Category: பெரியார் முழக்கம் 2015

காவல்துறை கெடுபிடிகள்-தடைகள் தகர்ந்தன மேட்டூரில் நாத்திகர் விழா-பேரணி 0

காவல்துறை கெடுபிடிகள்-தடைகள் தகர்ந்தன மேட்டூரில் நாத்திகர் விழா-பேரணி

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மே 30 அன்று மேட்டூர் புதுச்சாம்பள்ளியில் நாத்திகர் விழா-பேரணி-பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் கழக சார்பில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வி. தனபால் காவல்துறை விதித்த தடையை நீக்கி, விழாவுக்கு அனுமதி அளித்தார். விழா நடைபெறுவதற்கு இரு நாள் முன்புதான் அனுமதி கிடைத்தது. காவல்துறை விதித்த தடை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறவிருந்த மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், நாத்திகர்விழாவை எதிர்ப்பதாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டது. மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், அந்தக் கோயில் உள்ள பகுதிகளில் நாத்திகர் விழா நடப்பதற்கு எதிர்ப்பு காட்டுவதால், விழாவை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு காவல்துறை கெடுபிடி காட்டியது. பொதுக் கூட்டத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ள வற்புறுத்தினார்கள். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோயில் நிர்வாகிகளிடம் நேரில் பேசினார். அப்போது...

‘அவாள்’ பிடிக்குள் அமைச்சரவை 0

‘அவாள்’ பிடிக்குள் அமைச்சரவை

மோடி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது புதிதாக நியமனமான 4 காபினட் அமைச் சர்களில் 3 பேர் பார்ப்பனர்கள். மோடியின் அமைச்சரவையில் அதிகாரங்களுடன் அமர்த்தப்பட் டுள்ள பார்ப்பன அமைச்சர்கள். அவரது துறைகள்: சுஷ்மா சுவராஜ் – வெளி விவகாரத் துறை; அருண் ஜெட்லி – நிதித் துறை; நிதின் கட்காரி – கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை; கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை; அனந்த் குமார் – இரசாயனம் மற்றும் உரத் துறை; மனோகர் பாரிக்கர் – பாதுகாப்புத் துறை; சுரேஷ் பாபு – தொடர்வண்டித் துறை; ஜெ.பி. நட்டா-சுகாதாரத் துறை. இது தவிர, வணிக வரித்துறை அமைச்சராக முழு அதிகாரம் பெற்ற இணை அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன். இந்தி யாவில் மத்திய அமைச்சரவை யில் இதற்கு முன் இவ்வளவு அதிக எண்ணிக்கை யில் பார்ப்பனர் கள் இடம் பெற்றதில்லை. முக்கியத் துறைகள்...

மோடியின் ஓராண்டு – மதவெறிக் கூச்சல்கள் 0

மோடியின் ஓராண்டு – மதவெறிக் கூச்சல்கள்

• ‘இராஜிவ் காந்தி ஒரு நைஜிரிய நாட்டுப் பெண்ணை (கருப்பர் இனம்) திருமணம் செய்திருந்தால், காங்கிரஸ் கட்சி, அவரை தலைவராக ஏற்றிருக்குமா?’ என்று மத்திய அமைச்சர் கிரி ராஜ்சிங் என்பவர் பேசினார். (மோடியே, இதற்காக இவரை மன்னிப்புக் கேட்கச் சொன்னார்) • டெல்லி சட்டசபை தேர்தலில் ஒட்டு கேட்ட மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோஷி, ‘இராமனின் பிள்ளைகளை தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா? முறை தவறிப் பிறந்தவர் களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?’ என்று வாக்காளர்களிடம் பேசினார். (வாக்காளர்கள், ‘இராமனின் பிள்ளைகள்’ வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர்) • காந்தியைக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றார், உ.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜி. ‘காந்திக்கு பதிலாக நேருவை கோட்சே சுட்டுக் கொலை செய்திருக்க வேண்டும்’ என்றார், கேரளாவைச் சார்ந்த ஒரு பா.ஜ.க. தலைவர். • ‘இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெற்று, அதில் ஒரு குழந்தையை கோயிலுக் கும், ஒரு குழந்தையை ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் முழுநேர...

மோடியின் ஓராண்டு – அருண் ஜெட்லி, கதை இது! 0

மோடியின் ஓராண்டு – அருண் ஜெட்லி, கதை இது!

மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி – இந்த மூவர் குழுதான், இப்போது ஆட்சியில் அதி காரத்தைக் கையில் வைத்திருப் பவர்கள். அருண் ஜெட்லி, நிதியமைச்சராகவும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே போய° தோட்டத்துக்கு வந்து அவரை நேரில் சந்தித்துப் பேசியவர் அருண் ஜெட்லி! பார்ப்பன அம்மையாரை பார்ப்பன அமைச்சர் சந்தித்ததால் இந்த அப்பட்டமான அதிகார முறைகேட்டை ஊடகங்கள் ஊதிப் பெருக்கவில்லை. பல கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்கறிஞராகவும், சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டவர் ஜெட்லி. இவருடைய இரட்டை வேடம் அதிகார முறைகேடுகளுக்கு இரண்டு உதாரணங்கள்: 2012இல் மாநிலங்களவையில் பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அருண் ஜெட்லி. நிலக்கரி ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங் ஆட்சி மீது புகார்கள் வந்த நேரம். அப்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜுடன் இணைந்து போர் முரசு கொட்டினார். இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத்தை...

மோடியின் ஓராண்டு – துள்ளிக் குதிக்கும் சு.சாமி 0

மோடியின் ஓராண்டு – துள்ளிக் குதிக்கும் சு.சாமி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அக்கட்சிக்கான செயல் உத்திக் குழுவின் தலைவர் என்ற பதவி கிடைத்தது, சுப்ரமணியசாமிக்கு. அதிகார போதை தலைக்கேறி, அவர் அவ்வப்போது உதிர்த்த ‘முத்துக்கள்’ சில: • இராஜபக்சே அதிபராக இருந்தபோது, அந்த இனப்படுகொலையாளரை நேரில் சந்தித்துப் பேசினார் சுப்ரமணியசாமி. “அய்.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். அந்த அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்லெறிந்தால், ஓடும் காக்கையைப் போன்றது அந்த அமைப்பு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளேட்டுக்கு பேட்டி அளித்தார் (ஜூலை 23, 2014). • கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச இராணுவ ஆய்வு மய்யத்தில் ‘மோடியின் இந்தியா’ எனும் தலைப்பில் சுப்ரமணியசாமி பேசினார். அவரது பேச்சால் துணிவும் நம்பிக்கையும் பெற்ற இலங்கை இராணுவத் துறை, ஆணவத்தின் உச்சிக்குப் போனது. “மீனவர்கள் சிறை பிடிப்புக் குறித்து, தமிழக முதல்வர், மோடிக்கு எழுதும் கடிதங்கள், காதல் கடிதங்களைப் போன்றது” என்று...

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு ‘தமிழவேள்’ சாரங்கபாணியிடம் பெரியாரின் பெருமதிப்பு 0

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு ‘தமிழவேள்’ சாரங்கபாணியிடம் பெரியாரின் பெருமதிப்பு

தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டு ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி. சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேசு நூலுக்கு முன்னுரை எழுதும் போது, அதன் ஆசிரியர் அ.சி.சுப்பய்யா ஒன்றை சொல்லுகிறார். நம்மவர் என்பதற்காக எல்லோரையும் ஏற்றுக் கொள்வ தில்லை. 1948இல் முன்னுரை எழுதுகிறார் என்றால், அதற்கு முன்பு பல ஆண்டுகள் நூலை எழுதியிருக்க வேண்டும். இந்த விரிவான நூலை நீண்ட காலம் எழுதியிருக்க வேண்டும். 1938இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது சுயமரியாதை இயக்கத்தோடு பலர் உடன் இணைந்து போராடியவர்கள் இருந்தார்கள். மறைமலையடிகள் இருந்தார். சோமசுந்தர பாரதியார் இருந்தார். உமாமகேசுவரம் பிள்ளை இருந்தார். திரு.வி.க. இருந்தார். எல்லோரும் கூட இருந்தவர்கள்தாம். பெரியாரோடு...

ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அதிகார மய்யம் நோக்கி… 0

ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அதிகார மய்யம் நோக்கி…

• ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ – மேல் மட்டத்து ஊழல்களை வெளிக் கொண்டு வருவதற்கும், ‘அரசு இரகசியங்கள்’ என்ற போர்வையில் முடக்கப் பட்ட மக்கள் விரோத செயல்பாடுகளை வெளியே கொண்டு வருவதற்கும் மக்களுக்குக் கிடைத்த ஆயுதம். ஆனால், இந்தச் சட்டத்தை சுரண்டும் ஆளும் வர்க்கங்களால் செரிமானம் செய்ய முடியவில்லை; சட்டம் வழங்கியுள்ள உரிமைகள், காங்கிர° ஆட்சி காலத்திலிருந்து படிப்படியாக பறிக்கப்பட்டு வரு கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், 2014 ஆக°டிலிருந்து தலைமைத் தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட் டிருப்பதுதான். 2008ஆம் ஆண்டு இப்பதவிக்கு சைலேஷ் காந்தி என்பவர் நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு ஆக°டில் அவர் ஓய்வு பெற்று விட்டார். 9 மாதங்களாக இப்பதவி காலியாகவே இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கும் நோக்கத்துடனேயே மோடி ஆட்சி, ஆணையர் பதவியை நிரப்பாமல் காலம் கடத்தி வருவதாக ஊடகங்களுக்கு சைலேஷ் காந்தி பகிரங்க கடிதம் எழுதினார். இதன் காரணமாக...

மோடியின் ஓராண்டு – அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க.வினரின் ‘தலித்’ விரோதக் கொள்கைகள்! 0

மோடியின் ஓராண்டு – அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க.வினரின் ‘தலித்’ விரோதக் கொள்கைகள்!

• கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை, 82.771 கோடியாக இருந்தது. இப்போது 69.74 கோடியாக வெட்டப் பட்டு விட்டது. ஆனால், ‘கங்கை’யை தூய்மை யாக்குவதற்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. 50 ஆண்டுகாலமானாலும் இத் திட்டம் நிறைவேறப் போவது இல்லை என்கிறார், முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி. இதைவிடக் கொடுமை, பள்ளிக் குழந்தைகளை மீண்டும் ‘குலக்கல்வி’யான ஜாதித் தொழிலுக்கு குழந்தைகளை தள்ளி விடுவதற்கு இந்த ஆட்சி ஒப்புதல் தந்திருப்பதாகும். கல்வி உரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் நோக்கத்தையே குலைத்துவிட்டது மோடி ஆட்சி. ‘பள்ளிக் குழந்தைகள், குடும்பத்தில் பெற்றோர்கள் செய்யும் வேலைகளில் ஈடுபடலாம்’ என்று குழந்தைகள் வேலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த ஒப்புதல் தந்துள்ளது. “குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்” எனும் சட்டம் 1986ல் கொண்டு வரப்பட்டு, குழந்தைகளை தொழி லாளர்களாக்குவதை தடுத்தது. கல்விக்கான நிதியை குறைத்துவிட்டு, குழந்தை களையும் குலத்தொழிலில் பங்கேற்க பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்; மீண்டும் ‘வர்ணா...

அதிகார மமதையில் ஆணவக் குரல்கள்! 0

அதிகார மமதையில் ஆணவக் குரல்கள்!

வானத்தை வில்லாக்குவேன்; மணலைக் கயிறாக்குவேன் என்ற தொனியில் மக்களிடம் தேர்தலுக்கு முன்பு மோடி பேசினார். ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்தவுடனே நாட்டை பார்ப்பன மயமாக்க வேகவேகமான அறிவிப்புகள் வரத் தொடங்கின. இவற்றிற்கு எதிர்பாராத இடங்களிலிருந்துகூட எதிர்ப்புகள் வரத் தொடங்கின. சில அறிவிப்புகளை பின் வாங்கிக் கொண்டார்கள். சிலவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வப்போது அதிகார மமதையில் பார்ப்பன ஆணவக் குரல்கள் காதைத் துளைத்துக் கொண்டே இருக்கின்றன. அது குறித்த ஓர் தொகுப்பு இது: • மோடி பிரதமரானவுடன் இந்தி மொழியில் மட்டுமே பேசுவார் என்று அரசு அறிவிப்பு வந்தது. • சமூக வலை தளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் இந்தியிலேயே கருத்துகளைப் பதிவிட வேண்டும் என்று அரசு அறிவித்தது. எதிர்ப்பு வந்த வுடன் இந்தி பேசாத மாநிலங் களுக்கு இது கட்டாயமில்லை என்று குரலை மாற்றிக் கொண் டார்கள். • தமிழ் நாளேடுகளில் தொடர் வண்டித் துறை இந்தியில் மட்டுமே விளம்பரத்தை வெளி...

மோடியின் ஓராண்டு – கார்ப்பரேட் நலன் காக்கும் ஆட்சி 0

மோடியின் ஓராண்டு – கார்ப்பரேட் நலன் காக்கும் ஆட்சி

• கார்ப்பரேட் நலன்களுக்காகவே நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. ஏற்கெனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகக் கைப்பற்றப்பட்ட நிலங்களில் பாதியளவுகூட பயன்படுத்தாமல் கிடக்கின்றன. இப்போது மேலும், நிலங்களைப் பறிக்க ஏன் துடிக்கிறார்கள்? மன்னர்கள் ஆட்சி காலங்களில் ‘பிராமணர்’களுக்கு நிலங்களை ‘தானமாக’ வழங்கி பெருமைப்பட்டார்கள். இப்போது கார்ப்பரேட்டு களுக்கு மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி, ‘தானமாக’க் கொடுக்க அரசு துடிக்கிறது. பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்கும் பனியாக்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்தான் இப்போதும் நிலங்கள் கைமாறப் போகின்றன. ஆக, அன்று ‘சதுர்வேதி மங்களங்கள்’; இன்று நிலப் பறிப்புச் சட்டங்கள்! • பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் காங்கிரசுக்கு சற்றும் குறைந்தது அல்ல பா.ஜ.க. இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன. அரசு பொதுத் துறை நிறுவனமான நிலக்கரி நிறுவன பங்குகளை காங்கிர°, தனியாருக்கு விற்க முயன்றபோது, தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்த்தன. இப்போது, மோடி ஆட்சியில்...

யோகா நாளா? இந்துத்துவ நாளா? 0

யோகா நாளா? இந்துத்துவ நாளா?

சர்வதேச ‘யோகா நாளை’ இந்துத்துவத்தின் செயல் திட்டமாக்க மோடி ஆட்சி முயற்சிக்கிறது. மதம்-கடவுள் நம்பிக்கைகளோடு தொடர்பில்லாத உடல் – மூச்சுப் பயிற்சியாக யோகாவை பரிந்துரைக்கலாமே தவிர, அதை பள்ளிகளில் கட்டாயப்படுத்தி, கடவுள்-மத நம்பிக்கைகளைத் திணிக்க முயல்வது கண்டிக்கத் தக்கது. பசி, வறுமை, சமூக நெருக்கடிகள் சூழ்ந்து நிற்கும் மக்கள் பிரச்சினைக்கு ‘யோகா’ தீர்வாகிட முடியாது. பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிக்கச் செய்ய வேண்டுமே தவிர, தப்பிக்கச் சொல்லும் வழிமுறைகள் வெற்றி பெற முடியாது. அய்.நா. அறிவித்துள்ள உலக யோகா தினத்தை பல இ°லாமிய நாடுகளும் ஆதரித்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புகளையும் பகைமை உணர்வையும் திணித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன மதவாதம், யோகாவின் வழியாக பிரச்சினைகளுக்கு வடிகால் தேடிக் கொள்ள அறிவுறுத்துவது, காதில் பூ சுற்றும் வேலையாகும். பெரியார் முழக்கம் 18062015 இதழ்

கார்ப்பரேட் கலாச்சார கயமைகளை தோலுரிக்கும் ‘காக்கா முட்டை’ 0

கார்ப்பரேட் கலாச்சார கயமைகளை தோலுரிக்கும் ‘காக்கா முட்டை’

கோழி முட்டைகளை வாங்கும் வசதியில்லை; காக்காய் இடும் முட்டைகளை திருடி, அப்படியே முட்டைபோல் விழுங்கலாம்; இது விலை இல்லாத முட்டை. இதேபோல் கோழி, ஆட்டுக்கறியை விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு, அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டுக்கறி. ஆனால், ‘மதவெறி’ ஆட்சியாளர்கள் மாட்டுக் கறிக்குத் தடைப் போட்டு, எளிய மக்களின் உணவு உரிமையைப் பறிக்கிறார்கள். நல்லவேளை, கருப்பு காக்காய் வணங்கப்படும் ‘புனித’ப் பறவையாக இல்லை. இல்லையேல், ‘காக்கா முட்டைக்கும்’, காவிக்காரர்கள் தடைகேட்டுப் போராடக் கிளம்பியிருப்பார்கள். ‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கை வந்து விட்டாலே, சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதிகள் அதிகரித்து, அதனால் இந்தியா வுக்குள் நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வந்து சேரும். ஜாதிய தீண்டாமைகள், பழமை வாதங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று கணித்தவர்கள் உண்டு. ஆனால், என்ன நடந்தது? ஜாதிய-சமூக இடைவெளியை மேலும் அகலப் படுத்தி, விளிம்பு நிலை மக்களை வேகமாக மய்ய நீரோட்டத்திலிருந்து விரட்டி அடித்து விட்டது....

மதமாற்றம்: அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி 0

மதமாற்றம்: அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி

சாதி வேறுபாடு, குறிப்பாகத் தீண்டாமையை ஏற்றுக் கொள்ளாத புத்தமதத்திற்கு மாறுவதென்று அம்பேத்கர் முடிவு செய்தார். 1956 அக்டோபர் 14, 15 ஆகிய நாள்களில் நாகபுரியில் புத்தமதத்தை அம்பேத்கர் தழுவினார். அவருடன் ஆயிரக்கணக்கான மகர்களும் வேறு சமூகங்களைச் சேர்ந்த தோழரும் இணைந்தனர். மக்கள், புத்தமத முறைப்படி தீட்சை ஏற்றனர். 83 வயது நிரம்பியவரும், பர்மா (மியான்மர்) நாட்டினருமான புத்த பிக்கு, அவருக்கு தீட்சை வழங்கினார். இவர்கள் தழுவிய புத்தமதம் தேரவாத பௌத்தமாகும். திரி சரணம் (புத்தம் சரணம், தர்மம் சரணம், சங்கம் சரணம்) கோட்பாடுகளுடன், 22 உறுதி மொழிகளையும் கூறி மதம் மாறினார்கள். மராத்தி மொழியில் எடுக்கப்பட்ட அவ்வுறுதிமொழிகளில் சில வருமாறு: 1. பிரம்மா, விஷ்ணு, மகேஷ் ஆகியோரை நான் கடவுளாகக் கருதவும் மாட்டேன், வணங்கவும் மாட்டேன். 2. இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாகக் கருதி வணங்க மாட்டேன். 3. கௌரி, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களை வணங்க மாட்டேன். 4. கடவுள் பிறப்பதாகவோ,...

வரலாற்று நிகழ்வுகளை சுட்டி கொளத்தூர் மணி உரை ஒரே பாதையில் பயணித்த பெரியார்-அம்பேத்கர் 0

வரலாற்று நிகழ்வுகளை சுட்டி கொளத்தூர் மணி உரை ஒரே பாதையில் பயணித்த பெரியார்-அம்பேத்கர்

தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டு ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி. திராவிட நாடு என்பது சிலர் சொல்வதைப் போல கர்நாடக, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்ததல்ல என்பதை பெரியார், எப்போதும் தெளிவாக புரிந்திருக்கிறார். தெளிவற்றவர்கள்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரே அரசியல் அலகாக இருந்த சென்னை மாகாணத்தில் தன்னோடு அரசியல் பணி ஆற்றிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாதாருடைய நலனுக்காக போராடிக் கொண்டிருந்தவர்களை உடன் இணைத்துக் கொண்டு பெரியார் சொன்னார், ‘எப்போது அவர்கள் மொழி வழி மாநிலமாக தனியாகப் பிரிந்து போனார்களோ அப்போது தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் சொல்லி விட்டார். 1956 இல் மொழிவழி மாநிலம் பிரிந்தது. ‘பிரிஞ்சு போனதை விட்டுவிடு. மீதியெல்லாம் நம்ம நாடு’ என்றார் பெரியார்....

மன்னையில் வாசகர் வட்டம் தொடக்க விழா பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்த சதி 0

மன்னையில் வாசகர் வட்டம் தொடக்க விழா பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்த சதி

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஜூன் 4ம் தேதியன்று மன்னார்குடியில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. முறையாக 5 நாட்களுக்கு முன்பே காவல்துறையில் அனுமதி கேட்டும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குமாரசாமி திருமண அரங்கத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று கவிஞர் கலைபாரதி உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு கருத்தரங்கத்திற்கு தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக்கழக தலைமைக்குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி பால்பிரபாகரன், திருப்பூர் துரைசாமி, ஈரோடு இரத்தினசாமி, கோபி, இராமஇளங்கோவன், தமுமுக மாவட்ட செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். அம்பேத்கர் பெரியார் “சமூக விடுதலையின் கலகக் குறியீடுகள்” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி உரையாற்றினார். அவர் தனது...

வரலாற்று நிகழ்வுகளை சுட்டி கொளத்தூர் மணி உரை மருத்துவமனை-கல்லூரிக்கு வாரி வழங்கிய ‘கஞ்சன்’தான் பெரியார்! 0

வரலாற்று நிகழ்வுகளை சுட்டி கொளத்தூர் மணி உரை மருத்துவமனை-கல்லூரிக்கு வாரி வழங்கிய ‘கஞ்சன்’தான் பெரியார்!

தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டு ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி. மலாயா தமிழர்களின் முக்கிய தலைவரான உ.இராமசாமி நாடார் தமது சொந்த வீட்டை தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு கொடுத்திருக்கிறார். அந்த படத்தையெல்லாம் இதில் போட்டிருக்கிறார். மீண்டும் அ.சி.சுப்பய்யா 74 வது பிறந்த நாள் வருகிறது. கேட்கிறார். கட்டிடம் பழுதாகி இருக்கிறது. உடனே கூறுகிறார்: “கவலைப் படாதீர்கள். ரிப்பேர் செய்ய நான் பணம் தருகிறேன். முழுச்செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்கிறார். உடனே அதை முழுமையாகச் சரி செய்கிறார்கள். பெரியாரை கஞ்சன் கஞ்சன் என்று சொல்லு வார்கள். அப்படி சொல்லித்தான் நமக்கு பழக்கம். கோவையில் மருத்துவக் கல்லூரி வருகிறது. தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வந்தவுடன் கல்லூரியின் மருத்துவமனையாக...

தலையங்கம் – மீண்டும் அவசர நிலையா? 0

தலையங்கம் – மீண்டும் அவசர நிலையா?

இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராது என கூற முடியாது என்று அத்வானி, ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டி – பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. அத்வானி, மோடியைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை, ஆளும் கட்சியினர் மறுக்கின்றனர். அவர் பொதுவாகக் கூறிய கருத்து என்கிறார்கள். 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள ‘அடிப்படை உரிமைகளை’ தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவசர நிலையை அறிவித்தார். ‘மிசா’ சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். ‘மிசா’ சட்டம் என்றால், (ஆயiவேநயேnஉந டிக ஐவேநசயேட ளுநஉரசவைல ஹஉவ) எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கும் சட்டம். பத்திரிகைகள், அரசு அதிகாரிகளால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் அனுமதித்த செய்திகள் மட்டுமே வெளியிட முடியும். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அத்வானியும், ‘மிசா’வில் கைது செய்யப்பட்டவர்தான். ‘அவசர நிலை’ இந்தியாவில் சட்டப்படி இப்போது...

ஒரு களப்போராளியின் நினைவுகளும் நிகழ்வுகளும் 0

ஒரு களப்போராளியின் நினைவுகளும் நிகழ்வுகளும்

நாகை வட்டத்தில் களப் போராளியாக செயல்பட்ட தோழர் ஏ.ஜி. க°தூரிரெங்கனின் (ஏ.ஜி.கே.) ‘நினைவுகளும் நிகழ்வு களும்’ நூலை, கும்பகோணம் சாக்கோட்டையிலிருந்து ‘ரிவோல்ட்’ பதிப்பகம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. ஏ.ஜி.கே. அவர்களுடன் நேரில் உரையாடி பதிவு செய்து மிகச் சிறப்பான தொகுப்பாக்கியிருக்கிறார் தோழர் பசு. கவுதமன். வெளியிட்டிருப்பவர் தோழர் இளங்கோவன். “வர்ண வேறுபாடுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் வெட்டிப் புதைத்த இரத்தக் கறை படிந்த கொடுவாளாய் – தூக்குக் கயிற்றைத் தொட்டு நின்ற சிறைப் பறவையாய் – சுயமரியாதையே சுதந்திரம் என்ற சுயத்தோடு அமைப்பாய் – இயக்கமாய் வாழ்ந்து கொண்டுள்ள ஒரு கருப்பு மனிதனின் சிகப்புப் பதிவு இது” – என்று தொகுப்பாசிரியர் முன்னுரையில் சுட்டியிருப்பது மிகைக் கூற்று அல்ல; உண்மைகளே என்பதை, நூலைப் படிக்கும்போது நிச்சயமாக உணர முடியும். நாகை, திருவாரூர், கீழ்வேளூர், திருக்குவளைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதி நாகை வட்டம். இந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகளை ஒருங்கிணைத்து, நடத்தப்பட்ட ஜாதிய ஒடுக்கு...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

சபரிமலை அய்யப்பன் பாதுகாப்புக்கு ‘ரோபோ’க்களை (எந்திர மனிதன்) பயன்படுத்த நிர்வாகம் முடிவு. – செய்தி பெண் ‘ரோபோ’வாக இருந்துடப் போவுது; அப்புறம் சாமிக் குத்தமாயிடும். யோகாவில் ‘சூரிய நமஸ்காரம்’ வேண்டாம் என்பவர்கள் – கடலில் போய் விழலாம். – பா.ஜ.க. எம்.பி. ஆதித்ய நாத் வேண்டாம் என்று முடிவு செய்தவர் மோடிதான்! ‘அங்கன்வாடி’யில் குழந்தைகளுக்கு முட்டை போட ம.பி. பா.ஜ.க. ஆட்சி தடை. – செய்தி இப்படியே போனா, கோழிகளே முட்டை போட தடை விதிச்சுடுவாங்க போல! இந்தியாவில் 2015இல் பசி, பட்டினியால் வாடுவோர், 19 கோடியே 40 இலட்சம் பேர். – சீத்தாராம் எச்சூரி அம்புட்டு பேரையும் அப்படியே ‘யோகா’வுக்கு கொண்டு வாங்க! மனசோடு உடலை இணைச்சுக் காட்டுவோம்; அப்பவே பசி பறந்து போயிடும்! கோயிலுக்கு தேர் செய்வதில் ரூ. 60 இலட்சம் மோசடி; திருநின்றவூர் பார்ப்பன அர்ச்சகரை நீக்கியது அறநிலையத் துறை. – செய்தி இதற்குத்தான் கோயிலில் அரசு...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வழக்கு: எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம் 0

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வழக்கு: எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை குறித்து வழக்கின் விவாதங்கள் உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்துள்ளன. தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. பெரியார் தனது வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்பதாகும். கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மதச் சுதந்திர உரிமை’யைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் தங்கள் ‘பிராமண’ பிறவி மேலாண்மையை சட்டப்படி உறுதியாக்கிக் கொண்டு, பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயிலுக்குள் நுழையும் உரிமை, அனைத்து ஜாதியினருக்கும் வந்துவிட்டாலும், ‘கடவுளை’ தங்கள் மந்திரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள பார்ப்பனர்கள், ‘கர்ப்பகிரக’ உரிமையை உறுதிப்படுத்த துடிக்கிறார்கள். 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவிட பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து, சட்டமன்றத்தில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, ஜீயர்கள் உள்ளிட்ட பார்ப்பனர்கள் நேராக உச்சநீதிமன்றம் சென்றார்கள். ‘சேஷம்மாள் வழக்கு’ என்று அழைக்கப்பட்ட இந்த வழக்கை, உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. ‘அர்ச்சகர்...

‘தலித்’ அர்ச்சகர் நாகமுத்து தற்கொலை: பின்னணி என்ன?

‘தலித்’ அர்ச்சகர் நாகமுத்து தற்கொலை: பின்னணி என்ன?

பெரிய குளம் கைலாச நாதன் கோயில் அர்ச்சகர் நாகமுத்துவை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்பியும், பெரிய குளம் நகராட்சித் தலைவருமான ராஜா என்பவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிகாரச் செல்வாக்குக் காரணமாக அவருக்கு பிணையும் கிடைத்துவிட்டது. இந்த வழக்கிற்கு ‘அர்ச்சகர் தற்கொலை வழக்கு’ என்று ஊடகங்கள் பெயர் சூட்டியிருக்கின்றன. இதற்குப் பின்னால், ஒரு வரலாறு உண்டு. நாகமுத்து, தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர். இவர் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு 2012 செப். 17இல் வெளியிட்டது. அந்த செய்தி இது: “டி. கல்லுப்பட்டியிலுள்ள கைலாசநாதன் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகராக இருந்து வருபவர் நாகமுத்து. அவர் ஒரு தலித். நான்கு மாதங்களுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே 5ஆம் தேதி கோயில் நிர்வாகக் குழுவில் இருந்த தலித் அல்லாத சாதியினர், நாகமுத்துவை...

பார்ப்பனர்களின் அறிவு ‘விபச்சாரம்’ – அம்பேத்கர் 0

பார்ப்பனர்களின் அறிவு ‘விபச்சாரம்’ – அம்பேத்கர்

பார்ப்பனர்களின் சங்பரிவார் களும், இந்து தேசியப் பா.ஜ.க. வினரும் அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். பார்ப்பனர் பற்றி அம்பேத்கர் ஆழமாக முன் வைத்த வரலாற்று சித்திரம் இது. பார்ப்பனர்களை எடுத்துக் கொள்வோம். வரலாற்று வழியில் இவர்கள்தான் மொத்த இந்து மக்கள் தொகையில் சுமார் எண்பது சதவீதமாக அமைந்துள்ள அடிமை வகுப்புகளுக்கு (சூத்திரர்களும் தீண்டாதார்களுக்கும்) பரம வைரியாக இருந்துள்ளார்கள். இன்று இந்தியாவில் அடிமை வகுப்புகளைச் சேர்ந்த சாமானிய மனிதனின் இவ்வளவு இழிந்த வனாக, இவ்வளவு தாழ்ந்தவனாக, இப்படிக் கொஞ்சம்கூட நம்பிக்கை யும் ஆவலும் அற்றவனாக இருக் கிறான் என்றால், பார்ப்பனர்களும் அவர்களின் தத்துவமும்தான் இதற்கெல்லாம் முழுக் காரணம். இந்தப் பார்ப்பனிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஐந்து: (1) வெவ்வேறு வகுப்புகளிடையே படிப்படியான ஏற்றத் தாழ்வு; (2) சூத்திரர்களையும் தீண்டாதார் களையும் அறவே ஆயுத நீக்கம் செய்தல்; (3) சூத்திரர்களும் தீண்டாதார்களும் கல்வி பெறுவதை அடியோடு தடை செய்தல்; (4) சூத்திரர்களும் தீண்டாதார்களும் அதிகாரம் வாய்ந்த...

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்… 0

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்…

இது உண்மைதானா என்று வியக்க வைக்கும், ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழக காவல்துறையும் கல்வித் துறையும் இணைந்து, ஜாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, தமிழகம் முழுதும் வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை வடிவங்களில் பரப்புரை நடத்துகிறது என்பதுதான் அந்த செய்தி. தமிழகக் காவல்துறைக்கு இப்படி ஓர் அரிய ஆலோசனை எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு திட்டத்தை காவல்துறையும் கல்வித் துறையும் உருவாக்கி, களமிறங்கியதற்காக நாம் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், இந்த அடிப்படையான பிரச்சினையை தனது தோளில் சுமந்து, பல ஆண்டுகளாகவே களத்தில் நிற்கும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடிவெட்ட மறுத்தல், செருப்பு அணிய, சைக்கிள் ஓட்ட, அலைபேசி பேச தடை என்று பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் தொடருகின்றன. இவற்றின் விவரங்களைத் தொகுத்தும் இரட்டைக் குவளை முறைகளை பின்பற்றும்...

இளவரசனைத் தொடர்ந்து கோகுல்ராஜ் ஜாதி ஆணவக் கொலை: கழகம் கடும் கண்டனம் 0

இளவரசனைத் தொடர்ந்து கோகுல்ராஜ் ஜாதி ஆணவக் கொலை: கழகம் கடும் கண்டனம்

‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ்நாட்டுக்கே தலைகுனி வாகும். 2013ஆம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர், திவ்யா என்ற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ‘குற்றத்துக்காக’ அவர்களை ஜாதி வெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்திப் பிரித்தனர். கடைசியில் இளவரசன் உடல் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜ், அதே ‘கதிக்கு’ ஆளாகியுள்ளார். ‘உயர்ஜாதி’ என்று சொல்லிக் கொள்ளும் ‘கவுண்டர்’ ஜாதிப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்ததால் அவர் ஜாதி வெறியர்களால் கடந்த 23ஆம் தேதி கடத்தப்பட் டுள்ளார். 24ஆம் தேதி தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே இரயில் தண்டவாளத்தில் அவர் பிணமாகக் கிடந்தார். திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு கோகுல் ராஜ், ஒரு மாணவியுடன் சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது. கடைசியாக 7 பேர் கொண்ட ஒரு கும்பல்,...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

மதுக்கடைகளுக்கு கடவுள் பெயர் வைக்க ஆந்திர அரசு தடை. – செய்தி அப்படியே மதுக் குடியர்களும் கடவுள் பெயரை வைக்க தடை போட்டுடுங்க… அத்வானி யாரை மனதில் வைத்து அவசர நிலை பற்றிப் பேசினார்? – சிவசேனா கேள்வி தான், ஓரம் கட்டப்படுவதை மனசுல வைச்சுகிட்டுத்தான் பேசினாரு! யோகா செய்யும் கைதிகளுக்கு தண்டனை காலம் குறைக்கப்படும். – ம.பி. அரசு போற போக்கைப் பார்த்தா, யோகா செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லைன்னு அறிவிச்சிடுவீங்க போல! பூரி ஜெகநாதன் கோயிலில் ‘ஆகம விதிகள்’ மீறப்படுவதை எதிர்த்து ஒரிசாவில் காங்கிர° சார்பில் முழு அடைப்புப் போராட்டம்.  – செய்தி இந்த முழு அடைப்புல பூரி ஜெகநாதன் கலந்து கிட்டானா? அவன் கோயிலும் மூடப்பட்டதா? ஏழுமலையான் கோயிலுக்கு மேல், பாதுகாப்புக் கருதி விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும். – திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்குள்ளே விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வச்சிடலாம். அப்பதான் ஏழுமலையானுக்கு பாதுகாப்பு! ஆர்.கே. நகரில்...

‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சி: நடந்தது என்ன? 0

‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சி: நடந்தது என்ன?

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரைக்கு மறுப்பு பெரியார் நடத்திய ‘பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்புக் கிளர்ச்சிக்’ குறித்து, போராட்டம் நடந்த ‘முரளி கபே’ உரிமையாளரின் மகன் , ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் (ஜூன் 19) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெரியார் காலங்களில் அவர் நடத்திய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் வன்முறை நடந்தது இல்லை என்று ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைக்கு (ஜூன் 26) மறுப்பாக, இது வெளி வந்திருக்கிறது. முரளி கபே ஓட்டல் மறியலில் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் ஈடுபட்டதாக உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார். ‘பிராமணாள்’ என்பது அசைவ உணவைக் குறிப்பிடும் சொல் என்றும் வாதாடுகிறார். ‘பிராமணாள்’ என்பது ஏனைய பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் குறியீட்டுச் சொல். இதற்கான விளக்கங்களைத் தந்து உரிய வேண்டுகோள் கடிதங்களை எழுதிய பிறகே பெரியார் போராட்டத்தைத் தொடங்கினார். வன்முறையை பின்பற்ற விரும்பியிருந்தால், அந்த பெயர்ப் பலகையை ஒரே நாளில் எடுத்து...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

குடியரசுத் தலைவர் திருப்பதி வருகை: 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம். – செய்தி இதுக்கெல்லாம், ‘ஆகம’ விதி அனுமதிச்சுடும் போல. சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசிடம் தேவையான நிதி இல்லை. – நீதிமன்றத்தில் அரசு மனு அப்படி, என்ன ‘ஆலிவுட்’ படமா எடுக்கப் போறீங்க! உலகிலேயே குறுகிய காலத்தில் 11 கோடி உறுப்பினர்களை சேர்த்த ஒரே கட்சி பா.ஜ.க. – இல. கணேசன் உலகத்திலேயே கார் வச்சிருக்கிற ஒரே கரகாட்ட கோஷ்டி இருக்குன்னா அது நாமதான். குரு பகவான் – கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பிவேசித்தார். – செய்தி எதுலேங்க பிரவேசிச்சாரு? ‘மெட்ரோ’ இரயிலிலா? உலகின் மிக உயரமான பசு – அமெரிக்காவில் இறந்தது. – செய்தி சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புங்க! தேசிய சின்னம் வச்சுடலாம்! திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் போலியானது. – பல்கலை மான்யக் குழு இதுல படிச்சிட்டு புரோகிதத் தொழில்...

மனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம் 0

மனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம்

“அவசர நிலை காலம் மீண்டும் வருமா?” என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும், அந்தக் காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களைவிட இன்னும் மோசமான உரிமை மீறல்கள் இங்கே நடந்து கொண்டுதான் இருக் கின்றன. இது குறித்த செய்திகளின் தொகுப்பு: மனித உரிமைப் போராளி சாய்பாபா அவரால் நடமாட முடியாது; சக்கர வண்டிதான் அவரை நகர்த்தும்; உடலில் ஊனமானாலும் உள்ளத்தில் உறுதியோடு போராடும் சமூகப் போராளி; அவர் பெயர் ஜி.என். சாய்பாபா. மனித உரிமையாளர்களிடையே பிரபலமானவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பேராசிரியர். சமூகநீதிக்காகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்த குற்றத்துக்காக அவர் ஒரு ‘மாவோ’ தீவிரவாதி என்று காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, 2014 மே 9ஆம் தேதி, பல்கலைக் கழகத்திலிருந்து காரில் வீடு திரும்பும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து நாக்பூருக்கு விமானத்தில் கொண்டு போகப்பட்டு, சித்திரவதை முகாமாகக் கருதப்படும் முட்டை வடிவத்திலுள்ள அண்டா சிறையில் அடைக்கப் பட்டார். அடுத்த 72...

2016இல் விந்தன் நூற்றாண்டு – இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர் 0

2016இல் விந்தன் நூற்றாண்டு – இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர்

சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தனது படைப்புகளில் எழுதியவர் விந்தன். அவரது நூற்றாண்டு 2016இல் வருகிறது. “போலியைச் சுட்டெரிக்கும் புதுமை களை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக் கும் இரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சார சிகிச்சையளிக்கும்’ புத்தம் புது முறைகளை குரூர வசீகரங்களைப் படம்பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது, தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப் பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த, இருந்து வருகிற, ‘மனித மிருகங்’களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து” (விந்தன்: 15.5.1956: விந்தன் கதைகள்: முன்னுரை) “இன்று மனித வாழ்வில் முக்கியமாக இடம் பெற்றிருப்பவை மூன்று. முதலாவது கடவுள்; இரண்டாவது மதம்; மூன்றாவது...

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு! 0

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு!

இந்தியாவின் “சமூகப் பொருளாதார – ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு” விவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன. இன்னும் ஜாதி கணக்கெடுப்புப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன்படி கிராமங்களில் வாழும் மக்களில் 30 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக வாழ்க்கையைக் கடப்பதற்கு கூலி வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 23.5 சதவீதம் பேர். கிராமங்களில் உயர்நிலைப் பள்ளியை நிறைவு செய்தவர்கள் 5.4 சதவீதம். 3.4 சதவீதம் மட்டுமே கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கிராமப்புறங்களில் 90 சதவீதக் குடும்பங்களில் ஊதியம் பெறும் ஊழியர்கள் எவரும் கிடையாது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ‘கல்வி’க்காக தனிக் கடவுளைக் கொண்டுள்ள நாடு இது. ‘பாரதப் பூமி’, ‘புண்ணிய பூமி’, ‘மகான்கள் அவதரித்த’, ‘வேதம் செழித்த’, ‘அவதாரங்கள்’ எடுத்த பூமி என்று பெருமை பேசப்படும் நாட்டின் நிலை இதுதான். மக்களை வறுமையில் மூழ்கச் செய்துவிட்டு, ‘இந்து’ தேசத்தை உருவாக்கிட துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்ன...

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு 0

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு

தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி ஆணவக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி, 1.7.2015 பகல் 1 மணியளவில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரிவு துணை இயக்குனரிடம் மனு அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்க ஜாதியாக இருக்கும் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை கல்வித் துறையுடன் இணைந்து ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்துவதை வரவேற்றும், அதே நேரத்தில் கழகம் நடத்தும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்துக்கு காவல்துறை தடை விதிப்பதை நிறுத்தக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் கூறிய அதிகாரி, சமூக நீதி, ஜாதி வெறி தலைதூக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் உமாபதி, தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகரன் ஆகியோர் இயக்குனரை சந்திக்க உடன் வந்தனர். பெரியார் முழக்கம் 09072015 இதழ்

ஜூலை 19இல் தர்மபுரியில் கழகத்தின் செயலவைக் கூடுகிறது 0

ஜூலை 19இல் தர்மபுரியில் கழகத்தின் செயலவைக் கூடுகிறது

4-7-2015 சனிக்கிழமையன்று காலை 10-00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில், சென்னை, கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. அதில் கழகத்தின் செயல்பாடுகள், தேவைப்படும் மாற்றங்கள், இந்து மதவெறி இயக்கங்களின் நிகழ்கால நடவடிக்கைகள், கழகத்தின் முன்னணி அமைப்புகளான தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய குழந்தைகள் பழகு முகாம், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சந்திப்பு, சுய மரியாதை கலை, பண்பாட்டுக் கழகத்தின் காட்டாறு இதழ், கழகத் தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் போன்ற பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதன் பின்னர் கீழ்க்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. 1) கழகத்தின் செயலவைக் கூட்டத்தை எதிர்வரும் 19-7-2015 ஞாயிறு அன்று தருமபுரியில் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டது. 2) தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் செயலவையைத் தொடர்ந்து மாவட்டக் கழகங் களின் கலந்துரையாடல்களை நடத்துவது, மாவட்டக் கழக அமைப்புகளைப்...

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம் 0

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் தரும் கிராமம் எஸ்.பட்டி. இளவரசனை ஜாதி வெறி பலி கொண்ட அதே தர்மபுரியில்தான் இந்த கிராமமும் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பட்டிகள் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் ஆச்சரியமான காதல் கிராமம் ஒன்று இருக்கிறது. 1500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த அதிசய காதல் கிராமத்தின் பெயர் எஸ்.பட்டி. தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காதல் திருமணங்களுக்கும், கலப்புத் திருமணங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கி வரும் எஸ்.பட்டியில் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த காதல் தம்பதிகள் சமூக இடர்பாடுகளை...

கழகத் தலைவரை மனந்திறந்து பாராட்டினார் – காவிரி விவசாய சங்கத் தலைவர்! 0

கழகத் தலைவரை மனந்திறந்து பாராட்டினார் – காவிரி விவசாய சங்கத் தலைவர்!

கடந்த 11 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன், தே.மு.தி.க.வின் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பால. அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பி.ஆர். பாண்டியன், “விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் கொடியினை தலைவர் அண்ணன் கொளத்தூர்...

ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர் 0

ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர்

13.8.2015 அன்று 2 மணிக்கு, மூத்த பெரியாரியலாளரும், கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடி தாங்கி நிகழ்வில், (தலித் சடலம், ஆதிக்க ஜாதி வீதி வழியாகச் செல்லத் தடை போட்ட ஊர் – குடிதாங்கி. அதை மீறி சடலம் எடுத்துச் செல்லப்பட்டது) மையப் புள்ளியாய் நின்று இயங்கியவருமான ஆர்.பி.எஸ்.ஸ்டாலின், உடல் நலிவுற்றிருக்கிற செய்தியறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும், எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதன் ஆகியோர் கும்பகோணத்தில் அவரது இல்லமான அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில் சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றிலுள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர். பெரியார் முழக்கம் 20082015 இதழ்

“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்” யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு 0

“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்” யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு

கவுண்டர் ஜாதிப் பெண்ணோடு பழகினார் என்பதற்காக கோகுல் ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜ் என்பவர், ‘வாட்ஸ் அப்’ வழியாக மீண்டும் ஒரு வெறிப் பேச்சை பேசியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு முறை இதேபோல் பேசியிருக்கிறார். ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று அவர் பேசிய இரண்டாவது பேச்சு, 37 நிமிடம் நீடிக்கிறது. கவுண்டர் ஜாதியைச் சார்ந்த இளைஞர்கள், அரசியல் கட்சிகளைக் கடந்து, ஒரே அணியாகத் திரள வேண்டும் என்றும், அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தொடங்குமாறும் அவர் கூறியுள்ளதோடு காவல்துறை அதிகாரி களையும் கடுமையாக எச்சரிக்கை செய்கிறார். ‘நான் வெளியே வந்து உங்கள் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்’ என்றும் சவால் விட்டுள்ளார். “நமது பெண்டு பிள்ளைகள் கவுரவத்தையும், நமது ஜாதிக்கான பழம் பெருமையையும் காப்பாற்ற வேண்டும்; நமது சமூகத்தின் ஒற்றுமையை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு சீர்குலைக்க முயற்சிக்கின்றன; நாம் சட்டமன்ற உறுப்பினராகி...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

? இந்தியாவில் ஜாதியம், வகுப்புவாதத்துக்கு இடமில்லை. – மோடி ‘சுதந்திர’ நாள் பேச்சு !அப்போ, ஜாதியை ஆதரிக்கும் அமித்ஷாவையும் குருமூர்த்தியையும் நாடு கடத்தப் போறீங்களா? ? ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்றார் பாரதியார். – ஜெயலலிதா பேச்சு !மேடம், இது பாரதியார் பாட்டு அல்ல; ‘கருப்புப் பணம்’ சினிமாவுல கண்ணதாசன் எழுதி நடிச்ச பாட்டு! ? மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அம்மனை ஊஞ்சலில் ஆட்டி, அர்ச்சகர் தாலாட்டு பாடினார். – ‘தினமணி’ செய்தி !அம்மனுக்கு காது கேட்காதுங்குற துணிச்சல்… தாலாட்டுப் பாட அர்ச்சகர்கள் எல்லாம் கிளம்பீட்டீங்க. ?தில்லை நடராஜன் கோபுரத்தில் தீட்சதர்கள் தேசியக் கொடி ஏற்றினர். – செய்தி !பரவாயில்லையே! ‘சிவபெருமானால்’ நேரடியாக பூமியில் குதிச்சதா, உச்சநீதிமன்றத்துல மனு போட்டவங்க, இப்ப இந்தியாவின் ‘குடிமகனாக’ மாறிட்டீங்களா? ? வெளியுறவுத் துறையில் சமஸ்கிருதத்துக்கு தனி அதிகாரி. – செய்தி !அப்பாடா! இனிமே ‘லலித்மோடி’ பிரச்சினைகள்...

சங்கராபுரத்தில் பறை முழக்கத்துடன் வரவேற்பு ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி கழகம் தயாராகிறது! 0

சங்கராபுரத்தில் பறை முழக்கத்துடன் வரவேற்பு ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி கழகம் தயாராகிறது!

திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களின் 3ஆம் கட்டப் பயணம், ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தப்பயணத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரனும் பங்கேற்றார். தஞ்சை தஞ்சை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல், ஆக.12ஆம் தேதி பகல் 11 மணியளவில் பட்டுக்கோட்டை ‘அரசு பிளாசா’ அரங்கில் தொடங்கியது. அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூறி, தொடக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் கு.பாரி, சி.த. திருவேங்கடம், அ.கோவிந்தன், மூத்த பெரியார் தொண்டர் ப.வைத்தியலிங்கம், ப.ஜெயச்சந்திரன், வடசேரி சிவசுப்ரமணியன், கார்த்திகேயன், பள்ளத்தூர் நாவலரசன், கரிகாலன், பசு. கவுதமன், பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோரைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” – என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் திட்டமிட்டுள்ள பரப்புரை இயக்கத்தை மாவட்டத்தில் நான்கு நாட்கள்...

சேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம்: நடந்தது என்ன? 0

சேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம்: நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்டது சேஷ சமுத்திர கிராமம். இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அம்மன் தேர் ஊர்வலம், பேருந்து போகும் ஊர் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் இழுக்க முயன்றனர். இதைப் பொருத்துக் கொள்ள முடியாத ஜாதி வெறியர்கள் தேர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி, அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பு ஊர் விழாக்களையும் நடத்த தடை உத்தரவு போட்டனர். ஆதலால் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கிராமத்தில் எந்த விழாவும் நடைபெறவில்லை. இருப்பினும் இரு தரப்பினர்களுக்கிடையே இதுவரை பத்து முறை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருவிழாவிற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், 16.8.2015 அன்று காலையில் தேர் இழுப்பதென்று...

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள். நாகை நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள் : ம. மகாலிங்கம்-தலைவர்; தெ.மகேசு-செயலாளர்; தெ. ரமேசு-துணைச் செயலாளர்; மு. அன்பு-அமைப்பாளர்; ந.விஜயராகவன்- பொருளாளர். மயிலாடுதுறை நகரப் பொறுப்பாளர்கள் : நாஞ்சில் சங்கர்-தலைவர்; நி. நடராஜ் –துணைத் தலைவர்; ப. தமிழ்வேலன்-செயலாளர்; ரா. ராஜராஜசோழன்-இணைச் செயலாளர்; ஜி.ஆர். செந்தில்குமார்-அமைப்பாளர். ஒன்றிய அமைப்பாளர்கள்: யுவராஜ்- மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர்; ஜெ. இயற்கை-குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர்; பூம்புகார் முருகன் – செம்பனார்கோயில் ஒன்றிய அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் – தெ. சுரேஷ் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் : ம. ஜீவன் ராஜ், சரவணகுமாரி, இளவரசி, நவநீதம். கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்: நட. பாரதி தாசன்-செயலாளர்; ப. பாலமுருகன்-அமைப்பாளர்; செந்தில்நாதன்-பொருளாளர். விருத்தாசலம் நகரப் பொறுப்பாளர்கள் : சங்கர்-செயலாளர்; சரவணகுமார்-ஒன்றிய செயலாளர்; ஐய்யப்பன்-துணைச் செயலாளர்; அலெக்ஸ்சாண்டர்-ஒன்றிய அமைப்பாளர்; விஜயகுமார்-துணை அமைப்பாளர். சிதம்பரம் நகரச் செயலாளர்...

0

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவிக்கக் கோரி திருச்செங்கோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள் 0

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள்

  தலித் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஜாதிவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழ்நாட்டுக்கே அவமானம்! ஆடி மாதம் வந்துவிட்டால் போதும்; கிராமத் திருவிழாக்களில் ஜாதி வெறியாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. சங்கராபுரம் வட்டத்தில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் அம்மன் தேர் ஊர்வலம், ஊர் பொதுச் சாலையில் வரக்கூடாது என்று ஜாதிவெறியோடு தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தலித் மக்கள் குடியிருப்புகளையும் எரித்ததோடு, பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘சுதந்திர’ நாளை தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நாட்டின் ‘குடிமக்களாகவே’ ஏற்க முடியாது என்று ஜாதி வெறியர்கள் ஆணவத்தோடு கொக்கலிக்கிறார்கள். இதில் மிகப் பெரிய கொடுமை, பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கைதான். தாழ்த்தப்பட்ட மக்களின் அம்மன்  தேர், பொது வீதியில் வரக் கூடாது என்று தடுக்கும் ‘தீண்டாமை-ஜாதி’ வெறியையோ, தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததையோ,...

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது 0

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

காந்தி மார்க்கெட் பகுதியில் பள்ளி வளாகங்களுக்கு அருகிலுள்ள நெல்பேட்டை ஒயின்ஷாப், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஒயின்ஷாப் முற்றுகைப் போராட்டத்தை 4.8.2015 காலை 10 மணிக்குஅறிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காந்தி மார்க்கெட் காவல் துறையினர் கழக மாவட்டச் செயலாளர் கந்த வேல் குமார், பிள்ளை மாநகர் பகுதி தலைவர் வெனிஸ் கிளமெண்ட், ஜெனிபர் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் முழக்கம் 13082015 இதழ்

ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துகிறார் சுப்ரமணியசாமி 0

ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துகிறார் சுப்ரமணியசாமி

1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலையைப் பிரகடனம் செய்து, அடிப்படை உரிமைகளை முடக்கியதோடு, ‘மிசா’ எனும் ஆள் தூக்கி சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஓராண்டு காலம் தனது ஆட்சியை எதிர்த்தவர்களை சிறையில் போட்டார். அந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்த வீராதி வீரர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்போது மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் சிறை செல்ல அஞ்சி, இந்திராகாந்தியிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் குவித்தவர்கள் என்பதே உண்மையான வரலாறு. ஆனாலும், இப்போது பா.ஜ.க.வின் முன்னணி தளபதியாக வலம்வரும் பார்ப்பனர் சுப்ரமணியசாமியே எழுதிய கட்டுரை ஒன்று கிடைத்திருக்கிறது. ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி, சுப்ரமணியசாமி இக்கட்டுரையை எழுதினார். (கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்) அப்போது இவர் பா.ஜ.க.வில் இல்லை. “பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் பெரும்பாலோர், அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் துரோகிகளாகவே மாறிவிட்டார்கள். இதற்கான ஆதாரங்கள், மகாராஷ்டிரா சட்டமன்ற நிகழ்வுகளின் ஆவணங்களிலேயே பதிவாகியுள்ளன. அப்போது...

கழுத்துக் கயிறும் கைக் கயிறும் 0

கழுத்துக் கயிறும் கைக் கயிறும்

கணவன் – திருமணம் செய்யப்போகும் ஒரு பெண், இனி தனக்கு ‘கீழ்ப்படிந்தவளாகவே’ இருக்கவேண்டும் என்பதன் அடையாளமாகக் கட்டப்படுவதுதான் தாலி. சமத்துவத்தையும் சுயமரியாதையையும் விரும்பும் பெண்கள், தாலியை அகற்றிக் கொள்ள முன் வந்தால், அது இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் எதிரானது என்று தோள் தட்டி தொடை தட்டி, ‘இந்துத்துவா’வாதிகள் கிளம்பி விடுகிறார்கள். கடந்த ஏப்.14ஆம் தேதி, பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்வில், உள்ளே புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தாலி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்திய ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெடிகுண்டு வைத்தார்கள். கழுத்தில் கயிறு கட்டுவதுபோல கையில் கயிறு கட்டும் ஒரு பழக்கமும் ‘இந்து கலாச்சாரமாக’ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பெயர் ‘ரக்ஷா பந்தன்’. இது பெண்கள் ஆண்களின் கைகளில் கட்டும் கயிறு. ஒரு பெண், ஆணின் கையில் இந்தக் கயிறை கட்டிவிட்டால் அவனை சகோதரராக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். சகோதரனாக இப்படி அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்,...

குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்! 0

குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்!

பார்ப்பனக் கோட்டையான சென்னை மேற்கு மாம்பலத்தில் சத்குரு வேத பாடசாலை, சுப்ரமணிய வீதியில் உள்ளது. இந்த வீதியில் குப்பைகள் தேங்கிப் போய் கிடந்த நிலையில், ‘வேதம்’ படிக்கும் ‘பார்ப்பன’ சிறுவர்கள், ‘பூணூல்’ அணிந்த கோலத் துடன் வீதிகளில் இறங்கி குப்பைகளைப் பொறுக்கினார்கள். இதைப் படம் பிடித்து முகநூலில் ஒருவர் வெளியிட்டார். உடனடியாக இதை வரவேற்று முகநூலில் 2300 விருப்பப் பதிவுகள் விழுந்தன. அவ்வளவு தான். ஆடிப் போனது சென்னை மாநகராட்சி. உடனே, ‘பூணூல்’ தரிக்காத ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களைக் கொண்டுவந்து இறக்கி, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நாள் முழுதும் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்வதும், குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்துவதும், ‘பஞ்சமர்’, ‘சூத்திரர்’ களுக்கு விதிக்கப்பட்ட ‘தர்மம்’; வேதம் ஓதுவதையே ‘தர்மம்’மாக்கிக் கொண்ட ‘பிராமணர்கள்’ – இப்படி வீதிகளில் இறங்கி ‘குப்பை’களை சுத்தம் செய்யத் தொடங்கினால், நாடு அதைத் தாங்குமா? எனவே தான் மாநகராட்சி அதிரடியாக ‘இறங்கி’ தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது....

‘கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி 0

‘கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி

கடவுளோடு உரையாடக்கூடிய மொழியாக வேதத்துக்கு பெருமை கொண்டாடுகிறது பார்ப்பனியம். வேதம் படித்த பார்ப்பனர்கள், ‘கடவுளுக்கு’ உரிமை கொண்டாடி, ‘கருவறையை’ தங்களுக்கான ‘தீட்டுப்படாத’ புனித இடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘கருவறை’யைப் மட்டுமல்ல; ‘கவர்னர் மாளிகையையும்’ வேத பண்டிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார் யாதேவ விரத் வேதம் படித்த பார்ப்பனர். அரியானாவில் ‘குருகுல குருnேத்ரா’ என்ற பெயரில் வேத பாடசாலை நடத்து கிறார். யோகா, பயிற்சியும் இயற்கை மருத்துவமனையையும் நடத்தி வரும் இவர், உலகம் முழுதும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வேதம், உபநிஷத்துக்களை ‘பிராமணர்’களுக்கு கற்பித்து வருகிறார். பீகாருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் என்பவரும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதற்காகவே அரியானாவில் பயிற்சி மய்யம் நடத்தி வருகிறார். ஆனால், இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். பா.ஜ.க. – தாழ்த்தப்பட்ட வர்களுக்காகவே தனியாக உருவாக்கியிருக்கும் ‘ஷெட்யூல்ட் கேஸ்ட் மோர்ச்சா’ என்ற அமைப்பின் தலைவர். என்னதான் வேதம் படித்தாலும், பா.ஜ.க....

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர் 0

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர்

உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கை 607; (இது 2013ஆம் ஆண்டைவிட 22 சதவீதம் அதிகம்) கடந்த ஆண்டு 22 நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளன. 2,466 பேர் கடந்த ஆண்டு மட்டும், மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் 2007 முதல் 2012 வரை மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் 220 பேர். இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படாதவர்கள் 504 பேர். இந்தியாவில் 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை யாக்கப்பட்டவர்கள் 3751 பேர். 2007ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் 186 பேருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. பெரியார் முழக்கம் 13082015 இதழ்

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்

இரண்டாம் சுற்று – மாவட்டக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள். சேலம் மேற்கு சேலம் மேற்கு மாவட்டம்: தலைவர் – ப.க. சூரியகுமார், மாவட்ட செயலாளர் – சி. கோவிந்தராசு. மேட்டூர் அணை நகரம் : தலைவர் – செ. மார்ட்டின்; நகர செயலாளர் – அ. சுரேசு குமார்; நகர பொருளாளர் – கதிரேசன். குமரன் நகர் (கிளை கழகம்): தலைவர் – பொன். தேவராசு, செயலாளர் – அ. சீனி வாசன். காவலாண்டியூர்: தலைவர் – வ. மாரியப் பன்; செயலாளர் – பழனிச்சாமி. கொளத்தூர் : தலைவர் – பெரியசாமி; செயலாளர் – சி. இராமமூர்த்தி. கோவிந்தபாடி: பொறுப்பாளர் – சென்னியப்பன். உக்கம்பருத்திக்காடு : பொறுப்பாளர் – ஆட்டோ செல்வம். தார்க்காடு மற்றும் தண்டா : தலைவர் – தர்ம லிங்கம்; செயலாளர் – குமரேசன். நீதிபுரம் : தலைவர் –...

சிறப்புக் கட்டுரை –  மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி 0

சிறப்புக் கட்டுரை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் மாவட்டந்தோறும் கழகத் தோழர்களை மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று சந்தித்து வருகிறார்கள். கழக அமைப்புகளின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் தலைமுறைக்கு வேலை வேண்டும்”  பரப்புரை இயக்கத்துக்கு திட்டமிடவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு மேலும் சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பெரியாரியம் சந்திக்கும் புதிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க பெரியாரியலை வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும், ஜாதி-தீண்டாமை வெறியை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் ஜாதி சங்கத் தலைவர்கள் தூண்டிவிடும் ஜாதி வெறியை முறியடிப்பது குறித்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகளை...