வினாக்கள்… விடைகள்…!

மதுக்கடைகளுக்கு கடவுள் பெயர் வைக்க ஆந்திர அரசு தடை. – செய்தி
அப்படியே மதுக் குடியர்களும் கடவுள் பெயரை வைக்க தடை போட்டுடுங்க…

அத்வானி யாரை மனதில் வைத்து அவசர நிலை பற்றிப் பேசினார்? – சிவசேனா கேள்வி
தான், ஓரம் கட்டப்படுவதை மனசுல வைச்சுகிட்டுத்தான் பேசினாரு!

யோகா செய்யும் கைதிகளுக்கு தண்டனை காலம் குறைக்கப்படும். – ம.பி. அரசு
போற போக்கைப் பார்த்தா, யோகா செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லைன்னு அறிவிச்சிடுவீங்க போல!

பூரி ஜெகநாதன் கோயிலில் ‘ஆகம விதிகள்’ மீறப்படுவதை எதிர்த்து ஒரிசாவில் காங்கிர° சார்பில் முழு அடைப்புப் போராட்டம்.  – செய்தி
இந்த முழு அடைப்புல பூரி ஜெகநாதன் கலந்து கிட்டானா? அவன் கோயிலும் மூடப்பட்டதா?

ஏழுமலையான் கோயிலுக்கு மேல், பாதுகாப்புக் கருதி விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும். – திருப்பதி தேவஸ்தானம்
கோயிலுக்குள்ளே விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வச்சிடலாம். அப்பதான் ஏழுமலையானுக்கு பாதுகாப்பு!
ஆர்.கே. நகரில் ஒரு வாக்குச் சாவடியில் வாக் களித்தவர்கள் எண்ணிக்கையைவிட ஓட்டு எந்திரத்தில் அதிக ஓட்டு. – செய்தி
அம்மாவுக்கு ஆதரவாக ஓட்டு எந்திரங்களே ஓட்டுகளைப் போட ஆரம்பிச்சிடுச்சா?

பெரியார் முழக்கம் 02072015 இதழ்

You may also like...

Leave a Reply