Author: admin

மாட்டுக்கறி அரசியல் – மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ! சேலம் 12052017

கருத்துரிமை உணவு உரிமைக்கு தடை போடும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து இன்று 12052017 காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் தடையை மீறி மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள். போராட்டத்தின் போது தோழர் கொளத்தூர் மணி பேச்சு போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. இப்போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் டைகர் பாலன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட செயலாளர் சரவணன்,...

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவருக்கும் நீதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக புதுச்சேரி, தமிழக அரசுகள் இன்று விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், ரவி சுப்பிர மணியம், ரகு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாநில அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதியும், ஜெயேந் திரரும் தொலைபேசியில் பேசிய தாக உரையாடல் ஒன்று வெளியானது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....

டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு செ.கு. தமிழரசன் பதில்

டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு செ.கு. தமிழரசன் பதில்

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “பட்டியல் இனப் பிரிவு” ஒன்றே தேவை இல்லை; அதை நீக்கிவிட வேண்டும் என்றும், இதுவரை பட்டியல் இனப் பிரிவால் இந்தப் பிரிவில் அடங்கியுள்ள மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்க வில்லை என்றும், ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ‘தேவேந்திர குல வேளாளர்களை’ பட்டியலினப் பிரிவி லிருந்து நீக்கி அவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதோடு ஒவ்வொரு ஜாதிக்கும் தனித் தனி வரலாறு கலாச்சாரம் உண்டு” என்று கூறியுள்ளார். ‘தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனப் பிரிவில் யார் சேர்த்தார்கள் என்றே தெரியவில்லை’ என்று கூறியுள்ள அவர், “இந்தியாவில் ஒரே பட்டியலின் கீழ் அனைத்துப் பிரிவு மக்களையும் இணைத்ததே அம்பேத்கர் செய்த தவறு” என்றும் கூறியிருக்கிறார். தனித் தொகுதி முறையை காந்தியாருக்காக அம்பேத்கர் விட்டுக் கொடுத்ததை ஏற்க முடியாது என்றும்,  தேர்தலில் தனித்...

சென்னையில் குழந்தைகள் பழகு முகாம்

கழக செயல்வீரர் செ.பத்ரிநாராயணன், 13ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஏப்.30 ஆம் தேதி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமுக்கு ஏற்பாடு செய் திருந்தது. இராயப் பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடந்த இந்த முகாமில் 40 குழந்தைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் வீ. சிவகாமி சமூக கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ஜெ. சியாம்சுந்தர், மோனிக்கா ஆகியோர் குழந்தைகளுக்கு கூடிப் பழகுதல், விளையாட்டு, ஓவியம், அறிவியல் குறித்த பயிற்சிகளை வழங்கினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரை, அருண், ஜெ. சியாம் சுந்தர் ஆகியோர் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். காலை 11 மணியளவில் தொடங்கிய பயிற்சி, மாலை 6 மணி வரை நீடித்தது. பெரியார் முழக்கம் 11052017 இதழ்

பெண்களே சடலத்தை சுமந்தனர்: கழகத் தோழர் செந்தில் தந்தை இராமலிங்கம் முடிவெய்தினார்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்வீரர் செந்தில் (எப்.டி.எல்.) அவர்களின்  தந்தை இரா. இராமலிங்கம் (73) கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே 5ஆம் தேதி காலை முடிவெய்தினார். முடிவெய்திய இரா. இராமலிங்கம், தீவிரமான தி.மு.க. தொண்டர். அவரது விருப்பப்படி தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு எவ்வித மூடச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மின்சார இடுகாடு வரை, பெண்களே உடலை சுமந்து வந்தனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தியதோடு இறுதி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர். பெரியார் முழக்கம் 11052017 இதழ்

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

குஜராத்தின் சாதி ஒழிப்பு இளம் போராளி மேவானி பேட்டி

 “பெரியார் போன்ற தீரர்களைப் பெற்றதற்கு பெருமைப்படவேண்டும்!” பெரியாரின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை சமூக நீதித் தளத்தில் ஒரு படி மேலேதான் நிறுத்தியுள்ளது. சாதி என்பது உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, உழைப்பாளர்களையும் பிளவுபடுத்துகிறது. ஜிக்னேஷ் மேவானி குஜராத் மக்களின் மனங்களில் ஆழ, அகல பதிந்துவிட்ட ஒரு பெயர். செத்த மாட்டை சுத்தம் செய்ய மாட்டோம், ‘மாட்டின் வாலை நீங்கள் வைத்துக் கொண்டு 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு கொடுங்கள்’ என்று குஜராத்தின் உனாவில் லட்சக்கணக்கான தலித் மக்களை ஒன்று திரட்டிய எழுச்சியின் நாயகன். சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் சொற்பொழிவில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் அளித்த பேட்டி: குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தி யிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில்...

இந்தியா இனி ‘இந்தி’யா?

இந்தியா இனி ‘இந்தி’யா?

2011-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு… ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும் விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். இனி, விமானங்களில் வழங்கப்படுகிற செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ...

தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது! ஜூன் 5இல் சென்னையில் மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்பு கழக தலைமைக் குழுவின் முக்கிய முடிவுகள்

சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” – என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது.  1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி...

கவிஞர் சுகிர்தா ராணி கவிதை தொகுப்பு – மாட்டுக்கறி

மாட்டுக்கறியே என் வாழ்க்கை மாட்டுக்கறியே என் கொண்டாட்டம் மாட்டுக்கறியே என் திருவிழா மாட்டுக்கறியே என் வாழ்வு மாட்டுக்கறியே என் உணவு நான் பிறந்து கண்விழித்தபோது உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே எனக்கு முதல் சுவாசம். கைகால்களை உதைத்து உதைத்து நான் வீறிட்டு அழுதபோது என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில் செருகியிருந்த எலும்புத் துண்டுகளே எனக்குக் கிலுகிலுப்பை. பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறே எனக்குத் தாய்ப்பால். கறியின்மீது கவிழ்ந்திருக்கும் மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து பனியென உருகும் ஊன்நெய்யில் சுட்டு எடுப்பதே என் பலகாரம். மாட்டுக்கறித் துண்டுகளை நீளவாக்கில் அரிந்தெடுத்து வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட முட்செடியின் நெருங்கிய கிளைகளில் பரப்பிவைத்து உலர்த்துகையில் கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே எனக்குப் பொழுதுபோக்கு. களிமண்ணால் தேய்த்துக் குளித்து ஆடையணிந்து வெளிச்செல்கையில் என்மீது வீசும் புலால் நாற்றமே எனக்கு நறுமணத் தைலம். . வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பு இறக்கத்தில்...

நெல்லையை காப்போம் – பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை 13052017

நெல்லையைக் காப்போம் ! கூடங்குளத்தில் அணு உலைப்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், குடிநீருக்கும்,பயிர்த்தொழிலுக்குமே தாமிரபரணி தண்ணீர் எடுப்போம் எனும் முழக்கத்துடன் பேரணி மற்றும் பொதுக்கூட்டம். நாள் : 13.05.2017 நேரம் : மாலை 4 மணி. இடம் : பாளையங்கோட்டை, லூர்துநாதன் சிலை முன்பிருந்து ஜவஹர் திடல் வரை. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தோழர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள். நெல்லையைக் காப்போம் கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா வடாதென எதிர்ப்போம். குடிநீருக்கும் பயிர்த் தொழிலுக்குமே தாமிரபரணித் தண்ணீர் எடுப்போம்… பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...

சென்னை திவிக செயல்வீரர் செந்தில் அவர்களின் தந்தை மறைவு 05052017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.செந்தில் குமார் (FDL) அவர்களின் தந்தையார் இரா.இராமலிங்கம் இன்று (05.05.2017) காலை இயற்கை எய்தினார்… மதச்சடங்குகளை தவிர்த்து தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களின் உடலை பெண்களே மயானம் வரை சுமந்து சென்றனர்… திராவிடர் விடுதலை கழகத்தின் வீரவணக்கத்தின் முழக்கத்தோடு தந்தையாரின் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது…. இறுதி நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர்.தோழர்.உமாபதி அவர்கள் கழகத்தின் சார்பாக தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.. கழகத்தின் நிலைய செயற்குழு உறுப்பினர் தோழர்.அய்யனார் அவர்கள் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகளை தவிர்த்து பெண்களே ஏற்று நடத்திய தந்தையாரின் இறுதி நிகழ்வுக்கு பாராட்டையும் ….குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.

கக்கூஸ் ஆவணப்படம் சென்னை 01052017

மலக்குழியில் மனிதர்களை இறக்கும் இழிவிற்கு முடிவு கட்டுவோம்…… “கக்கூஸ் ஆவணப்படம்” திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவகத்தில் இன்று மாலை திரையிடப்பட்டது…. இதில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் தோழர்.அன்பு தனசேகரன் அவர்களின் தலைமையில் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது… இதில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர்.தபசி குமரன், சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன் மற்றும் இயக்க தோழர்கள் வந்திருந்தனர்… சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.உமாபதி அவர்கள் ஆவணப்படத்தின் திரையிடலை ஒருங்கிணைத்து நடத்தினார்.. திரையிடலுக்கு பிறகு பேசிய தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் மடமையை பற்றியும், ஆவணத் திரைப்படத்தை பற்றியும் இயக்க தோழர்கள் இதற்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசி கலந்துரையாடலை முடித்தார்

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு – ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம் 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று… ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்…. இன்று காலை (30.04.2017) 10 மணிக்கு ஆரம்பமானது.தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர்.வீ.சிவகாமி அவர்கள் வந்திருந்த அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கான சிறுகதை, விளையாட்டு பயிற்சி என பல்வேறு விதமாக கலந்துரையாடினார்…. வந்திருந்த சிறுவர், சிறுமிகளுக்கு குளிர்பானம் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது…. மதிய பொழுதில் சமூக கல்வி நிறுவனத்தின் தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்கள் சிறுவர், சிறுமிகளுக்கு ஓவியப்போட்டி, சிறுகதை என பல்வேறு பயிற்சிகளை அளித்து சிறுவர், சிறுமிகளுடன் பழகி கலந்துரையாடினார்கள்…. இறுதியாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் பழகு முகாமின் சிறுவர், சிறுமிகளை வழிநடத்திய தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்களுக்கு கழக மாத இதழ் நிமிர்வோம் புத்தகத்தை வழங்கினார். அதையடுத்து வந்திருந்து பழகு முகாமில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ்...

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று…. காலை தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள், இயக்க தோழர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் வந்திருந்தனர்….. தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் வீரவணக்கம் முழக்கம் எழுப்பி, தோழர்.பத்ரி நாராயணன் அவர்களுடன் தன்னுடைய வாழ்நாள் அனுபவங்கள் அவரின் பெரியாரின் கொள்கையும் பற்றியும் பேசி தனது ஆழ்ந்த இரங்கலோடு மரியாதை செலுத்தினார்கள்… நினைவிடத்தில் வந்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி , திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளின் தோழர்கள், தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்தினார்கள்… தமிழ்நாடு அறிவியல் மன்றத்திலிருந்து வந்திருந்த தோழர்.வீ.சிவகாமி அவர்கள் தோழர்.பத்ரி நாராயணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்…....

“பாவேந்தர்” பாரதிதாசன் 127வது பிறந்தநாள் சென்னை 29042017

தை ஒன்றே தமிழர் புத்தாண்டு என்று முழங்கிய மக்கள் கவிஞன் “பாவேந்தர்” பாரதிதாசன் 127வது பிறந்தநாளான இன்று 29042017 … சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “பாவேந்தர்” பாரதிதாசன் அவர்களின் திருஉருவச்சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தோழர். தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்… கழக வழக்கறிஞர் தோழர்.துரை அருண் சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன், மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்களுடன் மாவட்ட தோழர்கள் பங்கேற்றனர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. கடவுளர் கதைகள்- சாமி. விலை-ரூ.20. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்- விடுதலை இராசேந்திரன், விலை-ரூ.10 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள். செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்-அப்துல் சமது உரை- விலை-ரூ.10. தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் 95,...

பெங்களூரில் “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்” தேதி, இடம் மாற்றம்

பெங்களூரில் “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்” தேதி, இடம் மாற்றம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் : நாள் : 13.5.2017 முதல் 17.5.2017  (5 நாள்கள்)  இடம் : பெங்களூர் அய்.எஸ்.அய். அரங்கம். கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை, கட்டுரை புனைதல், அறிவியல் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள். 10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்பு : குழந்தை 1-க்கு : ரூ.1500/- ரூ.1500/= செலுத்த இயலாதவர்கள் ரூ.1000/-= செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175 – ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) பெரியார் முழக்கம் 04052017 இதழ்

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர்  23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட் பிரிவில் பங்கேற்றனர். இனியன் தங்கபதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன் பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி வழங்கினார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார். பெரியார் முழக்கம் 04052017 இதழ்

பத்ரிநாராயணன் 13ஆவது நினைவு நாள்

திராவிடர் விடுதலை கழகத்தின் கழக செயல் வீரர் பத்ரி நாராயணன் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் 30.4.17 அன்று  மிகுந்த எழுச்சியுடன் நடந்தது. அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள், காலை 9 மணி யளவில் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர், ஆசிரியர் திருப்பூர் சிவகாமி நிகழ்வில் பங்கேற்றார். தலைமைக் குழு  உறுப்பினர் அன்பு தனசேகரன்  வீரவணக்க முழக்கங் களை எழுப்பி உரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் அண்ணா மலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரூதர். கார்த்திக், குமரப்பா , தி.மு.க. ஆர்.என். துரை ஆகியோர் பத்ரியின் கொள்கை உறுதியை நினைவுகூர்ந்து உரையாற்றினர். இராயப்பேட்டை  பெரியார் படிப்பகத்தில் பத்ரி நாராயணன் புகைப்படத்திற்கு தலைமை கழகச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார்.  பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டி யிருந்தனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்வுகளை...

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

அய்தராபாத் நிசாமுக்கு வழங்கப்பட்டது வெளியுறவுத் துறை அதிகாரம் ‘சவுத் பிளாக்’ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடி தளர்த்தப்பட வேண்டும் இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகள், எப்படி, எவரால், எந்தப் பார்வையில் செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு வெளிப்படையான பதிலோ, விவாதங்களோ கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு பெரும் பங்கு உண்டு. டெல்லி தலைமைச் செயலகத் தில் ‘சவுத் பிளாக்’ அவ்வளவு சக்தி வாய்ந்தது. பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகாரங்களையும் அங்கே பார்க்க முடியும். ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குள்ளான 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகமே ஓரணியில் திரண்டு கொதித்து, “இந்திய அரசே ஈழத் தமிழர்களைக் காப்பாற்று” என்று கண்ணீர்விட்டுக் கதறிய ஓலம், டெல்லி பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் செவிப்பறைகளில் கேட்கவே இல்லை. அன்றைய ஆளும் காங்கிரஸ், சிறிலங்கா அதிகார வர்க்கமும், இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இனப்படுகொலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டின. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு முன்பு,...

கல்வித்துறை மீது தொடரும் மோடி அரசின் தாக்குதல்

கல்வித்துறை மீது தொடரும் மோடி அரசின் தாக்குதல்

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகளுக்கான நிதி ஒதுக் கீட்டை குறைத்துக்கொண்டே வரும் மோடி அரசு, சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தி விடுவதென முடிவெடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) நிதி அளித்து வருகிறது. இந்நிலையில் 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிலையங்கள் (2007-2012) மற்றும் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை நிறுத்தப் போவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 13ஆவது திட்டத்தின் மூலம் மீண்டும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் 31 முதல் இவற்றுக்கான நிதி நிறுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சில வற்றுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெண்கள் மீதான சமூக பாகுபாடு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் இதர ஆய்வு...

சங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்

சங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்

இந்தியாவில் இந்தத்துவா சக்திகளால் மத சுதந்திரத் துக்கான அச்சுறுத்தல்கள் மேலும் மேலும் மோசமடைந்து வருவதாக அமெரிக்காவின் மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் ஆண்டறிக்கை கூறியுள்ளது. ஏப்.26ம் தேதி, 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவில் இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து தேசியவாதக் குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும், மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 10 மாவட்டங்களில் இது மிகவும் மோசமாக நடந்து வருகிறது. நாட்டின் தேசிய மற்றும் மாநிலங்களின் சட்டங்களும் இந்த வன்முறைக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி வருகின்றன என்று குற்றம்சாட்டும், அந்த அறிக்கை பசுவதைத் தடைச் சட்டம், மற்றும் மத மாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி, சகிப்புத் தன்மை, மதச் சுதந்திரம் பற்றி பேசினாலும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் அவர்களோடு நெருக்கமாக இருக்கும் மத தேசியம் பேசும் அமைப்பினரும்...

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா இப்போது கொண் டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரங்கள் – வைணவப் பார்ப்பனர்கள் – இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப்  போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார். இத்தகைய...

அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

தமிழகத்தில் தற்போது 1800 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 அரசு மருத்துவமனைகள், 19 அரசு மருத்துவ கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் போன்ற மருத்துவத் துறைகளில் சுமார் 16000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். இதில் சுமார் 9000 மருத்துவர்கள் இளநிலை படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மட்டுமே முடித்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றார்கள். இத்தகைய சிறப்பான பணியினாலேயே அனைத்து சுகாதார குறியீடுகளிலும் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில் இருந்த வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1500 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய கலந்தாய்வு மூலம் 50 சதவித இடங்களும், மாநில அரசின் கலந்தாய்வின் மூலம் 50 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதில் மாநில அரசிடம் உள்ள மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பின் மொத்த 750 இடங்களில் 50 சதவீத இடங்கள் சிறப்பு சேவை ஒதுக்கீடாக சுமார் 375 இடங்கள்...

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்ப்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மருத்துவ சேவையில் இந்தியாவுக்கே...

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் விரைவில்…

இந்திய அரசின் அலுவல் மொழி சட்டம் 1976 பிரிவு 1.ii. தமிழகம் நீங்கலாக அனைத்து இந்திய பகுதிகளுக்கும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தமிழகத்தில் எழுதும் ஒவ்வொரு இந்தி எழுத்தும் திணிப்பே. சட்ட விரோதமே. போராட்டங்கள் விரைவில்…  

பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் நூல்கள் பரிசளிப்பு ஆத்தூர் 26042017

பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் நூல்கள் பரிசளிப்பு ஆத்தூர் 26042017

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடந்த 14-4-2017 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. அதையொட்டி அன்று கழகத் தோழர்களின் முயற்சியில் ஒரு நூலகமும் திறக்கப்பட்டது. நூலகத்தை வடசென்னிமலை அரசினர் கலைக்கல்லூரிப் பேராசிரியரும் பெரியாரியல் சிந்தனையாளருமான பேரா.முருகேசன் திறந்துவைத்தார். அக்கல்லூரிப் பேராசிரியர் அம்பேத்கர் சிறப்புரையாற்றினார். 26042017 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அந்நூலகத்துக்கு, குடிஅரசு தொகுப்பினையும், அம்பேத்கர் நூல் தொகுப்பினையும் மாவட்டக் கழகத் துணைச் செயலாளரும், நூலகப் பொறுப்பாளருமான ஆத்தூர் மகேந்திரனிடம் வழங்கினார்.  

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 30042017

30042017 அன்று மாலை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டன்பாளையத்தில், பள்ளிபாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நகர செயலாளர் தியாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் பெரம்பலூர் தாமோதரனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலைசெய்யப்பட்ட தோழர் கோவை ஃபாரூக்கின் படத்தை தோழர்கள் சஜீனா,மீனாட்சி ஆகியோர் திறந்துவைத்தனர். தோழர்கள் முத்துபாண்டி, திருச்செங்கோடு வைரவேல், மாவட்டத் தலைவர் சாமிநாதன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோரைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி நகைச்சுவை பொங்க ஒரு மணி நேரம் உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் காட்டிய வழியில் பணியாற்றி சமூக விடுதலை பெறுவோம் என்றார். இளைஞரணித் தோழர் கா.யுவராசு நன்றி கூற கூடம் நிறைவுற்றது.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா புதுச்சேரி 26042017

26042017 அன்று மாலை புதுச்சேரி, தவளக்குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் சார்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 6-00 மணியளவில் ஏம்பலம் அடவு கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது. நிகழ்வுக்கு அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன் தலைமை வகித்தார்.த.பெ.தி.க. அமைப்பாளர் வீர மோகன், கிராமப்புற மக்கள் மேம்பாட்டு இயக்கத் தலைவர் சந்திரசேகரன், மக்கள் உரிமை இயக்கத் தலைவர் செகநாதன், வழக்கறிஞர் இராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் சிரீதர் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து ஆதி தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் வினோத், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சேலம் மாநகர விசிக கடிகாரம் அன்பளிப்பு 26042017

சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 56ஆவது கோட்ட செயலாளர் தோழர் எம்.எஸ்.ஏ. ஆர்ட்ஸ் முத்துராசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் வைப்பதற்காக, கிரானைட் கல்லில் பெரியார்-அம்பேத்கர் ஆகியோரின் உருவப் படங்களுடனும், கடிகாரம் பொறுத்திய முகவரிக்கல்லை 26042017 அன்று காலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். கழகத் தோழர் எல்.ஐ.சி. தனசேகரன் உடனிருந்தார்.  

இந்து மதமே பார்ப்பனியம் – பார்ப்பனியமே இந்து மதம் -நூல் அறிமுக விழா ஈரோடு 23042017

பகத்சிங் மக்கள் சங்கம், டாக்டர் அம்பேத்கரின் ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்ற நூலின் இறுதி அத்தியாயமான ’இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்’ என்கிற பகுதியை ”இந்து மதமே பார்ப்பனியம் – பார்ப்பனியமே இந்து மதம்” என்ற நூலை பதிப்பித்துள்ளது. அந்நூலின் அறிமுக விழா 23042017  ஞாயிறு அன்று மாலை 6-00 மணிக்கு, ஈரோடு ரீஜென்சி ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு நூலை தொகுத்து வெளியிட்ட மூத்த வழக்கறிஞர் தோழர் இரத்தினம் தலைமை தாங்கினார். நூல்குறித்த மூத்த வழக்கறிஞர்கள் திருமலைராஜன், ப.பா.மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி ஆகியோரின் அறிமுக உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை ஆற்றினார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி கூறினார்.

கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம் – கழக தலைவர் நேரில் ஆய்வு

ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப்பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து சட்ட, மகாள் திரள் போராட்டங்கள் போன்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அத ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க பொதுச்செயலாளர் வி.பி.குணசேகரன் ஆகியோருடன் கனிராவுத்தர் குளப் பணிகளைப் பார்வையிட்டனர். கழக மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன் உள்ளிட்ட பல தோழர்கள் உடனிருந்தனர்.

வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கழக தலைவர் பாராட்டு

சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர்  23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற Dr.B.R. AMBEDKAR SPORTS FOUNDATION திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் இனியன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன்  பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி திரு.புண்ணியமூர்த்தி அவர்கள் வழங்கினார். வெற்றிபெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார்.

மார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்!

மார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்!

திராவிட இயக்கங்களுக்கும் இஸ்லாமி யர்களுக்குமிடையே கடந்த காலங்களில் தலைவர்கள் கட்டிக் காத்த நல்லுறவை குலைத்துவிட கூடாது என்று ‘எஸ்பிஇசட் – ஈமெகசைன்’ என்ற இணைய ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை. “பகுத்தறிவுச் சிங்கம்” ஈ.வெ.ரா. பெரியார். தமிழகத்தில் திராவிடர்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இவ்வளவு ஆழமான உறவு இருப்பதற்கு, பெரியாரின் கொள்கைகளே காரணம். பெரியார் எதை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அவையனைத் தும் இஸ்லாத்தில் இயல்பாகவே தடை செய்யப்பட்டு இருந்தது. பெரியார் எதை வலுவாக ஆதரித்தாரோ அவை இஸ்லாத் தில் இயல்பாகவே வலியுறுத்தப்பட்டிருந்தது. தீண்டாமையை எதிர்த்தார். இஸ்லாத் தின் இயல்பிலேயே தீண்டாமை இல்லை. மாறாக அனைவரையும் அரவணைக்கும் குணாதிசயம் இருந்தது. குறிப்பிட்ட இனத்தவர்கள்தான் இந்த சாலையில் நடக்க வேண்டும். பிற இனத்தவர் இந்தப் பக்கமே வரக்கூடாது என்றிருந்தபோது இரண்டு இஸ்லாமியர்கள் ஒருசேர அமர்ந்து ஒரே தட்டில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டது பெரியாரை ஈர்த்தது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கோவிலுக் குள் வரக்கூடாது...

போராடும் விவசாயிகளுக்காக கழகம் போராட்டம்

போராடும் விவசாயிகளுக்காக கழகம் போராட்டம்

13-4-17 அன்று மாலை 4-00  மணியாவில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக…..கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசைக் கண்டித்து பா.ஜான்மண்டேலா  தலைமையில் சென்னை “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” நடைபெற்றது. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 25பேர் கைது செய்து சைதாப்பேட்டை கூ.மு. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் புதுவை கழகம் பாரூக் குடும்ப நிதியாக 2 இலட்சம் வழங்கியது 8-4-2017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல்...

பார்ப்பன போலிச் சடங்குகளை தோலுரித்த ‘சம்ஸ்காரா’ நாவல், உலகின் கவனத்தை ஈர்க்கிறது

பார்ப்பன போலிச் சடங்குகளை தோலுரித்த ‘சம்ஸ்காரா’ நாவல், உலகின் கவனத்தை ஈர்க்கிறது

நாவல் முன்வைக்கும் பிரச்சினைகள்  இன்றும் சமகால சமூகத் தளத்திலும் எழுப்பப்பட வேண்டியவை. கருநாடக பார்ப்பனர் யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘சம்ஸ்காரா’ என்ற நாவல் பார்ப்பனர் களின் போலிச் சடங்குகளை அம்பலமாக்கியது. பார்ப்பனர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கிய அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டது. இப்போது உலகம் முழுதும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டின் கார்டியன் பத்திரிகை பரிந்துரைத்த நாவல்களில் சம்ஸ்காராவும் இடம் பெற்றுள்ளது. இந்த நாவலின் உள்ளடக்கம் குறித்து ‘தமிழ் இந்து’வில் (மார்ச் 5) வாசந்தி எழுதிய கட்டுரை இது இங்கிலாந்திலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை அண்மையில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அனைத்து மாணவ உலகமும் அவசியம் படித்தாக வேண்டிய பத்துப் புத்தககங்களைத் தேர்ந்தெடுக்கும்படி பிரபல எழுத்தாளர்கள் பலரிடம் கேட்டது. ஆங்கில உலகில் அறியப்படாத ஆசியப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தார்கள். அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட பத்துப் புத்தகங்களுள் ஒன்று கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்தியின்...

அம்பேத்கரிய சிந்தனைகளை ஆழமாக அலசிய கருத்தரங்கம்

அம்பேத்கரிய சிந்தனைகளை ஆழமாக அலசிய கருத்தரங்கம்

“அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்; ஆழமான புரிதலுக்கு அழைக்கிறோம்” என்ற அறிவிப்போடு வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஏப்.23 அன்று மிகச் சிறப்பான கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பெரம்பூர் மேம்பாலம் அருகே உள்ள ‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் அரங்கில் இந்தக் கருத்தரங்கை நடந்த கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட் ராங் கழகத் தோழர் களுக்கு மகிழ்ச்சி யுடன் அனுமதி அளித்தார். அண்மை யில் திராவிடர் விடுதலை கழகத்தில் தங்களை இணைத் துக் கொண்ட பெண் தோழர்கள் சா.ராஜி, வ. சங்கீதா ஆகியோர் முன்னின்று, இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். சா. ராஜி தலைமையில் வ.சங்கீதா வரவேற்புரையாற்ற, மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எனும் தலைப்பில் அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளராக சித்தரிக்க முயலும் சங்பரிவாரங்களுக்கு பதிலளித்து. வரலாறுகளையும்...

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

“அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல” என்றார் அம்பேத்கர். பசுவதை தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது என்பதை விளக்கி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளி வந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள். அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தி லிருந்து விலகிப் போய் நீதிமன்றம் சட்டத்துக்கு மாறான தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்பதற்கு, ஒரு உதாரணம், ‘பசுவதைத் தடைச் சட்டம்’ குறித்து 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மக்களின் பாதுகாப்புக்காக உறுதி செய்யப்பட்ட சட்டங்களை அதன் நோக்கத்திலிருந்து திரித்து விடுவதும் அதிலிருந்து விலகி நின்று முடிவுகள் எடுப்பதும் கடும் எதிர்விளைவுகளை உருவாக்கி விடும் என்று கட்டுரை எடுத்துரைக்கிறது. இதற்கு அமெரிக்காவின் விண்வெளி...

வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி அலறலுக்கு கண்டனம்: மதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி

வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி அலறலுக்கு கண்டனம்: மதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி

சோனுநிகாம், பிரபல இந்தி திரைப்படப் பாடகர். பிறப்பால் சீக்கியர். மசூதி, கோயில், குருத்துவாராவில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு செய்வது ‘கட்டாய மதத் திணிப்பு’ என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பதில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதையும், கட்டாய மதத் திணிப்பு என்று அவர் கூறியிருந்தார். இதற்கு மதவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு இஸ்லாமிய மதக்குரு, சோனு நிகாமுக்கு எதிரான தண்டனையை அறிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் மைனாரிட்டி ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவராக இருப்பவர் சையத் ஷா அதொஃப் அலி அல் கொய்தாரி. அவர்வெளியிட்ட தண்டனை அறிவிப்பு இவ்வாறு கூறியது: சோனு நிகாம் தொழுகைக்கான ஒலி பெருக்கி அழைப்புக்கு (அசான்) எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், “அவர் தலையை மொட்டை அடித்து, கழுத்தில் கிழிந்துபோன செருப்பு மாலை போட்டு நாடு முழுதும் அதே கோலத்தில் அவரை இழுத்து வருவோருக்கு ரூ.10 இலட்சம் பரிசு தருகிறேன்” என்று அறிவித்திருந்தார். கடந்த ஏப்.18ஆம் தேதி...

“மாட்டுக்கறி உணவு விழா”  கழகத் தலைவர்  அறிக்கை

“மாட்டுக்கறி உணவு விழா” கழகத் தலைவர் அறிக்கை

தோழர்களுக்கு வணக்கம்! முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு “ஏதோ” மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு “மாலை மரியாதை” செய்ய வருவோருக்கு “நல்ல முறையில்” வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில் ”பெரியார் மன்றத்தில்” அல்லது அருகாமையில்...

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற  சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

கடவுள் – மதம் குறித்து கருத்துகளை தெரிவிப்பதே சட்டவிரோதம் என்று கூப்பாடு போடும் ‘இந்துத்துவ’ சக்திகளுக்கு கடிவாளம் போடும் முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மதத்தைப் புண்படுத்தும் பேச்சு, செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 295(ஏ) பிரிவை மதவாதிகள் பாதுகாப்பு அரணாக முறை கேடாகப் பயன்படுத்துகிறார்கள். மகாபாரதத்தை நடிகர் கமலஹாசன் விமர்சித்தார் என்பதற்காக மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நீதிமன்றம் போகிறார்கள். பெண்கள் அடிமைச் சின்னமான தாலியை அகற்றும் நிகழ்ச்சி நடந்தால் மத உணர்வை புண்படுத்துவதாக வழக்கு தொடருகிறார்கள். மதத்தை, கடவுளை, அறிவியல் சமூகக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் கருத்துரிமையையே இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி பறிக்கிறார்கள். எம்.எஸ். தோனி என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரை ‘மகாவிஷ்ணு’வாக சித்தரித்து, ஒரு வர்த்தக பத்திரிகை 2013இல் அட்டைப்படம் போட்டிருந்தது. இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாக தோனி மீது ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. ...

விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் 25042017

விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் தோழர் கொளத்தூ மணி அவர்கள்  தலைமையில் 25042017 அன்று நடைபெற்றது. கலந்துரையாடலில் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்,  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையிலும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் கழக தலைவரால் அறிவிக்கப்பட்டது தோழர் அல்லப்பட்டி பாண்டி, மாவட்ட தலைவர் தோழர் ப.வினோத், மாவட்ட செயலாளர் தோழர் பொறிஞர் செந்தில், மாவட்ட அமைப்பாளர் தோழர் பெ. இராமநாதன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர், தோழர் செயக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், செய்தி தோழர் பன்னீர்செல்வம் சூலூர்

பல்லடம் ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி உரை இளவரசன் மரணம்: ‘ஜாதிய’த்தின் கொலை தடையை மீறி கழகத்தினர் கைது

பல்லடம் ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி உரை இளவரசன் மரணம்: ‘ஜாதிய’த்தின் கொலை தடையை மீறி கழகத்தினர் கைது

தருமபுரி மாவட்டத்தில் திவ்யா-இளவரசன் என்ற வெவ்வேறு ஜாதியை சார்ந்தவர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், நத்தம், அண்ணாநகர், நாய்க்கன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் குடி யிருப்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அதன் பிறகும் பிரியாமல் வாழ்ந்து வந்த ஜாதி மறுப்பு இணையர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர்; ஜாதி வெறியர்களின் மிரட்டல்களால் திவ்யா தனது தாயாருடன் சென்றார். இறுதியில் 4-7-2013 அன்று இளவரசனின் உடல் இரயில் தண்டவாளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் சாவுக்குக் காரணமான ஜாதி வெறியர்களைக் கண்டித்து, 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3-00 மணியளவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையிலும், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் முன்னிலை யிலும் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். “ஜாதி...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

வினா:               பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாயாவதி, ‘பிராமணர்கள்’ மாநாடு நடத்தினார்!        – செய்தி விடை: மகிழ்ச்சி; தலித் மக்களுக்காக ‘பிரா மணர்கள்’ எப்போது மாநாடு நடத்தப் போகிறார்கள்? வினா: சென்னை செங் குன்றத்தில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஆடுகள் நீண்ட தூரம் பயணித்ததால் இறந்து விட்டன.            – செய்தி விடை: ஹெலிகாப்டரில் அழைத்து வந்திருக்கக் கூடாதா? வினா: இளவரசன் உடல் ‘போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு அது வீடியோ படமாக்கப் பட்டது.   – செய்தி விடை: அதில், ஜாதி அடையாளம் இருந்ததா, டாக்டர்? வினா: ராஜீவ்-ஜெய வர்த்தனா ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு வழங்கப் பட்ட உரிமைகளை பறிக்க இலங்கை அரசு முடிவு.                     – செய்தி விடை:தமிழர்களின் உரிமை களை மட்டுமா? ஒப்பந்தம் போட்ட இந்தி யாவின் மானத்தையும் சேர்த்துத்தான்! வினா: தேர்தல் அறிக்கை யில் இலவசங்களை வழங்குவதாக உறுதி யளிப்பது, நேர்மை யான, சுதந்திரமான தேர்தல்கள் நடப்பதை கேள்விக்குரியாக்கிவிடும்....