சட்ட எரிப்புப் போராட்ட கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்க பொதுக் கூட்டம் பெருமாள்மலை 26112018
நவம்பர் 26. 1957 இந்தியாவில் நடந்தப் புரட்சிகளையும் ,அதன் பின்னனியிலுள்ள சித்தாந்தத்தையெல்லாம் பின்னுக்குத்தள்ளி..மனித குலத்தின் சமத்துவத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் , ஏற்ற தாழ்வுகளைப் பொசுக்கிடத் தீம்பிளம்பாய் தகித்துக் கிளர்ந்த ஒரே புரட்சி, பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு ..பெரியாரியல் தொண்டர்களால் நடந்தேறிய சட்ட எரிப்புப் போராட்டம்தான். அதில் பங்கெடுத்த,சிறை சென்ற, சிறையிலும்..சிறைவாசத்திற்குப்பின்னும் ஜாதியொழிப்பு கொள்கைக்காக உயிர்கொடை தந்தப் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் விதமாக தி வி க ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் பெருமாள்மலையில் 26 / 11 /2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் உள்ளரங்குக் கூட்டமாக மாற்றப்பட்டடது. நிகழ்ச்சிக்கு பெருமாள் மலை தோழர். ராசண்ணன் தலைமை வகிக்க மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ப. ரத்தினசாமி முன்னிலையில் நிகழ்ச்சித் தொடங்கியது. தோழர் கலைமதி, ராசிபுரம், சுமதி, பெருமாள் மலை கழக ஆதரவாளர் பாரதிதாசன், புரட்சிகர இளைஞர் முன்னனி அற்புதராஜ் உரைக்குப் பின்,...