் பண்ணை நாடார்கள் திருமண மண்டபத்தில் ஈழத்தின் புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனரும், பெரியாரியல் சிந்தனையாளரும் மக்கள் மன்றத்  தோழர் நிரஞ்சன் -தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினித்துறைப் பொறியாளர்  இராசலட்சுமி ஆகியோரின் ஜாதிமறுப்பு, தாலிமறுப்பு வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா இயக்குனர் களஞ்சியம் தலைமையில் சென்னையில் நடந்தேறியது. மணமக்கள் இருவரும் உறுதி மொழிக் கூறியும், இருவரும் ஒருவருக்கு மற்றவர் தங்க  சங்கிலியையும்,மாலையையும் அணிவித்தும் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டனர். விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், ராஷ்ட்ரீய ஜனதாக் கட்சித் தலைவர், மக்கள் மன்றம் மகேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மக்கள் மன்றத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். புகைப்படங்கள் ணை

ஜோதிராவ் புலே – ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்! முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை. ராதாகிருஷ்ணன் யார்? ஆந்திராவின் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். கிறித்துவ மிஷனரி பள்ளிகளிலும் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் படித்த அவர், இளம் வயதிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். இதெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக இந்து சமூகம் சாதி படிநிலைகள் மூலம் அடிமைப் படுத்தி...

ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை மதபேதம், இனபேதம் பார்க்காமல் விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாள் 09092016 வெள்ளி மாலை 3 மணி இடம் சேப்பாக்கம் சென்னை தோழர் கொளத்தூர் மணி உரை தொடர்புக்கு 7200439952

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு வடக்கு 04092016

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு வடக்கு 04092016

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதந்திர கலந்துரையாடல் கூட்டம் 04092016 ஞாயிறு அன்று கோபியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பவானி ஒன்றிய பொறுப்பாளர் வினோத் தலைமை ஏற்க மாநில வெளீயிட்டு செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாள் அன்று கோபியின் அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஊர்வலம் நடத்துவது எனவும்,  செப்டம்பர் 20 ஆம் தேதி கோபி ஒன்றியம் முழுதும் இருசக்கர வாகன ஊர்வலம் மூலம் கழக கொடிகம்பங்களில் கொடி ஏற்றுவது எனவும், தொடர்ந்து மற்ற ஒன்றியங்களில் அச்சம் போக்கும் அறிவியல் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த  நம் கழக ஆதரவாளர் பரசுராம் அவர்களின் தந்தையார் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கழக பொறுப்பாளர்கள், தமிழ் நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர்கள்,...

பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார் கைது

பெரியார் பிள்ளையாரைப் போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…… நீதிபதி, கைது செய்த காவலரிடம்…. இவர் என்ன குற்றம் செய்தார்? காவலர்… இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்…. நீதிபதி…. பெரியாரிடம்.. பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா? பெரியார்… ஆமாம், போட்டுடைத்தேன்.. நீதிபதி… ஏன் அப்படி செய்தீர்கள்? பெரியார்… கடைவீதிக்குப்போனேன், அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன்… யாருக்கும் இடையூறு இல்லாமல், தெருஒரமாகப் போட்டுடைத்தேன்… நீதிபதி… ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதை புன்படுத்தாதா? அது தவறல்லவா? பெரியார்…. நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள்..அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றார்… நீதிபதி… காவலரிடம்… மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டார்.. காவலர்.. அவர்களும் போட்டுடைத்தார்கள் என்று கூறினார்… நீதிபதி… அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டார்.. காவலர்.. அவர்கள் கடவுள் உண்டு என்று சொல்லி உடைத்தார்கள்…ஆனால் இவரோ கடவுள் இல்லவே...

‘பிள்ளையார் சுழி’ வந்த கதை

பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று – அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச் சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின் மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும் இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் – முழுமுதற் கடவுள் என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது. அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே, இடையில் வந்த பிள்ளையார் – முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா? அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் – பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு...

தூத்துக்குடியில் கழகம் சமூக நீதி பரப்புரை

27.08.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட தி.வி.க. சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப்பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை விநியோகித்து மக்களிடம் எழுச்சியை உருவாக்கினர் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகய்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

தபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை

தபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை

வழக்கு : உயர்நீதிமன்றம் கெடு மதவெறியர்களால் குறிவைக்கப்பட்டு படுகொலை  செய்யப்பட்டவழக்குகளில் தடயவியல் ஆய்வுக்கான அறிக்கையை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையினரிடமிருந்து 8 வாரங்களுக்குள்ளாக பெற்று நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுக் குழுவினருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று புனே நகரில் நடைப் பயிற்சியின்போது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பின் நிறுவனரும் பகுத்தறிவாளருமாகிய நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கில் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை முறையாக செயல்பட்டு புலனாய்வு விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டறியவில்லை எனக் கூறி, 2014ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தபோல்கர் சுடப்பட்டதைப்போலவே, மகாராட்டிர மாநிலத்தில் மும்பை மாநகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று நடைப் பயிற்சியின்போது சுடப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனையில் 20.2.2015 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோன்றே கருநாடக மாநிலத்தில் 30.8.2015 அன்று ஹம்பி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், பேராசிரியரும் பகுத்தறிவாளருமாகிய எம்.எம்.கல்புர்கி, கருநாடக மாநிலத்தில் மைசூரு தார்வார்ட்...

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

மேட்டூர் கழகத் தோழர் செ.மார்ட்டின் -பொ. விஜயலட்சுமி ஆகியோரின் மகள் வி.மா. அன்புக்கரசி, பி.ஈ., டி.அய்.வி., கொளத்தூர் கு.மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலீப்குமார் ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாய்க்கை இணை ஏற்பு விழா 21.8.2016 அன்று பகல் 11 மணியளவில் கொளத்தூர் எம்.எஸ். திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், டைகர் பாலன் வாய்த்துரை வழங்கினர். இசைமதி, ‘பெண்ணுரிமை’ குறித்தப் பாடல் பாடினார். கணவரை இழந்த மணமகள்மணமகன் பாட்டிமார்கள் வெள்ளை உடையுடன் மேடையில் மணமக்களுக்கு மாலை, தங்க சங்கிலிகளை மண மக்களிடம் எடுத்துத் தந்தபோது மண்டபமே கரவொலியால் அதிர்ந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு திரண்டு வந்திருந்தனர். கழக மாநாடு போலவே மணவிழா காட்சி அளித்தது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

பெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்

தமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார். பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது. ஆனால், பெண்கள்...

விநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது: மறைமலை அடிகள்

விநாயகனை வழிபடுவது சைவர்களுக்கு அவமானம்; அது பார்ப்பான் கட்டிய கற்பனைக் கதை என்கிறார், மறைமலை அடிகளார். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவறுக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல் லொணா அருள் ஒளி வீசித் துலங்குவதென்று ‘தேனோபநிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக் கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும் அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகா புராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட் பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன்மின்கள்! மேலும், “தம் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப்பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை...

தலையங்கம் கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

‘அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தடை போட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருக்கிறார் பினராயி விஜயன். ‘அரசு அலுவலகங்கள், பணி செய்ய வேண்டிய இடங்கள். அங்கே கொண்டாட்டத்திற்கு இடமில்லை’ என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் அரசு அலுவலகங்கள் அமர்க்களப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவல் நிலையங்கள், பஜனை மடங்களாகவே மாறி நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறையே ஜெயலலிதா விடுதலைக்கு, கோயிலில் விசேட பூஜைகள் நடத்துவதற்கு உத்தரவிட்டது. சில மாவட்ட ஆட்சித் தலைவர்களே கோயில் சடங்குகளில் யாகங்களில் பங்கேற்ற கூத்துகளும் அரங்கேறின. காவல் நிலையங்களில் யாகங்களை நடத்துவதும், ஆடுகளை வெட்டி பலியிடுவதும், ‘வாஸ்து’ பரிகாரங்களை செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக...

ஈழ ஏதிலியர் உரிமை: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 27 08 2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் திராவிடர் விடுதலைகழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்), செந்தில் (இளம் தமிழகம்), பாரதி (த.தே.வி.இ.), அருண பாரதி (த.தே.பே), சேகர் (தொ.மு.இ.), வன்னி அரசு (வி.சி.), இயக்குனர் மு. களஞ்சியம், இயக்குநர் புகழேந்தி மற்றும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01092016 இதழ்

விநாயகர் ஊர்வலம்காவல்துறைக்கு கழகம் நேரில் மனு

விநாயகன் அரசியல் ஊர்வலங்களில் சட்டமீறல் விதிமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்; சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கழகப் பொருளாளர்  துரைசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். ஆனைமலை : பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும்...

இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு

“செத்த மாடுகளை புதைக்க மாட்டோம்; பிணங்களை எரிக்க மாட்டோம்; சாக்கடைக் குழிக்குள் இறங்க மாட்டோம்” என்று குஜராத்தில் தலித் மக்கள் கிராமம் கிராமமாக நடத்தும் பயணம் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. ஜிக்மேஷ் மேவானி, சுபோத் பார்மர் எனும் இரண்டு தலித் இளைஞர்கள் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். பயணத்தின் அடுத்த கட்டமாக ‘மனு சாஸ்திரம்’ என்ற பார்ப்பனிய கொடூர சட்டத்தை வழங்கிய ‘மனு’வின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் பல்லாயிரம் தலித் மக்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் திரண்டு ‘மனு’வின் உருவத்தை தீயிட்டு எரிக்கிறார்கள். இராஜஸ்தான் உயர்நீதிமன்ற கட்டிட வாயிலில் பார்ப்பன ‘மனு’வின் சிலை நிறுவப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற அலுவலகத்தில் ‘மனு’வின் சிலைக்கு எதிரே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை தலித் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி வரும் ஜிக்மேஷ் மேவானி, லக்னோவில் செய்தியாளர்களிடையே அறிவித்து, பார்ப்பனிய...

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016

1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும்,  வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து...

அந்த காலத்தில் பார்ப்பனர்களை திருமணத்துக்கு அழைப்பதில்லை

பார்ப்பானை வைத்துத் திருமணம் செய்வதெல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள்தான் பரவிற்று என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – 60, 65 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்து 500 பேர்களுக்கு மேலாக மொய் (அன்பளிப்பு) எழுதினார்கள். அவர்களுக்குத் திருப்பி மொய் எழுதுவதற்கு என்னைத்தான் என் வீட்டிலே அனுப்புவார்கள். அதனால் பல திருமணங்களைப் பார்த்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எல்லோரும் பார்ப்பானைத் திருமணத்திற்கு அழைப்பதில்லை. அப்படி திருமண வீட்டிற்குப் பார்ப்பான் வந்தால் பிச்சை வாங்குவதற்காகத்தான் அங்கு வருவான். அதுவும் உள்ளேகூட அழைப்பதில்லை. வெளியே ஒரு திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட்டுப் போகும்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டனா, பெரிய மனிதர்களாக இருந்தால் ஆளுக்கு 8 அணா, 1 ரூபாய் பிச்சையாய்க் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவான். கலியாணம் செய்து வைக்கப் பரியாரி (நாவிதன்) தான் வருவான். அவன்தான் மணமக்களை ஆசி கூறி வாழ்த்திச் செல்வான். அப்பொழுதெல்லாம் மணப்பெண்ணுக்கு யார்...

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

மேட்டூர் கழகத் தோழர் செ. மார்ட்டின்-விஜயலட்சுமி மகள் வி.மா.அன்புக்கரசி, பி.ஈ., கொளத்தூர் கு. மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலிப்குமார், எம்.பி.ஏ. ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு மணவிழா 21.8.2016 அன்று கொளத்தூர் எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதில் மணவிழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1958இல் பெரியார் பேச்சு தொகுப்பாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்பில் வெளி வந்த நூலோடு இணைத்து, அழைப்பிதழ் தயாரிக்கப்பட் டிருந்தது. தந்தை பெரியாரின் சிறப்பான கருத்துகள் இடம் பெற்றிருந்த இந்த நூலில், ‘சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது’ என்று பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை பெரியார் எடுத்துக் காட்டியிருக்கிறார். உரையின் அந்தப் பகுதி: ‘இந்து லா’வில் பிராமணன், சூத்திரன் என்ற பிளவுகள் உண்டே தவிர – நாயுடு, செட்டியார், படையாட்சி, பிள்ளை என்ற தனி வகைகள் இல்லை. ஆகையால் பார்ப்பனரைத் தவிர்த்து நாம் எல்லோரும் ஒரே சாதிதான். திராவிடர் என்று...

பயணக் குழுவில் பங்கேற்ற தோழர்கள்

“நம்புங்கள் அறிவியலை; நம்பாதீர்கள் சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பட்டியல். திருப்பூர் பயணக் குழு 5 நாள் பங்கேற்றோர் : மணிமொழி – ஆனைமலை, நிர்மல் – கோவை,  திருப்பூர் : முத்துலட்சுமி, சத்தியமூர்த்தி, சங்கீதா, யாழ் இசை, மூர்த்தி, மாப்பிள்ளை சாமி (லெனின்), நீதிராசன், சு. துரைசாமி – திருப்பூர் கழகப் பொருளாளர், கிருஷ்ணன் – கோவை, பார்வதி – நூல்கள் விற்பனைக் குழு, பன்னீர் செல்வம் – சூலூர், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோபி. வேலுச்சாமி, காவை. இளவரசன். 4 நாள் பங்கேற்றோர் : கதிர்வேல்-ஆனை மலை 3 நாள் பங்கேற்றோர் : முகில்ராசு (திருப்பூர்), இராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்) 2 நாள் பங்கேற்றோர் : சண்முகம் (பல்லடம்), கார்த்திகேயன் (பெங்களுர்), ராஜசிங்கம் (திருப்பூர்), தனபால், அகிலன். மயிலாடுதுறை பயணக் குழு 6...

‘ஜோக்கர்’ : சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்

ஜோக்கர் – தமிழ்த் திரைப்பட வரலாற்றில்  புதிய மைல் கல். ராஜு முருகன் எழுத்து இயக்கத்தில் உருவாகி யுள்ள இத்திரைப்படம், இன்றைய சமூகத்தின் சமூக அரசியல் பொருளாதார அவலங்களை சமரசமின்றி சாட்டையால் அடிக்கிறது. பயன் கருதாமல் சமுதாயத் தின் மீதான கவலையோடு போராடும் இயக்கங்களுக்கான படம் என்றே கூற வேண்டும். சாதி வெறிக்கு, மதவாதத்துக்கு எதிராகவும் இயற்கை வளச் சுரண்டல் களுக்கு எதிராகவும், மனித உரிமைக் காகவும் எந்த பொருள் வசதியும் இல்லாத இயக்கங்கள் போராடினாலும் சரி, விளக்கக் கூட்டங்களை நடத்தினாலும் சரி, துண்டறிக்கைகளை வழங்கினாலும் சரி, அதை கேலிப் பேசவும், ‘வேறு வேலை இல்லாத கூட்டம்’ என்று அலட்சியப் படுத்தவும் செய்யுமளவுக்கு சமூகத்தின் பொதுப் புத்தி சீழ் பிடித்து கிடக்கிறது. இந்த புறச் சூழல் எதிர்ப்பை புறந்தள்ளி, களத்தில் நிற்கும் இயக்கங்களுக்கு தன்னம்பிக்கையையும் உந்து சக்தியையும் தருகிறது ‘ஜோக்கர்’. அதுவே இப்படத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்ச மாகும். ஜாதி-மத-ஓட்டு...

குஜராத்தில் தலித் மக்களின் புரட்சிக் குரல்! பார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்!

சட்டம் ஒழுங்கை தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தலித் மக்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ‘பசு கண்காணிப்பு’ என்ற பெயரில் மதவெறி வன்முறை கூட்டம், அதிகார அமைப்பிலும் காவல் துறையிலும் ஊடுருவி நிற்கும் மதவெறி சக்திகள் இந்த வன்முறைக்கு துணை நிற்கின்றன. குஜராத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி செத்துப் போன பசுமாட்டின் தோலை விற்பனை செய்வதற்கு உரித்தார்கள் சில தலித் இளைஞர்கள். அதுவே அவர்களின் வாழ்க்கைக்கான தொழில். ‘பசு கண்காணிப்பு’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் மனித மிருகங்கள் நான்கு தலித் இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இது நடந்தது சவுராஷ்டிரா அருகே உள்ள ‘உனா’ எனும் கிராமத்தில். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் பதிவேற்றப்பட்டன. பிரச்சினை பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாநிலம் குஜராத் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதிக் குவித்தது. அத்தனையும் அப்பட்டமான பொய். இப்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. குஜராத் மக்கள் தொகையில் 8...