விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. அதற்கான மரபு உரிமைத் தொகையாக ரூ.15 இலட்சத் துக்கான காசோலையை தமிழக முதல்வர் நேரில் வழங்கினார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆசிரியர், பெரியாரியலை தன் வாழ் வியலாக்கி, கழகத்தை குடும்பமாக்கி, பெரியாரிய பத்திரிக்கையாளராக 50 ஆண்டுகளைக் கடந்தும் எழுதிக் கொண்டிருக்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை தமிழ்நாடு அரசு 59 நூல்களை நாட்டுடமையாக்கியது. 22.12.2022 பகல் 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடமையாக்கப் பட்டதற்கான மரபு உரிமை காசோலையை வழங்கினார். அப் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் இணையர் பேராசிரியர் சரசுவதி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் உடனிருந்தனர். தொடர்ந்து, இலாயிட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவிக்க தோழர்கள் முழக்கம் எழுப்பினர்....