பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடர்ந்த ‘குடிஅரசு’ வழக்கைத் திரும்பப் பெற்றது
கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ‘குடி அரசு’ வழக்கு 15 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தற்போது திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராக 1925 முதல் 1949 வரை பெரியார் நடத்தி வந்த குடிஅரசு பத்திரிக்கையில் உள்ள மற்றும் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுக்களும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானது என்றும், தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது என்றும் தங்களைத் தவிர யாருக்கும் உரிமை இல்லை என்றும், கொளத்தூர் மணி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுக்களையும் புத்தகமாக வெளியிடக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ்வாறு வெளியிட முயற்சித்ததற்காக ரூ. 15 இலட்சம் இழப்பீடாக தர வேண்டும் என்று அன்றைய பெரியார் திராவிடர் கழகத்...