பெரியார் 138 பிறந்தநாள் விழா கோபி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி களின் சார்பாக பேரணி நடைபெற்றது.பேரணி கோபி சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக அய்யா சிலைக்கு வந்தடைந்த்து. அய்யா சிலைக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில. கலந்து கொண்ட அனைவரும் பெரியாரியல் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் அய்யாவுடைய கருத்துக்களை  வலியுறுத்தி ஒவ்வொரு அமைப்பின் பொறுப்பாளர்களும் உரையாற்றிய பின் பொதுமக்கள் அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இப்பேரணியில் திக,திவிக, தபெதிக,திமுக, மதிமுக, நாம்தமிழர்,விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசிய முன்னணி,காந்தி மன்றம், தமிழ்வட்டம் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

செய்தி தோழர்நிவாசு மனோகரன்

img_20160917_095448 img_20160917_101301 img_20160917_102758 img_20160917_103439 img-20160917-wa0005 img-20160918-wa0000

You may also like...