பத்ரிநாராயணன் 13ஆவது நினைவு நாள்

திராவிடர் விடுதலை கழகத்தின் கழக செயல் வீரர் பத்ரி நாராயணன் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் 30.4.17 அன்று  மிகுந்த எழுச்சியுடன் நடந்தது. அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள், காலை 9 மணி யளவில் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர், ஆசிரியர் திருப்பூர் சிவகாமி நிகழ்வில் பங்கேற்றார். தலைமைக் குழு  உறுப்பினர் அன்பு தனசேகரன்  வீரவணக்க முழக்கங் களை எழுப்பி உரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் அண்ணா மலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரூதர். கார்த்திக், குமரப்பா , தி.மு.க. ஆர்.என். துரை ஆகியோர் பத்ரியின் கொள்கை உறுதியை நினைவுகூர்ந்து உரையாற்றினர். இராயப்பேட்டை  பெரியார் படிப்பகத்தில் பத்ரி நாராயணன் புகைப்படத்திற்கு தலைமை கழகச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார்.  பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டி யிருந்தனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்வுகளை ஒருங்கிணைத் தார். பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் திரண்டிருந்தனர்.

நினைவு நாளையொட்டி ‘குழந்தைகள் பழகு முகாம்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

whatsapp-image-2017-05-09-at-17-02-36

You may also like...