அத்தாணியில் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம்
அந்தியூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 133-வது பிறந்த நாள் விழா, கீழ்வானி இந்திராநகர் கிளையின் பெயர் பலகை திறப்பு விழா, கழகத்தின் புதிய நூல் வெளியீட்டு விழா பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் ஆகியவை 8.3.2012 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பகுத்தறி வாளர் பேரவைத் தோழர் ஜீ.மா. சுந்தரம் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கீழ்வானி இந்திரா நகரில் கழகத்தின் பெயர்ப் பலகையை திறந்து வைத்து கொடியேற்றினார். சுந்தரம் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, அனைவரும் ஊர்வலமாக அத்தாணி பொதுக் கூட்ட திடலுக்கு வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைக்க, பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. வீரன் வரவேற்புரையாற்ற, மடத்துகுளம் மோகன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ நிகழ்ச்சி நடத்தினார். பொள்ளாச்சி விஜய ராகவன் கழக வெளியீடுகளை அறிமுகம் செய்தார். மாவட்ட கழகத் தலைவர் நாத்திக சோதி, தலைமை ஆலோசனைக்...